Thursday 13 March 2014

சூயிங்கம் சாப்பிடுவதால் ஞாபகசக்தி பாதிக்கும் ஆய்வில் தகவல்...!



சிலருக்கு என் நேரமும் சூயிங்கமை மென்று கொண்டிருப்பது ஒரு வழக்கம். ஆனால் இப் பழக்கம், ஞாபக சக்தியைப் பாதிக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து ஆய்வாள்ர்கள்.

 இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட கார்ட்டிப் பல்கலைகழக ஆய்வாளர்கள், சூயிங்கம் பழக்கம் இல்லாதவர்களை விட, சூயிங்கம் பழக்கம் உள்ளவர்கள் எழுத்துக்களையும் ஞாபகத்தில் வைத்திருப்பதில் அதிகக் கஷ்டப்படுகின்றனர் என்கிறர்கள்.

சூயிங்கமை மெல்லும் போது ஏற்படும் அசைவு, தொடர்ச்சியான விஷயங்களை நினைவில் வைத்திருக்கும் மூளையின் திறனை பாதித்திருக்க கூடும். என்பது ஆய்வாளர்களின் கருத்து.

கை, கால் விரல்களை நொடிப்பது போன்று சூயிங்கம் மெல்லும் தொடர்ச்சியான செயல், நம்முடைய குறுகிய கால ஞாபகத்திறனில் குறுக்கிட்டு அதைப் பாதிக்கிறதாம்.சூயிங்கம் குறிப்பாக குறிப்பிட்ட சுவை சேர்ந்த சூயிங்கம் ஒருவரின் திறனை ஊக்குவிக்கும் என்று முன்பு கூறப்பட்டதற்கு எதிராக தற்போதைய ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது.

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் மனிதர்கள் சொதப்பக்கூடியவர்கள் என்றும் மேற்கண்ட ஆய்வில் ஈடுப்பட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அதற்கென‌ ஆதாரங்களையும் முன் வைக்கின்றார்கள்.

ஆய்வாளர்களில் ஒருவரான கார்டிப்பல்கழைக்க்ழகத்தின் ‘மிஷ்சைல் கோஸ்லோவ்’, ” மூளைக்கு ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம், கவனக் குவிப்புகள் சூயிங்கம் உதவுகிறது” என்று ஆய்வுகள் வாதிட்டன.

ஆனால் வார்த்தைகள் சார்ந்த ஞாபகத்திறனில், சூயிங்க‌ம் போன்ற பகுதிச் செயல்படுகின்றன என்பதை நாங்கள் க‌ண்டறிந்திருக்கிறோம் என்று உறுதிப்பட கூறுகிறார்.
 
நண்பேன்டா