Monday 10 February 2014

காற்புள்ளி காலாவதி ஆகுமா...? கொலம்பிய பல்கலை பரிந்துரை..!



ஆங்கிலத்தில் காற்புள்ளியை (,) நீக்கிவிடலாம் என்று கொலம்பிய பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது.

வாக்கியங்களை படிக்கும் போது எங்கெங்கு நிறுத்தி படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும், எங்கு முடிக்க வேண்டும் என்பதற்கு உதவி செய்வது நிறுத்தல் குறியீடுகள். அதுபோல், கமா என்றழைக்கப்படும் காற்புள்ளி, அரை புள்ளி, முற்றுப்புள்ளி, ஆச்சரிய குறி, கேள்வி குறி போன்ற பல குறியீடுகள் மொழியில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் காற்புள்ளியை ஆங்கிலத்தை பயன்படுத்தும் புதிய தலைமுறையினர் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை என தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கொலம்பிய பல்கலைக்கழக ஆங்கில மொழி துறை பேராசிரியர் ஜான் மெக்வொர்ட்டர் கூறுகையில், தற்போது இணையதளங்களில் எழுத வந்துள்ள புதிய தலைமுறையினர் பெரும்பாலும் நிறுத்தல் குறிகளை பயன்படுத்துவதில்லை. புதிய தலைமுறை எழுத்தாளர்களும் ஆங்கிலத்தை பயன்படுத்தும் போது பெரும்பாலான இடங்களில் நிறுத்தல் குறிகளை பயன்படுத்த விரும்புவதில்லை.

இதனால் ஒரு சில இடங்களில் அர்த்த மயக்கம் ஏற்பட்டாலும் பொருள் பெரும்பாலும் மாறுவதில்லை. எனவே, புதிய காற்புள்ளி உள்ளிட்ட நிறுத்தல் குறிகள் தேவையில்லை என்று மொழி வல்லுனர்கள் பலர் தெரிவித்துள்ளனர். எனவே, காற்புள்ளி போன்ற நிறுத்தல் குறிகளை நீக்கி விடலாம் என்று தெரிவித்துள்ளார்.

பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால்..? அதிர்ச்சித் தகவல்கள்



இவ்வுலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால், அனைவருமே நம்மைப் பெற்றெடுத்த தாய்மார்களைத்தான் கூறுவோம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். அந்த பெண்வழி சமூகத்தில்தான் இன்றைய பெண்கடவுள்கள் தோன்றின.

கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்குப் பின்புலத்திலும்  பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை. இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும்               அவசியம்.

ஆனால், நடைமுறையில் நாம் காண்பதோ நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சீரும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு இலக்காவது கொடுமையானது. ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளில் சிக்கி, ஆண்களின் ஆதிக்க சூழ்ச்சிகளால் அடிமைகளாகவே நடத்தப்படு   கிறார்கள். இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண் களும், குழந்தைகளுமே.

பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத் திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும். 15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்ற  னர். ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.

பெண்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தாலும், அந்த துறைகளில் உள்ள பெண்கள் பாதுகாப் போடு பணி செய்ய முடிகிறதா என்றால்  அது ஒரு பெரிய கேள்விக்குறிதான். பெரும் பாலான துறைகள் ஆண்களால் நடத்தப் படுவதாலும் பெரும்பான்மையான உயர் அதிகாரிகள் ஆண்களாக இருப்பதாலும் பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்றிருந்தவர்களாக இருந்தாலும் அந்த துறைகளில் ஆணாதிக்கத்தின் கீழ் அடிமை களாகவே உள்ளனர்.

நகர்புறங்களில் பல கம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களிலும், ஊடகங்களிலும் பணி புரியும் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலில் பல வகையான பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் பாதுகாப்பின்றி அதிகளவில் வாழ்க்கையை தொடருகின்றனர்.

இவ்வாறு பாதுகாப்பின்றி வாழ்க் கையைத் தொடரும் பெண்களின் வாழ்வில் பாதுகாப்பு கிடைக்குமா? என்று       எத்தனையோ பெண்களும், பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட ஆர்வாளர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.  அவர்களின் பல ஆண்டுகள் கனவை நிறைவேற்ற பெண்கள் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது.

இந்திய அரசியல்  அமைப்புச்சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15 இரண்டும், எல்லா வகையான வேறுபாடு களையும் களைந்து, சமத்து வத்தோடும் சகோதரத்துவத்தோடும் வாழ்வதற்கான உரிமையை வலியுறுத்திக் கூறுகிறது. பிரிவு 21-ல் பெண்கள் எவ்வாறு மாண்போடும், சமமான வகையில் பொது இடங்களிலும் பணியிடங்களிலும் மதித்து நடத்தப்பட வேண்டும் என்பதை தெளிவு படுத்துகிறது. ஆனால் நடைமுறையில் நாம் காண்பதோ பெண்களின் பாதுகாப்பற்ற நிலை. இந்நிலை இந்தியாவில் மிகவும் உயர்ந்துள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்து பெண்கள் பாதுகாப்பினை வலியுறுத்தியது.

1993-ல் வியான்னாவில் நடந்த ""உலக மனித உரிமை மாநாட்டில்'' பெண்களின் உரிமைகளை மீறுதல் மிகக் கொடிய மனித உரிமை மீறல் என்பதைச் சுட்டிக்காட்டப்பட்டது. 1993-லிருந்து இந்திய அரசானது பல நிலைகளில் பெண்கள் பாதுகாப்பிற்கு முயற்சிகளை எடுத்த வண்ணமாக இருக்கின்றது.

 இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் ""பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010''. இந்திய         அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பெண்களுக்கான முழுமையான பாதுகாப்பினை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை. இச்சட்டத்தின் முக்கிய நோக்கமே, பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே ஆகும். அரசின் இந்த அரிய சட்ட முயற்சி பெண்கள் முன்னேற்றத்திற்கு மிகுந்த பயனளிக்கும்.

இச்சட்டம் எல்லா இடங்களிலும் பணி செய்யும் பெண்களுக்கு பொருத்தமானதாக உள்ளது. அரசுத்துறையாகவோ, தனியார் துறையாகவோ, வேறு எந்த நிறுவனங்களாக இருந்தாலோ அங்கு பெண்கள் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் இச்சட்டம் மூலம் நீதி பெறலாம். மேலும், பாலியல் வன்முறைக் குத் தூண்டிய அதிகாரிகளையோ, ஏனைய ஆண்களையோ, சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்கலாம். வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பட்டால், பெண்கள் பல பணிகளில் பங்கெடுத்து நாட்டின் ஒட்டு மொத்த சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்யலாம். இந்த பாதுகாப்புச் சட்டம் "பாலியல் வன்முறை' என்றால் என்ன என்ற தெளிவான விளக்கத்தையும் வழங்குகிறது.

"பெண்கள் பணி செய்ய உகந்த சூழலை ஏற்படுத்தி தராத நிலையே பாலியல் வன்முறை, என்பதை வலியுறுத்தி, அத்தகைய செயல்களை அறவே தடைசெய்ய முயற்சிக்கிறது. பலதுறைகளில் பணி செய்யும் பெண்களுக்கு மட்டுமல்ல இச்சட்டம். ஒரு நிறுவனத்திற்கு வந்துபோகும் பெண்களாக இருந்தாலும், படிக்கின்ற பெண்கள், பள்ளி, கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி செய்வோர், மருத்துவமனைகளில் நோயுற்றிருப்போர் முழுமை யான பாதுகாப்பினை வழங்க முற்படுகிறது. இச் சட்டத்தின் கீழ் ஒவ்வோர் அமைப்பிலும் உள்ளார்ந்த புகார் குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் புகார் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

இச்சட்டத்திற்கு கீழ்ப்படியாத அதிகாரிகள் சிறைத் தண்டனையும், 50,000/- க்கும் அதிகமான அபராதத்தையும் சந்திக்க நேரிடும். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்த 90 நாட்களில் விசாரணையை முடித்து நடவடிக்கையை எடுக்க இச்சட்டம் வலியுறுத்துகிறது.  இச்சட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொறுப்பு. பெண்களின் பாதுகாப்பு கருதி, அவர்களின் பணி இடங்களில் தேவையற்ற வன்முறைச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இச்சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.

பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை மீறல்கள் அனைத்தும் மனித உரிமை மீறல்களே. அத்தகைய மனித உரிமை மீறலை செய்யும் நபர் யாராக இருந்தாலும் எந்த பதவியிலிருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் உதவி செய்திடும் வகையில் இச்சட்டம் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

சரியான வகைகளில் தாமதமின்றி இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டால், கண்டிப்பாக தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிரான           பாலியல் வன்முறைச் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமெனில் வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

ஒன்பதில் ஒளிந்திருக்கும் உடல்நலம்..!

உடலுக்கு ஏற்ற ஒன்பது தானியங்கள்...!


நெல்:- 

உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.

பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.
புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது. சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.

சோளம்:- 

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.

கம்பு:-

 கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.

சாமை:- 

சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.

வரகு:-

 நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.


கேழ்வரகு:- 

தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் சொல்வர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

கோதுமை:- 

அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.

பார்லி:- 

குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.

சீயான் விக்ரம்’ - வாழ்க்கை வரலாறு...!



‘சீயான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், நடிகர் விக்ரம் அவர்கள். நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

 ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’, ‘6 முறை ஃபிலிம்ஃபேர் விருது’, ‘தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது’, ‘3 முறை விஜய் விருது’, சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, ‘அம்ரிதா பட விருது’, ‘சர்வதேச தமிழ்ப் பட விருது’, ‘விகடன் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்று, ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ல் இருந்து ‘கௌரவ டாக்டர் பட்டத்தையும்’ வென்றார்.

ஒரு நடிகராகத் திரையுலகில் நுழைந்த அவர், பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். மக்களின் நலனுக்காகப் பல சமூக நலத் தொண்டுகளைத் தனது ரசிகர் மன்றம் மூலமாக செய்து வரும் அவர், ‘சஞ்சீவனி டிரஸ்ட்’ மற்றும் ‘வித்யா சுதா’ ஆகிய பொதுநல நிறுவனங்களின் விளம்பரத் தூதராகவும் இருந்து வருகிறார். இத்தகைய சிறப்புமிக்க நடிகர் ‘சீயான்’ விக்ரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பையும், சாதனைகளையும் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

  • பிறப்பு: ஏப்ரல் 17, 1966
  • பிறப்பிடம்: பரமக்குடி, தமிழ்நாடு, இந்தியா
  • பணி: நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பின்னணிக் குரல் நடிகர்
  • நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் பரமக்குடியில் கிறஸ்துவ தந்தையான வினோத் ராஜுக்கும், இந்து தாயான ராஜேஸ்வரிக்கும் மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1966 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விக்ரம் கென்னெடி வினோத் ராஜ் என்பதாகும். இவருடைய அம்மா, ஒரு சப்-கலெக்டர் மற்றும் புகழ்பெற்ற நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்களின் சகோதரியும் கூட. அவரது மகனான நடிகர் பிரசாந்த், விக்ரமின் நெருங்கிய உறவினராவார். இவருக்கு அனிதா என்ற சகோதரியும், அரவிந்த் என்ற சகோதரனும் உள்ளனர்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

சேலம் அருகேயுள்ள மலைப்பிரதேசமான ஏற்காட்டிலுள்ள மாண்ட்ஃபோர்ட் பள்ளியில், தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளியில் பயிலும் போதே, அவர், கராத்தே, நீச்சல் போன்ற பல அற்புதக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், திரையுலகில் கால் பதிக்க எண்ணினார்.

ஏனென்றால், தன்னுடைய தந்தையான வினோத் ராஜ் அவர்கள், சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆர்வத்துடன் தனது சொந்த ஊரானப் பரமக்குடியை விட்டு, வாய்ப்புகள் தேடி சென்னைக்கு ஓடி வந்தார். ஆனால், அவருக்கு துணைக் கதாபாத்திரங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களில் மட்டுமே நடிக்க வாய்ப்புகள் கிடைத்ததால், அவர் மனமுடைந்து போனார். இதுவே, விக்ரமுக்குள் ஒரு வெறியைத் தூண்டியது. தனது தந்தை அடைய நினைத்த லட்சியத்தை, தான் அடைந்து அவருக்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்று உறுதியெடுத்தார். ஆனால், அவரது விருப்பத்திற்கு, அவரது தந்தையே தடையா இருந்தார். தான் சந்தித்தத் தோல்வியைத் தனது மகனும் சந்திக்கக் கூடாது என்று கருதிய அவர், அவரைக் கல்லூரியில் சேர்த்து விட்டார்.

சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில், ஆங்கிலத்தில் தனது இளங்கலைப் பட்டத்தை 1983ஆம் ஆண்டில் பெற்றார். அதன் பின்னர், தனது தந்தையின் விருப்பத்திற்கிணங்க, மீன்டும் லயோலா கல்லூரியில் எம்.பி.ஏ சேர்ந்தார். ஆனால், விதி வேறு விதமாக விளையாடியது. கல்லூரிக்குத் தனது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர், விபத்தில் சிக்கி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தனது கால் செயலிழந்து விட கூடாது என்பதால், 23 அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர், மூன்றாண்டுகள் படுக்கையிலே இருந்தார்.

திரையுலகப் பிரவேசம்

லயோலா கல்லூரியில் தனது முதுகலைப் பட்டத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே, சில விளம்பரங்களில் நடித்து வந்த அவரை, இயக்குனர் சி. வி. ஸ்ரீதர் அவர்கள், அவரது அடுத்தப் படமான ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தில் நடிக்க 1984 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்தார். அதற்குள், அவருக்கு நடந்த விபத்தினால், அதில் நடிக்க முடியாவிட்டாலும், அதிலிருந்து தேர்ந்து வந்தவுடன் ஷூட்டிங்கை வைத்துக் கொள்ளலாம் என ஸ்ரீதர் சொன்னதையடுத்து, வெகு விரைவிலே தேர்ந்து வந்த அவர், அப்படத்தை முடித்துக் கொடுத்தார். மேலும், அப்படம் 1990 ஆம் ஆண்டில் வெளியானது.

திரையுலக வாழ்க்கை

விக்ரம் அவர்களைத் தமிழ்த் திரையுலகில் அறிமுகம் செய்த ஸ்ரீதர் அவர்கள், அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பையும் தந்தார். 1991ல் ‘தந்து விட்டேன் என்னை’ படத்தில் நடித்த அவருக்கு, எஸ். பி. முத்துராமன் அவர்களின் படமான ‘காவல் கீதம்’ (1992) மற்றும் பி. சி. ஸ்ரீராம் அவர்களின் படமான ‘மீரா’ (1992) போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பின்னர், இரண்டாண்டுகள் தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் பிஸியாக இருந்த அவர், 1994 ஆம் ஆண்டில் ‘புதிய மன்னர்கள்’ என்ற படம் மூலமாக மீண்டும் தமிழுக்கு வந்தார்.

அப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து நடித்த அவர், 1997 ஆம் ஆண்டில், அமிதாப் பச்சன் அவர்களின் தயாரிப்பில் உருவான ‘உல்லாசம்’ என்ற படத்தில், அஜீத்குமாருடன் இணைந்து நடித்தார். அதன் பின்னர், அவர், ‘கண்களின் வார்த்தைகள்’ (1998), ‘ஹௌஸ்ஃபுல்’ (1999), ‘சேது’ (1999), ‘சிறகுகள்’ (2௦௦௦), ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ (2௦௦1), ‘தில்’ (2௦௦1), ‘காசி’ (2௦௦1), ‘ஜெமினி’ (2௦௦2), ‘சாமுராய்’ (2௦௦2), ‘கிங்’ (2௦௦2), ‘காதல் சடுகுடு’ (2௦௦3), சாமி’ (2௦௦3), ‘பிதாமகன்’ (2௦௦3), ‘அருள்’ (2004), ‘அந்நியன்’ (2005), ‘மஜா’ (2005), ‘பீமா’ (2008), ‘கந்தசாமி’ (2௦௦9), ‘ராவணன்’, (2010), ‘தெய்வத் திருமகள்’ (2011), ‘ராஜபாட்டை’ (2011), ‘தாண்டவம்’ (2012), ‘டேவிட்’ (2013) போன்ற பல படங்களில் நடித்து, தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

அவர் நடித்த பிற மொழித் திரைப்படங்கள்

தமிழ்த் திரையுலகில் அறிமுகமானாலும், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிளும்தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பிற மொழிகளில் நடித்த படங்களின் பட்டியல்:

ஹிந்தி – ‘ராவன்’ (2010), ‘டேவிட்’ (2013).

மலையாளம் – ‘துருவம்’ (1993), ‘மாபியா’ (1993), ‘சைன்யம்’ (1994), ‘ஸ்ட்ரீட்’ (1995), ‘மயூர ந்ரிடம்’ (1996), ‘இந்திரப்ரச்தம்’ (1996), ‘ராசபுத்திரன்’ (1996), ‘இது ஒரு சிநேஹகதா’ (1997), ‘ரெட் இந்தியன்ஸ்’ (2000), ‘இந்த்ரியம்’ (2001).

தெலுங்கு – ‘சிருன்னவுலா வரமிஸ்தாவா’ (1993), ‘பங்காரு குடும்பம்’ (1994), ‘அடால மஜாக்கா’ (1995), ‘அக்கா பாகுன்னாவா’ (1996), ‘குரல்ல ராஜ்ஜியம்’ (1997), ‘9 நேலாலு’ (2001), ‘யூத்’ (2001).

பிறப் பணிகள்

2௦௦௦ ஆம் ஆண்டில், நடிகை மீனாவுடன் இணைந்து ஒரு பாப் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். இதில், அவரும் மீனாவும் இணைந்து பாடியிருப்பர். இதைத் தொடர்ந்து, ‘ஸ்ரீ’, ‘ஜெமினி’, ‘கந்தசாமி’, ‘மதராசப்பட்டினம்’, ‘மள்ளனா’, ‘தெய்வத் திருமகள்’, ‘நன்னா’, ‘ராஜபாட்டை’, ‘வீடிந்தே’, ‘டேவிட்’ ஆகிய படங்களில் அவர் ஒரு சில பாடல்களுக்குப் பின்னணிப் பாடியுள்ளார்.

நடிகர் விக்ரம் அவர்கள், ‘அமராவதி’ (1993) படத்தில் அஜித்குமாருக்கும், ‘காதலன்’ (1994) படத்தில் பிரவுதேவாவிற்கும், ‘குருதிப்புனல்’ (1995) படத்தில் ஜானுக்கும், ‘மின்சாரக் கனவு’ (1997) படத்தில் பிரவுதேவாவிற்கும் மற்றும் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ (2௦௦௦0 படத்தில் அப்பாஸிற்கும் பின்னணிக் குரல் பேசியுள்ளார்.

‘ரீல் லைஃப் இன்டர்நேஷனல்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய அவர், அந்நிறுவனத்தில் இரு மொழிப் படமான ‘டேவிட்’ என்ற படத்தைத் தயாரித்தார்.

மேலும், அவர், ‘மஜா’ படத்தில் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

பொது சேவை

சஞ்சீவனி டிரஸ்ட்டின் விளம்பரத் தூதராக இருந்து வரும் அவர், தனது ரசிகர் மன்றம் மூலமாக ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி, ஏழை மக்களுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை, இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி எனப் பல்வேறு சமூக நலத் தொண்டுகளை செய்து வருகிறார். தனது ஒவ்வொரு பிறந்த தினத்தன்றும் கண்தான முகாம் அமைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர், ‘கற்க கசடற’ மற்றும் ‘பச்சைப் புரட்சி’ என்ற இரு சமூகநலத் திட்டங்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளார்.

இல்லற வாழ்க்கை

நடிகர் விக்ரம் அவர்கள், கேரளாவைச் சேர்ந்த சைலஜா பாலக்ருஷ்ணன் என்பவரை குருவாயூரில் மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும், அக்ஷிதா என்ற மகளும், த்ருவ் என்ற மகனும் உள்ளனர்.

விருதுகள்


  • 2003 – ‘பிதாமகன்’ திரைப்படத்தின் சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருதை’ வென்றார்.


  • 2011 – ‘தெய்வத் திருமகள்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பிற்காக, சிறந்த நடிகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ வழங்கப்பட்டது.


  • 2011 – ‘கௌரவ டாக்டர் பட்டத்தை’ ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ அவருக்கு வழங்கி கௌரவித்தது.


தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருதுகளான ‘சிவாஜி கணேசன் விருதை’ 2௦௦6 ஆம் ஆண்டிலும், ‘சேது’ படத்திற்காக ‘ஸ்பெஷல் ஜூரி விருதை’ 1999 ஆம் ஆண்டிலும், ‘பிதாமகன்’ படத்திற்காக ‘சிறந்த நடிகருக்கான விருதை’ 2003 ஆம் ஆண்டிலும் வென்றார்.

ஃபிலிம்ஃபேர் விருதுகளை ‘சேது’ (1999) திரைப்படத்திகாக ‘ஸ்பெஷல் விருதையும்’, ‘காசி’ (2௦௦1), ‘பிதாமகன்’ (2௦௦3), ‘சாமி’ (2௦௦3), ‘அந்நியன்’ (2௦௦5), ‘ராவணன்’ (2௦1௦), மற்றும் ‘தெய்வத் திருமகள்’ (2௦11) திரைப்படங்களுக்கான சிறந்த நடிகருக்காகவும் பெற்றார்.

விஜய் விருதுகளை 2௦௦6 ஆம் ஆண்டில் ‘ஐகான் ஆஃப் தி இயர்’ என்றும், 2௦1௦ மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்காக ‘ராவணன்’ மற்றும் ‘தெய்வத் திருமகள்’ திரைப்படத்திற்காகவும் வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதை’ 2001ல் ‘காசி’ படத்திற்காகவும், ‘சர்வதேச தமிழ்ப் பட விருதை’ 2௦௦2ல் ‘ஜெமினி’ படத்திற்காகவும், ‘அம்ரிதா பட விருதை’ 2010ல் ‘ராவணன்’  படத்திற்காகவும், ‘விகடன் விருதை’ 2011ல் ‘தெய்வத் திருமகள்’ படத்திற்காகவும் வென்றார்.

முதலாளி மூளையிருக்கா..?



ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.

அக்கடையில் முதலாளியே தொழிலாளி.

ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், “முதலாளி மூளையிருக்கா?” என்று கேட்பான்.

அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.

இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவ…வேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.

நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, “அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று நண்பனும் கூறினான்.

கடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம்,

“முதலாளி மூளையிருக்கா?” என்று வழக்கம் போலக் கேட்டான்.

அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து,

“இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை” என்றான்.

திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி…!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு...



ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 393 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்தி குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 393

வயதுவரம்பு: 21 முதல் 45 வயது வரை (ஒவ்வொரு பணிக்கும் மாறுடும்).

கல்வித்தகுதி: பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான தகவலுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

மாத சம்பளம்:

01.JMGS-I:ரூ. 30,000

02.MMGS-II:ரூ. 40,000.

03.MMGS-III:ரூ. 52,000-.

04.SMGS-IV:ரூ. 63,000.

05.SMGS-V:ரூ. 75,000.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ண்ப்பக் கட்டணம்: SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500.

விண்ணப்பிக்கும் முறை: www.statebankofindia.com or www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2014

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 08.03.2014

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2014

தேர்வு அழைப்பு கடிதம் பதிவிறக்கம் செய்வதற்கான தேதி: 10.04.2014

மேலும் விரிவான கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com or www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

டாக்டர்கள் கொட்டை எழுத்துகளில் மருந்து சீட்டை எழுத வேண்டும் - அதிரடி அறிவிப்பு...



நோயாளிகளை பரிசோதிக்கும் டாக்டர்கள், அவர்களுக்கான மருந்துகளை துண்டு சீட்டில் எழுதி கொடுப்பார்கள். ஆங்கிலத்தில் இதை ‘பிரிஸ்கிரிப்ஷன்’ என்று அழைக்கின்றனர். இதில் எழுதப்படும் கையெழுத்து யாருக்கும் புரியாத வகையில் இருப்பது சகஜமான ஒன்று.

 இதனால், சில நேரங்களில் மருந்து கடைக்காரர்கள் குழப்பம் அடைந்து, டாக்டர் எழுதி கொடுக்கும் மருந்துக்கு பதிலாக அதே போன்ற உச்சரிப்பு கொண்ட வேறு மாத்திரை, மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுப்பதால் பெரிய ஆபத்துகள் ஏற்படுகின்றன.

நோயாளிகளின் உயிருடன் விளையாடும் எமனாக, இதுபோன்ற கிறுக்கல் மருந்து சீட்டுகள் கருதப்படுகின்றன. இது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு புகார்கள் வருகின்றன. இதையடுத்து, எல்லாருக்கும் புரியும் வகையில், மருந்து சீட்டுகளை டாக்டர்கள் கொட்டை எழுத்துகளில் (கேபிடல் லெட்டர்) எழுத சட்டம் கொண்டு வரும்படி பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில், நகல் அறிவிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்து விட்டது.

தற்போது, இந்த அறிவிக்கை மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு இந்த அமைச்சகம் அனுமதி அளித்தால், மருந்து சீட்டுகளை கொட்டை எழுத்துகளில் எழுதும் சட்டம் நாடு முழுவதும் விரைவில் அமலுக்கு வரும். இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் சுகாதார அமைச்சகமும் ஆர்வத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரம், இந்த நடைமுறைக்கு டாக்டர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஏராளமான நோயாளிகளை டாக்டர்கள் பரிசோதித்து, மருந்து எழுதி கொடுக்க வேண்டியிருக்கிறது.

அதுபோன்ற நேரத்தில் கொட்டை எழுத்துகளில் மருந்து சீட்டை எழுதினால் அதிகளவில் நேரம் வீணாகும் என்றும், இதனால் டாக்டர்களுக்கு தேவையற்ற அழுத்தம் ஏற்படும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாணப்படம் என்பதால் மட்டுமே அது ஆபாசமாகிவிடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி....



பாலியல் உணர்வை தூண்டுவதாக இருந்தால், நிர்வாணப் படத்தை ஆபாசமானது எனலாம். மற்றபடி, நிர்வாணப்படம் என்பதால் மட்டுமே அது ஆபாசமாகிவிடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஜெர்மனி டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பார்பரா பெல்டஸ் என்ற பெண் நிர்வாணமாக இருக்கும் படம் ஒன்றை பத்திரிகை ஒன்று 1993ல் வெளியிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில், இந்த தீர்ப்பை பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.

மேலும், சம்பந்தப்பட்ட பத்திரி கைக்கு எதிரான வழக்கையும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு ரத்து செய்தது.

தீர்ப்பு விவரம்:

ஆபாச எண்ணத்தை தூண்டு வதாக உள்ள பாலியல் வக்கிர படங்களை ஆபாசமாக கருத லாம். தீய எண்ணத்தை காட்டுவதா கவும் பாலியல் வெறியை தூண்டு வதாகவும் இருக்கும் படங்களை ஆபாச படங்களாக கருதலாம். அதுவும் அந்த படங்களின் பின்னணி மற்றும் தன்மையைப் பொறுத்ததாகும்.

நிகழ் சமூகத்தின் தரத்தை வைத்து, சராசரி நபரின் கண் ணோட்டத்தில் ஆபாசத்தை எடை போடவேண்டும். காலத்துக்கேற்ப ஆபாசம் பற்றிய கோட்பாடு மாறும்.

ஒரு காலத்தில் ஆபாசமாக கருதப்படுவது பிறிதொரு காலத்தில் ஆபாசமாக கருதப்படமாட்டாது.

தனக்கு நிச்சயிக்கப்பட்ட கருப்பு இன பெண் பார்பரா பெல்டஸுடன் நிர்வாண கோலத்தில் பெக்கர் இந்த படத்தில் இருக்கிறார்.

நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், காதலுக்கு ஆதரவு தரவேண்டும் என்ற செய்தியை சமூகத்துக்கு தெரிவிக் கும் அடையாளமாகவே இந்த படம் அமைந்திருக்கிறது.

நிறம் முக்கியமல்ல. நிறத்தைவிட காதலே பிரதானமானது என்பது இந்த புகைப்படம் முன்வைக்கும் செய்தி. வெள்ளை நிறத்தவருக்கும் கறுப்பு இனப் பெண்ணுக்கும் இடையேயான காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிய உதவி யிருக்கிறது.

எனவே பத்திரிகையில் வந்த செய்தி, படத்தை அது சொல்ல வந்த நோக்கத்தை புரிந்து மதிப்பிட வேண்டும். அதன்படி பார்த்தால் ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட் மற்றும் ஆனந்த பஜார் பத்திரிகையில் வெளியான இந்த படம், கட்டுரையை ஆட்சேபத்துக்குரியது என சொல்ல முடியாது. பார்பரா பெல்டஸின் மார்பகமானது போரிஸ் பெக்கரின் முழங்கைகளால் மறைக்கப்பட்ட இந்த படம் இருக்கிறது. இது அரை நிர்வாண புகைப்படம்தான். ஆனால் இந்த படத்தை எடுத்தவர் வேறு யாருமல்ல. பார்பராவின் தந்தை. மேலும் இந்த படம் உள்ள ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட், மற்றும் ஆனந்த பஜார் பத்திரிகையானது யார் கைக்காவது கிடைத்து அந்த படத்தை பார்த்தால் அது அவர்களது ஆபாச வெறியை தூண்டிவிடப் போவதில்லை.

இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நன்கு யோசித்து செயல்பட்டு எந்த பின்னணியில் இந்த படம் காட்டப்பட்டுள்ளது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.

ஜெர்மன் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் ஜெர்மனியில் காணப்படும் நிறவெறி, பாகுபாடு குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் போரிஸ். ஜெர்மனியில் நிலவும் நிறவெறி பற்றி போரிஸ் பெக்கர் தெரிவித்த எதிர்ப்பு கருத்துகளை இந்த கட்டுரை கூறுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த படம் முதலில் ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டென் பத்திரிகையில் வெளியானது.. பிற்பாடு ஸ்போர்ட்ஸ் வோர்ல்ட், ஆனந்தபஜார் பத்திரிகையில் 1993ல் வெளியானது.

இதை எதிர்த்து சம்பந்தப்பட்டவர் கள் மீது கொல்கத்தாவில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் புகார் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட், பத்திரிகைகளின் ஆசிரியர், வெளியீட்டாளர் உள்ளிட்டவர்களை விசாரணைக்கு அழைத்தார்.

அதைத் தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த பத்திரி கையும் பிறரும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகினர். உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யாததால் உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இனிமேல் ஒரு குடும்பத்திற்கு ஒரு கார் தான்...!!



ஒரு குடும்பம் ஒரு கார்’ என்ற முறையை பின்பற்றினால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதோடு, எரிபொருளையும் மிச்சப்படுத்தலாம்.என்பதால் அனைவரும் இம் முறையை கடைபிடிக்குமாறு மும்பை ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

மும்பையில் தற்போது பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலரும் தனித்தனி கார்களை பயன்படுத்துவதே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

 இதற்கிடையில் குடியிருப்பு சங்கங்களிடம் இருந்து என்.ஓ.சி. பெற்றால் மட்டுமே ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் புதிய காரை பதிவு செய்கின்றனர்.இதையடுத்து வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களை பயன்படுத்த பெரும்பாலான குடியிருப்பு சங்கங்கள் அனுமதி வழங்குவதில்லை.

 இப்படி குடியிருப்பு சங்கங்களின் என்.ஓ.சி., இல்லாத காரணத்தால் வாகனப் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் போலி முகவரிகளில் வாகனங்களை பதிவு செய்கின்றனர். இச்செயல்பாடுகள் ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்துதான் மும்பை ஹைகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த ஹைகோர்ட், ஆர்.டி.ஓ., அதிகாரிகளை கண்டித்ததுடன் பொதுமக்களுக்கும் சிலஅறிவுரைகளை வழங்கியுள்ளது.அதில் ஹைகோர்ட் நீதிபதி ”கார்கள் பதிவு போலி முகவரிகளில் கார்கள் பதிவு செய்யப்படுவதை, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் தடுக்க வேண்டும்.

குடியிருப்பு சங்கங்களிடம் இருந்து, என்.ஓ.சி., பெறாத நபர்களின் பெயரிலும், கார்கள் பதிவு செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து, அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“ஒரு குடும்பம் ஒரு கார்’ என்ற முறையை பின்பற்றினால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதோடு, எரிபொருளையும் மிச்சப்படுத்தலாம். இந்த நடைமுறையை பின்பற்ற, பொதுமக்களிடம், ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

சோலார் உபகரணங்களை வாங்க அரசு மானியம்...!



சூரிய மின் சக்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 10 ஆயிரம் வீடுகளில் சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவுவதற்கு தமிழக அரசு மானியம் வழங்க உள்ளது.

எனவே இத்திட்டத்தின் கீழ் மேலும் 9,700 பேர் விண்ணப்பிக்கலாம் என்பதும் இதற்க்காக தமிழக அரசின் சார்பில் ரூ.20 ஆயிரமும், மத்திய அரசின் சார்பில் மொத்தத் தொகையில் 30 சதவீதமும் இந்தத் திட்டத்தின் கீழ் மானியமாக வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக முதல்வரின் மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தில், அனுமதிக்கப்பட்ட சூரியசக்தி உபகரணம் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) www.teda.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. .

பொதுவாக வீடுகளில் 1 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவ தோராயமாக ரூ.1 லட்சம் வரை செலவாகும் எனத் தெரிகிறது.இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 1 கிலோ வாட் மின்சாரத்தில் 4 டியூப் லைட்டுகள், 3 மின் விசிறிகள், ஒரு டிவி அல்லது கம்ப்யூட்டரை இயக்க முடியும்.

மத்திய, மாநில அரசுகளின் மானியத்தைத் தொடர்ந்து ரூ.50 ஆயிரம் செலவு செய்தாலே வீடுகளில் இந்த சூரிய மின் சக்தி அமைப்பை நிறுவலாம்.ஒரு கிலோ வாட் சூரிய மின்சக்தி அமைப்பின் மூலம் ஆண்டுக்கு 1,600 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.9,200 வரை சேமிக்கலாம்.

இதையடுத்து இந்த திட்டத்தின் கீழ், சூரியசக்தி உபகரணங்கள் அமைக்கும் நிறுவனங்களை தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை தேர்ந்தெடுத்துள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியுடன் தகுதியான நிறுவனங்களை எரிசக்தி முகமை தேர்வு செய்து, அதற்கான பட்டியலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.மொத்தம் எட்டு விதமான பிரிவுகளில் இந்த நிறுவனங்களின் பெயர்கள், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் ஒரு கிலோவாட், இரண்டு கிலோவாட், ஐந்து கிலோவாட் மற்றும் 10 கிலோவாட் ஆகியவற்றுக்கான உபகரணங்களை ஐந்து வருட வாரண்டி மற்றும் ஐந்தாண்டு பராமரிப்புடன் அமைக்கும் நிறுவனங்களின் பட்டியலை, www.teda.in என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க்து.

32 அடுக்கு கட்டடம் 10 நொடிகளில் தரைமட்டம்..!



பிராங்க்பர்ட்: ஜெர்மனியின், பிராங்க்பர்ட் நகரில், 32 அடுக்கு கட்டடம், வெடி வைத்து, 10 நொடிகளில் தகர்க்கப்பட்டது. ஜெர்மனியின், பிராங்க்பர்ட் நகரில், நிதி மையமான, "ஏ.எப்.இ., கோபுரம் உள்ளது.

 இந்த கோபுரம் பழையதாகி விட்டதால், சீரமைப்பதை விட தகர்த்து விட்டு, புதிய கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டது. இதையடுத்து, கடந்த வாரம், 10 நொடிகளில், வெடி வைத்து தகர்த்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பிராங்க்பர்ட்டில், கோத்தி பல்கலைக்கழக வளாகத்தில், 1972ல் கட்டப்பட்ட இந்தக் கட்டடம், 116 மீட்டர் உயரம் கொண்டது. இந்த கோபுரத்தை தரைமட்டமாக்குவதற்கு, 950 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டது. கோபுரம் தகர்க்கப்டும் போது, பாதுகாப்பு பணியில், 500 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த கட்டடம் தரைமட்டமாவதை, 10 ஆயிரம் பேர், நேரடியாக பார்த்தனர். கட்டட இடிபாடுகள், 250 அடி வரை குவிந்துள்ளன. 50 ஆயிரம் டன் கான்க்ரீட் குப்பைகளை, ஐந்து மாதத்திற்குள், முற்றிலும் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

கூகுள் தேடலில் அடிப்படைகள்..!



இன்றைய தேடல் உலகில் அதி நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கி, வேறு யாரும் தொட முடியாத உயரத்தில் இருப்பது கூகுள் தேடல் சாதனங்கள். இணையம் சார்ந்து இயங்கும் எந்த நிறுவனமும், தனி நபர்களும், கூகுள் வழி மேற்கொள்ளப்படும் தேடல் முடிவுகளையே தங்கள் கணிப்பின் அடிப்படையாக ஏற்றுக் கொள்கின்றனர். இது எப்படி நிகழ்கிறது? என்ற கேள்வியும் அனைவரின் மனதிலும் ஏற்படுகிறது. இதற்கான விடையை இங்கு காண்போம்.

முதலில் கூகுள் தோன்றிய நிலையைக் காணலாம். விக்கிப்பீடியா தளம் தரும் தகவல்களின் படி, கூகுள் சர்ச் என்னும் பிரிவு, 1997ல் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin). இன்றைய நிலையில், நாளொன்றுக்கு இந்த தேடல் தளம் வழியாக 300 கோடிக்கும் மேற்பட்ட தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தேடலுக்கான முடிவுகள், 60 ட்ரியல்லனுக்கு (10 லட்சத்து 10 லட்சம் - 1,000,000,000,000) மேலான இணையப் பக்கங்களைத் தேடித் தரப்படுகிறது. இவற்றைத் தேட ஒரு அட்டவணைக் குறிப்பு (index) பயன்படுத்தப்படுகிறது. இதன் அளவு 95 பீட்டா பைட்ஸ். (ஒரு பீட்டா பைட் என்பது 1000000000000000 பைட்ஸ். கிகா பைட், டெரா பைட் அடுத்து பீட்டா பைட்)அதாவது ஏறத்தாழ 10 கோடி கிகா பைட்ஸ்.

1. இணைய தளங்களை எப்படி தேடி அறிவது? தேடல் பணியினை மேற்கொள்ள தான் "Google bot” என்னும் நவீன சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை இயக்குவதாக கூகுள் கூறுகிறது. இந்த புரோகிராம் பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களில் இயக்கப்பட்டு, பல இணைய தளங்களைத் தேடிச் செல்கிறது. தான் இறுதியாகத் தேடிப் பார்த்த தளத்திலிருந்து, அடுத்த புதிய இணைய தளங்களுக்கு இந்த புரோகிராமின் தேடல்கள் செல்கின்றன. தான் எந்த இணைய தள உரிமையாளர்களிடமும், அவர்கள் தளங்களை அடிக்கடிப் பார்ப்பதற்கென பணம் வாங்கவில்லை என்று கூகுள் அறிவித்துள்ளது. ஆனால், இணைய தள உரிமையாளர்கள் நினைத்தால், தங்கள் தளங்களை கூகுள் தேடல் தீண்டாமல் இருக்கும்படி வைத்துக் கொள்ளலாம்.

2. டேட்டாவினை வகைப்படுத்தல்: மேலே சொன்னபடி, அனைத்து தளங்களையும் பார்த்த பின்னர், அதில் கிடைத்த தகவல்கள் வகைப்படுத்தப்பட வேண்டும். இந்த தகவல்களே, 95 பீட்டா பைட்ஸ் அளவிலான வரிசைக் குறிப்பாக (index) அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில இணைய தளங்களை கூகுள் பாட் தேடல் புரோகிராமினால் பார்க்கப்பட முடியாமலும் போகலாம்.

3. தகவல் அறிவித்தல்: ஒரு கூகுள் தேடலானது, இந்த வரிசைக் குறிப்பினை மட்டும் பார்த்து தன் தேவைக்கேற்ப தகவல்களை எடுப்பதில்லை. அதற்கு அதிகமான நேரம் ஆகும். அது மட்டுமின்றி, தேவையற்ற குப்பைகளும் சில சமயம் தேடல் முடிவுகளாகக் கிடைக்கும். எனவே, தேடலுக்கு அதிகத் தொடர்புள்ளவற்றை மட்டும் கண்டறிய சில சிறப்பு தேடல் வழிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வழிகள் மற்றவர்கள் அறியாத வகையில் இரகசியமாக உள்ளன. மேலும், தேடலில் கிடைக்கும் தகவல்கள் பலவும் இரகசியமாக வைக்கப்படுகின்றன. ஏனென்றால், இதன் வழியாக கூகுள் தேடல் சாதனமே கைப்பற்றப்படலாம்.

4. தெரிந்த தேடல் வழிகள்: இருப்பினும் சில தேடல் வழிகளை நாம் அறிய முடிகிறது. இணைய தள டேட்டாவின் வகை (தேடல் சொற்களுக்கு எந்த அளவில் தொடர்புடையது என்ற அடிப்படையில்) அடுத்து டேட்டாவின் தன்மை. இதற்கு சொல் எழுத்து சோதனை (spell check) மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் உண்மையிலேயே நல்ல தகவல்களைக் கொண்டுள்ள இணையப் பக்கங்களிலிருந்து, அர்த்தமற்ற தளங்கள் இனம் காணப்பட்டு பிரிக்கப் படுகின்றன. இணையத் தளங்கள் தரும் டேட்டாவின் அண்மைத் தன்மை. 1996ல் பதியப்பட்ட ஒரு தளத்தின் தகவல், 2013ல் பதியப் பட்ட தளங்களின் முன்னே காட்டப்படுவதில்லை.

 அடுத்ததாக, இணைய தளத்தின் நம்பகத் தன்மை. உண்மையிலேயே தளம் சொல் லும் தகவல் சார்ந்ததா? இல்லை, போலியான மால்வேர் கொண்டுள்ள தளமா எனக் கண்டறிதல். அடுத்ததாக, இணைய தளத்தின் பெயர் மற்றும் முகவரி சரி பார்த்து அறிதல். இதனைத் தொடர்ந்து சொற்கள், அவற்றின் இணைச் சொற்களைப் பிரித்து அறிதல் மேற்கொள்ளப்படு. இதன் பின்னர், குறிப்பிட்ட இணைய தளத்தை எத்தனை லிங்க்குகள் சுட்டிக் காட்டுகின்றன மற்றும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

இறுதியாகச் சொல்லப்பட்ட நம்பகத் தன்மை "PageRank.” என்று சொல்லப்படும் தன்மையின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. ஓர் இணையப் பக்கத்தின் தர வரிசை அதற்கான லிங்க் எப்படிப்பட்ட மூலத்திலிருந்து வருகிறது என்பதை அறிவதில் உள்ளது. இதன் அடிப்படையில், ஒரு தளம் தேடல் பட்டியல் முடிவுகள் அறிவிக்கும் பட்டியலில் முதலில் இடம் பிடிக்கும். இதிலும் அதன் தன்மை கண்டறியப்படுகிறது. ஒரு தளத்திற்கு அதிகமான எண்ணிக்கையில், ஆனால், தரம் குறைந்த தொடர்புகளின் அடிப்படையில் தொடர்பு இருக்கலாம். இன்னொரு தளத்திற்கு நல்ல தரமான தொடர்புகள் சுட்டிக் காட்டும் தன்மை இருக்கலாம். அப்போது இரண்டாவதாகச் சொல்லப்பட்டதே, "PageRank” மதிப்பெண் அதிகம் பெற்று, தேடல் முடிவுகளில் முதல் பக்கத்தில் இடம் பெறும்.

இதனால் தான், இணைய தளங்களை உருவாக்கிப் பதிப்பவர்கள், தங்கள் மதிப்பெண்ணை "PageRank” ஐ எப்படி உயர்த்துவது என எப்போதும் சிந்திக்கின்றனர். அதற்கான அடிப்படைக் காரணிகளை அறிந்து அவற்றை உயர்த்துகின்றனர்.

பாலிவுட்டில் விஜய்- த்ரிஷா..!


இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது விஜய்யின் ‘கில்லி’ திரைப்படம்.

2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டது.

தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா ஜோடியாக நடித்த இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

கில்லி படம் விஜய்யின் வெற்றிப்படத்தில் முக்கியமான படமாகும். தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் கேரக்டரில் அர்ஜூன் கபூர் நடிக்கிறார்.

இவர் நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூரின் முதல் மனைவியின் மகனாவார்.

ரத்த குழாய் அடைப்பு..! ஓர் அலசல்



ரத்த குழாய் அடைப்பு நீங்க..

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம்.

தயவு செய்து கவனியுங்கள்.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:


  • 1 கப் எலுமிச்சை சாறு
  • 1 கப் இஞ்சிச் சாறு
  • 1 கப் புண்டு சாறு
  • 1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.


எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

இல்லையென்றால் மருத்துவமனை வாங்கும் பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.....!

தகவல் தறுவதில் கூகுலையும் மிஞ்சிடுவாங்க..!

ஒரு நகரத்தில் போய் நமக்கு தெரியாத முகவரியை ஒருத்தர்கிட்ட கேட்டா அவுங்க தெரிந்தால் சொல்லுவாங்க. இல்லைனா தெரியலைன்னு தலையாட்டிட்டு போயிடுவாங்க.

ஆனால் ஏதாவது ஒரு கிராமத்தில் போய் நீங்க அட்ரஸ் கேட்டு பாருங்க.தெரிந்தால் சொல்லுவாங்க. இல்லைனா அவுங்களே அக்கம் பக்கம் விசாரிச்சு சொல்லுவாங்க. நீங்க அட்ரஸ் கேட்கும் நபர் அவங்களுக்கு வேண்டப்பட்டவங்களா இருந்தா அவுங்க வீட்டில் இருக்கும் ஏதாவது சின்னப் பசங்களை வழிகாட்ட அனுப்பி வைப்பாங்க.

அதையே நீங்க எங்க ஊர் கிழவிக்கிட்டக்கிட்ட போய் அட்ரஸ் கேட்டீங்கன்னா நீங்க பார்க்கப் போகும் நபர் எந்த ஊர்ல பொண்ணு எடுத்தாரு, எந்த ஊர்ல பெண்ணை கொடுத்திருக்காரு, அவுங்க வீட்டுல எத்தனை பேர் மிலிட்டரியில் இருக்காங்க, எத்தனைபேர் வாத்தியார், எத்தனைபேர் வெளிநாட்டுல இருக்காங்க என்ற தகவல்லேர்ந்து அவுங்க மூனாம் பங்காளி வீட்டு பொண்ணு ஓடிப்போன தகவல் வரைக்கும் சொல்லி ஒரு மினி விக்கிப்பீடியாவா உங்க கண்ணுக்கு அந்த கிழவி தெரியும்.

சில கிழவிகள் தகவல் தறுவதில் கூகுலையும் மிஞ்சிடுவாங்க..!


  • நகரத்துல இருக்கிறவங்க கிட்ட அட்ரஸ் எல்லாம் கேட்க வேணாம் உங்க பக்கத்து வீட்டுக்காரர் பேரு என்னனு கேளுங்க பேந்த பேந்த முழிப்பாங்க!

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!


1. யாராவது Time கேட்டா..,
செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..
( கையில Watch கட்டி இருந்தாலும் )

2. எந்த புத்தகத்தோட அட்டையில
அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்.,
பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம்
கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch
பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா.,
8.50-க்கு தான் குளிக்க
ஓடுவாங்க.."அஞ்சே நிமிஷத்துல
ரெடி ஆயிடுவேன்..!"இந்த டயலாக்
சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா.,
அம்மா Phone பண்ணி கூப்பிடற வரைக்கும்
வர மாட்டாங்க ..!

6."உன்னாலே., உன்னாலே..!"இந்த படம்
இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும்
அமைதியா பார்க்க மாட்டாங்க..,"ஏன்டா Leg
Side-ல Ball
போடுற"இப்படி எதாவது உளறிட்டே
இருப்பாங்க.

8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா.,
மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய்
சொல்லி சமாளிச்சிடுவாங்க..! )

9. திடீர்ன்னு Walking., Exercise
பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4
நாளைக்கு தான்..

10.இப்ப இத படிச்சிட்டு சிரிப்பாங்க...

உங்களுக்கு தெரியுமா..? இந்த தகவல்கள்..!



விந்தை தகவல்கள்:-

1.கங்காருக்குட்டி பிறக்கும் பொது ஒரு இன்ச் நீளம் மட்டுமே இருக்கும்.

2.உலகிலேயே அதிகம் பேர் உயிரிழப்பது எதனால் தெரியுமா? மலேரியா கொசுவினால்

3.அமெரிக்காவில் இருக்கும் பொதுவான பாலுட்டி எலி தான்

4.ஆந்தைகளின் விழிகள் நீளவாக்கில் இருக்கின்றன. அதனால், அவை கண்களை அசைக்க முடியாது,

5.பெண்கள் பயன்படுத்தும் உதட்டு சாயத்தில் மீன் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன

6.இறால் மீன்களின் இதயம் அதன் தலையில் இருக்கின்றன

7.எறும்புகள் 16 வாரம் வரை வாழக் கூடியவை

8.ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்து தூங்க முடியும்.

9.முதலைகளால் தன் நாக்கை வெளியே நீட்ட முடியாது

10.பனிக்கரடிகள் எல்லாவற்றையும் தம் இடது கைகளாலேயே செய்யும்.

11.பட்டாம்பூசிகள் தம் பாதங்கள் வழியே சுவையை உணரும்.

12.யானைகளால் குதிக்க முடியாது

13.பன்றிகளால் நிமிர்ந்து பார்க்க முடியாது

14.ஆமைகளுக்கு பற்கள் கிடையாது

15.மாகரெல் என்ற மீன்வகை, ஒரே நேரத்தில் 5 லட்சம் முட்டைகளை இடும்

16.நெருப்பு கோழியால் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்

17.கார்பன் மோனாக்ஸைடு வாயு ஒரு மனிதனை 15 நிமிடத்தில் கொன்றுவிடும்

18.30 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் பூனை பிழைத்துக்கொள்ளும்

19.பெண்கள் ஆண்களை போல இரண்டு மட‌ங்கு கண் சிமிட்டுகிறார்கள் .

20.கேட்டு போகாத ஒரே உணவு பண்டம் தேன் தான் .

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்...!



"காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது" என்று கேள்விப்பட்டிருப்போம்.

இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..!

இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக்கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்...

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம்.

இதே போல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்..!

ஒன்று நிச்சயம்...

இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ...

நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே....

தன்னம்பிக்கையை அதிகரிக்க...!



1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன் வரிசைக்கு வாருங்கள்.

2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.

3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.

5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.
 
நண்பேன்டா