Sunday 16 February 2014

டாஷ் ஸ்மார்ட் இயர்ஃபோன்கள் அறிமுகம்...!


ravi - feb 14

ஜெர்மனியின் பிராக்கி என்னும் நிறுவனம் உலகத்தின் முதல் ஸ்மார்ட் இயரஃபோனை கண்டுபிடித்துள்ளனர். இது இரண்டாக வரும் இதை காதில் பொருத்தினால் முதலில் வெளியே அனேக பேருக்கு தெரியாத அளவுக்கு சின்னது. பின்பு இது 100% வாட்டர் ஃப்ரூஃப் – அதாவது நீச்சல் அடிக்கும் போதும் இதில் பேசலாம் – பாட்டு கேட்கலாம்.


இன்பில்ட் மெமரி 4ஜீபி இருப்பதால் பாட்டை ஏற்றி கொள்ளலாம். ரேடியோவும் உண்டு. இதில் அனலாக் மற்றூம் ஸ்ட்ரீயோவும் உண்டு. இதில் மூன்று வகை மைகள் உள்ளது. எவ்வளவு சத்தம் சுற்றுபுறத்தில் இருந்தாலும் ஒரு துளி பேசும் போது அடுத்தவர்களுக்கு கேட்காது.

அடுத்து எவ்வளவு டிராஃபிக்கில் போனாலும் ஒர் சத்தம் காதுக்குள் கேட்காது –

இதன் வீடியோ பாருங்கள் சூப்பராய் இருக்கிறது அனேகமாய் 4000 ரூபாய்கள் வரைக்கு ஆகலாம் என நினைக்கிறேன். Video Link –  http://www.youtube.com/watch?v=yIOFcqKEz0k#t=0

உடல் எடையை குறைக்க எலுமிச்சை டயட்..!



அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனு வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே. மேலும் பெரும்பாலான உடல்நல நிபுணர்களும், எலுமிச்சை ஜூஸில் தேன் சேர்த்து குடித்தால், உடல் எடை எளிதில் குறையும் என்றும் கூறுகின்றனர்.

அத்தகைய சிட்ரஸ் பழமான எலுமிச்சை, உடல் எடையை குறைக்க மட்டுமின்றி, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை அழகுறச் செய்யவும் உதவியாக உள்ளது. எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல், உண்ணும் உணவிலும் எலுமிச்சையைப் பயன்படுத்து நல்ல பலனைத் தரும். இதற்கு எலுமிச்சை டயட் என்று பெயர்.

சொல்லப்போனால், நிறைய திரையுலக நட்சத்திரங்களும் உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள, இந்த எலுமிச்சை டயட்டை மேற்கொள்கிறார்கள். எனவே எப்போதும் எலுமிச்சை ஜூஸை குடித்து, உடலை ஸ்லிம்மாக்குவதை விட, அத்துடன், சில ஆரோக்கிய வழிகளிலும் எலுமிச்சையைப் பயன்படுத்தி, உடல் எடையைக் குறைப்பதற்கான சரியான டயட்டை மேற்கொள்ளலாமே!!!

இப்போது எலுமிச்சை டயட்டை மேற்கொள்ளும் போது, என்னவெல்லாம் பின்பற்ற வேண்டும் என்று பார்ப்போம்.

திட உணவுகள் கூடாது

எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது, திட உணவுகளான அரிசி அல்லது கோதுமையால் செய்யப்படும் உணவுகளை சிறிது நாட்கள் அதிகம் சாப்பிடக் கூடாது. இவ்வாறு இருந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.

கார உணவுகளை தவிர்க்கவும்

கார உணவுகள், உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். எனவே எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது அதிகமான கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிகமான நீர்மம்

எலுமிச்சை டயட்டில் இருக்கும் போது, கொழுப்புக்களை கரைக்கும் சிட்ரஸ் பழங்களாலான பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும். இதனால் உடல் சுத்தமாவதோடு, வயிறும் நிறைந்திருக்கும்.

தேன்

தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதோடு, கொழுப்பைக் குறைக்கும் பொளும் அதிகம் உள்ளது. எனவே லெமன் டயட்டில் இருக்கும் போது, இதனை சாப்பிடுவது இன்னும் நல்ல பலனைத் தரும்.

காலை உணவு

எலுமிச்சை டயட்டை மேற்கொள்பவர்களுக்கு லெமன் பேன்கேக் ஒரு சிறந்த காலை உணவு. இதனால் வயிறு நிறைந்திருப்பதோடு, நல்ல சுவையாகவும், உடல் எடையைக் குறைக்கக்கூடிய உணவாகவும் இருக்கும்.

எலுமிச்சை-தேன்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால், உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.

எலுமிச்சை ஜூஸ்

ஒரு நாளைக்கு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடல் வறட்சி நீங்கி, நச்சுக்கள் வெளியேறி, அடிக்கடி பசி ஏற்படுவதும் தடைப்படும். குறிப்பாக எடை குறைக்க நினைப்போர், ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

லெமன் பை (Lemon Pie)

டயட்டில் இருப்பவர்கள், நிச்சயம் க்ரீம் உள்ள உணவுப் பொருட்களை அறவே தொடக்கூடாது. குறிப்பாக செயற்கை இனிப்புக்களைப் பயன்படுத்தி செய்தவற்றை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும். எனவே இத்தகைய க்ரீம்களை சாப்பிடுவதற்கு பதிலாக லெமன் பை சாப்பிடுவது சிறந்தது.

எலுமிச்சை சூப்

எடையை குறைக்க நினைக்கும் போது, அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும். அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது. ஆகவே அப்போது அதற்கு பதிலாக சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால், புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

சாலட்

சாலட் சாப்பிடும் போது, அதை சாப்பிட போர் அடித்தால், அப்போது சாலட்டின் சுவையை அதிகரிப்பதற்கு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இதுவும் எலுமிச்சையை உடலில் சேர்ப்பதற்கான ஒரு வழியாகும்.

பேஸ்புக் பயன்பாடு 10 வயது குழந்தைகளிடம் அதிகரிப்பு..! அதிர்ச்சியூட்டும் தகவல்

சமூக வலைதள பயன்பாடு 10 வயது குழந்தைகளிடம் அதிகரிப்பு; பேஸ்புக்கிற்கு அதில் முதலிடம்:-


சமூக வலைதளங்களை பத்து வயது அடைந்த சிறுவர்கள் அதிகமாக பயன்படுத்தி வருவது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.  இதற்காக இணையதள பாதுகாப்பு ஆலோசக இணையதளமான நோ திநெட் ஆய்வு நடத்தி சோஷியல் ஏஜ் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது.

பேஸ்புக் முதலிடம்

அதில், 8 முதல் 16 வயது உடைய குழந்தைகளில் 52 சதவீதத்தினர் பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர் என தெரிய வந்துள்ளது.  மற்ற இணையதளங்களில் இதே வயதுடைய குழந்தைகளில் 40 சதவீதத்தினர் வாட்ஸ்ஆப் இணையதளத்தையும், பி.பி.எம். இணையதளத்தை 24 சதவீதத்தினரும், ஸ்நாப்சாட் இணையதளத்தை 11 சதவீதத்தினரும் மற்றும் ஆஸ்க்.எப்.எம் இணையதளத்தை 8 சதவீதத்தினரும் பயன்படுத்தி உள்ளனர்.

பெரும்பாலும் 10 வயது பூர்த்தியான குழந்தைகளில் 59 சதவீதத்தினர் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர் என்றாலும், 32 சதவீத பெற்றோர்களே இணையதள பயன்பாட்டில் இருக்கும் தங்கள் குழந்தைகள் மீது மிக்க நம்பிக்கையுடன் உள்ளனர்.  இந்த சர்வேயில், 21 சதவீத குழந்தைகள் மோசமான கருத்துகளை வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

போலி கணக்கில் குழந்தைகள்

அவர்களின் சராசரி வயது 11 ஆக இருந்துள்ளது.  மேலும், பிறரது கணக்கில் அத்துமீறி உள்ளே நுழைந்து தங்களது பதிவுகளை அனுமதியின்றி வெளியிடுவோர் 26 சதவீதமாக உள்ளனர்.  அறிமுகமில்லாத நபர்களுக்கு செய்திகள் அனுப்புவதில் 43 சதவீதத்தினர் ஈடுபட்டுள்ளனர்.  அவர்களின் சராசரி வயது 12.  இணையதளத்தில் தங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோ பதிவை வெளியிடுவதோ அல்லது போலி பெயரில் தங்களது கணக்கை தொடங்கிடவோ ஆர்வமுடன் குழந்தைகள் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் தங்களது 11வது வயதில் இதனை ஆரம்பிக்கின்றனர்.  அதன் பின்பு தங்களது 12வது வயதில் டுவிட்டர் பயன்பாடு மற்றும் அறிமுகமில்லா நபருக்கு செய்திகள் அனுப்புதல் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.  பின் 13வது வயதில் ஸ்நாப்சாட் மற்றும் ஆஸ்க்.எப்.எம். ஆகிய சேவைகளின் பயன்பாட்டில் இறங்குகின்றனர்.

பள்ளியில் இன்டெர்நெட்

இவர்கள் இணையதள பயன்பாட்டில் கடினமான சிக்கல்கள் ஏற்படும்போது, தங்களது பெற்றோர்களை அணுகவும் தயங்குவதில்லை.  பெரும்பாலும் 3ல் 2 பங்கினர் (67 சதவீதம்) இம்முறையை பின்பற்றுகின்றனர்.

தங்கள் குழந்தைகளின் இன்டர்நெட் செயல்பாடு குறித்து 63 சதவீத பெற்றோர் வாரம் ஒரு முறையாவது பரிசோதனை செய்து விடுகின்றனர்.  பெற்றோர் கட்டுப்பாட்டில் வருவதில் நம்பிக்கையற்ற வகையில் 21 சதவீதத்தினர் உள்ளனர்.  46 சதவீத பெற்றோர் தங்களது குழந்தைகளின் பள்ளிக்கூடத்தில் இன்டர்நெட் பயன்பாடு கொள்கை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டாக்டர் கருத்து

இளைய வயதுடையவர்களின் தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு இடையேயான வேறுபாடு மீதான தடையை சமூக வலைதளங்கள் நீக்கி உள்ளதால், குழந்தைகள் அதனை பயன்படுத்துவது ஆபத்தில் சென்று முடிகிறது என்று நோ திநெட் செய்தி தொடர்பாளரும், குழந்தைகள் மனநல மருத்துவருமான டாக்டர் ரிச்சர்டு உல்ப்சன் தெரிவித்துள்ளார்.

எனவே, குழந்தைகள் இணையதளத்தை பயன்படுத்துவதில் கட்டுப்பாடு விதித்து அவர்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பது என்பது பெற்றோர்களால் இயலாத ஒன்று.  பெற்றோர்கள், தங்களது குழந்தைகளிடம் வெளிப்படையாக பேச வேண்டும்.  நல்ல மற்றும் மோசமான இணையதள செய்திகளை தங்களிடம் பகிரும் வகையில் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.


இணையதள பயன்பாட்டில் உள்ள சிக்கல்கள் குறித்து அவர்களை பயமுறுத்தாமல் வெளிப்படையாகவும், நேரிடையாகவும் பேசி அவர்களை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக சமீபத்திய இணையதள செய்திகளை அவர்களுடன் ஒன்றாக இருந்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் உல்ப்சன் தெரிவித்துள்ளார்.  இந்த சர்வே முடிவானது, 8 முதல் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் 1,006 பெற்றோர்களிடமும் மற்றும் 8 முதல் 16 வயதிற்கு உட்பட்ட 1,004 குழந்தைகளிடமும் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

பேஸ்புக்கில் 13 லட்சம் நண்பர்கள் அசத்திய 10 வயது சிறுவன்...!



அமெரிக்காவை சேர்ந்த நண்பர்களே இல்லாத 10 வயது சிறுவனுக்கு பேஸ்புக்கில் 13 லட்சம் நண்பர்கள் கிடைத்துள்ள செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுவன், மனஇறுக்க நோயால் பாதிக்கப்பட்டவன். இதனால், அவனுக்கு நண்பர்களே கிடையாது.

தனது மகனின் 10-வது பிறந்தநாளில் அவனுக்கு நண்பர்களை பரிசாக அளிக்க அவனது தாயார் ஜெனிபர் ஹன்னிகம் முடிவு செய்தார்.

குறுகிய காலத்தில் அதிக நண்பர்களை பெற சிறந்த வழி பேஸ்புக் தான் என்பதை அறிந்த அவர், தனது மகனுக்காக பேஸ்புக்கில் தனி பக்கத்தை உருவாக்கி, அதில் அவனது நோய் குறித்தும், அவனுக்கு நண்பர்களே இல்லை என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.

என்ன ஆச்சரியம் பாருங்கள். ஒரு சில நிமிடங்களிலேயே அவனுக்கு 13 லட்சம் நண்பர்கள் கிடைத்தனர். இதனால் அந்த சிறுவன் மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

கூகுளில் இனி குற்றவாளிகளின் புகைப்படம் இருக்காது..!



இதுவரை கூகுள் தேடுதலில் கிடைக்காத படங்களே இல்லை என்ற நிலையில் தற்போது குற்றவாளிகளின் புகைப்படங்களை தனது தேடுதளத்தில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பொதுவாக் குற்றவாளிகள் தங்களது கைகளில் தன்னை பற்றிய குறிப்புகள் அடங்கிய பலகையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மக் ஷாட் எனப்படுகின்றன. இவற்றை தனது தேடுதளத்தில் இருந்து நீக்குவதால் குற்றவாளிகள் தங்களது குற்ற நினைவுகளில் இருந்து விடுபட்டு இயல்பாக இருக்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் “சட்ட அமலாக்க கழகங்களின் உதவியுடன் இது போன்ற மக் ஷாட் புகைப்படங்களை பெற்று அவற்றை பொது மக்கள் பார்க்கும் வகையில் வெளியிடுவதற்கு என பல்வேறு வலைதளங்கள் உள்ளன. இதனை பொது சேவையாகவே கருதி செய்து வருகின்றன.

எனினும், இதனால் தங்களது குற்ற நினைவுகளில் இருந்து விடுபட்டு நல்ல பணி அல்லது வீடுகளில் வசிப்பது போன்ற எண்ணங்கள் அமைவது குற்றவாளிகளுக்கு சாத்தியமில்லாமல் போகிறது. அதிலும் கூகுள் போன்ற தேடுதளத்திலும் இது போன்ற புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.ஆனால் இப்போதுஇது போன்ற புகைப்படங்களை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது” என்று . அந்நிறுவன செய்தி தொடர்பாளர் கூறி இருக்கிறார்.

அந்த’ சிந்தனை அடிக்கடி வருகிறதா..?அப்ப இதைப் படிங்க...!



காமம் பற்றி சிந்தனைகள் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். பறவைகளின் சிந்தனையும், செயலும் ஒரு மாதிரியானது. விலங்குகளின் தேவை வேறு மாதிரியானது. அதே சமயம் மனிதர்களின் காம உணர்வுகளும், சிந்தனைகளும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு கூடுதலாக இருக்கும், சிலருக்கு குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் அவரவர் உடலில் சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்களின் அளவைப் பொருத்தது என்கின்றனர் நிபுணர்கள்.ஆணோ, பெண்ணோ தினசரி ஏதாவது ஒரு தருணத்தில் பாலியல் பற்றிய சிந்தனை ஏற்படுவது இயல்பானதுதான். தக்க துணையுடன் இணையும் போது அவர்களுக்கு ரிலாக்ஸ் கிடைக்கும்.

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் செயல்பாடுகளும், பாலுணர்வும் ஏற்படுவது இயல்பானதுதான். அது அளவாக இருக்கும் பட்சத்தில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் அதுவே அளவு மீறி போகும் போதுதான் சிக்கல்கள் எழுகின்றன.இதற்கிடையில் எந்த நேரத்திலும் பாலியல் எண்ணங்கள் தலை தூக்குகிறதா? அவற்றை கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர்.அதை தெரிந்து கொள்வோமா>.

காமத்தை அடக்கும் வழிகள் உலகில் மனிதனுக்கு காம எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில்
மூளை காம எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை தயார் செய்து கொண்டு உறவில் இறங்குகிறது.ஆனால் இந்த காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்த கருத்துகலோடு, வேரொருவரயும் ஆலொசிக்கிறது.அவர் வெளியாள் அல்ல.மரபணு எனப்படும் ஜீன் – கள் தான் அவை.

பெண்களின் காம உணர்வை விட அதிகமான காம உணர்ச்சி கொண்ட ஆண், அவனது காமப்பசியை அதிகமாக மறைத்து வைப்பதில்லை. உடலுறவின் போதும், உடலுறவின் முடிவில் வரும் உச்சக்கட்டத்தின் போதும் ஆண்கள் மிகுந்த ஆனந்தம் அடைவதுண்டு என உடலுறவு ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆண் தனது காம உணர்வை வெளிப்படுத்த பல வழிகளையும் கையாள்வதுண்டு. உதாரணமாக ஒரு ஆண் சினிமாவில் ஹீரோவாக ஜொலிக்கும் போது எந்தப் பெண்ணும் அவனை விரும்புகிறாள். அவனாலும் தான் நினைத்த பெண்ணை அனுபவிக்க முடிகிறது.உடலுறவு குறித்துக் கற்பனை செய்யாத மனிதர்கள் மிகக் குறைவு எனக் கூறலாம். அதிகமான காம உணர்வு உள்ள ஒரு ஆண் பல பெண்களுடனும் ஒரு பெண் பல ஆண்களுடனும் இனச்சேர்க்கை பல முறைகளில் செய்வதாகக் கற்பனை செய்வதும் உண்டு.

காம உணர்வானது மனிதர்களின் கற்பனையில் பல முறைகளில் கையாளப்பட்டு வருகிறது. ஸேடிசம் (sadism) என்பது காமக் கேளிக்கையின் போது தனது துணையை வேதனைப்பட வைத்து அந்த வேதனையை சுகமாகக் கருதி தனது காம உணர்ச்சியைத் தணித்துக் கொள்ளும் ஒரு அரக்கத் தன்மை உடையதாகும்.இருக்கின்ற கட்டுப்பாடுகளிலேயே மிகவும் கடினமானது உணர்வுக் கட்டுப்பாடுதான். இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியாது என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கிறது. காம உணர்வை அன்பு என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

காம உணர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சமூகம், பலவிதமான கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறது. பெரும்பாலும் இந்தக் கட்டுப்பாடுகள் உடைக்கத்தான் படுகின்றன. அப்படியே காமம் தடுக்கப்பட்டாலும் பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது. இதனபடி காம உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினமானது என்று மனிதர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர் அபிப்பிராயம் இருக்கிறது.முதலில் உணவுக்கும் நமக்கு எழும் உணர்வுகளுக்கும் தொடர்பு உண்டு என்று கூறுவார்கள். எனவே செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் முருங்கை கீரை, முருங்கைக் காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை உணவுகளில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

அதே போல் பாலியல் உணர்வை குறைக்கும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதுபோன்ற எண்ணங்களை கட்டுப்படுத்தலாமாம். சோயாவிலிருந்து தயாரிக்கப்படும் “டோஃபு”. சோயா பால் மற்றும் டோஃபூ, உடல் துத்தநாகத்தை கிரகிப்பதை தடுக்கிறது. அதேபோல் வெள்ளரிக்காய், டர்னிப், முட்டைக்கோஸ் போன்றவைகளும் செக்ஸ் ஆசையை குறைக்கிறது. கொத்தமல்லி, புதினா இலைகள் அதிகம் சேர்த்துக்கொள்வதால் டெஸ்ட்டோஸ்ட்ரன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதாம்

மேலும் காமம் நிலையானது அல்ல என்பதை மனதளவில் உணர வேண்டும். காம உணர்வுகள் தலைதூக்கும் வகையில் அந்த எண்ணத்தை திருப்பும் செயல்களை செய்யலாம். மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப் பட்டுள்ளது. தியானம் செய்ய இயலாதவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம்.உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலை ப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற் கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்

மனதிற்கு பிடித்த இசையை கேட்கலாம், மனதை லயிக்கச் செய்யும் புத்தகம் படிக்கலாம். இந்த எண்ணம் தவறானது. இதனால் யாரும் தப்பாக நினைத்து விடுவார்களோ என்று எண்ணாமல் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் இதனை பேசி விளக்கம் பெறலாம்.பிறரிடம் சொல்வதற்கு அச்சமாக இருந்தால் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும். பாலுணர்வுகளை மன தளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது - 22 to 26 வயது..!



1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பதுபோன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத்
தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும் ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட
முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச்க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

8. உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம்
நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு...

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்க  எல்லாமே அரசியல் தான்
என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக்
கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள்
மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

பெண்களுக்கு மிகவும் கடினமான வயது - 22 to 25 வயது..!



1) உங்கள் காதலனுக்கு திருமணம் ஆகி இருக்கும்.உங்கள் நெருங்கிய தோழிகளுக்கெல்லாம் காதலன் இருப்பான், நீங்கள் மட்டும் தனிமையில் இருப்பீர்கள்.புறக்கணிக்கப்பட்டதாய் உணர்வீர்கள்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது போன்றே இருக்கும் அல்லது வேலை செய்து என்னத்தைக் கிழிக்கப் போகுது என்றிருக்கும்.

3) நண்பன் இருந்தால் அவன், உங்கள் நல்லதொரு காதலனைப் போல பேசுவான். காதலா என்று கேட்டால், வெறும் நட்பு என்று கழட்டி விடுவான்.உங்களை உபயோகிப்பதைப் போல உணருவீர்கள், வேறு வழி இல்லாமல் பழகுவீர்கள்.

4) விளையாட்டுக்களில் ஆர்வம் குறையும். செய்தி தாள் படிக்க மாட்டீர்கள். ஆராவது சொல்வதை நம்பகூடாதென்று தோன்றினாலும் நம்பி விட நினைப்பீர்கள். 5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. பொது இடத்தில் விளையாட்டுத் தனமாய் இருக்க ஆசைப்பட்டாலும் இருக்க முடியாது.

6) தினமும் முகத்தை பொலிவுற செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள். யாராவது உங்களையே உற்றுப் பார்ப்பது போல் நினைத்தாலும் யாரும் பார்க்கவில்லை என்பதே உண்மையாக இருக்கும்.

7) முகப்பரு, நிறம் குறைவு, உடல்ப்பருமன், மாதவிடாய் வலி இப்படி ஏதாவதொரு பிரச்சினையை ஒரே நாளில் முடித்து விட ஏங்குவீர்கள்.

வீட்டில் யாருடனும் எதுவும் கதைப்பதற்கு இருக்காது, நெருங்கிய யாருடனாவது எல்லாவற்றையும் கதைக்க வேண்டும் போல் உணர்வீர்கள். நெருங்கிய தோழனே காதலனாகவும் இருக்க நினைப்பீர்கள்.

9). உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

10) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

11) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

12) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

13) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள். பெண்கள் என்றால் சிபாரிசுடன் சேர்ந்து புன்னகைக்கவும் வேண்டும் என்றும் உணருவீர்கள். மேலதிகாரியின் சுரண்டலுக்கு பதிலாக செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஒரு தடவையாவது நினைப்பீர்கள்.

14) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள்.ஆணும் பெண்ணும் நட்புடன் இருக்க முடியுமா என்ற கேள்வி ஒரு நாளில் ஆயிரம் முறை வந்து போகும்.

15) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

16) கற்பு,கலாசாரம், நாகரீகம் எல்லாவற்றுக்கும் நடுவில் உங்களுகென்று தனி வட்டம் அமைத்து அதில் சுதந்திரமாக வாழ ஆசைப்படுவீர்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் இது தொடர்பான மூன்று பிரச்சினைகளையாவது எதிர்நோக்குவீர்கள்.

17)ஒரு நாளில் உங்களை விட வயது குறைந்த/கூடிய/நடுத்தரப் பிராய அங்கிள் வயதுடைய இப்படி யாராவது ஒருவருடைய கேலி/கிண்டல்/ பெண் ஒடுக்குமுறைக்கு உள்ளாவீர்கள்.பொம்புளைப் பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை ஒரு நாளில் ஒரு தடவையாவது எங்காவது கேப்பீர்கள்.

18) பஸ்ஸில், தெருவில், கல்லூரியில் சில மோசமான தருணங்களை சந்திக்கும் போது, ஆணாகப் பிறந்திருக்கலாம் என்று ஒரு தடவையாவது நினைப்பீர்கள். நீங்கள் பெண்ணாக பூரிப்படையும் போது, யாராவது ஏமாற்ற காத்திருப்பார்கள்.

19) நேரம் சென்று வீட்டுக்கு வரும் போதோ, தனியாகப் பயணம் செய்ய நேருகையிலோ யாருடைய துணையும் இல்லாமல் செல்வதையே விரும்புவீர்கள் . இருப்பினும் யாராவது ஒருவருடைய துணையை வலிந்து திணிக்கும் போது சாகலாம் போல வலிக்கும்.

20) காதல் தோல்வி பெண்களுக்கு கூடாது என்ற சமுகத்தில் வாழும் உங்களின் காதலை நீங்கள் கொண்டாட முடியாது/ வருத்தப்பட முடியாது. கேட்பவர்கள் உங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள்.

21) நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்த அடுத்த கணம், உங்கள் மகிழ்ச்சிக்கான காரணம் மறைந்து போகும்.

22) பெற்றோர்களும், உறவினர்களும், சகோதரர்களும் உங்களை உளவு பார்த்த்துக் கொண்டே இருப்பார்கள்.

23) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

சாம்சுங் நிறுவனத்தின் அதிரடி..!



சாம்சுங் நிறுவனம் அதன் சமீபத்திய பேப்லட்டான கேலக்ஸி மெகா பிளஸ் பேப்லட் பற்றி சீனாவில் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் பட்டியலிட்டுள்ளது.
கேலக்ஸி மெகா 5.8 போன்ற சாம்சுங் கேலக்ஸி மெகா பிளஸ், இரட்டை காத்திருப்பு கொண்ட இரட்டை சிம் பேப்லட் ஆகும்.

இது ஒரு qHD (540×960 பிக்சல்கள்) தீர்மானம் கொண்ட 5.8 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வருகிறது மற்றும் TouchWiz UI உடன் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகிறது. என்றாலும், பதிப்பு தொடர்பாக எவ்விதமான வார்த்தையும் இல்லை. 1.2GHz குவாட் கோர் ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது. ரேம் திறன் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

8 மெகாபிக்சல் பின்புற கமெரா, அத்துடன் 1.9-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கமெரா உள்ளது. மைக்ரோ SD அட்டை வழியாக (குறிப்பிடப்படாத அதிகபட்ச கொள்ளளவு) விரிவாக்கக்கூடிய 8GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு கொண்டு வருகிறது.

ஒரு 2600mAH பேட்டரி திறன் கொண்டுள்ளது. கேலக்ஸி மெகா பிளஸ் இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத், Wi-Fi, GLONASS, ஜிபிஎஸ் மற்றும் 3 ஜி ஆகியவை அடங்கும்.

சாம்சுங் கேலக்ஸி மெகா பிளஸ் பேப்லட் அம்சங்கள்

*qHD (540×960 பிக்சல்கள்) தீர்மானம் கொண்ட 5.8 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே

*1.2GHz குவாட் கோர் ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்)

*இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்)

*8 மெகாபிக்சல் பின்புற கமெரா

*1.9-மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கமெரா

*மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 8GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு

*ப்ளூடூத்

*Wi-Fi

*GLONASS

*ஜிபிஎஸ்

*3 ஜி

*ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன்

*2600mAH பேட்டரி

இயற்கையாக பெண்களின் மார்பகத்தை குறைக்க சில எளிய வழிகள்..!



பெண்களுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமானது தான் மார்பகங்கள் மிகவும் பெரியதாக இருப்பது.

இவ்வாறு இருப்பதனால், பெண்களால் எந்த ஒரு விருப்பமான ஆடையையும் அணியமுடியாதவாறு போகிறது.

மேலும் வெளியே செல்லும் போது,சில ஆண்களின் கண்களை பறிக்கும் அளவு இருக்கிறது. எனவே அதனைக் குறைப்பதற்கு பணம் அதிகம் இருக்கும் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்கின்றனர்.

ஆனால் பணம் இல்லாதவர்களின் நிலை என்ன?என்று கேட்கலாம். வேறு என்ன இயற்கை வழிகள் தான். ஆம், இயற்கை வழிகள் மூலமாகவும், மார்பகங்களை சிறிதாக்க முடியும்.

இவ்வாறு அறுவை சிகிச்சைகள் செய்து,அதற்கான மருந்து மாத்திரைகளை மேற்கொள்வதால், சில சமயங்களில் இது வேறு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி,உடல் நலத்தையே கெடுத்துவிடும்.

எனவே எப்போதும் செயற்கை முறைகளை பின்பற்றுவதற்கு முன், ஏதேனும் இயற்கை வழிகள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அவ்வாறு இருந்தால்,இயற்கை முறைகளையே பின்பற்ற வேண்டும்.

இப்போது அவ்வாறு மார்பகங்கள் பெரியதாக இருந்தால், அவற்றை குறைப்பதற்கான சில இயற்கை வழிகளை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்.


எடைக் குறைப்பு

மார்பகம் பெரிதாக இருப்பதற்கு,அங்குள்ள திசுக்களில் 90% கொழுப்புக்கள் சேர்ந்து இருப்பது தான். ஆகவே மார்பகங்களின் அளவைக் குறைப்பதற்கு சிறந்த வழி, உடலில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைப்பதற்கு முயற்சிப்பது தான்.

அவ்வாறு முயற்சிக்கும் போது மார்பகங்களில் உள்ள கொழுப்புக்கள் மட்டும் குறையுமாறு செய்யக்கூடாது. உடல் முழுவதும் சேர்ந்துள்ள கொழுப்புக்கள் அனைத்தும் வெளியேறுமாறு தான் செயல்பட வேண்டும்.

இவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கான செயலை மேற்கொண்டால் உடல் எடை குறைவதோடு மார்பகத்தின் அளவும் குறையும்.


ஏரோபிக் உடற்பயிற்சி

ஏரோபிக் உடற்பயிற்சிகளான ஓடுதல்,நீச்சல், பைக் ஓட்டுதல், நடனம் மற்றும் விளையாட்டு போன்றவற்றை மேற்கொள்ளும் போது, இதயத்தின் துடிப்பு நீண்ட நேரம் வேகமாக துடிப்பதால், அவை எடை குறைவுக்கு வழிவகுக்கும். அதிலும் தினமும் குறைந்தது அரை மணிநேரம் செய்ய வேண்டும்.


ஆரோக்கியமற்ற உணவுகள்

ஃபாஸ்ட் ஃபுட், வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அனைத்திலும் கொழுப்புக்கள் நிறைந்திருப்பதால், அவை உடல் எடையுடன், மார்பகத்தின் அளவையும் அதிகரிக்கும். எனவே இத்தகைய ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.


உடற்பயிற்சி

கார்டியோவாஸ்குலர் (இருதயம் மற்றும் ரத்தக்குழாய் தொடர்பான) உடற்பயிற்சிகளை, சரியான டயட்டுடன் பின்பற்றினால், எடை குறைவதோடு, மார்பக தசைகளும் குறையும். அதற்காக அளவுக்கு அதிகமாக கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சியை செய்தால் மார்பகங்கள் பெரிதாகிவிடும். எனவே கவனமாக இருக்கவும்.


ஆரோக்கியமான உணவுகள்

ஆரோக்கியமான உணவுகளான காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

மேலும் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை கலோரி குறைவான உணவுகளை சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் (வளர்சிதை மாற்றம்) அதிகரித்து கலோரிகள் கரைந்து உடல் எடையுடன் மார்பகத்தின் அளவும் குறையும்.


அனிரோபிக் உடற்பயிற்சி

தசைகளை வலுபடுத்துவதற்கு பயன்படுவது தான் அனிரோபிக் உடற்பயிற்சி. அத்தகைய அனிரோபிக் உடற்பயிற்சிகளான புஷ் அப், புல் அப் போன்றவற்றை செய்தால், அவை மார்பகத்தின் அளவை குறைத்து அழகான சிறிய மார்பகங்களாக மாற்றும்.


ஆரோக்கிய பானங்கள்

தினமும் அதிக அளவில் பானங்களை குடிக்க வேண்டும். அதுவும் பழச்சாறு மற்றும் தண்ணீர் போன்றவற்றை அதிகம் குடிக்க வேண்டும்.

ஆனால் கார்போனேட்டட் பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் கலோரி பற்றாக்குறை ஏற்பட்டு உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையும். மேலும் மார்பகங்களும் குறையும்.

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்...!




வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது பழமொழி. நாம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை வாய்விட்டுச் சிரிக்கிறோம்? குழந்தைகள் ஒரு நாளைக்கு 400க்கும் மேற்பட்ட தடவை சிரிக்கின்றனவாம்.


ஆனால், பெற்றோர்கள் வெறும் 12 தடவைதான் சிரிக்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. சிரிப்பதால் உடலில் உள்ள தசைகளில் அசைவேற்பட்டு, உடலிலும், மனதிலும் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறைகிறது. இதனால் மனதிலிருந்து கவலைகள் வெளியேறி புத்துணர்வு கிடைக்கிறது.


சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்திருந்தும், அதை வெளிக்காட்டுவதில் பலருக்குத் தயக்கம் உண்டு. வீடு, அலுவலகம், வீதிகளில் தினமும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வின்போது இதுபோன்ற பலரை காண்பதுண்டு. அப்போது அவர்களைப் பார்த்து சிலர், சிடுமூஞ்சி என்று தமாஷாகக் கூறுவதுண்டு.


 வீடு, அலுவலகம் என நாம் இருக்கும் இடத்தில் மனஅழுத்தத்துடன் (ஸ்டிரஸ்) இருப்பதை விட்டு, சிரிப்பை வெளிப்படுத்த வேண்டிய வேளையில், பணிக்குப் பாதிப்பில்லாமல் சிரிக்கலாம். நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் சிரிக்க வைக்கலாம். இதனால், கவலைகள் நீங்கி, புத்துணர்வு கிடைக்கும். சிரிப்பதால் எதனையும் நாம் இழக்கப் போவதில்லை.


மகிழ்ச்சியோடு வேலை வாங்குவதிலும், அதிகாரத்தால் வேலை வாங்குவதிலும் கிடைக்கும் முடிவில் வேறுபாடு உள்ளது.


வீட்டில் குழந்தைகளிடம் அன்பாக சிரித்து கொண்டே, பேசியபடி அவர்களை படிக்க வைப்பதிலும், கையில் பிரம்பை எடுத்து விரட்டி படிக்க வைப்பதிலும் உள்ள வேறுபாடு குழந்தைகளின் தேர்வு முடிவில் தெளிவாகக் காணப்படும்.

இதுபோன்று அனைத்திலும் முடிவு சரியாக இருக்க வேண்டுமானால், மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் தயக்கமின்றி வெளிப்படுத்துங்கள் (சிரியுங்கள்).


எங்கள் ஊரில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் “அ’, “ஆ’ என இரண்டு பிரிவுகள் உள்ளன. இரண்டு பிரிவுக்கும் உள்ள வகுப்பாசிரியர்கள் ஒரே தகுதியுடைவர்கள்தான். இருவரின் கற்பித்தலும் சிறப்பாகத்தான் இருக்கும்.

இவர்களில் “அ’ பிரிவு ஆசிரியர் மிகவும் அன்பானவர். அவரை மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், “ஆ’ பிரிவு ஆசிரியர் கொஞ்சம் சிடுசிடுப்பானவர். அவர் வகுப்புக்குள் நுழைந்துவிட்டால் இந்த உலகமே அவரின் கீழ் உள்ளதை போன்று நினைத்துக் கொண்டு மாணவர்களை அதட்டி உருட்டுவார்.


இதனால் மாணவர்களும் பயந்து படிப்பதுபோன்று (அவருக்காக) நடிப்பார்கள் (சிலர் தூங்கிக் கொண்டும் இருப்பார்கள்). அவரும் ஏதோ சாதனை படைத்துவிட்டதாக நினைத்துக் கொள்வார்.


ஆனால், அந்த ஆண்டின் இறுதித் தேர்வில் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களில் 60 சதவீதம் பேர் அந்த குறிப்பிட்ட ஆசிரியர் எடுத்த பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. அருகில் இருந்த, “அ ‘ பிரிவில் உள்ள மாணவர்களில் 100 சதவீதம் பேர் அதே பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.


அப்போது “ஆ’ பிரிவு ஆசிரியர், “அ’ பிரிவு ஆசிரியரிடம் “நானும் நன்றாகத்தானே பாடம் நடத்தினேன், அப்புறம் ஏன் என் வகுப்பில் மட்டும் தேர்ச்சி சதவீதம் குறைந்தது’ என்று கேட்டுள்ளார்.


அதற்கு “அ’ பிரிவு ஆசிரியர், “நீங்கள் பாடத்தை மட்டுமே நடத்தினீர்கள். நான் மாணவர்களின் மனதிற்குள் பாடத்தை கொண்டுச் சென்றேன்’ என்றார். “அது எப்படி’ என்றார் “ஆ’ பிரிவு ஆசிரியர்.


“அது ஒன்றும் பெரிய விஷயமல்ல, அன்றாடம் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் சிரித்தும், மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டும் பாடத்தை நடத்தும்போது அவர்கள் தங்களுக்கு எது தேவையோ, அதனை மனத்திற்குள் நிறுத்திவிடுவார்கள்.


மேலும், மாணவர்களுடைய மனதும், உடலும் வலிமையாகி புத்துணர்வுடன் இருப்பார்கள். அதன்பிறகு நாம் நடத்தும் எவ்வித கடினமான பாடமாக இருந்தாலும், அதனை எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்றார்.

சிரிப்பின் தேவையை உணர்ந்தவர்கள் (வெளிநாட்டிலும், நம்மூரிலும்) சிலர் ஓரிடத்தில் ஒன்றுகூடி வாய்விட்டு சிரித்து மகிழ்வார்கள்.

இதுபோன்று நாம் ஒன்றுகூடிதான் சிரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினால் போதுமே.

கண் விழிதான் இனிமே உங்க கம்ப்யூட்டர் செக்யூரிட்டி…!




கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழி – இது ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும்.


இதை வைத்து பல நாடுகளுக்கு இமிகிரேஷன் இல்லாமல் உள்ளே செல்ல முடியும் அளவுக்கு இந்த டெக்னாலஜி வளர்ந்துள்ளது.

 இது இப்போது மவுஸ் வடிவில் வந்துள்ளது நமது கணனி மற்றும் லேப்டாப்புக்கு இதை பொருத்தினால் இதில் உள்ள மவுஸை நீங்கள் உங்கள் கண் விழி மூலம் பார்த்தால் போதும் கணணி திறப்பது மட்டுமல்ல ஃபேஸ்புக் / டிவிட்டர் போன்ற அத்தனை சோஷியல் மீடியா/ வங்கி கணக்குகளுக்கு இனிமேல் பாஸ்வோர்ட் இல்லாமல் திறக்க இயலும்.


 இது எவ்வகை பாஸ்வோர்ட்டையும் உடைக்கும் திறனான சாஃப்ட்வேருக்கு சவால் இந்த மவுஸ். இதே போல் மவுஸை வைத்து ஒரு பெரும் புரட்சி செய்யும் டெக்னாலஜி பொருளை நான் இன்னும் சில நாட்களில் லான்ச் செய்ய உள்ளேன்.

சிகரெட்கள் புகைப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் - அதிர்ச்சி தகவல்....



புகைபிடித்தல் கண்புரை வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. புகை பிடிப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் எனப்படும் கேட்ட்டராக்ட் அதிக அளவில் வருவதற்க்கான வாய்ப்பு இருப்பதை சில ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன.புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும், ஒரு நாளைக்கு 20 அல்லது இருபதுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைப்பவர்களுக்கு நியூக்ளியர் கேட்டராக்ட் வருவதற்க்கான வாய்ப்பு இரு மடங்கு உள்ளது.

 புகை பிடிப்பதனால் ஒருவருக்கு கேட்டராக்ட் வருவதற்க்கான வாய்ப்பு எவ்வாறு அதிகரிக்கிறது என்று விளக்கமாகக் கவனிப்போம்:

1. கேட்டராக்ட் என்பது நமது கண்களில் உள்ள லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் தன்மையை இழப்பது மற்றும் லென்ஸின் தோற்றம் புகை போன்ற படலம் படர்ந்த நிலையும் கூட.

2. லென்ஸ் கிரிஸ்டலின் என்ற புரோட்டினால் ஆனது.

3. நமது உடலின் பல பாகங்களில் ஆக்ஸிஜனேற்றம் எனப்படும் செயல் தொடர்ந்து நடைபெறுகிறது.

இது மனிதர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்தினை நிலைபெறச் செய்வதற்க்கான, ஊட்டச் சத்திற்க்கான நிகரான நல்ல நண்பர் எனலாம்.

ஆக்ஸிஜனேற்றம் மூலம் நமது உடலின் செல்களை பாதுகாத்து, நோய்களிலிருந்து விலக்கிவைத்து, சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய செயல் ஆகும்.

4. இந்த ஆக்ஸிஜனேற்றம் நமது லென்ஸின் ஒளி ஊடுருவும் தன்மையை சரி வர கண்காணித்து செயல்படுத்துகிறது.

5. நமது லென்ஸ்ஸில் சூப்பராக்ஸைட் டிஸ்முட்டேஸ் மற்றும் குளுதாதயோன் பெராக்ஸைட்(superoxide dismutase and glutathione peroxides) எனப்படும் அவசியமான என்சைம்கள் உள்ளன.

6. சிகரெட் மறும் பீடிகளில் காட்மியம் மற்றும் நிக்கோடின் உட்பட சுமார் 4000 தேவையற்ற ரசாயனப் பொருட்கள் நிறைந்துள்ளன.

7. ஒருவர் சிகரெட் அல்லது பீடி புகைக்கின்ற போது அவரது இரத்தத்தில் இந்த ரசாயனப் பொருட்கள் கலந்து விடுகின்றன.

ஒருவரது இரத்த்த்தில் அதிகரிக்கும் கேட்மியம் நமது கண்களில் உள்ள லென்ஸில் உள்ள என்சைம்களான சூப்பராக்ஸைட் டிஸ்முட்டேஸ் மற்றும் குளுதாதயோன் பெராக்ஸைட் களை பாதிக்கிறது.

8. இதன் காரணமாக நமது லென்ஸில் ஒழுங்காக நடைபெற வேண்டிய ஆக்ஸிஜனேற்றம் சேதமடைகிறது.

எனவே லென்ஸ் பாதிக்கப்பட்டு தனது பணியை செய்வது, அதாவது ‘ஒளி ஊடுருவும் தன்மையை சரி வர கண்காணித்து செயல்படுத்துகின்ற வேலை’ தடை செய்யப்படுகிறது.

எனவே லென்ஸ் தனது ஒளி ஊடுருவும் தன்மையை இழக்கிறது.எனவே தெளிவற்ற பார்வையை அனுபவிக்கின்ற நிலை ஏற்படுகிறது. அந்நிலையே கேட்டராக்ட் எனப்படுகிறது.

9. எனவே, நியூக்ளியர் கேட்டராக்ட் புகை பிடிப்பவர்களுக்கு விரைவிலேயே வருகிறது.

10.புகை பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை உபயோகிகும் போது வெளிப்படும் கேட்மியம் கண்களின் லென்ஸில் சேரும்போது ஏற்படுத்தும் பாதிப்பு புரை வருவதற்க்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக உயிர் வேதியியல் ஆராய்ச்சிகளும் ஏற்றுக் கொள்கிறது.

 கேட்மியம் லென்ஸில் உள்ள புரோட்டீன்களோடு இணைந்து பாதிப்பினை ஏற்படுத்துவதன் மூலமாகவும், தாமிரம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்றவற்றோடு இணைந்து ஆக்ஸிஜனேற்றத்தினை படிப்படியாக குறைத்து நேரடியாக அல்லாமலும் பாதிப்பினை ஏற்படுத்தும் போது கண் புரை வருவதற்க்கான வாய்ப்பினை புகை பிடிப்பவர்களுக்கும் புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கும் குறைந்த வயதிலேயே ஏற்படுத்துகிறது என்பதையும்,

புகைபிடிப்பதை நிறுத்துகின்ற காலத்தில் கேட்மியம் லென்ஸில் சேருவது நிறுத்தப்பட்டு, கன் புரை வருவதற்க்கான சாத்தியக்கூறினை தாமதிப்பதும் சென்னை, சங்கர நேத்ராலயாவின் பார்வை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் புகை பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாலும் கண் புரை மட்டுமல்லாது, வயது சார்ந்த மாக்குலா பாதிப்பு,நீரிழிவு விழிதிரை நோய், தைராய்டு கண் நோய்கள், மற்றும் கண் நரம்பு சார்ந்த பிரச்சினைகளும் அதிகமாக பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்..!



1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்

ஃபேஸ்புக் திருடர்கள் – ஆன்லைனில் எச்சரிக்கை தேவை..!



விலங்குகள்தன் உணவுக்காகவும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள வாழ்நாள் முழுவதும் போராடும் குணம் கொண்டவை. விலங்குகளின் வழித்தோன்றலான மனிதனும் ஆரம்ப காலத்தில் இத்தகையதொரு போரட்டத்தில் பங்கு கொண்டவனே. கூட்டு உழைப்பே உயிர்வாழ அடிப்படை என புரிந்து கொண்டவன் நாகரீக சமுதாயத்தை கட்டமைத்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த சார்ந்து வாழும் உளவியல் தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களை வெற்றிகரமாக இயங்கச் செய்கிறது. Personality and Individual Differencesஎன்ற ஆய்வின் மூலம் உளவியலாளர்களும் இதனை உறுதி செய்கிறார்கள். இந்த ஆய்வின் படி இரண்டு விதமான அடிப்படை சமூக தேவையே நம்மை ஃபேஸ்புக் நோக்கி இழுக்கிறது.

1. சார்புநிலை – அடிப்படையில் சார்ந்து வாழும் மனநிலை கொண்ட மனிதர்கள்.. தன் இருப்பை எப்போதும் உறுதிபடுத்த எத்தனிப்பார்கள். அதே நேரத்தில் தன்னை அங்கீகரிக்க வேண்டும் எனவும் விரும்புவார்கள்.

இந்தஉளவியலை ஃபேஸ்புக் அருமையாக பயன்படுத்திக் கொள்கிறது. அதாவது, முதலில் தனிமை படுத்தப்படாமல் இருக்க வேண்டி ஃபேஸ்புக் தளத்தில் இணைய வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது. பிறகு நட்புவட்டத்தை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அங்கீகாரத்தை பெறமுடியும் என்ற முறையில் மேலும் பலரை இணைக்க வழிசெய்கிறது.

2. தனித்தன்மை –  அடிப்படையில் சார்புநிலை கொண்டவாராக இருந்தாலும் தனித்தன்மையை வெளிப்படுத்தவே அனைவரும் விரும்புவார்கள்.

இதனை ஃபேஸ்புக் சுய விவரம் (ப்ரொஃபைல்), நிலை தகவல், பின்னூட்டம் மற்றும் புகைப்படம் என பதிய செய்து தனித்தன்மையை தக்க வைக்க உதவுகிறது.

இந்த இரண்டு தேவைகளும் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ நம்மைத் தூண்டி எப்போதும் ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. நவீன உலகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கும் சூழலில், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் இதற்கு வடிகால் அமைத்து தருகின்றன.

இந்த அடிப்படை தத்துவத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் ஃபேஸ்புக் 100 கோடிமக்களை தன்னுள் இணைத்து வைத்துள்ளது. எந்த ஒரு விசயத்திலும் நன்மைகள் இருப்பது போல சில தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த அடிப்படையில் நாம் ஃபேஸ்புக் பயன்படுத்தும் போது நம்மை அறியாமல் பல்வேறு விதமான திருடர்களுக்கு மூட்டை சுமக்கும் பணியையும் செய்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Likejacking  and Clickjacking:



இந்த திருட்டைச் செய்பவர்கள் அதீத திறமை கொண்டவர்கள். பார்க்கவே மனம்விரும்பாத/வேதனை தருவது போன்ற படங்களை மருத்துவமனைகளில் திருடியோ அல்லது கிராபிக்ஃஸ் செய்தோ பதிவேற்றுவார்கள். பிறகு சோக கதையை எழுதுவார்கள்.அதாவது, இந்தப் படத்தில் இருப்பவர் ஏழை அவர் கால் விபத்தில் செயலிழந்துபொய்விட்டது. எனவே நீங்கள் இதை உங்கள் பக்கத்தில் பகிர்ந்தால் ஃபேஸ்புக் நிறுவனம் ஒவ்வொரு பகிர்விக்கும் 1$ அந்தப் படத்தில் இருப்பவருக்கு தரும். நான் செய்துவிட்டேன் நீங்களும் பகிருங்கள் இல்லை என்றால் நீங்கள் மிருகம் என்று வேற வாசகம் இருக்கும்.

படத்தில் இருப்பவர் யார்? எந்த ஊர்? அது உண்மையா அல்லது பொய்யா என எந்தக் கேள்வியுமின்றி நாம் உடனடியாக ‘ஷேர்’ லிங்கை கிளிக் செய்து விடுவோம் ( நான் மிகவும் இரக்க குணம் கொண்டவன்.. நல்லவன்).

ஃபேஸ்புக் ஒவ்வொரு பகிர்வுக்கும் 1$ படத்தில் உள்ளவருக்கு தரும் என்பது எவ்வளவு அபத்தமான விடயம்! அப்படி தருவதால் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு என்ன லாபம்? உண்மையில் இப்படி செய்வதால் ஃபேஸ்புக் சர்வர்களுக்கு தேவை இல்லாத சுமை தான். சரி அப்படியே இலாப நோக்கம் இல்லாமல் உதவி அடிப்படையில் ஃபேஸ்புக் பணம் கொடுக்கும் என்று சொன்னால் அதை அப்படியே தருமல்லவா? விளம்பர நோக்கில் என்றால் ஒருவரின் சோகத்தைக் கொண்டா ஃபேஸ்புக் விளம்பரம் தேடும்? அவ்வளவு கீழான நிறுவனமா அது!??

உண்மையில் என்ன நடக்கும் என்றால்.. நீங்கள் பயன்படுத்தும் Browser பொருத்து திருடர்களால் உருவாக்கப்பட்ட சில Hidden Script வேலை செய்ய ஆரம்பிக்கும். அது எதாவது ஒரு நிலைதகவலையோ அல்லது எதாவது தளத்தின் சுட்டியையோ உங்கள் Wall-இல் எழுதி வைக்கும் அது உங்களுக்கு தெரியாது. உங்கள் நண்பர்கள் பார்க்கும்படி இருக்கும். எந்தவித செலவில்லாமல் உங்கள் மூலமாக திருடர்களின் பொருளுக்கோ அல்லது தளத்துக்கோ விளம்பரம் கிடைத்துவிடும்.

இதேபோல பலவிதமான முறையில் Clickjacking and Likejacking-ஐப் பயன்படுத்துவார்கள். எல்லாமே உணர்வைத் தூண்டும் தொனியிலே இருக்கும்.

–>>ஒரு மாற்றுத்திறனாளி கடுமையான வேலை செய்வது போல இருக்கும் படத்தைபகிர்ந்து 1 share = 1 salute என வாசகம் எழுதப்பட்டிருக்கும். நாமும் உடனே Share செய்து சல்யூட் அடித்து விடுவோம். இதனால் அந்த மாற்றுத்திறனாளிக்கு உண்மையில் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. மாறாக திருடர்கள் தான் பயன் அடைவர்கள். உணர்வை தூண்டி காசு பார்க்கும் திருடர்களுக்கு நாம் உடந்தை!!

–>> சமீபத்தில் நடந்த டெல்லி கோர சம்பவத்தை பயன்படுத்தி போலியான படத்தைப் பகிர்ந்து இதையே தான் செய்தனர்.அந்தப் படத்தில் இருந்த பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்த பின் அதை நீக்கினார்கள்.


திருடர்களின் பிரதான  நோக்கம்:

* வதந்திகளை பரப்புதல் ( உலகம் அழிய போகிறது, சைவ உணவு சாப்பிட்டால் நோய்வரும், etc)

* உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுதல்

* வைரஸ் பரப்புதல்

* உங்களைப் பயன்படுத்தி விளம்பரம் செய்துக் கொள்ளுதல்

இதுகுறித்து Business Week வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மாதத்திற்கு சுமார் 2,80,214 பேர்களை இந்த மாதிரியான திருடர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனவும் அதன் மூலம் அவர்கள் சுமார் 1.2 மில்லியன் டாலர் சுருட்டுகிறார்கள் எனவும் தெரிவிக்கிறது.

பணம் திருடுவது நோக்கமாக இல்லாத உளவியல் சிக்கல் உள்ளவர்கள் வேறுவிதமாக சுகம் காண்பார்கள். உதாரணம்:

இது போன்ற நிலைதகவலை தங்களது பக்கத்தில் பதிவதன் நோக்கம் என்னவென்று சற்று ஆய்வுச் செய்வோம்

“If no one reads my wall.  I’m afraid no one cares I’m here, please prove me wrong. Leave one word on how we met.”   இதன் நோக்கம் நான் மிகவும் முக்கியமானவர் என பிறர் உணரவேண்டும்

“Only one word”  ஒரு வார்த்தையில் மட்டும் இருக்க வேண்டும் என சொல்லும் நோக்கம் அப்போது தான் தமக்கு தேவையானது போல வார்தையை வாங்கலாம்.

“Then copy this to your wall.” இதன் மூலம் பிறரை தம் கட்டளைக்கு பணிய செய்ய வைக்கும் உத்தி.

“Please don’t add your word and then not bother to copy.”  அப்போது தான் மற்றவர்களும் தன்னை போல பாதுகாப்பு உணர்வில்லாமல் இருக்கிறார்கள் என்பதைகணித்து மகிழ முடியும்.

சரி இது போன்ற முட்டாள்த்தனமான வேலைகளில் இருந்து எப்படி தப்புவது/ என்ன செய்வது?

உணர்வைத் தூண்டி லாபம் பார்க்கும் இது போன்ற விசயங்களை பகிர்வதையும், லைக் செய்வதையும் தவிர்ப்பதன் மூலம் நாமும் நமது நண்பர்களும் இது போன்ற ஒரு இழிசெயலுக்கு உடந்தை ஆகாமல் தவிர்க்க முடியும். மேலும் Report spam எனும் சுட்டியைப் பயன்படுத்தி புகார் தெரிவிக்க வேண்டும்.

தற்கொலைகளைப் புரிந்துகொள்வது எப்படி..?



 தற்கொலை பற்றிய உரையாடல்கள் அன்றாட ஊடக விவாதங்களின் ஓர் அங்கமாக உள்ளன. ஆனால் ஏன் தற்கொலை நடக்கிறது என்பது குறித்த புரிதல் மிகவும் குறைவாகவே உள்ளது.

வாழ்க்கையில் பார்த்திராத, பழக்கமே இல்லாத ஒரு நபர் தற்கொலை செய்துகொண்டால்கூட அது குறித்து எல்லாருக்கும் அபிப்ராயங்கள் உள்ளன. ‘என்ன கோழைத்தனமான செயல்’ என்றும் ‘மிகவும் பலவீனமான நபர்’ என்றும் பலரும் சொல்வதைக் கேட்கிறேன். மேம்போக்கான தீர்ப்பு தொனிக்கும் கருத்துகள் அவை. எல்லாம் அறிந்த உணர்விலிருந்தும், பயத்திலிருந்தும்கூட இந்த வார்த்தைகள் எழுகின்றன. தற்கொலை செய்யும் நபர்களை அக்காரியத்திற்குத் தூண்டிய எண்ணங்கள் என்னவென்று நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத நிலையிலிருந்து எழும் கருத்துகள் இவை.

வாரக்கணக்கில் தலைப்புச் செய்தியில் இருந்த சுனந்தா புஸ்கரின் பயங்கர மரணத்தை, பிலிப் ஹாப்மனின் மரணச்செய்தி இடம்பெயர்த்து விட்டது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேரில் 10.3 பேர் தற்கொலை செய்துகொள்வதாக மருத்துவ ஆய்விதழான தி லான்செட் கூறுகிறது. இந்தியாவில் நடக்கும் கொலைகளைவிட மூன்று மடங்கு தற்கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன என்று இந்தக் கணக்கின் வாயிலாகத் தெரியவருகிறது.

இவ்வளவு பெரிய முடிவை எடுக்க அவர்களை எது தள்ளுகிறது? இந்தப் பிரச்சினை, ஒரு நபரின் மனவலிமை தொடர்புடையதோ, குணாதிசயம் தொடர்பானதோ அல்ல. உயிரியல், மரபியல், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன்கள், சமாளிக்கும் முறைகள் மற்றும் குடும்பரீதியான காரணிகள் ஆகியவை தற்கொலை முடிவுக்குப் பின்னணியில் செயல்படுகின்றன.

தற்கொலைக்கான காரணிகள்

தற்கொலையைப் புரிந்து கொள்ளத் தத்துவவாதிகளும் உளவியல் நிபுணர்களும் மற்றவர் களைப் போலவே போராடியுள்ளனர். 19ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு சமூகவியலாளர் எமிலி டர்க்கைம் தற்கொலைக்கான கலாச்சார, சமூகவியல் காரணங்களை முதலில் ஆய்வுசெய்தார். அவர் அதை மூன்றுவகையாகப் பிரித்தார். சமூகரீதியாகத் தனிமைப்படுத்தப்படும் நபர் தனது ஈகோவை நிலைநாட்ட மேற்கொள்வது முதல்முறை. இரண்டாவது பொதுநலநோக்கில் தற்கொலை செய்வது. இது போர்களில் வீரர்கள் நாட்டுக்காக உயிர்துறப்பதற்கு ஒப்பானது. நெறிபிறழாமல் நல்ல முறையில் நடக்கும் ஒரு மனிதரின் வாழ்வில் ஏற்படும் தாறுமாறான குளறுபடிகளால் ஏற்படும் சீர்குலைவால் செய்துகொள்ளும் தற்கொலை மூன்றாவது வகை.

தற்கொலை செய்யும் முடிவை எடுப்பவர்கள் தங்கள் தற்கொலை மூலம் பழிவாங்கல், வலியிலிருந்து தப்பிப்பது, மீட்பு, தியாகம் போன்ற விஷயங்கள் நிறைவேறுவதாக நம்புவதாகத் தற்காலச் சமூக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். நாம் வாழும் கலாச்சாரச் சூழலுடன் தொடர்புடைய உயிரியல், மரபியல் மற்றும் சமூகக் காரணிகள்தாம் இந்தக் கற்பனைகளை விளைவிக்கின்றன.

உயிரியல்ரீதியாக, நரம்புத் தொடர்பிணைப்புப் பொருளான செரோடோனின், ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரானுக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றன. செரோடோனினே தற்கொலை முடிவில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

தற்கொலைக்கான மரபியல் மற்றும் உயிரியல் காரணங்கள் குறித்து வெவ்வேறு வகை மக்களிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்களிடம் உள்ள தற்கொலை நடத்தையை ஆராய்ந்தபோது, அவர்களிடம் அதிக வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.

மரபியல் மட்டுமே காரணம் அல்ல

வெறுமனே மரபியல் விதியாக மற்றுமே தற்கொலையை எளிதாக நிர்ணயித்துவிட முடியாது. பாலினம், வயது, திருமண நிலை, உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் என அனைத்தும் ஒருவரது தற்கொலை முடிவுக்குக் கார்ணம் ஆகின்றன.

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் தற்கொலைக்கு முயலும் ஆண்கள்தான் அதிகம் பேர் தங்கள் முயற்சியை நிறைவேற்றி விடுகின்றனர். 15 முதல் 29 வயதுக்குள்தான் அதிகம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். வயது முதிந்தோர் மற்றும் திருமணமானவர்கள் அதிகம் தற்கொலையில் ஈடுபடுவதில்லை.

சந்தோஷம், துக்கம், கவலைகள், வெற்றிகள், தோல்விகளைக் கையாள்வது எப்படி என்று தெரியாதவர்களும், போதுமான தொடர்புத் திறன் அற்றவர்களும், மற்ற நபர்களிடம் உணர்வுரீதியான உறவை மேற்கொள்ள முடியாதவர்களிடமும் குடும்பரீதியான வரலாற்றின் தாக்கம் உள்ளது.

சமூக உளவியல் அடிப்படையில் பார்த்தால், போதை பயன்படுத்துபவர்கள், தற்கொலை விருப்பம் உள்ளவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்கள் இருக்கும் குடும்பங்களிலிருந்து வரும் நபரிடம் தற்கொலை எண்ணம் அதிகம் இருக்கும். உடல்நலமின்மை, ஊனம், நாட்பட்ட உடல்வலி போன்றவையும் தற்கொலைக்கு முக்கியக் காரணமாக உள்ளன. தீராத துயரத்துக்கு முடிவு காண்பது நல்ல வழியாகத் தெரிகிறது. ஆளுமைக் குறைபாடு, உளச்சிதைவு மற்றும் அடிக்கடி மாறும் மனநிலை இயல்பும் காரணமாக உள்ளன.

என்ன செய்யவேண்டும்?

குடும்பங்களில் தற்கொலை தொடர்பாக எழும் எண்ணங்கள் குறித்து கூடி உட்கார்ந்து யாரும் பேசுவதேயில்லை. ஒருவருக்கு ஏற்பட்ட துயரம் குறித்துக்கூட, நேர்மையாக யாரும் உரையாடுவதேயில்லை. மனநலக் குறைபாடு தொடர்பாக சமூக விலக்கமே நம்மிடம் உள்ளது. பலவீன மனம் கொண்டவர்கள் தாங்கள் அவ்வாறு இருப்பதை ஒரு குறையாகக் கருதுகிறார்கள். உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்மீது வெறுப்பு ஏற்படுகிறது. மற்றவரது விரக்தியை எதிர்கொள்ளும்போது, சுய இயலாமை குறித்தும் சகிப்பின்மை ஏற்படுகிறது.

ஒருவர் தற்கொலை மனநிலையில் இருப்பதை உங்களிடம் வெளிப்படுத்தினாலோ, அப்படி அவர் இருப்பதாக நீங்கள் உணர்ந்தாலோ செய்யக்கூடிய விஷயங்கள் உள்ளன. முதலில் அது தொடர்பாக பேசும் நெருக்கடியை முதலில் களையுங்கள். அந்த நபர் குறித்தும் அவர் உங்களிடம் பகிர்ந்துகொண்ட விஷயத்திலும் அக்கறை கொள்ளுங்கள். உங்களது அனுதாபத்தை அவரிடம் தெரிவியுங்கள். அவர்களது துயரம் உங்களையும் வருத்துவதை நீங்கள் தெரியப்படுத்துங்கள். எந்த நிலையிலும் அவருடன் நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

உளவியல் மருத்துவர், மன நல ஆலோசகர் யாரையாவது அந்த நபர் பார்த்தாரா என்பதைக் கேளுங்கள். அப்படி அவர் ஆலோசிக்காவிட்டால் அதற்கு அவர்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேளுங்கள்.

ஆதிகாலத்திலிருந்தே, மனிதர்கள் தற்கொலை குறித்து எதிரான மனநிலையையே கொண்டுள்ளனர். சாக்ரடீஸ் தற்கொலையை எதிர்த்தார். “கடவுளின் உடைமைகளின் ஒன்று மனிதன், அவன் தன்னைத் தானே கொல்லக் கூடாது” என்றும் கூறினார். அப்படிக்கூறிய சாக்ரடீஸ், தனக்கு அரசு கொடுத்த மரண தண்டனையை அடுத்து விஷம் அருந்தித் தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது தேர்வையும் இப்படி நியாயப்படுத்தினார்: “கடவுள் ஒருவரைக் கட்டாயப்படுத்தும் நிலையில் தற்கொலை நியாயமானது” என்றார்.

சாக்ரட்டீஸ் உணர்ந்த கட்டாயம் கடவுளால் உருவானதல்ல. நாம் ஒவ்வொருவரும் அதன் விளைவை உணர்ந்தால் தற்கொலை என்பது தவிர்க்க முடியாத ஒன்றல்ல.

சத்யராஜ் - வாழ்க்கை வரலாறு


கோவை மாவட்டத்தில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து, தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர், சத்யராஜ் அவர்கள். ஒரு வில்லனாகத் திரையுலகில் அறிமுகமான அவர், ‘கடலோரக் கவிதைகள்’ என்ற படத்தின் மூலமாக சிறந்த நடிகராக மாறி, ‘வில்லாதி வில்லன்’ என்ற திரைப்படத்தை இயக்கி, ‘லீ’ என்ற திரைப்படம் மூலமாகத் தயாரிப்பாளராக உருவெடுத்தார்.

 ‘என் கேரக்டரே புரிஞ்சிக்க மட்டிங்கறியே’, ‘என்ன மா…. கண்ணு’, ‘தகடு தகடு’ என்ற வசனங்களால் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார். கொங்குத் தமிழ் பேசி, தனக்கென உரித்தான தனி பாணியில் அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்த்தவர். ஹீரோ, எதிர்மறைக் கதாபாத்திரம், காமெடி என அனைத்து வகையான கதாபாத்திரங்களில் நடித்த அவருக்கு ‘பெரியார்’ திரைப்படமும், ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படமும் வரலாற்று சாதனைப் படைத்தப் படங்களாக மாறி, அவருக்கு விருதுகளையும் பெற்றுத்தந்தது.

அவர் நாயகனாக நடித்த காலக்கட்டங்களில், அனைத்து முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடித்தும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, என முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தும் புகழ்பெற்றார். தமிழக அரசின் ‘கலைமாமணி விருது’, ‘எம்.ஜி.ஆர் விருது’, ‘பெரியார் விருது’, ‘ஃபிலிம்ஃபேர் விருது’, ‘விஜய் விருது’ என எண்ணற்ற விருதுகளை வென்று, இன்றளவும் தமிழ்த் திரையுலகில் தனது நடிப்பால் நிலைத்து நிற்கும் சத்யராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

  • பிறப்பு: அக்டோபர் 3, 1954
  • பிறப்பிடம்: கோயம்பத்தூர், தமிழ்நாடு, இந்தியா
  • பணி: திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பளர்
  • நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

சத்யராஜ் அவர்கள், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும்  கோயம்பத்தூரில்  அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி, 1954 ஆம் ஆண்டில் சுப்பையா மற்றும் நாதாம்பாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர், ரெங்கராஜ். மேலும், அவருக்கு இரண்டு இளைய சகோதரிகள் உள்ளனர்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

தனது ஆரம்பகாலப் பள்ளிப்படிப்பை கோயம்புத்தூரில் உள்ள செயின்ட் மேரிஸ் கான்வெண்ட்டில் தொடங்கினார். தனது பத்தாம் வகுப்பு வரை, கோவையில் உள்ள ராம்நகர் உயர்நிலைப்பள்ளியில் படித்த அவர், எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வரலாறு மற்றும் பூகோளப் பாடங்களில் முதல் மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிப் பெற்றார். தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், இளநிலைக் கல்விப் பெறுவதற்காக கோயம்புத்தூர் அரசு கலை கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர், தாவரவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் அவர்கள், பி.யூ.சி படிக்கும் போது, அவரது சக மாணவனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. இன்றுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்து வரும் அவர்கள் இருவரது நட்பு, அங்கு தான் தொடங்கியது.

திரையுலகப் பிரவேசம்

தனது இளம் பருவத்திலிருந்தே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து வந்த அவர், ‘அன்னக்கிளி’ படப்பிடிப்பை நேரில் கண்டார். அப்போது, அதன் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் திருப்பூர் மணியன் அவர்களை நேரில் கண்ட அவர், திரையுலகில் நுழைய வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார். அதன் வெளிப்பாடாக, கோமல் சத்தியநாதன் அவர்களின் நாடகக் குழுவில் சேர்ந்த அவர், ‘கோடுகள் இல்லாத கோலங்கள்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அக்கதாபாத்திரம் பெரிதளவு பேசப்படாததால், ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ என்ற பல்வேறு படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும், அவ்வப்போது ஒரு சில வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

திரையுலக வாழ்க்கை

தயாரிப்பு நிர்வாகியாக செயல்பட்டுக் கொண்டிருந்த சத்யராஜ் அவர்களுக்கு, பிரபல இயக்குனரான டி. என். பாலு அவர்கள், அவரது அடுத்த படமான ‘சட்டம் என் கையில்’ என்ற படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். மக்களிடையே, அவரது நடிப்பு வெகு விரைவாக சென்றடைந்ததால், அவர் தொடர்ந்து ‘ஏணிப்படிகள்’ (1979), ‘மூன்று முகம்’ (1982), ‘பாயும் புலி’ (1983), ‘நூறாவது நாள்’ (1984), ‘எனக்குள் ஒருவன்’ (1984), ‘நான் மகான் அல்ல’ (1984), ‘சாவி’ (1985), ‘நான் சிகப்பு மனிதன்’ (1985), ‘திறமை’ (1985), ‘முதல் மரியாதை’ (1985), ‘பகல் நிலவு’ (1985), ‘காக்கிச்சட்டை’ (1985), ‘பிள்ளை நிலா’ (1985), ‘விக்ரம்’ (1986), ‘தர்மம்’ (1986), ‘இரவு பூக்கள்’ (1986), ‘மந்திரப்புன்னகை’ (1986), ‘மிஸ்டர் பாரத்’ (1986), ‘முதல் வசந்தம்’ (1986), ‘ரசிகன் ஒரு ரசிகை’ (1986), ‘விடிஞ்சா கல்யாணம்’ (1986) போன்ற திரைப்படங்களில் எதிர்மறையானக் கதாபாத்திரங்களில் நடித்தார்.

வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சத்யராஜை, பாரதிராஜா அவர்கள், அவரது அடுத்தப் படமான 1986ல் ‘கடலோரக் கவிதைகள்’ என்ற படத்தில் கதாநாயகனாக வடிவமைத்தார். அப்படத்தைத் தொடர்ந்து, முழுமையான கதநாயகனாக மாறிவிட்ட அவர், முன்னணி கதாபாத்திரங்களிலே நடித்து வந்தார்.

‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ (1987), ‘மக்கள் என் பக்கம்’ (1987), ‘வேதம் புதிது’ (1987), ‘சின்ன தம்பி பெரிய தம்பி’ (1987), ‘பூவிழி வாசலிலே’ (1987), ‘அண்ணாநகர் முதல் தெரு’ (1988), ‘ஜீவா’ (1988), ‘புதிய வானம்’ (1988), ‘சின்னப்பதாஸ்’ (1989), ‘தாய் நாடு’ (1989), ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’ (1989), ‘உலகம் பிறந்தது எனக்காக’ (1990), ‘நடிகன்’ (1990), ‘புது மனிதன்’ (1991), ‘பிரம்மா’ (1991), ‘திருமதி பழனிச்சாமி’ (1992), ‘தெற்குத் தெரு மச்சான்’ (1992), ‘பங்காளி’ (1992), உடன் பிறப்பு’ (1992), ‘ரிக்க்ஷா மாமா’ (1992), ‘ஏர்போர்ட்’ (1993), ‘கட்டளை’ (1993), ‘வால்டர் வெற்றிவேல்’ (1993), ‘அமைதிப்படை’ (1994), ‘வில்லாதி வில்லன்’ (1995), ‘மாமன் மகள்’ (1995), ‘சேனாதிபதி’ (1996), ‘பகைவன்’ (1997), ‘கல்யாண கலாட்டா (1998), ‘மலபார் போலீஸ்’ (1999), ‘புரட்சிக்காரன்’ (2000),  ‘அசத்தல்’ (2001), ‘மாறன்’ (2002), ‘மிலிட்டரி’ (2003), ‘ஜோர்’ (2004), ‘இங்கிலீஷ்காரன்’ (2005), ‘வெற்றிவேல் சக்திவேல்’ (2௦௦5), கோவை பிரதர்ஸ்’ (2௦௦5), ‘பெரியார்’ (2௦௦6), ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ (2௦௦7), ‘நண்பன்’ (2௦12), ‘நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ’ (2௦12) போன்ற திரைப்படங்கள் அவர் நடிப்பில் வெற்றிப் பெற்றவையாக விளங்குகிறது.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ‘வில்லாதி வில்லன்’ என்ற திரைப்படம் மூலமாக ஒரு இயக்குனராகவும் உருவெடுத்தார். தனது மகனான சிபிராஜ் அவர்களுடன் இணைந்து, பல படங்களில் நடித்து வந்த அவர், அவரது மகனைக் கதாநாயகனாகக் கொண்டு ‘லீ’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இப்படம் மூலமாக, அவர் ஒரு தயாரிப்பாளர் என்பதையும் தமிழ்த் திரையுலக வரலாற்றில் பதிவு செய்தார்.

எம். ஜி. ஆர் மீது பற்று

எம். ஜி. ஆரின் தீவிர பக்தனாக இருந்த சத்யராஜ் அவர்கள், அவருடைய தங்கையின் திருமணத்திற்கு அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரை பத்திரிக்கை வைத்து அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று, எம்.ஜி.ஆர் அவரது துணைவியார் மற்றும் அமைச்சர் முத்துசாமியுடன் அத்திருமணத்திற்கு சென்றதால், அவரது உயர்ந்த உள்ளத்தைப் பாராட்டி அனைத்துத் திரையுலகினரும் மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அவரிடம் ஆசியும் பெற்றனர். அவரது வருகைக்கு நன்றி செலுத்த சென்ற அவர், எம்.ஜி.ஆர் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையை பரிசாகக் கேட்டு வாங்கிக் கொண்டார். இதனால், அவரை ‘எம்.ஜி.ஆரின் பித்தன்’ என்று சொன்னாலும் அது மிகையாகாது.

இல்லற வாழ்க்கை

சத்யராஜ் அவர்கள், மகேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் பிறந்தனர்.

விருதுகள்

தமிழக அரசின் உயரிய விருதான ‘கலைமாமணி விருதை’ வென்றார்.

1987 – ‘வேதம் புதிது’ திரைப்படத்தின் ‘சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது’ பெற்றார்.

1991 – தமிழ்நாடு அரசு அவருக்கு ‘எம்.ஜி. ஆர் விருது’ வழங்கி கௌரவித்தது.

2007 – ‘பெரியார் விருது’ அவரது ‘பெரியார்’ படத்திற்காக வழங்கப்பட்டது.

2007 – சத்தியபாமா பல்கலைக்கழகம் அவருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.

2007 – ‘ஒன்பது ருபாய் நோட்டு’ திரைப்படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதினைப்’ பெற்றுத்தந்தது.

2012 – ‘நண்பன்’ படத்தின் சிறந்த துணைக் கதாபாத்திரத்திற்கான ‘விஜய் விருதை’ வென்றார்.
 
நண்பேன்டா