Friday 14 February 2014

145 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் அணையா அடுப்பு...!

145 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் அணையா அடுப்பு!


கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் உருவாக்கிய இந்த தருமச்சாலையில் 145 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து மக்களின் பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது அணையா அடுப்பு.

ஆறறிவுடைய மனித இனம், தன் இனம் பசியால் தவிப்பதை கண்ணெதிரே காணுகிறப "அது அவரவர் தலையெழுத்து, வினைப்பயன்' என்று வேதாந்தம் பேசியது. இப்படி பேசுவோர் மத்தியில் "வாடியபயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'என்று பாடிய வள்ளலார் பசிக்கொடுமையை ஒழிக்க முன்வந்தார்.

எல்லா ஜீவன்களிடமும் இறைவன் பொதுவாக விளங்குகிறார் என்பதை உணர்ந்து பசியைப் போக்குவதே ஜீவகாருண்யம். தான் கூறிய ஜீவகாருண்ய தத்துவப்படி, வள்ளலார் 1867, மே 23ல் சத்தியதருமச்சாலையை உருவாக்கினார்.

இங்கு ஜாதி, மதம், இனம், மொழி, தேசம், நிற பேதமின்றி அனைவருக்கும் மூன்று வேளையும் அன்னதானம் ழங்கப்பட்டு, ஏராளமானோரின் பசி போக்கப்படுகிறது.

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!


தேவையான பொருள்கள்:

பாஸ்மதி அரிசி - 1 கிலோ

மட்டன் - 1/2 கிலோ

நெய் 250 கிராம்

தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)

பூண்டு - 100 கிராம்

இஞ்சி - 75 கிராம்

பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்

பெரிய வெங்காயம் - 1/2 கிலோ

தக்காளி - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 50 கிராம்

எலுமிச்சை - 1

பொதினா, கொத்தமல்லிதழை - கையளவு

கேசரிப்பவுடர் - சிறிதளவு

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்பு விபரம்:

செய்வது: எளிது

நபர்கள்: 4

கலோரி அளவு: NA

தயாராகும் நேரம்: 15 (நிமிடம்)

சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)

முன்னேற்பாடுகள்:

1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்

3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.


செய்முறை:

1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது நெய்யை ஊற்றவும்

2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப் போடவும்

3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்

5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது நேரம் கிளறவும்

6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும்

8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்

9. கொதிக்கும் குருமாவில் சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி சமப்படுத்தவும்

10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும்

11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.

பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

புற்றுநோய் சிகிச்சைக்கு துளசி எண்ணெய்...!



இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான் இன்று துளசியை நிறைய பேர் பார்க்கின்றனர். சாமிக்கு சூடப்படும் மாலையில் தான் சிலர் துளசியை பார்க்கின்றனர் தினமும் இரண்டு இலை துளசி சாப்பிட்டால் நோயை விரட்டலாம் ஆனால் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைவு தான்.

இந்நிலையில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதன் மருத்துவ குணம் எப்படி இருக்கும் என்பது குறித்த ஆய்வை இந்திய-அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கிடைத்த முடிவுகள் குறித்து வெஸ்டர்ன் கென்டகி பல்கலைக் கழக உதவி பேராசிரியர் சந்திகாந்த் மாணி,” மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகளவு மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.துளசியில் இருந்து கிடைக்கும் எண்ணெய்யில் அதிக மருத்துவ குணம் உள்ளது. அந்த எண்ணெய்யை புற்நோய் ஏற்படுத்தும் செல்கள் மீது தடவினோம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி எண்ணெய் தடவப்பட்ட இடத்தில் புற்றுநோய் பரப்பும் செல்கள் வளர்ச்சி நின்றுபோனது.

எங்களின் இந்தப் பரிசோதனையின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட துளசி மருத்துவ குணம் வெளிப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த எண்ணெய்யை புற்றுநோய் மருத்துவ சிகிச்சையில் மருந்தாக பயன்படுத்தவும் திட்டமிட்டு ள்ளோம். கிழக்கத்திய நாடுகளில் இதுபோன்ற செடிகளை நேரடியாக மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டும் என்றில்லாமல், நோய் தீர்க்கும் சத்து பொருட்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

பெண்களின் வித்தியாசமான கல்யாண ஆசைகள்..!



18 வயது முதல் 25 வயது வரையுள்ள பெண்களிடம் எடுக்கப்பட்ட ‘கல்யாண ஆசைகள்’ பற்றிய கருத்துக்கணிப்பில் அவர்கள் தங்களது வித்தியாசமான விருப்பங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நண்பர்போலவும், திறந்த மனதோடும் பழகும் கணவர் தேவை என்று 80 சதவீத பெண்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கடைசி காலம் வரை தங்களை பாதுகாக்கவேண்டும், பராமரிக்கவேண்டும் என்ற ஆசை பெண்களிடம் இல்லை. ஏன்என்றால் தங்கள் எதிர்கால கணவரிடம் அவைகளை எல்லாம் எதிர்பார்க்கும் பெண்கள் 10 சதவீதம்தான். கணவரிடம் அதிகபட்ச அன்பு, செக்ஸ், ஆண்மை நிரம்பிய குணம் போன்றவைகளை எதிர்பார்க்கும் பெண்கள் 5 சதவீதம் மட்டுமே!

மனதிற்குள் இருக்கும் எல்லாவற்றையும் பேசும் அளவுக்கு கணவர் நடந்துகொள்ளவேண்டும். சுதந்திரம்தர வேண்டும். எதற்கும் கட்டுப்பாடு விதிக்காதவராக இருக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட எல்லா இளம் பெண்களுமே எதிர்பார்க்கிறார்கள்.

ஐந்து நிமிடம் பார்த்து, அடுத்த மாதமே திருமணம் செய்துகொண்டு, அவரோடு அவசர அவசரமாக தேனிலவுக்கு புறப்பட்டு செல்லும் மனநிலை தங்களுக்கு இல்லை. குறைந்தது 6 மாதமாவது பழகிய பின்பே அவர் தங்களுக்கு தகுதியானவரா என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கான வாய்ப்பை தங்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டும் என்று 90 சதவீத பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பழைய காலத்து மாடல் பெண் பார்க்கும் சடங்கில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும், ‘இவர்தான் உன் வருங்கால கணவர்’ என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் பெரும்பாலான இளம் பெண்கள் சொல்கிறார்கள். வயதான பெற்றோர்கள் வரனின் வேலை, சம்பளம், குடும்பம், சொத்து இவைகளைத்தான் பார்க்கிறார்கள்.

அவைகள் திருப்திபட்டால், அந்த மாப்பிள்ளைக்கு ஓ.கே சொல்லிவிடுகிறார்கள். அவர் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு சரிப்பட்டு வருவார் என்பது தங்களுக்குத்தான் தெரியும் என்று இளம் பெண்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். எவ்வளவு நல்லவரனாக இருந்தாலும், ‘நாங்கள் பார்த்து பேசி முடிவு செய்துவிட்டோம்.

நீ ஒத்துக்கொள் என்பதுபோல் பெற்றோர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்’ என்று, 68 சதவீத பெண்கள் அதிரடியாக சொல்கிறார்கள். பத்து சதவீத பெண்கள், வாழ்க்கையில் திருமணம் அவ்வளவு முக்கியமில்லை என்கிறார்கள்.

அவர்கள் பெரும்பாலும் வட இந்திய நகரங்களில் போய் தனியாக வேலை பார்த்த அனுபவம் பெற்றவர்கள். ‘அங்கு நிறைய பெண்கள் கல்யாணமே செய்துகொள்ளாமல் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அப்படி தம்மாலும் வாழ முடியும் என்று நம்புவதாக’ அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

திருமணம் முடிந்த பின்பும் தங்கள் வருங்கால கணவரின் சுதந்திரத்தில் தலையிடமாட்டோம் என்று 40 சத வீத பெண்கள் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் கொடுக்கும் சுதந்திரத்தை கணவர் தங்களுக்கு தரவேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கணவருக்கு வேறு பெண்களோடு இருந்த தொடர்பு பற்றி கேள்வி எழுப்பமாட்டோம் என்று 3 சதவீத பெண்கள் சொல்கிறார்கள். 90 சதவீத பெண்கள், திருமண வாழ்க்கையில் நிறைய சிக்கல்கள் இருந்தாலும் திருமணம் செய்துகொள்வோம் என்கிறார்கள்.

ஆனால் 30 வயதிற்கு பிறகு அது போதுமே என்கிறார்கள். 40 சதவீத பெண்கள் திருமணத்தில் ஆடம்பர அலங்காரங்கள் அவசியம் என்கிறார்கள். காரணம், ‘வாழ்க்கையில் ஒருமுறைதான் திருமணம் செய்கிறோம். அதனால் அலங்காரத்திற்கு நிறைய பணம் செலவிடலாம்’ என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்தவேண்டியதில்லை என்று 58 சதவீத பெண்கள் சொல்லும்போது, 42 சதவீத பெண்கள் ‘அந்த விஷயத்தில் பெற்றோர் எடுக்கும் இறுதி முடிவை ஏற்றுக்கொள்கிறோம்’ என்றுகூறி, ஆடம்பரத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக இருக்கிறார்கள்.

திருமணம் முடிந்த மறுநாளே குப்பைக்கு போகும் அழைப்பிதழுக்காக நிறைய பணத்தை செலவிடவேண்டியதில்லை. அது ரொம்ப சிம்பிளாக இருந்தால் போதும் என்று 84 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 70 சதவீத பெண்கள், தங்கள் கணவர் சினிமா கதாநாயகன்போல் இருக்கவேண்டியதில்லை என்று அதிரடியாக கூறியிருக்கிறார்கள்.

நடத்தை, தொழில், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் குணாதிசயம் போன்றவைகளுக்கு அடுத்த இடத்தில்தான் தோற்றத்தை வைப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். சினிமா ஒன்றில் கதாநாயகன், கதாநாயகியிடம் ‘நீ கன்னித்தன்மை கொண்டவள்தானா?’ என்று கேட்பார்.

தங்களிடம் அப்படி ஒருவர் கேட்டால் கோபப்படமாட்டோம். பதிலுக்கு அவரிடம் அதே கேள்வியை திரும்பகேட்போம் என்று 7 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். ‘அப்படிப்பட்ட பழமைவாதியை ஏற்றுக்கொள்ளமாட்டோம்’ என்று 43 சதவீத பெண்கள் சொல்கிறார்கள்.

மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் தங்களுக்கு வேண்டாம் என்றுதான் பெரும்பாலான பெண்கள் கூறியிருக்கிறார்கள். காரணம், மது அருந்துபவர்கள் அளவுக்குள் அடங்கிக் கொள்ளமாட்டார்கள். எல்லை மீறிப்போய்விடுவார்கள் என்ற பயம் பெண்களிடம் இருக்கிறது.

டீன்ஏஜ் பெண்களில் 58 சதவீதம் பேர் தங்களுக்கு சமையல் தெரியும் என்றிருக்கிறார்கள். ஆனால் தங்களை சமையல் அறைக்குள்ளே போட்டுவிடக்கூடாது என்ற பயத்தில், ‘சமையல் அவ்வளவாக தெரியாது’ என்று கூறி விடுகிறார்களாம்! இது எப்படி இருக்கு!

சிறையிலேயே வாழ்வதற்காக குற்றங்கள் செய்யும் வினோத மனிதர்...!



சிறுசிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் நபர்களுக்கு, சிறைவாசம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதற்காக யாரும் சிறையிலேயே பொழுதைக் கழிக்க மனதார விரும்புவதில்லை.

ஆனால், சிறையில் வழங்கும் சாப்பாடு மற்றும் பாதுகாப்பான தங்கும் இடத்துக்காக சீனாவைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் குற்றச் செயலைச் செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வாங் என்று அழைக்கப்படும் 60 வயது முதியவர்தான் இந்த வினோதமான குற்றவாளி.

திருட்டு, பொது இடங்களில் சண்டையிடுதல் போன்ற குற்றங்களுக்காக 7 முறை வாங் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டு வழக்கில் ஒருமுறை 14 வருடங்கள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். ஆனால் சிறை வாசம் முடிந்தபிறகு வெளியில் இருக்க பிடிக்கவில்லை. இதனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்ஜிங்கின் பெங்காட்டி பகுதியில் பேருந்தில் சென்றபோது, டிரைவர் இருக்கைக்கு வேண்டுமென்றே தீ வைத்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாங்கிற்கு, சமீபத்தில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதுபற்றி வாங் அளித்த பேட்டியில், “எனக்கு வீடு ஏதும் கிடையாது. சிறையில் இருந்து வெளிவந்தவுடன் என்னசெய்வதென்றே எனக்கு தெரியவில்லை. சிறையில் நல்ல உணவும் இருக்க பாதுகாப்பான இடமும் கிடைப்பதால் நான் மீண்டும் சிறைக்கு திரும்பி வர முடிவு செய்தேன். எனவே இக்குற்றத்தை செய்தேன்” என்று தெரிவித்தார்.

கல்விக் கடன் வாங்கியவர்கள் பெயரை வெளியிடக்கூடாது...!



பஞ்சாபில் உள்ள வங்கிகளிடம் கல்விக்கடன் பெற்று அதை திரும்ப செலுத்த தவறியவர்களின் பெயர்கள் மற்றும் போட்டோக்களை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நிதியியல் சேவைத்துறை, நிதி அமைச்சகம், மாநில வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டம் நடந்தது. அதில், கல்விக்கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் போட்டோக்கள் வெளியிடும் சில வங்கிகளின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது என கூறப்பட்டுள்ளது.

கடன் கட்டாமல் நிற்கும் மாணவர்களின் சூழ்நிலைகளை தெரிந்து கொள்ளாமல், அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் வங்கிகள் இவ்வாறு செய்ல்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இனிமேலாவது வங்கிகள் இவ்விஷயத்தில் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும். வங்கிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கல்விக் கடன் கேட்பவர்களின் சொத்துக்களை வருடந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாபில் 2013 டிசம்பர் 31ந் தேதி வரை ரூபாய் 1,065.09 கோடி அளவுக்கு கல்விக் கடன் நிலுவையில் உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.


காதலர் தின ஸ்பெஷல் - பாதாம் சாக்லெட் ரெசிபி...!



காதலர் தினத்தன்று உங்கள் காதலரை அசத்த ஆசையா? அப்படியானால், உங்கள் கையாலேயே சாக்லெட் செய்து கொடுங்கள். அதிலும் பாதாம் சாக்லெட் செய்து கொடுங்கள். இந்த ரெசிபி மிகவும் ஈஸியானது மட்டுமல்லாமல், மிகவும் சுவையாகவும் இருக்கும்.

இப்போது அந்த பாதாம் சாக்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பார்த்த பின் முயற்சி செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.


  • தேவையான பொருட்கள்:
  • கொக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
  • வெண்ணெய் – 50 கிராம் (உருக வைத்தது)
  • சர்க்கரை – தேவையான அளவு (குறைந்தது 1 கப்)
  • பால் பவுடர் – 1 கப்
  • தண்ணீர் – 3/4 கப்
  • சாக்லெட் மோல்டுகள் – 10-15
  • வென்னிலா எசன்ஸ் – 2 துளிகள்


செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

கலவையானது சற்று கெட்டியாகும் போது, அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் பால் பவுடர் சேர்த்து உடனே கட்டி சேராதவாறு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் கொக்கோ பவுடர் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து, எலக்ட்ரானிக் பிளெண்டர் கொண்டு கலவையை நன்கு அடிக்க வேண்டும்.

பின் அதில் பாதாம் சேர்த்து கிளறி, இறுதியில் அதனை சாக்லெட் மோல்ட்டுகளில் ஊற்றி, 45 நிமிடம் அப்படியே உலர வைத்தால், சுவையான பாதாம் சாக்லெட் ரெசிபி ரெடி..!

இது பிரசாரமா அல்லது...நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் மக்களே...!



பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. நடிகைகளும் இதில் குதிக்கிறார்கள். பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்து இந்தி நடிகை மேக்னா படேல் சமீபத்தில் செக்ஸ் போஸ் கொடுத்தார். தாமரை மலர்கள் மேல் படுத்தும் நரேந்திர மோடி படத்தால் நிர்வாண உடலை மறைத்தும் பாரதீய ஜனதாவுக்கு ஒட்டு போடுங்கள் என்று கேட்டார். இந்த படங்கள் இன்டர்நெட்டில் வேகமாக பரவியது.

ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக அறிமுகம் இல்லாமல் இருந்த அவர் இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்தன் காரணமாக ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார்.

நரேந்திர மோடிக்கு நூதன முறையில் ஒட்டு கேட்ட மேக்னாவின் படங்களை பார்க்க அவரது இணைய தளத்தில் ஆயிரக்கணக்கானோர் புகுந்தனர். இதனால் அவரது இணைய தளம் செயல்படாமல் நேற்று இரவு முடங்கியது.

இதுகுறித்து மேக்னா கூறும்போது, ‘‘என் இணைய தளத்திற்கு ஏராளமானோர் வந்ததால் அது கிராஷாகி விட்டது. அவர்கள் மோடியின் ஆதரவாளர்கள். மோடியால்தான் நிலையான அரசை அளிக்க முடியும். அவரை பிரதமராக்க ஒட்டளியுங்கள்’’ என்றார்.

இதற்கு போட்டியாக ராகுல்காந்திக்கு ஆதரவு தெரிவித்து இந்தி நடிகையும் மாடலிங் அழகியுமான தனிஷாசிங்கும் செக்ஸ் போஸ் கொடுத்துள்ளார். ஆடைகளை துறந்து காங்கிரஸ் கொடியையும் கை சின்னத்தையும் மட்டும் உடலில் போர்த்தி கொண்டு போஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே இவர் ஆட்டு இறைச்சியை ஆடையாக உடுத்தி போஸ் தொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து மேலும் பல நடிகைகள் ஆடையை துறந்து போஸ் கொடக்க தயாராகி வருகிறார்களாம்.

வங்கிகளில் கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம். மூலம் பணம் பெறலாம்...!



வங்கிகளில் கணக்கு இல்லாதவர்களும் பிறர் அனுப்பும் பணத்தை ஏ.டி.எம். மூலம் பெறும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

தற்போது வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பணத்தை ரொக்கமாக பெறமுடியும்.வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து, வங்கி கணக்கு இல்லாத வாடிக்கையாளர்களுக்கு தொகையை ஏ.டி.எம். வாயிலாக அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து ரகுராம் ராஜன்,”ஒருவரால் அனுப்பப்படும் பணத்தை பெறும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. எனவே, இவர்களுக்கு பணத்தை ரொக்கமாக பெறும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டியது அவசியம்.
பணத்தை அனுப்புபவரின் வங்கி கணக்கிலிருந்து, அனுப்பப்பட்ட தொகை ஏ.டி.எம். பரிவர்த்தனை வாயிலாக பெறப்படுகிறது. பணத்தை பெறுபவருக்கு அவரது செல்போனுக்கு ஒரு ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். இதனை வைத்து அவர் அருகிலுள்ள ஏ.டி.எம்.மிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டம் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும். வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் சேவையை வழங்குவதற்கு வங்கிகளுக்கும், செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இன்னும் சில மாதங்களில் இந்த நடவடிக்கை முடுக்கி விடப்படும். இதற்காக தொழில்நுட்ப வசதியும் உரிய முறையில் மேம்படுத்தப்படும்.நம் நாட்டில் 90 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளன. எனவே, மொபைல் பேங்கிங் வசதியை எளிதில் அறிமுகப்படுத்தலாம்.” என்று தெரிவித்தார்.

பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்..! ஆய்வில் தகவல்



உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும்.

இத்தகைய பீரை அளவாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, இந்த பீரைப் பற்றிய பல உண்மைகளை, ஆய்வுகள் பல கூறுகின்றன. அவற்றில் பீரை அளவாக அருந்தி வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை 45% வருவதை தவிர்க்கலாம் என்றும், பீர் எலும்புகளை பலப்படுத்தும் என்பன குறிப்பிடத்தக்கவை. மேலும் இதுப்போன்று அந்த பீரைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

*பீர் பிராண்ட்டுகள்

உலகில் சுமார் 400 வகையான பீர்கள் உள்ளன. இந்த 400 வகையான பீர்களின் சுவையையும் ருசிக்க வேண்டுமெனில், பெல்ஜியம் சென்றால் கிடைக்கும். ஏனெனில் இங்கு அனைத்து வகையான பீர்களும் கிடைக்கும்.



*பீர் ஃபோபியா

உங்களுக்கு பீர் ஃபோபியா பற்றி தெரியுமா? ஆம், பீர் குடிக்கும் போது, முழுவதும் குடித்தப் பின்னர், அதன் பாட்டிலை காலியாக பார்க்கவே முடியாது. அதனால் பாட்டில் காலியாக காலியாக அடுத்தடுத்த பீரை குடிக்க வேண்டுமென்று தோன்றும். என்ன உங்களுக்கு இந்த பீர் ஃபோபியா இருக்கா?



*உண்மையான பீர்

பீரைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளில் ஒன்று தான், அசல் பீரானது சிச்சா என்று அழைக்கப்படும் நொதிக்கப்பட்ட நீரில் இருந்து செய்யப்பட்டது என்பதாகும்.


*சளிக்கு சிறந்தது

சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது 1 டம்ளர் பீர் குடித்தால், பீரில் உள்ள எத்தனால் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். அதிலும் இந்த பீரை சாப்பிட்டால், 60 சதவீத கிருமிகள் உடலில் இருந்து அழிக்கப்படும்.


*இதய நோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை சரிசெய்ய நினைத்தால், ஒரு டம்ளர் பீர் சாப்பிட்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். அதிலும் ஒரு பாட்டில் பீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பிளாஸ்மாவை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்



*அழகு

பீரில் உள்ள மற்றொரு உண்மை என்னவென்றால் பீரை பெண்கள் குடித்து வந்தால், பீரானது அழகாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்க வைக்கும்.



*ஆரோக்கியமான எலும்புகள்

அளவாக பீரை பருகி வந்தால், எலும்புகள் நன்கு வலிமையடைவதோடு, எலும்புகளில் அடர்த்தியானது பாதுகாக்கப்படும். இதனால் எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.



*ஸ்மார்ட்டாக்கும்

எப்போதும் ஸ்மார்ட்டாக இருக்க விரும்பினால், ஒரு டம்ளர் பீர் குடித்தால் ஆகலாம். ஏனெனில் பீர் குடித்தால், புரிந்து கொள்ளும் திறனானது மேம்படுத்தப்பட்டு, ஸ்மார்ட்டான நபராக மாற்றும்.



*ஆற்றல் பானம்

உடலில போதிய ஆற்றல் இல்லாவிட்டால், அப்போது ஒரு டம்ளர் பீர் குடித்தால், உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதோடு, ஆற்றலும் அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.



*விலை உயர்ந்த பீர்

மிகவும் விலை உயர்ந்த பீரை குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆம், அங்கு தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பீரான ‘Vielle Bon Secours’ உள்ளது. அதுவும் லண்டனிலேயே ஒரே ஒரே ஒரு பாரில் மட்டும் தான் விற்கப்படுகிறது.





200 கோடி சொத்து மண்டேலாவின் வாரிசுகள் - ரகசிய காதலியின் மகள்கள்

200 கோடி சொத்து மண்டேலாவின் வாரிசுகள் என அறிவிக்க வேண்டும் ரகசிய காதலியின் மகள்கள் கோரிக்கை..!


ஜோகன்னஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவின் தேச தந்தை என புகழ்பெற்ற நெல்சன் மண்டேலா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் விட்டு சென்ற சொத்தின் மதிப்பு ரூ.200 கோடியை தாண்டும் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் நெல்சன் மண்டேலாவிற்கு நாங்களும் வாரிசுகள்தான் என அவ ரது ரகசிய காதலியின் மகள்கள் கோரிக்கை எழுப்பிஉள்ளனர். இதுகுறித்து கடந்த 2009ம் ஆண்டு காலமான சமூக சேவகர் இம்போ புலே என்ற பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஓனிகா மோத்தவா என்ற பெண்ணும் நெல்சன் மண்டேலாவின் ரகசிய காதலிக்கு பிறந்த குழந்தைகள் என சட்ட ரீதியான நோட்டீஸ் ஒன்றை மண்டேலாவின் குடும்பத்தினருக்கு அனுப்பியிருந்தது வெளியாகியுள்ளது.


இதுகுறித்து அவர்களது வக்கீல் மைக்கேல் கட்ஸ் கூறுகையில், இம்போ புலேவும், ஓனிகா மோத்தவாவும் நெல்சன் மண்டேலாவின் அதிகாரப்பூர்வ வாரிசுகள் என்று தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்களே ஒழிய, அவரது சொத்தில் ஒரு சிறிய பங்கு கூட தங்களுக்கு வேண்டாம் என்று அறிவித்துள்ளனர் என்று தெரிவித்தார். தற்போது இந்த விவகாரம் தென் ஆப்ரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. -

விண்டோஸ் 9 வதந்தியால் விண் 8 விற்பனை மந்தம்...!



பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 மக்களை அவ்வளவாகச் சென்றடையவில்லை. புதிய அப்ளிகேஷன்களுக்கும், சிஸ்டம் பயன்படுத்தும் வழிகளுக்கும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலை, அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் ஒத்திசைவு போன்றவற்றால், மக்கள் விண் 8க்கு மாற்றிக் கொள்ளத் தயங்கினர். எக்ஸ்பியை விட்டு வெளியேறும் முடிவெடுத்தவர்கள் கூட, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குத் தங்களை மாற்றிக் கொண்டனர்.

ஆனால், அதன் பின், வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களை அடுத்து, விண் 8.1 வெளியானது. இதில் பல புதிய வசதிகள் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் கிடைத்தன. இந்நிலையில், விண்டோஸ் 9 உருவாக்கப்பட்டு வருவதாகப் பலத்த வதந்திகள் வெளியாகியுள்ளன.

அது வெளிவரும் உத்தேச நாள் குறித்தும் பத்திரிக்கைகளில் செய்திகள் ஊகத்தில் வெளி வந்தன. இதனைக் கேள்விப் பட்ட பல நிறுவனங்கள், தாங்கள் வாங்க விருந்த விண்டோஸ் 8 மற்றும் விண் 8.1 பதித்த கம்ப்யூட்டர்கள் வாங்குவதனை ஒத்தி போட்டுள்ளன. மேலும், விண் 7 சிஸ்டத்திற்கு 2020 ஆம் ஆண்டு வரை சப்போர்ட் கிடைக்கும் என்பதால், பொறுத்திருந்து விண்டோஸ் 9 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் எனப் பல நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

இதற்குக் காரணம், தங்கள் ஊழியர்கள் அடுத்தடுத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மாற்றுகையில், வேலை மேற்கொள்வதில் சிரமப்படுவதாகக் கூறுகின்றனர். ஆயிரக் கணக்கில் ஊழியர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் உற்பத்தி இதனால் பாதிக்கப்படுகிறது. எனவே தான், இவை பொறுமை யாக, அடுத்த சிஸ்டம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மாறிக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளனர்.

சகல நோய்களுக்கும் நிவாரணி எலுமிச்சை...!



உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை.
அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய நன்மைகள் உள்ளன என்று தெரியும்.

அதிலும் பெரும்பாலான மக்கள், எலுமிச்சை சாப்பிட்டால் உடல் எடை மட்டும் தான் குறையும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் அந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளன. மேலும் இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு நிறைய நன்மைகளைத் தருவதோடு, துணிகள் மற்றும் பாத்திரங்களில் இருக்கும் கறைகளை நீக்கவும் பயன்படுகிறது.

எலுமிச்சை உடல் எடை மற்றும் முகப்பருக்களை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம் தான். ஆனால் இந்த நன்மைகளைத் தவிர, இந்த சிட்ரஸ் பழத்தில் வேறு என்ன நன்மைகள் உள்ளன என்பதை பார்ப்போம்,

எலுமிச்சையின் நன்மைகள்

* எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.

* செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால், சரிசெய்துவிடலாம். வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும், செரிமானப் பிரச்சனையை சரிசெய்யலாம்.

* இந்த எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால், அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து, தொற்றுநோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.

* எலுமிச்சையின் ஒரு சிறந்த யாருக்கும் தெரியாத நன்மை என்று சொன்னால், அது எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது என்பது தான். அதுமட்டுமின்றி, அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கும்.

* பெண்கள் எலுமிச்சை சாற்றை அதிகம் குடித்தால், எலுமிச்சையில் இருக்கும் கார்சினோஜென் பெருங்குடல், புரோஸ்ட்ரேட் அல்லது மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

* மேலும் எலுமிச்சை ஜூஸ், உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, பொலிவற்று இருக்கும் சருமத்தையும் பொலிவாக்கும். எனவே எலுமிச்சை சாற்றை தினமும் பருகினால், அழகாக சருமத்தை பெறலாம்.

* எலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்படுத்தினால், விரைவில் அதனை நீக்கலாம்.

மேலும் பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தினாலும், அந்த பிரச்சனைகளை தடுக்கலாம்.

பற்களில் உள்ள காரையை ஒரே நிமிடத்தில் போக்க எளியவழி...



அடிக்கடி தொலைக்காட்சிகளில் பற்களில் காரை படிந்துள்ளதா….? உங்கள் டூத் பேஸ்டில் உப்பு இருக்க என கவர்ச்சி விளம்பரங்களால், நாமும் இருக்கும் அனைத்து டூத் பேஸ்ட் மற்றும் பிரஸ் வாங்கி உபயோகித்தும் ஒரு பலனும் கிடைக்காது. பல்லுதான் தேய்ந்துபோகும்.

பற்காரையை நீக்க உங்களுக்கு பக்கவிளைவுகள் இன்றி ஒரு எளிய வழி.

நீண்ட நாட்களாக பற்களில் படிந்துள்ள காரையை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (pottasium permanganate KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும். இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும் (துவர்ப்புத் தன்மை கொண்டது).

 அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது, கரு ஊதா நிறமாக மாறி துவர்ப்புத் தன்மையை அதிகரித்து விடும். கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்ய வேண்டும். பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

குறிப்பு:- இந்த முறையை அடிக்கடி செய்வது நல்லதல்ல, வருடத்திற்கொரு முறை செய்து கொள்வது நல்லது

பெண்களே...! காதலர் தினத்தன்று உங்கள் காதலனுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்…?



பொதுவாகவே ஆண்கள் ஷாப்பிங் செய்வது சற்று விசித்திரமாகவே இருக்கும். அதனால் அவர்களுக்கு பரிசுகள் தேர்ந்தெடுப்பதும் கடினமாக இருக்கும்; முக்கியமாக காதலர் தினத்திற்கு வாங்கும் பரிசுகள். ஒரு வேளை, நீங்கள் காதலித்து கொண்டிருந்தால், உங்கள் காதலனுக்கு கண்டிப்பாக ஒரு சிறந்த பரிசை அளிக்க வேண்டுமல்லவா?

அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் நீங்கள் அவரை எந்தளவுக்கு விரும்புகிறீர்கள் என்பதையும் அவருக்கு எடுத்துக் காட்டுவது மிகவும் முக்கியம். அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் பரிசுகளை தேர்ந்தெடுத்து, பூங்கொத்து மற்றும் இனிப்புகளுடன், இந்த பிப்ரவரி 14-ஐ அவருக்கு மறக்க முடியாத தினமாக மாற்றுங்கள்.
சுவாரஸ்யமான வேறு: பாரம்பரிய காதலர் தின பரிசுப் பொருட்களுக்கான அர்த்தங்கள்!!!

நீங்கள் அவருக்காக எந்த பரிசுகளை தேர்ந்தெடுத்தாலும் சரி, அது அவரை பாராட்டி மகிழ்விக்கும் வகையில் இருக்க வேண்டும். அவருடைய பொழுது போக்குகள் மற்றும் நடவடிக்கைகளை நீங்கள் நன்றாக அறிந்திருந்தால், அது சம்பந்தப்பட்ட பரிசுகளை தேர்ந்தெடுங்கள். அவர் எதிர்பார்க்கும் பரிசுகளை வாங்கினால், அது அவர் யூகிக்கும் வகையில் அமைந்து விடும். அதனால் எதிர்பார்க்காத பரிசுகளை அளித்து, காதலர் தினத்தில் அவருக்கு ஆச்சரியங்களை அளித்திடுங்கள்.

*உங்களுக்கு பிடித்த டியோடரண்ட்


நீங்கள் அவருடன் இருப்பதால், அவருக்கு ஏற்கனவே பிடித்த வகை டியோடரண்ட்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த காதலர் தினத்தன்று அவரை மணக்கச் செய்திடுங்கள்.


*டெடி பியர் ஜோடிகள்


உங்கள் காதலனுக்கு கொடுக்க இது ஒரு சிறந்த காதல் பரிசாக திகழும். உங்களுக்கு பிடித்த டெடி பியர்களை வாங்கி, அதனை உங்கள் வீட்டு காதல் நாற்காலியில் உங்களுக்கு பிடித்த தோரணையில் வைத்திடுங்கள். அதற்கு மேலும் அழகு சேர்த்திட, உங்கள் பெயரையும் உங்கள் காதலன் பெயரையும் அதில் எழுதிடலாம் அல்லது காதலர் தினத்தில் உங்கள் காதல் உணர்வை அவரிடம் வெளிப்படுத்தும் வகையிலான வார்த்தைகளை அதில் எழுதலாம்.


*இரண்டு பேரும் செல்வதற்கான எதிர்பாரா டின்னர்


உங்கள் இருவரின் வாழ்க்கையிலும் முக்கிய அர்த்தத்தை அளித்திடும் வேகமான மற்றும் எளிமையான பரிசு தான் எதிர்பாரா டின்னர். நீங்கள் இருவரும் முதல் முறை டேட்டிங் சென்றதை போல், மீண்டும் ஒரு முறை, காதல் உணர்வுமிக்க சூழ்நிலையில், அதே உணவுகளுடனான டின்னருக்கு சென்றால், அவர் மீது உங்களுக்கு இன்னமும் அதே அளவு காதல் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்வார். அவருக்கு பிடித்த வண்ணம் ஆடைகள் அணிவித்துக் கொள்ளுங்கள். உணவகத்திற்கு செல்லும் போது, காதல் கார்ட்


*கைக்கடிகாரம்


உங்கள் காதலனுக்கு காதலர் தினத்தன்று அளிக்க வேண்டியான சரியான பரிசு தான் கைக்கடிகாரம். காதலை வெளிப்படுத்தும் நகை வகையை சார்ந்த பரிசாக இது பார்க்கப்படும்.


*பீர்


மற்றும் நொறுக்குத்தீனி கூடை உங்கள் ஆண் மகனுக்கு நீங்கள் காதலர் தினத்தன்று அளித்திட மற்றொரு சிறந்த பரிசு இது. சுவை மிக்க பீர்கள் மற்றும் மனதை நிறைக்கும் நொறுக்குத்தீனிகளை கொண்டுள்ள பரிசு கூடையாக இது விளங்கும். அதற்கு கூடுதல் அழகை சேர்ப்பது உங்களின் விருப்பம். இந்த பிப்ரவரி 14-ஐ உங்கள் காதலனுக்கு சுவை மிகுந்ததாக மாற்றுங்கள்.


*ரொமான்டிக் கப்


ரொமான்டிக் கப்பை பரிசாக கொடுத்தல், தினமும் காலை அதில் காபி குடிக்கையில் உங்கள் ஞாபாகம் வரும்; நீங்கள் இருவரும் ஒன்றாக செலவிட்ட நேரங்கள் ஞாபாகத்திற்கு வரும். இவ்வகை கப் கவர்ச்சியுடன் விளங்கும். உங்களுக்கு பிடித்த டிசைனை தேர்வு செய்யலாம்; உதாரணத்திற்கு மணல் டிசைனில் இதயங்கள், கற்கள் அடங்கிய டிசைனில் இதயங்கள் அல்லது இதழ்கள் டிசைனில் இதயம் அல்லது உங்கள் காதலருக்கு பிடித்த டிசைன்.


*காதலர் தின சிறப்பு பரிசு – கட்டிப்பிடித்து முத்தங்கள்


இந்த அருமையான பரிசு, காதலர் தினத்திற்காக உங்கள் மனம் விரும்பிய காதலனுக்கு கொடுக்க வேண்டிய விசேஷமான பரிசு. அவரை வெட்கப்பட வைக்கும் சுவைமிக்க கலவையான பரிசு இது. இந்த பரிசு கண்டிப்பாக அவரை “ஆஹா” என்று சொல்ல வைக்கும்.


*லெதர் பர்ஸ்


ஈர்க்கும் வகையில் பர்ஸ் வைத்திருப்பது ஒவ்வொரு ஆணுடைய பெர்ஸ்னாலிடியின் அதி முக்கிய பங்கை வகிக்கும். அதனால் காதலர் தினத்தன்று தூய்மையான லெதர் பர்ஸை அவருக்கு வழங்கினால், அதனை கொண்டு அவர் ஸ்டைலாக நடை போடுவார். நீங்கள் வாங்கும் பர்ஸ் எளிமையாக இருக்க வேண்டும். மேலும் அவரின் பாக்கெட்டில் சுலபமாக சென்று வருமாறு சிக்கென இருக்க வேண்டும்.

காதலர் தினம் இதயங்களை இணைக்கும்...!

காதலர் தினம் இதயங்களை இணைக்கும் முதல் சந்திப்பு


காதல் பூக்கும் தருணம் என்பது யாராலும் கணிக்க முடியாதது. கண்ணசைவில் காதல் மொழிகள் பரிமாறப்பட்டு விடும். கோயில் திருவிழா, உறவினர் இல்லம், பஸ் நிலையம் என முதலில் பார்த்தவுடன் பிடித்துப்போன பெண்ணின் இதயத்தில் இடம் பிடிப்பதற்கு இளைஞர்கள் என்னவெல்லாமோ செய்து பார்ப்பர். நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? என்று குழம்புகிறீர்களா?

உங்களுக்குத்தான் இந்த டிப்ஸ்:


« முதல் சந்திப்பு ஒரு பரீட்சை மாதிரி. முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து கொள்ள வேண்டும். சாதாரணமான கேள்விகளுக்கு இடமளிக்காமல் சுவையான, தனித்தன்மையான கேள்வி பதில்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அவை நிச்சயம் பெண்களைக் கவரும்!

« மிக எளிமையான வழி என்னவென்றால் காதலிக்க நினைக்கும் பெண்ணைப் பற்றியே அதிகம் பேசுங்கள். அவர்களைத்தான் இந்த பூமியே சுத்தி வருகிறது என்பதுபோல் பேசினால் எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காது?

« அவர்கள் நிறையப் பேச சந்தர்ப்பம் அளிக்கும் கேள்விகளைக் கேளுங்கள். அவர்கள் சந்தோசமாகப் பேசினால் பாதி வெற்றிதான்.

« அவர்களைப் பாராட்டுங்கள். உங்கள் பேச்சில் வெளிப்படையாகத் தெரியாமல் பாராட்டைப் பின்னுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும்போது அவர்கள் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!

« கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்றுமுற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள்.

« கொஞ்சம் அன்றாடச் செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய சுவாரசியமான செய்திபற்றி உங்கள் காதலி பேசும்போது ஒன்றும் தெரியாமல் சமாளிப்பது கஷ்டம்.

« முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். எடுத்துக் காட்டாக சுற்றுலா பற்றியோ, நீங்கள் செய்த வெளிநாட்டு வேலை பற்றியோ, உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன் கூட்டியே தயார் செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும்.

« அவர்களின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா!

« அவர்கள் உங்களுடன் பேச வரும்போது என்ன உடை, நகை, கைப்பை அல்லது வித்தியாசமான சங்கிலி அல்லது வளையல் அணிந்து உள்ளாரா என்று நாசூக்காக கவனியுங்கள். அதைப் பற்றி புகழ்ந்து பேசுங்கள்.

« அவர்கள் நாய், பூனை என்று எதையாவது வளர்க்கிறார்களா என்று விசாரிக்கவும். வளர்த்தால் ரொம்ப சந்தோசம்..நம்ம பேச்சை வளர்க்கலாம்!

« அவர்களின் குடும்பத்தில் உள்ள நபர்களைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள்.

«  இருவருக்கும் பொதுவான விஷயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விஷயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!! இப்படி நாலைந்து பொதுவான விஷயங்களைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது


இளசுகளின் எண்ணம் என்ன?

சுகன்யா: காதலர் தினம் என்பது வெளிநாட்டில் இருந்து வந்த கலாசாரம். இதற்காக கடற்கரை, பூங்கா என காதலர்கள் சுற்றாமல் திருமணத்துக்கு பிறகு இருவரும் காதலிப்பதும், அப்போது இந்த தினத்தை கொண்டாடினால் சிறப்பாக இருக்கும்.

கார்த்திகை சுடர்: தற்போது உள்ள யூத், பெற்றோருக்கு தெரியாமல் காதலர் தினத்தை கொண்டாடக் கூடாது. காதலிக்க ஆரம்பித்து விட்டால் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் காதல், திருமணத்தில் முடிவடையும். இந்த தினத்தின்போது காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும்.

ரஞ்ஜித்: மானிட சமூக வளர்ச்சிக்கு காதல் அவசியம். சாதி மதம் வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்வதற்கு அவசியமாகிறது. இதனால் நாம் காதலர் தினத்தை கண்டிப்பாக கொண்டாட வேண்டும்.

இது இவங்க கருத்து

பாஜ இளைஞரணி மாநில செயலாளர் மகேஷ்: நமது கலாசாரத்தில் காதலர் தினம் கிடையாது. வெளிநாட்டில் இருந்து வந்த கலாசாரம். இந்த தினத்தின் பெயரில் பள்ளி சிறுவர்கள் கூட இந்த மயக்கத்துக்கு ஆளாகின்றனர். காதல் என்பது புனிதமான விஷயம்தான். இப்போது அந்த காலத்து புனிதமான காதல் இல்லை. காதல் என்ற பெயரில் காமத்தை வெளிப்படுத்துகின்றனர். காதல் காமமாக மாறும்போதுதான் எதிர்க்கிறோம்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் பொறுப்பாளர் சிவா: பெண்களை கடவுள்களின் உருவாக வணங்கி போற்றுகின்ற பூமி. ஆனால் பெண்களை ஆபாசமாகவும், போதை பொருளாகவும் சித்தரிக்கும் காதலர் தினத்தை கொண்டாடுவது வேதனையாகும். அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஈவ்டீசிங் செய்யப்படுகின்றனர். எனவே காதலர் தினத்தை எதிர்க்கிறோம்.

காதலை வசப்படுத்தும் வர்ணங்கள்:

பச்சை: காதலிக்க நான் ரெடி. உங்களுக்காக நான் காத்திருக்கிறேன்.

ரோஸ்: இப்பொழுதுதான் காதலில் விழுந்தேன்.

நீலம்: என் இதய அறை இன்னும் காலியாகவே உள்ளது.

வெள்ளை: நான் ஏற்கனவே காதலிக்கிறேன்.

செம்மஞ்சள்: காதலிப்பது மட்டுமல்ல, நான் நிச்சயம் செய்யவும் ரெடி.

சிவப்பு: காதல் என்ற வார்த்தையே எனக்கு பிடிக்காது.

கறுப்பு: காதலை ஏற்க விரும்பவில்லை.

மஞ்சள்: காதல் பரீட்சை எழுதி பெயிலானவர்கள்.

பிங்க்: கணக்கற்ற காதல் கனவு உள்ளது.

பெற்றோர் சம்மதத்துக்கு சில ஐடியாக்கள்....

இருமனம் மட்டும் இணைந்த காதலை அனைத்து மனங்களும் ஏற்றுக் கொண்டால்தான் திருமண வாழ்வு இனிதாய் அமையும். பல காதல் பெற்றோரின் சம்மதம் கிடைக்காததாலேயே கருகிப் போய் விடுகிறது. அவர்களின் சம்மதம் பெற இதோ சில ஐடியாக்கள்.

1. உங்கள் காதலனையோ, காதலியையோ பெற்றோர் வெறுக்கும் காரணம் என்ன என்பதை கண்டுபிடியுங்கள்.

2. உங்களின் காதலின் தீவிரத்தையும், அன்பின் ஆழத்தையும் அவர்களும் புரிந்து கொள்ள சிறிது காலம் கொடுங்கள்.

3. ஆனால் இதைப்பற்றி உங்கள் காதல் இணையிடம் தகவல் தெரிவித்து விடாதீர்கள்.

4. உங்கள் காதலின் நிலை, எதிர்கால திட்டங்கள் குறித்து குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுங்கள்.

5. அவர்களின் இடத்திலிருந்து நீங்கள் யோசியுங்கள்.

6. உங்கள் விருப்பத்தையும், உணர்வுகளையும் பெற்றோருக்கு புரியவைக்க முயலுங்கள்.

சில நேரங்களில் இவை உபயோகப்படாமல் போகலாம். வறட்டு கவுரவம், அந்தஸ்து காரணங்களுக்காக உங்கள் காதலை எதிர்க்கும்போது, உங்கள் காதலின் மீது கலைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் நன்கு சிந்தித்து உங்களின் வாழ்வை தேர்ந்தெடுங்கள்.

காதல் ராசி:

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும்  என்று ஜோதிடங்கள் கூறுவதையும் பார்த்து கொள்ளுங்கள்.

மேஷம்: இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்: காதலில் கை தேர்ந்தவர்கள். இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும்.

மிதுனம்: தங்களை தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே.

கடகம்: இவர்களுக்கு காதல் ஒத்து வராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம்.

சிம்மம்: காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக, மிக விரும்புவர்.

கன்னி: அன்பு மட்டுமின்றி கடமை உணர்வும் கொண்டவர்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது.

துலாம்: இவர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார்.

விருச்சிகம்: காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர்.

தனுசு: காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பர். காதல் வெற்றிக்கு அதிக கஷ்டப்படுவார்.

மகரம்: உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

கும்பம்: காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது.

மீனம்: அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். நேசிக்கின்றவர்களை இவர்கள் அதிகம் நேசிப்பார்கள்.

காதலை வெளிப்படுத்த டிப்ஸ்:

ஒரு காதலனாக உங்கள் காதலியிடம் அன்பின் அறிகுறிகளையும் சிக்னல்களையும் நிச்சயமாக நீங்கள் காட்ட வேண்டும். காதல் என்ற வார்த்தையை அவளிடம் சொல்வதற்கு சரியான நேரமும் பயிற்சியும் அவசியமாகும்.அப்படிப்பட்ட நேரம் வரும் வரை நீங்கள் நிச்சயமாக வேறு பல வழிகளில் உங்கள் காதலை வெளிபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். காதலியிடம் அன்பாகவும் அக்கறையாகவும் இருப்பது தான் நீங்கள் தொடங்க வேண்டிய முதல் செயலாகும். பரிவாகவும், தீர்க்க சிந்தனையுடனும், ஆதரவாகவும் மற்றும் அவளுக்கு தேவைப்படும் நேரத்தில் அவளுடன் இருப்பதுமே உங்கள் அன்பின் அறிகுறியாக இருக்கும். ஒரு மலர் கொத்தை கொடுத்தோ அல்லது கடிதத்தின் மூலம் உங்களது அன்பை பிரதிபலிக்க வைக்கலாம். இவைகள் யாவும் காதலிக்க முன்பு செய்ய வேண்டும்.

இருவரும் நேருக்கு நேராக பார்க்க முடியாது. பிரிந்திருக்கும் காலமும் உண்டு. அந்த சமயத்தில்  உங்களது காதலைப் பற்றி, கவிதையாவோ கடிதமாவோ வரைந்தால் அது உங்கள் அன்பை மிகுதி படுத்தும். அழகை புகழ்ந்து பேசுங்கள் இதற்காக முன் கூட்டியே திட்டமிட வேண்டாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அவளுடைய அழகை நல்ல முறையில் புகழ்ந்து பேசுங்கள்.  உண்மையும்.. மரியாதையும்.. நீங்கள் எந்த அளவிற்கு அவளை விரும்புகிறீர்கள் என்று உங்களுக்கு மிக அதிக மதிப்பெண்களை பெற்று தரும். ஒரு உறவில் எல்லா நேரங்களிலும் உண்மையாக இருப்பதும் மற்றும் அவளை மிகவும் மரியாதையுடன் நடத்துவதும் மிகவும் அவசியம். நீங்கள் உண்மையான காதலுடன் காதல் வார்த்தைகளை சொன்னால், அது கண்டிப்பாக வேலை செய்யும்.

'' எஸ். பி. பாலசுப்பிரமணியம் '' - வாழ்க்கை வரலாறு



ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். 1966 முதல் பல்லாயிரக் கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசால் இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் அளிக்கப்பட்டது.

தொடக்கம்

1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அடியெடுத்து வைத்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், இன்றும் தொடர்ந்து முன்னணிப் பாடகராகத் திகழ்ந்து வருகிறார். இவர் தமிழில் முதலில் பாடியது சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாட்டு. ஆனால் அது வெளிவரும் முன்னே எம்.ஜி.ஆர் ருக்காக அடிமைப் பெண் திரைப்படத்தில் எஸ்.பி.பி. பாடிய ஆயிரம் நிலவே வா வெளிவந்தது. இப்பாடல் பட்டி தொட்டிகளிலெல்லாம் புகழ் பெற்று ஒலித்தது.

சாதனைகள்

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பவர் எஸ்.பி.பி. ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி. அவர்கள் முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.

இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார்.


தேசியவிருதுகள்


வருடம் திரைப்படம் பாடல்    மொழி

1996 மின்சார கனவு    தங்க தாமரை   தமிழ்

1995 சங்கீத சகர கனயோகி பஞ்சக்ஷற கவை உமண்டு க்ஹுமண்டு கன கர் கன்னடம்

1988 ருத்ரவீன செப்பாழனி உண்டி   தெலுகு

1983 சாகர சங்கமம் வேதம் அனுவனுவுன தெலுகு

1981 ஏக துஜே கே லியே தேரே மேரே பீச் மேனி ஹிந்தி

1979 ஷங்கர்பாரணம் ஓம் கார நதானு தெலுகு


இளைஞர்களின் கனவு

குரலில் உற்சாகம், உணர்ச்சி, பாவம் குன்றாமல் எஸ்.பி.பி. பாடிவருகிறார்.எஸ்.பி.பி பாடிய பாடல்களில் இசையமைப்பாளரின் கற்பனையையும் கடந்த நகாசு வேலை அற்புதமாக வெளிப்படும். மெல்லிசைக்கான அத்தனை லாவகங்களையும் குரலில் வெளிப்படுத்தக்கூடியவர் அவர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் பலகாலமாக இளைஞர்களின் கனவுக்குரலாக இருந்துவருகிறது. கல்லூரிகளில் நடக்கும் பாட்டுப் போட்டி இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் பலரும் அவரைப் போலவே பாட முயற்சிப்பது காணக்கூடியதாக இருக்கும். இளமைத் துள்ளலின் பிரதிபலிப்பாகவும் உற்சாகத்தின் உறைவிடமாகவும் விளங்கியது எஸ்.பி.பி.யின் குரல். நகைச்சுவை உணர்வை சிரிப்பாகவும் கிண்டலாகவும் பாடும்போதே வெளிப்படுத்தக்கூடியவர் அவர்.

இளையராஜாவுடன் இணைதல்

இளையராஜா பிரபலமாவதற்கு முன்பு எஸ்.பி.பி.யின் இசைக்குழுவில் இருந்தார் என்பதால் ஒருவரை ஒருவர் ஒருமையில் கூப்பிட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவருக்குமிடையில் நட்பு. இளையராஜா-எஸ்.பி.பி. கூட்டணியில் காலத்தால் அழியாத பல அற்புதப் பாடல்கள் வெளிவந்தன. யாட்லிங் செய்வது, குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் வேண்டியது போல மாற்றிப் பாடுவது, பாடும்போதே சிரிப்பது, கிண்டல் தொனிக்கப் பாடுவது என்று வர்ணஜாலங்களையும் பாட்டில் வெளிப்படுத்தக் கூடியவர் எஸ்.பி.பி.

இரவில் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வைக்கும் பில் கேட்ஸ்...!



கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாலே நம் வீட்டு இளசுகள் சாப்பிட்ட கையைக் கூட கழுவாமல் கணினி முன் அமர்ந்திருக்கும் நிலையில், உலகின் பெரும் செல்வந்தரான மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ், தினமும் தான் சாப்பிட்ட தட்டுகளை தானே கழுவி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அவரது முதலீடுகளின் வாயிலாக ஒவ்வொரு வினாடியும் 114.16 அமெரிக்க டாலர்களை வட்டியாக ஈட்டி வரும் பில் கேட்ஸ், ஆன்லைனில் நேற்று வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, தினமும் இரவில் நான் சாப்பிட்ட தட்டுகளை நானே சுத்தம் செய்து வைக்கிறேன். இது எனக்கு மன நிறைவை தருகிறது. ஒரு விஷயம் உங்களுக்கு மன நிறைவை தருகிறது என்றால் அதை செய்யுங்கள். அது மற்றவர்கள் உங்களிடம் எதிர்பார்க்காத ஒன்றாகக் கூட இருக்கலாம் என்று கூறினார்.

மற்றொரு கேள்விக்கு, இப்போதும், தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை குனிந்து எடுக்க ஒரு நிமிஷம் கூட நான் தயங்க மாட்டேன். இதற்காக எனது நேரம் செலவாவதை பற்றி கவலைப்பட மாட்டேன் என்று அதிரடியாக பதில் அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.


 
நண்பேன்டா