Saturday 15 March 2014

வாயைக் கவனிங்க இல்லைனா...?



உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்தால் நோய்கள் அண்டாது என்பதை, 'வாயைக் கட்டினால் வைத்தியமில்லை' என்பார்கள். மேலும் சில விஷயங்களிலும் வாயைக் கவனித்தால் நல்லது. அவை...

ஈறுகளில் ரத்தம் வடிதல் பாதிப்பு:

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கலாம். ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்றுநோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

என்ன செய்வது:

தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட 'மவுத் வாஷ்' கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் பாதிப்பு:

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமான மனஅழுத்தத்தாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் போலிக் ஆசிட்டின் குறைவு, இரும்புச்சத்து அல்லது வைட்டமின் தி பி 12-ன் குறைவாலும் இப்படி ஏற்படுகிறது.

என்ன செய்வது:

'மல்டி வைட்டமின்' மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் நோய் தொற்று குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது பாதிப்பு:

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக் கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த 'டீஹை டிரேஷன்' ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

என்ன செய்வது:

நிறைய திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ, பழச்சாறோ அருந்துவதும் நல்ல பலன் தரும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா