Thursday 6 March 2014

அல்சரை விரட்டும் அமுத பானம் 10 ரூபாய் மட்டுமே..!



உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் எனப்பாடினார் திருமூலர். வாழ்க்கை வாழ்வதற்கு உண்ண உணவும், உடுத்த உடையும், வாழ இருப்பிடமும் அவசியம். இதில் உண்ணும் உணவு சுகாதாரமானதாக இருக்கவேண்டும். நேரத்திற்கு ஏற்றவாறு உண்பது அவசியம். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முடிகிறதா? என்றால் கேள்விக்குறிதான்.

பெருநகரங்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் அல்லது பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் காலை நேரங்களில் உணவை அவசர அவசரமாகவும், வெந்தும் வேகாமலும், சுவையோ அல்லது சுகாதாரத்தைப்பற்றியோ யோசிக்காமல் அரைகுறை வயிற்றுடன் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் அல்லது பள்ளிக்கு செல்வோரை நாம் காண்கிறோம். அதேபோல் மதிய நேரத்திலோ அல்லது இரவிலோ சரியான நேரத்திற்கு போதிய அளவு உணவு சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு.

காரணம் அவர்கள் உணவுக்கு பதிலாக அடிக்கடி டீ, காபி, நொறுக்கு தீனி, பாஸ்ட்புட் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. இது நாளடைவில் பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக அமைந்து விடுகிறது. இதன் விளைவு வயிற்றுப்புண் ஏற்பட்டு அல்சரில் கொண்டு சேர்க்கிறது. அல்சர் நமது உடலில் உள்ள சிறுகுடலில் ஏற்படும் பாதிப்பு. நேரம் தவறி சாப்பிடுவது, நீண்டநேரம் சாப்பிடாமல் இருப்பது, அதிக காரமான திண்பண்டங்களை சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் அல்சர் உருவாகிறது. அல்சர் இருந்தால் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், குமட்டல், வாந்தி உள்ளிட்டவைகள் ஏற்படும்.

வயிற்று புண் இருப்பவர்கள் சாக்லெட், குளிர்பானங்கள், மது, பெப்பர்மிட், காபி, கருப்பு தேனீர், ஆரஞ்சு, திராட்சை, பூண்டு, மிளகாய், பால் உணவுகள், காரம், வெங்காயம், தக்காளி விழுது, தக்காளி பொருட்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக கோதுமை, கோழி, மீன், பீன்ஸ், முட்டை, தயிர், அத்திப்பழம் உள்ளிட்டவற்றை கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக சேர்த்து சாப்பிடலாம். அதேபோல் புளிப்பான பழங்கள் மற்றும் காரமான உணவுகளையும் தவிர்ப்பது அவசியம்.

இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிட தொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் காற்றுப்புகாத பைகளில் கட்டிவைத்தால் அவை அழுகிவிடும். எனவே அவற்றை உயிருள்ள உணவு என்கிறோம். அந்த உயிர்சத்துதான் நம் உடலில் உண்டாகும் அல்சர் போன்ற பிரச்னைகளை தடுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. அல்சரை போக்கும் சக்தி தேங்காய்க்கும் உண்டு.

தேங்காயில் உள்ள நீர், இளங்காயாக இருக்கும்போது அதில் இருக்கும் மெல்லிய வழுவழுப்பான பொருள் நம் உடலில் உண்டாகும் நோயை தடுக்கும் இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதனை தினமும் காலை, மாலை என இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் சூட்டை தணிக்கும், கண்கள் குளிர்ச்சி பெறும், பட்டினி, அதிக உணவு சாப்பிட்ட பிறகு ஜீரணமாகவும், அஜீரண கோளாறு ஆகியவற்றை போக்குவதில் இளநீர்முக்கிய பங்கு வகிக்கிறது.

இளநீரை தினமும் மதியநேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீரை வெளியேற்றுவதுடன், ரத்த சோகையை போக்குகிறது. எனவே நோயற்ற வாழ்க்கைக்கு உகந்த உணவை சரியான முறையில் சரியான அளவு சாப்பிட்டால் அல்சர் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம். முடிந்தவரை காரமான மற்றும் பாஸ்ட்புட் மற்றும் நொறுக்கு தீனிகளை குறைத்துக்கொண்டால் அல்சருக்கு எளிதில் ‘குட்-பை சொல்லலாம்.

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்..!



1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்

‘பலான’ வெப்சைட்டுகளில் இருந்து எஸ்கேப் ஆக உதவும் தளம்..!



டூ நாட் லிங்க் இணையதளத்தின் நோக்கத்தை பார்தால் ஏதோ பொறாமை பிடித்த தளம் என தோன்றலாம். இணைப்பு தராதீர்கள் என்று பொருள் படும் இந்த பெயரே கூட இணையத்தின் பகிர்வு கலாச்சாரத்திற்கு எதிரானதாக தோன்றலாம்.இணைப்பு தருவதால் அந்த தளத்திற்கு தேடியந்திர பலன் கிடைத்து விடாமல் இருக்கும் வகையில் அந்த தளத்திற்கு இணைப்பு கொடுக்க வழி செய்வதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது என்ன அநியாயம் என்று கேட்க தோன்றலாம்.

எந்த ஒரு இணையதளத்திற்கும் இணைப்பு தரும் போது அதை பலரும் சென்று பார்ப்பதும் இப்படி பலர் வருகை தருவதால் அந்த தளம் தேடியந்திர தேடல் முடிவுகள் பட்டியலில் முன்னிலை பெறுவதும் இயல்பானது தானே. ஒரு விதத்தில் இணைப்புகள் தருவதன் நோக்கமும் இது தான்.

அப்படியிருக்க , இணைப்பு தருவதன் பலன் அந்த தளத்திற்கு கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே துவக்கப்பட்டுள்ள சேவையை எப்படி புரிந்து கொள்வது என குழம்பலாம்.

நிற்க, நல்ல இணையதளங்கள் என்றால் பிரச்சனையே இல்லை. நல்ல இணையதளங்கள் என்றால் அதற்கு அவற்றுக்கு தாரளமாக இணைப்பு தரலாம். அவை பயன்பெறுவதை பார்த்து மகிழலாம்.ஆனால் மோசமான,வில்லங்கமான இணையதளங்களுக்கு இணைப்பு தர நேரிடும் போது என்ன செய்வது?

ஒவ்வொரு இணைப்பும் தேடியந்திர மதிப்பை கூட்ட பயன்படும் என்பதால் மோசமான இணையதளங்களுக்கு இணைப்பு தரும் போது அவை அந்த இணைப்பால் பயன் பெற்று விடும். சரி மோசமான இனையதளங்களுக்கு இணைப்பு தராமலே இருந்து விடலாமே!

லாம் தான்!.ஆனால் சில நேரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மோசடி தளங்களை சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது அல்லவா? அப்போது அந்த தளம் மோசமான வகையிலேனும் பிரபலமாகி இன்னும் கூடுதலான தேடியந்திர அங்கீகாரத்தை பெற்று விடுகிறது.விளைவு அந்த தளம் மேலும் பலரை ஏமாற்றலாம்.

இது சிக்கலானது தான் அல்லவா? இந்த சிக்கலுக்கான அழகான தீர்வு தான் டூ நாட் லிங்க் தளம் . அங்கீகாரம் பெற விரும்பாத தளங்களை சுட்டிக்காட்ட விரும்பும் போது அவற்றுக்கு நேரடியாக இணைப்பு தருவதற்கு பதிலாக அந்த தளத்தின் முகவரியை டூ நாட் லிங்க் தளத்தில் சமர்பிக்க வேண்டும். உடனே இந்த தளம் அதன் முகவரியை வேறு இணைப்பாக மாற்றித்த‌ரும்.

இந்த இணைப்பை கட்டுரையிலோ பதிவிலோ பகிர்ந்து கொண்டால் அதை கிளிக் செய்து பார்க்கலாம்.ஆனால் அந்த கிளிக் தேடியந்திர கணக்கில் வராது. அதே போல தேடியந்திர சிலந்திகள் வலை வீசி வரும் போதும் அந்த தளம் கண்ணில் படாது. காரணம் தேடியந்திரங்களை திரும்பி அனுப்பும் வகையில் அந்த இணைப்பு உருவாக்கப்பட்டிருப்பது தான்.

ஆக,மோசமான இணையதளத்தை அடையாளம் காட்டியது போலவும் இருக்கும். ஆனால் அந்த தளத்திற்கு தேவையில்லாத தேடியந்திர வெளிச்சம் கிடைத்து விடாமலும் செய்து விடலாம்.

வில்லங்கமான இணையதளங்களுக்கு இணைப்பு தரும் போது டூ நாட் லிங்க் மூலமே இணைப்பு தாருங்கள்.

இதற்கான தேவை பல விதங்களில் ஏற்படலாம். உதாரணத்திற்கு ஒரு விதம்: உங்கள் அபிமான அரசியல் தலைவர் பற்றி தரக்குறைவான விமர்சனம் கண்டு ஆவேசம் கொள்கிறீர்கள் என வைத்து கொள்வோம். அந்த விமர்சனத்தை அம்பல்படுத்த அதை சுட்டிக்காட்டி உங்கள் எதிர்வினையை பதிவு செய்கிறீர்கள். நீங்கள் ஆணித்தரமாக வாத்தை வைத்தது ஒரு புறம் இருக்க, உங்களை அறியாமல் அந்த விமர்சனத்திற்கு தேடியந்திர அங்கீகாரத்தையும் பெற்று தந்து விடுகிறீர்கள். ஆனால் டூ நாட் லிங்க் இணைப்பை பயன்படுத்தினால் இதை தவிர்க்கும் அதே நேரத்தில் அந்த விமர்சன‌த்தின் உள்நோக்கத்தையும் அம்பலமாக்கலாம்.

எளிமையான சேவை தான்.ஆனால் எப்படி எல்லாம் நுட்பமாக யோசித்து உருவாக்கி உள்ளனஎ இல்லையா?

இணைப்பில்லாமல் இணைப்பு கொடுக்க: http://www.donotlink.com/

வேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்..!



விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.

அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.

வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள்.

இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.

அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.

இத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.

ஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள்.

கூடவே மிக முக்கியமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே "குளோஸ்" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.

பொதுவாகவே இத்தகைய மெயில்கள் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

முதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள்.

உதாரணமாக Tata என்பதை " Tata Group of Industries Limited" என்றோ அல்லது "Samsung Electronics India Ltd" என்றோ பெயரில் பொடி வைத்து அனுப்பப்பட்டிருக்கும்.அதை பார்த்து அது மோசடியானது என்று உஷாராகிக் கொள்ளலாம்.

அடுத்ததாக இத்தகைய மெயில்கள், முன்பே குறிப்பிட்டதுபோல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் வராமல், தனிநபரின் போலி முகவரியில் இருந்து வந்திருக்கும்.

அடுத்ததாக 100 க்கு 99.99 விழுக்காடு, வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் எந்த ஒரு நிறுவனமும், விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வுக்காக முன் பணம் கட்டுமாறு கோராது. அப்படி கோரினால் அது நிச்சயம் "டுபாக்கூர்" தான் (மிக மிக அரிதான விலக்கு இருக்கலாம்).

ஒருவேளை இது உண்மைதான் என தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று, அதன் தொடர்பு முகவரியிலோ அல்லது அந்த நிறுவனத்தின் HR பிரிவையோ தொடர்புகொண்டு மெயில் அனுப்பியதும்,பணம் கட்டக்கோருவதும் உண்மைதானா என்று கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

மேலும் இதுபோன்று வரும் இமெயில்களில் உள்ள கடித வாசகம், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளுடன அபத்தமானதாக இருக்கும். அதிலிருந்தும் அந்த மெயில் போலியானது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அத்துடன் அந்த இமெயிலில் கொடுக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் நிச்சயம் போலியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருக்கும்.
உதாரணமாக பெங்களூரு முகவரிக்கு மும்பை தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும்.

எனவே அடுத்தமுறை இதுபோன்று அதிக சம்பள ஆசை காட்டி வரும் மெயில்களை பார்த்தால், உஷாராகிக் கொள்ளுங்கள் !

பெண்கள் பிட்னஸ் சென்டருக்கும், ஸ்பா-க்கும் செல்வது ஏன்..?



(அந்த குண்டம்மாவுக்கு பேசி ரொம்ப நாள் ஆச்சேன்னு சொல்லிட்டே பெரிய பாப்பாவுக்கு போன் செய்கிறாள் சின்ன பாப்பா.)

சின்ன பாப்பா: ஹலோ... ஹலோ... ச்சே.... இவ்ளோ நேரமா ரிங் அடிக்குது, எடுக்க மாட்டிங்கறாளே, இவ ஆடி அசைஞ்சு நடந்து வரவே ரெண்டு நாள் ஆகும். அதனால அடுத்து கால் பண்ணுவோம்.
(அடுத்த கால் செய்கிறாள்)
ஹலோ... ஹலோ... குண்டம்மா சீக்கிரம் போனை எடுடி.

பெரிய பாப்பா: (யாரிது போனை இப்படி அலற வைக்கிறது?) ஹலோ... ஹலோ... நான் தான் பெரிய பாப்பா பேசறேன். நீங்க யாருங்க?

சின்ன பாப்பா: அக்கா, நான்தான் சின்ன பாப்பா பேசறேன். எப்படி அக்கா இருக்கீங்க? ரொம்ப நேரமா போன் பண்றேன். நீங்க எடுக்கவே இல்லை. எங்கக்கா போயிருந்திங்க?

பெரிய பாப்பா: அடியே, நீதான் இப்படி போனை அலற வச்சியா? நான் எங்கடி போவேன்? இங்க வீட்டுல தாண்டி இருக்கேன். ஆனாலும் இப்ப ஒரு மாசமா ரொம்ப பிஸியா இருக்கேன்டி.

சின்ன பாப்பா: என்னக்கா சொல்றிங்க? வீட்டுல இருக்கேன்னு சொல்றிங்க, அப்புறம் ரொம்ப பிசின்னு சொல்றிங்க, புரியற மாதிரி சொல்லுங்கக்கா?

பெரிய பாப்பா: அதுவாடி, கொஞ்ச நாளா என் கணவருக்கு எம்மேல கோவமா இருந்தார்டி. அவரு நல்ல மூடுல இருக்கறப்போ என்னங்க, எம்மேல பாசமா இருக்க மாட்டிங்கறிங்கன்னு கேட்டேன். அப்பத்தான்டி மனுஷன் கொஞ்சம் வாயை தொறந்து பேசினாரு. அதாவது நான் வர வர வெயிட் போட்டுட்டே போறேனாம். உடம்பை கவனிக்கவே மாட்டிங்கறேனாம். அதான் அவர் அதை சொன்னா, எங்கே என்னைய குறை சொல்றார்ன்னு சொல்லி புலம்புவேன்னு, ஒண்ணுமே பேசாம கோவத்துல இருந்திருக்கார்.

சின்ன பாப்பா: ஓ... அப்படியா சங்கதி.. சரி, அவர் சொல்ற மாதிரி நீங்க வெயிட் அதிகமாயிட்டே தான் வறீங்க. கொஞ்சம் குறைக்க ட்ரை பண்ணுங்க அக்கா.

பெரிய பாப்பா: அடியே, வெயிட் குறைக்க ஒரு மாசமா லேடிஸ் பிட்னெஸ் சென்டருக்கு போயிட்டு இருக்கேன்டி. இப்ப தான் கொஞ்சம் வெயிட் லாஸ் ஆகுற மாதிரி தெரியுது. இப்பத்தான்டி எனக்குள்ள ஒரு நம்பிக்கையே வந்திருக்கு. வெயிட் குறைக்க முடியும்னு...

சின்ன பாப்பா: அக்கா ரொம்ப நல்ல விஷயம்... பிட்னஸ் சென்டருக்கு எவ்ளோ அக்கா பீஸ்? லேட்டஸ்ட் எக்கியூப்மென்ட்ஸ் எல்லாம் இருக்கா?

பெரிய பாப்பா: அடியே, என்னடி அப்படி கேட்டுட்ட? மாசம் சுளையா அறுநூறு ரூபா தரேன்டி, எல்லா லேட்டஸ்ட் எக்கியூப்மென்ட்ஸும் இருக்குடி. ஆரம்பத்துல வார்மப்புல இருந்து ஹெவி எக்ஸர்சைஸ் வரை எல்லாமே இருக்குடி. அதோட டயட்டும் பாலோ பன்றேன்டி. வீட்டுல இப்ப நானும் அவரும் டயட் புட் தான் எடுத்துக்கறோம்.

சின்ன பாப்பா: அக்கா, இப்பவே உங்கள பாக்கணும் போல இருக்கு. ஆனாலும் கொஞ்சம் வேலை இருக்கு. அதனால இந்த வீக் எண்ட்ல அங்க வரேன்.

பெரிய பாப்பா: சரிடி, எப்போ வேணாலும் வாடி.. வேறென்ன சங்கதி?

சின்ன பாப்பா: அக்கா, ஜீ தமிழ் டிவியில போடற சொல்வதெல்லாம் உண்மை ப்ரோக்ராம் பாப்பிங்களா? பெண்கள், பொதுவான குடும்ப பிரச்சனைகளை தீர்க்குற விழிப்புணர்வு ப்ரோக்ராம்...

பெரிய பாப்பா: சில எபிசோட்ஸ் பார்த்திருக்கேன். இந்த மாதிரி ப்ரோக்ராம் அவசியமா இருந்தாலும், நாலு சுவத்துக்குள்ள குடும்பத்துக்குள்ள பேசி தீர்க்குற பிரச்சனைகளும் வெட்ட வெளிச்சத்துக்கு வருதே. அதனால அவங்களோட ப்யூச்சர் ஸ்பாயில் ஆக சான்ஸ் இருக்கேடி.

சின்ன பாப்பா: அக்கா, நீங்க சொல்றது சரி தான். ஆனாலும், அப்படி நாலு சுவத்துக்குள்ள தீர்க்க முடியாமத் தான் இங்க வருதுன்னு சொல்லிக்கறாங்க. இப்படி ப்ரோக்ராம்ல கலந்துகிட்டு பிரச்சனை தீர்ந்தா போதும். நிம்மதி கெடச்சா போதும்னு தான் வராங்கன்னு கேள்விப்பட்டேன். ப்யூச்சர் பத்தி அவங்க கவலைப்பட்டா ப்ராப்ளம் சால்வ் ஆகாதுல. இந்த ப்ரோக்ராம் டைம்ல நான் சீரியல் பார்க்கிறது இல்லைக்கா...

பெரிய பாப்பா: ஆமாண்டி, சீரியலை விட பயங்கர இன்ட்ரஸ்டிங் டர்னிங்கெல்லாம் அந்த ப்ரோக்ராம்ல நடக்குது. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு ஒரே பரபரப்பா தான் இருக்கு. அதனால இந்த மாதிரி விழிப்புணர்வு ப்ரோக்ராம்ஸ் பாக்கலாம்.

சின்ன பாப்பா: அக்கா, இங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு லேடிஸ் பியூட்டி பார்லர் இருக்குல. அங்க போன வாரம் புதுசா ஸ்பா அப்படின்னு தொறந்திருக்காங்க. எங்க தெரு லேடிஸ் எல்லாம் இப்ப அங்க கூட்டமா மொய்க்கறாங்க. நானும் அங்க போலாம்ன்னு பார்த்தா அந்த ஸ்பா ரேட் ரொம்ப அதிகமா இருக்கு. அப்படி ஸ்பான்னா என்னா அக்கா.

பெரிய பாப்பா: அடியே, ஸ்பா அப்படின்னா தண்ணீர்ல குளியல்ன்னு அர்த்தம். அதாவது நேச்சுரல் கிரீம் யூஸ் பண்ணி, மசாஜ், பேசியல், உடம்பை புத்துணர்ச்சி ஆக்கி அழுக்கை நீக்கும் மூலிகை குளியல்ன்னு விதவிதமா நிறைய இருக்கு. ரொம்ப காஸ்ட்லி தான். முன்னாடி பாரீன்ல பேமசா இருந்துச்சு. இப்போ நம்ம நாட்டுக்கும் வந்திருச்சு.

சின்ன பாப்பா: அக்கா நீங்க சொல்றத பார்த்தா அழகு பராமரிப்பின் லேட்டஸ்ட் நுட்பமா இருக்கும் போல. ரேட் காஸ்ட்லியா இருந்தாலும் ஒரு வாட்டியாவது அங்க போயிட்டு வரணும் அக்கா. மொதல்ல அவர் கிட்ட பெர்மிஷன் வாங்கணும். ஒரு நாளைக்கு நீங்களும் வாங்க. ரெண்டு பேரும் போலாம்.

பெரிய பாப்பா: அடியே, இப்பவே மாசம் அறுநூறு செலவு பண்ணிட்டு இருக்கேன். இதுல ஸ்பாக்கும் செலவு பண்ணினா அவரு ரொம்ப கோவப்பட்டிருவார். நீ போயிட்டு வாடி. அப்புறமா யோசிக்கலாம் நானும் வர்றத பத்தி...

சின்ன பாப்பா: ஓகே அக்கா. அக்கா... ஓகேன்னதும் ஒரு விஷயம் ஞாபகம் வருது. இந்த ஹன்சிகா பொண்ணு இருக்குல. சிம்பு கூட கிசுகிசுல சிக்கியிருக்கு. சிம்பு கூட வேட்டை மன்னன் படத்துல ஹன்சிகா ஜோடி சேர்ந்தது மட்டுமில்லாம அடுத்த வாலு படத்துலயும் ஜோடி சேர போறாங்களாம். இதுக்கு சிம்பு ஹெவி ரெக்கமென்ட் பண்ணியிருக்காராம்.

பெரிய பாப்பா: ம்ஹும்... நல்ல ரெக்கமென்ட் தான்... சிம்பு கூட கிசுகிசுல மாட்டறது பெரிய விசயமே இல்லைடி...
(போன் கட் ஆகிறது. திரும்ப பெரிய பாப்பா போன் செய்கிறாள். சின்ன பாப்பா அட்டென்ட் செய்கிறாள்)

சின்ன பாப்பா: அக்கா, போன்ல காசு தீர்ந்து போச்சு. அதான் கட் ஆயிருச்சு. இந்த ஏர்டெல்ல ரொம்ப காஸ்ட்லி அக்கா.

பெரிய பாப்பா: ஏர்டெல் காஸ்ட்லின்னு நீதான் சொல்ற. ஆனா போன மாசம் அதிகமா ஆள் புடிச்சது ஏர்டெல் தான்னு ஒரு புள்ளி விவரம் சொல்லுது. எல்லா மொபைல் காரனும் அவனால பிடுங்க முடிஞ்ச காசை பிடுங்குறான்.

சின்ன பாப்பா: ஆமாங்கக்கா.... அக்கா, அவர் வர்ற நேரம் ஆச்சு. ஏதாச்சும்  ஸ்நாக்ஸ் செஞ்சு வைக்கலினா மனுஷன் ருத்ரதாண்டவம் ஆடிருவார். 

பெரிய பாப்பா: என்ன டிபன் செய்யப்போறடி....

சின்ன பாப்பா: பால் பணியாரம். அவருக்கு ரொம்ப பிடிக்கும். அதான் செய்யப்போறேன். ஓகே அக்கா... டைம் ஆச்சு.... பை... பை.... 

பெரிய பாப்பா: ஓகேடி... பை..பை....


(இருவரும் அரட்டையை முடித்தார்கள்)

கள்ள நோட்டுகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை ஏன்..?




பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப் படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டுகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை,

ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது இது அடிக்கடி மாற்றப்படும் இதனை வரயறை மற்றும் வடிவமைப்பது ரிசர்பேன் ஆஃப் இந்தியா.

இப்படி வந்த ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்களை பற்றி தெறிந்து கொண்டால் ,எளிதாக கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். (பின்வரும் படத்தில் உள்ள எண்ணைக்குறிக்கும்)

1)ஒவ்வொரு ரூபாயிலும் உள்ள "ரைஸெட் இமேஜ்" எனப்படும் குறிப்பாக 1000 ரூபாயில் "டயமன்ட்" இமேஜ் 500 ரூபாயில் "வட்டவடிவிலும்" 100 ரூபாயில் "முக்கோண வடிவிலும்" 50 ரூபாயில்சதுர வடிவிலும்" இருக்கும் இதனை தொட்டுபார்த்தால் அதன் வடிவத்தை நாம் உண்ரமுடியும்.

2)ரூபாயின் கம்பி இலைகள் 1990 பிறகு வந்த நோட்டுகளில் இந்த கம்பி இலைகள் விட்டுவிட்டு இருக்கும் ஆனால் அதனை தூக்கிபார்த்தால் ஒரு நேர்கோடாக இருக்கும், அதன் மீது "ஆர்பிஐ""500" என்ற வார்த்தைகள் இருக்கும்.

3)ரூபாயை 45டிகிரி சாய்த்து பார்த்தால் கம்பிஇழை மற்றும் ரூபாயின் மதிப்பு நீல நிறமாகவும் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.

4)வாட்டர்மார்க்கிங் இதானது நவீன தொழில்ஙுட்ப்பமாகும் இதன்படி ரூபாயின் இடது ஓரத்தில் உள்ள பகுதியில் காந்தி அடிகளின் படமும் ரூபாயின் மதிப்பும் வெளிச்சத்தில் தூக்கி பார்த்தால் தெறியும்.

5)காந்தி அடிகளின் வலது ஓரத்தில் மிக ஙுண்ணிய அளவில் "ஆர்பிஐ""500" போன்ற பல எழுத்துக்கள் இருக்கும்.

6)ரூபாயின் பின்புறத்தில் அடிவாட்டில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் இருக்கும்.

இப்படிபல சிறப்புகளை நாம் சொல்லி கொண்டே போகலாம் இந்த ரூபாய்களின் பண்புகள் அடிகடி மாற்றப்படலாம்,மேலும் இப்போது பிளாஸ்டிக்கில் ரூபாயை வெளிவிடவும் ஆர்பிஐ பரிசீலித்து வருகின்றது.

இதுதான் உண்மையான காதல் ... ♥



கணவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார் .....
குடி போதையில் சில தட்டுகலை  எடுத்து உடைக்கிறார் .....
பிறகு வாந்தியெடுத்து  தரையில் கீழே விழுந்துவிடுகிரான்  ...

 மனைவி அவரை தூக்கி  எல்லாதையும்  சுத்தம் செயகிறாள்


அடுத்த நாள் அவர் எழுந்திருக்கும் போது தனது மனைவி  தன்  மீது கோபமாக இருப்பார் என நினைத்தார்

கடவுலே இன்னிக்கு சண்ட வரகூடாதுனு வேண்டினார்


அவர் மேசை அருகில் ஒரு கடிதம் இருந்தது  ...

அதில்

"ஹனி .. உங்களுக்கு பிடித்த காலை உணவு, மேசையில் தயார்
நான் மளிகை வாங்க சீக்கிரம் போக வேண்டும் ...
நான் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன் ஏன் அன்பே ......
ஐ லவ் யூ ". ...

அவருக்கு  ஒரே வியப்பாக இருந்தது .. அவரது மகனிடம்  கேட்கிறார் ..,
'என்ன நேற்று இரவு நடந்தது ..?

மகன் கூறினார் ... "

அம்மா படுக்கையில் உங்களை இழுத்து உங்கள் பூட்ஸ் மற்றும் சட்டை நீக்க  முயற்சித்த போது..

நீங்கள்  குடி மயக்கத்தில்  என்ன சொன்னிங்கன்னு தெரிமா  ......

"ஏய், லேடி! என்னை தனியாக விடு  ...
நான் திருமணமானவன் !


இதுதான் உண்மையான காதல் ... ♥

உடற்செல்களுக்கு வலிமை தரும் கீரை..!



கீரை வகைகளில் முருங்கைக் கீரைக்கு தனி மவுசு உண்டு. 90 வகையான சத்துப்பொருட்களும், 46 வகை நோய் எதிர்ப்பு பொருட்களும் கொண்டது முருங்கைக் கீரை. ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அளப்பரியது. முருங்கைக் கீரையின் சத்துக்களை பார்க்கலாம்...

* முருங்கைக் கீரை குறைந்த ஆற்றல் வழங்கக்கூடியது. 100 கிராம் கீரையில் 64 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கொழுப்புச் சத்து கணிசமாக உள்ளது. 100 கிராம் கீரையில் 8.28 கிராம் கார்போஹைட்ரேட்டும், 2 கிராம் நார்ப்பொருளும், 1.4 கிராம் கொழுப்புச்சத்தும் உள்ளன.

* புரதம் நிறைந்தது முருங்கைக் கீரை. 100 கிராம் கீரையில் 9.40 கிராம் புரதம் கிடைக்கிறது. மேலும் 78.66 கிராம் அளவில் நீர்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது.

* வைட்டமின்-ஏ, தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 47 சதவீதம் அதாவது 378 மைக்ரோ கிராம் காணப்படுகிறது. கண் பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவசியமாகும். சரும பாதுகாப்பிலும் பங்கெடுக்கிறது. உலர்ந்த கீரையை விட பச்சைக் கீரையில் 10 மடங்கு அதிகமாக வைட்ட மின்-ஏ, கிடைக்கிறது.

* பி-குழும வைட்டமின்களான தயாமின் (வைட்டமின் பி-1), ரிபோபிளேவின் (பி-2), நியாசின்(பி-3), பான்டோ தெனிக் அமிலம்(பி-5), வைட்டமின்-பி6, போலேட்(பி-9)ஆகியவையும் சராசரி அளவில் காணப்படுகிறது. கிராம் கீரை தினசரி உடலுக்குத் தேவையான வைட்டமின்-சியின் 67 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. அதாவது 40 மைக்ரோ கிராம் வைட்டமின்-சி உடலுக்கு கிடைக்கிறது.

கிருமிகளின் நோய்த் தொற்றுகளில் இருந்தும், தீமை விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்களிடம் இருந்தும் பாதுகாப்பு அளிக்கக்கூடியது வைட்டமின்-சி. ஆரஞ்சு பழத்தில் கிடைப்பதைப்போல 7 மடங்கு வைட்டமின்-சி கீரையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. சளி, காய்ச்சலுக்கு எதிர்ப்பு சக்தி வழங்கக்கூடியது இது. 

* எலும்புகள், பற்களின் உறுதிக்கு துணைபுரியும் கால்சியம், 100 கிராம் கீரையில் 185 கிராம் என்ற அளவில் மிகுந்து காணப்படுகிறது.

* தாது உப்புக்களான இரும்பு (31 சதவீதம்), மக்னீசியம் (41%), மாங்கனீசு (17%), பாஸ்பரஸ் (16%), பொட்டாசியம் (7%), சோடியம் (1%), துத்தநாகம் (6%) போன்றவையும் முருங்கைக் கீரையில் உள்ளன. துத்தநாகம் ரோம வளர்ச்சிக்கும், சருமத்தின் நன்மைக்கும் உதவக் கூடியது. இரும்புச்சத்து ரத்த சோகையை தடுக்கும். பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்குத் துணை நிற்கும். உடற்செல்களுக்கு வலிமையைத் தரக்கூடியது முருங்கைக் கீரை தாதுக்கள்.

* தினமும் 3 கிராம் முருங்கைக் கீரை தூள் சாப்பிட்டு வந்தால் வலிப்பு மற்றும் பல்வேறு டிஸ்ஸார்டர் பாதிப்புகள் ஏற்படாமல் எதிர்ப்பு சக்தி தரும்.

பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய சில ஸ்வாராஸ்ய தகவல்கள்...




ஒவ்வொருவரின் வாழ்விலும் பிறந்தநாள் முக்கியமானதானதொன்றாகும்.  தமது கடந்த காலத்தினை மீட்டு எதிர்காலத்திற்கு காலடி எடுத்து வைப்பதற்கு பிறந்தநாள் என்பது விசேடத்துவமானதொன்று எனலாம்.


அந்தவகையில் உலகளாவியரீதியிலான சில பிறந்தநாள் சம்பிரதாயங்கள் வருமாறு;
நண்பர்களுக்கான என் பிறந்தநாள் பரிசாக இந்தப் பதிவு...


Ø  இங்கிலாந்து  நாட்டில் ஒருவர் 80, 90 அல்லது 100 வயதினைக் அடைகின்றபோது அவர் மகாராணியாரிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்து தந்தியினை பெற்றுக்கொள்வார்.


Ø  கொரிய நாட்டில் இரண்டு பிறந்தநாட்கள் முக்கியமானதாகும். 100வது நாள் மற்றும் 60வது வருடப் பிறந்தநாள் ஆகியவையாகும்.


Ø  சீனாவில் பிறந்தநாள் அன்பளிப்பாக கடிகாரத்தினை வழங்குவதனை தவிர்த்துவிடுகின்றனர். சீன மண்டேரியன் மொழியில் "கடிகாரம்" என்ற பதமானது இறப்பு என்ற பதத்தினை ஒத்தவொன்றாக கருதுகின்றனர். மேலும் சீன நாட்டினர் பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு வெள்ளை, கறுப்பு, நீல  நிறங்களினை உபயோகிப்பதில்லை.


Ø  இஸ்லாமிய உலகில், பரிசுப்பொருட்களினைப் சுற்றுவதற்கு பச்சை நிறம் நல்லதென கருதுகின்றனர்.


Ø  வியட்னாம் நாட்டினர் தமது பிறந்தநாளினை தமது "டெட் புத்தாண்டு(Tet)" ஆரம்பத்திலேயே கொண்டாடுகின்றனர்.


Ø  உலகில் அதிகமானோர் ஏனைய மாதங்களினைவிடவும் ஆகஸ்ட் மாதத்திலேயே தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம். (உலக மக்களில் 9%) இந்த வரிசையில் அடுத்த இடத்தினைப் பெறுவது ஜூலை, செப்டெம்பர் மாதங்களாகும்.


Ø  உலகில் மிக செலவான பிறந்தநாள் கொண்டாட்டமாக 1996 ஜூலை 13ம் திகதி புருணை சுல்தானின் 50வது பிறந்தநாள் விளங்குகின்றது. இந்தக் கொண்டாட்டத்திற்கு 27.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு ஏற்பட்டதாம். இச்செலவில் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சனின் 3 இசை நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்பட்டதாம்.


Ø  பிரித்தானிய மகாராணியாரின் பிறந்தநாளானது பொதுநலவாய அங்கத்துவ நாடுகளான இங்கிலாந்தில் ஜூன் முதலாவது சனிக்கிழமையும், நியூசிலாந்தில் ஜூன் முதலாவது திங்கட்கிழமையும், கனடாவில் மே மாத மத்தியிலும் கொண்டாடப்படுகின்றது. எலிசபெத் மகாராணி பிறந்தது 1926ம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியாகும்.


Ø  ஒவ்வொரு நாளும் உலகில் சராசரியாக 19 மில்லியன் மக்கள் தமது பிறந்தநாளினைக் கொண்டாடுகின்றனராம்.


Ø  ஜப்பான் நாட்டில், வழமையாக 60, 70, 79, 88 மற்றும் 99 வது பிறந்த நாளுக்கே பரிசில்களினை வழங்குகின்றனர். அவ்வாறு வழங்கப்படுகின்ற பிறந்தநாள் பரிசுப்பொருட் தொகுதியில் 10இலும் குறைந்த ஒற்றை எண்களில் பரிசுப்பொருட்கள் இருக்குமாம். வழமையாகவே ஜப்பான் நாட்டினர் 4 மற்றும் 9ம் இலக்கங்களை தவிர்ப்பதுடன் வெள்ளை நிறத்தால் சுற்றப்பட்ட பரிசுப்பொருட்களை இறப்புடன் தொடர்புடையதாக கருதுகின்றனர்.


Ø  ஜேர்மன் நாட்டினர், தமது பிறந்தநாளினை கருத்தூன்றிய ஒன்றாக எடுத்துக்கொள்கின்றனர். இதனால் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அரை நாள் விடுமுறையினைக்கூட எடுத்துக்கொள்கின்றனர்.  பூக்கள் மற்றும் வைன் ஆகியவை நண்பர்களிடையேயான பொதுவான பரிசுப்பொருட்களாக உள்ளது.


Ø  "ஹெப்பி பேர்த் டே" பாடல் முதன்முதலில் விண்வெளியில் 1969ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி அப்பலோ9 விண்வெளி வீரர்கள் பாடப்பட்டது.
 
நண்பேன்டா