Friday 7 February 2014

மாரடைப்பு: சில அவசிய தகவல்கள்..!



திடீரென உயிரைப் பறிக்கும் அபாயம், மாரடைப்பு. இன்று மாரடைப்பு, அரிய மனித உயிர்களைப் பறித்துவருவதை கண் முன்னால் காண்கிறோம். மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால் நம்மைக் காத்துக்கொள்ள முடியும். மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் காரணிகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, மாற்ற முடியாத காரணிகள்.

அதாவது, இயற்கையாகவே அமைந்த காரணிகள். இவற்றை நாம் மாற்ற முடியாது. உதாரணமாக, ஆண்கள், வயதானவர்கள், இதயநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள் போன்றோருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு சற்று அதிகம்.

ஆனாலும் இந்த விஷயத்தில் நம்மால் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் அடுத்தவகையான காரணிகள் கட்டுப்படுத்தக்கூடியவை. மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும், ஆனால் நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய காரணிகள் அவை.

சர்க்கரை நோய்:

இந்த நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் ஆனாலும், இவர்கள் ஒழுங்காக மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலமும், உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் இந்த நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

புகைத்தல்:

மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமான முக்கிய காரணிகளில் ஒன்று புகைப்பழக்கமாகும். ஆனாலும் புகைக்காத நபர்களுக்கும் கூட மாரடைப்பு அபாயம் ஏற்படலாம்.

அதிக கொலஸ்ட்ரால்:

சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலம் நமது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைத்துக்கொள்ள முடியும்.

அதிக ரத்த அழுத்தம் :

இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். சரியான மருந்துகள், உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மூலம் இதையும் நாம் கட்டுப்பாடாக வைத்திருந்து மாரடைப்பைத் தவிர்க்க முடியும்.

மனஅழுத்தம் :

அதிக மனஅழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.

அதிக உடல் பருமன் :

எப்போதும் நமது உடல் எடையை கட்டுப்பாடாக வைத்திருப்பது அவசியமாகும். அது, மாரடைப்பில் இருந்து மட்டுமல்ல, வேறு பல உடல்நலப் பிரச்சினைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றும்.

எனக்கு ஒரே டவுட் டவுட் டா வருதே… !


1. காலம் மாறிப் போச்சு, காலம் மாறிப் போச்சுன்னு சொல்றோமே..மாறுனதும் மாறிக்கிட்டே இருக்கறதும் நாம தானே?

2. எனக்கு இந்த ட்ரெஸ் சின்னதா போயிருச்சுன்னு சொல்றோமே..ட்ரெஸ் எப்படிங்க சின்னதா போவும்? நாம தான வளர்ந்துட்டோம்.

3. முள்ளு குத்திருச்சின்னு சொல்றோமே.முள்ளு நம்மள தேடி வந்தாங்க குத்துச்சு?

4. பணம் காணாம போயிருச்சுன்னு சொல்றோமே.. என்னைகாது நான் பணத்தை தொலைச்சுட்டேன்னு சொல்றோமா?

5. புது செருப்பு கால் ல கடிச்சிருச்சின்னு சொல்றோமே.. செருப்புக்குத் தான் வாயே இல்லையே.அது எப்படிங்க கடிக்கும்?

6. FAN ஓடுதுன்னு சொல்றோமே..அது எந்த பந்தயதுலங்க ஓடுது?

7. கரண்ட்(மின்சாரம்) போயிருச்சின்னு சொல்றோமே.. போனது பவர் (மின் சக்தி) தானுங்களே?

8. வலி உயிர் போவுதுன்னு சொல்றோமே..உயிர் போன அப்புறம் பேச முடியும்ங்களா?

உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும்..! - குட்டிக்கதை



ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தபோது அவனுக்குப் பசியெடுத்தது.

ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.

மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.

மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன.

அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான்.

குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது.

ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு, "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான்.

உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார்.

மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார்.

அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார்.

கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது.

"பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார்.

மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார்.

இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான்.

விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான்.

அவரை சரமாரியாகத் திட்டினான்.

"ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே,

"தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார்.

இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார்,

"நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய்.

உன் மூளை வேலை செய்யவில்லை.

நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய்.

யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய்.

உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை.

உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.

அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்..

வாய் புண்ணுக்கு இயற்கை வைத்தியம்..!



தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.

வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.

தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும்.

மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும்எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.

மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன்கிடைக்கும்.

மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.

மெட்ரிக்குலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி..!



மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் இந்திய அஞ்சல் துறையின் தமிழக அஞ்சலக பிரிவில் காலியாக உள்ள MTS பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 227

பணி: Multi-Tasking Staff(MTS)

வயதுவரம்பு: 05.03.2014 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மெட்ரிக்குலேசன் மற்றும் அதற்கு இணையான தகுதி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + கிரேடு சம்பளம் ரூ.1800 மற்றும் இதர சலுகைகள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25

தேர்வுக் கட்டணம்: ரூ.175

விண்ணப்பிக்கும் முறை: www.tamilnadupost.nic.in, www.indiapost.gov.in போன்ற இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 05.03.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

http://tamilnadupost.nic.in/rec/MTS_Notification.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

உணர்ச்சியுள்ள செயற்கைக் கைகள்..! – விஞ்ஞானிகள் சாதனை..!



இன்றைய காலக் கட்டத்தில் அதிகரிக்கும் விபத்துகளால் ஏராளமானவர்கள் உடல் உறுப்புகளை இழக்கிறார்கள். மற்றும் சில பயங்கர வியாதிகளாலும் உடல் உறுப்புகள் செயலிழக்கலாம். இது போல திடீர் சம்பவங்களால் கை, கால்களை இழந்தவர்கள் வாழ்வே திசைமாறிவிடும்.இந்நிலையில் செயற்கை கை, கால்கள் பொருத்திக் கொள்ளும் வசதி இருக்கிறது.

 ஆனாலும் அவை இயற்கையான கை, கால்கள்போல செயல்படாது. பெயரளவில் ஒரு அங்கமாகவே இருக்கும்.இந்தக் குறையை களைந்து விபத்தில் கைகளை இழந்தவர்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கும் விதத்தில் நவீன வசதிகள் நிறைந்த செயற்கை கை உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து செயற்கை கைக்கு உணர்ச்சி அளிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்து அசத்தியுள்ளனர்.

தொடுதல் உணர்வை செயற்கை கைகள் உணரும் வகையிலான கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் அறிவியல் இதழ் ஒன்றில்தான் இப்படி இத்தாலி, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து செயற்கை கைக்கு உணர்ச்சி அளிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

நவீன செயற்கை கைகளில் பொருத்தப்படும் சென்சார்களுடன் இணைக்கப்பட்டுள்ள எலக்ட் ரோடுகள், துண்டிக்கப்பட்ட கைகளின் முனையில் இருக்கும் நரம்புகளுடன் இணைக்கப்பட்டு உணர்ச்சிகளை உணரச் செய்கின்றன.இந்த செயற்கை உணர்ச்சிக் கருவி பொருத்தப்பட்ட கைகளின் மூலம், ஒரு பொருளை எடுக்கும்போது, அது மென்மையாக இருக்கிறதா, கடினமானதாக இருக்கிறதா என்பதை உணர முடியுமாம். இனி விபத்து உள்ளிட்டவைகளில் கைகால்களை இழந்தவர்களுக்கு வரப் பிரசாதமாக இந்த புதிய கண்டு பிடிப்பு அமைந்துள்ளது.

இன்னமும் ஆய்வு நிலையில் இருக்கும் இந்த செயற்கை கை தொடர்பான கண்டுபிடிப்பு, பரவலான பயன்பாட்டுக்கு வர இன்னும் சிறிது காலமாகலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஒன்றில் தனது கையை இழந்த டென்மார்க்கைச் சேர்ந்த டென்னிஸ் அபோ சோரென்சென் என்பவருக்கு இந்த செயற்கை கையை விஞ்ஞானிகள் பொருத்தி ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்க்கது.

டயட்டில் சேர்க்க வேண்டிய நீர்ச்சத்துள்ள உணவுகள்..!

டயட்டில் சேர்க்க வேண்டிய நீர்ச்சத்துள்ள உணவுகள்!!


ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமென்றும் கூறுவார்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் உள்ள அனைத்து டாக்ஸின்களான நச்சுப் பொருட்களும் வெளியேறி, உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது சீராக செயல்படுவதோடு, உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பமும் தணியும்.

பொதுவாக உடலில் வறட்சி ஏற்பட்டால், நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். குறிப்பாக மலச்சிக்கல், குடலியக்க கோளாறு, பைல்ஸ், சிறுநீரக கற்கள் போன்றவை ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகள் அனைத்தும் உடலில் வராமல் இருப்பதற்கு, போதிய நீர்ச்சத்து இருக்க வேண்டும். அதற்கு தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டுமென்பதில்லை. ஒருசில நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டாலும், உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தானது கிடைத்துவிடும்.

மேலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களான தர்பூசணி, வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, கேரட் போன்றவற்றில் நீர்ச்சத்து மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் புரோட்டின்களும் அதிகம் நிறைந்துள்ளது. சரி, இப்போது நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களின் பட்டியலைப் பார்ப்போமா!!!

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் லைகோபைன் போன்றவை அதிகம் இருப்பதோடு, 90% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே அதனை சாப்பிட்டால், நீர்ச்சத்து கிடைப்பதோடு, உடல் எடையும் குறையும். மேலும் இதனை பச்சையாக சாப்பிட்டால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை பெறலாம்.

கேரட்

கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்களும் அதிமம் உள்ளது. இவை உடலுக்கு மட்டுமன்றி, சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது. எனவே தினமும் ஒரு டம்ளர் கேர்ட் ஜூஸ் குடித்தால், உடல் வறட்சியை நீங்குவதோடு, சருமமும் பொலிவோடு மின்னும்.

முள்ளங்கி

முள்ளங்கி சாப்பிட்டால், உடலில் இருந்து வெளியேறிய நீரை மீண்டும் பெறலாம். மேலும் இவை எளிதில் செரிமானமடைவதால், அஜீரணக் கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம். குறிப்பாக இதனை சாப்பிட்டால், வயிறு நிறைவதோடு, உடல் எடை குறையவும் உதவியாக இருக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவருக்கும தெரிந்த விஷயமே. அதிலும் கோடைகாலத்தில் அதிகம் கிடைப்பதால், தவறாமல் வாங்கி சாப்பிட்டு, உடல் வறட்சியோடு, மலச்சிக்கலையும் தடுத்துவிடுங்கள்.

பீச்

பீச் பழத்திலும் நீர்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதோடு, வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டா-கரோட்டினும் உள்ளது. எனவே இதனையும் மறக்காமல் சாப்பிடுங்கள்.

ஆரஞ்சு

சிட்ரஸ் பழத்தில் ஒன்றான ஆரஞ்சில் வைட்டமின் சி மட்டுமின்றி, நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது

அன்னாசி

நார்ச்சத்து அதிகம் உள்ள அன்னாசியில், நீர்ச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. ஆனால் இதனை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. இல்லையெனில் கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

தர்பூசணி

நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களில் பிரபலமான உணவுப் பொருள் தான் தர்பூசணி. அதிலும் இந்த பழம் கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்த உணவுப் பொருளில் வைட்டமின் ஏ, பி, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் தையமின் சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரி

பெர்ரிப் பழங்களில் கண்ணை பறிக்கும் சிவப்பு நிறத்தில் உள்ள ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களுடன், நீர்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது.

திராட்சை

இந்த சிறிய பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இந்த பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்படும்.

அயர்ன் மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன்களுக்கு ஆஸ்கர் கவுரவம்...!




அமெரிக்காவின் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட் மற்றும் அறிவியல் அகடமி இணைந்து நடத்தும் 86ஆவது அகடமி விருதுகள் விழாவில் 2013ஆம் ஆண்டின் சிறந்த படங்கள் கவுரவிக்கப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் 2ஆம் தேதியன்று பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள சாமுவேல் கோல்டுவின் திரையரங்கில் எலன் டிஜெனரசால் நடத்தப்பட உள்ளது.

ரஷ்யாவின் சோச்சி நகரில் நாளை தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுவதால் எப்போதும் நடைபெறும் தேதியைவிட ஒரு வாரம் தள்ளி இந்த விருது வழங்கு விழா  நடைபெறுகின்றது.

இந்த விழாவில் திரைப்படத் துறையின் 24 பிரிவுகளில் அளிக்கப்படும் விருதுகளுடன் அயர்ன் மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற சிறப்புத் தோற்றம் கொண்ட கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க ஆஸ்கர் குழு திட்டமிட்டுள்ளது.

திரைப்படத்துறையின் வரலாற்றில் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தவர்கள் என்ற முறையில் இத்தகைய கதாபாத்திரங்கள் சிறப்பிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த வருடத்திய விருது நிகழ்ச்சியில் 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படத்தின் லியுக் ஸ்கைவாக்கர், 'மேட்ரிக்ஸ்' படத்தின் சை-பை ஹீரோவான நியோ, 'லார்ட் ஆப் ரிங்ஸ்' படத்தின் தி ஹாபிட் மற்றும் விசார்ட் கன்டால்ப். ஆகிய கதாபாத்திரங்கள் சிறப்பிக்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

மனிதனைப் பற்றிய சில உண்மைகள்..!



மனிதனைப் பற்றிய சில உண்மைகள்:-

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உருவாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்
பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகிதம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக்கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர். உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர் தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

குழந்தைகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா..?


"உனக்கு ஏன் கார்ட்டூன் பிடிக்கும்?"

இந்தக் கட்டுரையை எழுதும் முன் என் மகளிடமும் அவளது தோழிகளிடமும் நான் கேட்ட கேள்வி இது.

பெரும்பாலான குழந்தைகள் பட்டியலிட்டவை... கார்ட்டூன் காமெடியாக இருக்கும், விதவிதமான கேரக்டர்கள் வரும், எப்போதும் நிறைய ஃபிரெண்ட்ஸ் இருப்பாங்க, கார்ட்டூன் முடிவில் நீதி (Moral) சொல்வாங்க...

இவற்றை சொல்லும்போதே குழந்தைகளிடம் அவ்வளவு பரவசம். அந்தப் பட்டாம்பூச்சித்தனம் அவர்களுக்கே உரித்த அடையாளம் - ரசனை.

பிறந்த 6 மாதத்தில், ஒரு குழந்தை கண் முன் நிழலாடும் கார்ட்டூன் அதே குழந்தை மூன்று வயதை எட்டும்போது அதை முழுவதும் ஆக்கிரமித்து விடுகிறது என்கிறது ஆய்வுக் குறிப்பு ஒன்று.

குழந்தைகள் எப்போதும் திறந்த மனதுடன் இருப்பார்கள். இது உளவியல் உண்மை. அதனாலேயே குழந்தைப் பருவம் ஒரு மனிதனை ஆக்குவதில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

இங்கே நிற்காதே, இதை செய்யாதே, அங்கே விளையாடதே, இப்படித்தான் இருக்க வேண்டும்... இத்தகைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து கொண்டே இருக்க குழந்தைகள் விரும்பவதில்லை. மாறாக, அவர்கள் தாங்கள் பார்ப்பதை பிரதிபலிக்க விரும்புகிறார்கள், பிடித்ததை செய்து பார்க்க தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு கற்றல் அவ்வளவு ருசிகரமானது.

எனவே, கார்ட்டூன் படங்களில் பார்ப்பவற்றை நடைமுறைக்கு புறம்பானது என உணராமல் அவற்றை செய்து பார்க்க முயல்கின்றனர். பல நேரங்களில் அது விஷப் பரீட்சையாக முடிகிறது.

இருக்கட்டும். கற்றலில் கார்ட்டூனின் பங்கு என்ன என கேட்கிறீர்களா? நகர வாழ்க்கை பரபரப்பில் நமக்கு சற்று ஓய்வு தேவைப்படும் போது நாம் உடனே குழந்தைகளிடம் சொல்வது, 'தொந்தரவு செய்யாமல் கொஞ்ச நேரம் கார்ட்டூன் பாரு' என்பது தான்.

குழந்தைகள் தனியாக, சுதந்ததிரமாக தெருவில் விளையாட பாதுகாப்பான சூழல் இல்லை என்ற மற்றொரு சமூக அவலத்தின் அடையாளம் அது. அதை பற்றி இங்கு பேச வேண்டாம்.

அப்படி குழந்தைகளை கார்ட்டூன் பார்க்கச் சொல்லும் நாம் அவர்கள் எந்த மாதிரியான கார்ட்டூனை பார்க்கிறார்கள் என கவனிப்பதில்லை.

ஒரு பூனை, எலியை அடித்து துவம்சம் செய்வது, பதிலுக்கு எலி திட்டம் தீட்டி பூனை தலை வீங்கும் அளவுக்கு அடிப்பதும், பின்னணி இசையுடன் பரபரப்பாக, கலகலப்பாக, கலர்ஃபுல்லாக இருக்கலாம் அதை பார்க்கும் குழந்தைக்கு, ஆனால் அதில் ஒரு 'ஏ' சர்ட்டிபிகேட் படத்தைவிட அதிக அளவில் வன்முறை இருப்பதை நாம் உணர்ந்திருக்கோமா?

சூழ்ச்சி செய்து, தனது வேலைகளை மற்றவரை வைத்து முடித்துக்கொண்டு ஹீரோயிஸம் செய்யும் ஒரு குட்டிப் பையன், அதை பார்க்கும் குழந்தைக்கு பொய் சொல்லுதல், வேலையை தள்ளிப்போடுதல் ஆகியவற்றை கற்றுத் தருகிறான் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறோமா?

ஒரு ஒல்லி பிச்சான் பெண்ணுக்காக இரண்டு பேர் போட்டி போட்டு, சாகசங்கள் செய்வதும். அவர்களில் யார் அதிகம் சாகசம் செய்கிறார்களோ, அவர்களோடு அந்தப் பெண் டூயட் பாடுவதும், எந்த மாதிரியான கருத்தை குழந்தைகள் மனதில் விதைக்கும் என ஊகிக்க முயற்சி செய்திருக்கோமா?

இன்னும் பல ஹீரோயிஸம்களும், தாதாயிஸம்களும் சினிமாவுக்கு நிகராக கார்ட்டூன் ரூபத்தில் குழந்தைகள் மனதில் பதிகின்றன. பஞ்ச் டயலாக்குகளும், சில நேரங்களில் கெட்ட வார்த்தைகளும் கூட கார்ட்டூன் பொம்மை பேசுவதால் குழந்தைக்கு அது தனக்கான வார்த்தை என்று அர்த்தப்படுகிறது.

ஒரு நிமிடம்... உடனே, கார்ட்டூன் பார்ப்பது தவறு, குற்றம் என உங்கள் குழந்தைக்கு கட்டுப்பாடு விதிக்காதீர்கள். குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதில் தவறில்லை. அது அவர்களது பக்கவாட்டுச் சிந்தனைகளை தூண்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் என்ன மாதிரியான கார்ட்டூன் அவை என்பது தான் முக்கியம். குழந்தைகள் பார்க்க வேண்டிய கார்ட்டூன் இவை தான் என்பதை பெற்றோர்கள் தணிக்கை செய்வது நலம். பாப்புலர் கார்ட்டூனை விட இது ஏன் சிறந்தது என்பதை அவர்களிடம் பேசி புரிய வைக்கலாம். சிறிது காலம் அவர்களுக்கு அது பழக்கப்படும் வரை அவர்களுடன் நாமும் ஒன்றாக அமர்ந்து அந்த கார்ட்டூனை பார்க்கலாம். அவற்றில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து ஆலோசிக்கலாம்.

கார்ட்டூன் பார்த்து உலக கலாசாரத்திற்கு ஒரு சிறு அறிமுகமும் குழந்தை பெறலாம், டப்பிங் கார்ட்டூன்களில் மொழிபெயர்ப்பு தரமாக செய்யப்படும் பட்சத்தில் தமிழ் மொழியும் கற்றுக் கொள்ளலாம்.

இந்த இரண்டுக்குமே ஒரு சிறு உதாரணத்தை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு தொலைக்காட்சி சேனலில் வெளிநாட்டு இனிப்பு வகையை ஒருவர் செய்து கொண்டிருந்தார். எதேச்சையாக அதை ஏரிட்டுப் பார்த்த குழந்தை அம்மா இது 'ரைஸ் கேக்', (Japanese Snack) ஜேப்பனீஸ் ஸ்நாக் என்றது. அது உண்மைதான். உணவின் பெயர் கீழே ஸ்க்ரால் ஆகிக் கொண்டிருந்தது. எப்படித் தெரியும் என கேட்க, இதை நான் கார்ட்டூனில் பார்த்திருக்கிறேன் என்று குழந்தை சொன்னது.

இப்போது தான் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்க்கத் துவங்கியுள்ள நண்பரின் குழந்தை ஒன்று, தந்தை ஏதோ சொல்ல... அப்பா நான் அமைதியாகத் தானே இருக்கிறேன் என தெளிவாக கேட்டுள்ளது. பொதுவாக நம்மூர் சிறு குழந்தைகள் சும்மா தான் இருக்கேன் என்று வழக்கு தமிழில் தான் சொல்வார்கள். ஆனால், ஒரு கார்ட்டூனில் இருந்தே அந்தக் குழந்தையும் அப்படி தெளிவாக தமிழ் பேச கற்றுக் கொண்டிருப்பதை குழந்தை பார்க்கும் கார்ட்டூனை கவனித்த தந்தை உணர்ந்துள்ளார்.

இவை அவ்வளவு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் வன்முறையை கற்றுக் கொள்வதை விட சின்னச் சின்ன நல்ல விஷயங்களை கற்பது நன்றல்லவா?

இப்படி பெற்றோர் உதவியுடன் அர்த்தமுள்ள கார்ட்டூன்களை பார்த்த ஒரு குழந்தை அந்த கார்ட்டூனில் சொல்லப்படும் நீதி தனக்கு ஈசாப் கதைகளை நினைவூட்டுவதாக தெரிவித்தது.

இது கற்றலினால் விளைந்த பயனன்றோ!

ஒரு வாசகத்தை விட, ஒரு காட்சி குழந்தையின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் சக்தி வாய்ந்தது. பள்ளிக்கூடம் செல்லும் முன்னரே கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் குழந்தைகள். நாளடைவில் அது அவர்களது நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தச் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. இது குழந்தைகள் ஏறிச் செல்லும் படிக்கட்டின் முதல் படி. எனவே தெரிந்தெடுத்த கார்ட்டூனை குறிப்பிட்ட நேரம் குழந்தைகள் பார்ப்பது நலமே என நம்புகிறேன்.

வசீகரிக்கும் கண்கள் வேண்டுமா..?



காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு அபரிமிதமானது. கணினியில் பணிபுரிவது, புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது என உறங்கும் நேரம் தவிர ஓய்வு கொடுக்காமல் கண்கள் பணியாற்றிக்
கொண்டிருக்கின்றன.

இதனால் கண்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இந்த சோர்வினால் கண்களுக்கு கீழே கருவளையமும், நாளடைவில் சுருக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தினந்தோறும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக..


கண் எரிச்சலைப் போக்க

கோடைகாலத்தில் உடலில் சூடு அதிகரித்து கண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க தினமும் அதிகாலையில் குளித்து விடுவது நல்லது. அதிகாலையில் குளிப்பது கண்களுக்கு புத்துணர்ச்சி தருவதோடு உடலுக்கு மேலும் அழகு சேர்க்கும்.

தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து விரல்நுனியால் நன்றாக மசாஜ் செய்யவும். இதனால் உடலுக்கு அதிக குளிர்ச்சி கிடைக்கும். உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயை ஊற்றி அதனை மோதிர விரலால் தொட்டு கண்களை சுற்றி வலதுபுறமாக சுற்றி மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கும்.


புத்துணர்ச்சி பெற

வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக் கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும். இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும்.

வெள்ளரிக்காயை துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதனை கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.


கருவளையம் போக்க

வெயிலில் வெளியே போய்விட்டு வரும்போது கண்களைச் சுற்றிக் கருவளையம் தோன்றுவது தவிர்க்க முடியாதது. கறிவேப்பிலையை இடித்து சாறு பிழிந்து கொஞ்சம் வெண்ணெயை எடுத்து அதோடு கலந்து கண்களைச் சுற்றி பூசினால் கருவளையம் மறைந்துவிடும்.


கண்கள் குளிர்ச்சி பெற

உள்ளங்கால்களிலும், காலின் கட்டை விரல்களிலும் தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் கண்களுக்கு பொலிவு கிடைக்கும், உடலும் குளிர்ச்சிபெறும்.

சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.


வசீகர கண்கள்

கண் வசிகரத்திற்கும், அழகிற்கும் ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது. சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன், அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் பளிச் ஆகிவிடும். வாரத்திற்கு மூன்றுநாட்கள் என தொடர்ந்து கண்கள் வசிகரமாக மாறும்.மேலும் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.


ப்ளீச் வேண்டாமே

முகத்திற்கு ப்ளீச் செய்யும் போது கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய்வதால் அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத்தும் தரமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றை கண்களில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.

உங்கள் கண்கள் எடுப்பாக தெரிய வேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம்.பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரில் ஐ ஷேடோ போட்டால், கண்கள் சிறியதாக தெரியும். ஐ லைனர் பயன்படுத்தும் போது, சிறிய கண்கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும். பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த் தியாகவும், சிறிய கண்கள் உடையவர் கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.

பெண்கள் பற்றி ஏழு சிக்கலான உண்மைகள்..!



பெண்கள் பற்றி ஏழு சிக்கலான உண்மைகள்:

1. அவர்கள் சேமிப்பில் அக்கறை உடையவர்கள்.

2. சேமிப்பில் அக்கறை உடையவர்கள்ஆனால்விலையுயர்ந்தஆடைகளையே வாங்குவார்கள்.

3. விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவார்கள் ஆனால் அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள்.

4. அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள், ஆனால் எப்போதும் அழகாக உடை அணிவார்கள்.

5. எப்போதும் அழகாக உடை அணிவார்கள், ஆனால் திருப்தி அடையமாட்டார்கள்.

6. திருப்தி அடையமாட்டார்கள், ஆனால் ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.

7. ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள், ஆனால் ஆண்கள் அப்படி செய்தாலும் அவர்களை நம்புவதில்லை.
 
நண்பேன்டா