Wednesday 5 March 2014

முக்கியமான நபர்களின் மாத சம்பளம்...!




1. குடியரசு தலைவர்= 1.5 லட்சம்


2. துணை குடியரசு தலைவர்= 1.25 லட்சம்


3. லோக்சபா சபாநாயகர்= 1.25 லட்சம்


4. ராஜ்சபா சபாநாயகர்= 1.25 லட்சம்


5. மாநில ஆளுனர்= 1.10 லட்சம்


6. இந்திய தலைமை நீதிபதி= 1 லட்சம்


7. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி= 90 ஆயிரம்


8. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி= 90 ஆயிரம்


9. தலைமை தணிக்கைத்துறை அதிகாரி= 90 ஆயிரம்


10. தலைமை தேர்தல் ஆணையர்= 90 ஆயிரம்


11. மற்ற தேர்தல் ஆணையர்கள்= 80 ஆயிரம்


12. உயர் நீதிமன்றத்தின் நீதிபதி= 80 ஆயிரம்


13. பாராளுமன்ற உறுப்பினர்= 50 ஆயிரம்


14. சட்டமன்ற உறுப்பினர்= 55 ஆயிரம்


இவ்வளவு தான் சம்பளம் வாங்கும் இவர்களால் எப்படி கோடிகளில் புரளமுடிகிறது என்ற சந்தேகம் உங்களுக்கும் வருமேயானால் நீயும் என் நண்பனே !!!!!!

ஆண்கள் மது அருந்தினால் செய்யும் வினோத செயல்கள்!!!



இந்த உலகில் நிறைய பேர் ஆல்கஹாலை மருந்தாக சாப்பிடுகின்றனர். தினமும் ஒரு பெக் சாப்பிட்டால், மன அழுத்தம் நீங்குவதோடு, நல்ல உறக்கமும் வரும். ஆனால் இளைஞர்கள் பலர் இதனை அதிகமாக சாப்பிடுகின்றனர். அவ்வாறு குடித்துவிட்டு, பல பிரச்சனைகளை செய்வார்கள். அவ்வாறு அவர்கள் குடித்தப் பின்பு செய்யும் செயல்கள் என்னவென்று பார்ப்போமா!!!

ஆண்கள் மது அருந்தினால் செய்யும் செயல்கள்!!!

* ஆண்கள் குடித்துவிட்டால், செய்யும் விஷயத்தில் ஒன்று தான் முட்டாள்தனமாக பேசுவது. அவ்வாறு பேசுவதில் எந்த ஒரு விஷயமும் இருக்காது. ஏனெனில் ஆல்கஹாலில் உள்ள போதையை ஏற்படுத்தும் பொருள் மூளையில் சென்று, ஏதேதோ முட்டாள்தனமாக பேச வைக்கும்.

* சிலர் பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது போன்று செய்வார்கள். அதிலும் சாதாரணமான நடனமாக இருக்காது, குத்துப்பாட்டு தான். மேலும் அப்போது சாதாரணமாக இருக்கும் போது பார்க்கும் கௌரவம், ஒழுக்கம் போன்றவை அனைத்தும் காற்றாய் பறந்து போயிருக்கும். சில நேரங்களில் அசிங்கமாக கூட பேசுவார்கள், திட்டுவார்கள்.

* காதல் தோல்வி அடைந்தவர்களாக இருந்தால், குடித்தப் பின்பு அந்த காதலிக்கு போன் செய்து, அவர்களிடம் புலம்புவார்கள். ஒரு வேளை மிகவும் கோபத்துடன் இருந்தால், அவர்களுக்கு போன் செய்து, தங்கள் கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்துவார்கள்.

* மது அருந்தியப் பின் ஆண்கள் தொலைக்காட்சியைப் பார்க்கும் போது, அந்த டிவியில் ஏதேனும் அழுகை சீன் போனாலும், அதைப் பார்த்து தேம்பி தேம்பி அழுவார்கள். அப்போது அவர்களைப் பார்த்தால், சரியான சிரிப்பு தான் வரும்.

* மனம் கஷ்டமாக உள்ளது என்பதற்காக நண்பர்களுடன் வெளியே பார் சென்று குடிக்கும் போது, அந்த கஷ்டத்தை ஏற்படுத்தியவருக்கு (நிச்சயம் ஒரு பெண்ணாகத் தான் இருக்கும்), நண்பனின் போனை வாங்கி, பேச ட்ரை செய்யும் போது, போனை எடுக்காமல் இருந்தால், நண்பனின் மொபைல் என்று கூட பார்க்காமல் உடைத்துவிடுவார்கள். பின் அவனை அழைத்து வந்த நண்பன் "ஏன்டா இவனை அழைத்து வந்தோம்" என்று புலம்பும் வகையில் நடப்பார்கள்.

* சில நேரங்களில் குடித்துவிட்டு, இரகசியம் என்று மனதில் வைத்திருப்பதை யாரிடம் சொல்லக்கூடாதோ, அவர்களிடம் சொல்லி மாட்டிக் கொள்வார்கள்.

* ஆண்கள் பொதுவாக மது அருந்தினால் உண்மையை மட்டும் தான் பேசுவார்கள். சொல்லப்போனால், அவர்களது பாசம் மது அருந்தியப் பின் நன்கு தெரியும். பெண்கள் மட்டும் தான் உணர்ச்சிவயப்பட்டவர்கள் என்று நினைக்க வேண்டாம். ஆண்கள் மது அருந்தினால், அப்போது தெரியும் அவர்கள் பெண்களை விட எவ்வளவு உணர்ச்சிவயப்பட்டவர்களென்று.

மேற்கூறியவையே மது அருந்தியப் பின் ஆண்கள் செய்யும் செயல்கள். என்ன நண்பர்களே! சரிதானே?

தினமும் நாம் தொடும் 10 அழுக்கான பொருள்கள்: ஒரு ஷாக் ரிப்போர்ட்!!



மருத்துவ அறிவியல் முன்னேற்றம் மற்றும் மக்களிடையே ஆரோக்கியத்தின் மீது விழிப்புணர்வும் பெருகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் மக்களிடையே, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த கவலை அதிகரித்து உள்ளது.

மக்கள் தொகைப் பெருக்கமும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. கையடக்கமான தூய்மை செய்யும் பொருட்களை பலரும் உடன் கொண்டு செல்கின்றனர்.

பாதுகாப்பாக இருப்பதற்காக, பதப்படுத்துப்பட்ட உணவுகள், அழுக்கான பகுதிகள் ஆகியவற்றிலிருந்து விலகியே இருக்கிறோம். இந்த அளவு சுத்தத்தைப் பற்றிய அறிவுடன் கவனமாக இருந்தாலும்,

 அன்றாடம் தொடும் பொருட்களில் அழுக்குகளும், அதன் மூலம் கிருமிகளும் கையில் ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது. இவற்றைப் பட்டியலிட்டால்,

அது மிக நீளமாக நீளும். எனினும் நாம் தினமும் தொடும் பொருட்களில் பத்து அழுக்கான மற்றும் கிருமிகள் நிறைந்த பொருள்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு நாளின் தொடக்கத்திலிருந்து ஆரம்பிப்போம். டாய்லெட் இருக்கையின் பால் போன்ற வெண்மையான வழவழப்பான மேற்பரப்பினையும்,

விளிம்புகளையும் அதிகமாக சுத்தம் செய்தாலும், டாய்லெட் இருக்கையின் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 295 வகையான பாக்டீரியாக்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பொது இடங்களிலும், வீடுகளிலும் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்விட்ச்சுகள். புத்தம் புதியதாக, வழவழப்பாக, தூய்மையாக காணப்பட்டாலும், நமது சருமத்துடன் அன்றாடம் தொடர்பிலுள்ள மிக அசுத்தமான பொருள்களில் ஒன்று ஸ்விட்ச்.

 எனவே ஸ்விட்ச்சுகள் மூலம் நாம் கிருமிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று கருதினால், நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் என்னவென்றால், எந்தவொரு அறையிலிருந்தும் முதல் ஆளாக வெளியேறி விட வேண்டும்.

ஏனென்றால், கடைசியாக வெளியில் வரும் நபர் தான் அறையினுள் உள்ள அனைத்து விளக்குகளையும் மின்விசிறிகளையும் ஆஃப் செய்ய வேண்டியிருக்கும்.

பச்சை, நீலம், சிவப்பு என்று பல வண்ணங்களுடன் இருக்கும் ரூபாய் நோட்டுக்கள், பளபளக்கும் நாணயங்களை விரும்பாதார் யார்???? கைக்குக் கைமாறும் பணம்.

 காசாளரிடமிருந்து, கடைக்காரருக்கும், பிள்ளையார் கோவில் உண்டியலுக்கும், பிச்சைக்காரருக்கும், பணக்காரரிடமிருந்து பரம ஏழைக்கும் பயணிக்கும் பணம்.

வைத்திருக்கும் பத்து ரூபாய் நோட்டு எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது. நியூயார்க்கில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஒரு பணத்தாளில் 1,35,000 பாக்டீரியாக்கள் இருந்தனவாம்.

அமெரிக்காவில் கணிப்பொறியைப் பயன்படுத்தாதவர் யாருமில்லை. நாமும் கணிப்பொறியைப் பயன்படுத்துகிறோம்.ஆனால், பாக்டீரியாக்களும் கிருமிகளும் நிறைந்திருக்கும் விசைப்பலகையை சுத்தம் செய்ய மறந்துவிடுகிறோம்.

சில ஆய்வுகள் என்ன சொல்லுகின்றன என்று தெரியுமா?

மிக அசுத்தமான விசைப்பலகையில் டாய்லெட்டில் இருப்பதைவிடவும் அதிகமான எண்ணிக்கையில் கிருமிகள் உள்ளனவாம். எனவே அடுத்தமுறை கணிப்பொறி முன்பு அமரும் போது விசைப்பலகை சுத்தமாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

பெரும்பாலான பெண்கள் சமையலறை கழுவும் தொட்டியில் தான் செலவிடுகிறார்கள் என்பது நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். அந்தத் தொட்டி எப்போதும் ஈரமாகவே இருக்கும்.

அதில் நமது தட்டுக்கள், பாத்திரங்கள், காய்கறிகள், மாமிசங்கள் என அனைத்தையும் கழுவுவதால், அது கிருமிகளின் பிறப்பிடமாகிறது. எனவே, கிருமிகளின்றி சுத்தமாக இருக்க சமையலறை கழுவும் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

சமையலறையையும், சாப்பிடும் மேஜையையும் சுத்தம் செய்யும் மிக அசுத்தமான பணியை செய்கிறது அந்தப் பஞ்சு.

அது எப்போதுமே ஈரமாக இருக்கும். அதன் நுண்ணிய இடைவெளிகளில் நீர் தேங்கி கிருமிகள் வளர்வதற்கு வாய்ப்பான இடமாக உள்ளது. அதிலிருந்து கிருமிகளை நீக்குவது மிகக் கடினம். கிருமிகள் துள்ளிக் குதித்து நீந்துவதைக் கற்பனை செய்து பாருங்கள்.

வேண்டுமெனில் அப்பஞ்சினை மைக்ரோவேவ் ஓவனில் 60 வினாடிகள் சூடு செய்து கிருமிகளை நீக்கலாம்!!!.

எவ்வளவு பெருமிதத்துடன் நாம் செல்போனில் பேசுகிறோம்? எவ்வளவு ஆசையுடன் அதை சுமக்கிறோம்? காதுக்கும் கன்னத்துக்கும் இடையே பொருத்திக் கொண்டு மணிக்கணக்கில் பேசுகிறோம்?

இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வாயிலாக செல்போன்கள் ஒரு பெரும் அழிவு சக்தியாக உருவெடுத்து வருகின்றன எனக் கண்டறியப்படுள்ளது. ஏனெனில்,

செல்போன்களில் உற்பத்தியாகும் வெப்பத்தினால், செல்போன்களில் உருவாகும் ஆயிரக்கணக்கான கிருமிகளை நமது உடலிலுள்ள ஈரம் ஈர்க்கிறதாம்.

டாய்லெட்டுகளையும், குளியலறை தரைகளையும் தவறாமல் சுத்தம் செய்யும் நாம் குளியல் தொட்டிகளை முறையாகத் தேய்த்து சுத்தம் செய்வதில்லை.

 நமது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நோய்வாய்ப்படும் வரையில் அல்லது நீர்த்தாரைத் தொற்று நோயால் பாதிக்கப்படும் வரை குளியல் தொட்டிகளில் உள்ள கிருமிகளை நாம் கண்டுகொள்வதில்லை.

நாம் டிவி ரிமோட்டை சமைக்கும் போது பயன்படுத்துகிறோம். நமது பிள்ளைகள் விளையாட்டுத் திடலில் விளையாடிவிட்டு வந்து எடுத்துப் பயன்படுத்துகிறார்கள்.

கணவன்மார்கள் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் டிவி ரிமோட்டுடன் தான் பொழுதைப் போக்குகிறார்கள்.

வெவ்வேறு இடங்களிலிருந்து வரும் வெவ்வேறு வகையான கிருமிகளின் தங்குமிடம் டிவி ரிமோட் ஆகும். சுத்தம் செய்ய வேண்டிய பொருள்களின் பட்டியலில் இதனையும் சேர்த்துக் கொள்ளவும்.

சிறப்பங்காடிகளில் பொருட்களைப் போட்டு தள்ளிக் கொண்டு போகும் தள்ளுவண்டிகளை பயன்படுத்தும் மக்கள் அனைவரும் தமது வியர்வை படிந்த விரல்களால் அவற்றின் கைப்பிடிகளைத் தொட்டு பாக்டீரியாக்களையும் கிருமிகளையும் நிரப்பிவிடுகிறார்கள்.

எனவே அடுத்தமுறை ஷாப்பிங் செல்லும்பொழுது கைப்பிடிகளைக் கவனமாகக் கையாளுங்கள்.

உங்கள் குழந்தையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!



ஒரு மனிதனுக்கு எல்லா செல்வங்களையும் விட சிறந்தது குழந்தைச் செல்வம் தான். அந்த குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் அளவில்லா இன்பம். சில சமயங்களில் குழந்தையின் வளர்ச்சிப் படிகள் சீறாக அமைவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கண்டு கொள்வது.

அவற்றை எப்படி சரி செய்வது என்பதை பற்றி விளக்குவதே இந்த கட்டுறையின் நோக்கம். ஒரு குழந்தை கருவில் இருந்து தான் அதன் முதல் வளர்ச்சி தொடங்குகின்றது. குழந்தை பிறப்பிற்கு பின் உள்ள வளர்ச்சிப்படிகளைப் பற்றி பார்ப்போம். குழந்தையின் வளர்ச்சியை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. உடல் சார்ந்த வளர்ச்சிகள்

2. அறிவு சார்ந்த வளர்ச்சிகள் இதில் உடல் சார்ந்த வளர்ச்சி என்பது குழந்தை பிறந்தது முதல் நடக்கும் வரை உள்ள பல்வேறு வளர்ச்சிப் படிகள். அதாவது குழந்தை பிறந்து 3 முதல் 4 மாதத்திற்குள் காலை நிற்க வேண்டும். 4 முதல் 5 மாதத்தில் திரும்பி படுத்தல்,

6-7 மாதத்தில் நெஞ்சால் தேய்த்துக் கொண்டு முன்னே நகருதல், 7-8 மாதத்தில் கைகளை ஊன்றி உட்காருதல், 8-9 மாதத்தில் தவழுதல், 9-10 மாதத்தில், உதவியுடன் பிடித்துக் கொண்டு நிற்றல், 10-11 மாதத்தில் உதவியுடன் நடத்தல்,

11-12 மாதத்தில் தனியாக நடத்தல், 14-18 மாதங்களில் மாடிப்படி ஏறுதல், 18-24 மாதங்களில் மாடிப்படி இறங்குதல், இந்த வளர்ச்சிப்படிகள் ஒன்றி அல்லது இரண்டு மாதங்கள் முன் பின் நடக்கலாம். ஆனால் அதைவிட அதிகமாக (இரண்டு மாதங்கள் கழிந்தும்) மாதங்கள் கடந்தும் வளர்ச்சிப்படியில் மாற்றம் இல்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அனுகி அதற்கான மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும்.

ஏனென்றால் சில பெற்றோர்கள் சரியான மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிப்படி இல்லை என்றாலும் அதை உடனடியாக கவனிக்க மறந்து விடுகின்றனர். அல்லது நமது குடும்பததில் எல்லோரும் சற்று தாமதமாகத்தான் நடந்தார்கள் என்று எண்ணி குழந்தையை வீட்டிலே வைத்து விடுகின்றனர். பின் தாமதமாக பயிற்சியளிப்பது மிக குறைவான முன்னேற்றத்தையே தரும்.

2. அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள்:- குழந்தையின் அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே நம்மால் கண்டு கொள்ள முடியும். எளிமையாக கண்டு கொள்ள நான் இங்கு குழந்தையின் சில நடவடிக்கைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

1. குழந்தையை கூப்பிடும் போது திரும்பிப் பார்க்காமல் இருத்தல்.

2. குழந்தையிடம் பேசும் போது முகத்தை பார்க்காமல் இருத்தல்.

3. மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் இருந்தல்.

4. தனியாக விளையாடுதல்.

5. சில சமயங்களில் அடம் பிடித்தல்/ அழுது கொண்டே இருத்தல்.

6. ஓரிடத்தில் அமராமல் சுற்றிக் கொண்டே இருத்தல்.

7. பொது இடங்களில் சுய கட்டுப்பாடு இன்றி அழுதல், அடம் பிடித்தால், மற்றவர்களுடன் பழக மறுத்தல்.

8. பொருட்களை உடைத்தல்/ தூக்கி எறிதல்.

9. இயற்கை உபாதையை கட்டுப்பாடு இன்றி இருக்கும் இடத்திலேயே கழித்தல்.

10. 1 வயதில் பேசிய குழந்தை 1 வயது முதல் பேசாமல் இருத்தல்.

11. வயதுக்கேற்ற புரிதல், பேசுதல் இல்லாமல் இருத்தல்.

12. தனியாக அர்த்தமற்ற வார்த்தைகளால் பேசுதல் அல்லது கத்துதல்.

இது போன்ற செயல்களை நாம் வீட்டில் கவனித்தால் உடனடியாக இதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் கவனிக்க வேண்டியவை.

1. பள்ளியில் ஓரிடத்தில் அமராமல் சுற்றித்திரிதல்.

2. தான் கொண்டு சென்ற பொருட்களை தொலைத்து விடுதல்.

3. சரியாக புரிந்து கொள்ளாமல் இருத்தல்.

4. கையெழுத்து சரியாக இல்லாமல் இருத்தல்.

5. கவனக்குறைவுடன் இருத்தல்.

6. (spelling mistake) எழுத்துப்பிழை உடன் எழுதுதல்.

7. மற்ற குழந்தைகளுடன் ஒத்துக் போகாமல் இருத்தல்.

8. home work சரியாக செய்யாமல் இருத்தல்.

9. வயதுக்கேற்ற பேச்சு இல்லாமல் இருத்தல்.

10. படித்ததை எளிதில் மறந்து விடுதல்.

11. (board copy) கரும் பலகையை பார்த்து எழுதாமல் இருத்தல்.

இது போன்ற பிரச்சினைகளை உங்கள் குழந்தைகளிடத்தில் இருந்தால் உடனடியாக  மருத்துவரை தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்.

உடலுக்குத் தேவைப்படும் கொழுப்பின் அளவு - உங்களுக்குத் தெரியுமா...?



கொழுப்பு மிக முக்கியமான சத்துப் பொருள் என்பதால், உணவு மூலமாகக் குறிப்பிட்ட அளவில் அது நமக்குக் கிடைக்க வேண்டும். 

ஆனால் எல்லோருக்கும் ஒரே அளவில் கொழுப்புச் சத்து தேவைப்படுவதில்லை.

பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிலோ எடைக்கு சுமார் 5 முதல் 7 கிராம் வரையும், சிறுவர்களுக்கு (3 வயது முதல் 12 வயது வரை உள்ளவர்கள்) சுமார்20 முதல் 50 கிராம் வரையும் 13 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு தினமும் 30 முதல் 70 கிராம் வரையும், பெரியவர்களுக்கு 20 முதல் 60 கிராம் வரை கொழுப்புச் சத்து அவர்களின் உழைப்பைப் பொறுத்தும் தேவைப்படும்.

தினமும் சுமார் 15 கிராம் அவசியமான கொழுப்பு அமிலங்கள் பெரியவர்களுக்குத் தேவைப்படும். 

நமக்குத் தினந்தோறும் தேவைப்படும் சக்தியில் 30 சதவீதம் கொழுப்பு உணவுகளின் இருந்து கிடைக்க வேண்டும். அவற்றில்,

பூரிதமான கொழுப்பு 7 சதவீதத்திற்கும் குறைவானதாகவும் பல பூரிதமாகாத கொழுப்பு அமிலங்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாகவும் ஒற்றைப் பூரிதமாகாத அமிலங்கள் 13 சதவீதத்திற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும்.

தினமும் தேவைப்படும் கொலஸ்ட்ராலின் அளவு ஒரு டெசிலிட்டருக்கு 200 மி.கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும். 

ஃபேஸ்புக் கம்பெனி டைட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை வாங்க போகிறது..!



ஃபேஸ்புக் நிறுவனம் நேற்று கடைசி சுற்று பேச்சுவார்த்தையில் உள்ளது டைட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன். ஃபேஸ்புக்குகும் ஏரோஸ்பேஸுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் – கூகுளின் லூன் / சிறிய சாட் மூலம் உலகம் முழுவதும் இலவச இன்டர்னெட் என அத்தனை கம்பெனியும் உலகின் எந்த ஒரு மூலைக்கு இன்டர்னெட்டை எப்படி எடுத்து செல்வது / இலவசமாய் வழங்குவது என டீலை ஃபைனலைஸ் செய்துகொண்டு 2015 முதல் இலவச இன்டர்னெட் வான் வெளி மூலம் சாத்தியம் என நிருபிக்க போகிறது.

அதே நேரத்தில் ஃபேஸ்புக்கும் தன் 100 கோடி சந்தாகாரர்களை எப்படி 300 – 400 கோடியாய் மாற்றுவது என யோசிக்கையில் தானும் இலவச இன்டர்னெட்டை அதாவது ஃபேஸ்புக் உபயோகிக்க அவர்களே இன்டர்னெட்டை தர யோசித்து ஏற்கனவே டைட்டன் ஏரோஸ்பேஸ் மூலம் ஆளில்லா விமானத்தின் மூலம் இன்டர்னெட் பெறுவதை சக்ஸஸ் ஆக்கி காட்டியதால்தான் அந்த நிறுவனத்தை வாங்க இப்போது முயல்கிற்து.

ஒகே டைட்டன் ஏரோஸ்பேஸ் இன்டர்னெட் மூலம் எப்படி இது சாத்தியம்.? – டைட்டன் ஏரோஸ்பேஸ் 100 கிலோ பிளஸ் ஆளில்லா சூரிய சக்தியில் மட்டும் இயங்கும் விமானத்தை கண்டுபிடித்து அதை அவர்கள் 104 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து ஐந்து வருடம் வரை தரையிரக்காமல் பறந்து கொண்டே இருக்கு வகையில் அமைத்தது மட்டும் இல்லாமல் அதன் மூலம் சாட்டிலைட்டில் இருந்து சிக்னலை எடுத்து தரைக்கு இன்டர்னெட்டை தர முடியும் என நிரூபித்ததால் இது சாத்தியமாகிறது.

அத்துடன் இந்த டெக்னாலஜி மூலம் 50-60 விமானங்கள் இருந்தால் உலகில் உள்ள அத்தனை இன்டர்னெட் இல்லாத இடத்தில் இன்டர்னெட் இதன் மூலம் கொடுக்க முடியுமாம். இதான் ஃபேஸ்புக் வாங்குற நோக்கம். நீங்க இந்த விமானம் எப்படி பறக்குது – எப்படி இன்டர்னெட்டை சேட்டிலைட் மூலம் தரும்னு பாருங்கோஓஓஓஓஓஓஓஓஒ –

நெருங்கும் கோடை.. கண் எரிச்சலா?! கவனம் தேவை......



 நெருங்கி வரும் வெய்யில் காலத்தால் அதிகப்படியான தூசிகள் கண்களில் படுவதோடு பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் கண்களை தாக்கி புண், எரிச்சல் மற்றும் வலி போன்றவற்றை உண்டாக்குகின்றன.


 மேலும் வெயிலில் நீண்ட நேரம் சுற்றினாலும், கண்கள் எரிச்சலுடன் இருக்கும். கண்கள் எரிச்சல் வந்தால், அது சிறிது நேரத்தில் குணமாகிவிடும் என்று எண்ணக்கூடாது.


இல்லாவிட்டால், கண்களில் பெரிய பாதிப்புக்களை சந்திக்க நேரிடும்.


எனவே கண்கள் எரிய ஆரம்பித்தால், அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் ஆரம்பத்திலேயே ஈடுபட்டால் கண்களில் எரிச்சல் ஏற்படுவது குணமாவதோடு கண்களை அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும்.


ஒரு கப் தண்ணீரில் 1 டீ ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றிக் கலந்து, அந்த கலவையை காட்டனால் நனைத்து, கண்களின் மேல் வைத்தால், கண் எரிச்சல் உடனே குணமாகும்.


நல்ல சுத்தமான ஐ ட்ராப்பரை எடுத்துக் கொண்டு, அதில் விளக்கெண்ணெயை எடுத்து, கண்களில் ஒரு துளி விட்டு, கண்களை சிறிது நேரம் மூடினால், கண் எரிச்சல் நீங்கும்.


 மேலும் இந்த முறையை அதிக அளவில் கண் எரிச்சல் உள்ளவர்கள், தினமும் 3-4 முறை செய்து வந்தால், கண்களில் உள்ள எரிச்சல் குறைவதோடு, கண்கள் புத்துணர்ச்சியுடனும் அழகாகவும் இருக்கும்.


சீமைச்சாமந்தி பூக்களை உலர வைத்து, பின் அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரைக் கொண்டு, கண்களை கழுவினால், கண்களில் ஏற்படும் எரிச்சல் குறைவதோடு, கண்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, சுத்தமாக வைத்துக் கொள்ளும்.


கற்றாழையின் ஜெல்லும் கண் எரிச்சலைப் போக்கக்கூடிய ஒரு பொருள் தான். அதற்கு கற்றாழையை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதை எடுத்து, அதில் உள்ள ஜெல்லை காட்டனில் நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும்.


கண் எரிச்சலைத் தடுக்கும் இயற்கை வைத்தியங்களில் ஒன்று தான் டீ பேக்குகளை கண்களில் வைப்பது. அதாவது, 2 டீ பேக்குகளை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனை கண்களின் மேல் 15-20 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இந்த முறையை ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால், கண் எரிச்சல் நீங்குவதோடு, கண்களும் அழகாக இருக்கும்.


வெள்ளரிக்காயை சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை வட்டமாக வெட்டி, கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து உட்கார்ந்தால், கண் எரிச்சல் குணமாவதோடு, கண்களைச் சுற்றியுள்ள கருவளையமும் நீங்கும். மேலும் இதில் உள்ள குளிர்ச்சி தன்மையால் கண்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, அதனை கண்களின் மேல் 15 நிமிடம் வைத்து உட்கார்ந்து, பின் குளிர்ந்த நீரால் கழுவினால், கண்களில் ஏற்படும் எரிச்சல் நீங்கும். வேண்டுமெனில், உருளைக்கிழங்கை ப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து கூட உபயோகிக்கலாம். இந்த முறையால் கருவளையம் இருந்தாலும் போய்விடும்


சிறிது காட்டனை எடுத்து, அதனை ரோஸ் வாட்டரில் நனைத்து, கண்களை மூடி அதன் மேல் வைத்தால், உடனே கண் எரிச்சல் குணமாகும். மேலும் கண்களில் புண் இருந்தால், இந்த முறையை செய்யும் போது, புண்ணால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கண்கள் எரிச்சலுடன் இருந்தால், அப்போது குளிர்ந்த நீரில் கண்களை அலசினால், கண்களில் எரிச்சலை உண்டாக்கும் தூசிகள் நீங்கி, எரிச்சல் குணமாகும். குறிப்பாக, இவ்வாறு செய்யும் போது, கைகளை முதலில் நன்கு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அழுக்கான கையால் கண்களை எப்போதும் தொடக்கூடாது.

அழிந்தவகை மாமூத் யானை பற்றிய தகவல்..!



மாமூத்துக்கள் (Mammoth) என்பன பூமியில் 4.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எலபென்டியா என்ற உயிரியல் குடும்பத்தினை சேர்ந்த ஓர் உயிரினம் ஆகும். எலபென்டியா என்பது பிரோபாக்சிடியா என்ற உயிரியல் குடும்பத்தின் துணை குடும்பம் ஆகும். இந்த மாமூத்துகளுக்கும் தற்கால யானைகளுக்கும் நெருங்கிய படிவளர்ச்சித் தொடர்பு உள்ளது. மாமூத்துகளுக்கு தற்போதுள்ள பெரிய யானைகளை விட பெரிய தந்தங்கள் உண்டு மேலும் இதன் உடல் அடர்ந்த மயிர்களால் மூடப்பட்டும் காணப்பட்டது. மாமூத் என்கிற வார்த்தையானது மன்சி என்ற ருஷ்ய மொழியில் இருந்த MAMOHT mamont என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாகும்.


மாமூத்துக்கள் தற்கால யானைகளை ஒப்பிடும் போது மிகவும் பேருரு உடையதாகும். ஆங்கிலச் சொல் "mammoth" என்பது "பெரிய" அல்லது "மிகப்பெரிய" என்கிற பொருள் தருவதாகும். சோங்குவா ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட படிமமே இதுவரை கண்டுபிடிக்க பட்ட படிமங்களிலேயே மிகப்பெரியது (Songhua River mammoth). அது ஏறத்தாழ ஐந்து மீட்டர் உயரம் இருந்திருக்க கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக மாமூத்துகள் ஆறு முதல் எட்டு ட‌ன்கள் எடை இருந்திருக்க கூடும் சில ஆண் மாமூத்துகள் பன்னிரண்டு ட‌ன்கள் வரை இருந்திருக்கலாம் என கருதபடுகிறது.

சுமார் 6000 வருடங்கள்க்கு முன்பு கூட அலாஸ்காவில் வாழ்ந்த இவை அதன் பிறகு மறைந்த்ன.உயிரின மறைவில் சமீப காலத்தில் நடந்த சம்பவம் என கொள்ளலாம்.

காணாமல் போன உயிரினங்கள் மீண்டும் உருவாக்கம்

மிகப் பெரிய உயிரினமான டைனோசர்கள் இப்போது பூமியில் உயிருடன் இல்லை. ஆனால் ஆய்வகத்தில் டைனோசர்களை உருவாக்க முடியும் என்று கற்பனையாகச் சொல்லி இருப்பார்கள்.

அது வெறும் கற்பனையல்ல. நிஜத்திலும் அதுபோன்று இறந்துபோன உயிரினங்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

யானைகளின் முன்-னோடி இனம் ‘ஊல்லி மாமூத்’. தற்போதுள்ள யானைகளைவிட மிகப்பிரம்-மாண்டமானவை மாமூத் யானைகள். பனிக் காலத்தில் வாழ்ந்த இவற்றுக்கு உடல் முழுவதும் 3 அடி நீள ரோமங்களும், மிகப்பெரிய தந்தங்களும் உண்டு. இந்த யானைகளும், டைனோசர்-களைப்போல கால மாற்றத்தில் அழிந்து போய்விட்டன.

பழங்கால பொருட்கள், உயிரினங்கள் பற்றி நாம் பூமியில் புதைந்திருக்கும் படிமங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம். பனிப்-பிரதேசத்தில் இறந்த உயிரினங்களின் படிமங்கள் நீண்ட காலத்துக்கு சிதைவுறாமலும், கெட்டுப்-போகாமலும் கிடைக்கிறது. இப்படி கிடைத்த சில படி-மங்களின் மூலம் ஒரு சில உயிரினங்களின் டி.என்.-ஏ.வை வரையறை செய்ய முடிந்துள்ளது. அந்த டி.என்.ஏ. மாதிரியை செயற்கையாக உருவாக்கி தற்போதுள்ள உயிரினங்களில் செலுத்தி புதிய மாற்றத்துடன் பழைய உயிரினங்களை திரும்பவும் உயிரூட்டிக் கொண்டு வரமுடியும் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு.

இந்த முறையில் மாமூத் வகை யானைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்று கனடாவில் உள்ள மானிடோபா பல்கலைக்கழக ஆய்வாளர் கெவின் கேம்பல் கூறுகிறார்.

25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாமூத் யானையின் தாடைப்பகுதியில் உள்ள ரத்தக்குழாய் படிமம் பனிக்கட்டிக்கு இடையில் கெடாத நிலையில் கிடைத்துள்ளது. அதேபோல் 43 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கீரிப்பிள்ளையின் எலும்புக்கூடு படிமமும் ஏற்-கெனவே கிடைத்திருந்-தது. இவற்றை ஆராய்ந்ததில் டி.என்.ஏ.வை வரையறை செய்ய முடிந்தது. இதன்-மூலம் அதன் ரத்தத்தை மறுஉற்பத்தி செய்ய முடியும் என்று தெளிவாகி உள்ளது. இந்த தொழில்நுட்பத்துக்கு ‘ஜெனிடிக் அடாப்டேசன் டெக்னிக்’ என்று பெயர்.இது தொடர்பான ஆய்வுகள் தொடர உள்ளன. இதில் வெற்றி கிடைத்தால் நமது காலத்திலும் டைனோசர்கள், மாமூத் யானைகள் போன்ற பழங்கால உயிரினங்கள் நடமாடும்!

சர்க்கரை மூலம் மொபைல் ஃபோனை பத்து நாள் வரை உபயோகபடுத்தலாம்…!



எல்லா மொபைல் ஃபோனுக்கும் உள்ள காமன் பிரச்சினை பேட்டரி லைஃப்……..ஏற்கெனவே சொல்லியிருந்தேன் சுகர் பேஷன்ட் மாதிரி பேட்டரி சார்ஜரோடு ஆன்ட்ராயிட் அங்கிள்களும் ஆண்டிகளும் சுற்றுவதை பார்த்திருப்போம், ஆனால் இன்னைக்கு நான் சொன்னது உண்மையாகி போச்சு.

இது என்ன? சர்க்கரை மூலம் புது வகை பேட்டரிகளை உருவாக்கியுள்ளனர் வர்ஜினியா பாலிடெக்னிக் மற்றும் ஸ்டேட் யுனிவர்ஸிட்டி.

இந்த வகை பேட்டரிகள் சர்க்கரையை கொண்டு ஒரு எனர்ஜியை உருவாக்கும். இதன் மூலம் பத்து நாள் வரை அந்த பேட்டரி உயிர்கொடுக்கும். இந்த பேட்டரி தற்போது சிங்கிள் யூஸ் பேட்டரி – ஆனால் ரீசார்ஜபிள் ஆப்ஷன் விரைவில் வர இருக்கிறதாம்.

இதன் எடை சாதாரண பேட்டரியை விட பாதி தான் இதனால் மொபைல் ஃபோன் எடையும் பாதியாய் குறையும். இது எப்படி வேலை செய்கிறது?

நம் உடம்பை போலவே சர்க்கரை சாப்பிட்ட உடன் அது எனர்ஜி ஆகி சர்க்கரையானது கார்பன் டயாக்ஸைடாக மாறி தண்ணீர் எலக்ட்ரானை விடுவிக்கிறது. இந்த வகை என்ஞ்மைகள் சரியாக ஆறு சைக்கிள்கள் வேலை செய்து 10 நாள் வரை பவரை கொடுத்து கொண்டே இருக்கும்.

இது பயோ வகை அதனால் இயற்க்கைக்கு ஆபத்து இல்லாதது. மக்கியும் போகும் 2 வருஷத்துக்குள் இதை வெளியே வீசும் பட்சம். அண்ணாச்சி சுகர் பேட்டரி ஒன்னு டக்குனு தாங்க சார்ஜரை கானும் எங்க வச்சேன்னு தெரியலைனு சொல்ற நேரம் அதி தூரம் இல்லை!

அசிடிட்டியை ஏற்படுத்தும் பித்த நீரின் சுரப்பை குறைக்க சில டிப்ஸ்...



பித்த நீர் என்பது உங்கள் உடலில் இருக்கும் ஈரலில் இருந்து வெளிப்படும் நீர்மமாகும். உட்கொண்ட உணவின் செரிமானத்திற்கும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், இந்த பித்த நீர் உதவுகிறது. ஈரலில் உற்பத்தியாகும் இந்த பித்த நீர், பித்தப்பையில் தேங்கியிருக்கும்.

பித்த நீரில் 80-90% வரை தண்ணீர் தான் உள்ளது. மீதமுள்ள 10-20%-ல் பித்த நீர் உப்பு, கொழுப்பு, சளி மற்றும் கனிமமற்ற உப்புகள் அடங்கியிருக்கும். பித்த நீரின் உற்பத்தியும் கழித்தலும் உங்கள் உடலின் செயல்முறை தேவைப்பாட்டை பொறுத்தே அமையும். பித்த நீரின் கழித்தல் என்பது ஈரல் செயல்பாட்டில் குறை இருக்கும் போது ஏற்படும்.

பித்த நீர் அதிகமாக உற்பத்தியாகும் போது குமட்டலும் வாந்தியும் ஏற்படும். ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், சீரற்ற வாழ்க்கை முறை மற்றும் செரிமான சம்பந்த பிரச்சனைகள் போன்ற காரணங்களால் அளவுக்கு அதிகமான பித்த நீர் உற்பத்தியாகும்.

பித்த நீர், அளவுக்கு அதிகமான சுரக்கும் போது, குமட்டலும், வாந்தியும், மன உளைச்சலும் ஏற்படும். தேவைக்கு மேலான உணவுகளை உண்ணும் போது, அளவுக்கு அதிகமான பித்த நீர் கழிவு ஏற்படும். அதனால் நீங்கள் உண்ணும் உணவின் அளவில் கவனம் தேவை. அதே போல் தூங்க செல்வதற்கு முன்னாள், அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடாது. தேவைக்கு அதிகமாகவும் உண்ணக்கூடாது. வலுக்கட்டாயமாக உணவை உள்ளே திணிக்காதீர்கள். சரியான நேரத்தில் சரியான அளவுகளில் உணவை உண்ணுவது, அளவுக்கு அதிகமான பித்த நீர் சுரப்பதை தடுப்பதற்கான டிப்ஸாகும்.

உண்ணும் உணவு அளவில் செலுத்தும் கவனத்தை அதன் தரத்தில் செலுத்துவதும் அவசியம். அதிக எண்ணெய் மற்றும் சர்க்கரை பொருட்கள் நிறைந்த கொழுப்புச்சத்துள்ள உணவுகள் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். அதனால் பித்த நீர் அளவுக்கு அதிகமாக சுரக்கிறது. அளவுக்கு அதிகமான பித்த நீர் சுரத்தலை தடுக்க, அதிக கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிர்க்கவும். ஜங் உணவுகள், சீஸ் நிறைந்த உணவுகள் மற்றும் சர்க்கரை நிரப்பிய உணவுகளும் இதில் அடக்கம்.

அளவுக்கு அதிகமான பித்த நீரை தடுக்க, உங்கள் உடல் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும். உணவு செரிமானத்திற்கு தண்ணீர் பெரிதும் உதவும். இதனால் பித்த நீர் சுரப்பதும் குறையும். நாள் முழுவதும் அதிகமாக தண்ணீர் குடிப்பது, அளவுக்கு அதிமான பித்த நீர் சுரத்தலை தடுப்பதற்கான சிறந்த வழியாகும். சொல்லப்போனால், காலை எழுந்தவுடன், முதல் வேலையாகவும், இரவு தூங்கச் செல்வதற்கு முன், கடைசி வேலையாகவும், தண்ணீர் குடித்தால் செரிமான அமைப்பு மேம்படும். மேலும் வயிற்று பொருமல், குமட்டல், இரப்பைக் குடலழற்சி மற்றும் மன உளைச்சலைப் போக்கும்.

பித்த நீர் அதிகமாக சுரக்கும் பிரச்சனை உங்களுக்கு இருந்தால், அமிலங்கள் அடங்கிய அனைத்து வித உணவுகளையும் தவிர்க்க வேண்டும். காபி, சிட்ரஸ் பழச்சாறுகள், எலுமிச்சை சாறு போன்றவைகளை தவிர்க்க வேண்டும், முக்கியமாக உங்கள் இரவு உணவை முடித்த பிறகு. மேலும் அசிடிட்டியை உண்டாக்கி பித்த நீர் சுரத்தலை அதிகரிக்கும் அனைத்து உணவுகளையுமே தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி என்பது அனைத்து வியாதிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது. சீரான முறையில் எடற்பயிர்சியில் ஈடுபடும் போது, உடல் ஆரோக்கியத்துடன், நோய் நொடி இல்லாமல் இருக்கும். அதே போல், பித்த நீர் பிரச்சனைகளை குறைக்க, உடற்பயிற்சி செய்வதும் ஒரு சிறந்த டிப்ஸாக விளங்குகிறது. செரிமானத்தை தூண்ட உணவு அருந்திய பின் ஒரு நடை, செரிமானத்தை மேம்படுத்த யோகா மற்றும் சீரான ஜிம் உடற்பயிற்சிகள் போன்ற அனைத்துமே உங்கள் உடலில் உள்ள பித்த நீரின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.

வாய் துர்நாற்றத்தை போக்கும் துளசி..!



துளசிச் செடியை ஓர் ஆராக்கியமான மனிதர் தினமும் சாப்பிட்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவர் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியையும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம்.

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரிழிவு நம்மை நாடாது. கோடை காலத்தில் வியர்வை நாற்றம் உடலில் அதிகமாக தெரியும்.

அதனை தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையப் போட்டு வைத்து அடுத்த நாள் அதில் குளித்தால் நாற்றம் இருக்கவே இருக்காது.

துளசி இலையை எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.

சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று சாப்பிடலாம். இதனால் சர்க்கரைஅளவு கட்டுப்படும்.

மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாததை இந்த அருமருந்தான துளசி செய்து விடும்.

கீரல் (Scratch)விழுந்த CD-களை சரி செய்வது எப்படி தெரியுமா..?



இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.

அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம்.

இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.

நீங்கள் இந்த( http://isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.

இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.

உணவில் காரமும்,அமிலமும் - இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்..!



நாம் உண்ணும் உணவை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று, அமிலத்தை உண்டாக்கும் உணவுகள். இரண்டாவது, காரத்தன்மையை உண்டாக்கும் உணவுகள். நல்ல ஆரோக்கியத்துக்கு உடல் ரத்தத்தில் அமில, கார விகிதம் 20 : 80 இருக்க வேண்டும்.

ஆனால் இந்த விகிதத்துக்குத் தலை கீழாக நாம் உண்ணும் உணவில் அமிலத்தன்மை அதிகம். அதிக அமிலத்தைச் சரிசெய்ய காரத்தன்மை உள்ள உணவுகள் தேவை.  பொதுவாக தானியங்கள், பருப்புகள், கொழுப்புகள் (இறைச்சி, மீன், நெய், எண்ணை) மற்றும் டீ, காபி போன்றவை அமிலத்தை அதிகமாக்குபவை.

காய்கறிகளும் பழங்களும் குடலில் காரத்தன்மையை உண்டாக்கி, அமிலத்தைக் குறைக்கின்றன. அதிக அமிலம் முதுமையை சீக்கிரம் வரவழைக்கிறது. களைப்பு, வலி, வாயு மற்றும் சரும நோய்கள் ஏற்படலாம். தூக்கமின்மை, தலைவலி, வாந்தி, நரம்புத்தளர்ச்சி இவையும் ரத்தத்தில் 'அசிடிடி' அதிகமானால் ஏற்படும்.

வளர்சிதை மாற்றத்தின் விளைவாக உண்டாகும் யூரிக் மற்றும் லாக்டிக் அமிலங்களை, ரத்தத்தில் உள்ள காரத்தன்மையுள்ள நிணநீர், பித்தநீர் முதலியவை சமன் செய்து விடும். ஆனால் அதிக அளவு அமில உணவுகளை உட்கொண்டால் உடலால் சமன்படுத்தி சமாளிக்க முடியாது.

எனவே நாம் நம் உணவில் அதிகமாக காரத்தன்மை உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட், புரத, கொழுப்பு உணவுகள் (தானியங்கள், பருப்புகள், மீன், நெய், எண்ணை, தேநீர், காபி, மென்பானங்கள், சர்க்கரை, சுவை ஊட்டிகள், செயற்கைச் சர்க்கரை, புகையிலை,

வறுத்த, பொரித்த உணவுகள், மதுபானம், மசாலாக்கள், ஊறுகாய், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், வீரியமான மல மிளக்கிகள் முதலியவை) அமிலத் தன்மை மிகுந்த உணவுகள். அநேகமாக எல்லா காய்கறிகளும் (குறிப்பாக கீரைகள், முட்டைக் கோஸ்), பழங்களும் காரத்தன்மை உடையவை. கூடிய மட்டும் அதிக காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

வறுத்த, பொரித்த உணவுகளை விட, நீராவியில் வேகவைத்த உணவுகளை உண்பது நல்லது. உடலின் அமில, காரத்தன்மை களை சரியான அளவில் வைக்க, அதிகமாக காய்கறிகளை (குறிப்பாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பட்டாணி, வெள்ளரிக்காய், பரங்கிக்காய், வெண்டைக்காய், முட்டைக்கோஸ்,

வெங்காயம், பீன்ஸ், காலிபிளவர் போன்றவை, உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கோதுமை, அரிசி, ஓட்ஸ், பார்லி, ரொட்டி, பருப்புகள் இவற்றை அளவோடு உண்ணலாம். காரத்தன்மை அதிகரிக்க சுலபான வழி, பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுவதாகும்.
 
நண்பேன்டா