Wednesday 26 February 2014

கூகுளே பின்வாங்கிய சேவைகள் இவைதான்..!



தற்போது உலகின் மொத்த இணையத்தையே தனது பிடிக்குள் வைத்திருப்பது யார் என்றால் அது கூகுள் தான் இது நாமமறிந்ததே.

மேலும், கூகுள் நிறுவனம் எப்போதும் தன் வாடிக்கையாளர்களுக்குப் பல புதிய வசதிகளை, அடிக்கடி, பெரும்பாலும் இலவசமாகத் தந்து கொண்டிருக்கும்.

ஆனால், அதே கூகுள் நிறுவனம், தான் வழங்கி வந்த பல வசதிகளுக்கு மூடுவிழாவினையும், எந்த வித ஆரவாரமும் இன்றி நடத்துகிறது என்றால், அது உங்களுக்கு வியப்பினைத் தரும்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இவ்வாறு நிறுத்தப்பட்ட, மூடப்பட்ட வசதிகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

 கூகுள் ரீடர்

சென்ற ஜூலை மாதம் நிறுத்தப்பட்ட இந்த சேவை குறித்துப் பலர் தங்கள் ஆச்சரியத்தைத் தெரிவித்துள்ளனர். இந்த சேவை, சென்ற 2005 ஆம் ஆண்டுமுதல், கூகுள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்து வந்தது. இதனைப் பயன்படுத்தியவர்கள், பெரிய அளவில் இல்லை என்றாலும், அது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இருப்பினும், இதனை மிக விரும்பிய சிலர், இணையத்தில் இது தொடர வேண்டும் என மனுவெல்லாம் கொடுத்துப் பார்த்தனர்.

சிலர், கூகுள் நிறுவனம் தன் கூகுள் ப்ளஸ் மீது அதீத பாசம் கொண்டு, இதனை சாகடிக்கிறது என்றெல்லாம் வசனம் அமைத்து குழு அமைத்து வசை பாடினார்கள். ஆனால், கூகுள் தனக்கெனக் கொண்டிருந்த அளவு கோலின் அடிப்படையில் இந்த சேவையினை நிறுத்தியது. இந்த வசதிக்கு இணையான இன்னொரு வசதியை கூகுள் அல்லது வேறு யாரும் தரவில்லை. Show Thumbnail ஸ்மார்ட் போன் கேலரிக்கு

ஐகூகுள்

இந்த தனி நபர் ஹோம் பேஜ் தரும் இணைய தளம், 2005 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்த நவம்பர் 1 முதல் நிறுத்தப்பட்டது. இது கைவிடப்படும் செய்தி, ஜூலை 2012 லேயே அறிவிக்கப்பட்டது. குரோம் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்ற சிஸ்டங்களில் இயங்கும் புதிய வகை அப்ளிகேஷன்கள் வந்த பின்னர், ஐகூகுள் டூலினை காலம் கடந்த பழைய பெருங்காய டப்பா என்று கூகுள் கருதியது.

எனவே இதனை மூடப் போகிறோம் என்று முன்பாகவே அறிவித்தது. 16 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தங்கள் டேட்டாவினை, நகர்த்திக் கொள்ள போதுமான காலம் தரப்பட்டது.

லேட்டிட்யூட்

 ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் கூகுள் மேப் அப்ளிகேஷனுடன் இணைந்து செயல்படும் டூலாக இது வெளியானது. ஐ.ஓ.எஸ். சிஸ்டம் இயங்கிய சாதனங்களிலும் இது கிடைத்தது. மேப்பில் ஓர் இடத்தை அடையாளம் காண, அதன் அட்சரேகை (Latitude) கொடுத்துப் பார்க்கும் வசதியினை இந்த டூல் தந்தது. ஆனால், இந்த வசதி பின்னர் வந்த புதிய மேப் களிலிருந்து எடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் மாதத்தில் முழுவதுமாக நீக்கப்பட்டது. இந்த டூல் வழங்கப்பட்ட ஆண்டு 2009. இப்போது இயங்கப்படும் இடத்தை மையமாகக் கொண்டு மேப் பயன்படுத்தும் வசதியை கூகுள் தன் கூகுள் ப்ளஸ் இல் தந்து வருகிறது

கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள் பணிபுரியும் விதம் பற்றிக் கூறுகையில், அவர்கள் தங்கள் சொந்த ஆய்வுப் பணியினை, வாரத்தில் 20 சதவீத நேரம் ஒதுக்கி மேற்கொள்ளலாம் என்ற சுதந்திரம் தரப்படுவதனைப் பெருமையாகக் கூறுவார்கள்.

கூகுள் இதனை நிறுத்திவிட்டது. பலர் இதனை மிக மோசமான நடவடிக்கை என்றும், இதனால், சுதந்திரமான ஆய்வு கூகுள் நிறுவனத்தில் அற்றுப் போய்விடும் என்றும் கூக்குரலிட்டனர். ஆனால், தன் ஊழியர் மற்றும் பணிக் கலாச்சாரக் கட்டமைப்பில் மேற்கொண்டுள்ள மாற்றத்தில் இதுவும் ஒன்று என கூகுள் இந்த நிறுத்தத்தினை மேற்கொண்டது.

பில்டிங் மேக்கர்

 கூகுள் எர்த் மற்றும் கூகுள் மேப் ஆகிய அப்ளிகேஷன் புரோகிராம்களில், முப்பரிமாண மாடல்களை உருவாக்க இந்த டூல் பயன்படுத்தப்பட்டது. இதனை சென்ற ஜூன் 1 முதல் விலக்கிக் கொண்டது கூகுள்.

இருப்பினும் ஏற்கனவே, இதனைக் கொண்டு முப்பரிமாண படங்களை உருவாக்கியவர்கள், இதன் கிடங்கிலிருந்து அவற்றைப் பெற்று, பயன்படுத்திப் பார்க்கலாம். தற்போது கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் அப்ளிகேஷன்களில், இதே முப்பரிமாண படங்களை உருவாக்க, டூல்கள் தரப்பட்டுள்ளன.

கிளவ்ட் கனெக்ட்

 இது ஒரு ப்ளக் இன் புரோகிராமாக, கூகுளால் தரப்பட்டது. கூகுள் ட்ரைவில், நாம் உருவாக்கும் பைல்கள் தாமாக சேவ் செய்யப்பட இந்த டூல் பயன்பட்டது. பின்னர், கூகுள் ட்ரைவினை நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து இந்த வசதியினை மேற்கொள்ளும் வகையில், கூகுள் மாற்றத்தை ஏற்படுத்தியது.

பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் இதே வசதி தரப்பட்டது. ஆனால், இந்த வசதி சென்ற ஏப்ரல் 30 முதல் நிறுத்தப்பட்டது.

பிளாக்பெரிக்கான கூகுள் வாய்ஸ்

 ஏற்கனவே பிளாக் பெரி கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தான் அளித்த இந்த டூலை, கூகுள் வாபஸ் பெற்றுள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கான தன் சப்போர்ட்டினை தரப்போவதில்லை என கூகுள் அறிவித்துள்ளது.

இதனைப் பயன்படுத்திய பிளாக்பெரி வாடிக்கையாளர்களை, கூகுள், எச்.டி.எம்.எல். 5 பயன்படுத்துமாறு கூறிவிட்டது.

கூகுள் சிங்க்

இதனைப் பயன்படுத்தி, கூகுள் மெயில், கூகுள் காலண்டர் மற்றும் காண்டாக்ட்ஸ் தொடர்புகளை, மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் ஆக்டிவ் சிங்க் ப்ரோடோகால் மூலம் பயன்படுத்தும் வகையில், கூகுள் வடிவமைத்துத் தந்தது.

ஆனால், பின்னர் கூகுள் நிறுவனத்தின் தொழில் நுட்பமான CardDAV வந்த பின்னர், கூகுள் சிங்க் நிறுத்தப்பட்டது. ஆனால், ஏற்கனவே இதனைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள், தொடர்ந்து இதனைப் பயன்படுத்த முடியும்.

மேலும் வர்த்தக ரீதியான இதன் தனி டூல் இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. இருப்பினும், இந்த டூலைப் பொறுத்தவரை, கூகுள் இதனை அதன் சமாதிக்கு அருகே கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலே கூறப்பட்ட வசதிகளுடன், மேலும் சில சிறிய அளவிலான டூல்கள், வசதிகளை கூகுள் நிறுவனம் நிறுத்தி உள்ளது

கேன்சரை கண்டறிய எளிய வழி : இந்திய விஞ்ஞானி சாதனை..!



தொழில்நுட்பத்தின் மிகப்பெரும் திருப்புமுனையாக எளியமுறை பேப்பர் சோதனை ஒன்றின்மூலம் கேன்சர் நோயைக் கண்டறியும் வழிமுறையை இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவர் கண்டறிந்துள்ளார். கர்ப்ப சோதனை செய்வதுபோல் ஒருவரின் சிறுநீரைக் கொண்டு நிமிட நேரங்களில் கேன்சர் நோயைக் கண்டறியமுடியும் என்பது இவரது சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தொற்றுநோய்களைக் கண்டறிய இந்த எளியமுறை உதவுவதுடன் மட்டுமில்லாமல் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்படாத நோய்களுக்கும் இதே உத்தியைப் பயன்படுத்த முடியும் என்பதும் இந்த முறைக்கான மற்றொரு சிறப்பாகும்

வளரும் நாடுகளில் கேன்சர் நோயின் சதவிகிதம் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் உலகளாவிய கேன்சர் நோயாளிகளின் இறப்பும் 70 சதவிகிதமாக அதிகரித்துள்ளது .நம் உடலில் செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுபடுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. உடலுக்கு தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றினாலும், பழைய வயதான செல்கள் இறக்காமல் இருந்தாலும் நமது உடலில் அதிகப்படியான தேவையற்ற செல்கள் இருக்கும். இவை ஒன்றாக இணைந்து ஒரு கழலை (ட்யூமர்) என்னும் திசுக்கூட்டமாகும்.

பெரும்பாலானவை தீங்கில்லா கழலைகள் தான். அவற்றால் உடலுக்கு ஏதும் பாதிப்புகள் இல்லை, அவற்றை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம். ஆனால், ஒரு சில கழலைகள் தீங்கானவை. அவற்றின் செல்கள்தான் புற்றுநோய் செல்களாக மாறுகின்றன. புகைப்பழக்கமும், கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகளும் புற்றுநோய்க்கான மிக முக்கிய காரணிகள். பரம்பரையில் யாருக்கேனும் புற்றநோய் இருந்தால் அவர்களது சந்ததியினருக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அதே சமயம் இந்நோயை.ஆரம்ப காலத்தில் கண்டறியப்படும்போது இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது என்றபோதிலும், குறைந்த அளவிலான மருத்துவ கட்டமைப்பு கொண்ட பல நாடுகளிலும் இதற்கான ‘மாமோகிராம்’ போன்ற சோதனைமுறைகள் மிகுந்த பொருட்செலவைக் கொடுப்பதாக இருக்கின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளியினரான சங்கீதா பட்டியாவே இந்தப் பெருமைக்கு உரியவர். எம்ஐடி பேராசிரியரும், ஹோவர்ட் ஹியூக்ஸ் மருத்துவ நிறுவனத்தின் ஆய்வாளருமான இவர் ஏற்கனவே அமெரிக்க விஞ்ஞான ஆய்வுகளில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.இந்த எளிய சோதனைமுறை கண்டறியப்பட்டபோது அதனை பகுப்பாய்வு செய்ய மிகவும் சிறந்த கருவிகளைப் பயன்படுத்தியதாக சங்கீதா குறிப்பிட்டார்.

மேலும் வளரும் நாடுகளில் இந்த எளிய சோதனைமுறையை எந்தவித சிறப்பு உபகரணங்களும் இல்லாமல் பயன்படுத்த முடியும் என்றும் ஒரு மொபைல்போனில் எடுக்கப்படும் படம் மூலமாகக்கூட சோதனைக்கூடத்தின் பராமரிப்பாளர் இந்தத் தகவலைத் தெரிவிக்கமுடியும் என்பதுவும் இந்த சோதனைமுறையின் சிறப்பம்சமாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொற்றுநோய்களைக் கண்டறிய இந்த எளியமுறை உதவுவதுடன் மட்டுமில்லாமல் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்படாத நோய்களுக்கும் இதே உத்தியைப் பயன்படுத்த முடியும் என்பதுவும் இந்த முறைக்கான மற்றொரு சிறப்பாகும் என்று ஆய்வுக்கூடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஜமானியை கொன்றவனை போலீசுக்கு காட்டிக் கொடுத்த கிளி..!



உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் பல்கேஸ்வரா காலனியில் வசித்து வரும் விஜய் சர்மா உள்ளூர் இந்தி நாளிதழ் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி இவருடைய மனைவி நீலம் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், சர்மாவின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கிளி, சர்மாவின் மருமகன் அசுடோஷ் சர்மா கோஸ்வாமி தன்னுடைய வீ்ட்டிற்கு வரும்போதெல்லாம் உர்ரென்று இருந்தது. கிளியின் நடத்தையில் ஏற்பட்ட மாறுதலை சர்மா கவனித்தார். இது குறித்து சர்மாவின் தம்பி அஜய்யும் தனது சந்தேகத்தை அவரிடம் தெரிவித்தார்.

சந்தேகம் வலுவடைந்ததால், சர்மாவின் குடும்பத்தினர் தாங்கள் சந்தேகிக்கும் நபர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கிளியின் முன் கூறினர். மற்றவர்களின் பெயரை கூறும்போது எதுவும் பேசாத அந்தக் கிளி அசுடோஷ் பெயரை கூறியதும், “இவன்தான் கொன்றான்... இவன்தான் கொன்றான்...” என்று பேசியது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும் அசுடோஷை காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அசுடோஷ், ரோனி மசே என்பவருடன் சேர்ந்து சர்மாவின் மனைவி நீலத்தைக் கொன்றது தெரியவந்தது.

சம்பவத்தன்று சர்மாவின் வீட்டிற்குள் நுழைந்த அவர்கள், நீலத்தை கத்தியைக் காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை தருமாறு மிரட்டியுள்ளனர். நீலம் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாரோ என்று பயந்து அசுடோஷ் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். அதைப் பார்த்து குரைத்துக் கொண்டேயிருந்த சர்மாவின் வளர்ப்பு நாயை இருவரும் கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர்.

இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட இருவரும், கொலை மற்றும் கொள்ளை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க கிளி பெரிதும் உதவியதாக ஆக்ரா காவல்துறை சூப்பிரண்டு சலாப் மதூர் தெரிவித்துள்ளார்.

கிளி ஒன்று கொலையாளியை காட்டிக் கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ்அப் போய் ''டெலிகிராம்'' இலவச ஆப்ஸ் வந்தாச்சுங்க..!



வாட்ஸப் ஒரு பெரிய கலக்கு கலக்கி இப்ப அதை பீட் பண்ணுது டெலிகிராம். இது என்ன புதுசுனு கேக்குறவங்களுக்கு காட்டு தீ போல கடந்த ஒரு வாரமா டவுன்லோட் குமியுது இந்த ஆப்ஸ்க்கு.

 இது வாட்ஸ் அப்பை விட வித்தியாசமானது. கிளவுட் பேஸ் – அப்படின்னா சென்னையில் ஒரு டெலிகிராம் யூஸர் சென்னையில உள்ள இன்னொருத்தருக்கு அனுபிச்சா வாட்ஸ்ப் மாதிரி சென்ட்டரலைஸ்ட் சர்வருக்கு போகாது.

 சில சமயம் ஆட்ஸ் அப்பில் சங்கு சக்கரம் மாதிரி சுத்திகிட்டே இருக்கும்ல அது கிடையாது இங்க டக்குனு லோக்கலா டெலிவிரி ஆயிடும். 100% இலவசம் வாழ் நாள் முழுவதும்.

அது போக சீக்ரெட் மெசேஜ் அனுப்பலாம் வேணும்கிறவங்களுக்கு. நீங்க ஒருத்தருக்கு பர்ஸனலா மெசேஜ் அனுப்புனும்னா என்கிரிப்பட்டட் முறையில் அனுப்பலாம்.அதை வேறு யாரும் பார்க்க முடியாது.

அது போக நீங்க அவங்களுக்கு அனுப்பின மெசேஜை இங்கிட்டு இருந்தே அழிக்கலாம். இன்னும் பல விஷயம் இருக்குனு சொல்றாங்க

முக்கியமா இது ஜெர்மனி கம்பெனி அதனால் அமெரிக்க வளர்ச்சி வெறுப்பாளர்களுக்கு ஒரு மாற்றாக அமையும் இதில் இன்னும பல விஷயங்கள் இருக்கு நீங்களே டெஸ்ட் பண்ணுங்க – ஆப்பிள் / ஆன்ட்ராயிட் வின்டோஸ் வெர்ஷன் இருக்கும்.

 இதில் முக்கியமான விஷயம் ஃபொன் பேட்டரி போனா கூட PC / Tablet மெசேஜ் அனுப்ப பெற முடியும்ங்கோ.

அறிவுத்திறனை அதிகரிக்கிறது ‘அந்த’ சிந்தனை..! – ஆய்வு தகவல்



எதுவுமே அளவோட இருந்தால்தான் நல்லது என்று பெரியவயவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால் இதற்கு விதிவிலக்காக செக்ஸ் மட்டும் உடல் ஆரோக்கியம் இடம் கொடுக்கும் வரை திகட்ட த்கிகட்ட அனுபவிக்கலாம் என்றும் மருத்துவர்கள் சொல்லி வ்ந்த நிலையில் உங்கள் துணை தற்போது ரொமாண்டிக் மூடு இல்லை என கூறினால். அச்சச்சோ நம்ம மூளைக்கு இந்த செக்ஸ் நல்லதாக்கும் என்று கூறி புரியவையுங்கள்.’இந்த உணர்வு’ ஒரு புத்திசாலியின் தந்திரம் போல் தெரிந்தாலும் உண்மையில் காதல் அறிவுத்திறனை அதிகரிக்கிறது என உளவியலாளர்கள் தற்போது மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் உளவியல் விஞ்ஞானிகள் எலிகள் மூலம் நடத்தி ஆய்வில் கண்டறிந்து தெரிவித்து உள்ளனர்

இதற்கு முன்னர் உள்ள ஆய்வுகளில் செக்ஸ் கலோரியை அதிக அளவு இழக்க செய்கிறது. மன அழுத்ததை வெகுவாக குறைக்கிறது இந்த செக்ஸ் அதிகமானால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என்றெல்லாம் நெதர்லாந்தை சேர்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் செக்ஸ் குறித்து எலிகள் மீது நடத்திய ஆய்வில் ரத்தம் மற்றும் மூளையின் சிலபகுதிகளில் நியூரான் அதிக் அளவு உருவாகிறதுஎன்றும் அது நீண்ட கால நினைவாற்றலை அதிகரித்து உள்ளது என்றும் கண்டறிந்து உள்ளனர். இவ்வாறு உற்பத்தியாகும் நியூரான்கள் நரம்பு மண்டலத்தின் அடிப்படை கட்டுமான தொகுதிகள் உருவாக்கும் ஒரு சிறப்பு வகையாக செல்லாக இருக்கின்றன.

செக்ஸ் நடவடிக்கைகள் அதிகமாகும் போது மூளையின் செல்கள் அதிக அள்வு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது.எலிகள் செக்ஸ் உறவில் ஈடுபடுவதை நிறுத்திய பிறகு அவைகளுடைய அறிவுதிறன் வெகுவாக குறைந்து விடுகிறது. தென் கொரியாவின் கோன்குக் பல்கழைக்கழகமும் இந்த ஆய்வு குறித்து முடிவுகளை உறுதி செய்து உள்ளது.

கொரிய பல்கலைக்கழக ஆய்வின்படி, செக்ஸ் அறிவார்ந்த செயல்பாடுகளை அதிகரிக்கிறது.என கூறுகிறது.செக்ஸ் செயல்பாடுகள் மூளையின் பின்மேட்டு ஹிப்பாகோம்பல் (hippocampal) மண்டல பகுதியில் மன அழுத்தம் ஏற்படும் தீங்கு ஏற்படுத்துவதற்கு எதிராக செயல்படுகிறது.என்றும் கூறி உள்ளது.அத்துடன் வயதானவர்கள் செகஸ் செயல்பாடுகள் குறையும் போது சிக்கலான பல மன அழுத்தங்களை சந்திக்க நேரிடுகிறது என கிளாமர் இதழ் கூறி உள்ளது.

பிரவுசர்களிடம் சிறிது ஜாக்கிரதையாக இருங்கள்..!



இன்றைக்கு குறிப்பிட்ட சில இன்டர்நெட் யூஸர்ஸ் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாகவும், பழைய பதிப்புகளாகவும் இருப்பதாகக் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 இது மொத்தத்தில் 26% பேர் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாக உள்ளன. ஏறத்தாழ பத்தில் ஒருவர் பழைய பதிப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பிரச்னைக்குரியதாகின்றன.

 இவர்களில் 18.7% பேர், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பிற்கு முந்தைய பதிப்பினையே பயன்படுத்துகின்றனர்.

8.5% பேர், மிகப் பழைய பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கின்றனர். 77% பயனாளர்கள், சோதனைப் பதிப்பு மற்றும் புதிய பதிப்பினைப் பயன்படுத்துகின்றனர்.

ஒரு பிரவுசரின் புதிய முழுமையான பதிப்பு வெளியான பின்னர், ஒரு மாதம் கழித்தே, அதனைப் பயனாளர்கள் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.

ஆனால், சைபர் உலகத்தினை தங்கள் மால்வேர் புரோகிராம்களால் ஆட்டிப் படைக்கும் ஹேக்கர்கள், புதிய பதிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, எந்த இடத்தின் தவறைத் தங்கள் நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றனர்.

அவற்றைப் பயன்படுத்தி தங்கள் நாச வேலைக்கு அடித்தளம் அமைக்கின்றனர். நிறுவனங்களில், அதன் ஊழியர்கள், புதிய பிரவுசருக்கு மாறுவதற்கு நிர்வாகத்தினர் அனுமதி அளிப்பதில்லை.

 சில காலத்திற்குப் பின்னரே, மிகத் தயக்கத்துடன் அனுமதிக்கின்றனர். இது முற்றிலும் தவறான போக்காகும்.

 இது போல பழைய பிரவுசர்களை நிறுவனங்கள் பயன்படுத்துவது, நிறுவனத்தின் கம்ப்யூட்டருக்கும், அவற்றில் உள்ள விலை மதிப்பில்லா டேட்டா பைல்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும்.

கிரிக்கெட் மைதானத்தில் நடிகை பாவனா சில்மிஷம் - கல்யாணத்தை நிறுத்தினார் காதலர்..!



நடிகர்களுக்கு இடையில் நடந்து வரும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் நடிகை பாவனாவிடம் சிலர் வரம்பு மீறி நடந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோ வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் நடிகை பாவனா இந்த விசயத்தை பெரிது படுத்தவில்லை.

நடிகை பாவனாவுக்கும் அவருடைய காதலருக்கும் இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடைபெறும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த காதலர் மனவருத்தத்தில் இருந்துள்ளார். ஆனால் பாவனாவோ கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தொடந்து சிசிஎல் போட்டியில் கலந்து கொண்டு நடிகர்களை குசி படுத்தி வந்தார்.

சந்தேகமடைந்த காதலர் பாவனாவை கிரிக்கெட் போட்டியின் போது வேவு பார்பதற்காக ஒரு டிடெக்டிவை ஏற்பாடு செய்துள்ளார். டிடெக்டிவ் வேவு பார்ப்பது தெரியாத பாவனா போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருது வென்ற நடிகருக்கு புல் மீல்ஸ் விருந்து கொடுத்துள்ளார்.

 உடனே டிடெக்டிவ் காதலருக்கு போன் செய்து நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஒரு நடிகரின் அறையில் தனியாக உள்ளார் என கூறியுள்ளார். காதலர் பாவனாவிற்கு போன் செய்து பேசியுள்ளார். நான் தூக்கத்தில் உள்ளேன் காலையில் பேசிக்கொள்ளலாம் என கூறி போனை கட் செய்துள்ளார். காதலர் மீண்டும் மீண்டும் போன் செய்துள்ளார் ஆனால் நடிகை எடுக்கவே இல்லை. விடியும் வரை அந்த நடிகரின் அறையிலேயே இருந்துள்ளார் பாவனா.

இதனால் காதலர் தற்பொழுது கல்யாண வேலையை நிறுத்துவிட்டதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் பாட்டு பாடினாலே படம் ஹிட்டுதான்..!



மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி வெறும் இரண்டே வருடங்களில் கோடிகளில் சம்பளம் பெரும் முன்னணி நடிகராக
உருமாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மூன்று திரைப்படங்களுமே மெஹா ஹிட். முக்கியமாக சென்ற ஆண்டு இறுதியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாஸ் ஹீரோக்களின் படங்களுக்குச் சவால் விடுமளவு வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தில் முதன்முதலாக சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியிருந்தார்.

படங்களில் மட்டுமின்றி ஏகத்துக்கும் பரவிக்கிடக்கும் செண்டிமெண்ட்கள் தயாரிப்பாளர்களையும் விட்டுவைக்கவில்லை. சிவகார்த்திகேயன் பாடியதால்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாபெரும் ஹிட்டடித்திருப்பதாக தற்பொழுது கோலிவுட்டில் செண்டிமெண்ட்கள் பரவிவருகின்றன. இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படங்களிலும் அவரைப் பாடல் பாடச் சொல்லி கேட்க ஆரம்பித்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

தற்பொழுது ஹன்சிகாவுடன் இவர் நடித்துவரும் மான்கராத்தே திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் பாடியிருப்பதாகக் கூறப்படுகிறது. அனிருத்
இசையமைத்திருக்கும் இப்படத்தில் மற்றொரு முக்கியச் செய்தியாக அனிருத் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடனமாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மான்கராத்தே திரைப்படத்தின் இசை வருகிற மார்ச் 1 ல் வெளியாகவுள்ளது.

2015-ல் இந்தியாவில் நுழையும் அமெரிக்க பைக் பிராண்டு..! அதிர்ச்சியில் இந்தியா..?



இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்திய மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்க இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த யுஎம் குளோபல் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹார்லி டேவிட்சன், இந்தியன் மோட்டார்சைக்கிள் பிராண்டுகளை தொடர்ந்து யுஎம் குளோபல் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் நுழைய இருக்கிறது. அந்த நிறுவனத்தின் திட்டங்கள், வரும் பைக் மாடல்கள் குறித்த விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

ரெனிகேட் வரிசையில் 4 புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த யுஎம் குளோபல் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த பைக் மாடல்கள் 124சிசி எஞ்சினுடன் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 200சிசி முதல் 250சிசி எஞ்சின் கொண்டதாக அறிமுகம் செய்யப்படலாம்.

இந்தியாவிலேயே 50 சதவீதம் அளவுக்கு உதிரிபாகங்களை பெற்று பைக்குகளை அசெம்பிள் செய்ய யுஎம் குளோபல் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், சவாலான விலையில் பைக்குகளை அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவில் கூட்டணி அமைத்து வர்த்தகத்தில் ஈடுபட யுஎம் குளோபல் திட்டமிட்டுள்ளது. விற்பனை மற்றும் சர்வீஸ் பணிகள் கூட்டணி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

137.8சிசி, 180.4சிசி, 196.4சிசி ஆகிய மாடல்களில் அமெரிக்காவில் இந்த பைக் விற்பனை செய்யப்படுகிறது

ரெனிகேட் ட்யூட்டி என்ற இந்த மாடலில் 124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த பைக் 10.79 எச்பி திறன் கொண்டது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு ஸ்டைலிலான க்ரூஸர் பைக் மாடல் இது. இதில், 175சிசி அல்லது 196சிசி எஞ்சினுடன் வரலாம்.

ராணுவ மோட்டார்சைக்கிள் டிசைன் தத்துவம் கொண்ட இந்த பைக்கில் 223சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 18 எச்பி ஆற்றல் கொண்டது.

இந்த ஆண்டு மத்தியிலிருந்து இந்தியாவில் பைக் உற்பத்தியை துவங்கிவிடுவதற்கு யுஎம் குளோபல் நிறுவனம் திட்டமிட்டுள்ளு. ரூ.75,000 முதல் ரூ.1.5 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் தனது பைக்குகளை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு விடுவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
 
நண்பேன்டா