Monday 3 February 2014

வாழைப்பழத்தின் வகைகளும், நன்மைகளும்..!



வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது என்பது பொதுவான கருத்தாகும். அது மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும் இது சரி என்று நிரூபணமாகி இருக்கிறது.

வாழைப்பழத்தில் கார்போஹைடிரேட், விட்டமின், கால்சியம், தாது சத்துக்கள் அடங்கி இருப்பதுடன், எளிதில் ஜீரணமாகும், கொழுப்பை குறைக்கும் சக்தியும் அதிகம் உள்ளதாம். இந்த சக்தி நன்றாக வேலை செய்யும்போது, உடல் எடையும் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவுடன், அல்லது இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது. வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அனைத்து வகைகளும் உடலுக்கு பலனை அளிக்கக்கூடியவையே. இப்போது வாழைப்பழத்தின் வகைகளும், அவற்றின் நன்மைகளையும் பார்க்கலாம்..

மலை வாழைப்பழம்- மலச்சிக்கலைத் தீர்க்கும்

செவ்வாழைப் பழம்- உயிரணுக்களைப் பெருக்கும்

மஞ்சள் வாழைப்பழம்- குடல் புண்களை ஆற்றும்

பேயன் வாழைப்பழம்- அம்மை நோயால் குடலில்

ரஸ்தாலி வாழைப்பழம்- நாவுக்கு சுவை தரும்

மொந்தன் பழம்- உடலின் வறட்சியைப் போக்கும்

பச்சை வாழைப்பழம்- உடலுக்குக் குளிர்ச்சி தரும்

நேந்திரம் வாழைப்பழம்- சேரும் நஞ்சை முறிக்கும். தோலுக்கு மினுமினுப்பைத் தரும்.

பெண்களுக்கு உதவும் ‘i-Safe’ அப்ளிக்கேஷன் – சென்னை மாணவனின் கண்டுபிடிப்பு..!



ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் ‘i-Safe’ என்று அழைக்கப்படும் ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி அசத்தியுள்ளார் சென்னையைச் சேர்ந்த 14 வயதான சிறுவன்.இந்த அப்ளிக்கேஷனில் எஸ்ஒஎஸ் மோட் செயல்படுத்தும் போது பலமுறை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொபைலில் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் அனைத்து எண்களுக்கும் இடத்தின் விவரங்களை கொடுத்து எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்களை அனுப்புகிறது.

மேலும் உள்ளூர் சமூகத்தில் ஆபத்தில் இருக்கும் நபர் போலீசுக்காக காத்திருக்காமல் அருகில் இருக்கும் மக்களுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும், ஒரு புதிய செயல்பாட்டை சேர்க்கும் பணிகளை அவர் இப்போது செய்து வருகின்றார்.

இளம் வயதான எஸ் அர்ஜுன், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆவர். கடந்த ஆண்டு மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அப்ளிக்கேஷன் போட்டியில் இவர் உருவாக்கிய Ez ஸ்கூல் பஸ் லொக்கேட்டர் என்ற அப்ளிக்கேஷன் முதல் இடத்தில் வெற்றி பெற்றது. ஆண்ட்ராய்டு போன்களில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளி பேருந்தின் இடத்தை கண்காணிக்கவும் மற்றும் வாகனம் இலக்கை அடைவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பற்றி கணக்கிட உதவுகிறது.

அதேபோல், அடிப்படை போன்களிலும் இந்த அப்ளிக்கேஷனை எஸ்எம்எஸ் மூலமாகவும் பயன்படுத்த முடியும். முன்னதாக, எம்ஐடியில் ஏற்பாடு செய்திருந்த அப்ளிக்கேஷன் இன்வென்டர் பக் ஃப்பைன்டிங் போட்டியில் அர்ஜுன் வெற்றி பெற்றுள்ளார்.

அவருடைய பெரிய கனவு ‘Lateralogics என்று அழைக்கப்படும் சொந்த நிறுவனத்தை உருவாக்க வேண்டும், இதில் கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற ஏதாவது செய்ய வேண்டும்’ என்று, அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

புரோகிராமிங் லேங்குவேஜ்-ஐ கற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் மூன்று முதல் நான்கு மணி நேரம் செலவிடுகிறார் என்று அர்ஜுன் தந்தை, சந்தோஷ் குமார் கூறியுள்ளனர். மேலும், அவருடைய பள்ளியில் மிகவும் பிரபலமாக உள்ளார் என்றும், அவரது ஆர்வம் மற்றும் பொழுதுபோக்குகள் ரோபாட்டிக்ஸ், செஸ் மற்றும் பேட்மின்டன் உள்ளிட்டவை என்றும் அர்ஜுன் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

190 ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்ட் விஸ்கி பாட்டில் ரூ.4 கோடிக்கு ஏலம்..!



பழமை வாய்ந்த விஸ்கி பாட்டில் ஒன்று ரூ.4 கோடிக்கு ஏலம் போனது.இதை ஆசிய நாட்டை சேர்ந்த ஒரு தனி நபர் ஏலம் எடுத்தார்.அது தவிர அவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் சுமார் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த மால்ட் விஸ்கி பாட்டில் ஏலத்துக்கு வந்தது. இது 6 லிட்டர் கொள்ளளவு கொண்டது.இது ‘தி மக்காலன்’ என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இதை ஏலம் எடுக்க கடுமையான போட்டி நிலவியது.

இறுதியில் அந்த பாட்டில் சுமார் ரூ.4 கோடிக்கு (6,28,205 டாலர்) ஏலம் போனது. இதை ஆசிய நாட்டை சேர்ந்த ஒரு தனிநபர் ஏலம் எடுத்தார்.அது தவிர அவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர் என்பன போன்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்பு ஒரு மால்ட் விஸ்கி பாட்டில் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது.அதை நியூயார்க்கை சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்திருந்தார். அதுவே மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது. ஆனால் தற்போது இப்பாட்டில் ரூ.4 கோடிக்கு ஏலம் போனதை தொடர்ந்து முந்தைய சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காரட் ...!



பொன்நகை அணிபவர்களின் உடல் அந்த நகையோடு சேர்ந்து பளபளப்பாக மின்னுவதைப்போல தினம் ஒரு காரட் உண்பவர்களின் உடலும் தகதக வென மின்னும். இதனாலேயே தாவரத் தங்கம் என்ற அடைமொழியோடு காரட் அழைக்கப்படுகிறது.

காரட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்

 கண்ணுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படும் காரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது.

புற்று நோய் செல்களை அழிக்கும்

 நாம் உண்ணும் உணவில் வேறு எந்த காய் கனிக்கும் இல்லாத சிறப்பு காரட்டிற்கு மட்டுமே உள்ளது. இதில் உள்ள கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகிறது. காரட்டில் பீட்டா கரோட்டின் என்கின்ற சத்து நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கள்தான் புற்று நோய்க்கு எதிரியாக இருந்து செயல்படுகின்றது.

கண்பார்வை குறைபாட்டினை போக்கும்

 வைட்டமின் ஏ சத்து குறைபாட்டினால் ஏற்படும் மாலைக்கண் நோய் உள்ளவர்கள் தினமும் காரட்டினை சாப்பிட்டால் அவர்களுக்கு மாலைக்கண்நோய் எளிதில் குணமடைவதாக கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் சக்தி காரட்டிற்கு உள்ளதால் இதயம் தொடர்புடைய நோய்களை அண்டவே விடாது.

வாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் காரட்டினை பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் உள்ள நார்ச் சத்து மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை தருகின்றது.

பக்கவாதத்தை அண்டவிடாது

 காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். தினமும் காரட்டினை உண்பவர்களை ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோய் எட்டிப்பார்ப்பதில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மூளையை சுறு சுறுப்பாக வைக்க உதவுகிறது.

பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கரைகள் போய்விடும். தாங்க முடியாத பசியையும் ஒரே ஒரு காரட் போக்கிவிடும்.

அல்சரை குணப்படுத்தும் 

பீட்டா கரோட்டின் என்ற சத்து வயிறு தொடர்பான அனைத்த நோய்களையும் குணப்படுத்துகின்ற சக்தி கொண்டது.

 அல்சர் நோய் உள்ளவர்கள், வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் காரட் ஜூஸ் சாப்பிட்டால் வயிறு மற்றும் குடல் தொடர்புடைய நோய்கள் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் எட்டிப்பார்க்காமல் செய்துவிடும்.

வயிற்றுக் கோளாறு காரணமாக ஒரு சிலருக்கு வாயில் துர்நாற்றம் ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு காரட் சிறந்த மருந்தாகும். வாரத்திற்கு 5 நாட்கள் காரட்டை நன்கு அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் எதுவும் கலக்காமல் பருகி வர வாய் நாற்றம் ஓடியே போய் விடும்.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சக்தி கரோட்டினாய்டுகளுக்கு உண்டு. எனவே நீரிழிவு நோயளிகள் காரட்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இன்சுலின் சுரப்பு சீரடையும்.

புகைப்பழக்கத்தை விட வேண்டுமா..?



புற்றுநோயை உண்டாக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விளையாட்டாக தொடங்கி அதை விடமுடியாமல் பலரும் சிரமப்படுகின்றனர்.

தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள். சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள்.

மிகவும் முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ்மிஸ்) பழம், புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து. ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.

மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது.

இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி..

சின்னச் சின்ன தழும்புகள் மறைய வேண்டுமா..?



மைக்கும்போது கையில் காயங்கள் ஏற்பட்டால் கொப்புளங்கள் வரும். இந்தக் கொப்புளங்கள் தோலைப் பாதுகாக்கும் தன்மை கொண்டவை. ஆனால்,  சிலர் இவற்றை உடைத்து விடுவதால் கிருமித்தொற்று ஏற்பட்டு  அப்படியே தழும்பாக மாறிவிடும்.

கொப்புளங்களை அப்படியே விட்டுவிட்டாலே  போதும்... தழும்புகளாக மாறாது.

தீக்காயம், வெந்நீர் கொட்டினால் உடனே குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பேனா மை, காஃபித்தூள் போன்றவற்றை காயங்களின் மீது கொட்டுவது  ஆபத்து.

குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு, மருத்துவர் ஆலோசனையுடன் sவீறீஸ்மீக்ஷீமீஜ் என்ற க்ரீம் தடவினாலே 99 சதவிகிதக் காயம் ஆறிவிடும்.  ஒருவேளை பெரிய அளவில் தீக்காயம் ஏற்பட்டிருந்தால் அதற்கு ஙிமீtஸீஷீஸ்ணீt க்ரீமை மருத்துவர் ஆலோசனையுடன் தினமும் தடவி வந்தால் தழும்புகள் மறையும்.        

காது வலி இரவில் ஏற்பட்டால் - செய்ய வேண்டியவை...




காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி  பிடிப்பதால் வரும்.

  மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம்.

அப்படி  காதுவலி வந்தால் உடனே காதுக்குள்  எதையாவது போட்டு நுழைக்க கூடாது.

இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது.

மேலும் இந்த காதுவலி இரவிலேயே வருவதால் என்ன  செய்வதென்று  தெரியாமல் விழிக்கும் நேரத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வீட்டு மருத்துவம் நமக்கு கைக்கொடுக்கும்.

காது  வலி வந்தால் தேங்காய்  எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில் காதில் விட்டால் காதில் இருக்கும்  புண் ஆறி வலி குறையும்.

தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரைக்குடித்தால் காது வலி குறையும்.

தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி  சாறு பிழிந்து  அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும்.

 கொஞ்சம் நல் லெண்ணெயில் ஒரு கிராம்பை  போட்டு சூடு செய்து பின் அந்த எணணெயை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி கு றையும்.

சுக்கு, மிளகு, பெருங்காயம் ஆகியவைகளை அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து  குளித்து  வந்தால் காது இரைச்சலும் அகலும்.

 கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமது ரப்பொடி சேர்த்து தைலம் செய்து  தலைக்கு தேய்த்து குளித்து வர காது நோய் குணமாகும்.

கர்ப்ப சோதனைக் கருவியைப்எப்போது பயன்படுத்துவது...?




ஒவ்வொரு திருமணமான பெண்ணுக்கும் வாழ்க்கையின் புதிய கட்டமான கர்ப்பமாகும் தருணத்தில் ஆச்சரியமான பல விஷயங்களை உணர்வதோடு, மன அழுத்தத்துடனும் இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு பெண்ணுக்குமே கருத்தரிப்பது என்பது வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அப்படி கருத்தரிக்கக்கூடிய தருணத்தில், கருத்தரித்து விட்டோமா என்பதை அக்காலத்தில் மருத்துவரிடம் சென்று தான் சோதித்து உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.

 அவசியம் படிக்க வேண்யவை: 

கர்ப்ப சோதனைக் கருவியைப் பற்றிய சில தகவல்கள்!!! 

 ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தாங்கள் கர்ப்பமாக உள்ளோமா என்பதை கர்ப்ப சோதனைக் கருவியைக் கொண்டு வீட்டிலேயே உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.

மாதவிடாய் தவறுதல்

 கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளில் முதன்மையானது தான் மாதவிடாய் தவறுவது. அப்படி திடீரென்று மாதவிடாய் சுழற்சியானது தவறினால், கர்ப்ப சோதனைக் கருவியை பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்று அறிந்து கொள்ளலாம்.

வாந்தி மற்றும் குமட்டல்

 காலை வேளையில் அதிகப்படியான சோர்வையோ அல்லது வாந்தி, குமட்டல் போன்றவற்றையோ சந்தித்தால், அதுவும் கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தவும் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

மென்மையான மார்பகங்கள்

 கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தும் போது சரியான முடிவு தெரிய வேண்டுமானால், மார்பகங்கள் திடீரென்று மிகவும் மென்மையாக இளகி காணப்படும் போது மேற்கொள்ள வேண்டும்.

லேசான இரத்தக்கசிவு மற்றும் பிடிப்புகள்

 இந்த முறை சற்று கடினமானதாக இருந்தாலும், ஓவுலேசன் காலம் முடிந்து 6-12 நாட்களுக்குள் இத்தகையவற்றை உணர்ந்தால், அப்போது கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தலாம் என்று அர்த்தம்.

உணவின் மீது நாட்டம்

 கர்ப்பமாகும் போது ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும் போது ஒருசில உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். அப்படி ஏற்பட்டால், உடனே தவறாமல் கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்தவும்.

ஆரம்பத்தில் வேண்டாம்

 முக்கியமாக மாதவிடாய் தவறிய ஆரம்ப கட்டத்திலேயே கர்ப்ப சோதனை கருவியைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அப்போது சிறுநீரில் உள்ள HCG-யின் அளவு குறைவாக இருக்கும்.

இதனால் தவறான முடிவுகள் தான் தெரியும். எனவே மாதவிடாய் தவறிய 1-2 வாரத்திற்கு பின், கர்ப்ப சோதனைக் கருவியைப் பயன்படுத்திப் பார்க்கவும். ஏனென்றால் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரில் உள்ள HCG-யின் அளவு அதிகரிக்கும். இதனால் சரியான முடிவு கிடைக்கும்.

சுருட்டை முடியை அழகாக பராமரிக்க சில டிப்ஸ்...




எப்போதுமே ஃபேஷனாக இருக்கும் ஒரே ஹேர் ஸ்டைல் தான் சுருட்டை முடி. இத்தகைய சுருட்டை முடியானது சிலருக்கு பிறக்கும் போதே இருக்கும். அப்படி இயற்கையாக சுருட்டை முடி உள்ளவர்களுக்கு தான், அந்த சுருட்டையை முடியினால் ஏற்படும் தொல்லைகள் தெரியும்.

அதுமட்டுமல்லாமல், சுருட்டை முடி உள்ளவர்கள், தங்களது முடியை வெறுப்பதுடன், அதனை நேராக்க அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் அப்படி தான் செய்யக்கூடாது. ஏனெனில் எப்போதுமே சுருட்டை முடி தான் சிறந்தது.

எப்படியென்றால், சுருட்டை முடி இருந்தால், முடி குறைவாக இருந்தாலும், அதிகமாக இருப்பது போன்று வெளிப்படும்.

 இதுப்போன்று வேறு சில:

 நல்ல ஆரோக்கியமான தலைமுடி வேண்டுமா?

 அப்ப முட்டை யூஸ் பண்ணுங்க... எனவே அத்தகைய சுருட்டை முடியை வேண்டாம் என்று நினைக்காமல், அதனை எப்படி முறையாக பராமரித்தால் அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து, அதன் படி பராமரித்து சுருட்டை முடியுடன் அழகாக காணுங்கள்.

இங்கு சுருட்டை முடி உள்ளவர்களுக்காக ஒருசில கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தவறாமல் செய்து, சுருட்டை முடியை ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் வைத்துக் கொள்ளுங்கள்.

ஹேர் பேக்

 சுருட்டை முடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிக்க வேண்டுமானால், ஹேர் பேக்குகளை போட வேண்டும். அதிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு ஹேர் பேக் போட வேண்டும். குறிப்பாக மயோனைஸ், முட்டை, பால், தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தி செய்யக்கூடிய ஹேர் பேக்குகளை வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.

ஷாம்பு

 சுருட்டை முடி உள்ளவர்கள், கூந்தலுக்கு அதிகமாக கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்த கூடாது. இதனால் கூந்தல் இன்னும் அதிகப்படியாக வறட்சி அடைவதோடு, கூந்தலின் பொலிவும், தரமும் போய்விடும். எனவே சீகைக்காய் போட்டு வாரம் இருமுறை தலைக்கு குளித்து வந்தால், சுருட்டை முடி ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும்.

கண்டிஷனிங் 

சுருட்டை முடியை பராமரிப்பதில் கண்டிஷனிங் செய்வது இன்றியமையாதது. அதற்காக கடைகளில் விற்கப்படும் கண்டிஷனர்களை பயன்படுத்தாமல், இயற்கை கண்டிஷனர்களான முட்டை, ஆப்பிள் சீடர் வினிகர், டீ போன்றவற்றைப் பயன்படுத்தி கண்டிஷனிங் செய்ய வேண்டும்.

சீவவும்

 சுருட்டை முடி உள்ளவர்கள் முடியை சீவும் போது சரியான சீப்புகளை பயன்படுத்த வேண்டும். அதிலும் பெரிய பற்களை கொண்ட சீப்புக்களை பயன்படுத்துவது தான் மிகவும் சிறந்தது.

 ஏனெனில் சிறிய பற்களை கொண்ட சீப்புக்கள் சுருட்டை முடியில் சிக்கி பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே மேற்கூறியவாறெல்லாம் தவறாமல் செய்து வந்தால், சுருட்டை முடி ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், பட்டுப் போன்றும் இருக்கும். அதுமட்டுமின்றி, சுருட்டை முடியின் அடர்த்தியும் அதிகரிக்கும்.

விடுமுறையில் சென்ற ஆண் பொலிஸ் அதிகாரி பெண்ணாக உருமாறி வந்தார்..!



33 வயதான, கொஸ்டா டெய்ஷேரியா எனும் இந்த பொலிஸ் அதிகாரி திருமணம் செய்தவர். அவருக்கு இரு மகன்களும் உள்ளனர்.

பிரேஸிலின் கொயானா எனும் நகரில் பொலிஸ் திணைக்களமொன்றின் தலைமை அதிகாரியாகவும் அவர் இருந்தார். மூன்று மாதம் விடுமுறை பெற்றுக்கொண்டு தாய்லாந்துக்குச் சென்ற அவர், திரும்பி வரும்போது பெண்ணாக வந்தார்.

பெண்ணைப் போன்ற தோற்றத்தைப் பெறுவதற்காக அவர் தனது உடலிலும் முகத்திலும் பிளாஸ்திக் சத்திரசிகிச்சைகளை செய்துகொண்டார். அடுத்த மாதம் இவர் மீண்டும் பொலிஸ் பணியில் ஈடுபடவுள்ளாராம்.

 தனது சகாக்கள் தன்னைப்பற்றி என்ன கூறுவார்களோ என ஆரம்பத்தில் தான் கவலை கொண்டதாகவும் ஆனால் இதுவரை தான் சந்தித்த பழைய சாகாக்கள் அனைவரும் எதுவும் நடைபெறாததைப் போல் வழமைபோன்றே தன்னுடன் உரையாடியதாகவும் கொஸ்டா கூறியுள்ளார்

ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு..!



வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் Research Officer, Assistant Manager, Manager (Technical / Civil), Grade -B .பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Reserve-Bank-of-India-
காலியிடங்கள்: 24

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:


01. Research Officer in Grade ‘B’ for Department of Economic and Policy Research (DEPR) – 10

சம்பளம்: மாதம் ரூ.21,000

வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 – 30க்குள் இருக்க வேண்டும்.


02. Research Officer in Grade ‘B’ for Department of Statistics and Information Management (DSIM) – 05

சம்பளம்: மாதம் ரூ.21,000

வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 – 30க்குள் இருக்க வேண்டும்.


03. Assistant Manager (Rajbhasha) in Grade ‘A’ – 07

சம்பளம்: ரூ.17,100

வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 – 30க்குள் இருக்க வேண்டும்.


04. Manager (Technical – Civil) in Grade ‘B’ – 02

சம்பளம்: மாதம் ரூ.21,000

வயதுவரம்பு: 01.01.2014 தேதியின்படி 21 – 35க்குள் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி: Research Officer & Assistant Manager பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Manager பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் அல்லது அதற்கு சம்மந்தமான துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தே்ர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 3 தாள்களைக் கொண்டது.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. SC/ST/PWD/RBI Staff போன்றவர்கள்

கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2014

வங்கியின் கிளைகளில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.02.2014

மேலும் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

உங்கள் டூத் பிரஷ்- கிருமிகளின் கூடாரம் என்பது தெரியுமா..!



வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம்.அதே சமயம்  வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம்.

மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன. வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடங்கும்.

உங்கள் டூத் பிரஷில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருப்பது என்ன தெரியுமா?

ஏராளமான கிருமிகளின் பண்ணையே அதற்குள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மூடி வைக்கப்படாத ஒரு டூத்பிரஷில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன.

 வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், தோல் தொற்று நோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் இதில் அடக்கம்.

வாய் நிறைய பாக்டீரியா . . .

ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் நம் வாயில் உற்பத்தியாகி, வாடகை கொடுக்காமல் வசிக்கின்றன.

 இது ஒரு பெரிய விஷயமில்லை. பிரச்சனை எப்பொழுது தொடங்குகிறது என்றால், இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை வழக்கத்துதிற்கு மாறாக அதிகரிக்கும் போது தான்.

பல்லைத் துலக்கும் போது நீங்கள் அகற்றுகிறீர்களே மஞ்சள் படிவுகள், அவை எல்லாமே பாக்டீரியாக்கள் தான்.

 அவை உங்கள் வாய் என்ற வாடகை வீட்டிலிருந்து டூத் பிரஷ் என்ற அவுட் ஹவுஸுக்கு இடம் மாறுகின்றன.

பல் துலக்குவதால் எப்படி காயம் ஏற்படுத்துகிறது?

டூத் பிரஷ் மேலும் கீழும் இயங்கும் போது ஈறுகளைப் பின்னுக்கு அழுத்துவதால் காயம் ஏற்படுகிறது.

 இப்பொழுது டூத் பிரஷில் உள்ள கிருமிகள் மீண்டும் உங்கள் வாய்க்கு இடம் மாறுகிறது. உங்கள் வாய் பழக்கப்பட்ட இடம் தான் என்பதால், அவை பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் டூத் பிரஷை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவ்வளவு தான். கிருமிகள் ஜம்மென்று புது இடத்துக்குக் குடி போய்விடும். மேலும் குணமாகிவிட்ட வியாதிகள் கூட சந்தோஷமாகத் திரும்பி வந்துவிடும்.

டூத் பிரஷால் நீங்கள் நோயாளி ஆக வாய்ப்பிருக்கிறதா?

அநேகமாக இல்லை. என்ன தான் உங்கள் வாய் ஒரு கிருமிப் பண்ணையாக இருந்தாலும், உங்கள் வாய்க்கும் டூத் பிரஷுக்கும் இடையே கிருமிகள் தினசரி போக்குவரத்து நடத்தினாலும், உங்கள் உடலில் உள்ள இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எப்போதும் செயல்பாட்டில் இருப்பதால், பல் துலக்குவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு.

கழிவறை இருக்குமிடத்தில் பல்துலக்காதீர்கள் . .

பெரும்பாலான குளியலறைகள் மிகச் சிறியவை. நிறைய வீடுகளில், கழிப்பிடமும், குளியலறையும் ஒன்றாகவோ அல்லது மிக அருகிலோ இருக்கும்.

ஒவ்வொரு முறையும் கழிப்பறையைப் பயன்படுத்தும் போது, அதன் மூலம் காற்றில் ஏராளமான பாக்டீரியாக்கள் சுற்றுலா செல்கின்றன.

அதனால் டூத் பிரஷ்கள் அருகில் இருக்கும் போது, அவற்றின் மேல் ஏற்கெனவே பாக்டீரியா நண்பர்கள் இருப்பதால், அங்கேயே தங்கிவிடுகின்றன.

 அதனால் டூத் பிரஷ்களை உங்கள் கழிப்பறையிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் தள்ளி வையுங்கள்.

டூத் பிரஷ் ஸ்டாண்டுகள் மற்றும் ஹோல்டர்கள் பலரின் வாய்க்கிருமிகளும், கழிப்பறையிலிருந்து காற்றில் கலந்து வரும் கிருமிகளும் ஒன்றாய்ச் சங்கமிக்கும் இடமாக இது இருக்கிறது. வீட்டிலேயே மூன்றாவது அசுத்தமான இடம் இதற்குத் தான்.

டூத் பிரஷ் வைக்கும் குறிப்புகள் . . .

* ஒவ்வொரு முறை பல் துலக்கியதும் குழாய்த் தண்ணீரில் நன்கு அலசிக் கழுவி உதறி வையுங்கள்.

* ஒரு முறை பிரஷ் செய்துவிட்டு, அடுத்த முறை பிரஷ் செய்வதற்கு இடைப்பட்ட நேரத்தில் அது நன்கு உலர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் ஈரப்பதமான டூத் பிரஷ், பாக்டீரியாக்களுக்கு ஜாலியான தங்குமிடம் ஆகும்.

* தலைப்பாகம் மேலே வரும்படி நிறுத்தி வையுங்கள். டூத் பிரஷ்களை தனித்தனியாக நிறுத்தி வைக்கும் ஸ்டாண்டுகளை உபயோகியுங்கள்.

* உங்கள் டூத் பிரஷ் உங்களுடையது மட்டுமே. உங்கள் சகோதரி, சகோதரன், கணவன், மனைவி, ரூம் மேட் ஆகியோரிடம் நீங்கள் எவ்வளவு அன்புடையவராக இருந்தாலும் சரி, டூத் பிரஷ் ஒரு பகிர்ந்து கொள்ளும் விஷயம் இல்லை. இல்லை. இல்லை. ]

* ஒரே கப்பில் ஃப்ளவர் வாஷ் போல மொத்தமாக டூத் பிரஷ்களைப் போட்டு வைக்காதீர்கள். டூத் பிரஷ்கள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொள்ளும் போது, அவை தங்கள் வசமுள்ள பாக்டீரியாக்களைப் பெருந்தன்மையோடு பரிமாறிக் கொள்கின்றன.

எப்பொழுது உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்?

ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் டூத் பிரஷை மாற்றி விட வேண்டும். உங்கள் டூத் பிரஷ் தேய ஆரம்பிப்பது, நீங்கள் நோயுற்றிருப்பதற்கோ அல்லது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்திருப்பதற்கோ அது அறிகுறி.

அப்பொழுது நீங்கள் அடிக்கடி உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும்.

வாயை நல்ல படியாகப் பராமரியுங்கள் . . .

ஈறு சம்பந்தமான நோய்கள், பற்சிதைவு, பல் சொத்தை மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவை ஏற்படக் காரணம் பாக்டீரியாக்களே.

 எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைகள் பல் துலக்குவதும், ஃப்ளாஸ், வாயில் எண்ணெய் கொப்பளிப்பதும் பெரும்பாலான பாக்டீரியாக்களை வெளியேற்றிவிடும்.

பல் துலக்கும் முன்பாக பாக்டீரியாவை எதிர்க்கக் கூடிய மௌத் வாஷ் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதன் மூலம், வாயிலிருந்து பாக்டீரியா டூத் பிரஷுக்கு டிரான்ஸ்பர் ஆவதைத் தடுக்கலாம்.

93 வயதில் கின்னஸ் சாதனை படைத்த யோகா ஆசிரியை..!



கைத்தடியுடன் தட்டுத்தடுமாறி, தள்ளாடி நடக்கும் வயதில் கூட, இளம்பெண்ணைப் போன்ற உற்சாகத்துடன் ‘யோகாசன’ கருத்தரங்கங்களில் பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்தும் 93 வயது அமெரிக்கப் பெண், ‘செயல்பாட்டுடன் இருக்கும் உலகின் வயது முதிர்ந்த யோகா ஆசிரியர்’ என்ற சிறப்புத் தகுதியுடன் உலக சாதனைகளை பதிவு செய்யும் ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த 'பிரெஞ்சு சேரி' என்று முன்னர் அழைக்கப்பட்டு, தற்போது புதுச்சேரியாக மாறிபோன புதுவையின் கடலோர கிராமம் ஒன்றில் பிறந்த டாவோ பொர்ச்சான் லின்ச், சிறுமியாக இருக்கும் போதே புதுச்சேரி கடற்கரை ஓரங்களில் அணி, அணியாக பலர் யோகாசன கலைக்கான பயிற்சியில் ஈடுபடுவதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தார்.

இதனால், இளமைக் காலத்தில் இருந்தே அவருக்கு யோகா கலையின் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பின் விளைவாக யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து, அக்கலையினை முழுமையாக கற்று தேர்ந்த டாவோ பொர்ச்சான் லின்ச், பின்னாளில் அமெரிக்கா சென்று குடியேறினார்.

மேலைநாட்டு ‘பால்ரூம்’ நடனக்கலையை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்த இவர், பல்வேறு நடனப் போட்டிகளில் பங்கேற்று, ஐரோப்பிய கண்டத்தின் அழகிய (நடன) கால்களுக்கு சொந்தமானவர் என்ற சிறப்பு பட்டம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளையும், பாராட்டுக்களையும் நடன துறையில் இவர் அள்ளிக் குவித்துள்ளார்.

எனினும், மேலைநாட்டு மோகத்தில் முற்றிலுமாக மூழ்கி விடாமல், இந்தியாவின் பழம்பாரம்பரிய கலைகளில் ஒன்றான யோகாசானத்தை பயிற்றுவிப்பதற்காக நியூயார்க் நகரில் 'வெஸ்ட்செஸ்டர் யோகாசன பயிற்சி மையம்' என்ற பள்ளியை தொடங்கினார்.

கடந்த 70 ஆண்டு காலமாக இடைவிடாது யோகா பயிற்சி மேற்கொண்டு வரும் இவர், தற்போது தனது 93-வது வயதிலும் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, யோகாசனம் தொடர்பான கருத்தரங்கங்களில் துடிப்புடன் பங்கேற்கிறார்.

யோகாசன கலையைப் பற்றிய நுணுக்கங்களை தனது சொற்பொழிவு மற்றும் செய்முறை விளக்கங்களின் வாயிலாக இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்தும் வருகிறார்.

யோகா கலையின் மீது இளம்வயதில் இவர் கொண்ட தீராத காதலை ‘கின்னஸ்’ புத்தகம் தற்போது அங்கீகரித்துள்ளது. ‘செயல்பாட்டுடன் இருக்கும் உலகின் வயது முதிர்ந்த யோகா ஆசிரியர்’ என்ற வகையில் டாவோ பொர்ச்சான் லின்ச்-சின் பெயர் கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

உங்கள் காரின் ரிமோட் கண்ட்ரோல் போலீஸ் வசம்..!



ஐரோப்பா யூனியன் தற்போது ஒரு புது டெக்னாலஜியை கொஞ்சம் கூட சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. இதன் பெயர் vehicle telematics, இது உங்கள் புது காரில் உள்ள மைக்ரோபிராசஸர் – இதன் மூலம் நீங்கள் அதிக வேகமாக சென்றாலும், ரோட்டில் ஸ்டன்ட் அடித்தாலும் போலீஸ் செக் செய்ய நிறுத்த சொன்னாலும் நிறுத்தாமல் சேஸிங் செய்தால் உங்கள் வண்டியை போலீஸ் ஒரு நிமிடத்தில் நிறுத்த முடியும் போன்ற ரிமோட் கண்ட்ரோல்.

இது ஏற்கனவே அமெரிக்கா / ஐரோப்பா போன்ற வாடகை கார் நிறுவனங்கள் இதை இன்ஸ்டால் செய்திருக்கின்றன. இதன் மூலம் வாடகை காலம் முடிந்து நீங்கள் காரை ரிட்டர்ன் செய்யாமல் இருந்தால் உங்கள் எஞ்சினை நிறுத்த இயலும். அதன் மூலம் அன்ஹ காரை எங்கிருக்கிறது என்றூ ஜிபிஎஸ் மூலம் கண்கானித்து உடனே காரை மீட்டு கொள்வார்கள். இதை இன்ஸ்டால்மென்ட்டுக்கு கார் வாங்கினால் கூட அந்த ஃபைனான்ஸ் கம்பெனி செய்கிறது. இது இந்தியாவுக்கும் வரலாம் என நினைக்கிறேன்.

இது எப்படி சாத்தியமாகிறது? என்று தெரிந்து கொள்ல ஆசையா? ஒவ்வொரு கார் தயாரிக்கும் போதே இந்த வசதியை மைக்ரோபிராசஸர் மூலம் இந்த டெக்னாலஜியை இஞ்செக்ட் செய்து விடுவதால், கார் ரிஜிஸ்டர் ஆகும் போது அந்த ரெஜிஸ்ட்ரேஷன் பிளேட்டின் டீட்டெயில் போலீஸிடம் இருக்கும். இதனால் தவறு செய்யும் கார்களை போலீஸ் ஜி பி எஸ் மூலம் ரிமோட் லொகேஷனில் இந்த காரை நிறுத்த இயலும்.

அது சரி..நம்பர் பிளேட்டை மாத்திட்டு போன என்ன பண்ணுவாங்கன்னு போலீஸ்கிட்ட கேட்டா அதுக்கு வழி இருக்கு, போலீஸ் ரேடாரில் இந்த மாதிரி நிக்காமல் போகும் தறிகெட்ட கார்கள் ஜிபிஎஸ்ரேடார் மூலம் கூட நம்பர் பிளேட் இல்லாமலே கண்டுபிடித்து நிறுத்த இயலும்..!

இனிமேல் விண்வெளியிலும் அரிசி உணவு கிடைக்கும்....




உலக நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பணியில் உள்ள விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைகளுக்காக அங்கே லடா என்ற பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டு அங்கு சோதனை முயற்சியாக காய்கறிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

 பட்டாணி, கீரை வகைகள் மற்றும் குள்ள வகையைச் சேர்ந்த கோதுமை போன்றவை இதுவரை அங்கு விளைவிக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானவை என்ற சான்றிதழைப் பெற்றுள்ளதாக உயிர்மருத்துவவியல் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்யும் ரஷ்ய நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ரஷ்ய ஆய்வாளரான மார்கரிட்டா லெவின்ஷிக் சமீபத்தில் மாஸ்கோவில் நடைபெற்ற விண்வெளிக் கருத்தரங்கின் ஆண்டு மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த ஆண்டிற்கான பழுது பார்க்கும் பணி நிறைவடைந்தவுடன் அரிசி, தக்காளி, மணி மிளகு போன்றவை அங்கு பயிரிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைக்காக இந்தப் பயிர்கள் பயன்படுவதோடு விண்வெளியில் ஏற்படக்கூடிய மரபணு மாற்றங்கள் குறித்த ஆய்விலும் இவை பயன்படுத்தப்படும் என்று ஆய்வு நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 விண்வெளியில் அமைக்கப்படும் வாழ்விடம் குறித்த நம்பிக்கையை அளிப்பதாக இந்த முடிவுகள் இருப்பதாக ரஷ்ய ஆய்வு நிறுவனம் தெரிவிக்கின்றது. அமெரிக்காவின் உடா மாகாண பல்கலைக்கழகத்தின் விண்வெளி டைனமிக்ஸ் ஆய்வகத்துடன் இணைந்து ரஷ்ய நிறுவனம் இந்த விவசாய முயற்சியில் இறங்கியுள்ளது.

சினிமாவின் மறு பக்கம் ‘எம்.ஜி.ஆரின் சத்திய விலாசம்..!



எம்.ஜி.ஆரின் முதல் துணைவியாராக வாழ்க்கைப்பட்டு இரண்டே ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தவர் ‘தங்கமணி’ என்னும் ‘பார்கவி’.

எம்.ஜி.ஆர்.–தங்கமணி மண வாழ்க்கை குறித்து நெகிழச்செய்யும் நிகழ்ச்சிகளை சொல்கிறேன்...

எம்.ஜி.ஆர். இருபது, இருபத்திரண்டு வயதைக் கடந்த பின்னரும் ஊர் ஊராக அலைந்து திரிந்து நாடகங்களில் நடித்துக்கொண்டு வாழ்நாளை வீணாக்குவதாக தாய் சத்தியபாமா வேதனைப்பட்டார். காலாகாலத்தில் அவருக்குக் கல்யாணம் செய்து வைத்து குடும்ப ஈடுபாடு உண்டாக்க விரும்பி, அது சம்பந்தமாக அவ்வப்போது தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் எம்.ஜி.ஆரோ அதற்குப் பிடிகொடுக்காமல் தட்டிக் கழித்துக்கொண்டே வந்தார். ஆனாலும் அம்மா சும்மா இருப்பாரா? தன் பிள்ளைக்கு கல்யாணம் என்னும் ‘கால்கட்டு’ போடுவதற்கான அந்தத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் எம்.ஜி.ஆர். 1939 வாக்கில் ‘மாயா மச்சீந்திரா’ என்னும் படத்தில் நடிப்பதற்காகத் தன் அண்ணன் சக்ரபாணியுடன் கொல்கத்தாவிற்குச் சென்றுவிட்டார். இந்த படத்தின் இயக்குனர் ராஜா சந்திரசேகர்.

தன் பிள்ளை கொல்கத்தா சென்ற சமயம் பார்த்து தாயார் சத்யபாமா தனது நெருங்கிய உறவினர் ஒருவர் மூலமாக பாலக்காட்டில் உள்ள ‘குன்னும்புரம்’ என்ற ஊரின் ‘தெக்கின்கூட்டில்’ என்னும் இல்லத்தில் வாழ்ந்த விஸ்வநாதய்யர் – லட்சுமிகுட்டி தம்பதியினரின் பதினெட்டு வயதுடைய அழகுப்பதுமையான ‘தங்கமணி’ என்ற பார்கவியை முறைப்படி பெண் பார்த்து, அவர்களும் சம்மதித்து இளைஞர் எம்.ஜி.ஆருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

திருமணம் என்றால் தன் பிள்ளை வரமாட்டான் என்பதால், தனக்கு உடல்நிலை சரியில்லை – உடனே வரவும் என்று தாயார் தந்தி கொடுத்தார். அதைப்பார்த்ததுமே அவர் புறப்பட்டு ஊர் வந்து சேர்ந்தார். வந்த பிறகுதான் தெரிந்தது, தாயார் தன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, தன்னை கொல்கத்தாவிலிருந்து வரவழைப்பதற்காகத் தந்திரமாகக் கொடுத்த பொய்த்தந்தி அது என்ற விஷயம்.

‘ஒரு நிலையும் நிரந்தரமுமான வாழ்வு வருமானம் எதுவும் இன்றி, நாடக சினிமா நடிகனாக ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் எனக்கு இப்பொழுது எதற்காகக் கல்யாணம்?’ என்று கோபத்துடன் கூறியதுடன் பெண் பார்க்கச் செல்லவும் எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்.

தாயாருடன் உறவினர்களும் ஒன்று சேர்ந்து அவரிடம் அதை இதைக் கூறி சமாதானப்படுத்தி – வற்புறுத்தி பெண் பார்க்க அழைத்துச் சென்றனர்.

அழகிய தங்கமணியைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு அவரைப் பிடித்துப்போகவே, திருமணத்திற்கு சம்மதித்தார்.

தாயாரின் அன்பு – தங்கமணியின் அழகு இவ்விரண்டும் சேர்ந்து, திருமணமே வேண்டாம் என்ற எண்ணம் கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் மனதை மாற்றிவிட்டது.

அந்த இளம் பருவத்திலேயே அன்புக்கும், அழகுக்கும் அடிமையாகக்கூடிய இயற்கையான ஓர் இயல்பை எம்.ஜி.ஆர். கொண்டிருந்தார் என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அக்காலத்தில் மகாத்மா காந்தி மீதும், காங்கிரஸ் இயக்கத்தின் மீதும் எம்.ஜி.ஆர். அதிகப் பற்றும், ஈடுபாடும் கொண்டிருந்தார். அதன் காரணமாக தன் திருமணத்தின் போது தூய கதர் ஆடைகளைத்தான் அணிவேன். பரம்பரையான வழக்கப்படி மணமகனுக்கான பட்டு உடைகளை உடுத்த மாட்டேன் என்று பிடிவாதமாக நிபந்தனை விதித்தார்.

அதற்கு அனைவரும் உடன்பட்டதன் பேரில், இளைஞர் எம்.ஜி.ஆர். 1940–ல் தனது 23 வயதில், தன்னைக் காட்டிலும் 5 வயது குறைவான 18 வயது தங்கமணியை அவர் பிறந்த பூர்வீக ‘தெக்கின்கூட்டில்’ இல்லத்திலேயே வைத்து திருமணம் புரிந்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர். அவரது அண்ணன் சக்ரபாணி குடும்பத்தினர் தங்கமணியை அவர்களோடு அழைத்துச் சென்றுவிட்டனர். வசதி படைத்த தங்கமணியின் தகப்பனார் தன் மகளுக்கு நிறைய தங்க நகைகள் கொடுத்து அனுப்பி வைத்தார்.

எம்.ஜி.ஆர்., எம்.ஜி.சி. சகோதரர்கள் நிரந்தர வருமானம் இல்லாத நிலையில், தொடர்ந்து இரண்டு வருட காலங்கள் குடும்பம் நடத்த சிரமப்பட்டு, வேறு வழியின்றி – தங்கமணியின் நகைகளை விற்கவேண்டிய தவிர்க்க முடியாத சங்கட நிலை ஏற்பட்டது.

இதை அறிந்த அவருடைய பெற்றோர் தங்களுடைய மகள் வசதி இல்லாமல் வாழ்வதைக்கண்டு மனம் வருந்தி, சிறிது காலம் எங்களுடன் இருக்கட்டும் என்று கூற, எம்.ஜி.ஆரின் தாயாரும், தமையனாரும் விருப்பம் இன்றி அவர்களுடன் தங்க     மணியை அனுப்பி வைத்தனர். அப்போது எம்.ஜி.ஆர். நாடகத்திலோ, சினிமாவிலோ நடிப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார்.

திருமணமான 1940–லிருந்து 42 வரையில் எம்.ஜி.ஆருடன் வாழ்ந்த தங்கமணி, பிறந்த வீட்டிற்குத் திரும்பி வந்த மறுமாதமே, எதிர்பாராமல் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணம் அடைந்துவிட்டார்.

அவருடைய மறைவுச் செய்தி தந்தி மூலமாக எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதை அறிந்து பெரிதும் அதிர்ச்சிக்குள்ளான எம்.ஜி.ஆர். உடனே ஊருக்குப்புறப்பட முயற்சித்தும் அப்பொழுது போக்குவரத்து வசதி சரியாக இல்லாததால் தாமதமாகி மூன்று நாட்களுக்குப் பிறகு மாமனார் வீடு வந்து சேர்ந்தார். அதற்கு முன்பே தங்கமணியின் நல்லடக்கம் நடந்து முடிந்து விட்டது.

அவர் பெரிதும் நேசித்த அன்பு மனைவி மிகக்குறுகிய காலத்திற்குள் மறைந்த துன்பத்தைத் தாங்க முடியாமல், கடைசி முறையாக அவருடைய முகத்தை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்று விரும்பி, அவரைப் புதைத்த இடத்தைத் தோண்டச் சொல்லி மிகவும் பிடிவாதம் பிடித்தார். அவருடைய தாயார், தமையனார் மற்றும் உற்றார், உறவினர், ஊரார் அனைவரும் ஒன்று சேர்ந்து படாதபாடு பட்டு எம்.ஜி.ஆரை சமாதானம் செய்து அமைதிப்படுத்தினர்.

எம்.ஜி.ஆரை மணந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தங்காமல் பறந்து சென்றுவிட்ட அந்தத் ‘தங்கக்கிளி’ தங்கமணி தன்னோடு இல்லை என்றாலும்கூட, அவரது உற்றார் உறவினர்களுக்கெல்லாம் அவ்வப்போது தேவைப்பட்ட பொருளுதவிகளை எம்.ஜி.ஆர். நீண்ட காலம் செய்து வந்தார்.

அவர்கள் எல்லோரும் தங்களுக்கு ஏதாவது பொருளாதாரப் பிரச்சினை என்றால் உடனே சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆரிடம் வேண்டிய உதவிகளைப் பெற்றுச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தனர்.

காலப்போக்கில் தங்கமணி குடும்பத்தாருக்குச் சொந்தமான எம்.ஜி.ஆரின் வசதி மிக்க மாமனார் வீடான ‘தெக்கின் கூட்டில்’ என்று பெயர் கொண்ட அந்த இல்லம் இப்பொழுது சிதிலம் அடைந்து வெற்றிடமாகக் காட்சியளிக்கிறது.

இளம் பருவத்திலேயே திருமணமாகி தனது இனிய மனைவியை இழந்து துயருற்ற எம்.ஜி.ஆர். ‘இனி திருமணமே செய்து கொள்வதில்லை’ என்று முடிவு செய்தார். தன் நாடக சினிமா நடிப்புத் தொழிலுக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் ஒத்துவராது என்று எண்ணிய எம்.ஜி.ஆரை மீண்டும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி சத்யபாமா அம்மையார் எவ்வளவோ வற்புறுத்தி, எடுத்துக்  கூறியும்கூட அவர் மறுத்து தனியாகவே வாழ்ந்து வந்தார்.

அக்காலத்தில் எம்.ஜி.ஆர். நாடகங்கள் மற்றும் சினிமாவிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து அதன் மூலம் கிடைத்த சொற்ப வருமானத்தில் செலவு போக மீதியைச் சேமித்து வைத்து அதைக்கொண்டு முதன் முதலாக வாங்கிய சொத்து– கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தன் தாயார் சத்யபாமாவின் சொந்த ஊரான வடவனூரில் இருந்த அவருடைய பூர்வீக மருதூர் இல்லத்தின் அருகில் ‘கவுண்டன்தரா’ என்ற இடத்தில் வீட்டோடு கூடிய சுமார் 2 ஏக்கர் இடமாகும்.

குறிப்பிட்ட இந்தப் பகுதியில் இந்த வீட்டையும், இடத்தையும் எம்.ஜி.ஆர். வாங்கக் காரணம் அன்னை சத்யபாமாவிற்கும், அவருடைய உடன் பிறந்த சகோதரர்களுக்கும் இடையே அவ்வப்போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக மனவேதனையுடன் இருந்த தாய்க்கு ஆறுதல் தரும் பொருட்டு, தனது கடின உழைப்பின் மூலம் கிடைத்த ஊதியத்தில் சேர்த்து வைத்திருந்த அந்தத் தொகையைக்கொண்டு இந்த இடத்தை சொந்தமாக வாங்கி, மராமத்துப் பணிகள் செய்து முடித்து அதற்கு ‘சத்திய விலாசம்’ என்று தன்னைப் பெற்றெடுத்துப் பாடுபட்டு வளர்த்து ஆளாக்கிய தாயின் பெயரையே வைத்து மகிழ்ந்த எம்.ஜி.ஆர். வீட்டோடு சேர்ந்திருந்த கிணற்றின் மேல் பகுதியிலும் அந்தப் பெயரையே செதுக்கி வைத்தார்.

பிற்காலத்தில் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் முதன் முதலாக பிரபல வழக்கறிஞர் வி.பி.ராமனின் தந்தையாரிடமிருந்து விலைக்கு வாங்கிய கதவிலக்கம் 160 கொண்ட அந்த இல்லத்திற்கும் ‘தாய் வீடு’ என்றுதான் பெயர் வைத்தார்.

அதன் பிறகு 1959–60 வாக்கில் சென்னை பரங்கிமலைப் பகுதியைச் சேர்ந்த ராமாவரத்தில் வாங்கிய நஞ்சை புஞ்சைகளுடன் கூடிய பெரிய தோட்டத்தில் அவர் கட்டிய வீட்டின் தெற்கு முகம் நோக்கிய பிரதான வாசலுக்குக் கிழக்கில் ஒரு மண்டபம் எழுப்பி, அதில் தன் அருமை அன்னை சத்யபாமாவின் திருவுருவச்சிலையை கடவுள் விக்ரகம்போல பிரதிஷ்டை செய்து தீப, தூப, நைவேத்தியத்துடன் எம்.ஜி.ஆர். அன்றாடம் வழிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அன்னைக்கு ஆலயம் அமைத்து வழிபட்ட ‘நடிகர்’ இந்தியாவிலேயே எம்.ஜி.ஆர். ஒருவர்தான்.

ஒரு பிள்ளை தன்னைப் பெற்றெடுத்து, பாலமுது ஊட்டித் தாலாட்டிப் பாசம் பொழிந்து வளர்த்து ஆளாக்கிய அந்தத் தெய்வத்தாய்க்கு என்ன கைம்மாறு செய்ய வேண்டும் என்பதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கின்ற அன்பிற்கோர் ஆசானாக அமைந்த எம்.ஜி.ஆர். என்னும் அந்தப் பொன்மனச் செம்மலை எப்படிப் புகழ்வது?

எம்.ஜி.ஆரின் திரைப்படங்களைப் பார்த்துத் திருந்தி தாய் மீது பற்றும் பாசமும் அதிகம் கொண்ட இளைஞர்கள் லட்சோப லட்சம் பேர்!

பிறந்த பிள்ளைகளின் தாய்ப்பாசத்தைக் காட்டிலும், தான் பெற்றெடுத்த பிள்ளைகளின் மீது மிகுந்த புத்திரபாசம் கொண்டிருக்கும் புனிதத் தாய்க்குலத்தில் ஒருவரான சத்யபாமா அம்மையார், அப்பொழுது சென்னையில் குடும்பத்துடன் வசிக்கும் தன் பிள்ளை      களைப் பிரிந்து தனக்கென்றே இளைய மகன் கட்டிய சகல வசதிகளும் கொண்ட அந்த ‘சத்திய விலாசம்’ வீட்டில் தனியாக வாழ விரும்பாமல் அண்ணன் சக்ரபாணியாருடனும், தம்பி எம்.ஜி.ஆருடனும் சென்னைக்கு வந்து விட்டதால், அந்த வீடு பூட்டியபடியே இருந்தது.

வீடு வீணாகாமல் அதை ஒரு பள்ளிக்கூடமாக மாற்றிவிட எம்.ஜி.ஆர். எண்ணியிருந்த சமயத்தில், சத்யபாமா அம்மையாரின் பழைய மருதூர் இல்லத்தில் வேலை செய்த ‘கண்டு மேஸ்திரி’ என்பவர் தனது சிறு வயது மகளுடன் சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆரைச் சந்தித்து, புதிய ‘சத்திய விலாசம்’ வீட்டில் குடியிருந்து அதைப் பராமரித்துக் கவனித்துக்கொள்வதாகக் கூறி, அதற்கு அனுமதி அளிக்கும்படி கேட்டுப்பெற்று எம்.ஜி.ஆரின் சம்மதத்துடன் அங்கு வசித்து வந்தார்.

சில மாதங்கள் சென்றதும் மேற்படி கண்டு மேஸ்திரி மீண்டும் சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆரைச் சந்தித்து, ‘அந்த வீட்டில் நீ வசிக்கக்கூடாது என்று உறவினர் சிலர் தன்னிடம் பிரச்சினை செய்கிறார்கள்’ என்று கூறி மிகுந்த வேதனைப்பட்டார்.

உடனே எம்.ஜி.ஆர்., தனது தாய்க்காக முதன் முதலாகக் கட்டிய சத்தியவிலாசம் வீட்டையும், அதனுடன் சேர்ந்த 2 ஏக்கர் நிலத்தையும் கண்டுமேஸ்திரிக்கே தானமாக வழங்கி, பத்திரம் எழுதி, அதைப் பதிவும் செய்து சட்டப்பிரகாரம் அவருக்கே சொந்தமாக்கி விட்டார். எம்.ஜி.ஆர். என்ற கண்கண்ட கடவுள் தனக்குத் தானமாக வழங்கிய அந்தப் புண்ணிய பூமியில் கண்டு மேஸ்திரியின் மகள் ‘செந்தாம்ராட்டி’ அவருடைய மகள் வயிற்றுப்பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பிறக்கும்போதே சிவந்த தனது கரங்களை இல்லாதோருக்கு எடுத்துக் கொடுத்துக்கொடுத்து மேலும் மேலும் செங்கரங்களாக்கிக்கொண்டு ‘பொன்மனச்செம்மல்’ என்று ‘திருமுருக கிருபானந்த வாரி’யாரால் பட்டம் பெற்றுப் புகழ் பெற்ற எம்.ஜி.ஆர். மகாபாரதத்தின் தரும நாயகனான ‘தானவீரசூர கர்ணன்’ வழி வந்தவர் அல்லவா.

அன்னை சத்யபாமாவின் பூர்வீக ‘மருதூர் இல்லம்’ தகுந்த பராமரிப்பின்றி பாழடைந்து போய்விட்டதால், அவரது உறவினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு, சுற்றுச்சுவருடன் (காம்பவுண்ட்) இப்பொழுது காலியாக இருக்கிறது. அந்த இடத்தின் அருகில் புதியதாக ‘மருதூர் இல்லம்’ கட்டப்பட்டு அதில் உறவினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பாலக்காட்டில் 1942–ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாடகத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். அந்த நாடகத்தைக்காண ‘குழல் மன்னம்’ கிராமம் ‘ஏரகாட்’ குடும்பத்தைச் சேர்ந்த கடுங்க நாயர் தன் மனைவி மூகாம்பிகை அம்மாள், மகன் நாராயணன் மற்றும் சதானந்தவதி – மீனாட்சிகுட்டி என்ற இரு மகள்களுடன் வந்திருந்தார்.

நாடகம் முடிந்ததும் மேற்படி கடுங்க நாயரின் குடும்பத்தினர் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அப்பொழுது 14 வயது கொண்ட பருவப்பெண்ணான சதானந்தவதியின் அழகு எம்.ஜி.ஆரின் கண்களைக் கவர்ந்தது.

இனி திருமணமே செய்து கொள்வதில்லை என்றிருந்த எம்.ஜி.ஆரின் வைராக்கியத்தை சதானந்தவதியின் வசீகரத் தோற்றப்பொலிவு தகர்த்தெறியவே, அவர் மனம் மாறி, தனது தாயாரிடத்தில் அந்தப்பெண்ணைப் பற்றிக்கூறி, அவரை மணந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத தாயார் சத்யபாமா அம்மையார் சந்தோஷங்கொண்டு, இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று உடனடியாக மேற்படி கடுங்க நாயரை அவருடைய இல்லத்தில் சந்தித்து முறைப்படி தன் பிள்ளைக்கு சதானந்தவதியைப் பெண் கேட்டார்.

100 ஏக்கருக்கு மேல் சொந்த நிலம், வீடு முதலிய வசதியும், அந்தஸ்தும் கொண்ட அவர், தன் மூத்த மகள் சதானந்தவதியின் விருப்பத்தையும் தெரிந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு அவரை இரண்டாந்தாரமாக மணம் செய்து கொடுக்கச் சம்மதித்தார். அப்பொழுது 25 வயதுடைய எம்.ஜி.ஆருக்கும், 14 வயது சதானந்தவதிக்கும் 1942–ல் அவர்களுடைய சொந்த ‘ஏரகாட்’ இல்லத்திலேயே திருமணம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

அக்காலத்திலேயே 6–ம் வகுப்பு வரை படித்து, கல்வி அறிவும், கண்கவர் அழகும், மென்மையான குணமும் கொண்டிருந்த தன் இளம் மனைவி சதானந்தவதியைப் பெரிதும் நேசித்து அன்பு செலுத்தினார் எம்.ஜி.ஆர்.

மாமனாரின் பூர்வீக ‘ஏரகாட்’ இல்லத்தின் பின்புறம் இருந்த காலி மனையில் தன் கையாலேயே ஒரு மாதிரி வடிவம் அமைத்து ‘பிளான்’ போட்டு தனது இதயங்கவர்ந்த இல்லத்   தரசிக்காகவே ஓர் அழகிய இல்லத்தை எழுப்பினார்.

ராமச்சந்திரன் என்ற தன் பெயரில் உள்ள சந்திரனையும், சதானந்தவதி என்னும் தனது மனைவியின் பெயரில் உள்ள ‘ஆனந்தம்’ என்ற இரண்டு சொற்களையும் ஒன்றாக இணைத்து, ‘‘சந்திரானந்தா நிலையம்’’ என்னும் பொருள் பொதிந்த பொலிவான பெயரை அந்தப் புது இல்லத்திற்குச் சூட்டிய எம்.ஜி.ஆர்., வண்ணமலரும், அதன் வாசனையும் போல, தனது மனதிற்கினிய மனைவியுடன் வாழ்ந்து மகிழ்ந்து வந்தார்.

இந்த உண்மையான உண்மையை அறியும்போது எனக்கு அங்கே டெல்லி ஆக்ராவில் யமுனா நதி தீரத்தில் தன் காதல் மனைவி முழு நிலா முகத்தழகி மும்தாஜுக்காக மன்னன் ஷாஜகான் எழுப்பிய ‘தாஜ்மகால்’ நினைவுக்கு வருகிறது.

அந்த ஷாஜகான், தன் ஆசை மனைவி மும்தாஜ் இறந்த பின்னர் அவள் நினைவாக ‘தாஜ்மகால்’ எழுப்பினான்.

இந்த எம்.ஜி.ஆர். தன் அன்பு மனைவி சதானந்தவதி வாழும் காலத்திலேயே அவருக்கென்று ‘சந்திரானந்தா நிலையம்’ கட்டி முடித்து அதில் குடியமர்ந்து, தன்னுடன்கூட தன் இல்லத்தரசியும் அதனைக்கண்டு இன்புறச் செய்தார்.

அன்றைய இளம் பருவத்து ‘இன்ப நிலா’ எம்.ஜி.ஆர். என்னவெல்லாம் லட்சியம் கொண்டு எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்.

ஒரு பெண்ணைக் காதலிக்கிறோம் என்பதைக் காட்டிலும், அந்தப் பெண்ணால் நாம் காதலிக்கப்படுகிறோம் என்பதை  அறிந்து கொள்வதில் சற்றுக் கூடுதல் சுகம் உண்டு அல்லவா!

அதைப்போன்று, தான் பிறர் மீது அன்பு செலுத்துவதைவிட, அவர்களால் அன்பு செலுத்தப்படுகிறோம் என்பதை அறிந்தால் எம்.ஜி.ஆர். அகம் மிக மகிழ்வார்.

காலங்கள் உருண்டோடின. திரைஉலகில் எம்.ஜி.ஆர். நட்சத்திரமாக மின்னத்தொடங்கினார். அவரது புகழ் வளர்ந்தது, சினிமாபட வாய்ப்புகள் குவிந்தன. அப்போது எம்.ஜி.ஆர்–சரோஜாதேவி நடித்து தேவர் பிலிம்ஸ் தயாரித்துக் கொண்டிருந்த ‘தாயைக்காத்த தனயன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்துக்கொண்டு இருந்தார். படத்தை தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒருநாள் முன்னதாக 13.4.1962–ல் வெளியிடுவதற்கான படப்பிடிப்பு வேலைகளில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம்.

இந்த நிலையில் 25.2.1962 காலை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை (இப்பொழுது ‘அவ்வை’ டி.கே.சண்முகம் சாலை) 160 ‘தாய்வீடு’ என்னும் பெயர் கொண்ட எம்.ஜி.ஆர். வீட்டிலிருந்து தொலைபேசி வாயிலாக ஒரு துயரச் செய்தி வந்தது.

அது– எம்.ஜி.ஆரின் அன்புத் துணைவியார் சதானந்தவதி அம்மையார் காலமாகிவிட்டார்.

 
நண்பேன்டா