Wednesday 19 February 2014

வெற்றி வேண்டுமெனில்…! அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.!



‘நாங்க வீட்டுலேயே இருக்கிறோம்.அதனால வெளி உலகம் தெரியறது இல்லை’ என்கிற பேச்சுகள் இப்போது அடங்கிவிட்டன.

முன்பைவிட ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உலக விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் நல்ல ஆர்வம் இருக்கிறது.இதற்கு ஊடகங்கள் ஒரு காரணம் எனினும், “நான் ஹவுஸ் வைப்”,எனக்கு என்ன தெரியும்?” என்ற பேச்சுகளும், கிராமத்தில் இருக்கிறவர்களிடம், ‘எங்களுக்கு இவ்வளவுதான் தெரியும்’ என்கிற குரல்களும் எழாமலில்லை.
தெரிந்து கொள்வது என்பதில் மக்களுக்கு ஆர்வம் அதிகமானால்தான் பலம் மிகுந்த ஒரு சமுதாயம் உருவாக முடியும்.

முகவாயில் கை வைத்து வியப்போடு உட்காரும் மனிதர்கள் இப்போது அதிகம் இல்லை. மாறாய்,என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பது பற்றிய அறிவு பரவலாக இருக்கிறது. பாண்ட்-சட்டை போட்டவர்கள் அதிசயமானவர்கள், செருப்பு போட்டவர்கள் சீமான்கள் என்று இருபது வருடம் முன்பு நம் தேசத்தில் பல பாகங்களில் இருந்தது.

இப்போது அப்படி இல்லை. நன்கு நறுவிசாய் உடுத்திக்கொள்ளப் பலருக்குத் தெரிகிறது.மிக வேகமாய் வணக்கத்துடன் முகமன் சொல்ல பலபேர் கற்றிருக்கிறார்கள்.

என் இளம் வயதில் வணக்கம் சொன்னால் வெட்கப்பட்ட பெண்களையும், ‘எனக்கா வணக்கம்’ என்று வியக்கின்ற ஆண்களையும் நான் சந்தித்திருக்கிறேன். இப்போது பதில் வணக்கம் சொல்லாவிட்டால் சிறுவர்கள்கூட மதிப்பதில்லை. விலகிப் போய்விடுகிறார்கள்.

ஆனால்,காலம் நகர நகர…வணக்கம் மட்டும் அறிதலாகி விடாது. பாண்ட்-சட்டை மட்டுமே நாகரிகத்தின் அடையாளமாகி விடாது. சுற்றியுள்ள உலக விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதுதான் ஒருவருக்கு மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். ஒன்றும் அறியாத பெண்களை, உளறலான ஆண்களை சமூகம் மதிப்பதில்லை.

எனவே,அறிதலில் ஆர்வம் காட்டுவதுதான் நாகரிகம். உடையலங்காரம், மேனி எழிலலங்காரம் தான் நாகரிகம் என்பதில்லை. அறிவுதான் உண்மையான அலங்காரம்.சிறப்பான அழகு.

‘என்ன அறிதல்?’ என்ற கேள்வி உடனடியாக எழும்.இதற்கு பதிலும் உடனடியாகத் தரமுடியும். அறிதலுக்கு எல்லையே இல்லை. எல்லாமும் அறிதல் என்றுதான் பதில் சொல்ல முடியும்.

எதிர்வீட்டு தாத்தாவிற்கு மாரடைப்பு. குடிப்பதற்கு ‘ஐஸ் வாட்டர்’ கேட்கிறார்கள். உங்களிடம் இருக்குமா’ என்று வந்தால், பதறி எழுந்திருந்து, ‘ஐஸ் வாட்டரா? குடிக்கவா. அதிகம் கொடுக்கக்கூடாது’ என்று பதில் சொல்வது தான் அறிதல்.

‘மூணு ஸ்பூன் மட்டும் கொடுங்கள். தொண்டை நனையட்டும்,நெஞ்சில் வலி இருக்கும்போது தண்ணீர் நிறைய கொடுப்பது நல்லதல்ல.உடம்பை ஈரத்துணியால் துடைத்து விடுங்கள். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துப்போங்கள். ஒன்றுமில்லை, சரியாகிவிடும் என்று கிழவரை ஆசுவாசப்படுத்துங்கள். கலவரப்படுத்தாதீர்கள்’ என்று சொல்லியபடியே எதிர்வீட்டிற்கு ஓடி, அப்படி மாரடைப்பு ஏற்பட்டால், நாவிற்கு அடியில் வைத்துக்கொள்கிற ‘ஐஸாட்ரில்’ மாத்திரை இரண்டு கொடுத்து, மெதுவாக தூக்கி வந்து ஒரு காரில் ஏற்றி, எத்தனை விரைவில் மருத்துவமனையில் சேர்க்கிறோமோ அத்தனை உதவி அந்தக் கிழவருக்கு என்பதை உதவி செய்பவர் ஆணானாலும், பெண்ணானாலும் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

நன்கு படித்த ஒர் இளைஞன் இம்மாதிரி நெஞ்சுவலியில் அவஸ்தைப்பட்டவருக்கு நாவிற்கு அடியில் மாத்திரை வைக்க வேண்டும் என்றபோது, பல்லிறுகித் தவித்தவரின் வாயைப் பிளந்து,அவர் வாய்க்குள் நாற்பது மாத்திரையை கொட்டினான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

“இரண்டு வைச்சா போறுமா.கூட கொடுத்தா நிச்சயம் பிழைச்சுடுவாரோ அப்படிங்கிற பயத்துல பண்ணினேன்”. என்று பின்னால் அவன் சொன்னான். அந்த நிர்மூடத்தனம் மிகக் கடுமையாக அவனுக்கு இடித்துரைக்கப்பட்டது. மரண பரியந்தமும்,அந்த விஷயத்தை நினைக்கும் போது அந்த இளைஞனுக்கு துக்கம்தான். முட்டாள்தனம் ஒரு உயிரைப் பறித்தது வருத்தம் தான்.

சமூக விஷயங்களை அறிவது மட்டுமல்ல… ஒரு குழந்தை தாயை கேள்வி கேட்கும்,”கடவுள் என்றால் என்ன?” என்று, அதற்கு பதில் சொல்ல ஒரு தாய்க்கு தெரிந்திருக்க வேண்டும். ‘ இன்னொரு தடவை இந்த மாதிரி கேட்டா, பளீர்னு அடிப்பேன்’என்று ஒரு தாய் பதில் சொன்னால் அல்லது தகப்பன் முறைத்தால், அறியாமை பின்னால் எள்ளி நகையாடப்படும். அந்த குழந்தையே விவரித்து கேவலப்படுத்தும்.

இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களைவிட அதிகம் விஷயம் தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இணையாக அவர்களைவிட அதிகமாக செய்திகள் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது.

“இதுல ‘ஹைட்ரஜன் பெராக்சைட்’னு போட்டிருக்கே. இது ஆசிட்டா” அம்மா கேட்டாள்.

“இல்லை.அது சுத்தம் செய்வதற்குண்டானது. தண்ணீரில் வேகமாகக் கரைந்துப் போகும். நக இடுக்கில் அழுக்கிருந்தால் இரண்டு சொட்டுவிட்டால் போதும், நுரைத்துக் கொண்டு அழுக்கை வெளியே கொண்டு வந்துவிடும்”. பிள்ளை சொல்ல, அம்மா வியந்தாள்.

“எப்படி தெரிந்தது,உனக்கு”

“பள்ளிக்கூடத்தில் முதலுதவி சிகிச்சை வகுப்பின்போது இம்மாதிரி நிறைய சொல்லிக் கொடுத்தார்கள். காயம்பட்ட இடத்தைக் கழுவி மருந்து போட எனக்குத் தெரியும். நானே நேரடியாக செய்தேன்.”

அரிவாள்மனை வெட்டிய காயத்தை பிள்ளை சுத்தம் செய்து கட்டு போட, கண்ணில் நீர் துளிக்க அம்மா அவனைப் பார்த்து வியப்பாள். ‘இது டாக்டராகிடுமோ. பெரிய அறுவை சிகிச்சை நிபுணனாகிவிடுமோ?’ என்று ஆசையோடு பார்ப்பாள். இன்னும் என்னவெல்லாம் தெரியும் என்று அறிந்து கொள்ள பரபரப்பாள்.

மார்ட்டின் லூதர்கிங் பற்றியும், இராஜராஜசோழனுக்கு சதய நட்சத்திரம் என்றும், ராபர்ட்கிளைவிற்குத் திருமணமான இடம் பற்றியும், கில்லடின் என்கிற கொலை கருவி பற்றியும் மகனும், மகளும் மாறி மாறி சொல்ல… வியந்து பார்ப்பாள்.

இது வெறும் படிச்சுட்டு ஒப்பிக்கிற பிள்ளை இல்ல. வேற என்னமோ ஒரு தேடல் இருக்கு என்று அதைக் கொண்டாடும் விதமாக அம்மா குதூகலமாக வாழ்வாள். அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வாள்.

ஸ்கூட்டரில் கணவனும், மனைவியும் நண்பர் வீட்டிற்குப் போவார்கள். நண்பர்கள் வீட்டின் விலாசம் இருக்கிறது. விசாரித்துக் கொண்டே போய், தவறான வழிகாட்டிதலில் வேறு இடத்திற்கு வந்துவிட்டார்கள்.

“இப்படியே திரும்ப வேண்டும். எந்த இடத்தில் விசாரித்தோமோ அங்கேயே ஆரம்பிக்க வேண்டும். ‘இந்த இடத்தில்தானே இடதுபக்கம் திரும்ப வேண்டும்”, என்று கணவன் கேட்க, மனைவி முழிப்பாள்.

“உன்னைத்தான் கேட்கிறேன். இங்கு விசாரித்தோம். இந்த இடத்தில்தானே திரும்பினோம். நீயும்தானே பின்னால் இருந்தாய். இந்த இடம் நீ பார்க்கவில்லையா”

“இல்லை, நான் பார்க்கவில்லை”, என்று மனைவி சொல்வாள். ஸ்கூட்டருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு எங்கே போகிறோம் என்று தெரியாமல் ஒருவர் வருவார்களென்றால் அவர்களுக்கு புத்தி போதாதென்றே அர்த்தம்.

“விசாரித்தபோது எதிரே பேக்கரி இருந்தது. இப்ப இல்ல. பின்பக்கம் புடவை கடை இருந்தது. புடவை கடைக்கு என்ன பெயர் தெரியுமா? கொஞ்சம் இருங்க” என யோசித்து, “அது கலைவாணி ஜவுளி மாளிகை. அங்கேயிருந்து பத்து வீடு தள்ளி நாம இடதுபக்கம் திரும்பினோம். இடது பக்கம் திரும்பி இருக்கக்கூடாது. வலதுபக்கம் திரும்பி இருக்கணும். அவன் நமக்கு எதிரே நின்னு இடதுபக்கம் திரும்புன்னு சொல்லிட்டான்.நாம நேர போய் இடதுபக்கம் திரும்பிட்டோம்.அவனுக்கு இடதுபக்கம்னா, நமக்கு வலதுபக்கமில்லையா”

இப்படி பின்னால் உட்கார்ந்து மனைவி சொன்னால் கணவனுக்குக் குதூகலம் ஏற்படும்.

“முன்னமே சொல்லி இருக்கலாமே”

“விட்டுட்டேன். இனிமே விடமாட்டேன். போங்க நான் கண்டுப்பிடிச்சுத் தரேன். வலது பக்கம் திரும்பிட்டீங்களா. அப்புறம் மறுபடியும் இடதுபக்கம்னான். அது இடது பக்கம் இல்ல, வலதுபக்கம். இன்னொரு வலதுபக்கம் திரும்புங்க, பள்ளிக்கூடம் வந்துருச்சா, பள்ளிக்கூடத்திற்கு அடுத்தது போலீஸ் குடியிருப்பு. போலீஸ் குடியிருப்புக்கு அடுத்த வீடுதான்னு சொன்னாங்க. இந்த வீடாகத்தான் இருக்கும்.பாருங்க வாசல்ல… அவரு பேருதான் போட்டிருக்கு”, என்று வீடு கண்டுபிடிக்க, உதவி செய்வரின் மனைவி மீது மிகப்பெரிய நன்மதிப்பு ஏற்படும்.

விவசாயியாக இருந்தால், விவசாயம் பற்றித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா. வேறு எதுபற்றியும் தெரிந்து கொள்ளக்கூடாதா? பிராணாயாமம், யோகாசனம், தியானம் ஆகியவற்றை விவசாயி செய்தால் கேலிக்குரிய விஷயமா.

சில பெண்களை தினமும் நாலு கிலோமீட்டர் நடக்கச்சொன்னால், ‘நாங்கள் வீட்டுக்குள்ளேயே பத்து கிலோமீட்டர் நடக்கிறோம்’ என்று சிரிப்போடு சொல்வார்கள்.

அது உதவாதப் பேச்சு, வியர்க்க விறுவிறுக்க இரண்டு கிலோமீட்டர் போய், இரண்டு கிலோமீட்டர் திரும்பி வருவது உடம்புக்கு மிகப்பெரிய ஆரோக்கியம். என்னதான் மாடு கட்டி இழுத்தாலும், உட்கார்ந்து கையால் இட்லிக்கு மாவரைத்தாலும், உடலின் எல்லா பகுதிகளும் சமமாய் வேலை கொடுக்கும் யோகாசனம் மிக அவசியம்.

மூச்சுப் பயிற்சி மூளையை குளுமையாக்கும், கண்களைக் கூர்மையாக்கும். உடம்பில் படப்படப்பை குறைத்து, நிதானத்தைக் கொண்டு வரும். தியானமும், யோகாசனமும் பட்டணத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் உரிதானவை என்று நினைப்பது பேதமை. எல்லா கிராமத்து பெண்களும் யோகாசனம் செய்ய வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்.

வெட்கத்தின் காரணமாகவும், நமக்குத் தேவையில்லை என்கிற அறியாமை காரணமாகவும் நல்லதொரு விஷயத்தை கிராமத்து பெண்கள் புறக்கணிக்கிறார்கள். உடல் என்பதில் கூர்மை உள்ளவர்கள், முனைப்பு உள்ளவர்கள் வெகுநிச்சயம் யோகாசனம் கற்றுக்கொள்வார்.

செய்திப் பத்திரிகைப் படிப்பது என்பது ஒரு நல்ல வேலை. தொலைக்காட்சிப் பெட்டியைவிட, தினசரிகளிலேயே செய்திகள் தெளிவாக வருகின்றன. தலையங்கங்கள் சார்பாக இருந்தாலும், நல்ல விவாதத்தை ஆரம்பித்து வைக்கின்றன, அதையும் தாண்டி பொதுநலக் கட்டுரைகள் வருகின்றன, படிப்பது என்ற பழக்கம், விஷயங்களை அதிகம் அறிந்துகொள்ள உதவும்.

மாணவர்கள் செய்திப் பத்திரிகைப் படிக்க வேண்டும். இளைஞர்கள் வளமான, நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். நாத்திகத்தின் ஆதரவாகவும்,ஆத்திகத்தின் ஆதரவாகவும் இரண்டு வகையான புத்தகங்களையும் படிக்க வேண்டும். தந்தை பெரியார் எப்படி மதவாதத்தை எதிர்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் என்பதையே எதிர்க்கிறாரா. அல்லது குறிப்பிட்ட மதத்தை எதிர்க்கிறாரா.

கடவுள் நம்பிக்கையை எதிர்க்கிறாரா. அல்லது கடவுள் நம்பிக்கையால் ஏற்படுகின்ற ஆசார அனுஷ்டானங்களை எதிர்க்கிறாரா. எதனால் அவருக்கு அப்படிப்பட்ட எண்ணம் தோன்றியது. அவருடைய வாழ்க்கை வரலாறு என்ன என்று இளைஞர்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். அது ஆத்திகனாவதற்கோ, நாத்திகனாவதற்கோ இந்தப் புத்தகம் நிச்சயம் உதவி செய்யும்.

பொது அறிவு அல்லது கேள்வி அறிவு உலகம் பற்றிய ஞானம் இல்லாதபோது, வெகுநிச்சயம் அம்மாதிரியான ஆட்களை வன்முறைப் பக்கம் திருப்பிவிட முடியும்.அப்படி சில தேசங்களில் மதரீதியாகவும், கொள்கைரீதியாகவும் இளைஞர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். உலகம் தழுவிய வன்முறையை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாகியது. அந்தப் பெண்ணுக்கு கணவனாக வரப்போகிறவன், பயோ டெக்னாலஜி’யில் அதாவது, உயிரியல் துறையில் உச்சகட்டப் படிப்பு படித்து, நல்ல வேலையில் இருந்தான். அந்தப் பெண் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்தது.

“பயோ டெக்னாலஜி பற்றி எதுவும் தெரியாது. கணவனுக்கு முன்னால் நான் பேந்த பேந்த முழிக்க வேண்டியிருக்குமே. அதனால் நான் ‘பயோ டெக்னாலஜி’ பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டும்” என்று சொல்லி என் வீட்டிற்கு வந்து, என் மகளிடம் ‘பயோ கெமிஸ்டரி’ பற்றி நேரம் கிடைத்தபோதெல்லாம் பேசி-விவாதித்து,ரத்த ஓட்டம், ரத்தத் தன்மை, என்சைம்கள், பாக்டீரியாக்கள் என்று பல்வேறு விஷயங்களைப் பேசியே தெரிந்துக் கொண்டது.

அதன் திருமணத்திற்கு நாங்கள் எல்லாம் போய் வந்தோம். ஆறு மாதம் கழித்து ஊரிலிருந்து வயிற்றிலே கரு தாங்கி வந்தது. கூடவே கணவனும் வந்திருந்தான்.

“எப்படி இருக்கிறாள் எங்கள் வீட்டுப் பெண்” என்று நாங்கள் பெருமையாக கேட்க, “நீங்கள்தான் அவளுக்கு ‘பயோ கெமிஸ்டரி’ சொல்லிக் கொடுத்தீர்களா. அவசியமானால் நான் ஒரு பயோ கெமிஸ்டரி பெண்ணையே திருமணம் செய்துகொள்ள மாட்டேனா. ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறாளெ எனக்கு இலக்கியம் சொல்லித் தருவாள் என்று ஆவலாக திருமணம் செய்துகொண்டால், இவள் ரத்தம் பற்றியும், பாக்டீரியா பற்றியும் பேசுகிறாள். காதுகளை பொத்திக்கொண்டேன்” என்று சிரிப்போடு சொன்னான்.

“ஆங்கில இலக்கியம் பற்றிக் கேட்டால் பரவாயில்லையே. தமிழ் பாசுரங்கள் பற்றி சொல்லு. தேவாரம் பற்றிச் சொல்லு என்று கேட்கிறார். எனக்கு ஒன்று கூட தெரியவில்லை. மிகவும் அவமானமாகப் போய்விட்டது, நீங்கள் எனக்கு சொல்லித் தாருங்கள்.தினமும் உங்களிடமிருந்து தேவாரம், திருவாசம் கற்றுக்கொண்டு போகிறேன்” என்று அப்பெண் சொல்லிற்று.

கணவனும் அவளுடைய அந்த நம்பிக்கையை மிகவும் ஆதரித்தான். ‘வயிற்றிலுள்ள பிள்ளைக்கும் நல்லதல்லவா’ என்று குதூகலித்தான். ‘கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு’ என்று ஆண்டாள் பாசுரம் ஒன்று இருவருக்கும் சொல்ல, பயோ டெக்னாலஜியும், ஆங்கில இலக்கியமும் வாய் பிளந்து கேட்டார்கள்.

“வாழ்வு மிகப்பெரியது. அதில் விஞ்ஞானம் ஒரு சிறிய அங்கம். விஞ்ஞானமே வாழ்வாகிவிடாது. இயற்கையின் அதிசயத்தை விஞ்ஞானம் சொல்கிறது. எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன” பயோ டெக்னாலஜி மாப்பிள்ளை பரவசப்பட்டார்.

வீட்டுத் தலைவன் தெரிந்துகொள்ளும் ஆவலில் ஈடுபட்டுவிட்டால், அவன் துணைவியும், துணைவியால் அவன் குழந்தைகளும் அதில் ஈடுபடுவார்கள். ஆளாளுக்கு விவரங்கள் கொண்டுவந்து தருவார்கள். ஒரு பிள்ளை கிரிக்கெட் போட்டி பற்றி விவரனையாக சொல்ல, ஒரு குழந்தை கர்நாடக சங்கீதம் பற்றி செம்மையாக பேச-தாய்,ஐரோப்பிய-தஞ்சாவூர் ஓவியங்கள் பற்றி எடுத்துரைக்க, தந்தை பொருளாதரம் பற்றி குழந்தைகளுக்கும்… மனைவிக்கும் விவரித்து சொல்ல, பங்கு மார்க்கெட் என்றால் என்ன என்று விளக்கத்தைத் தர, குடும்பம்-விஷயங்களை வாங்கி வாங்கி அருந்தும். சீராய் வளரும்.

“வெறுமே கேட்டுக் கொள். சும்மா மனம்பாடம் செய்” என்று சிறுவயதில் எனக்கு சொல்லிக் கொடுத்த பல பழம் பாடல்கள், தொன்மையான பழம் இலக்கிய செய்யுள்கள்-வளர்ந்த பிறகு மறுபடியும் நினைவுக்கு கொண்டுவர, மிக அற்புதமான செய்திகளை அவை சொல்வதை நான் உணர்ந்தேன்.

“ஒருமையுடன் நினது திருவடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”

ஏழு வயதில் மனப்பாடம் செய்த வரிகள்.இன்று அறுபத்தியொரு வயதில் அதன் பொருள் விளங்க, அந்த வாக்கியத்தின் பிரம்மாண்டம் புரிய-நான் திகைத்துப்போய் நிற்கிறேன்.

ஒருமையுடன் நினைக்கின்ற உத்தமர் யார் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் இருக்கிறேன். அப்படிப்பட்டவரோடு கூடாமல் இருக்கிறேன். எந்த அறிதலும் வீண்போவதில்லை. அறிதலுக்கு ஆசைப்படுவது மனிதர்களுக்கு இயல்பு.

வெற்றி வேண்டுமெனில்… அறிந்துகொள்ள ஆசைப்படுங்கள்.

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜப்பானின் புதுப் பிளான்..!



உலக நாடுகளின் வேகமான பொருளாதார வளர்ச்சி காரணமாக நச்சுத்தன்மை கொண்ட கழிவுப்பொருட்களின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. நச்சுதன்மை கொண்ட வேதிப்பொருட்களில் இருந்து, மக்கிபோகாத நெகிழிப் பொருட்கள் வரை பயன்படாத கணினிகள், அவற்றின் உதிரிபாகங்கள் என பல வகையான மின்னணு சாதனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் மலைமலையாக குவியத் துவங்கியுள்ளன. இந்த கழிவுகளை வெற்றிகரமாக கையாளும் வழிகளை ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் வாங்குகின்ற பொருட்களில் பலவற்றை பயன்படுத்திய பின்னர் காயிலாங் கடையில் போட்டு சிறு தொகையாவது பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் அவற்றை மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என பிரித்து கையாளும் முறைகள் நிறையவே உள்ளன. தொழில் நுட்பவளர்ச்சில் மேம்பாடு அடைந்துள்ள இன்றும் கழிவுப்பொருட்களை கையாளும் வசதியில்லாமல் பல நாடுகள் அல்லல் படுகின்றன. புவியிலேயே இப்படியிருக்க விண்வெளியில் குவிந்துள்ள குப்பைகளை பற்றி என்ன சொல்வது?இந்நிலையில்தான் விண்வெளி ஆராய்ச்சியின் மற்றும் ஏனைய செயற்பாடுகள் காரணமாக விண்வெளியில் தங்கியுள்ள கழிவுகளை அகற்ற புதிய திட்டம் ஒன்றினை ஜப்பான் செயற்படுத்தவுள்ளது.

விண்வெளியில் குப்பைகளா? என்று வியப்படைய வேண்டாம். விண்வெளிக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த செயற்கைக் கோள்கள் அனைத்தும் விண்வெளியில் தான் உள்ளன. இப்படி மனிதரால் தேவையின்றி விண்வெளியில் விடப்பட்ட பொருட்களை தான் விண்வெளி கழிவுகள் அல்லது விண்வெளி குப்பைகள் என்று கூறுகின்றோம். ராக்கெட்டை முன்னோக்கி தள்ளுகின்ற எரிபொருள் கலன்கள், செயலிழந்த செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள்களிலிருந்து வெடித்து சிதறிய பகுதிகள், துண்டுகள், துகள்கள், ராக்கெட் இயந்திர பட்டைகள், சிறிய திருகாணி, குறடு மற்றும் பிற சிறிய பொருட்கள் அனைத்தும் விண்வெளிக்கழிவுகளே.

இதைக் கவனத்தில் கொண்டு முன்னாள் சோவியத் யூனியன் 1957 ஆம் ஆண்டு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பி விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை தொடங்கியது முதல் எண்ணிக்கையில்லா கழிவுகள் அல்லது குப்பைகள் பரந்த விண்வெளியில் கொட்டப்பட்டுள்ளன என்று தான் குறிப்பிட வேண்டும். இவ்வாண்டு தொடக்கத்தில் கண்களால் காணக்கூடிய அளவில் 17,000 கழிவுகள் விண்வெளியில் உள்ளதாக Houston னிலுள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின், நாசாவின் விண்வெளிக்கழிவுகள் திட்டத்தின் தலைமை அறிவியியலாளர் நிக்கோலாஸ் ஜான்சன் தெரிவித்தார்.

அப்படியானால் கண்காணிப்பு கருவிகளால் பார்க்க முடியாத கழிவுகளின் எண்ணிக்கை தெரியவில்லை. கடந்த எப்ரல் திங்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற அமெரிக்க சமூக மாநாட்டில் பங்குபெற்ற அறிவியலாளர்கள் 150 மில்லியன் துண்டுகளுக்கு மேலாகவே விண்வெளியில் கழிவுகள் உள்ளதாக குறிப்பிட்டனர். இவற்றில் பெரும்பாலானவை விண்வெளி வீரர்களால் வீசப்பட்டவை. இதற்கு முந்தைய புள்ளிவிபரங்கள் 45 விழுக்காடு விண்வெளி கழிவுகள் அமெரிக்காவாலும், 48 விழுக்காடு ரஷியாவாலும் குவிக்கப்பட்டவை என்று தெரிவிக்கின்றன. 1.2 விழுக்காடு மட்டுமே சீனாவால் உருவாக்கப்பட்டது.

பொதுவாக, மிதந்து கொண்டிருக்கும் விண்வெளிக் கழிவுகளின் சராசரி வேகம், நொடிக்கு 10 கிலோமீட்டராகும். அதிகபட்ச வேகம் நொடிக்கு 16 கிலோமீட்டர். சீருந்திலோ, பேருந்திலோ செல்லுகின்றபோது 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதாக சொன்னால் ஒரு மணிநேரத்திற்கு 80 கிலோமீட்டர் என்று பொருள். இந்த வேகத்தில் சென்றாலே பறந்து போகிறார் பாருங்கள் என்று கூறுவதுண்டு. அப்படியானால் ஒரு மணிநேரத்திற்கு சராசரியாக 57,600 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிவரும் விண்வெளி கழிவுகள், ஒன்றோடு ஒன்று மோதினாலோ அல்லது ஆராய்ச்சிகளை மேற்கோண்டிருக்கும் செயற்கைக்கோளோடு மோதினாலோ ஏற்படும் விளைவை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

10 கிராம் எடையுள்ள சிறிய கழிவுப்பொருள் மோதினாலே, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய சீருந்து மோதினால் ஏற்படுகின்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீன விண்வெளி கழிவுகள் திட்டத்தின் தலைமை அறிவியலாளர் Du Heng கூறியுள்ளார்.எனவே விண்வெளி ஆய்வில் ஈடுப்பட்டுள்ள பல்வேறு நாடுகள் விண்வெளியில் பெருகி வரும் கழிவுகளை பற்றி அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.

இதன்படி தற்போதுய் காந்த தன்மை கொண்ட வலைகளை விண்வெளியில் நிறுவுவதற்கு Japan Aerospace Exploration Agency (Jaxa) தீர்மானித்துள்ளது.ராக்கெட் மற்றும் சாட்டிலைட்டுடன் இணைத்து நிறுவப்படவுள்ள இந்த காந்த வலை தொழில் நுட்பத்தினை Kagawa பல்கலைக்கழகம் முதன் முறையாக பரிசோதனை செய்துள்ளது.இந்த வலையானது 300 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 30 சென்டிமீட்டர்கள் அகலம் கொண்டவையாகவும் இருப்பதுடன் முக்கோண வடிவத்தை உடையவையாக காணப்படுகின்றன.

வீடியோ லிங்க்: http://www.youtube.com/watch?v=8ZsmC6v1Qug

'பப்'புக்கு வந்த 'பேய்' சிசிடிவியில் சிக்கியது..!



சமீபத்தில் அனைவரும் அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் பிரிட்டனில் உள்ள பப் ஒன்றின் சிசிடிவியில் சில அமானுட செயல்பாடுகள் பதிவாகியிருந்தது வெளியிடப்பட்டது. யாரெல்லாம் பேய் என்ற ஒன்று இல்லை என்று சொல்கிறார்களோ, அத்தகையவர்கள் இந்த 'பப்'பின் சிசிடிவியில் பதிவாகியிருந்ததைப் பார்த்தால் நிச்சயம் பேய் என்ற ஒன்று இருப்பதை நம்புவீர்கள்.

இங்கு பிரிட்டனில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 'Ye Olde Man And Scythe' என்ற பப் ஒன்றின் சிசிடிவியில் பதிவாயிருந்த வீடியோவானது கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த சிசிடிவில் இடம் பெற்ற அந்த பதிவானது கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இரவில் பதிவாகியது.

இதனை அந்த பப் நிறுவனத்தினர் அடுத்த நாள் தான் கண்டுபிடித்தனர். ஏனெனில் அந்த சிசிடிவியானது திடீரென்று செயல்படாமல் நின்றுவிட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த பப்பில் ஏற்கனவே 25 பேய்களின் நடமாட்டம் இருப்பதாக, அந்த பப்பின் மேனேஜர் கூறினார். மேலும் சில மக்கள் இந்த பப்பில் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறுகின்றனர்.

 இங்கு அந்த பப்பில் பதியவாகிய வீடியோவானது கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் பார்த்து உங்களுக்கு எண்ண தோன்றுகிறது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


மலிவு விலை டிக்கெட்டில் அம்மா திரையரங்கம்..!



அம்மா உணவகம், குடிநீரை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அம்மா திரையரங்கம் வெகு விரைவில் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழைகள் குறைந்த கட்டணத்தில் திரையங்கிற்கு சென்று படம் பார்ப்பதற்காக இந்த பிரத்தியேக வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மிகச்சிறிய பட்ஜட்டில் உருவாகும் படத்தினை குறைந்த செலவில் வெளியிடுவதற்கான முன்னுரிமை வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 லட்சத்துக்கு கணவனின் கிட்னியை விற்ற ‘பாசக்கார’ மனைவி கள்ள காதலனுடன் ஓட்டம்...!



ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வேட்டபாளையம் மண்டலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் கிருபாராவ். இவரது மனைவி கவுரிதேவி. 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

 சில மாதங்களுக்கு முன்பு கவுரிதேவி, கணவர் கிருபாராவை போனில் தொடர்பு கொண்டு, எனக்கு ரூ.3 லட்சம் கடன் உள்ளது. கடன் கொடுத்தவர்கள் என்னை துன்புறுத்துகின்றனர்.

உங்களது கிட்னியை ரூ.5 லட்சத்துக்கு விற்றால் கடனை அடைத்து விடலாம். அதன்பிறகு நாம் சேர்ந்து சந்தோஷமாக வாழலாம் என்று கூறியுள்ளார். மனைவியின் பேச்சை நம்பிய கிருபாராவ்வும், அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கிருபாராவ் அறுவை சிகிச்சை செய்து கிட்னியை அதே மருத்துவமனையில் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த பணத்தை பெற்ற கவுரிதேவி தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி விட்டார். கடந்த ஜனவரி மாதம் கிருபாராவ் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வெளியே வந்தார்.

அப்போதுதான் அவருக்கு தனது மனைவி கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி விட்டார் என்பது தெரியவந்தது. . இதுகுறித்து பிரகாசம் மாவட்ட எஸ்பி சமோத்குமாரிடம் புகார் செய்தார்.

அவரது உத்தரவின்படி வேட்டபாளையம் போலீசாரிடம் புகார் செய்ய சென்றார். இந்த வழக்குக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை. நீங்கள் விசாகப்பட்டினம் போலீசாரிடம் புகார் செய்ய வேண்டும் என கூறினர். இதனால் என்ன செய்வது என்று அறியாது கிருபாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கு சென்றாலும் எனது புகாரை ஏற்று கொள்ள மறுக்கிறார்கள். இனியாவது எனக்கு நியாயம் கிடைக்கும்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தலைமறைவாகி உள்ள எனது மனைவியை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

ஆவி பழிவாங்கும் என பயந்து காதலியை கொன்று புதைத்த இடத்தில் பூஜை செய்த காதலன்...!



நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் காரைக்குளத்தில் உள்ள காலிமனையில் கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று பூ, ஊதுபத்தி, வளையல், ரிப்பன் ஆகியவற்றை வைத்து யாரோ பூஜை செய்திருந்தனர்.

இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்த தகவலின் பேரில், வேளாங்கண்ணி போலீசார் அங்கு சென்று இடத்தை தோண்டி பார்த்த போது இளம்பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

 விசாரணையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டதும், அவர் நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த மீனவர் சிங்காரவேலு&தெய்வானை தம்பதியின் மகள் சூர்யா என்பதும் தெரியவந்தது.

வேளாங்கண்ணி போலீசார் வழக்குபதிந்து சூர்யாவின் காதலன் அதே பகுதியை சேர்ந்த ஞானவேல் (23), அவரது நண்பர்கள் தீபன்ராஜ் (23), கிங் சசிக்குமார் (19) மற்றும் 17 வயது வாலிபர்கள் 2 பேரை கைது செய்து விசாரித்தனர். சூர்யாவை கொலை செய்ததை 5 பேரும் ஒப்புக் கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

ஞானவேலுவும், சூர்யாவும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு சூர்யா கர்ப்பமானார். சூர்யாவின் பெற்றோர் அவருக்கு கருக்கலைப்பு செய்து விட்டனர். அதன்பிறகு காதலர்கள் இருவரும் சந்திப்பதற்கு இரு வீட்டிலும் தடை விதித்தனர்.

சூர்யா கர்ப்பமானது வெளியில் தெரிந்ததால் அக்கம் பக்கத்தினர் சூர்யாவை தவறாக பேசியதாக தெரிகிறது. ஞானவேலின் பெற்றோரும் சூர்யாவை தரக் குறைவாக பேசினர். ஞானவேலுக்கும் கெட்டப் பெயர் ஏற்பட்டதால் காதலி கதையை முடிக்க எண்ணினார்.

கடந்த மாதம் 30ம் தேதி சூர்யாவை சந்தித்த ஞானவேல், அவரை அருகில் உள்ள மனோன்மணி கோயிலுக்கு அழைத்துள்ளார். அதன்படி சூர்யா, கோயிலுக்கு சென்றார். அங்கு பைக்குடன் நின்றிருந்த ஞானவேல், அவரது நண்பர் தீபன்ராஜ் ஆகியோர் சூர்யாவை பைக்கில் கடற்கரையோரமாக அழைத்துச் சென்றனர். காரைக்குளம் என்ற இடத்துக்கு வந்ததும் பைக்கை நண்பனிடம் கொடுத்து விட்டு ஞானவேல் சூர்யாவுடன் மறைவிடத்துக்கு சென்றார்.

தீபன்ராஜ் பைக்கில் அக்கரைப்பேட்டைக்கு வந்து தனது நண்பர்கள் கிங் சசிக்குமார் மற்றும் 17 வயதுள்ள 2 பேரை அழைத்துக் கொண்டு மீண்டும் காரைக்குளம் வந்தார். அங்கு ஞானவேலுவும், சூர்யாவும் பேசிக் கொண்டிருந்த இடத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவில் 4 பேரும் அமர்ந்து கொண்டனர்.

அடுத்த நாள் அதிகாலை 4 மணி அளவில் ஞானவேல் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரும் திடீரென்று சூர்யா மீது பாய்ந்து பிடித்தனர். பின்னர் ஞானவேல் சூர்யாவின் கழுத்தை பிளேடால் அறுத்து கொன்றார். பின்னர் 5 பேரும் சேர்ந்து மணலை கைகளால் 2 அடி வரை தோண்டி உடலை புதைத்து விட்டு தப்பினர்.

காதலியை கொன்ற ஞானவேல் மனநிம்மதியில்லாமல் தவித்தார். சூர்யாவின் ஆவி தன்னை பழிவாங்கும் என  நண்பர்களுடன் கூறி புலம்பினார். 16ம் நாள் சடங்குளை செய்து விட்டால், சூர்யாவின் ஆத்மா சாந்தியடைந்துவிடும் என நண்பர்கள் யோசனை தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த 14ம் தேதி நண்பர்களுடன் சூர்யாவை புதைத்த இடத்துக்கு சென்ற ஞானவேல் பூ, பழம், ரிப்பன், வளையல் வைத்து பால் ஊற்றி பூஜை செய்துள்ளார். அதன்மூலம் 5 பேரும் போலீசில் சிக்கினர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நாகை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மல்லிகைப் பூவை பெண்கள் தலையில் சூடுவதல்..!



மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.

மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

...
வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். 


அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.


நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. 


தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்



உங்கள் மகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய சில காதல் பாடங்கள்..!



குழந்தைகளை வளர்ப்பது என்பது லேசான விஷயம் அல்ல. அதுவும் உங்கள் மகள் பெரியவளாக வளர வளர இது இன்னமும் கடினமாகும். இந்த கால கட்டத்தில் தான், வாழ்க்கையில் உள்ள நல்லது கெட்டது, புதிய பல விஷயங்கள் போன்றவைகளை அறிந்து கொண்டு, அவள் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்துடன் தானும் சேர்ந்தே வளர்கிறாள்.

இந்த பருவத்தில் தான் அவள் காதலிலும் விழுகின்றாள். அவள் உணர்ச்சிகளுக்கு போராட்டங்களை உண்டு பண்ணும், பல உணர்ச்சிகளை கொண்ட பல நபர்களின் அறிமுகமும் கிட்டும். ஒரு தாயாக, தன் காதலை அறிந்து கொள்ளும் பயணத்தில், அவளுக்கு நீங்கள் உதவி புரியலாம். அவள் காதலை நீங்கள் வாழ முடியாவிட்டாலும் கூட, அவளின் பயணத்தை நீங்கள் வழி நடத்தலாம். உங்கள் மகள் தகுதிக்கு ஒத்துவராத ஒருவனை, அவள் காதலிப்பதை கண்டிப்பாக நீங்கள் விரும்பமாட்டீர்கள்.

அவளை ஒரு நல்ல பெண்ணாக வளர்த்தும், அவளை அவளே மதிப்பதற்கு நீங்கள் கற்றுக் கொடுத்திருப்பீர்கள். அப்படிப்பட்ட அவளை யாரும் மாற்ற நினைப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவளை சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல நீங்கள் தான் சிறந்தவர். அதனால் காதல் பாடங்களைப் பற்றிய முக்கியத்துவத்தைப் பற்றி பார்க்கலாம்.


இது அடுத்தவர்களை மதிப்பதும் அவர்களின் மீது கவனம் செலுத்துவதும் மட்டும் அல்ல. உங்களை நீங்களே மதிப்பதும் இதில் அடக்கம். உங்கள் மகள் தன்னை தானே விரும்ப அவளுக்கு கற்றுக் கொடுங்கள். அவள் அவளை விரும்பினால் தான் மற்றவர்களாலும் அவள் விரும்பப்படுவாள். தன்னுடைய தேவைகளுக்கு மரியாதை கொடுத்து தன்னை தானே காதலிக்க கற்றுக் கொடுங்கள்.

"உன்னை நீ எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை." என்பதை தான் ஒரு தாய் தன் மகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவளை மாற்ற யாராவது வலியுறுத்தினாலோ அல்லது காதலுக்கு அவள் லாயக்கில்லை என்று யாராவது வசை பாடினாலும், அவர் உங்கள் மகளுக்கு ஏற்றவர் அல்ல என்பதை அவளுக்கு புரிய வையுங்கள்.

ஒரு தாயாக பாலுணர்வை பற்றி பேச உங்களுக்கு விருப்பமிருக்காது. ஆனால் உங்கள் மகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவளுக்கு தேவையான சுகங்கள் மற்றும் பாலுணர்வை நேர்மறையான ஆசையாக யோசிக்க அவளுக்கு கற்றுக் கொடுத்தால், அவள் அவைகளை அனுபவிக்கும் தயார் நிலைக்கு வரும் போது பயனுள்ளதாக இருக்கும்.

அவள் மீது திடமான புலனுணர்வு வைத்திட அவளுக்கு கற்றுக் கொடுங்கள். ஏதோ குறை இருந்து கொண்டே இருக்கிறது அல்லது நினைப்பதை போல் நடப்பதில்லை என்று அவள் தொடர்ந்து குற்றஞ்சொல்ல தூண்டுகோலாக இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வகை அறிகுறிகளை ஒதுக்காமல், எந்த இடத்தில் தவறு உள்ளது என்பதை அறிந்து அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அவளுக்கு சொல்லிக் கொடுங்கள். பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விட்டால் பிரச்சனைகளை இழுத்தடிப்பதை போலாகும்.

காதலை தேடி தானாக அலைந்து கொண்டிருந்தால் அது அவளின் முக்கியத்துவத்தை இழக்கச் செய்துவிடும் என்பதை அவளுக்கு புரிய வையுங்கள். காதல் தானாக அவளை தேடி வரும் போது வரட்டும். காதல் முறிவிலிருந்து அவளை காத்திட இது ஒரு முக்கியமான பாடமாகும்.

ஒரு உறவை நம்பிக்கையின் மீதே அமைக்க வேண்டும் என்பதை உங்கள் மகளுக்கு கற்றுக் கொடுங்கள். அவள் முதலில் தன்னை தானே நம்ப வேண்டும். பின் தனக்கு முக்கியமானவரின் மீதும், அந்த உறவின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். பிறர் அன்பை சோதிப்பதால் உங்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. அடிப்படை உள்ளுணர்வை மையமாக வைத்து ஆரம்பித்த உறவின் மீது நம்பிக்கை வைப்பதை பற்றி உங்கள் மகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.

'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய மருத்துவ தகவல்கள்..!



பிறந்த குழந்தையால் தனக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் பற்றி சொல்ல முடியாது. அதனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை பெற்றோர்களால் எளிதில் கண்டு பிடிக்கவே முடியாது. ஆனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை குழந்தை மலம் கழிப்பது வைத்து கண்டறியலாம். இது சற்று நகைச்சுவையாக இருந்தாலும், இது தான் உண்மை.

ஏனெனில் குழந்தைக்கு உள்ள பிரச்சனையை குழந்தையின் மலத்தைக் கொண்டு கண்டறியலாம். அதே சமயம், மலத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் குழந்தை சாதாரணமாகத் தான் உள்ளது என்றும் வெளிப்படுத்தும். என்ன புரியவில்லையா? பொதுவாக குழந்தை வளர வளர, அவர்களின் குடலியக்கமும் மாறுபடும். அப்போது குடலியக்கத்தின் மாறுபாட்டினால் ஒருசில வித்தியாசமான சில மாற்றங்களும் ஏற்படும்.

அப்படி ஏற்படும் மாற்றத்தில் ஒன்று தான் மலத்தின் நிறம் மற்றும் அமைப்பு. இங்கு குழந்தை மலம் கழிப்பது பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை புதிதாக பெற்றோர் ஆனவர்கள் படித்தால், அவர்களின் மனதில் உள்ள கேள்விக்கான விடை கிடைக்கும். சரி, இப்போது அவற்றைப் பார்ப்போமா!!!

குழந்தை பிறந்தது முதல் 2 வாரத்திற்கு எந்த மாதிரி மலம் வெளியேறினாலும், அது குழந்தையின் ஆரோக்கியத்தை தான் குறிக்கும். ஒருவேளை குழந்தை மலம் வராமல் இருந்தாலோ அல்லது அவர்களது டயபரில் இரத்தம் இருந்தாலோ, பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம்.

குழந்தைக்கு முதலில் வெளிவரும் மலமானது பச்சை நிறத்தில் தான் வெளிவரும். மேலும் அந்த மலமானது ஓரளவு நீர்மத்துடன் அடர் பச்சை நிறத்தில் இருக்கும். அதுவும் இரண்டு வாரத்திற்கு இருக்கும்.

குழந்தை பிறந்து 2-3 வராத்திற்கு, பச்சை நிற மலமானது மஞ்சள் நிறத்தில் மாறும். இந்த மஞ்சள் நிற மலமானது குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்கும் வரையில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல், சாதாரணமாகத் தான் இருக்கும்.

குழந்தை பிறந்த பின்னர், குழந்தையின் பெருங்குடலானது உருவாகும் வரையில், குழந்தைகளுக்கு இடைக்கால வயிற்றுப்போக்கு ஏற்படும். அதிலும் ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுத்தப் பின்னரும், கொடுக்கும் போதும் மலம் கழிப்பார்கள்.

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை, அவர்களின் மலமானது மென்மையாக இருக்கும். அதுவே ஃபார்முலா உணவுகள் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் மலமானது சற்று கடினமாக இருக்கும்.

பொதுவாக சில குழந்தைகள் பிறந்து சில நாட்களுக்கு மலம் கழிக்காமல் இருப்பார்கள். அதிலும் இந்த நிலையானது தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தான். ஒருவேளை குழந்தையின் உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிட்டால், பின் குழந்தைகள் லேசாக மலம் கழிக்க ஆரம்பிப்பார்கள்.

ஒருவேளை குழந்தை நீர்ம நிலையிலோ, பிசுபிசுப்பாகவோ மலத்தை கழித்தால், குழந்தைக்கு வயிற்றில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். அப்போது மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தை 2 நாட்களுக்கு தொடர்ந்து, அதிலும் பிறந்து 4 மாதம் ஆனப் பின்னர் மலம் கழிக்காமல் இருந்தால், குழந்தைக்கு மலச்சிக்கல் என்று அர்த்தம்.

குழந்தைக்கு பச்சை நிறத்தில் மலம் வெளிவந்தால், குழந்தைக்கு கபம் உள்ளது என்று அர்த்தம். மேலும் குழந்தைகளால் அதனை தும்மி வெளியேற்ற முடியாது, மாறாக மலத்தின் மூலம் வெளியேற்றுவார்கள்.

உங்கள் குழந்தை மலம் கழிக்கும் போது, அதிகம் வாயுவை வெளியேற்றினால், தாய்ப்பால் கொடுக்கும் நிலை சரியில்லை என்று அர்த்தம். ஏனெனில் தவறான நிலையில் தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தைகள் பால் குடிக்கும் போது காற்றினை அதிகம் விழுங்கிவிடுகின்றனர். எனவே அப்போது தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தாய்மார்கள் மாற்ற வேண்டும்.

குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கும் போது, குழந்தையின் மலமானது கருப்பு நிறத்தில் வெளிவரும். மேலும் இந்த கருப்பு நிற மலமானது ஒன்று உணவின் காரணமாகவும் வெளிவரலாம் அல்லது மலச்சிக்கல் என்றாலும் வெளிவரும். எனவே அப்படி குழந்தைகளுக்கு அதிகமாக கருப்பு நிறத்தில் மலம் வெளிவந்தால், உடனே பரிசோனை செய்வது நல்லது.

பொதுவாக குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது, அவர்களது மலத்தின் வாசனையானது சற்று இனிமையாக இருக்கும். அதுவே ஃபார்முலா உணவுகள் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் மலமானது துர்நாற்றம் வீசும்.


கம்ப்யூட்டர் அடிமைகளுக்கு சில எளிய கண் பராமரிப்பு டிப்ஸ்கள்..!



நமது ஆன்மாவின் கண்ணாடியாக செயல்படுவது கண்கள்.அது வெளி உலகை காணும் ஜன்னலாக செயல்படுகிறது.கண்கள் உங்கள் அழகை மட்டும் வெளிப்படுத்துவதில்லை.ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது. நமது வாழ்க்கை முறையே, நமது கண்களின் ஆரோக்கியத்தை நிர்மாணிக்கும் விஷயம் ஆகும்.

நீண்ட நேரமாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் இதில் இருந்து தப்பிக்க முடியாது. கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு, கண்களை பராமரிப்பது முக்கியமானதாகும். மேலும் நீண்ட நேரமாக கம்ப்யூட்டரில் அமர்ந்து கொண்டு தொடர்ச்சியாக வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் அவசியமானதாகும்.

நீண்ட நேரமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, அந்த முழு நேர பளு சுமையே கண்களை பாதிக்கும் முக்கிய காரணி. இதற்கு பல காரணங்கள் உள்ளன. கம்ப்யூட்டர் திரைக்கு மிக அருகில் உட்கார்ந்திருத்தல், ஜன்னலில் இருந்து திரையின் மீது படும் கண் கூசும் ஒளிவீச்சு, திரையின் மீதுள்ள தெளிவற்ற எழுத்துக்கள், திரையில் இருந்து உள்ள வசதியற்ற பார்வைக் கோணம், திரையின் மீது நீடித்த மற்றும் மாறாத இமையாத பார்வை போன்றவை இதற்கு காரணமாகின்றன.

இதற்காக கம்ப்யூட்டர் அருகில் அமர்ந்து, வேலை செய்வதை நிறுத்துவது உகந்தது அல்ல. எனவே அடுத்த தீர்வாக, கண்களை பராமரிப்பதே சிறந்த வழி. இங்கு சில கண் பராமரிப்பு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் முழு நேர தொடர்ச்சியான கம்ப்யூட்டர் வேலையால்,கண்களில் பணிச்சுமை மற்றும் ஸ்ட்ரைன் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

நீண்ட நேரம் கண் இமைக்காமல், கம்ப்யூட்டர் திரையை பார்த்துக் கொண்டு வேலை செய்வதால் கண்கள் உலர்ந்து விடும். கண்களில் பணிச்சுமையை மற்றும் ஸ்ட்ரைனை தவிர்ப்பதற்கு, சிறிய இடைவேளைகளை எடுத்து கொள்ள வேண்டும். இது கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் கண்களை பாராமரிப்பதற்காக அறிவுறுத்தப்படும் டிப்ஸ் ஆகும்.

உங்கள் உள்ளங்கைகளை நன்கு தேய்த்து, சூடு பரப்புங்கள். பின் உங்கள் உள்ளங்கைகளை கண்களில், 60 நொடிகள் ஒற்றி எடுங்கள். இது களைப்படைந்த உங்கள் கண்களுக்கு ஆறுதலாக இருக்கும். உங்கள் கண்களுக்கு ஒரு நல்ல அமைதி கிடைக்கும் வரை, இந்த செயலை, இரண்டு, மூன்று முறை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

தொலைக்காட்சி அல்லது கம்ப்யூட்டர் பார்க்கும் போது,திரையின் தூரத்தை மற்றும் உங்கள் கண்களின் தொடர்பு தூரத்தையும் சரிசெய்து கொள்ள வேண்டும்.இது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான செயல் ஆகும். இது கம்ப்யூட்டரில் வேலை செய்வோருக்கான முக்கியமான கண் பராமரிப்பு டிப்ஸ் ஆகும்.

இந்த உடற்பயிற்சி, நீண்ட நேரமாக கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்யும் நபர்களுக்கு கண்களில் நல்ல ஆசுவாசத்தைத் தரும். இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை, கம்ப்யூட்டர் திரையில் இருந்து பார்வையை விளக்கி, 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை, 20 நொடிகள் உற்று பார்க்க வேண்டும்.

கம்ப்யூட்டர் திரையில், அடர்வு நிறைந்த நிற எழுத்துக்களையும், லைட்டான வண்ண பின்புலங்களையும் தேர்வு செய்து வேலையை தொடங்க வேண்டும். இது நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது பின்பற்ற கூடிய எதார்த்தமான டிப்ஸ் ஆகும்.

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சரியான ஒளி அமைப்புகள் அமைய வேண்டும். நீங்கள் உங்கள் கண்களில் கம்ப்யூடர் வேலையின் பணிச்சுமையை மற்றும் ஸ்ட்ரைனை தவிர்க்க விரும்பினால், அந்த அறையில் ஜன்னல்கள் மற்றும் சீலிங்களில் இருந்து கண்களை கூசும் ஒளியானது, கம்ப்யூட்டரை அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது, உங்களுக்கு சரியான அளவில் வெளிச்சத்தை குறைத்து வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும். வெளிச்சத்தைக் கூட்டி வைத்தால் அது கண்களுக்கு, சுமையாக இருக்கும், இது கம்ப்யூட்டரில் நெடுநேரம் வேலை செய்வோருக்கான மற்றொரு கண் பராமரிப்பு டிப்ஸ் ஆகும்.

கண்களை நிம்மதியாகவும்,ஆசுவாசமாகவும் வைக்கும் வண்ணம் பச்சை.கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, ஜன்னல் வழியே சிறிது எட்டி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேலை செய்யும் இடம் நான்கு சுவர்களால் சூழப்பட்டு இருந்தால், எவ்வாறு கம்ப்யூட்டர் ஸ்ட்ரைனை தவிர்ப்பது என நினைக்கிறீர்களா? அதற்கும் ஒரு வழி உண்டு. உங்கள் கம்ப்யூட்டர் திரையின் வால்பேப்பரை பச்சை வண்ணத்தில் மாற்றுங்கள்.

நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் போது, சிறிது நேரத்திற்கு ஒருமுறை உங்கள் கணிமைகளை மூடி, கழுத்தினை லேசாக சுற்றுங்கள். இது கண்களை பராமரிப்பதற்கான சிறந்த டிப்ஸ்களில் ஒன்றாகும். மேலும் கழுத்தை சுற்றும் போது, இது உங்கள் கண்ணில் இயற்கையான நீர்ச்சத்து நிலைத்திருக்கச் செய்யும். இதனால் கண்கள் உலர்வது தவிர்க்கப்படும். இதன் மூலம் அதனால் வரும் பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

இந்த கம்ப்யூட்டர் கண்ணாடிகள், கம்ப்யூட்டரில் நீண்ட நேரம் வேலை செய்யும் நபர்களின் கண்களில் ஏற்படும் ஸ்ட்ரைனை குறைப்பதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. இது எவ்வாறு கண்களின் ஸ்ட்ரைனை குறைக்கும் என சந்தேகமாக உள்ளதா? இந்த கண்ணாடிகள், கண் கூசும் ஒளியை குறைத்து, தெளிவை அதிகப்படுத்தி, உங்கள் கண்களின் ஸ்ட்ரைனை சரிசெய்து உங்கள் கண்களை ரிலாக்ஸ் ஆக்குகிறது.

 
நண்பேன்டா