Sunday 23 February 2014

கங்கையின் மாசு நீங்க ரூ.6500 கோடி செலவிட்டும் பிரயோஜமில்லையே..!



பல லட்சம் இந்தியர்களின் ஜீவநதியாக விளங்கும் விளங்கும் கங்கை,இந்துக்களின் புனித நதியாகவும் கருதப்படுகிறது.இந்த நதியில் மூழ்கி எழுந்தால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்,தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த புனித நதியில் மூழ்கி எழுகின்றனர்.அதே சமயம் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுவதாலும், தினமும் இறந்தவர்களின் அஸ்தியை அங்கு கரைப்பதாலும் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.

தற்போது கங்கை நதிக்கு செல்பவ்ர்கள் புனித நீராடலாம் என்று மூழ்கி எழுந்தால், அவர்களை உரசிக்கொண்டு ஒரு பிணம் மிதந்து செல்வதை சர்வ சாதாரணமாக காணலாம்.இந்நிலையில், இந்த அளவுக்கு மாசடைந்துபோயிருக்கும் கங்கை நீரில், புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ்(carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில் .யமுனையை தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், ’இத்திட்டத்திற்காக இதுவரை சுமார் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிட்டும், தெள்ளத்தெளிவாக இருக்க வேண்டிய யமுனை ஆற்று நீரின் கருப்பு நிறம் இன்னும் மாறவில்லையே என்று மத்திய அரசு கவலைக் கொண்டுள்ளது.


கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா போன்ற பெரிய ஆறுகள் நமது நாட்டின் நீர் ஆதாரத்துக்கான தேவையை நிறைவு செய்வதில் முதலிடம் வகிக்கின்றன. இவற்றில், யமுனை இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தின் இமய மலை பகுதியியில் அமைந்துள்ள யமுனோத்ரியில் தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா வழியாக பாய்ந்து, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.

யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ தூரம் வளைந்து, நெளிந்து ஓடி வட மாநிலங்களின் பெரும்பகுதி விளைச்சல் நிலங்களுக்கு தேவையான நீராதாரத் தேவையை யமுனை ஆறு நிறைவேற்றி வருகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க்து.

இதற்கிடையில் காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில் தான் நாள்தோறும் கலக்கி றது. இதன் அளவு 20 மில்லியன் காலனாகும். நாள் ஒன்றுக்கு 400 பிணங்கள் கங்கைக் கரை யில் எரிக்கப்பட்டு கங்கை யில் கரைக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் 9000 கிழப் பசுக்கள் உயிரோடு கங்கை யில் தள்ளப் பட்டுக் கொல்லப்படுகின்றன – மோட்சத்துக்காக. இதன்விளைவாக 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசி அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி ஆயிரக் கணக்கில் மாண்டனர்.

இதையடுத்து வெளியான இன்னொரு புள்ளி விவரம் மிகவும் முக்கியமானது. இந்தியாவி ல் மற்ற மற்ற பகுதிகளில் எல் லாம் குழந்தைகள் மரணம் நூற்றுக்கு 94என்றால் கங்கைபாயும் காசி வட்டாரத்திலோ 133.94 ஆகும். பீகாரில் துர்காபூர், பொகாரோ, பி லாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந் தும், உரத் தொழிற்சாலைகளி லிருந் தும் அம்மோனியா, சயனைடு நைட் ரேட், முதலிய நச்சுக் கழிவுகள் ஏராளமாகக் கலக்கின்றன. பீகார் தலைநகரமான பாட்னாவில் மட்டும் நிமிடம் ஒன்றுக்கு 34 முதல் 41 பிணங்கள் எரிக்கப்பட்டு மோட்ச த்திற்குச் செத்தவர்களை அனுப்புவதற்காக(?) அந்தச் சாம்பல் கங்கைக்கரையில் கரைக்கப்படுகின்றன.

மேலும் கொல்கத்தாவில் மட்டும் 296 தொழிற்சாலைகளின் ஒட்டு மொத்த கழிவுகளும் சங்கமம் ஆவது இந்துக்கள் புனிதம் என்று கூறுகிறார்களே – அந்தக் கங்கையில்தான்.இவற்றை எல்லாம் விட இன்னும் அதிர்ச்சி தரும் தகவல்கள் உண்டு. கங்கை புனித நதி பாயும் பகுதிகளில் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஆனாலும் அங்கு இப்போதும் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கிறது.சுவிஸ் அரசின் நிதி உதவியால் இப்புனித நகரங்களில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுதான் இந்த அதிர்ச்சியான தகவலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. (தி பயணியர் 27.7.1997).டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு (19.6.2003) வேறு பல ஒழுக்கக் கேடான தகவல்களை வாரி வாரி இறைத்து இருந்தது.

இதையடுத்து இந்த மாசுகளை அகற்றவும், மேலும் மாசடையாதபடி யமுனை ஆற்றை பாதுகாக்கவும் மத்திய ஊரக மேம்பாட்டு துறையின் சார்பில் டெல்லி துணை நிலை கவர்னரின் தலைமையில் 31 எம்.பி.க்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் சார்பில் யமுனையை தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், ’இத்திட்டத்திற்காக இதுவரை சுமார் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவிட்டும், தெள்ளத்தெளிவாக இருக்க வேண்டிய யமுனை ஆற்று நீரின் கருப்பு நிறம் இன்னும் மாறவில்லையே… ’என மத்திய ஊரக மேம்பாட்டு துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு வேதனை தெரிவித்துள்ளது.

தானியங்கி உணவு விற்பனை இயந்திரம் – சென்னையில் அறிமுகம்..!



அட்சயம்’ஸ் ஃபுட் பாக்ஸ் நகரின் புகழ்பெற்ற உணவகங்களில் இருந்து உணவு வகைகளை முற்றிலும் தானியங்கி வினியோக நுணுக்கத்தின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவகத்தின் உணவு வகையை எளிதாக பயன்படுத்தும் தொடு திரையை பயன்படுத்தி தேர்வு செய்து, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக கட்டணம் செலுத்தினால், 90 விநாடிகளுக்குள் புதிய மற்றும் சூடான உணவு பாக்கெட்கள் கன்வேயர் பெல்ட் வழியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

ஊழியரிடம் ரொக்கம் செலுத்தி ஃபுட்பாக்ஸ் கார்டைப் பெற்று, அதை ஸ்வைப் செய்தும் உணவை ஆர்டர் செய்யலாம்.இத்தகைய இந்தியாவின் முதலாவது முழுமையான தானியங்கி, மல்டி-பிராண்ட் உணவுச் சில்லரை விற்பனை இயந்திரத்திரமான ‘அட்சயம்’ஸ் ஃபுட் பாக்ஸ்’ சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் அடையார் ஆனந்த பவன், ஆகிஃப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி, மோத்தி மகால், அமராவதி, காரைக்குடி மற்றும் மிஸ்டர் செளஸ் போன்ற உணவகங்கள் தற்போது இதனுடன் இணைந்துள்ளன.நாட்டில், உணவு மற்றும் சில்லரை வர்த்தகத் துறையில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஃபுட் பாக்ஸ், புகழ் பெற்ற உணவகங்களில் இருந்து வழங்கப்பட்ட லேசான சிற்றுண்டி தொடங்கி முழுமையான உணவு வரை அனைத்தையும் 90 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் அளிக்கும் ஒரு தானியங்கி உணவகமாகும் என்பது குறிப்பிடத்தக்க்து.

இதையொட்டி ஃபுட் பாக்ஸ் உடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் உணவகங்களிடம் உணவின் அளவு மற்றும் விலையில் முழுமையான திருப்தி குறித்து முதலில் ஆலோசனை நடத்தப்படும். இந்த உணவு 100 சதவீதம் விர்ஜின் பாலிப்ரோபிலின், ஃபுட்-கிரேட் பேக்கேஜிங் பொருட்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட உணவகத்தில் பேக்கிங் செய்யப்பட்டு ஃபுட் பாக்ஸ்-க்கு கொண்டு வரப்பட்டு பருவநிலை கட்டுப்பாட்டுடன் சேமித்து வைக்கப்படுவதுடன், அந்த உணவு பரிமாறப்படுவதற்கு முன் தானியங்கி முறையில் சூடுபடுத்தப்படும். இந்த தானியங்கி முறையானது தொடர்ந்து உணவை இருப்பு மற்றும் தேவை அடிப்படையில் புதுப்பித்து, அதன் மூலம் உணவு வீணாவது குறைக்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படும் உணவு எப்போதும் புதிதாக இருப்பது உறுதிச் செய்யப்படுகிறது.

இந்த ஃபுட பாக்ஸ் அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில், அட்சயம் நிறுவனத்தின் சி.ஒ.ஒ மற்றும் சி.எப்.ஒ ரமேஷ் நாராயணன், அட்சய நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஒ சதிஷ் சாமிவேலுமணி, அட்சயம் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப வல்லுநர் ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

இந்த தானியங்கு உணவு விற்பனை இயந்திரத்தைப் பற்றி கூறிய அட்சயம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சதீஷ் சாமிவேலுமணி, “பயணத்தின் போதோ அல்லது அவசரத்தின் போதோ, சுவையான, நம்பிக்கைக்குரிய மற்றும் சுத்தமான உணவு கிடைப்பதில் உள்ள சவால்களை நாங்கள் புரிந்து கொண்டிருப்பதால், இந்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து இந்த முறையை உருவாக்குவதற்கு எங்களுக்கு 3 ஆண்டுகள் ஆனது.

எனது பங்குதாரர்களான ராஜசேகரன் மதுரம் மற்றும் ரமேஷ் நாராயணன் ஆகியோருடன் இணைந்து பல்வேறு புகழ்பெற்ற, உள்ளூர் உணவகங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, இந்த தனித்தன்மையான மற்றும் சுவாரஸ்யமான உனவருந்தும் மற்றும் உணவை வாங்கிச் செல்லும் அனுபவத்தை சென்னையில் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விரைவில் நாங்கள் இந்தப் புதுமையை இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களுக்கும் கொண்டு செல்வோம்.”என்றார்.

அட்சயம்’ஸ் ஃபுட் பாக்ஸ் தற்போது சென்னையில், டி.எல்.எஃப் ஐடி பார்க் மற்றும் கோயம்பேடு ஆகிய இரண்டு இடங்களில் உள்ளது. அடையார் ஆனந்த பவன், ஆகிஃப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி, மோத்தி மகால், அமராவதி, காரைக்குடி மற்றும் மிஸ்டர் செளஸ் போன்ற உணவகங்கள் தற்போது இதனுடன் இணைந்துள்ளன. இந்த நிறுவனம் தென்னிந்தியாவில் 2015ல் மேலும் 6 விற்பனையகங்களையும், விரைவில் தேசிய அளவில் செயல்பாடுகளை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது

எழுத்தாளர் ஜெயகாந்தன் கவலைக்கிடம்...!



தமிழ் இலக்கிய உலகில் ‘ஜே.கே’ என்று அழைக்கப்படும் 80 வயது எழுத்தாளர் ஜெயகாந்தன், கடந்த மூன்று மாத காலமாகவே நினைவாற்றலில் பாதிப்பால் அவதியுற்று வந்தார். மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்த அவரது நிலைமை தற்போது மோசமடைந்துள்ளதால் சென்னை – வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப பிராத்தனை செய்கிறோம்.

தமிழ்ச்சிறுகதை உலகில் இந்த அரைநூற்றாண்டுக் காலத்தில் உலகின் தரத்துக்கு உகந்த கதைகளை எழுதித் தமிழையும் தங்களையும் உயர்த்திக் கொண்ட ஒரு சில எழுத்தாளர்கள் உண்டு. அவர்களில் ஜெயகாந்தனும் ஒருவர். பாரதி, புதுமைப்பித்தன் இவர்களின் வரிசையில் நவீன தமிழ் இலக்கியத்தின் திருப்புமுனைக்கும், எழுச்சிக்கும் காரணமாக அமைந்தவர் ஜெயகாந்தன் என்றால் அது மிகையில்லை.1950-களில் சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின.

அவரது படைப்புகளுக்குப் புகழும் உரிய அங்கீகாரமும் கிடைத்தன. அந்த இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார்.சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான “உன்னைப் போல் ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் “உன்னைப் போல் ஒருவன்” சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது.அரசியல், இலக்கியம், சினிமா என பல்வேறு தளங்களில் இயங்கிய ஜெயகாந்தன், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ முதலான பல படைப்புகளால் கவனத்தை ஈர்த்தவர்.

எந்தவொரு எழுத்தாளர்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஜெயகாந்தனின் படைப்புகளுக்கு உண்டு. ஜெயகாந்தன் தனது நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் பெரிதும் சிறப்புடையன. அவரது முன்னுரைகள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது ‘முன்னுரை இலக்கியம்’ எனும் ஓர் தனித்த இலக்கிய வகைமையை நம்மால் அடையாளம் காண முடியும்.

ஜெயகாந்தன் தன்னைப் பற்றி குறிப்பிடுகையில்,”நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்… மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது….ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்… “என்று பட்டியலிட்டவர் சாகித்திய அகாதமி விருது,2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது,2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது மற்றும் ரஷ்ய விருதுகளை பெற்றுள்ளார்.”எழுத்து எனது ஜீவன் – ஜீவனம் அல்ல” என்று மார் தட்டிச் சொன்ன ஒரே எழுத்தாளர் ஜெயகாந்தன் மட்டுமே!. அவர் எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்றால் அஃது மிகையில்லை என்ற நிலையில் ஜெயகாந்தன் விரைவில் குணமாகி வீடு திரும்ப பிராத்தனை செய்கிறோம்.

கோமா நிலையில் இருந்து பேச முயற்சிக்கிறார் ஷூமேக்கர்..!

God Bless Him - நண்பேன்டா..!


பெர்லின்: விபத்துக் காரணமாக கோமாவில் இருக்கும் பிரபல கார் பந்தய வீரர் ஷூமேக்கரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது பேச முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளார் மற்றொரு கார் பந்தய வீரரான பெலிப் மாசா.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பார்முலா1 கார் பந்தய ஜாம்பவனான மைக்கேல் சூமாக்கர் கடந்தாண்டு டிசம்பர் 29-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் பனி சறுக்கு விளையாடுகையில் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து கோமா நிலைக்கு தள்ளப் பட்ட ஷூமேக்கர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஷூமேக்கரை கோமா நிலையில் இருந்து மீட்க டாக்டர்களும், அவரது குடும்பத்தினரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ஷூமேக்கர் தற்போது கோமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து சமீபத்தில் ஷூமேக்கரை மருத்துவமனையில் சென்று பார்த்த அவரது சக கார்பந்தய வீரரான பெலிப் மாசா கூறியுள்ளதாவது:-

படுக்கையில் சூமாக்கரை பார்க்கையில் சாதாரணமாக தூங்குவது போல் தான் தெரிகிறது. அவர் வாயை அசைத்து பதிலளிக்க முயற்சிக்கிறார்.

அவருடன் நேரத்தை செலவிட முடிந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியின் செயல்பாடு, புதிய கார் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவருடன் பேசினேன்.

என்னால் முடிந்த அளவு அவருக்கு சிறப்பான ஊக்கத்தை அளிக்க முயற்சி செய்தேன். அவர் வலுவான மனிதர். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என இவ்வாறு பெலிப் தெரிவித்துள்ளார்.

ஷூமேக்கரை கோமாவிலிருந்து மீட்கும் முயற்சியாக தொடர்ந்து அவரது காதில் அவரது மனைவி கதைகள் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை படிச்சிட்டாங்களானு பார்க்க..!



நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு அல்லது நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருப்பீர்கள்.

குறைந்த பட்சம் அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா..? இல்லையா..? என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா.

இதை அறிந்து கொள்ள spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.

1. முதலில் எப்போதும் போல மின்னஞ்சல் டைப் அடித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இப்போது www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு உங்கள் முகவரி மற்றும் உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள்.

3. முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Clickto Activate my Spypig” என்பதைச் சொடுக்குங்கள்.

4. இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீதுசுட்டியை வைத்து வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image (Firefox) & Copy(IE)” சொடுக்கி copy செய்யவும்.

5. இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மின்னஞ்சலை திறந்து அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி உடனே மின்னஞ்சலை அனுப்பி விடுங்கள்.

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை அவர் திறந்த உடன் எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்துவிடும்.

23 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதிக்கு ரூ. 40 கோடி ஜாக்பாட் + சோகம்..!



நியூயார்க்:-அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் டேவிட் ரந்தா (59). இவர் யுதமதகுரு சாஸ்கெல் வெர்ஸ் பெர்கர் என்பவரை கொலை செய்ததாக கடந்த 1990–ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டார்.

23 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். இதற்கிடையே மதகுருவை அவர் கொலை செய்யவில்லை என தெரியவந்தது. எனவே, செய்யாத குற்றத்துக்காக ஜெயில் தண்டனை அனுபவித்த டேவிட் ரந்தா விடுதலை செய்யப்பட்டார்.

மேலும், அவருக்கு ரூ. 40 கோடி நஷ்டஈடு தொகையும் வழங்கப்பட்டது.

இதில் விசேஷம் என்னவென்றால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மறுநாளே டேவிட் ரந்தாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

என்னாலயும் கின்னஸ் புத்தகத்தில இடம்பிடிக்க முடியுமல்ல…!



பிரிட்டனில், உள்ள 7.4 அடி உயர நாய், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.


பிரிட்டனில், எசக்ஸ் மாவட்டத்தை சேர்ந்தவர், கிளேரே ஸ்டோன்மேன். இவரது செல்ல நாய், பிரெட்டி. இந்த நாய்க்கு ஒன்றரை வயதாகிறது.


பிரெட்டியின் உயரம், 7 அடி 4 அங்குலம்; எடை 70 கிலோ.

இந்த வயதிலேயே, இந்த உயரம் உள்ளதால், இன்னும் வயதாக ஆக, உயரம் அதிகரிக்க உள்ளது.


இதையடுத்து, இந்த நாய், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.


பிரெட்டியின் உணவுக்கு மட்டும், ஆண்டுக்கு, நான்கு லட்சம் ரூபாய் செலவாகிறது என, இதன் எஜமானி, ஸ்டோன்மேன் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்பை விட மிகச்சிறந்த வேற சில அப்ஸ்கள்...!



இன்றைக்கு டெக் உலகம் அதிகம் பேசிக் கொண்டிருப்பது வாட்ஸ் அப்பை பேஸ்புக் 1 இலட்சம் கோடிக்கு வாங்கியதை பற்றி தாங்க.

சரிங்க இந்த வாட்ஸ் அப்பை விடுத்து வேற என்னலாம் இதேமாதிரி சேவைகளை வழங்கிவருதுன்னு பாக்கலாமாங்க.

இதில் வருபவற்றை பெருமாபாலும் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேங்க இதோ அவைகள்...

லைன் 

இதில் நீங்கள் ஒரு முறை ரிஜிஸ்டர் செய்தால் போதும்ங் உலகில் யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக கால் செய்யலாம் நீங்கள்

பேஸ்புக் மெசன்ஜர்

 இது பேஸ்புக்கால் வழங்கப்படும் சேவைதாங்க

ஸ்கைப்

இது உலகம் முழுவதும் இலவச வீடியோ கால் செய்ய பயன்படும் அப்ளிகேஷன்ங்க

கிக்

 இது மெசேஜ் அனுப்ப பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்ங்க

வைபர்

 இது கால் மற்றும் மெசேஜ் அனுப்ப பயன்படுத்தும் அப்ளிகேஷன்ங்க...

நம்ம தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய அம்மா வந்திருக்காங்க..!



குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, இந்திய அளவிலான நடிகையாக உருவெடுத்தவர் ஸ்ரீதேவி. பின்னர் இந்தியில் தன்னை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் போனிகபூரையே திருமணம் செய்து கொண்டு மும்பைவாசியாகி விட்டவர், அதன்பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பம், குழந்தைகள் என்று முழுநேர இல்லத்தரசியானார்.

ஆனால், அப்படியிருந்தவருக்கு மீண்டும் நடிப்பு ஆசை தலைதூக்கவே, இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் மறுபிரவேசம் செய்தார். அப்படத்தில் ஸ்ரீதேவியை சுற்றியே கதை என்பதால், தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி முத்திரை பதித்தார். இருப்பினும் தொடர்ந்து அதுமாதிரியே அவர் கதைகளை எதிர்பார்த்ததால், சரியான வாய்ப்புகள அமையவில்லை.

இந்த நிலையில், தற்போது தெலுங்கில் ராஜமவுலி இயக்கி வரும் பாகுபாலி படத்தில் பிரபாசின் அம்மாவாக நடிக்கிறார் ஸ்ரீதேவி. படத்தின் ஒரு ப்ளாஷ்பேக்கில் வந்தாலும், ஸ்ரீதேவியின் நடிப்பும் பேசும்படியாக இருக்குமாம். குறிப்பாக, ராணி கெட்டப்பில் ஸ்ரீதேவி நடித்துள்ள காட்சிகள், இரண்டு மகன்களை பெற்றுக்கொள்வதற்கு முன்பு அவர் சந்திக்கிற பிரச்சினைகள் நெஞ்சை பதபதக்க வைக்கும் வகையில், படமாக்கப்பட்டுள்ளதாம்.

அந்த வகையில், ஸ்ரீதேவிக்கும் சிறிய அளவிலான ஆக்சன் காட்சி உள்ளதாம். இந்த படத்தில் நடிப்பதற்காக, பிரபாஸ், ராணா, அனுஷ்கா என அனைவருமே உடம்பை ஸ்லிம் பண்ணியதைப்பார்த்து ஸ்ரீதேவியும், ராணி கெட்டபுக்காக தனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்துக்கொண்டு நடித்திருக்கிறாராம்.

தோல்வி வாழ்க்கையில் எதனால் ஏற்படுகிறது..?






1.முதலாவதாக, செய்வதில் ஆர்வமும் ஈடுபாடும் உண்மையாக, முழுமையானதாக இருக்க வேண்டும்.சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக் காட்சியில், சச்சின் டெண்டுல்கருடைய பேட்டி ஒன்று, அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இருபது ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஒளிபரப்பானது. வெறும் விளையாட்டு, கொஞ்சம் அதிகமான ஆர்வம் என்பதையும் மீறி, அதுவே அவரது வாழ்க்கையும், தவமுமாகிப் போனதை அந்தப் பேட்டி மிகவும் அழகாகச் சொன்னது. அதன் ஒருபகுதியைக் கீழே பார்க்கலாம்.

2.இரண்டாவதாக, ஒரு தெளிவான திட்டம் உங்களுக்கு இருக்க வேண்டும். என்னவாக வேண்டும் என்பதைக் குறித்து ஒரு கனவு, அந்தக் கனவு மெய்ப்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்த தெளிவான பார்வை. நிதியாதாரங்கள் திரட்டுவதும் அதன் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும்.


3.மூன்றாவதாக, எல்லாவகையிலும் அது முழுமையானதாக இருக்கவேண்டும் என்று காத்திருக்காமல்,சோதனை ஓட்டத்திற்குத் தயாராக வேண்டும். சோதனை முயற்சிகளில் கிடைக்கும் படிப்பினைகளில் இருந்தே உங்களுடைய ஒரிஜினல் ஐடியாவைச் சரி செய்து கொள்ள முடியும். முதல் நாளில் இருந்தே அது முழுமையாக, சரியானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கடைசியில் ஒன்றுமே செய்யாமல் நின்று விடுவதான செயலாற்ற தன்மைக்குக் கொண்டு விட்டு விடும்.

4.நான்காவதாக, கடுமையாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் செயல்படுவது நம் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நல்லது.


5.ஐந்தாவதாக, வளர வேண்டும் என்ற விருப்பமிருந்தால் கற்றுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள். கற்றுக்கொள்வது நிற்கும் போது, வளர்ச்சியும் தேக்கமடைந்து போய் விடுகிறது. முக்கியமாக, தலைமைப் பண்புடன் கூடியவர்களைக் கொண்ட ஒரு குழுவை நிறுவ முயற்சி செய்யுங்கள். குழுவாக செயல்படும்போது, உங்களிடமில்லாத திறமைகளும் சேர்ந்து வெளிப்படும்.


6.ஆறாவதாக, நேற்றைய வெற்றிகளில், சாதனைகளில் தேக்கமடைந்து நின்று விடாதீர்கள்.


அப்படித் தேக்கமடைந்துவிடுவதில், காலம் செல்லச் செல்ல, வேகமும் குறைந்து விடும். அப்படி ஒரு நிலை வருமானால், பழையதை விட முடியாமலும், புதியதற்குத் தயாராக முடியாமலும் அந்தரத்தில் தொங்கும் நிலைக்கு ஆளாக நேரிடலாம்.


7.ஏழாவதாக, ஏதோ ஒன்றைச் செய்யாமல் இருப்பது உங்களுக்கு விருப்பமில்லாமல் இருக்கிறதென்றால் அதைக் கவனியுங்கள். உதாரணத்துக்கு, சிகரெட், மது, பெண்பித்து, பேராசை, நாணயக் குறைவு, எதிலும் காலதாமதம் இது போன்ற பலவீனங்கள், கவனத்தைத் திசை திருப்புபவைகளாக, இப்படி எது உங்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது?

மாற்றிக்  கொள்வதில் என்ன தயக்கம் என்பதைக் கவனியுங்கள். படுமுடிச்சுக்கு மேல் படுமுடிச்சாகப் போட்டுக் கொண்டிருப்பது எளிது. முடிச்சுக்களே இல்லாமல், எளிமையாக இருப்பதற்கு, ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியம். எளிமையாக, ஒழுங்கோடு இருப்பவைகளே வெற்றிக்கு அஸ்திவாரம்.


8.எட்டாவதாக, நீங்கள் உருவாக்கும் குழுவில் இருப்பவர்கள், உங்களுடைய நண்பர்களாக ஏற்கெனெவே இருப்பவர்களாகவோ, அல்லது நண்பர்களாக ஆகப் போகிறவர்களாகவோ இருக்கட்டும்! வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது எளிது. ஆனால், உங்களுடைய வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்து கொள்பவர்களாகவும், காலப்போக்கில், மிகச் சிறந்த உறவுகளாகவும் நண்பர்கள் தான் இருக்க முடியும்! வேலைக்காரர்கள் அல்ல.

சுருக்கமாக, குழுவை உருவாக்குங்கள், ! குழுவில் இருப்பவர்களை உங்களுடைய நல்ல நண்பர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!


9.ஒன்பதாக, உற்றார் உறைக்கச் சொல்வார்கள் ஊரார் சிரிக்கச் சொல்வார்கள் என்ற சொலவடையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய சோதனையான தருணங்களில், கடுமையாகப் பேசினாலும், சோதனைகளில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் இருக்கும் ஒருவர் அல்லது பலருடைய துணையைக் கைக்கொள்ளுங்கள்.


10.பத்தாவதாக, "அச்சமே கீழ்களது ஆச்சாரம்" என்று சமுதாய வீதி நாவலில் எழுத்தாளர் நா.பார்த்த சாரதி சொல்வது போல, தோல்வியைக் குறித்த பயமே, அடுத்தடுத்த முட்டாள் தனங்களுக்கு அடிகோலுவதாக இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான எண்ணங்கள் எதிர்மறையான விளைவுகளைத் தான் தரும்.நமக்குத் தெரிந்த அளவோடு நிறுத்திக் கொண்டாலோ, சராசரியாக அல்லது அதற்கும் கீழே இருந்து விடுவதில் ஒரு சௌகரியத்தைக் கற்பித்துக் கொள்வதிலோ நின்று விடாமல் எவ்வளவுக்கு எவ்வளவு தோல்விகளை எதிர் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு வெற்றியையும் நம்மால் பெற முடியும்!


ஆமாம்! கொஞ்சம் கூடப் பொய்யில்லை, உண்மையாகவே வெற்றியை நம்மால் பெற முடியும்!


இப்படி, கொஞ்சம் குறிப்பிட்டும், பொதுமைப் படுத்தியும் சில கருத்துக்கள் தன் . இது தன் தோல்விக்கு வழியாக இருக்கும். நான் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்களுடைய அனுபவங்களில் இருந்து நீங்கள் இவற்றில் எவை எவை பொருத்தமாக இருக்கும், அல்லது பொருந்தாது என்றோ, மாற்றுக் கருத்தாக எதை முன்வைக்கிறீர்கள், வைக்கப் போகிறீர்கள்  என்பது தான்!

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்.....?




90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்..?




ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.


தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.


இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன் அவசரமான அவசியம் குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வரும் இவர் சென்னை வந்துள்ளார். பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வரும் நிருபர்களிடம் பேசுகையில்,

நான் உண்மையில் ஐஸ் மேன் தான், எனது பெரும்பாலான நாட்களை மைனஸ் 73 டிகிரி வெப்பநிலையில் கழித்துவிட்டேன். அந்த வெப்பத்தில் நம் கண்களில் உள்ள நீர் பனிக்கட்டியாகிவிடும், பார்வை தெரியாது. பற்களில் பிளவுகள் ஏற்பட்டுவிடும். சென்னையி்ன் இந்த சூடான வெப்பநிலை எனக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.


அண்டார்டிகாவிலும் ஆர்ட்டிக் பகுதிகளில் பனி மலைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். சென்னையில் நீங்கள் ஓட்டும் கார்கள், பைக்குகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைட் துருவப் பனியை உருக்குவதை நீ்ங்கள் உணர வேண்டும்.


இந்த பனி உருகலால் உலகின் கடல் மட்டம் வி்ஞ்ஞானிகள் கூறியதை விட மிக வேகமாகவே உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் 2 மீட்டர் உயர்ந்தால் போதும், அது உலகின் பல்வேறு பகுதிகளை நீரி்ல் மூழ்கடித்துவிடும். இது மிக வேகமாகவே நடக்கப் போகிறது என்ற அபாயத்தை உணர்த்தவே நான் பனிப் பகுதிகளை விட்டுவிட்டு உலக நாடுகளை சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளேன்.


இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.

தனது 33 வயதிலேயே வட துருவத்தையும் தென் துருவத்தையும் முழுக்க முழுக்க நடந்தே கடந்த மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் தனது துருவப் பகுதி ஆராய்ச்சிக்காக டாக்சி ஓட்டியும், குடோன்களில் வேலைபார்த்தும் பணம் சேர்த்துள்ளார்.


கடும் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் கைகொடுக்கவே 1984ம் ஆண்டு சதர்ன் குவெஸ்ட் என்ற கப்பலை வாடகைக்கு எடு்த்துக் கொண்டு 3 மாதம் 15,000 மைல்கள் பயணித்து அண்டார்டிகாவை அடைந்துள்ளார். இவருடன் இரு நண்பர்களும் பயணித்தனர்.

அண்டார்டிகாவில் இந்த மூவரும் 1,400 கி.மீ. தூரம் நடந்துள்ளனர். வயர்லெஸ் உதவியோ, அவசரகால உதவியோ இல்லாமல் இவர்கள் 70 நாட்கள் நடந்துள்ளனர்.


இந்தப் பயணத்தின்போது இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது. இதற்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தபோது அதிர்ந்து போயினராம்.

இவர்களது கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்கக் காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய சூரியக் கதி்ர்கள் என்று தெரியவந்ததாம்.


இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டபோது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.


உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்.


எல்லோரும் வாழ்வோம் !
நன்றாக வாழ்வோம் !!
ஒன்றாக வாழ்வோம் !!!

மொபைலில் உள்ள கோப்புகளை Lock செய்துகொள்ள...!



மொபைல் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் கைபேசியில் பல வகையான கோப்புகளை வைத்திருப்பார்கள் . இப்படி வீடியோ , MP3, புகைப்படங்கள் , ஜாவா மென்பொருள்கள் , ஜாவா கேம்ஸ் இன்னும் பிற கோப்புகளை பயன்படுத்த வாய்ப்புண்டு . இது போன்ற நேரங்களில் அவர்கள் தங்களுகேன்று தனிப்பட்ட கோப்புகளையும் வைத்திருப்பார்கள் .

அதை மற்றவர்கள் பார்க்க கூடாது என நினைபார்கள் .இப்படி பட்ட கைபேசியின் கோப்புகளை பூட்டி வைப்பதற்கேன்று ஒரு ஜாவா மென்பொருள் ஒன்று உள்ளது

 அதை பயன்படுத்தி நீங்கள் அந்த கோப்புகளை பூட்டி வைக்கலாம் கேலரி லாக்கர் என்னும் இந்த மென்பொருளை எந்த வகையான கைபெசிக்கும்(ANY MOBILE DEVICE) பயன்படுத்திக் கொள்ளலாம் .



இவைதான் கூகுளில் தவிர்க்க வேண்டியவை...!



நமது பெர்சனல் கம்ப்யுட்டருக்குள்ளோ அல்லது லேப்டாப்புக்குள்ளோ மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து நம் பெர்சனல் தகவல்களை திருடி அனுப்புவது ஒரு வகை திருட்டு.ஆனால் சர்ச் இன்ஜிங்களில் நாம் தகவல்களை தேடுகையில் பல இஞ்சின்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களை திருடும் வாய்ப்பு உள்ளது.

 இந்தக் கோணத்தில் பிரச்சினையை அணுகுகையில் ஏன் இது நடக்க கூடாது என்ற சந்தேகம் நமக்கு எழும்புகிறது.அதே நேரத்தில் சர்ச் இஞ்சின்கள் நம் கம்ப்யுட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை நிச்சயம் திருடாது என்ற நம்பிக்கையும் கிடைக்கிறது.

ஒவ்வொரு முறை நீங்கள் சர்ச் இன்ஜினைப் பயன்படுத்துகையில் (யாஹூ,கூகுள் போன்றவை) நீங்கள் தேடுதலுக்கு பயன்படுத்தும் அனைத்து சொற்களையும் அவை டேட்டாவாக ஸ்டோர் செய்கின்றன. அதோடு நாம் செல்லும் அனைத்து தளங்களையும் தகவல்களாக பதிவு செய்து கொள்கின்றன.

நாம் எந்த நாளில் எந்த நேரத்தில் இவற்றை தேடுகிறோம் ன்ற தகவல்களையும் எடுத்து கொள்கின்றன.ஏன் ,நம் ஐ.பி. முகவரியை கூட இவை பதிந்து வைத்து கொள்கின்றன. இவைதான் கூகுளில் தவிர்க்க வேண்டியவை...! இவற்றிலிருந்து இந்த சர்ச் இஞ்சின்கள் நாம் எத்தகைய மனப்பாங்கு உள்ளவர்கள் ,இணையத்தை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம்.

நம் விருப்பங்கள் ,வெறுப்புகள் ஆகியவற்றை கணக்கிட்டு கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இது நம் பெர்சனல் வாழ்க்கையில் ஒருவர் தலையிடுவதை போல தான். ஆனால் வேறு வழியில்லையே என்று நாம் அலுத்து கொள்ள வேண்டியுள்ளது.

இருப்பினும் இதிலிருந்து தப்பிக்கும் வலிகள் சிலவற்றை இங்கு காண்போம்.

சர்ச் இன்ஜினில் நுழைந்தாலும் அதில் லாக் இன் செய்திட வேண்டாம்.அவ்வாறு உங்கள் அடையாளத்தை கொண்டு உள்ளே நுழைந்தாள் உடனே உங்களைப் பற்றிய குறிப்புகள் அங்கெ செல்கின்றன.

இதனை எப்படி தவிர்க்கலாம்?

எடுத்துகாட்டாக நீங்கள் கூகுள் சர்ச் இன்ஜினை வேறு எந்த தொடர்பும் இன்றிப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல்கள் எதுவும் செல்லாது.ஆனால் அதன் கூகுள் டாக் ,ஜிமெயில் ,கூகுள் குரூப் ப்ன்றவற்றைப் பயன்படுத்தினால் நம்மைப் பற்றிய தகவல்களை நாம் அதனிடம் கொடுத்துதான் ஆக வேண்டும்.

எனவே சர்ச் இன்ஜினில் தேடும் முன் இத்தகைய வசதி தரும் அனைத்து புரோகிரம்களிலிருந்து லாக் அவுட் செய்து விடுபட்டு வெளியே வரவும்.இதனை அணைத்து சர்ச் இன்ஜிங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.

கூகிளை விட்டுய் வலகி செல்லுங்கள் நம்மில் பலர் கூகுள் சர்ச் இன்ஜினைதான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.

ஆனால் இதில் ஆபத்து உள்ளது என்று பலருக்கு தேரியாது. கூகுள் சற்று வித்தியாசமாகத்தான் தன் அனைத்து செயல்பாடுகளையும் கொண்டுள்ளது.

நம் தேடுதல் வேலையின் போது குக்கிகளைப் பயன்படுத்தி நம்மை அறிந்து கொள்கிறது. குக்கிகளை அளித்து விட்டால் இந்த பிரச்னை சரியாகிவிடும் என்று எண்ணுகிறோம்.

அனைத்து குக்கிகளையும் அழிப்பது நமக்கு சில வசதிகள் கிடைக்காமல் செய்துவிடும்.எனவே கூகுள் ஏற்படுத்தும் குக்கிகளை மட்டும் நீக்கி விடலாம் அல்லது தடுத்து விடலாம்.

உங்கள் பாஸ்வேர்டை ஞாபகப்படுத்தும் டெக்னாலஜி...!



வேகமாக வளர்ந்து வரும் உலகில் மின்னஞ்சலை(இ-மெயில்) பயன்படுத்தாக நபர்கள் யாரும் இல்லை எனலாம்.

ஒவ்வொரு நபரும் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். எனவே ஒவ்வொரு கணக்கிருக்கும் வெவ்வேறான பாஸ்வேர்ட் கொடுத்து இருப்பதால் அதை அனைத்தையும் ஞாபகம் வைத்து கொள்வது என்பது இயலாத காரியம்.

இச்சூழ்நிலையில் உங்களது பாஸ்வேர்ட்டை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய மென்பொருள்(சாப்ட்வேர்) உதவி புரிகிறது.

இந்த சாப்ட்வேர்ரில் உங்களின் அனைத்து பாஸ்வேர்ட் ஐயும் சேமித்து அனைத்திற்கும் சேர்த்து ஒரே ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து கொள்ளலாம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொண்டால் போதும்.

 எந்தவொரு நபரும் உங்களது பாஸ்வேர்ட்டை திருடாத படி கடினமான பாஸ்வேர்ட் இந்த மென்பொருள் மூலம் உருவாக்கலாம்.

 உங்கள் பாஸ்வேர்டை ஞாபகப்படுத்தணுமா?

 குறிப்பிட்ட ஒரு கோப்பை ஒட்டுமொத்த பாஸ்வேர்ட் ஆக தெரிவு செய்யும் வசதி.

மின்னஞ்சல், இயங்குதளம் மற்றும் இணையம் என அனைத்திற்கும் தனித்தனியான பாஸ்வேர்ட்டை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி.

போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் கணணியில் நிறுவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை மற்றும் ஏராளமான வசதிகள் உள்ளது.

இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்தால் வரும் ZIP கோப்பை Extract செய்து Key pass என்ற கோப்பை ஓபன் செய்யுங்கள்.

அதன் பின் தோன்றும் விண்டோவில் அதில் உள்ள New என்ற பட்டனை அழுத்தவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களின் Master pass word தெரிவு செய்து கொள்ளுங்கள் அதன்பின் தோன்றும் விண்டோவில் உங்களின் pass word வகையை தெரிவு செய்து கொண்டு Add Entry என்ற பட்டனை அழுத்தி உங்கள் pass word சேமித்து கொள்ளலாம்.

இதே முறையில் உங்களையுடைய அனைத்து பாஸ்வேர்ட்களையும் இந்த மென்பொருளில் சேமித்து கொள்ளுங்கள். மேலும் இந்த மென்பொருள் மூலம் மிக கடினமான பாஸ்வேர்ட் களை உருவாக்கலாம். இதற்கு Tools - pass word generate சென்று கடினமான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ளலாம்.

இதன் மூலம் உருவாகும் பாஸ்வேர்ட் தானாகவே இந்த மென்பொருளில் சேமிக்கப்படும்.

சின்னம்மையைத் தடுக்கும் - வேப்பிலை ரெசிபி..!



கோடைகாலம் ஆரம்பமாகப் போகிறது. இக்காலத்தில் சின்னம்மை அதிகம் வரும் அபாயம் உள்ளதால், அதனை வராமல் தடுக்க முயற்சிக்க வேண்டும்.

 அதிலும் சிலருக்கு சிறுவயதில் இருந்நே வரும்.

அப்படிப்பட்டவர்கள், அதனை வராமல் தடுக்க முயல வேண்டும்.

இங்கு அந்த சின்னம்மையைத் தடுக்கும் ஒரு வேப்பிலை ரெசிபியைக் கொடுத்துள்ளோம்.

அந்த ரெசிபியை படித்து, அதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, சின்னம்மை வருவதைத் தடுக்கலாம்.

சரி, இப்போது சின்னம்மையைத் தடுக்கும் வேப்பிலை ரெசிபியைப் பார்ப்போமா!

 தேவையான பொருட்கள்:

 வேப்பங்கொழுந்து - 1 கட்டு

 உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)

 உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

 முதலில் வேப்பங்கொழுந்தை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வேப்பங்கொழுந்தை போட்டு வதக்க வேண்டும்.

பின்பு அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.

பின் அதனை இறக்கி, அந்த கலவையை மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கில் சேர்த்து, கையால் பிசைந்தால், சின்னம்மையை தடுக்கும் வேப்பிலை ரெசிபி ரெடி!
 
நண்பேன்டா