Tuesday 4 March 2014

உப்பைக் கொண்டு வீட்டை சுத்தப்படுத்த சில அருமையான டிப்ஸ்..!



உணவில் சுவையை அதிகரிக்க உதவும் உப்பு, வீட்டை சுத்தப்படுத்த உதவும் பொருட்களிலும் முக்கியமான ஒன்று. இத்தகைய உப்பைக் கொண்டு வீட்டில் உள்ள பல பொருட்களை சுத்தப்படுத்த முடியும்.

உங்களுக்கு வீட்டிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும் என்பது தெரியுமா? ஆம், உப்பு துர்நாற்றத்தைப் போக்குவதிலும் சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இதுப்போன்று யாரும் எதிர்பார்க்காத சில பொருட்களை சுத்தப்படுத்தவும் உப்பு உதவியாக இருக்கும். இங்கு உப்பைக் கொண்டு வீட்டில் உள்ள எவற்றையெல்லாம் சுத்தம் செய்யலாம் என்று பார்ப்போம்.

உப்பு கலந்த நீரை டம்ளரில் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சை கொண்டு தேய்த்து கழுவினால், டம்ளரில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் நீங்குவதோடு, டம்ளரும் பளிச்சென்று மின்னும்.

வீட்டில் உள்ள இஸ்திரி பெட்டியில் துரு இருந்தால், அவற்றைப் போக்குவதற்கு உப்பு கலந்த நீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் இந்த உப்பு நீரைக் கொண்டு ஒருமுறை சுத்தம் செய்தால் போதாது, துரு போகும் வரை சுத்தம் செய்ய வேண்டும்.

சில்வர் பொருட்கள் பளிச்சென்று மின்னாமல் இருந்தால், அப்போது அவற்றை உப்பு கொண்டு சுத்தம் செய்தால், சில்வர் பாத்திரங்களானது நன்கு பளிச்சென்று மின்னும். அதற்கு சில்வர் பொருட்களை வெதுவெதுப்பான உப்பு நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

ஒயின் கறைகளைப் போக்குவது என்பது கடினமான ஒன்று. ஆனால் இந்த கறையை எளிதில் போக்க வேண்டுமெனில், கறைப்படித்த தரைவிரிப்பானை உப்பு நீரால் தேய்த்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து, சோப்பு போட்டு துவைத்தால், உடனே போய்விடும்.

மைக்ரோ ஓவனை எளிதில் சுத்தம் செய்ய ஒரே சிறந்த வழியென்றால், அது 2 டேபிள் ஸ்பூன் உப்பை நீரில் கலந்து, அந்த நீர்மத்தை துணியால் நனைத்து, மைக்ரோ ஓவனை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் ஓவனில் உள்ள கறைகள் மற்றும் எண்ணெய் பசைகள் எளிதில் வெளிவந்துவிடும்.

ஜீன்ஸ் ஊற வைக்கும் போது, 1 கப் உப்பை சோப்பு நீரில் சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் துவைத்து, சுத்தமான நீரில் அலசினால், ஜீன்ஸில் உள்ள கறைகள் நீங்கி, புதிது போன்று காணப்படும்.

காபி பாத்திரத்தில் காபியின் கறைகள் படிந்து கருப்பாக இருக்கும். அப்போது அந்த பாத்திரத்தில் உள்ள கருப்பு கறைகளைப் போக்க, வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, காபி பாத்திரத்தை 3 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், கறைகள் சீக்கிரம் போய்விடும்.

ஜலதோஷத்திற்கு ஜீராமிளகு ரஸம் சிறந்த நிவாரணி...!



ஜீராமிளகு ரஸம்.

வேண்டியவைகள்

தனியா——இரண்டு டீஸ்பூன்

மிளகு—–ஒரு டீஸ்பூன்

சீரகம்——ஒரு டீஸ்பூன்

துவரம்பருப்பு–இரண்டு டீஸ்பூன்

பெரிய தக்காளிப் பழம்—–ஒன்று

புளி—–சின்ன எலுமிச்சம்பழ அளவு

பூண்டு——7 அல்லது 8 இதழ்கள்

நெய்—-2 டீஸ்பூன்

ருசிக்கு உப்பு

தாளிக்க—சிறிது கடுகு,      பெருங்காயம்,கறிவேப்பிலை

ஒரு துளி மஞ்சட் பொடி

மிளகாய்——சிறியதாக  ஒன்று

செய்முறை—-புளியை ஊறவைத்து நன்றாகக் கரைத்து

இரண்டு கப் அளவிற்கு சாறு எடுத்துக் கொள்ளவும்.

உப்பு, மஞ்சட்பொடி சேர்க்கவும்.

சிறிது    நெய்யில்    பருப்பு, மிளகு, மிளகாய்,  தனியாவை

சிவக்க வறுத்துக் கொண்டு பூண்டையும் சேர்த்து

கறுகாமல் வதக்கி, நறுக்கிய தக்காளியையும்,

சேர்த்து லேசாக வதக்கவும்.

ஆறியவுடன்      சீரகம்       சேர்த்து    மிக்ஸியிலிட்டு

சிறிது ஜலம்  தெளித்து விழுதாக அரைக்கவும்.

உப்பு சேர்த்த  புளிக்கரைசலை    பாத்திரத்திலிட்டு

நிதானமான தீயில் நன்றாகக் கொதிக்க விடவும்.

புளி வாஸனை போகக் கொதித்தவுடன், அரைத்த

விழுதை இரண்டரை கப் நீரில் கரைத்து சேர்க்கவும்.

நுறைத்துப் பொங்கும் அளவு கொதிக்கவிட்டு

இறக்கி  நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்து

கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி உபயோகிக்கவும்.

சுலபமாகச்  செய்யக்கூடிய மருத்துவ குணமுள்ள

ரஸமிது.  


  ஜலதோஷம்.  ஜுரம் போன்றவைகளின் போது

இம்மாதிரி ரஸம் மிகவும் நல்லது.  

துணைக்கு

பருப்புத் துவையல்.  சுட்ட அப்பளாம்.

நீரிழிவுக்கு இயற்கை மருத்துவ முறையில் கட்டுப்பாடு தேவையா..?



முள்ளங்கிக் கிழங்கு 2 நசுக்கியது முற்றிய வேப்பிலை, மாவிலை பொடி செய்தது 25 கிராம். இவைகளை மண்பாத்திரத்தில் போட்டு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி சுமார் அரை லிட்டர் ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் 100 மில்லி கஷாயம் நாவினால் வெறும் வயிற்றில் சாப்பிட வரவேண்டும்.

தினமும் தயார் செய்து வைத்துள்ள கஷாயத்தை சூடு செய்து அதிலிருந்து 100 மில்லி கஷாயத்தை எடுத்துக் குடிக்க வேண்டும். 5 தினங்களுக்கு ஒரு முறை புதியதாகக் கஷாயம் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

உணவு முறை: வழக்கமாக அவரவர் உடம்பு ஏற்றுக் கொள்ளும் உணவு வகைகளைச் சாப்பிட்டு வரலாம். இனிப்பு வகைகளை குறைவாக சேர்த்துக் கொள்வது நல்லது. இரவு உணவில் பாதியளவு உணவு தான் சாப்பிட்டு வர வேண்டும். தேவைக்குத் தக்கபடி 20 அல்லது 30 நாட்கள் கஷாயம் குடித்து வரலாம்.

உடலில் புண் உண்டாகி எளிதில் ஆறாத காயங்களுடன் இருக்கும் நீரிழிவு வியாதிக்காரர்கள் கீழ்க்கண்ட முறையைப் பயன்படுத்திப் பலன் அடையலாம்.

அருகம்புல்: குண்டு (அ) ஜம்பு நாவல் மா இலை, அத்தி இலை வகைக்கு தலா 25 கிராம் எடுத்து ஒன்றரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து மண் பாத்திரத்தில் போட்டு முக்கால் லிட்டர் கஷாயம் வரும்படி வற்றக் காய்ச்சி சுத்தமான வெண்மை நிறத் துணியில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை உணவுக்கு முன் 50 மில்லியும், இரவு உணவுக்கு முன் 50 மில்லி கஷாயமும் குடித்து வர வேண்டும்.

இதுவும் 5 தினங்களுக்கு ஒரு முறை புதியதாக தயாரித்துக் கொள்ள வேண்டும். மொத்தம் 30 தினங்கள் அருந்தி வரலாம். உடம்பில் மேலே உள்ள ஆறாத புண்களுக்கு அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் பொடி இவைகளை அரைத்து (இலுப்ப எண்ணெய் தேவைக்கு விட்டு கலந்து) இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் புண்களின் மீது தடவிக் கொள்ளலாம். இரவு உணவு வகை அரை வயிறு தான் சாப்பிட்டு வரலாம். பகலில் பப்பாளி பழம் கிடைத்தால் உணவுக்குப் பின் கொஞ்சம் சாப்பிட்டு வரலாம்

இட்லி, தோசை சாப்பிடுவதினால் என்ன நன்மைன்னு உங்களுக்கு தெரியுமா..?




நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன? என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.

இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.

அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பரஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.

அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன. திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.

இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டைக்கடலையில் கிடைப்பது போல தாதுஉப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.

லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும் போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி, முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,
கொத்தமல்லி போன்ற துவையல். காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக இருக்கிறது.

அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதல்ல. எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.

எனவே இட்லி, தோசை, அரிசி, கோதுமை சாதத்தை விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சில அழகு குறிப்புகள்..!



தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஏனெனில் அந்த அளவில் வேலைப்பளுவானது அனைத்து துறையிலும் அதிகரித்துவிட்டது. அதனால் வேலையை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் உடல் சோர்வால் சாப்பிட்டு தூங்க மட்டும் தான் நேரம் உள்ளது. சிலருக்கு அந்த நேரம் கூட கிடைக்காது. ஆகவே அத்தகைய பெண்களுக்கு ஒருசில எளிமையான அழகு குறிப்புகளை தமிழ் போல்ட் ஸ்கை பரிந்துரைக்கிறது. இந்த அழகு குறிப்புக்களை சரியாக பின்பற்றி வந்தால், இயற்கையான அழகில் ஜொலிக்கலாம். அதுமட்டுமின்றி,

இந்த அழகு குறிப்புகள் அனைத்தும் மிகவும் எளிமையானவை. சரி, இப்போது அந்த அழகு குறிப்புக்களைப் பார்ப்போமா!

பொலிவான கண்கள்

கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், கருவளையமின்றியும் இருக்க, தினமும் காலையில் எழுந்ததும், உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல வேண்டும்.

முகத்தில் வளரும் முடி

சில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியானது நன்கு தெரியும். இதனை மறைக்க வேண்டுமெனில், ஃபௌண்டேஷன் போடலாம். இல்லையெனில், வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையை முகத்தில் தேய்த்து வந்தால், முடி தெரியாது.

முகப்பரு

சரும பிரச்சனைகளிலேயே முகப்பரு பிரச்சனையால் தான் பெரும்பாலானோர் அவஸ்தைப்படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபட பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் பேக்கை, வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.

சரும சுருக்கம்

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சரும சுருக்கம். இந்த சரும சுருக்கம் ஏற்பட்டால், அது முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்தும். இதனை தற்காலிகமாக மறைக்க கன்சீலர் பயன்படுத்தலாம். ஆனால் இயற்கையாக மறைக்க வேண்டுமெனில், தயிரை முகத்திற்கு தடவி நன்கு உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ச்சியாக வாராவாரம் ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் தெரியும்.

கூந்தல் பராமரிப்பு

கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமெனில், பீர் அல்லது பீர் ஷாம்பு கொண்டு கூந்தலை அலச வேண்டும். வேண்டுமெனில், ஒயின், வோட்கா போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

நெயில் பாலிஷ்

நகங்கள் அழகாக இருப்பதற்கு நெயில் பாலிஷ் போடுகிறோம். ஆனால் அந்த நெயில் பாலிஷ் சீக்கிரமே போய்விடுவதால், அது நகங்களின் அழகைக் கெடுக்கிறது. ஆகவே அது நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமெனில், பால் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, பின் நெயில் பாலிஷ் போட வேண்டும்.

ஹேர் ரிமூவல்

அக்குளில் வளரும் முடியை ஷேவ் செய்யும் போது சோப்பு போட்டு ஷேவ் செய்யாமல், கண்டிஷனர் உபயோகித்து ஷேவ் செய்தால், ஷேவிங் செய்த பின்னர் சருமம் மென்மையாக இருக்கும்.

முழங்கை

முழங்கை வறட்சியுடன் அசிங்கமாக இருந்தால், அதனை போக்க தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, முழங்கையும் மென்மையாக இருக்கும்.

அழகான உதடுகள்

உதடுகளின் நிறம் அழகாக, அதே சமயம் இயற்கையான தோற்றத்தில் காணப்பட வேண்டுமெனில், ப்ரௌன், செர்ரி அல்லது நியூட் கலர் லிப்ஸ்டிக் போட வேண்டும். இல்லாவிட்டால், தினமும் உதட்டை தேங்காய் அல்லது ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால், உதடுகள் லிப்ஸ்டிக் போடாமலேயே அழகாக இருக்கும்.

ஹேர் கலர்

தற்போது நிறைய பெண்கள் கூந்தலுக்கு கலரிங் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவ்வாறு கலரிங் செய்த பின், அது விரைவிலேயே போய்விடுகிறது. ஆகவே கலரிங் செய்தது நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமெனில், கூந்தலை ப்ளாக் டீ கொண்டு அலச வேண்டும்.

நீங்க இளமையாகவே இருக்கணுமா...? அப்போ இதைப்படிங்க...!

முதுமையை தள்ளிப் போடும் உணவுகள்..!


இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களை இளமையானவராக உணரவும், வெளிக்காட்டி கொள்ளவும் பல வழிகளை ஆர்வமுடன் தேடுகின்றனர். அமெரிக்க மக்களின் முதன்மையான ஆட்கொல்லி நோயான இதய நோய்க்கும் மற்றும் பிற நோய்களுக்கும், தீவிர உழைப்புடன் கூடிய வாழ்வினை மேற்கொள்வதும், நன்றாக உணவு உண்பதும் காரணமாக அமைகிறது.

புத்தம் புதிய முழுமையான, ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்த உணவினை உண்பது அனைத்து வித வயதுள்ள பெண்களையும் தங்களை சிறந்தவர்களாக காண்பிக்கவும் உணரவும் வைக்கிறது.

இப்போது முதுமைக்கு காரணமான விளைவுகளை எதிர்த்து போரிடும் சத்துக்கள் நிறைந்த உணவுக்கான பட்டியல் குறித்து காண்போம். இந்த உணவுகளை உட்கொண்டால், விரைவில் முதுமை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

சால்மன்

சருமத்தை மிருதுவாக வைக்க பெண்கள் வாரத்திற்கு ஒரு முறை 12 அவுன்ஸ் சால்மன் மீனை உண்ண வேண்டும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது. சால்மனில் வைட்டமின் பி12, வைட்டமின் டி ஆகியவை செறிந்துள்ள ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. உடலின் கட்டிகளை குறைக்கிறது. இது நாள்பட்ட நோயின் தீவிரத்தை குறைக்கிறது. மேலும் 50 வயதினை கடந்த பெண்களின் பொதுவான பிரச்சனையான இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது.

பசுமையான இலை கீரைகள்

கேல், பசலைக்கீரை, கொலார்டூ கீரைகள், ரோமன் லெட்யூஸ் மற்றும் ஸ்விஸ் கேரட் ஆகியவை வைட்டமின் சி, வைட்டமின் கே, போலிக் அமிலம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள பசுமையான காய்கறிகள் ஆகும். க்ரீன் கேரட்டில் உள்ள வைட்டமின் பி இதயத்திற்கும், நினைவாற்றலுக்கும் நல்லது. வைட்டமின் ஏ சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மேலும் எண்ணற்ற பச்சை காய்கறிகளில் கண்டறியப்பட்டுள்ள லுடேயின் பார்வை திறனை பாதுகாக்கிறது. பச்சை காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் முகத்தின் கோடுகளையும், சுருக்கங்களையும் தடுக்கிறது. பொதுவாக பச்சை காய்கறிகளில் காணப்படும் லைகோஃபைன், லூடென் மற்றும் பீட்டா கரோட்டீன் சருமத்தின் முதுமைக்கு காரணமான புறஊதாக் கதிர்களை தடுக்கிறது. கீரைகளில் காணப்படும் சத்துக்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் முடக்கு வாதம் ஆகிய நோய்க்கு எதிராக போரிடுகிறது. மேலும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது.

பூண்டு

பூண்டில் சுவையும், நன்மையும் சம அளவில் கலந்துள்ளன. கல்லீரலின் இயக்கு திறனை அதிகரிக்கவும், நச்சுகளை அகற்றவும் பூண்டு துணை புரிகிறது.செல் சீரழிவினை தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்களை தடுக்கிறது. பட்டியலிலுள்ள மற்ற உணவு வகைகளை போலவே பூண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் செறிந்து காணப்படுகிறது. இது அசாதாரண செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. விழிப்புணர்விற்காக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது.

குறிப்பு

ஆரோக்கியமான உணவினை உண்ண அறிவுறுத்தப்படுவது நம்மையும், நாம் விரும்புகின்ற உணவினையும் பிரித்து வைப்பதற்காக அல்ல. மாறாக நமது உடலுக்கு தேவையான முக்கியமான சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான். இந்த சிறந்த உணவு தகவல்களின் மூலம் நம்மை அற்புதமாக உணரவும் காண்பிக்கவும் முடியும்.

அனைவரும் அறிய வேண்டியவை..!



அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, பொதுவான விடயங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது, படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள்.

ஏனென்றால் எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி, மாதக்கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக்கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள் 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெல்ல வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம்.

அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

10. இளவயதில் பெண்கள் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

கருப்பைக் கட்டி வராமல் தடுக்கும் டயட்...!



பெண்கள் வயதுக்கு வந்த பின்னர் சத்தான உணவுகள் மற்றும் பழங்கள், காய்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறு வயதில் வரும் மாதவிடாய் பிரச்சனைகளை சிறிய மருத்துவ சிகிச்சை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் சரி செய்து விட முடியும். 45 வயதுக்கு மேல் தான் கருப்பையில் கட்டி பிரச்சனை வருகிறது.

அதிகமான உதிரப்போக்கு, அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், அடிவயிற்றில் வீக்கம் ஆகிய பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கட்டி ஏற்படுகிறது. பரம்பரைக் காரணம் மற்றும் 10 வயதுக்குள்ளாகவே பூப்படையும் பெண்களையும் இது போன்ற பிரச்சனைகள் தாக்க வாய்ப்புள்ளது.

மதுப்பழக்கம், நோய்த் தொற்று அடிக்கடி ஏற்படுபவர்களுக்கும் கருப்பைக் கட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு உடலில் அதிகமாக சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனால் கருப்பையில் கட்டி உருவாகலாம். கருப்பைக் கட்டி ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்க்கவும்.

இறைச்சி வகைகளும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எண்ணெயில் பொரித்த உணவுகள், காபியை தவிர்க்கவும். தண்ணீர் அதிகமாகக் குடிக்கவும். பழங்கள், காய்கறிகள் உணவில் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். பழங்களில் ஆப்பிள், கருப்பு திராட்சை, சாத்துக்குடி சேர்த்துக் கொள்ளவும்.

வைட்டமின் சி சத்துள்ள உணவுகள், பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள், முளை கட்டிய முழு தானியங்கள், கிட்னி பீன்ஸ் பருப்பு, கருப்பு பீன்ஸ் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்கவும். இவை ஈஸ்ட்ரோஜென் அதிகப்படியாக சுரப்பதை கட்டுப்படுத்தும்.  

சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?



பெற்றோராக இருப்பவர்கள், தங்கள் குழந்தைக்கு மிகவும் பிடித்தவாறு இருப்பதற்கு, புத்தகங்கள் பலவற்றை படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் தங்கள் குழந்தைகளிடம் நடந்து கொள்வார்கள். குறிப்பாக அப்பாக்களை விட, சில மாறுபட்ட சவால்களை அம்மாக்களே எதிர்கொள்கின்றனர்.

இப்போது அம்மாவாக இருப்பவர்கள், அந்த சவால்களை எப்படி எதிர்கொள்வது என்றும், குழந்தைகளை எப்படி நன்றாக வளர்ப்பது என்பது பற்றியும் கீழே சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1. தாயாக இருப்பது சில நேரங்களில் சற்று சவாலானதாகவே இருக்கும். அதனால் எப்போதும் அமைதியாகவும் மற்றும் பொறுமையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் அவர்கள் ஏதாவது குறும்பு செய்தால், அதை ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தைப் பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.

2. உங்கள் குழந்தைகளின் விருப்பங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குழந்தைக்கு இசையில் விருப்பமிருந்தால், அவனுக்காக ஏதேனும் ஒரு இசைக்கருவியை வாங்கிக் கொடுத்து, அவர்கள் வாசிப்பதை கவனியுங்கள். குழந்தை கோபமாக இருந்தால், அப்போது அவர்களிடம் மனம் விட்டு பேசி, அவர்களுக்கு ஒரு நல்ல தோழனாக இருக்க வேண்டும்.

3. பணவிஷயத்தில் மிகவும் சரியாக இருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் பணத்தை கொடுப்பது சரியில்லைதான், அதற்காக உங்கள் குழந்தை கேட்கும் எந்தவொரு விருப்பத்தையும் உடனே முடியாது என்று நிராகரிக்க வேண்டாம். எதைக்கேட்டாலும் முடியாதென்றும், எப்போதும் பணத்தை சேமிப்பது பற்றிய அறிவுரைகளை சொல்லி, எந்த ஒரு பொருளையும் வாங்கிக் கொடுக்காமல் இருந்தால், பின் அவர்கள் மனதில் உங்கள் மீது இருக்கும் அன்பு குறைய நேரிடும். எனவே அவ்வப்போது ஏதேனும் விருப்பமானதை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

4. உங்களை எப்பொழுதும் அவர்களுடன் பேசுவதற்கு ஏற்ற நபராக வைத்துக் கொள்வதில் உறுதியாக இருங்கள். எப்பொழுதும் புரிந்துகொள்ளக் கூடியவராகவும் மற்றும் அவர்கள் பேசுவதை செவிகொடுத்து கேட்பவராகவும் இருப்பதற்கு, உங்களால் முடிந்தவரை கடினமான முயற்சிகளை எடுங்கள். அம்மாவிடம் நட்புடன் ஆலோசனை கேட்பதும், வயதுக்கு வருவது பற்றிய சந்தேகங்களை கேட்கவும், வீட்டுவேலைகளில் உதவி செய்யவும், அல்லது சாதாரணமாக அம்மாவை கட்டிப்பிடிப்பதும் அவர்களுக்கு தெரியும். தங்களிடம் பேசுவதற்கு யாரும் இல்லாமலிருந்தால், பின் குழந்தைகள் தனிமையிலேயே இருப்பார்கள். எனவே அவ்வப்போது அவர்களிடம் பேசும் வழக்கத்தை கொள்ள வேண்டும்.

5. குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு மருத்துவம் படிப்பதிலோ அல்லது மருத்துவராக ஆவதிலோ விருப்பம் இல்லையென்றால், அப்போது கோபப்பட வேண்டாம். உங்கள் மகளின் எண்ணம் உங்களுடையதிலிருந்து மாறுபடுவதை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் குழந்தைகளை எப்போதுமே குழந்தையாக எண்ணாமல், அவர்களின் வயதிற்கு ஏற்றவாறு மாறுங்கள். ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்கனவே பெரியளவில் பங்கேற்றிருக்கிறீர்கள். அதனால் அதனையே திரும்பவும் செய்ய வேண்டாமே!

6. தவறு செய்தால் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் மன்னிப்பு கேட்க பயப்படாதீர்கள். இது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உங்கள் தவறை நீங்கள் ஒப்புக் கொள்வதும் மன்னிப்பு கேட்பதும் அனைவருக்கும் நன்மையாக இருக்கும். நீங்கள் பிடிவாதமாக இல்லாமலிருந்தால் அது மற்றவர்கள் உங்கள் மேல் கோபப்படுவதை தடுக்கும். மேலும் குழந்தைகளுக்கு மன்னிப்பு கேட்பதன் முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுங்கள்.

7. குழந்தை தனது தந்தையை நேசிப்பதற்கு மதிப்பளித்திடுங்கள். உங்கள் குழந்தை, அவர்களது தந்தையை அளவுக்கு அதிகமாக நேசிப்பதைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது.

8. இறுதியாக, மற்ற எல்லாவற்யையும் விட உங்கள் குழந்தைகளை அதிகமாக நேசியுங்கள். அவர்களை நேசிக்காமல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எந்தவொரு செயலும் அர்த்தம் தராது. எந்த நேரத்திலும் குழந்தைகளை நேசித்தால், அவர்களது மனதில் எக்காலத்திலும் பெற்றோர்களை மறக்காமல் நேசிப்பார்கள்.

முதுமையை நோக்கிச்செல்லும் இளைஞர்களே...!



மனிதகுலம் நாகரிகம் அடையாத காலத்தில், முதியோர் நலம் பேணுதல் என்பது கடமைகளுக்கான செயல் திட்டத்திலேயே(agenda) கிடையாது.

பழங்கால சீனாவில் முதியோரை காட்டில் விடுவதும், சங்ககால தமிழகத்தில் முதுமக்கள் தாழியும் இருந்தன.

 விலங்கிலிருந்து மனிதன் தன்னை பிரித்துணர ஆரம்பித்தபின்தான் பெற்றோரை பராமரித்தல் என்ற விசயமே வந்தது.

அன்பு, பாசம், காதல் போன்றவைதான் மனிதனை மறு நாளை நோக்கி நகர்த்துகின்றன.

போராட்டத்தில் வெற்றியடைய செய்கின்றன. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது.

வியாபார கொள்கைகள் வாழ்க்கையிலும் வந்தபின் , எதையும் நியாயப்படுத்தும் சுயநல அரக்கன் முதலில் பலி கொண்டது இத்தகைய பொறுப்புகளைத்தான்.

இதன் முடிவில் மனித்தத்துவம் மரித்து போகும்.

நாம் அவற்றை உணர்ந்திருந்தாலும் மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லுவதில் தயங்கத் தேவையில்லை. எதிர்கால உலகம் நமக்கும்தான் காத்திருக்கிறது.

கரணம் 2020ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள்.

அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் பேர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். வயதானவர்கள் அதிகமாக, ஆக அவர்களின் உடல் நலப்பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும்.

65 வயசுக்குப்பிறகு ஆண்களும், பெண்களும் அதிக வலிகளால அவதிப்படுகிறார்க்ள்.

அவர்களின் வலிகள், மற்ரவ்ர்களின் வலிகள் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

அதற்க்கான அணுகுமுறை, சிகிச்சை எல்லாமே வேறு என்கிற வலி என்று விளக்கம் சொல்லும் மருத்துவர்கள் ”இந்த வயோகத்தால வரக்கூடிய வலி திசுக்களோட தேய்மானம், பலவீனத்தால வரக்கூடியது.

ரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மூட்டுப்பிரச்சனைனு, வேற நோய்களோட விளைவால் வரக்கூடியது, தனிமை, வாழ்க்கையைப்பத்தின பயம், வருமானம், இல்லாததுனு வேற காரணங்களால உணரப்படற வலி புற்றுநோயால வரக்கூடிய வலி…

இதெல்லாம் வயசானவங்களோட வலிக்கான காரணங்கள். 65 வயசுக்குப் பிறகு புற்றுநோய் தாக்கற ஆபத்து அவங்களுக்கு அதிகம்.இவங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அத்தனை சுலபம் இல்லை.. சிகிச்சைக்கு ஓத்துழைக்க மாட்டாங்க.

காது கேட்காதது, கவனமின்மை, மறதி, மனரீதியான பிரச்சனைகள்னு பல காரணங்களால சிகிச்சைகளை பத்திப் புரிஞ்சிக்கிற சக்தி அவங்களுக்கு இருக்காது.

உடற்பயிற்சி, பிசியோதெரபி மாதிரியான விஷயங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டாங்க. ரொம்ப பொறுமையோடத்தான் அவங்களை அணுகணும் என்கிற டாக்டர் குமார், மூட்டு வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, காலட எரிச்சல், புற்றுநோய் வலி ஆகியவையே முதியவர்களிடம் காணப்படுகிற வலிகள் என்கிறார்..

ஏற்கனவே அவங்களுக்கு ஏதாவது நோய் இருந்தா, வலிகளுக்கான மருந்துகளை கொடுக்கிறப்ப, அதிக பட்ச கவனம் தேவை..

 எல்லா மருந்துகளும் அவங்களுக்கு ஒத்துக்காது. நோயோட தன்மை, அவங்களோட உடல் மற்றும் மனநிலையை தெரிஞ்சிக்கிட்டு தான் மருந்துகள் தரணும். 60 வயசுக்கு மேலானவங்க எக்காரணம் கொண்டும், எந்த வலிக்கும் சுய மருத்துவம் செய்யவே கூடாது.

மருந்து கொடுத்து சரி செய்ய முடியாதுங்கிற வலிகளுக்கு கவுன்சிலிங்கும், உளவியல் ரீதியான தெரபிகளும் தேவைப்படலாம். பிசியோதெரபி செய்யறது மூலமா வலியோட தீவிரம் அதிகமாகிறதைத் தவிர்க்கலாம்.

 சிலவலிகளுக்கு அறுவைசிகிச்சை தான் தீர்வா இருக்கும். ஆனா வயோதிகம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது, மருந்துகளும் தர முடியாதுங்கிற நிலைமையில உள்ளவங்களுக்கு, வலி நிர்வாக கிளினிக்கை அணுகி, சிறப்பு வலி நிவாரண சிகிச்சைகள் கொடுக்கிறது பலன் தரும்” என்கிறார்கள்.

கற்பை சூறையாடும் ஃபேஸ்புக் நட்பு: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...!



 பெண்கள் ஃபேஸ்புக் நட்பை நம்பி கற்பை பறிகொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.


இன்றைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஃபேஸ்புக், ட்விட்டரில் உள்ளனர்.


அப்படி யாராவது ஃபேஸ்புக்கில் இல்லை என்றால் அவர்களை ஏதோ வேற்று கிரக வாசிகளை பார்ப்பது போன்று பார்க்கின்றனர்.


 இந்த ஃபேஸ்புக்கால் பெண்களுக்கு நேரும் அவலம் பற்றி பார்ப்போம்.


பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் ஃபேஸ்புக்கில் புதியவர்களுடன் நட்பு வைத்துக் கொள்கிறார்கள். இந்த நட்பு ஃபேஸ்புக்கில் பிறந்து, மலர்ந்து வளர்கிறது.


நட்பு ஓரளவுக்கு வளர்ந்தவுடன் அந்த நபர்கள் பெண்களை தங்களை நேரில் வந்து சந்திக்குமாறு கூறுகிறார்கள். பெண்களும் ஃபேஸ்புக் நண்பரை நேரில் பார்க்கும் ஆர்வத்தில் சென்றுவிடுகின்றனர்.


ஃபேஸ்புக் நண்பரை நேரில் சந்திக்க சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.


ஃபேஸ்புக்கில் பழக்கமான ஆண் தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு கூறினால் அவரை தனிமையில் சந்திக்காதீர்கள். மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக பார்த்து சந்திக்கவும். முதலில் அந்த நபரை அப்படி சந்தித்தே ஆக வேண்டுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.


ஃபேஸ்புக் நண்பரை சந்திக்க பெண்களே தனியாக செல்லாதீர்கள். துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லுங்கள். தனியாக சென்றுவிட்டு அதன் பிறகு கற்பு போச்சே என்று கதற வேண்டாம்.
 
நண்பேன்டா