Sunday 16 March 2014

ஜப்பானியர்களிடம் கற்க வேண்டிய 10 பண்புகள்..!



1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது அதற்கெனவே வடிவமைக்கப்பட்ட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் சுகாதாரப் பொறியியலாளர் என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டாலரில் 5,000/-த்திலிருந்து 8,000/- வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய் மொழித்தேர்வுகளுக்குப் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை. அத்துடன் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன. ஆனால் ஜப்பான்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

5. ஜப்பானில் முதல் வகுப்பிலிருந்து தொடக்கம் ஆறாம் வகுப்புவரையான மாணவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

7. ஜப்பான் பள்ளிக்கூடங்களில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டுவரை தேர்வுகள் இல்லை.கல்வியின் நோக்கம் செய்திகளை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும்தானே தவிர தேர்வு மூலம் அவர்களை தரப்படுத்துவதற்கல்ல என்கிறார்கள்.

8. ஜப்பானில் மக்கள் உணவகங்களில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத் தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.

9. ஜப்பானில் சராசரியாக ஓர் ஆண்டில் தொடர்வண்டிகள் தாமதமாக வந்த நேரம் அதிகபட்சமாக 7 வினாடிகள் மட்டுமே.

10. ஜப்பானில் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக்குகிறார்கள். அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது.

பெண்கள் அழகாக தோற்றமளிக்க சில ஆலோசனைகள் உங்களுக்காக...!



கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை.

அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற, சில அழகு சிகிச்கைகள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத்.

பழ பேஷியல்

முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும்.

நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.

காய்கறி பேஷியல்

முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.

மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.

நன்கு அடித்த பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.

குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.

வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

அதிமதுரம் கலந்து தயாரிக்கப்படும் …ஸ்கின் லைட்டனிங் ஜெல் இப்போது கிடைக்கிறது. அதை முகத்தில் தடவி, அதற்கு மேல் கால்வானிக் சிகிச்சை தருகிறோம். நான்கைந்து முறைகள் செய்தாலே வியப்பான மாற்றத்தைக் காண முடிகிறது.

கறுப்பான பெண்களுக்கான வரப்பிரசாதமென ஒயிட்டனிங் பேஷியல்களைச் சொல்லலாம். பட்டுக்காகப் பயன்படும் மல்பரி, கோஜிக் அமிலம் என சருமத்தை நிறமாக்கக் கூடிய இயற்கைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறவற்றால் இந்த பேஷியல் செய்யப்படுகிறது. கிளென்சிங்கில் தொடங்கி, மசாஜ், ஸ்கரப், பேக் என ஒவ்வொரு கட்டத்திலும் நிறத்தை அதிகரிக்கச் செய்கிற பொருட்கள் இதில் உண்டு.

கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிற பொருட்களால் செய்யப்படுகிற …ஸ்கின் மிராக்கிள் சிகிச்சை கறுப்பான பெண்களுக்கு ரொம்பவே லேட்டஸ்ட்.

இவர்கள் எப்படி மேக்கப் போடலாம்? 

கறுப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக்க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது.

அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின் டோன் கொண்டது எனப் பார்த்து அதற்கேற்ற பவுண்டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப் பொருந்துகிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம்.

ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல், ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும். லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.

கறுப்பான பெண்கள் வெள்ளை நிறப்பவுடர் உபயோகிப்பதைத் தவிர்த்து, லூஸ் பவுடர் உபயோகிக்கலாம்.

உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும் அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கருப்பாகக் காட்டும். வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிரீம், டார்க் பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா பிங்க் போன்ற நிறங்களில் உடை அணியலாம்.

கண்: கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்.

உதடு: உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம் மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும்.

முகத்தின் எண்ணைப் பசை நீங்க: முட்டையின் வெண்கரு 7 ஸ்பூன், தேன் கால் ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூன் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் பூசிவிட்டு முகம் கழுவினால், எண்ணைப் பசை நீங்கிவிடும்.

முக வறட்சி நீங்க: பச்சை கொத்த மல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து அலம்ப வேண்டும்.

கரும்புள்ளி மறைய: முகப்பருவால் ஏற் படும் ஜாதிக்காயை அரைத்துப் போடவும். முகப்பரு நீங்க: பூண்டு அல்லது கருந் துளசியை அரைத்துப் போட நாளடைவில் பருக்கள் மறையும்.

வாய் நாற்றம்: புதினா கீரையைக் காய வைத்து பொடி செய்து பல் துலக்குவதால் வாய் நாற்றமின்றிப் பல் பளிச்சென்றிருக்கும்.

வெண்மையான பல்: இரவு நேரத்தில் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன், பல் வெண்மை பெறும்.

உதடு: உதட்டில் தேங்காய் எண்ணை தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.

கை: பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து பொடித்து கைகளில் தேய்த்து வந் தால் கை மிருதுவாக இருக்கும்.

நகம்: நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண் ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.

மார்பகங்களைப் பாதுகாக்க: வெள்ளைக் குன்றிமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து மார்பகங்களின் மீது பூசிவர, தளர்ந்த மார்பகம் சரியான வடிவம் பெறும்.

வியர்வை நாற்றம்: ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி, சமமான அளவு பயத்தம் மாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும்.

உடல் பருமன்: பப்பாளிக் காயை பொறியலோ, குழம்பு வைத்தோ வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

பாதம்: பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..!



1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.


  • மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் போறீங்களா..? இதைப் படிச்சிட்டு போங்க..!



நீங்கள் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யப் போகிறீர்களா? அதற்கு முன்பாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை கவனத்தில் கொள்வது நல்லது.

எந்த துறைகளில் முதலீடு செய்யப் போகிறீர்கள்..? 

பங்குகள் சார்ந்த பரஸ்பர நிதிகளில் நீங்கள் முதலீடு செய்ய முடிவெடுத்தால், எந்தெந்த துறைகளைச் சார்ந்த பங்குகளில் அதிகமாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்து அந்த துறைகள் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்தால் நன்றாக இருக்கும்.

கடந்த கால செயல்பாடு

 பரஸ்பர நிதிகளின் தற்போதைய என்ஏவி (நெட் அசட் வேல்யு)ஐ பார்க்க வேண்டும். அதுபோல் அந்த நிதிகளின் கடந்த கால செயல்பாடு மற்றும் அவற்றின் வளர்ச்சி ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். கடந்த காலங்களில் அந்த நிதிகளின் என்ஏவி அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அதன் என்ஏவி மதிப்பு சுமாராக இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும்.

பரஸ்பர நிதி ரேங்கிங்

 சிஆர்ஐஎஸ்ஐஎல் ஒவ்வொரு காலாண்டிலும் பரஸ்பர நிதி ரேங்கிங்கை இணையதளத்தில் வெளியிடுகிறது. இந்த ரேங்கிங் பொருளாதார ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்த ரேங்கிங்கை பார்த்து அதன் மூலம் நீங்கள் முதலீடு செய்யப் போகும் பரஸ்பர நிதியின் போட்டியாளர்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இதர முக்கிய குறிப்புகள் 

பரஸ்பர நிதியின் அளவு மற்றும் அவற்றின் காலம் ஆகியவற்றை பார்க்க வேணடும். பெரிய அளவில் இருக்கும் பரஸ்பர நிதிகளில் பெரும்பாலும் நிறையப் பேர் முதலீடு செய்திருப்பர். அதுபோல் அதிகமான தொகையையும் முதலீடு செய்திருப்பர். ஒரு வேளை இரண்டு நிதிகள் சமமான அளவிலான என்ஏவி மதிப்பைக் கொண்டிருந்தால், எந்த நிதி குறைந்த காலத்தில் என்ஏவி மதிப்பைப் பெற்றது என்பதைப் பார்த்து அதில் முதலீடு செய்ய வேண்டும்.

எனினும் பரஸ்பர நிதிகள் அனைத்தும் மார்க்கெட் நடவடிக்கைகளைப் பொறுத்து அவை ஏறும் அல்லது இறங்கும். எனவே இந்த பரஸ்பர நிதிகள் நிறைய லாபத்தைத் தரும் என்று உத்திரவாதம் அளிக்க முடியாது. ஆனால் முதலீடு செய்வதற்கு முன்பாக பரஸ்பர நிதிகளை ஆராய்ந்து பார்த்து சரியான நிதியில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

"மிஸ்டு கால் பேங்கிங்" இது புது வகையான வங்கிச் சேவை...!



இன்டெர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் போன்ற தொழில் நுட்ப ரீதியிலான புதுமையான சேவைகளை மக்களுக்கு வழங்கி வந்த வங்கிகள் தற்போது "மிஸ்டு கால் பேங்கிங்" என்ற புதிய சேவை தளத்தினை அறிமுகப்படுத்த இருக்கின்றன.

இதன் மூலம் வங்கி கணக்கினை கொண்ட ஒருவர் வங்கியின் குறிப்பிட்ட எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் வங்கியின் சேவைகளை பெற முடியும். மிஸ்டு கால் பேங்கிங் மூலம் பெறப்படும் அனைத்து சேவைகளும், விசாரணை தொடர்பானதாகவும் சேவைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்கும்.

உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் புதிய செக் பெறுவதற்கான கோரிக்கையை தெரிவிக்கலாம் அல்லது தனது வங்கி கணக்கில் இருப்பில் உள்ள தொகை மற்றும் வங்கி கணக்கின் அப்போதைய பரிவர்த்தனையை உள்ளடக்கிய மினி ஸ்டேட்மென்ட் என்று சொல்லப்படும் சிறு பரிமாற்ற அறிக்கை அல்லது அவரது வங்கி கணக்கின் அறிக்கை ஆகியவை தொடர்பான சேவைகளை அவர் மிஸ்டு கால் மூலம் பெற முடியும்.

வங்கி கணக்கினை கொண்ட இன்டெர்நெட் சேவையை பெற முடியாத வாடிக்கையாளர்களுக்கும், குறைவான சேவையை அளிக்கும் மொபைல் போன் கொண்ட வாடிக்கையாளர்களுக்கும் இந்த மிஸ்டு கால் சேவையை வங்கிகள் அறிமுகப்படுத்த இருக்கின்றன.

இந்த புதுமையான நன்மைகள் நிறைந்த சேவையை பெற விரும்பும் ஒருவர் தனது மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்து அந்த எண்ணை தனது வங்கி கணக்கு என்னுடன் இணைக்க வேண்டும்.

வங்கி கணக்குடன் மொபைல் எண்ணை ஒருமுறை இணைத்த பின், வங்கியினால் குறிப்பிடப்படுகிற கட்டணமில்லா எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் இந்த சேவையை எந்த வித செலவும் இல்லாமல் பெற முடியும்.

எஸ்எம்எஸ் பேங்கிங் செயல்பட்டு வரும் வழிமுறையையே மிஸ்டு கால் பேங்கிங் பின்பற்றும் "எஸ்எம்எஸ் பேங்கிங் சேவை வசதியில் ஒருவர் தந்து கணக்கில் உள்ள இருப்பு தொகையை அறிந்து கொள்ள மற்றும் சில சேவைகளுக்கான கோரிக்கைகளை முன் வைக்க குறிப்பிடப்பட்ட எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

வாடிக்கையாளர்க்கான இந்த எஸ்எம்எஸ் சேவைக்காக வங்கிகள் ஒரு குறிப்பிட்ட சிறிய தொகையை கட்டணமாக வசூலிக்கும். எனவே இந்த சேவை முற்றிலும் இலவச சேவை அல்ல.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் மட்டுமே தகவல்களை வழங்கும் இந்த சேவை, எந்த விதமான அபாயத்திற்கோ, தவறான பயன்பாட்டிற்கோ, மோசடி குறித்த பயத்திற்கோ இடமளிப்பதில்லை.

இதனால் தனது வங்கி கணக்கு எண்ணுடன் வாடிக்கையாளர் மொபைல் எண்ணை இணைத்து வைத்திருக்கும் ஒருவர், சட்ட விரோத பயன்பாட்டை தவிர்க்க தனது மொபைல் போனை பத்திரமாக பாதுகாப்பாக கையாளுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வாடிக்கையாளருக்கு நட்பு ரீதியிலான சேவையை வழங்கவும் வங்கி சேவையை பெறுவதில் அவர்களுக்கு இருக்கும் தொந்தரவுகளை குறைக்கவும், பொது துறை வங்கிகளும் தனியார் துறை வங்கிகளும் சமீபத்தில் தான் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளன. இதில் சிண்டிகேட் வங்கி இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி போன்ற வங்கிகள் இந்த சேவையினை தொடங்கியுள்ளன.

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய சேவை "எஸ்பிஐ - ஈபே"..!



இணையதளத்தில் பணத்தை செலுத்த பயன்படும் கட்டணம் நுழைவாயில் என்னும் பேமண்டு கேட்வே சேவையை பாரத ஸ்டேட் வங்கி துவங்கியது.

"எஸ்பிஐஈபே" (SBI ePay) என்ற பெயரில் துவங்கிய இச்சேவை இ-காமர்ஸ், எம்-காமர்ஸ் பரிமாற்றத்தில் புதிய சக்தியாக திகழும். மேலும் இச்சேவை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், மற்றம் பலதரப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு கண் சிமிட்டும் நொடியில் பணத்தை பரிமாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும் என தெரிவித்தது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, முதன்முதலில் பேமண்டு கேட்வே சேவையை துவங்கியது.

இதுவரை எந்த ஒரு வங்கியும் இத்திட்டதை அனுமதிக்கவில்லை. மேலும் இன்றைய நாள் முதல் இச்சேவையை தனியார் நிறுவனங்கள் மூலமே பெறப்பட்டு வந்தது. இச்சேவையின் மூலம் பல புதிய வாடிக்கையாளர்களை கவர முடியும் என ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த இரு வருடங்களில் இந்தியாவில் மின்னணு பரிமாற்றம் சுமார் 32 சதவீதம் உயர்ந்துள்ளதாக சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த பரிமாற்றத்தால் ரூ.15,400 கோடியாக இருந்த வர்த்ததம் இப்போது ரூ.47,349 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த எஸ்பிஐஈபே சேவை இன்னும் சில நாட்களில் மின்னணு முறையில் பில்களை கட்டும் தளமான இபிபிபி சேவையும், மொபைல் போன் மூலம் கட்டணத்தை செலுத்தும் சேவையான ஐவிஆர்எஸ் போன்ற சேவைகளை விட பல் மடங்கு அதிகப்படியான ஆற்றல் மிகுந்த சேவையை வழங்கவுள்ளது

ஆன்லைன் பயண துறையை தொடர்ந்து இப்போது நுகர்வோர் சந்தையிலும் அதிகப்படியான ஆன்லைன் பரிமாற்றம் அதிகரித்துள்ளது. இதனால் இச்சேவை மக்களுக்கு உதவியாக இருக்கும்.

மும்பை பங்குசந்தையில் ஸ்டேட் வங்கியின் பங்குகள் 1653.50 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

800 கோடி முதலீட்டுடன் 400 திரையரங்குகளை அமைக்கும் சினிபோலிஸ்..!



டெல்லி: மெக்சிகோ நாட்டை சேர்ந்த திரையரங்கு நிறுவனமான சினிபோலிஸ் இந்தியாவில் தனது 84 திரைகளில் இருந்து 400 திரைகளாக உயர்த்த சுமார் 800 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம் இந்தியாவில் சமார் 13 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

இந்த முதலீட்டின் மூலம் 17,600 இருக்கைகளாக இருக்கும் எங்களது இந்திய வர்த்தகம் 88,000 இருக்கைகளாக உயரும் என சினிபோலிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் அவர் "2017ஆம் ஆண்டிற்குள் சுமார் 400 திரையரங்குகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஒவ்வொரு திரையறங்கும் 2.5 கோடி முதலீட்டில் அமைக்கப்படும்.

தற்போது 84 திரையரங்கள் உள்ளன மிதமுள்ள 316 திரையரங்குகளை 2017ஆம் ஆண்டுக்குள் அமைக்க அனைத்து வேலைகளில் ஈடுப்பட்டுள்ளோம்"தெரிவித்தார்". என அவர் தெரிவித்தார்.

இந்த விரிவாக்க திட்டத்தில் சுமார் 180 திரையரங்கிகளை தென் இந்தியாவில் அமைக்கப்படும் எனவும், இதில் 70 திரைகளை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் அமைக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்தது.

இந்திய திரையரங்குகளில் சுமார் 40 சதவீதத்தை தன்னகத்தில் வைத்திருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் சுமார் 5.7 சதவீத இருக்கைகளை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் 4-வது ஜனாதிபதி ஜார்ஜ் மாடிசன் பிறந்த தினம் - மார்ச் 16- 1751



ஜார்ஜ் மாடிசன் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார்.

இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார்.

ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவர்.

குறிப்பாக அமெரிக்காவின் 1787-ம் ஆண்டின் அரசியல் சட்டத்தினை எழுதியவர்களின் முதன்மையானவர்.

இதனால் இவரை 'அரசியல் நிறுவன சட்டத்தின் தந்தை' என போற்றுவர்.

இவர் 1788-ல் அரசியல் நிறுவன சட்டத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை.

 1787- 1788 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க அரசு ஒரு நடுவண் அரசாக இயங்குவதற்கு வலு சேர்த்து ஒப்புதல் அளிக்கும் முகமாக எழுதப்பட்ட 85 புகழ்பெற்ற கட்டுரைகளில் மூன்றில் ஒரு பகுதி கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரசின் முதல் தலைவராக இவர் பணியாற்றிய பொழுது பல அடிப்படையான சட்டங்களை நிறைவேற்றினார்.

அரசியல் நிறுவன சட்டத்தில் உள்ள முதல் பத்து சட்ட மாற்றங்களை நிறைவேற்றினார்.

அவற்றுள் குடிமக்களின் உரிமைகள் சட்டம் முக்கியமானது. இதனால் இவரை உரிமைகள் சட்டத்தின் தந்தைஎனப் போற்றுவர்.

குலம் தழைக்க அருள்புரியும் சப்த கன்னியர் கோவில் - ஒரு சிறப்பு பார்வை..!



ஸ்தல வரலாறு:

நம் தமிழ் நாட்டுக் கிராமங்களில் விநாயகர் கோவிலும், மாரியம்மன் கோவிலும் நீக்கமற நிறைந்திருப்பது கண்கூடான நிஜம். திருச்சி திருவானைக்காவலை அடுத்த கீழகொண்டையான் பேட்டை (தலைகிராமம்) கீழ் விபூதி பிரகாரத்தில் அன்னை அருள்மிகு  மகா மாரியம்மன் என்ற திரு நாமத்தில் அருள்பாலிக்கிறாள்.

திருவானைக்காவல் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர்  கிழக்கே இந்த ஆலயம் அமைந்துள்ளது. 200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் முகப்பைத் தாண்டி மகா மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் அன்னை மகாமாரியம்மன் மூலவராய் அருள்பாலிக்கிறாள்.

கருவறையில் அன்னை நான்கு கரங்களுடன் சாந்த சொரூபியாய் அருள் பொழியும் இன்முகத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அழகே அழகு. அன்னையின் மேல் இரு கரங்களில் உடுக்கையும் வேலும் இருக்க, கீழ் இரு கரங்களில் குங்குமக் கிண்ணமும், கத்தியும் காட்சி  தருகின்றன. அன்னை பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள்.

ஆலயத் திருச்சுற்றில் தென் மேற்கில் தலவிருட்சமான வேம்பு தழைத் தோங்கி நிற்கிறது. தல விருட்சத்தின் அடியில் ராகு தன்  துனைவியுடன் நாகர்களும் அருள் பாலிக்கின்றனர். ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில், ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தால் தோஷத்தின் கடுமை குறைவதுடன், பெருமளவில் நிவர்த்தி பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் இங்கு பெண்களின் கூட்டம் அதிகமாக இருப்பது இயற்கை. திருச்சுற்றின் வடமேற்கு திசையில் சப்த கன்னியார்களின் திருமேனிகள் உள்ளன. ஒரே கல்லில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திருமேனிகளைப் பார்க்கும் போது நாம் வியக்காமல் இருக்க முடியாது.

இந்த சப்த கன்னியார்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்கின்றனர் பக்தர்கள். நாடெங்கிலும் உள்ள பல நூறு குடும்பங்களுக்கு இந்த  சப்த கன்னியர்கள் குலதெய்வமாய் விளங்குகின்றனர். தங்களது குலதெய்வத்தை தரிசிக்க வரும் குடும்பத்தினர் சப்த கன்னியருக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து,  மலர்மாலை சூட்டி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

சப்த கன்னியருக்கு பிடித்தமானது விரலி மஞ்சள். எனவே, வரும் பக்தர்கள் விரலி மஞ்சளை அரைத்து எடுத்து வருகின்றனர்.  பின்னர், அந்த அரைத்த மஞ்சளை சப்த கன்னியருக்கு அபிஷேகம் செய்கின்றனர். இந்த சப்த கன்னியர்கள் சன்னதியின் மேல்புறம் மூடப்படாமல் திறந்தே உள்ளது. மழையோ, வெய்யிலோ இவர்கள் மேல்படுவதை தவிர்க்க இலயாது.

திருச்சியில் உள்ள அன்னை வெக்காளி அம்மனைப் போலவே இங்கு இந்த சப்த கன்னியர்கள் கூரையின்றி மேலே திறந்த  நிலையில் அருள்பாலிப்பது போல் வேறெங்கும் இந்த அமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. சப்தமி திதியில் சப்த கன்னியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

அன்று பக்தர்கள் நிறைய அளவில் வந்து  சப்த கன்னியரை தரிசித்து பயன்பெறுகின்றனர். மூலவரான அன்னை மகா மாரியம்மனின் காவல் தெய்வமான சங்கிலி ஆண்டவர் ஆலயத்தின் அருகேயே உள்ளார். அன்னை மகா மாரியம்மனுக்கு தினசரி இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.

ஆலயம் காலை 6 மணி முதல் 9 மணி வரையி லும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். அன்னைக்கு ஆண்டுதோறும் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை திருவிழா நாளாகும். அதற்கு முந்தின புதன்கிழமை முகூர்த்த கால் நட்டு காப்பு  கட்டுவார்கள்.

அன்று நல்ல நாள், நல்ல நேரம் என்று எதையும் பார்ப்பதில்லை. சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பான பிறையில் ஆலயத்தில் யாகம் நடைபெறும். ஞாயிறு காலை அன்னைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சுமார் 200 காவடிகள் ஆலயத்திலிருந்து புறப்படும், சங்கிலி ஆண்டவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, அவரிடம் உள்ள  வேல் மற்றும் அரிவாளை எடுத்துக்கொண்டு கொள்ளிடம் நதியை நோக்கிச் செல்வர். அங்கும் பலர் காத்திருப்பார்கள்.

பால் காவடி, அலகு காவடி, தீர்த்த காவடி, கட்டை காவடி, அக்னி சட்டி இவைகளுடன் சுமார்  300 பேர் கொள்ளிடத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் அன்னையின் ஆலயம் வந்து சேருவார்கள். அவர்கள் கொண்டு வரும் பாலால் அன்னைக்கு குளிரக் குளிர அபிஷேகம் செய்வார்கள்.

பின்னர் காவடி எடுத்த பக்தர்களுக்கும், கூடி நிற்கும் பக்தர்களுக்கும் அன்னதானமாக கேழ்வரகு கூழ் தருவார்கள். அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுமார் 150 பெண்கள் பங்குபெறும் இந்த பூந்தேர் முழுவதும் பூக்களாலேயே  அலங்கரிக்கப்பட்டிருக்கும், இத்தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து ஆலயம் சேர மறுநாள் காலை 9 மணி ஆகிவிடும்.

பின்னர் அன்னைக்கு பல திரவியங்களாலும், பழங்களாலும் அபிஷேகம் நடைபெறும். மூன்றாம் நாள் செவ்வாய்க்கிழமை விடையாற்றியுடன் திருவிழா இனிதே நிறைவு பெறும். பின்னர், அன்று மதியம் நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 1500 பேர் பங்குபெற்று பயன் பெறுவர்.

புளிசாதம், தயிர் சாதம், கற்கண்டு பொங்கலுடன் அன்னதானம் அமர்க்களமாக நடைபெறும். வேண்டியதை அருளும் அன்னை மகாமாரியம்மனையும், குலம் தழைக்க அருள்புரியும் சப்த கன்னியரையும் தரிசிக்க ஒருமுறை  இந்த ஆலயம் வந்து போகலாமே!

பால் கலக்காத டீ பருகிப்பாருங்கள் உடல் எடை கணிசமாக குறையும்..! ஆய்வில் தகவல்



உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க படாத பாடுபடுகின்றனர்.

மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

அத்துடன் பால் கலக்காத வெறும் டீயை மட்டும் குடித்தால் போதும்.

உடல் எடை அதிகரிக்காமல் கணிசமாக குறையும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏனெனில், தேயிலையில் உடல் எடையை குறைக்கக்கூடிய பல மூலப்பொருட்கள் உள்ளன.

ஆனால், அதில் கலக்கப் படும் பசும் பாலில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது.

அது உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்க செய்து விடுகிறது.


எனவே தான் பால் கலக்காத கடும் டீயை குடிக்க வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதே நேரத்தில் பால் கலக்காமல் குடிக்கும் வெறும் டீ ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

தினமும் 3 கப் வெறும் டீயை குடித்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆய்வு இருக்கட்டும் நம் ஊர் பாட்டி வைத்தியம் ஒன்னு சொல்றேன் கேளுங்க , பால் கலக்காத டீயில் ஒரு ஸ்லைஸ் லெமன் துண்டை நறுக்கிபோட்டு குடியுங்க பிந்தம், பேதி, வய்ற்று வலி போன்ற வயிற்று கொலறேல்லாம் மறைந்திடும்.

மன அழுத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா..? - ஆய்வில் தகவல்



மனஅழுத்தம் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்று பல்வேறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதே சமயம் சிறிய அளவிலான மன அழுத்தம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.

ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்புத்துறையும், மனோவியல் மற்றும் நடத்தையியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

சிறிய அளவிலான மனஅழுத்தம் காரணமாக உடலில் நோய் தாக்குவது தடுக்கப்படுகிறதாம். காயங்கள், நோய் தொற்றுகள் ஏற்படாமல் அது தடுக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பணிபுரியும் இடங்களில் ஒரு குறிப்பிட்ட பணியை முடிக்கவேண்டுமே என்று ஏற்படுத்திக்கொள்ளும் சிறிய அளவிலான மனஅழுத்தம் ரத்த அணுக்களிலும், சருமம், மற்றும் திசுக்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இந்த நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் உடலின் ஆரோக்கியமான ஹார்மோன்களை சீராக சுரக்கச் செய்கிறதாம்.

மூளை செல்களையும் கூட புத்துணர்ச்சியாக்குகிறது என்று ஆய்வாளர்கள தெரிவித்துள்ளனர்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற ஆய்வின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர் தாபர் தெரிவித்துள்ளார்.

முத்தம் கொடுத்து பழக புதிய தொழில்நுட்பத்துடனான தலையணை..!

 

முத்த பயிற்சிக்காக விசேஷ தலையணை தயாரிக்கப்பட்டுள்ளது. காதலர்கள் தங்களின் அன்பை முத்தங்களின் மூலம் பகிர்ந்து கொள்கின்றனர்.

அது அன்பு மிகுந்ததாக இருந்தால்தான் ஒருவர் மீது ஒருவரை வசீகரிக்கும்.

எனவே, வசீகரிக்கும் முத்த பயிற்சிக்கென விசேஷமான தலையணை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

 அதை அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இமிலிகிங் (26) என்பவர் வடிவமைத்துள்ளார்.

இந்த தலையணையில் பிரத்யேகமான உதடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இமிலி கிங் கூறியதாவது:–

”காதலர் தினத்தையொட்டி காதல் ஜோடிகளுக்கு ஏதாவது புதுமையானவற்றை வழங்க வேண்டும் என முடிவு செய்தேன்.

அதுகுறித்து நண்பர்களிடம் விவாதித்தபோது தான் இந்த எண்ணம் எனக்கு உதயமானது.

 25 வயதுக்குள்ள இளைஞர் மற்றும் இளம்பெண்களை கவரும் விதத்தில் முத்த பயிற்சி தலையணை தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

டீ, லெமன் டீ,கிரீன் டீ,பால் டீ - இவைகளைப் பற்றி சொல்லவா...?



தமிழில் தேநீர் என்று யார் சொல்லுகிறார்கள்? எளிய மக்கள் என்றில்லை,பெரும்பாலான மனிதர்களுக்கும் விருப்ப்பானம் தேநீர். சுடுநீர் ஊற்றி கழுவுவது அதிகம் இப்போது நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை.

சிலர் கௌரவமாக பேப்பர் கப்பில் போடச்சொல்லி விடுகிறார்கள்.எளிய மக்கள் தண்ணீர் குடிக்க இக்கடைகளையே நாடுகிறார்கள்.லேசாக தலை வலித்தால்,சோர்ந்து போனால்,நண்பர்கள்,உறவினர்களை வெளியில் பார்த்தால் டீ சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது.உறவை பலப்படுத்துவதில் இன்று தேநீருக்கு பெரும்பங்கு உண்டு.


கிராமத்து தேநீர்க்கடைகள் நட்பை வளர்ப்பதுடன் கூடவே வம்புகளையும் வளர்க்கிறது.சில நேரங்களில் அரசியல் சூடு பறக்கும்.நாளிதழை எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டிருப்பார்கள்.

அனைத்து தாள்களையும் யாராவது படிக்க முடிந்தால் அது அவருடைய அதிர்ஷ்டம்.கலப்படமில்லாத டீத்தூள் கொண்ட டீ கிடைத்து விட்டால் இன்னமும் அதிர்ஷ்டம்.

ஒவ்வொரு ஊராக மலிவு விலைக்கு விற்பனை செய்வதை கலப்பட பேர்வழிகள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.கலப்படம் செய்தவற்றை விலைக்கு வாங்கும் பலருக்கு அது தரமற்றது தீங்கானது என்பதே தெரியாது.


தேநீரைப்பொருத்தவரை ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது.ஒவ்வொரு பகுதிக்கும் தயாரிக்கும் முறை மாறுபடுகிறது.இஞ்சி டீ,ஏலக்காய் டீ,லெமன் டீ என்று பகுதிவாரியாக தயாரிப்பும் சுவையும் மாறும்.

இங்கே பாய்லரை பயன்படுத்தும் கடைகளே அநேகமாக இல்லை.தனியாக டிகாக்‌ஷன் கிடையாது.பாலுடன் சேர்த்து காய்ச்சுகிறார்கள்.கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும்.

கிராமங்களில் காலை நேரம் தவிர யாராவது வந்து கேட்டால் மட்டுமே அடுப்பை பற்ற வைப்பார்கள்.


மனிதர்களில் தேநீர் பருகும் முறைகளிலும் தனித்தனி குணம் இருக்கிறது. என் நண்பர் ஒருவருக்கு ஆடை இருந்தால் பிடிக்காது. சிலர் ஆடை மட்டும் கேட்பார்கள்.சமீபத்தில் ஒருவர் நுரை இல்லாமல் டீ கேட்டார்.

சிலருக்கு லைட் டீ. அதிலும் பால் மீது சில துளிகள் டிகாக்‌ஷன் விட்டால் போதும்.சுத்தமாக பால் கலக்காமல் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

வேலூர் அருகே ஒருவர் பால் டீ என்றவுடன் உற்று கவனித்தேன்.அது டீ அல்ல! பால் மட்டும்தான். அதை ஏன் பால் டீ என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

 டீயில் கலக்கப்படும் சில பொருட்களைப்பார்ப்போம்.இலவம்பஞ்சு காய்,துணிகளுக்குப்போடும் சாயம்,செயற்கை நிறமிகள்,செம்மண் போன்றவை.

இவை வட்டாரத்திற்குத் தகுந்தவாறு மாறுபடும்.முழுமையாக தெரியவேண்டுமானால் நாட்டில் உள்ள அத்தனை டீக்கடைகளிலும் பரிசோதனை செய்யவேண்டும்.

கிராமத்தில் உள்ள பல கடைகளில் குறைந்த விலையில் டீத்தூள் கிடைக்கிறதென்று வாங்கிவிடுவார்கள்.முன்பே சொன்னதுபோல குடிப்பவர்களின் உடல்நலனுக்கு கெடுதல் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது.

 கலப்பட்த்தால் மிக அதிக மக்களை அதுவும் எளிய மக்களை பாதிக்கும் ஒன்று டீத்தூள்.வயிற்றுப்பிரச்னை,குடல் புண் முதல் புற்றுநோய் வரை கொண்டு செல்லும் தன்மை இதில் உள்ள கலப்பட பொருள்களுக்கு உண்டு.

இது பற்றிய விழிப்புணர்வுக்காக கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களை பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.கிராமங்கள்தோறும் பரிசோதனை செய்து விளக்கம் அளிக்க பயிற்சி தரலாம்.

தேநீர் அருந்துவதால் நன்மை இருக்கிறதா? இல்லையா? பலர் நான் டீ,காபியே குடிப்பதில்லை என்று பெருமையாக சொல்வதும் உண்டு.சுவாச கோளாறு உள்ளவர்கள் அதிகம் தேநீர் விரும்பிகளாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

சாதாரண தலைவலிக்கு பலருக்கு டீ போதுமானதாக இருக்கிறது.ஃப்ளூரைடு இருப்பதால் பல்,ஈறு தொடர்பான சில நோய்களை தடுப்பதாக சொல்லப்படுகிறது.க்ரீன் டீ,பிளாக் டீ போன்றவற்றை ஆண்டி ஆக்சிடெண்டுகளுக்காக போற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

மாலைக்குப்பின் தேநீர்,காபி குடிப்பது தூக்கத்திற்கு நல்லதல்ல.உணவு உண்டபின் ஒரு மணிநேரம் வரை இவற்றைத் தவிர்ப்பது இரும்புச்சத்து உடலில் சேர்வதை உறுதிசெய்யும்.

குடல்புண் உள்ளவர்கள் டீகாபி அருந்தக்கூடாது.தரமான தேயிலை பயன்படுத்தும் கடைகள்,வீட்டில் தயாரிக்கும் தேநீர் ஒரு நாளைக்கு மூன்று நான்கு கப் வரை குடிப்பதில் பாதிப்பு எதுவும் இருக்காது.
 
நண்பேன்டா