Monday 3 March 2014

கர்ப்பப்பை பலமாக....இந்த உணவுகளை ட்ரைப்பண்ணுங்க...!



அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்வர். இந்தக் களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து தாதுக்கள் என்று எல்லாம் கிடைத்து கர்ப்பப் பை பலமாக அமையும்.

இதை எப்படி செய்வது? (உழுத்தங்களி)

அரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7_லிருந்து 10_நிமிடங்கள் வரை வேக விடவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும் சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.

சூப் குடியுங்கள்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும்.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம்.

காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்... காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம். முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும்.

பால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும்.

பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்துவிடும்.

அடை சாப்பிடுங்கள்

முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை.

சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)

உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம்.

ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.

வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

இனி கர்ப்பிணிகளுக்கான ஒரு சில சத்தான, ருசியான உணவு வகைகள்:

தோடம்பழ சர்பத்

கமலாப்பழம் என்னும் தோடம்பழத்தின் சாறு அரை லிட்டருக்கு சீனி ஒரு கிலோ போட்டு பாகுபதத்தில் காய்ச்சி, இறக்கும்போது சிறிது குங்குமப் பூ சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உஷ்ணத்தினால் உண்டான பேதி, அதிகமான பித்தம், கிறுகிறுப்பு, சுவையின்மை இவை நீங்கும். அதிலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று.

பூசணிக்காய் சர்பத்

வெள்ளைப் பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பிசைந்து மெல்லிய துணி அல்லது மாவுச் சல்லடையில் வடிகட்டி எடுத்து ஒரு லிட்டர். 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவி இடித்துப் பிழிந்து சாறெடுத்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அடியில் தங்கியுள்ள வெண்மை நிறமான சத்தை நீக்கிவிட்டு மேலாக எடுத்து பூசணி சாறுடன் கலந்து அதை அரை லிட்டராகக் காய்ச்சி மேலாக ஒரு கிலோ சீனி சேர்த்துத் தேன் போல வரும்போது இறக்கி தினமும் இருவேளை 2 டீஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள், கைகால் எரிச்சல், நீர்ச்சுருக்கு குணமாகும்.

முருங்கைக்காய் சூப்

தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்_3, வெங்காயம்_1, தக்காளி_1, பயத்தம் பருப்பு_லு டேபிள் ஸ்பூன், பூண்டு_1 பல், மிளகு, சீரகப் பொடி_சிறிதளவு, பால்_அரை கப், மக்காச் சோளமாவு _1 டேபிள் ஸ்பூன், உப்பு_தேவையான அளவு, சர்க்கரை சிறிதளவு.

செய்முறை: முருங்கைக்காய்களைப் பெரிய துண்டங்களாக அரிந்து பிரஷர்குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் அதில் உள்ள சதைப் பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இரண்டையும் மிகப் பொடியாக அரியவும், பயத்தம் பருப்பில் தண்ணீர் ஊற்றி, பூண்டு, அரிந்த வெங்காயம், தக்காளி சேர்க்கவும். கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகப் பொடியை ஒரு சிறு துணியில் மூட்டை போல கட்டி பருப்பினுள் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.

வெந்தபின் துணிமூட்டையை எடுத்து எறிந்துவிட்டு, பருப்பு ஆறியபின் முருங்கைக்காய் விழுதுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தபின் வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அரை கப் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவைக் கரைத்து அதையும் சூப்புடன் சேர்த்து ருசிக்கேற்ப உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து சூடாக்கவும்.

(கொதிக்கவிடக்கூடாது) கலந்துவிட்டுக் கொண்டே சூப் நன்கு சூடானதும் சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறலாம்)

பாலக் சூப்

(டெல்லி பாலக் கிடைத்தால் அதிக ருசி. இதன் நுனி கூர்மையாக இல்லாமல் அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும்)

இரண்டு கட்டு பாலக் கீரையை ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக அரியவும். பிரஷர் பானில் _ ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும். (அரிய வேண்டாம்) கீரை சுருங்கியதும் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு முழு பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி சேர்த்து மூடி, வெயிட் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஆறிய பின் மூடியைத் திறந்து மிளகாய், இஞ்சித் துண்டு இரண்டையும் எடுத்து விடவும். (நெடி அதிகமாக இருந்தால் சூப் நன்றாக இருக்காது) கீரையை வேகவைத்த தண்ணீரோடு அப்படியே மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தகுந்த உப்பு சேர்க்கவும். ஒருதம்ளர் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கரைத்து சூப்பில் ஊற்றி நன்றாகச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. சுடச்சுட கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மேலே சிறிது கடைந்த பாலேடு (ஃப்ரெஷ் க்ரீம்) மற்றும் துருவிய சீஸ் சேர்க்கலாம்

பள்ளிக் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் கொடுத்து அனுப்புவது உணவா..? விஷமா..?



பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட என்ன செய்து கொடுப்பது என்ற பொறுப்பு தாய்மார்களுக்கு இருக்கிறது. அந்த கடமையை, பொறுப்பை சரிவர செய்யாத பெற்றோருக்கு பிரிட்டனில் உள்ள ஆரம்ப பள்ளியின் நிர்வாகம் மாணவர்கள் எடுத்து வர வேண்டிய மதிய உணவு வகைகள் குறித்த விதிமுறையை அமல்படுத்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

 மாணவர்களுக்கு, அவர்கள் வயதிற்கேற்ற ஆரோக்கியமான உணவுகளை கொடுத்து அனுப்பவேண்டும்; சிப்ஸ், இனிப்பு வகைகள், சாக்லேட்கள், நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த விதிமுறையை தொடர்ந்து மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் ரிலோ என்னும் ஆறு வயது மாணவன் தினமும் தனது மதிய உணவாக சிப்ஸ் பாக்கெட்டுகளை எடுத்து வந்தான். இதையடுத்து, அந்த மாணவனை, நான்கு நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

School-Kids 1

பெரும்பாலும் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என பலரும் இன்று காலை உணவை தவிர்ப்பது அல்லது அதனைக் குறித்து அலட்சியமாக இருப்பது வழக்கமாகிவிட்டது.

வெளிநாடுகளில் பணியாற்றுவோர் குறித்து கேட்க தேவையில்லை. பெயரளவில் ஏதேனும் ப்ரெட் வகைகளையோ, சாண்ட்விச்சுகளையோ சாப்பிட்டால் போதுமானது என்ற மனோநிலையே அவர்களிடம் காணப்படுகிறது.இப்படி காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.அதிலும் இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம்.

அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதற்கிடையில் நாம் பள்ளிக்குக் கொடுத்து அனுப்பும் உணவை, நம் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்று நம்மால் உறுதிபடுத்த முடியுமா? குழந்தைகள் சாப்பிடுவது எல்லாம் சத்தான உணவுதானா?அதிலும் நாம் கொடுத்தனுப்பும் தவறான உணவுப் பழக்கத்தினால், குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் விளையவிருக்கும் கேடுகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?அதிலும் இன்றைய மாணவர்கள்தான், நாளைய சமுதாயம்.எனவே இம் மாணவர்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை வளரச் செய்வதற்கும், நொறுக்குத் தீனியின் (ஸ்நாக்ஸ் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்ஸ்) தீமைகளை அறியச் செய்வதற்கும், நன்மை அல்லது தீமை தரும் உணவுகளைப் பற்றி எடுத்துச் சொல்வதற்கும், பாதுகாப்பான உணவுகளையே உண்ண வேண்டும் என்பதை உலகமெங்கும் வலியுறுத்தி வரும் அமைப்புகள் அதிகரித்து வருகின்றன.

அண்மையில் கூட சிட்னி பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் தெரேஸா டேவி தலைமையிலான குழு,சென்னையிலிருக்கும் பள்ளிக்கூட மாணவர்களின் மதிய உணவை வைத்து ஆய்வை மேற்கொண்டபோது தெரிந்த விஷயங்களை மறுபடியும் நினைவூட்டிக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது:;

மொத்தம் 300 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இந்த ஆய்வில் 55.7% பேர் பெண்கள். இவர்கள் கொண்டு வந்த மொத்த உணவு வகைகள் 2,941. இவற்றில் 8% மட்டுமே மாமிச உணவு வகையைச் சேர்ந்தவை. பெரும்பான்மையானோர் புளிசாதம், எலுமிச்சைசாதம், தயிர்சாதம் என தென்னிந்திய அரிசி உணவு வகைகளையே கொண்டு வந்தனர். சில மாணவர்கள் வறுவல், பீட்ஸா உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளையும் மதிய உணவாக கொண்டு வந்தனர். சில குழந்தை கள், கோலா உள்ளிட்ட பானங்களையும் குடிக்கக் கொண்டு வந்திருந்தனர்.

மொத்த மாணவர்களில் 87.7% பேர் வீட்டில் அம்மா செய்து கொடுத்த உணவையும், 7.3% பேர் பாட்டி உள்ளிட்ட மற்றவர்கள் செய்து கொடுத்த உணவையும், மீதமுள்ள 5% குழந்தைகள் ஹோட்டல் உள்ளிட்ட வெளிப்புற உணவையும் கொண்டு வந்திருந்தனர். இதில் வேதனையான ஒரு விஷயம், சில குழந்தைகள் பிரபல சிக்கன் உணவகத்தின் உணவுகளையும், உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பான வகைகளையும் கொண்டு வந் திருந்தனர். சத்துமிகுந்த பழங்கள், காய்கறி களை, கைவிட்டு எண்ணக்கூடிய குழந்தைகளே எடுத்துவந்தார்கள்.

84.3% குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த உணவை விரும்பிச் சாப்பிட்டார்கள். மீதமுள்ள குழந்தைகள் வேண்டா வெறுப்போடு சாப்பிட்டார்கள். சில குழந்தைகள் மதிய உணவைச் சாப்பிடவே விரும்பாதவர்களாக இருந்தார்கள்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம்… அதிக சதவிகித குழந்தைகள், சத்தான உணவுகளைக் கொண்டு வராததோடு, கொண்டு வரும் உணவையும் பிளாஸ்டிக் போன்ற ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்களில்தான் எடுத்து வந்தார்கள்” என்றவர், ‘லஞ்ச் பாக்ஸ்’ விஷயத்தில் பெற்றோர், பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டினார்.
நூடுல்ஸ்… பர்கர்!

பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்குக் கொண்டுவரும் உணவுகள், பெற்றோர்களின் விருப்பப்படியே அமைகிறது. அதிகமான பெற்றோர்… காலை நேர பரபரப்பில் கட மையே என்று ஏதாவது ஒரு உணவைத் தயா ரித்து கொடுத்து அனுப்புபவர்களாகவும், அது சத்தானதாக, ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதில் எந்தவித அக்கறையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. பெரும்பாலான பள்ளிகள், குழந்தைகளின் மதிய உணவு விஷயத்தில் தலையிடுவதை விரும்பாதவர்களாக இருக்கிறார்கள்.

இதனால் குழந்தைகளின் உணவுப் பழக்கத்துக்கு வீடு, பள்ளி என இரண்டு இடங்களிலுமே ஒரு கடிவாளம் இல்லை. இதனால் சில குழந்தைகள் பர்கர், பீட்ஸா, நூடுல்ஸ், கோலா என்று அதிக ஆபத்துக்களை விளைவிக்கக்கூடிய உணவுகளை விரும்பிச் சாப்பிடுவதுடன், அதையே மதிய உணவாக பள்ளிக்கும் எடுத்து வருகிறார்கள்.

School-Kids lunch

இப்படி பாதிப்புகளை விளைவிக்கக்கூடிய நொறுக்குத்தீனி வகைகளையும், கொழுப்பு உணவுகளையும், உடல் பருமன் உண்டாக்கக் கூடிய உணவுகளையும், ஊட்டச்சத்து இல் லாத உணவுகளையும், உடல் நலத்தை கெடுக் கக்கூடிய உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வருகின்றனர்’அத்துடன் குழந்தைகள் அருந்தும் பானங்களில் உள்ள சிலவகை அமிலங்கள், பல்லைக்கூட கரைக்கும் தன்மை கொண்டவை.

மேலும் குழந்தைகளின் ஆதரவைப் பெற, இதுபோன்ற பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் எக்கச்சக்கமான விளம்பரங்களைச் செய்கின்றன..கூடவே இலவச பொருட்களையும் அள்ளித் தருகின்றன. அதனால் குழந்தைகள் விரும்பிக் கேட்க, பெற்றோரும் மறுக்காமல் வாங்கித் தருகிறார்கள்.

அது மட்டுமின்றி இப்போது இந்தியாவில் ஆண்டுக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நொறுக்குத்தீனி மட்டுமே விற்பனை ஆகிறதாம். இதை அதிகமாக குழந்தைகள்தான் உட்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட நொறுக்குத்தீனிகளைத் தொடர்ந்து சாப்பிடுவதால், குழந்தைகளின் உடல்பருமன் அதிகரிக்கிறது. விளைவு எதுவரை செல்கிறது என்றால், புகைப்பிடித்தலுக்கு அடுத்தபடியாக இந்த உடல் பருமன்தான் இறப்புக்குக் காரணமாக அமைகிறதாம்.

 ‘கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளிடம் உடல் பருமன் மும் மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே இதய நோய்க்கான மிகமுக்கியக் காரணியாக இருக்கிறது’ என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘நொறுக்குத் தீனிகள் மிக விரைவில் உடலில் உள்ள ஈரலையும் பாதிப்படையச் செய்கின்றன’ இதனிடையேதான் பிரிட்டன் பள்ளிகள் லஞ்ச் விஷயத்தில் கெடுபிடியாக நடந்து கொள்கிறது. அது போல இங்கேயும் பள்ளி நிர்வாகம் நடந்து கொள்ள அனுமதிக்காமல் பார்த்துக் கொள்வது நம் கையிதான் உள்ளது,  

குட்டீஸ்களுக்கு உணவு ஊடடும் போது பொறுமை முக்கியம்..!

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

dec 7 health child food

ருசியான உணவு

குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை சிநாக்ஸ்வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை தயாரித்து அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.
தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்கவேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவைகளைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்கவேண்டும். பிரட், ஆப்பிள், சூப், போன்றவைகளை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள்.


சரியான அளவு

குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.


ஊட்டச்சத்து உணவுகள்

புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
ஜங்க் ஃபுட் வகைகளைகளை அதிகம் தருவதற்கு பதிலாக மாலை நேரங்களில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி ஏற்படும்.


பொறுமை அவசியம்

குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையில் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.


ஸ்பூன் எச்சரிக்கை

இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.


முன் உதாரணம்

நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும். எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.


கல்யாணம் செய்யாமலே கலக்கும் வாழ்க்கை..!



‘திருமணம் கடினமானது. செலவுமிக்கது. சிக்கலானது' என்ற கருத்து இளம் பெண்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதனால் திருமண சிந்தனையை தூக்கி தூரவைத்துவிட்டு, படிப்பது, வேலை பார்ப்பது, சம்பாதிப்பது என்ற எண்ணத்தோடு இளம் பெண்கள், வாழ்க்கை பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

கொஞ்சம் களைத்து திரும்பிப் பார்க்கும்போது அவர்கள் வயது 30-ஐ தொட்டுவிடுகிறது. அதன் பின்பு, ‘இந்த வயதுக்கு மேல் நமக்கு சரியான வரன் அமையுமா? அமைந்தாலும் அந்த மணவாழ்க்கை நன்றாக ஓடுமா?’ என்ற எதிர்மறை எண்ணங்கள் தலை தூக்குகின்றன.

அப்போதே இன்னொரு புறத்தில், ‘ஏன் ஊரைக்கூட்டி திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடங்கவேண்டும்? திருமணம் செய்யாமலே ஒருவரோடு சேர்ந்து வாழ்ந்துவிடலாமே!’ என்ற சிந்தனை ஓட்டம் ஆரம்பிக்கிறது.

திருமணம் செய்யாமலே ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் விஷயம், இப்போது அடிக்கடி நீதிமன்றங்களின் கதவுகளையும் தட்டுகிறது. அந்த அளவுக்கு அது சமூகத்தில் வளர்ந்துவிட்டது என்பதுதான் அதன் அர்த்தம். இந்த ‘லிவ் இன் டுகெதர்’ வாழ்க்கை பற்றி இருவேறு கருத்துக்கள் உண்டு.

ஒருசிலர் கலாசார கேடு என்று எதிர்க்க, ‘இன்றைய சூழலில் இதைவிட்டால் வேறு வழியில்லை’ என்றும் சிலர் ஆதரவு கொடுக்கிறார்கள். ‘மற்றவர்களுக்கு தெரிந்தால் அது அசிங்கம்’ என்று சொல்பவர்களும் உண்டு. ‘சிலர் அந்த பாதையில் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அதனால் நாமும் போனால் அது தவறில்லை’ என்றும் சிலர் கருதுகிறார்கள். அன்பு என்ற அற்புதமான வட்டத்திற்குள் அடங்குவது தான் இல்லறம். அதற்கு அடிப்படை நம்பிக்கை. நம்பிக்கைக்கு சமூக பிணைப்புகளும், சில சமய நடைமுறைகளும் அவசியம்.

ஆனால் கல்யாணம் செய்துகொள்ளாமலே நம்பிக்கைக்கும், அன்பிற்கும் முரணாக, ஏதோ இன்னொரு தேவைக்காக சேருவதுபோல் இருக்கிறது. ‘இவர், இன்னாருடைய மனைவி’ என்பது ஒரு சமூக அந்தஸ்து. அதுபோல் ‘இவர், இன்னாருடைய கணவர்’ என்பதும் சமூக அந்தஸ்தே.

அந்த ‘இன்னார்’ என்பவர் மாறிக் கொண்டே போனால் அது சமூக அந்தஸ்தை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. அதனால் சமூக அந்தஸ்து கிடைக்காது. வெளிநாட்டு பண்பாடு, கலாசார இறக்குமதிகளுக்கு பின்னும் இந்தியா தன்னுடைய கலாசார பண்பாட்டை இழக்கவில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம் இதிகாசங்களின் வழிகாட்டல். சட்டங்களின் அறிவுறுத்தல். அதுதான் பாதுகாப்பும் கூட. அதையெல்லாம் மீறி ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்க நினைத்தால் சுற்றியிருப்பவர்கள் ஏற்றுக்கொள்ள தயங்கத்தான் செய்வார்கள்.

திருமணத்திற்கு முன்பு ஒருவரோடு வாழ்க்கை. திருமணத்திற்கு பின்பு இன்னொருவரோடு வாழ்க்கை. இப்படி இரட்டை வாழ்க்கையை தேர்ந்தெடுப்பவர்கள், இரண்டாவது வாழ்க்கையை நடத்த தடுமாறுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிலையற்ற தன்மையோடுதான், ‘போகிறவரை போகட்டும்’ என்று மணவாழ்க்கைக்குள் அடி யெடுத்துவைக்கிறார்கள்.

ஆனால் கொஞ்ச காலத்திலே, ‘புதிய வாழ்க்கை வாழும்போது, பழைய அவரே பரவாயில்லை. இவர் அவரைப் போல் இல்லை’ என்ற எண்ணம் வந்துவிட்டால், வாழ்க்கை வண்டி ஓடாது. நின்றுவிடும். அது விரைவாகவே விவாகரத்து என்ற கோட்டை தொட்டு விடுகிறது.

இந்திய திருமணங்களுக்கு தனிமரியாதை உண்டு. திருமணத்திற்கு பின்பு ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால், அதன் பிறகு மறுமணம் செய்விக்க பெற்றோர்கள் முன்நிற்பார்கள். ஆனால் இதுபோன்ற 'லிவ் இன் டுகெதர்' வாழ்க்கையை ஏற்பதில்லை.

திருமணம் என்பது பெண்ணின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டது. ‘லிவ் இன் டுகெதர்’ வாழ்க்கை பாதுகாப்பை அல்ல, பாதிப்பைதான் உருவாக்குகிறது!

பரீட்சை ( தேர்வு ) பயத்தை போக்கும் எளிய வழிகள்..!



தேர்வுகள் நெருங்கிவிட்டன. எப்படி எழுதப்போகிறோம், எவ்வளவு மதிப்பெண் பெறப்போகிறோம் என்ற கவலை மாணவர்களுக்கு! அதைவிட கூடுதல் கவலை பெற்றோர்களுக்கு! நம் பிள்ளை எப்படி தேர்வை சந்திக்க போகிறான் என்றும், எவ்வளவு மதிப்பெண் பெற்று எங்கு மேற்படிப்பிற்கு செல்ல போகிறான் என்றும் நினைத்து கவலைகொள்ளத் தொடங்கிவிட்டனர்.

பள்ளியில் ஆசிரியரிடம் பாடங்களை தடையின்றி ஒப்பிக்கும் மாணவன், வகுப்பில் புத்திசாலி எனப் பெயர் பெற்ற மாணவன் ஆண்டுத்தேர்வில் தோல்வியடைகிறான் அல்லது எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் கவலையடைகிறான். பரீட்சையின் போது எல்லாமே மறந்ததாய் உணர்கிறான், இது எதனால்?

பாடங்கள் தெரிந்திருந்தும் சரியாக எழுத முடியாதது ஏன்? அதுதான் பரீட்சை பயம். மாணவமாணவிகளுக்கு மனநலம் மற்றும் மேல் படிப்பிற்கான கல்வி ஆலோசனை வழங்கும் சென்னை உளவியல் நிபுணர் டாக்டர் எம்.விமல தாரணி, பரீட்சை பயத்தை எப்படி போக்க வேண்டும் என்பது பற்றி கூறுகிறார்.

பயத்திற்கான காரணங்கள்:

பரீட்சையின்போது பயம் ஏற்படுவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். ஒருவருக்கு தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற கவலை, மற்றவருக்கு பெற்றோரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி விடுவோமோ என்ற பதற்றம், ஒருசிலருக்கு தெரியாத கேள்வி வந்து விடுமோ என்ற குழப்பம், இன்னும் சிலருக்கு அதிக மதிப்பெண்ணோ அல்லது முழு மதிப்பெண்களோ பெற்று விட வேண்டுமே என்ற தவிப்பு. பயப்படுவதற்கான காரணம் இப்படி பலவாக இருந்தாலும், இந்த பயத்தின் பாதிப்பு என்னவோ ஒன்றுதான்.

பயத்தினால் ஏற்படும் பாதிப்புகள்:

பரீட்சை பயம் மனதில் அதீத பதற்றத்தை உண்டு பண்ணும். பதற்றம் ஏற்பட்ட உடன் பலவிதமான உடலியல் மாற்றங்கள் அட்ரீனல், கார்டிசால் போன்ற ஹார்மோன்களால் ஏற்படுகிறது. இதயம் வேகமாக துடிப்பது, உடல் சூடாகி விடுவது, உள்ளங்கை, உள்ளங்கால்களில் வியர்வை பெருகுவது, கண்மணிகள் விரிவதால் பார்வை சற்றே மங்கலாவது, பசி அறவே இல்லாமல் இருப்பது, நாக்கு வறண்டு விடுவதுபோன்ற அறிகுறிகள் இதனால் உடலில் தோன்றும். இந்த பதற்றத்தினால் மனதின் அலைச் சுழலும் அதிகரித்துவிடுவதால் படித்தது எல்லாமே மறந்துவிடும்.

பரீட்சையின்போது ஏற்படும் மறதி:

நம்முடைய மூளை எந்தவொரு செயலை செய்யும்போதும் ஒரு குறிப்பிட்ட அலைச்சுழலில் (ப்ரீக்வென்சி) தான் இயங்கிக்கொண்டிருக்கும். குறைந்த அலைச்சுழலில் இயங்கிக் கொண்டிருக்கும் சமயங்களில் நாம் பார்க்கும், கேட்கும் மற்றும் அனுபவிக்கும் விஷயங்கள் எல்லாம் அதே அலைச் சுழலில்தான் நம் மூளையில் பதிவாகும்.

மீண்டும் அதே அலைச்சுழல் ஏற்படும் போது, அப்போது அனுபவமான விஷயங்கள் நம் ஞாபகத்தில் வரும். இப்படியிருக்க, ஒரு மாணவன் அமைதியான சூழலில் வீட்டிலோ, வகுப்பிலோ படிக்கும் கேட்கும் பாடங்கள் சற்றே குறைவான மன அலைச்சுழலில் பதிவாகிவிடும். பரீட்சைக்கு முன்பு ஏற்படும் பயத்தினால் அவனுடைய மனஅலைச்சுழல் மிகவும் அதிகரித்துவிடும்.

குறிப்பாக பரீட்சை ஹாலில் சென்று அமர்ந்ததும், குறைவான அலைச்சுழலில் பதிவான பாடங்கள் எல்லாம் அதிகரித்த கொஞ்சமாக பரிச்சயமாகி பழகிய விஷயமாகிவிடும். அலைச்சுழலில் மனம் இருப்பதால் நினைவு மண்டலத்திற்கே வராது. இதனால் தான் படித்தது எல்லாம் மறந்தநிலை ஏற்படுகிறது. பரீட்சை பயத்தைபோக்குவது எப்படி?

திட்டமிட்டு படிக்கும் முறை :

திட்டம் தீட்டுவதே எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்வதற்கான வழி. ஒவ்வொரு பாடத்திலும் (சப்ஜெக்ட்) உள்ள பாடப் பகுதிகளை நம் வசதிக்கேற்ப சிறுசிறு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். இதற்கான திட்ட அட்டவணையை மாணவர் தன் விருப்பம், தேவை, தன்திறனிற்கு ஏற்ப தானே தயாரித்துக்கொள்ள வேண்டும்.

மொத்த பாடத்தையும் சேர்த்து பார்த்தால் பயம் ஏற்படுவது இயற்கையே. அதையே சிறுசிறு பகுதியாக பிரித்து படிக்கும்போது சுலபமாக இருக்கும். பாடம் படிக்கும்போது டி.வி பார்ப்பதை போலவோ, பாட்டு கேட்பதைபோலவோ வசதியான உடையணிந்து தன் விருப்பத்திற்கேற்ப அமர்ந்து கொண்டு படிக்க வேண்டும். பிடித்த நொறுக்கு தீனியை (அது சத்துள்ளதாக இருப்பது முக்கியம்) கொறித்துக்கொண்டும் கூட படிக்கலாம். அப்போதுதான் படிக்கும் செயல் இனிமையாக இருக்கும்..

பாடங்களை நினைவு கூறும் வழி :

நாம் புதிதாக ஒரு இடத்திற்கு செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். முதலில் போகும் பாதை எல்லாம் புதிதாக இருக்கும். அதே பாதையில் அடிக்கடி போகத்துவங்கினால் வழியில் உள்ள எல்லாக் காட்சிகளும், கட்டிடங்களும் கொஞ்சம் தேர்வு நேரத்தில் நடந்துகொள்ளும் முறை:

நமக்கு தெரியாத ஒருவரை நாம் சந்திக்க வேண்டியிருந்தாலோ தெரியாத வேலையை செய்ய வேண்டியிருந்தாலோ சற்றே பயமும் பதற்றமும் இருக்கத் தான் செய்யும். அதே நேரத்தில் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒருவரை சந்திக்க வேண்டியோ, பழகிய வேலையை செய்ய வேண்டியோ இருந்தால் சுலபமாகவும், சாதாரணமாகவும் இருக்கும் அல்லவா?

அதுபோல்தான் தேர்வை நமக்கு பழகியதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். முழு தேர்வையும் அடிக்கடி (3 மணிநேரம்) எழுதி பழகிக்கொள்ள வேண்டும். இதையேதான் நாளையும் செய்யப்போகிறோம் எனும்போது தேர்விற்கு முந்தைய நாள் பயம் தோன்றாது. தேர்விற்கு முன்தினம் கட்டாயம் போதுமான தூக்கம் இருக்க வேண்டும்.

தேர்வு எழுதி முடித்த பின்பு எழுதிய தேர்வைப் பற்றி அதிகம் ஆராய்ந்து கொண்டோ பேசிக்கொண்டோ இருக்கக்கூடாது. தடைதாண்டும் போட்டி நடைபெறுவதை பார்த்திருப்பீர்கள். ஒரு தடையை தாண்டிய பிறகு அடுத்த தடையை நோக்கிதான் அவ் வீரர் ஓடுவார்.

ஒரு தடையை சரியாக டாக்டர் தாண்டவில்லை என்றாலும் அவர் கவனம் முழுவதும் இன்னும் சிறப்பாக அடுத்த தடையை தாண்டுவதில்தான் இருக்கும். எல்லாத் தடைகளையும் தாண்டிய பிறகே தன் வேகம், நேரம் போன்றவற்றை அறிந்து கொள்வார்.

அதுபோல்தான் மாணவர்களின் கவனமும் ஒரு தேர்வை முடித்த பின்பு அடுத்த தேர்வை நோக்கியே செல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு தேர்வில் ஏதா வது தவறு செய்திருந்தாலோ, அதை மற்றவர்கள் குறிப்பிட்டு காட்டினாலோ மனம் தளர்ந்துவிடும். வி சீ ரி பயம் மற்றும் பதற்றமும் வந்து, அடுத்த பரீட்சையை அது பாதித்துவிடலாம்.

நேர்மறை அழுத்தம்:

மன அழுத்தத்தில் இரண்டு வகையுண்டு. ஒன்று நேர்மறை அழுத்தம். மற்றொன்று எதிர்மறை அழுத்தம். எந்த செயலையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால் அதற்கு உத்வேகம் தர சிறிதளவு அழுத்தம் ( பாசிட்டிவ் ஸ்ட்ரெஸ் ) வேண்டும். இந்த அழுத்தம் எல்லா மாணவர்களுக்கும் இருக்கும். இந்த ஸ்ட் ரெஸ் பரீட்சையை சிறப்பாக எழுதவே உதவும்.

போருக்கு செல்லும் வீரனுக்கு முதல் தேவை வீரம். பின்பு பலமான ஆயுதம், மற்றும் ஆபத்தில் பாது காக்கும் கவசங்கள். அதுபோலத்தான் தேர்விற்கு செல்லும் மாணவர்களுக்கு முதல் தேவை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை (வீரம்).

பின்பு சிறப்பாக பாடங்களை படித்திருப்பது (ஆயு தம்) மற்றும் மேற்கூறிய குறிப்புகளை கடைபிடிப்பது (பாதுகாப்பு கவசங்கள்). இவையெல்லாம் இருக்க போரைப்பற்றிய பயம் எதற்கு? களமிறங்கி வெற்றி வாகை சூடவேண்டியதுதான்!

சிவனுக்கு மல்லிகை பூ அர்ச்சனை செய்யலாமா..?



சிவனை பத்துக்கோடி மலர்களால் அர்ச்சனை செய்பவர்கள் ராஜயோகம் பெறுவார்கள். ஐந்து கோடி மலர்கள் அர்ச்சனை செய்தால் முக்தி பெறலாம்.

ஒருகோடி மலர்களால் அர்ச்சனை செய்தால் ஞானம் பெறலாம்.

 அரைக் கோடி மலர்களால் அர்ச்சனை செய்து ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஐந்து லட்சம் தடவை ஜபித்தால் சிவன் அருள் கிடைக்கும்.

லட்சம் அருகம்புல் அர்ச்சித்தால் தீர்க்காயுள் ஏற்படும்.

லட்சம் கரு ஊமத்தையை கொண்டு அர்ச்சனை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

லட்சம் கரவீர புஷ்பத்தால் அர்ச்சனை செய்தால் நோய்கள் நிவர்த்தியாகும். லட்சம் மல்லிகை பூக்களால் அர்ச்சனை செய்தால் அழகிய மனைவி கிடைப்பாள்.

ஐம்பதினாயிரம் மலர்களால் அர்ச்சித்தால் வியாதிகள் நிவர்த்தியாகும். பன்னீராயிரத்து ஐந்நூறு மலர்களால் அர்ச்சனை செய்தால் கல்வி, கேள்விகளில் சிறந்தவனாவான்.

பத்தாயிரம் மலர்களால் அர்ச்சிக்க சத்ருபயம் நீங்கப் பெறுவார்கள் என்று சிவபுராணம் கூறுகிறது
 
நண்பேன்டா