Friday 14 March 2014

இதயத் துடிப்பை சீராக வைக்கும் உணவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?



நாய்களுக்கு ஏன் வாழ்நாளானது வெறும் 10-12 வருடம் என்பது தெரியுமா? ஏனெனில் நாய்களின் இதயத் துடிப்பானது மிகவும் வேகமாக இருக்கும். இத்தகைய வேகமான இதயத் துடிப்பு மனிதர்களுக்கு வந்தால், அது மிகவும் ஆபத்தானது. அதிலும் எப்போது ஒருவரின் நாடித் துடிப்பானது அதிகமாகவோ அல்லது முறையற்றோ இருந்தால், அதற்கு இதயம் ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தம். மேலும் இதயத் துடிப்பானது அளவுக்கு அதிகமாக இருந்தால் தான் படபடப்பு ஏற்படுகிறது.

பொதுவாக இதயம் ஒரு இயந்திரம் போன்றது. அந்த இயந்திரமானது குறிப்பிட்ட அசைவை மேற்கொண்டால் தான், நீண்ட நாட்கள் இருக்கும். அதைவிட்டு, அது வேகமாக இயங்கினால், அது நாளடைவில் பழுதடைந்து தூக்கிப் போட வேண்டிய நிலை தான் ஏற்படும். ஆகவே இதயத் துடிப்பை சீராக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு சரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்வதன் மூலம், இதயத்துடிப்பின் அளவை சீராக வைக்கலாம்.

இதயத் துடிப்பு வேகமாவதற்கு மனஅழுத்தமும் ஒரு காரணம். மேலும் உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், இதயத் துடிப்பின் அளவு அதிகரிக்கும். எனவே இத்தகைய பிரச்சனையைப் போக்கும் வகையிலும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.


தயிர்

தயிருக்கு இதய படபடப்பை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ஏனெனில் இதில் நரம்பு செல்களை கட்டுப்பாட்டுடன் செயல்பட வைக்கும், வைட்டமின் பி12 அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தயிரை தினமும் சாப்பிட்டு வந்தால், இதயத் துடிப்பை சீராக வைக்கலாம்.


வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. பொட்டாசியச் சத்தானது மூளை மற்றும் இதயம் தொடர்பு கொள்ள உதவும் ஒரு முக்கியமான சத்தாகும். எனவே தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், இதயத் துடிப்பின் வேகத்தை குறைக்கலாம்.



பூண்டு

அனைவருக்குமே பூண்டு சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரியும். ஏனெனில் பூண்டுகளில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் உள்ளது.


உப்பு

அதிகமான இதயத் துடிப்பு மட்டும் பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை. சிலசமயங்களில் மிகவும் குறைவான இதயத் துடிப்பு இருந்தாலும், பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே இதயத் துடிப்பு குறைவாக இருப்பவர்கள், உப்புள்ள உணவுகளை சாப்பிட்டால், சீராக வைக்கலாம். ஆனால், அதிகமான இதயத் துடிப்பு உள்ளவர்கள், உப்பை சேர்க்கவே கூடாது.


நட்ஸ்

நட்ஸில் இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை பலவீனமான இதயம் உள்ளவர்கள் சாப்பிட்டால், இதயம் வலிமையாவதோடு, இதயத் துடிப்பும் சீராக இருக்கும்.


டோஃபு

டோஃபுவில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அத்தகைய டோஃபு இதய படபடப்பை போக்குவதில் மிகவும் சிறந்தது. மேலும் இந்த உணவுப் பொருளில் கெட்ட கொலஸ்ட்ரால் இல்லாததால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ளது.


மீன்

மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இவை இதயத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு உணவுப் பொருளாகும். எனவே இதனை உட்கொண்டால், இதயத் துடிப்பு முறையாக இயங்கி, இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.


உலர் திராட்சை

உலர் திராட்சையிலும் பொட்டாசியம் அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உட்கொள்வதன் மூலம், வேகமான இதயத் துடிப்பின் அளவானது குறையும்.


ஓட்ஸ்

ஓட்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், தமனிகளில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது நீங்கிவிடும். அதுமட்டுமல்லாமல், இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்திருப்பதால், இது இதயத்தின் துடிப்பை சீராக வைக்கும்.


புதினா

புதினா, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளில் முதன்மையானதாக இல்லாவிட்டாலும், மருத்துவக்குணம் அதிகம் கொண்டது. அதிலும் இதனை சாப்பிட்டால், இதய தசைகள் வலிமையாவதுடன், இதயத்தில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, இதயமானது ஆரோக்கியமாக இருக்கும்.


பூசணிக்காய்

பூசணிக்காயில் மக்னீசியம் என்னும் இதயத் துடிப்பை சீராக வைக்கும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது

இங்கயே ஆணி புடுங்குங்க பாஸ் ஹாலிவுட்டுக்குலாம் போகாதீங்க..!



டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

கஜினி படத்தை தெலுங்கில் மகேஷ்பாபுவை நடிக்க வைத்து ரீமேக் செய்ய ஆசைப்பட்டேன்.

அது நடக்கவில்லை. எனவே மீண்டும் மகேஷ்பாபுவை வைத்து பெரிய படம் ஒன்றை இயக்கப் போகிறேன்.

இப்படம் மகேஷ்பாபு நடிக்க சம்மதிக்காவிட்டால் ராம்சரன் தேஜாவை தேர்வு செய்வேன்.

பணம் சம்பாதிப்பதற்காக நான் சினிமா தயாரிப்பாளர் ஆகவில்லை.

 திறமையான இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காகவே பட அதிபர் ஆனேன்.

 ஒவ்வொரு படத்திலும் திறமையான புது ஆட்களை அறிமுகம் செய்வேன்.

சிறு பட்ஜெட் படங்கள் எடுப்பது, ஆபத்தானது. எனவேதான் பெரிய பட்ஜெட் படங்களை இயக்குகிறேன்.

ஹாலிவுட்டில் வருவது போல் திரில்லர் படம் இயக்க ஆசை. விரைவில் அது நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாதவிடாயின் போது செய்யக்கூடிய 6 சிறந்த உடற்பயிற்சிகள்..!



மாதவிடாய் என்றாலே பெண்கள் முகம் சுழிக்கும் ஒரு காலமாகும். அப்படிப்பட்ட நேரத்தில் ஏற்படும் உடல் வலியும் இரத்த போக்கும் அவர்களை எரிச்சலடைய செய்யும். இதனால் பல பேர் இந்த நேரத்தில் உடலை வருத்தாமல் ஓய்வில் தான் இருப்பார்கள். ஆனால் வேலை செய்து பழக்கப்பட்ட பெண்களும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு இது இடையூறாக இருக்காதா? இருக்கும் என்று தான் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அப்படி இல்லை. இதை காரணமாக காட்டி, உங்கள் அன்றாட பழக்க வழக்கத்தை நீங்கள் தள்ளி போட தேவையில்லை. அதனால் உடற்பயிற்சியிலும் கூட ஈடுபடலாம்.

மாதவிடாயின் போது உடற்பயிற்சியில் ஈடுபடுவதை பற்றி, பல ஆய்வுகள், பல தகவல்களை அளித்துக் கொண்டு தான் வருகிறது. அது நன்மையை விளைவிக்கும் என்று சில ஆய்வுகள் கூறிய போதும், அது தீமையை விளைவிக்கும் என்று இன்னும் சில ஆய்வுகள் கூறுகிறது. அதனால் காயங்களும் உண்டாகும் என்றும் சில ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், மாதவிடாயின் போது, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய உண்மையான விதிமுறை ஒன்று மட்டும் தான்: உங்கள் மனது சொல்வதை கேளுங்கள்.

மாதவிடாயின் போது தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதை எதிர்க்கும் வல்லுனர்கள் கூட, நடை கொடுத்தால் ஆபத்து ஏற்படாது என்பதை ஒத்துக் கொண்டுள்ளனர். அதனால் சன்ஸ்க்ரீன் தடவிக் கொண்டு ரோட்டை நோக்கி நடக்கத் தொடங்குங்கள். வெறுமனே நடை கொடுத்தால் மட்டும் கலோரிகள் குறைவதில்லை. இருப்பினும் உடற்பயிற்சி செய்தோம் என்ற திருப்தியை பெறுவீர்கள். குறிப்பிட்ட அளவிலான கலோரிகள் குறைய வேண்டுமே என்று எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்.

உங்களுக்கு ஜாக்கிங் செய்ய வேண்டும் என்று தோன்றினால் ஓடுங்கள். தீவிர இதய பயிற்சியில் ஈடுபடும் போது உங்கள் உடலில் இருந்து எண்டார்ஃபின்ஸ் சுரக்கும். மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு ஏற்படும் வலிகளுக்கு இது தீர்வாக அமையும். ஓடுவதற்கு முன்பும் பின்னும் அதிகளவில் தண்ணீர் குடித்து நீர்ச்சத்துடன் இருங்கள். மாதவிடாய் காலத்தில் உங்கள் நீர்ச்சத்து எளிதில் குறைந்து விடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது உண்மையோ பொய்யோ, பாதுகாப்பாக இருப்பது நல்லது தானே. அதனால் தண்ணீர் குடியுங்கள்.

யோகா என்பது பல வகைகளை கொண்டுள்ளது. உங்கள் திறன் அளவிற்கு தோதாக அமையும் ஆசனங்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மருத்துவ ரீதியாக ஆபத்து இல்லை என்றாலும் கூட, மாதவிடாய் காலத்தில் தலைகீழாக செய்யும் ஆசனங்களை தேர்ந்தெடுக்காதீர்கள். எளிய ஆசனங்கள் போதவில்லை என்றால், கடவுள் அமர்ந்திருக்கும் தோரனையை கொண்ட ஆசனங்களை நீங்கள் செய்யலாம்.

மாதவிடாயின் போது, சில நேரம் பைத்தியகாரத்தனமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். அதில் ஒன்று தான் ஏரோபிக்ஸ் பயிற்சியில் ஈடுபடுவது. அது உங்களை லேசாக வைத்திருக்கும். மேலும் ஏரோபிக்ஸ் வகுப்புகள் குறைந்த அழுத்தம் கொண்ட சுற்றுச் சூழலில் நடைபெறுவது கூடுதல் குஷியை ஏற்படுத்தும்.

நடனம் செய்வது பாரம்பரிய முறைப்படி உடற்பயிற்சி ஆகாது. ஆனால் உங்கள் இதயத் துடிப்பை அதிகரித்து கொஞ்சம் கலோரிகளை எரிக்கும். இது உடற்பயிற்சியை போல் இல்லாததால் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் நடனம் புரிவதற்கு கொஞ்சம் ஊக்கமும் உங்கள் மீது நம்பிக்கையும் இருந்தாலே போதுமானது. சாயந்திர வேளையிலே நடனம் புரிந்தால், உங்களை சந்தோஷத்தை அதிகரித்து மிகச் சிறந்த எண்ணத்தை உண்டாக்கும்.

மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருந்த படியே மனதுக்கு பிடித்த படங்களை பாருங்கள். தொலைகாட்சி பார்க்கும் நேரத்தில், விளம்பர இடைவேளைகளில், பலகையை போல் படுத்துக் கொள்ளுங்கள். தரையில் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகள் மற்றும் முழங்கையை நெஞ்சின் கீழ் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலை முழங்கை மற்றும் பாதமுனையின் உதவியை கொண்டு உயர்த்திடுங்கள். இது சற்று தீவிரமான உடற்பயிற்சியே. ஒவ்வொரு விளம்பர இடைவேளையின் போதும் இதனை செய்திடுங்கள். அதே போல் விளம்பர இடைவேளை முடியும் வரையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள்.

உங்கள் தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் இருக்க மாதவிடாயை ஒரு காரணமாக பயன்படுத்தாதீர்கள். இருப்பினும் உங்கள் உடல் சொல்வது கேளுங்கள். அது எவ்வளவு தூரம் ஒத்துழைப்பு தருகிறதோ அந்தளவு உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். மேற்கூறிய பயிற்சிகளை முயற்சி செய்து தான் பாருங்கள்.

63 சித்த மருத்துவ குறிப்புகள் உங்களுக்குத் தெரியுமா..?



1. மாம்பழம்:

 முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து 'A' உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

2. வாழைப்பழம்:

 தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.

3. முகம் வழுவழுப்பாக இருக்க:

கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.


4. இரத்த சோகையை போக்க:

பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.

5. கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது:

தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

6. குழந்தைகளுக்கு:

குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் சாப்பிட கொடுங்கள். கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது.

7. உடல் சக்தி பெற:

இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.

8. வெட்டுக்காயம் குணமாக:

நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.

9. சுகப்பிரவசமாக:

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

10. உடல் அரிப்பு குணம் பெற:

 வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து, தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.

11. காதில் சீழ்வடிதல் குணமாக:

வெற்றிலையை நறுக்கி தேங்காய் எண்ணெய் இல் போட்டு காய்ச்சி, சிவந்தவுடன் இறக்கி ஆறவைத்து சிசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ்வடிதல் நின்று விடும்.

12. நெஞ்சுவலி குணமாக:

அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்துகிறது.

13. சிலந்தி கடிக்கு மருந்து: தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.

14. சீதபேதி குணமாக:

 புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிடி சீதபேதி குணமாகும்.

15. வயிற்று நோய் குணமாக:

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.
16. காது வலி குணமாக: வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

17. நுரையீரல் குணமாக:

 நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

18. பேதி குணமாக:

மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.
19. வாதநோய் குணமாக:

குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

20. மலச்சிக்கல் சரியாக:

அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

21. மேகரோகம் குணமாக:

 ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.
22. நீரழிவு நோய் குணமாக:

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.

23. இரத்த பேதியை குணப்படுத்த:

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.

24. மூட்டுவலி குணமாக:

அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.

25. நரம்பு தளர்ச்சி நீங்க:

தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

26. பற்கள் உறுதியாக இருக்க:

மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

27. சேற்றுபுண் குணமாக:

காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.

28. மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த:

வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

29. வயிற்றுவலி குணமாக:

குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

30. வயிற்று பூச்சிகள் ஒழிய:

வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.

31. மலச்சிக்கல் தீர:

பேயன் வாழைப்பழம் தோலுடன் பில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்

32. குழந்தைகளுக்கு கண் சூடுதனிய:

நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.

33. இரத்தத்தை சுத்தப்படுத்த:

 இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.

34. கக்குவான் இருமல் குணமாக:

நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை 1/2 டம்ளர் கொடுக்க குணமாகும்.

35. இரத்தம் உறைதல் குணமாக:

 நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

36. சொறி சிரங்கு குணமாக:

 கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.

37. சளி மூக்கடைப்பு தீர:

 கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

38. தலைவலி குணமாக:

குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.

39. இரத்த கொதிப்பு குணமாக:

அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.

40. கண்வலி வராமல் தடுக்க:

எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.

41. தொண்டை கரகரப்பு நீங்க:

 பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

42. குடல்புண் குணமாக:

மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

43. கால்பித்த வெடிப்பு:

 அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.

44. இரத்தம் சுத்தமாக:

தினசரி இலந்தை பழம் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்

45. முடிவளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வரவும். தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர்ந்து வரும்.

46. செருப்புக்கடி குணமாக:

 தென்னை ஓலையை தனலில் போட்டு கருக்கி பட்டு போல தூள் செய்து தேங்காய் எண்ணெய்யில குழப்பி பூசி வந்தால் மூன்றே நாளில் குணமாகும்.

47. கருப்பு முடியாக மாற்ற:

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும். முடி உதிர்வதை தடுக்கும்.

48. தொழுநோய் குணமாக:

 கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழுநோய் குணமாகும்.

49. பல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக:

 ஆலமரத்து பட்டையை பட்டு போல் பொடி செய்து வைத்து கொள்ளவும். வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய் நீங்கும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும்.

50. சதை போடுவது குறைக்க:

வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் பெருக்கம் குறையும். உடல் அழகு பெறும்.

51. தூக்கம் வர:

வெங்காயத்தை நசுக்கி அதன் விந்தை 1 சொட்டு கண்ணில் விட்டால் போதும். தூக்கம் வரும்.

52. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்ற:

உடலில் கெட்ட நீர் உள்ளவர்கள் தினசரி பப்பாளிக் காயை சாப்பிட்டு வர துர்நீர் சிறுநீரின் வழியாகவும் வியர்வையின் வழியாகவும் வெளியேறும்.

53. கண்கள் குளிர்ச்சி:

கடுக்காய் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி காயவைத்து பவுடராக்கி பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினசரி 3 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை சக்தி அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும். சளியினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

54. வாந்தியை நிறுத்த:

 துளசி சாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும்.

55. பித்த வாந்தியை நிறுத்த

: வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட வாந்தி நிற்கும்.

56. வயிற்று கடுப்பு நீங்க:

அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

57. மந்தம் அஜீரணம் குணமாக:

 கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். சோற்றுடன் 1 கரண்டி பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு நீங்கும்.

58. சிறு நீர் எரிச்சல் குணமாக:

அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

59. வாய் நாற்றம் போக:

நெல்லி, முள்ளி. தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதனால் வாய் நாற்றம் தீரும்.

60. சர்க்கரை வியாதி நீங்க:

கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

61. தோல் வளம் பெற:

ஆலமரத்து பட்டைகளை பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது. தோலும் வளம்பெறும்.

62. வரட்டு இருமல் தனிய:

எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

63. கருப்பை கோளாறு நீங்க:

அரசஇலை கொழுந்து 10 - 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கட்டிகள், கிருமிகள், சதை வளர்ச்சி ஆகியவை தூய்மை அடையும்

அனைவரும் அவசியம் மாற்ற வேண்டிய சில அன்றாடப் பழக்கங்கள்...!



விளம்பரங்கள் வெளியிடும் கைகளை சுத்தப்படுத்தும் திரவங்கள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் ஆகியவை சுத்தமானதாகவும் உங்களுக்கு நல்லது தருபவை எனவும் நீங்கள் நம்பி இருப்பீர்கள். ஆனால் நிபுணர்கள் இதை தவறு என்று கூறுகின்றனர்.

நாம் பழக்கப்படுத்தியுள்ள பல தினசரி காரியங்களில் பல் துலக்குவதும் ஒன்று. இதை நாம் ஒவ்வொறு உணவிற்கு பிறகும் செய்ய வேண்டியது அவசியம். இது நீண்ட காலம் ஆரோக்கியமான பற்கள் இருக்க துணை செய்யும். இதை எப்படி நாம் செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.

பொதுவாக ஒவ்வொரு முறை உணவிற்குப் பின்னரும் பல் துலக்குவது சிறந்தது என்று எண்ணி நமது பற்களை பாதுகாக்க இதை செய்கிறோம். ஆனால் நமது தாய் கூறிய படியும் ஒரு நாளைக்கு இரு முறை அதாவது காலையிலும் இரவு படுக்கப் போவதற்கு பின்னரும் பற்களை துலக்குபவர்களும் உண்டு. இது எப்படி இருந்தாலும் சாப்பிட்டவுடன் பற்களை துலக்குவது நல்லது கிடையாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வாயில் உள்ள உணவு பொருட்கள் உடைக்கப்பட்டு அது ஒரு வித அமிலத்தை விட்டுச் செல்கின்றன. இந்த அமிலம் பற்களின் மேல் பகுதியை வலுவிழக்கச் செய்கின்றது. இந்த சமயத்தில் நாம் பிரஷ் செய்தால் அது நமது எனாமலை அடியோடு எடுத்து விடும். இதனால் பற்கூச்சம் எற்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்கு பதிலாக சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்த பின்னர் பற்களை சுத்தம் செய்தால் இத்தகைய தீமைகளை தவிர்க்க முடியும். அப்படி உடனடியாக வாயில் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டவுடன் நீக்க நினைத்தால் சாப்பிட்டு வாயை கொப்பளித்தால் போதும்.

எப்போதும் கைகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சானிடைசர் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உண்டா? மருத்துவமனைகளில் உள்ள சானிடைசர் பாடில்களை தொட்டு அதை பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் நீங்கள் உங்களுக்கே தீங்கு விளைவித்துக் கொள்ளுகிறீர்கள். கிருமிகளை கொல்லுவதற்கான எளிய வழியாக கைகளை சுத்தப்படுத்தும் திரவப் பொருளை பயன்படுத்துகின்றோம். ஆனால் அதை சரியாக பயன்படுத்துவது முக்கியமானது.

அமெரிக்காவில் உள்ள காலிபோர்னியா டேவிஸ் பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி படி இந்த சானிடைசர்களில் டிரைகிலோசான் என்ற ரசாயனம் கலந்துள்ளது. இதை நாம் கைகளில் தடவும் போது நமது சருமம் அதை எளிதாக ஈர்த்துக் கொள்கிறது. இதனால் நமது இரத்தத்தில் கலக்கும் இவை தசைகளின் ஒருங்கிணைப்பை தடை செய்கிறது. நாம் இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் குழந்தையின்மை, இதய கோளாறுகள் மற்றும் சீக்கிரம் வயதிற்கு வருதல் ஆகிய பிரச்சனைகள் வரக்கூடும். இத்தகைய வழிகளை தவிர்த்து நாம் முன்பு செய்வது போல் எப்போதும் சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பது மிகவும் சிறந்த வழியாகும்.

நல்ல உடற்பயிற்சிகளாக ஒடுவது, நடப்பது அல்லது நீச்சல் ஆகியவை என்று நாம் கருதுகின்றோம். இதை வெய்ட்ஸ் போடுவதை காட்டிலும் மிகவும் சிறந்தது என்று நினைதிருப்போம். ஆனால் நாம் எப்போதும் ஓடுவது, நடை பயிற்சி மற்றும் நீச்சல் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல் வெய்ட்ஸ் போடுவதிலும் கவனம் செலுத்துவது எடை குறைப்பதில் சிறந்த வழியாக உள்ளது.

நமது உடம்பு நாம் பயிற்சி செய்யும் செயல்களுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு கலோரிகளை எரிய விடாமல் தடுக்கிறது. சத்தியஜித் சௌராசியா என்னும் பிரபல பயிற்சியாளர் கூறுகையில் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது நாம் பொதுவாக செய்யும் உடற்பயிற்சியுடன் வெய்ட்ஸ்சையும் சிறிதளவு சேர்த்துக் கொள்வது எடையை சீக்கிரம் குறைக்க உதவுகிறது. அது மட்டுமில்லாமல் தசைகளை மேம்படுத்தி அழகான உடல் அமைப்பையும் அமைத்துத் தருகின்றது.

கார்டியோ மற்றும் சக்தி தரும் இத்தகைய இரு வகை பயிற்சிகளை மேற்கொள்ளும்போது நமது இதய துடிப்பை மேம்படுத்துவதோடு முழு உடலையும் பயிற்சியில் ஈடுபடுத்துகிறது. இது எப்போதும் உடலை நாம் செய்யும் பயிற்சியின் முலம் கலோரிகளையும் பெருமளவில் குறைக்க உதவுகின்றது. ஒரு வேளை நீங்கள் ஜிம் போன்ற இடங்களுக்கு செல்ல விரும்பவில்லை என்றால் உங்களிடம் இரு தம்பெல்ஸ்கள் இருந்தால் போதும். இத்தகைய பயிற்சிகளை முதன்முறையாக செய்பவர்களுக்கு தங்கள் உடம்பின் மேற்பகுதியை பயிற்றுவிப்பதற்கு இது சிறந்த வழியாகும் என்று சௌராசியா கூறியுள்ளார்.

ஒரு பிரபல நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு அழகு சாதனப் பொருளை நீங்கள் உடனடியாக வாங்கி அதை பயன்படுத்த நினைப்பீர்கள். இதை செய்யும் போது நீங்கள் ஏற்கனவே வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொருளை புறந்தள்ளி விடுகிறீர்கள். இதனால் இந்த பொருள் மட்டுமல்ல நமது பணமும் பெருமளவில் வீணடிக்கப்படுகின்றது.

இது தவறு தானே! சருமப் பராமரிப்பு நிபுணர் டாக்டர். மனோகர் சோபானி கூறுகையில், நமது சருமத்தின் பி.எச் அளவு 5.5 தான். இந்த அளவை அழகு சாதனங்கள் தயார் செய்யும் நிறுவனங்கள் பயன்படுத்துவதில்லை. இத்தகைய பொருட்களை மக்கள் பயன்படுத்தும் போது சிவப்பு தண்டுகள், தோல் எரிச்சல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தற்போது பெரும்பாலான சோப்புகளில் கூட பி.எச் சின் அளவு 5.5-ஐ விட அதிகமாகத்தான் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இவை சருமத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பொருட்களாகும். அவ்வப்போது நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களை மாற்றிக் கொண்டே இருப்பது தவறு. இதனால் சருமப் பிரச்சனைகள் நிச்சயம் வரும். அதை தீர்ப்பதற்காக மற்றொரு பொருளை தேடுவது நமக்கு உதவாது. இவைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக தரமான மற்றும் நம்பத்தக்க நிறுவனங்கள் தயார் செய்யும் பொருட்களை, அதில் உள்ள பி.எச் எண்ணெய் பொருளின் பின்புறம் பார்த்து வாங்கி பயன்படுத்தவும்.

ஹீல்ஸ் போடுவது முழங்கால் மற்றும் கணுக்கால்களை பாழ்படுத்தும் என்றும், தட்டையான செருப்புகளை அணிவது எந்த வித பாதிப்பையும் கால்களுக்கு ஏற்படுத்தாது என்று நீங்கள் நினைத்திருக்கலாம். இந்த எண்ணம் தவறா? பார்பபோம்! கால் மற்றும் நடை ஆலோசகர் சைத்தன்யா ஷா கூறுகையில் பிளிப் பிளாப் அணிவது கால்களுக்கு எந்த வித வடிவத்தையும் அதற்கேற்ற கட்டமைப்பையும் தருவது கிடையாது.

நாம் பொதுவாக நடக்கும் போது நமது விரல்கள் பிடிப்பாக இருந்து நமது நடையை கட்டுப்படுத்தி சம நிலைக்கு கொண்டு வருகின்றன. ஆனால், நாம் கால்களை மேலே தூக்கும் போதும் கீழே இறக்கும் போதும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் செய்வதால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இது இயற்கைக்கு முரணாக இருப்பதால் தடியான தசை வளர்ச்சி அதாவது பிளான்டர் பேஸ்சைட்ஸ் என்ற நோய் வர அதிக வாய்ப்புகள் உள்ளன. பிளிப் பிளாப்களை வீட்டில் அணிந்து கொண்டு வெளியே செல்லும் போது வேறு காலணிகளை பயன்படுத்தலாம்.

பாட்டில் தண்ணீர் அல்லது பதப்படுத்தும் முறைகளை மேற்கோண்டு பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீரில் எந்த வித கனிமங்களும் கடையாது. அவற்றை சுத்திகரிக்கும் போது, அந்த தண்ணீரின் கனிம சத்துக்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு விடுகின்றன.

வெயில் அதிகம் உள்ள இடங்களில் இந்த தண்ணீரை அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் மக்களின் உடலுக்கு, நாளடைவில் தேவையான மக்னீசியம், பொட்டாசியம், சிலிகா, சல்பேட் ஆகிய கனிமங்களை சேர விடாமல் செய்கின்றன. இந்த கனிமங்கள் இல்லாத காரணத்தால் திசு சீரமைப்பு மற்றும் சக்தி தருவது போன்ற செயல்களை செய்வது தடைபடுகிறது.

கைகளை தட்டுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் உங்களுக்கு தெரியுமா..?



கைகளை தட்டினால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று சொல்லும் போது கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் அது நூற்று நூறு உண்மை என்று அறியும் போது அது ஒரு நல்ல விஷயமாக அமைகிறது. காலையில் இசையை கேட்பதை விட இரண்டு கைகளை தட்டும் போது எழும் ஓசையை கேட்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

பொதுவாக யாரையாவது உற்சாகப்படுத்த தான் நாம் கைகளை தட்டுவோம். அதே போல் நாம் சந்தோஷத்துடன் இருக்கும் போதும் கைகளை தட்டுவோம். பல பேர் பாட்டு பாடும் போது கைகளை தட்டுவார்கள். கைகளை தட்டுவதே ஒரு தனி குஷி தான். அதனால் தன் பல குழந்தைகளுக்கு கை தட்டுவதென்றால் கொள்ளை பிரியமாக இருக்கும்.

சரி, கைகளை தட்டுவதால் கிடைக்கும் உடல்நல பயன்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கைகளை தட்டுவதால், இதய நோய்கள் மற்றும் ஆஸ்துமா சம்பந்த பிரச்சனைகளுக்கு பெரிய தீர்வு கிடைக்கும்.

இதயம், மூளை, நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளுடன் நரம்புகள் இணைய இது பெரிதும் உதவும். கைகளை தட்டினால் நரம்புகள் சீராக செயல்படும்.

கைகளை தட்டினால் மன அமைதி கிட்டும்.

இது உங்கள் உடலில் உள்ள குருதி வெள்ளையணுக்களை திடப்படுத்துவதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் எவ்வகையான நோய்களில் இருந்தும் உங்கள் உடலை இது பாதுகாக்கும்.

குழந்தைகளின் ஆற்றல் திறனை அதிகரித்து அவர்களின் கல்வி சார்ந்த செயல் திறனை மேம்படுத்தும்.

கைகளை தட்டும் போது இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும். அதனால் தமனி மற்றும் அசுத்த இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகள் அனைத்தும் நீங்கும். இதில் கெட்ட கொலஸ்ட்ரால் நீங்குவதும் அடங்கும்.

குழந்தைகளுக்கு கைகளை தட்ட பயிற்சி அளித்தால், அவர்களின் இயக்க செயல் திறன்கள் மேம்படும். அதனால் அவர்களின் கையெழுத்து அழகாகும், சிறப்பாக எழுத வரும், எழுத்துப்பிழையும் குறையும்.

தினமும் உணவருந்திய பின் ஒரு மணி நேரத்திற்கு கைகளை தட்டுங்கள். அது வெப்பத்தை ஏற்படுத்தி கைகளிலும் கால்களிலும் வியர்க்க செய்யும்.

நல்ல பயனை பெற, கைகளை தட்டுவதற்கு முன், தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை உள்ளங்கையில் தடவிக் கொள்ளுங்கள். அதனால் அதனை உங்கள் உடல் உறிஞ்சி விடும்.

இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம், ஆஸ்துமா, சளி, கீல்வாதம், தலைவலி, தூக்கமின்மை மற்றும் முடி கொட்டுதல் பிரச்சனைகளை கைகளை தட்டுவதால் சரி செய்யலாம்.

உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்டியவைகள்..!



"எனக்கு நேரமே இல்லை! என்னுடைய கடுமையான பணிச்சுமையில், இதற்கு நேரம் ஒதுக்க வழியே இல்லை" வேலைகளைத் தள்ளிப் போட இது தான் எல்லாரும் எளிதாக கூறும் சாக்கு. அதற்காக, நாம் வேலைகளே இல்லாத மந்தமான வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

உடலும் உள்ளமும் தகுதியாக இருக்க வேண்டுமென்றால், இரண்டுக்கும் போதுமான வேலைகளை உடலுக்கு அளிக்க வேண்டும். நமது பணிச்சுமைகளுக்கிடையில், நமது இயல்பான பணிகளினூடே, நமது உடல்தகுதிக்கான (fitness ) பயிற்சிகளையும், எப்படி சேர்த்துக் கொள்வது என்பது குறித்து இப்போது காணலாம்.

நமது இயல்பான பணிகளைச் செய்யும் போதே, நமது தசைகள், நரம்புகள், எலும்புகள், ஏன், மனதுக்கும் கூட சிறு சிறு பயிற்சிகளைச் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் உடலையும், மனதையும் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள முடியும்.

ஃபிட்னஸ் என்றால் என்ன?

உங்களது அன்றாட உடல் சார்ந்த பணிகளை, களைப்பில்லாமலும், எளிதாகவும், செய்த பிறகும் நீங்கள் களைப்பின்றி உணர்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் உடல் ஃபிட்டாக உள்ளது என்று பொருள். ஆம். உங்களது ஆற்றல் நிலையும், உடல் வலிமையும், போதுமான அளவில் உள்ளது என்று பொருள்.

ஆனால், அன்றாட பணிகளைச் செய்து ஓய்ந்த பிறகு, சக்தியெல்லாம் தீர்ந்து களைப்பாக உணரும் தருணங்களைக் கூட நீங்கள் எதிர்கொண்டிருப்பீர்கள். அப்படியென்றால், உங்களது அன்றாட வேலைகளுக்கிடையில் சிறுசிறு ஃபிட்னஸ் உடற்பயிற்சிகளை நுழைத்து, உங்களை சுறுசுறுப்பாக்கிக் கொள்ளவும், களைப்பின்றி உணர வைக்கவும் நேரம் வந்துவிட்டது.

30 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக நடந்தால்,அது உங்கள் இதயத்துடிப்பு வீதம் அதிகரித்து, அதிகமான கலோரிகளை எரித்து, உடல் மெட்டபாலிசத்தினைத் தூண்டும். உங்கள் ஸ்டாமினாவையும் அதிகரிக்க உதவும்.

மின் தூக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். மாடிப்படிகளைப் பயன்படுத்துவதனால், ஏற்படும் நன்மைகள். - உடல் எடைகுறையும் - ஸ்டாமினா அதிகரிக்கும் - இதய இயக்கத்தை ஊக்குவிக்கும்

உங்களது பிருஷ்டத்தசைகளை உங்கள் கைகளால் பிசையுங்கள். இது அதிகமான கலோரிகளை எரிக்க உதவும். உங்கள் பிருஷ்ட தசைகளை 3 நாள்களுக்கு ஒருமுறை 10-15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வடிவான பின்புறங்களைப் பெறுங்கள். இது போல நிற்கும் போதோ, அமரும் போதோ உங்கள் கைகளால், மசாஜ் செய்துவிடலாம்.

நிற்கும் போது நன்றாக நிமிர்ந்து நில்லுங்கள். அமரும் போது கூன் போடாமல் முதுகினை நன்றாக நிமிர்த்தி அமருங்கள். இப்படி செய்தால் கழுத்திலிருந்து கால் வரை ஏராளமான நரம்புகள் இளகும். நமது அமரும் தோற்றமும் நிற்கும் தோற்றமும் நேராக இருந்தால் நமது தன்னம்பிக்கையும் பெருகும்.

பின்வரும் பயிற்சியைச் செய்து உங்கள் பின்புறத்தசைகளுக்கு வலிமையூட்டுங்கள். உங்கள் முதுகுத்தசைகளுக்கு இடையில் ஒரு பென்சிலை நிறுத்தி தசைகளால் பிடித்துக் கொள்வது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். பென்சில் விழாமல் இறுகப் பிடித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் முதுகுத்தசைகளும், அதனைச் சுற்றியுள்ள தசைகளும் வலிமை பெறும்.

தண்ணீர் பாட்டிலையோ, சூப் கிண்ணத்தையோ தூக்கும் போது உங்கள் கைகளை தரைக்கு இணையாக இருக்குமாறு நீட்டி தூக்குங்கள். அதாவது உங்கள் உடலும் கைகளும் ஆங்கில எழுத்து போல இருக்க வேண்டும். இதன் மூலம் கையிலுள்ள தசைகள் வலிமை பெறும்.

நீங்கள் ஷாப்பிங் செய்துவிட்டு பையுடன் வரும் போது அதனை உங்கள் கையில் பிடித்துக்கொண்டு, டிம்பிள்ஸ் தூக்குவது போல தூக்கவும். பையினை முழங்கையிலிருந்து தோள்பட்டை வரை தூக்கி இறக்குங்கள். உங்கள் இருதலைத்தசைகளுக்கு களைப்பு ஏற்படும் வரை இதனை செய்யுங்கள்.

நீங்கள் மேசையில் அமர்ந்து பணிபுரிபவராக இருந்தால், பணிக்கு இடையில் உங்கள் தசைகளுக்கு தளர்ச்சி அளிக்கும் வண்ணம் இடையிடையே சற்று நேரம் நடப்பது அவசியம். சற்று நேரம் நடப்பதால், தசைகளில் இலகுத்தன்மை ஏற்படும். இரத்த ஓட்டம் சீராகும்.

பாத்திரம் துலக்குதலும், பாத்திரங்களில் பிடித்துள்ள உணவுத்துணுக்குகளை சுரண்டி அகற்றுதலும் உங்கள் கைகளில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சிகளாகும். அதே போல சமையல் செய்தலும் கைகளுக்கு நல்ல பயிற்சிகளாகும். தசைகள் வலிமையுடனும் பொலிவுடனும் திகழ சமையல் செய்யுங்கள்.

உங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொலைபேசியில் பேசுவது குறைந்தபட்சம் 2 நிமிடங்களுக்கு நீடிக்கும். இந்நேரத்தில் நடந்து கொண்டே பேசுங்கள்.

வீட்டினை சுத்தம் செய்வது என்பது உண்மையிலேயே உடலுக்கு மிகவும் சிறப்பான பயிற்சியாகும். தூசு தட்டினாலும், குப்பையைப் பெருக்கினாலும், ஒட்டடை அடித்தாலும், தரையைக் கழுவினாலும், நீட்டி, நிமிர்ந்து, குனிந்து வேலை செய்ய வேண்டியிருக்குமாதலால், அனைத்துமே உடலுக்கு நல்லது. எனவே அடிக்கடி வீட்டை சுத்தப்படுத்துங்கள். வீடும் அழகாகும், உங்கள் உடலும் அழகாகும்.

பாலுறவு கொள்ளுவதால், இயற்கையாகவே, உடல் எடை குறைகிறது. அத்துடன் உடலில் எண்டார்ஃபின் சுரப்பினையும் அதிகரிக்கிறது. அளவோடு பாலுறவு கொள்ளுதல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

நல்ல முழுமையான ஓய்வு என்பது ஆரோக்கியத்துக்கு அறிகுறி. உங்களது மனதையும், உடலையும், புத்துயிர் ஊட்டிக் கொள்ள சிறப்பான வழி தூக்கம். இதன் மூலம், மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

சிலருக்கு, உடற்பயிற்சியின் சிறப்பினை எடுத்துக் கூறுவதற்கு யாராவது ஒருவர் இருந்தால் தான், உடற்பயிற்சி செய்வார்கள். தூண்டிவிட்டுக் கொண்டேயிருந்தால் தான், அவர்கள் எதனையும் செய்வார்கள். இரவு உணவுக்குப் பிறகு, சேர்ந்து நடப்பதற்கு நண்பர் ஒருவர் அமைந்துவிட்டால், அதுவே வழக்கமாகிவிடும். இதைப் போல சில முறைகளை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், இரவு உணவுக்குப் பிறகு நடப்பதால், உடல் எடை குறைந்து உடல் மெலிவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.

முழங்கால் வலி தாங்க முடியலையா..? இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...!



நமது உடலில் மிகவும் அதிகமாக காயம் படும் பாகமாக முழங்கால்கள் உள்ளன. இந்த காயங்கள் விபத்தினாலோ அல்லது அதிகபட்ச அழுத்தம் கொடுப்பதாலோ என ஏதாவதொரு காரணங்களால் ஏற்படலாம். தசை நார்கள் கிழிவதாலோ அல்லது காயங்களாலோ கூட முழங்கால் வலிகள் ஏற்படலாம்.

மேலும், ஒவ்வொரு நாளும் நாம் நடக்கும் போதும், குதிக்கும் போதும், படிகளில் ஏறும் போதும் என பல்வேறு செயல்பாடுகளின் போதும் நிறைய அழுத்தங்களையும் முழங்கால்கள் எதிர்கொள்கின்றன. தினமும் முழங்கால்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களும், கிழிதல்களாலும் தசைநார்கள் மற்றும் மூட்டுகளில் வலிகள் வரக் கூடும்.

தினமும் உடற்பயிற்சி செய்வது, நமது உடலுக்கு பொதுவாகவே நல்ல விஷயமாகும். அந்த வகையில் முழங்கால்களுக்கு என்றே பிரத்யோகமான உடற்பயிற்சிகள் உள்ளன. இந்த உடற்பயிற்சிகளை யாவரும் மிகுந்த ஒழுக்கத்துடன் செய்து வந்தால், முழங்கால் வலிகளில் இருந்து விடுதலை பெற முடியும்.

இந்த கட்டுரையில் முழங்கால் வலிகளை குறைப்பதற்கான சில பொதுவான உடற்பயிற்சிகள் குறித்து தகவல்களை கொடுத்துள்ளோம். இந்த பயிற்சிகளை செய்யத் துவங்கும் முன்னர், மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

தசைகளை நீட்டி மடக்குவது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவும், வலி நிவாரணியாகவும் உள்ளது. முழங்கால்களுக்கு ஏற்ற பல்வேறு நீட்டி மடக்கும் பயிற்சிகள் உள்ளன. ஹார்ம்ஸ்ட்ரிங் ஸ்ரெட்ச்சிங் (Hamstring stretching) என்ற பயிற்சியை உங்களுடைய முழங்கால் தசைகள் தளர்வாக இருக்கும் போது செய்யலாம். அதற்கு உங்களுடைய கால்களில் ஒன்றை முன்னால் வைத்து, மற்றொரு காலின் முழங்காலை மடக்கியபடி அழுத்தத்தை உணரும் வரையிலும் நிறுத்தி வையுங்கள். இந்த பயிற்சி மிகவும் பலன் தரும்.

முழங்கால்களுக்கு ஏற்ற மற்றுமொரு பயிற்சி யோகசனங்கள் ஆகும். யோகாசனங்கள் தசைகளை மென்மையாக ஓய்வு நிலைக்கு கொண்டு சென்று, அழுத்தம் அல்லது இழுவையை குறைக்கின்றது. நமது கால்கள் மற்றும் முழங்கால்களை நிலைப்படுத்தக் கூடிய பல்வேறு யோகாசனங்கள் உள்ளன. பிற உடற்பயிற்சிகளை விட சிறந்த விளைவுகளை நெடுநாட்களுக்குத் தருபவையாக யோகாசனங்கள் உள்ளன. தினந்தோறும் 'சூரியநமஸ்காரம்' செய்து வந்தால் முழங்கால் வலியை பறந்தோடச் செய்ய முடியும்.

இதயத்திற்கு மிகவும் ஏற்றதாக ஸ்டெப் அப் அல்லது ஸ்டெப்பிங் பயிற்சி உள்ளது. இதயத்துடிப்பைத் தூண்டவும், உடலின் வெப்பத்தை அதிகரிக்கவும் மற்றும் நமது உடல் முழுமையையும் சக்தியூட்டம் பெறச் செய்யவும் இந்த பயிற்சி உதவுகிறது. ஸ்டெப் அப் பயிற்சியை செய்யும் போது முழங்கால்களை மடக்க வேண்டாம். அவற்றை நேராகவும், உறுதியாகவும் வைக்கவும். சீரான வேகத்தில், ஒரு நிமிடத்திற்கு ஸ்டெப் அப் பயிற்சியை செய்து வந்தால் முழங்கால்களும் பலன் பெறும். ஸ்டெப் அப் பயிற்சியின் போது முழங்கால்களும் தயார் செய்யப்படுவதால் அவற்றின் அழுத்தங்கள் குறைக்கப்படுகின்றன. முழங்கால் காயங்களை குணப்படுத்த கிடைத்துள்ள உடனடி பயிற்சிகளில் ஒன்றாக ஸ்டெப் அப் உள்ளது.

வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ சென்று பைக்கிங் செய்வது முழங்கால் வலியை குணப்படுத்த செய்ய வேண்டிய பயிற்சிகளில் ஒன்றாகும். இந்த பயிற்சியின் போது வலி குறைய வேண்டும் என்று நினைத்தால், உங்களுடைய கால்களை சரியான முறையில் வைத்திருங்கள். மேலும் சைக்கிளிங் பயிற்சியை 10-15 நிமிடங்களுக்கு செய்து வரலாம். இந்த பயிற்சியின் மூலம் கால்கள் மற்றும் முழங்கால்களின் வலிமை அதிகரிக்கும். முழங்கால்களின் தசை நார்கள் மற்றும் சதைகள் ஆகியவை வலிமையடையவும் மற்றும் வலி மெதுவாக குறையவும் சைக்கிளிங் பயிற்சி உதவுகிறது.

கால்களை தூக்குதல், முழங்கால்களை தூக்குதல் போன்ற சில மேட் பயிற்சிகளின் போது தசைகள் நன்றாக நீட்டப்படுவதால், நமது முழங்கால்களின் வலிகள் பெருமளவு குறைகின்றன. மேட் பயிற்சிகளை எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். கால்களை தூக்கும் போது முழங்கால்களை மடக்க வேண்டாம். சில அங்குலங்களுக்கு கால்கள் உயரும் வரை பொறுத்திருங்கள். இது முழங்கால் காயங்களுக்கு ஏற்ற சிறந்த பயிற்சிகளில் ஒன்றாகும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேப்பிலையின் சில முக்கிய நன்மைகள்..!



மருத்துவ குணம் வாய்ந்த வேப்பிலையின் நன்மைகளைச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆனால் சிலருக்கு வேப்பிலையின் ஒருசில முக்கியமான நன்மைகளைப் பற்றி தெரியாது.

இதில் உள்ள நன்மைகளால் தான் ஆயுர்வேத மருத்துவத்தில் வேப்பிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கோடைகாலம் வரப்போகிறது. மிகவும் ஆபத்தான நோயான அம்மையின் தாக்கத்திற்கு பலர் உட்பட நேரிடும். ஆனால் அந்த அம்மை நோய்க்கு வேப்பிலை மிகவும் சிறப்பான பொருள்.

ஏனெனில் வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், நோயெதிர்ப்பு அழற்சி, பூஞ்சை எதிர்ப்பு பொருள் அதிகம் இருக்கிறது.

எனவே உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை குணமாக்கும். இங்கு அனைவரும் தவறாமல் தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவ குணம் வாய்ந்த வேப்பிலையின் சில சிறப்பான நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதைப் படித்து, உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை வேப்பிலை கொண்டு குணமாக்கிக் கொள்ளுங்கள்.

சின்னம்மை இருக்கும் போது, கொதிக்கும் நீரில் வேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அந்த நீரைக் கொண்டு குளித்தால், சின்னம்மையின் தடிப்புக்கள் மேலும் பரவாமல் தடுக்கப்படும்.

தொண்டையில் புண் இருந்தால், அதனை விரைவில் குணமாக்க, வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரால், கொப்பளிக்க வேண்டும்.

கண் புரையை சரிசெய்ய வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரால் கண்களை கழுவ வேண்டும். குறிப்பாக வேப்பிலையை நீரில் போட்டு 10 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு, பின் குளிர வைக்க வேண்டும். இந்த நீரைக் கொண்டு எரிச்சல் மற்றும் அரிப்பு உள்ள கண்களைக் கழுவினால் உடனே குணமாகும்.

பூச்சிக்கடியால் ஏற்பட்ட தடிப்பை சரிசெய்ய, வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, பூச்சிக்கடி உள்ள இடத்தில் தடவி வந்தால், அவ்விடத்தில் உள்ள விஷம் மற்றும் கிருமிகள் அழிக்கப்பட்டு, வீக்கம் குறைந்துவிடும்.

மூட்டு வலி அதிகம் இருந்தால், அப்போது வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதனை வலி உள்ள இடத்தில் தடவினால், மூட்டுகளில் உள்ள வீக்கம் குறைந்து, வலியும் குறைந்துவிடும். மேலும் முதுகு வலி இருந்தால், அப்போது வேப்பிலை பேஸ்ட் கொண்டு மசாஜ் செய்தால், முதுகு வலி பறந்து ஓடிவிடும்.

வேப்பிலையில் மலேரியா காய்ச்சலைப் போக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால், மலேரியா உடனே குணமாகும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் மலேரியாவை சரிசெய்ய இந்த முறையைத் தான் பின்பற்றுவார்கள்.

வேப்பிலையைப் பயன்படுத்தி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் ஏற்படும் முகப்பருக்களைத் தடுக்கலாம். மேலும் வேப்பிலை சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தின் நிறத்தை அதிகரித்து வெளிப்படுத்

வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, கூந்தல் உதிர்தல், பேன் தொல்லை, வறட்சியான ஸ்கால்ப் போன்றவற்றை தடுக்கலாம்.

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்.....!



உடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டால் பலன் கிடைக்காது.

வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும், அவை பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானவையாகவும், உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன. ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன், எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிப்பதாகும்.

உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன் எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க ஒரு உடனடி சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். இங்கு எடை குறைப்பு திட்டத்தை எளிமையாகவும், பலனுள்ளதாகவும் மாற்ற கொழுப்பை குறைக்கும் உணவு வகைகளை கீழே கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.

கால்சியம்

கால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் என்று பலர் சொல்வதைக் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் அவை பசியை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.

ஆப்பிள்கள்

தினசரி ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும். அதே வேளையில், கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது தெரியுமா! ஆம், ஆப்பிளின் தோல் எடை குறைப்பு குறிக்கோளை பூர்த்தி செய்யும் பல விந்தைகளை உள்ளடக்கியது. இதில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.


வால்நட்

வால்நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழுப்புச்சத்தானது, பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.


பீன்ஸ்

பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு நல்ல வளர்ச்சிதை சுழலை வழங்குவதால், இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.


இஞ்சி

இஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும், வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது சக்தியையும், கொழுப்பை கரைக்கும் செயல்களையும் ஊக்குவிப்பதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓட்ஸ்

காலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைபயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.


க்ரீன் டீ

க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.


மிளகு

மிளகை உபயோகிப்பதனால் உணவு உண்ட பின்னும் கூட சக்தி மற்றும் கொழுப்பு உடனடியாக வெளியேற்றப்பட்டு, உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறைந்த நேரத்திற்குள் துரிதப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள காப்சைசின் என்ற மூலப்பொருள், உடலின் அழுத்த அமிலங்களை விடுவித்து உடம்பிற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை தருகிறது. இந்த முறையினால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சக்தியையும், கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.


தண்ணீர்

இது ஒரு உணவாக கருதப்படாவிட்டலும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உடலில் தண்ணீர் ஒரு இன்றியமையாத ஒரு பாகமாகும். தேவையான தண்ணீர் குடிக்கவில்லையெனில், சில நிமிடங்களுக்குள் உடல் வறட்சியை உணரக்கூடும். சில சமயங்களில் தாக உணர்வினை பசி உணர்வு என்று தவறாக புரிந்து கொண்டு, தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக உண்ணத் தொடங்குகிறோம். எனவே கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.


முட்டை

முட்டை சிறப்பாக கொழுப்பை கரைக்கும் உணவுகளில் ஒன்று. இதன் மஞ்சள் கரு சக்தியையும், கொழுப்பையும் கரைக்க முக்கியமானதாகும். இதிலுள்ள கொழுப்புச்சத்து மிக சிறிய அளவில் தான் இரத்த கொழுப்பு அளவினை பாதிக்கிறது. மேலும், முட்டை உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையும், புரதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், கொழுப்பை குறைக்க ஒரு நல்ல பொருத்தமான உணவுப் பொருளாக நிச்சயமாக கருத வேண்டியுள்ளது

செம்பருத்தி டீ குடிச்சா பி.பி. ஏறாது, கொழுப்பு கரையும்..!



மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.

வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.

 இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர். அதன் விவரம்:

உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும்.

 அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பிற மருத்துவக் குணங்கள்:

வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.)

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. (செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.)

மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். (செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, மயக்கம் போன்றவை குறையும்.)

வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். (செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.)

செம்பருத்திபூ தங்கபஸ்பம்

இதன் பூக்களில் தங்கச்சத்து நிறைந்துள்ளதால் பூவில் உள்ள மகரந்தத்தை நீக்கிவிட்டு சாப்பிடலாம். சர்க்கரை வியாதிக்கும் சிறந்த மருந்து. மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன.
இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர்..

இருதய பலம்

இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது. காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயம் பலம் பெறும்.

250 கிராம் செம்பருத்திபூவை துண்டாக நறுக்கி ஒரு காண்ணாடி பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, அதை காலையில் வெயிலில் வைக்கவும் பின்னர் மாலையில் எடுத்து பிசையவும் சிவப்பான சாறுவரும் அந்த சாறை ஒரு பாத்திரத்தில் உற்றி அதற்கு தேவையான சர்க்க்ரை சேர்த்து காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் உற்றி வைத்துகொள்ளவும். இதில் இருந்து 2ஸ்புன் எடுத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருகவும்,இது போல தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சிரான முறையில் பரவும் இருதயம் பலம்பெறும்.

உடல் உஷ்ணம் குறைய

ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறையும்.

இந்தப் பூவினை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் குணமாகும்.
பேன், பொடுகு தொல்லை நீக்கும்
இரவு படுக்கும் போது செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள், தவிர, பொடுகு, சுண்டுகளும் நீங்கிவிடும்.

பலகீனமான குழந்தைகளுக்கு
சில குழந்தைகள் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.

தலையில் பேன், பொடுகு நீங்க
சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.
இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான்.

செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.


செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்தி டீ போடும் முறை :

செம்பருத்தி இதழ் (காய்ந்தது )-5 இதழ்
தண்ணீர் 1 கப் -150 ml
சக்கரை -1 ஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் 150ml தண்ணீர் வைத்து கொதிக்க விடவும் .பின் செம்பருத்தி இதழை போட்டு 5 mins கொதித்தபின் அடுப்பை அனைத்து வடிக்கட்டி சக்கரை போட்டு குடிக்கவும் .

ஒரு நாளைக்கு 2 - 3 தடவை குடிக்கலாம் .காலை உணவுக்கு பின் குடிப்பது உடலுக்கு நல்லது .

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களும்...! நீங்கள் செய்ய வேண்டியவைகளும்...!



மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன;

1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.

2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.

3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்

4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்

5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு

6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்

7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்

8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்

9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்

10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்

11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.

12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.

- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள். சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய் விடுவார்கள். வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

நீங்கள் செய்ய வேண்டியவை

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும். இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும். அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அவையாவன;

1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.

2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.

3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.

5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.

- இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.

மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்

1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.

2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.

3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.

4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.

5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.

6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.

7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.

8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.

9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.

10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.

11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.

12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.

13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.

15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.

16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.

17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.

18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.

19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.
 
நண்பேன்டா