Saturday 1 March 2014

அதிமேதாவிகள் - அப்டேட்ஸ்..!



அப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் பெர்லி சிங் தயாரிக்கும் படம், அதி மேதாவிகள். ஹீரோவாக சன் மியூசிக் சுரேஷ் ரவி அறிமுகமாகிறார்.

இஷாரா ஹீரோயின். மற்றும் கலாபவன் மணி, லிவிங்ஸ்டன், தம்பி ராமையா, ரேணுகா, ஜெகன், மனோபாலா உட்பட பலர் நடிக்கிறார்கள்.

பாக்யராஜ் உதவியாளர் ரஞ்சித் மணிகண்டன் இயக்குகிறார்.

 வினோ வசனம். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு. இரண்டு அதி மேதாவிகளின் காதல் கதைதான் படம்.

ஒவ்வொரு காலேஜ் ஸ்டுடன்ட் வாழ்கையிலும் இப்படியான சம்பவங்கள் நடந்திருக் கும். அதை காமெடி கலந்து சொல்கிறேன் என்றார் இயக்குனர்.

கம்பியூட்டரில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு...!



இன்றைக்கு கம்ப்யூட்டரில் பிரச்னைகள் ஏற்பட்டு, இயங்காமல் போவதும், இயக்கம் எதிர்பார்த்தபடி இல்லாமையும், அடிக்கடி நடக்கும் சம்பவங்களாகும்.

ஆனால், எதனால் இந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று அறிந்து கொள்வதும் ஒரு பிரச்னையாக நமக்குத் தோன்றும். பிரச்னைக்குரிய காரணம் ஹார்ட்வேர் சாதனங்களினாலா அல்லது சாப்ட்வேர் தொகுப்பினாலா என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை.

ஏனென்றால், இந்த இரண்டு வகை காரணங்களினால் ஏற்படும் பிரச்னைகள் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். எடுத்துக் காட்டாக, புளு ஸ்கிரீன் ஆப் டெத் எனப்படும் இயக்க முடக்கம், ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் ஆகிய இரண்டாலும் ஏற்படலாம். இவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


ரொம்ப ஸ்லோவா கம்பியூட்டர் இயங்குகிறது

இந்த பிரச்னை எல்லாருக்கும் ஏற்படுவது. அதிக எண்ணிக்கையில், கம்ப்யூட்டர் தொடங்கும்போதே இயங்கத் தொடங்கும் சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த பின்னர், கம்ப்யூட்டர் அவற்றின் சுமை தாங்காமல், இயக்க வேகத்தினைக் குறைவாக்கும்.

அல்லது ஏதேனும் மால்வேர் தாக்கினால், அப்போதும் வேகம் குறையத் தொடங்கும். ஆனால், நாம் என்ன எண்ணுகிறோம். கம்ப்யூட்டர் வாங்கி பல ஆண்டுகள் அல்லது மாதங்கள் ஆகிவிட்டன.

அதனால், இயக்க வேகம் குறைந்துவிட்டது என்று முடிவு கட்டுகிறோம். இந்த சிந்தனை தொடர்ந்து இருப்பதனால், கம்ப்யூட்டரை மூட்டை கட்டி வைத்துவிட்டு, புதிய கம்ப்யூட்டரை வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது தவறான கணிப்பாகும்.

கம்ப்யூட்டரின் செயல்வேகம் குறைகிறது என்றால், அதற்குக் காரணம் சாப்ட்வேர் பிரச்னையாகும். ஹார்ட்வேர் சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டால், இயக்கம் முடங்கிப் போகுமே ஒழிய, வேகம் குறையாது. சில நேரங்களில், சி.பி.யு. அதிக சூடாகிப் போனால், வேகம் குறையலாம். ஆனால், இது எப்போதாவது ஏற்படுவதுதான்.


புளூ ஸ்கிரீன் ஆட் டெத்

விண்டோஸ் இயக்கத்தில், அது முடங்கிச் செயலற்றுப் போகும் நிலை ஏற்பட்டால், புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்னும் நிலை காட்டப்படும். ஆனால், புதிய விண்டோஸ் இயக்கத் தொகுப்புகள் பழைய தொகுப்புகளைப் போலின்றி, நிலையாக இயங்குகின்றன.

நல்ல ஹார்ட்வேர் சாதனங்களுடன், சிறப்பான ட்ரைவர் புரோகிராம்களுடன் இயங்கும் ஒரு சிஸ்டம், என்றைக்கும் புளு ஸ்கிரீன் ஆப் டெத் என்ற நிலைக்குச் செல்லாது.

ஆனால், அடிக்கடி இந்த ஸ்கிரீன் தோன்றினால், உங்கள் ஹார்ட்வேர் சாதனங்களில் ஒன்றில் பிரச்னை இருக்கலாம். அல்லது, தவறான ட்ரைவர் புரோகிராம்களால் ஏற்படலாம்.

நீங்கள் சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றினை அண்மையில் கம்ப்யூட்டரில் பதிந்திருந்தாலோ, அல்லது ஹார்ட்வேருக்கான ட்ரைவர் புரோகிராம்களை மாற்றியிருந்தாலோ, அந்த நேரத்தினை அடுத்து, புளு ஸ்கிரீன் ஏற்பட்டால், புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடுங்கள்.

அல்லது ட்ரைவர் புரோகிராமினை மாற்றுங்கள். ட்ரைவர் புரோகிராம் எதனையும் மாற்றாத நேரத்தில், கம்ப்யூட்டரில் புளு ஸ்கிரீன் தோன்றுகிறது என்றால், நிச்சயமாக உங்கள் சிஸ்டத்தின் ஹார்ட்வேர் சாதனம் ஒன்றில்தான் பிரச்னை என்று உறுதியாகச் சொல்லலாம்.

கம்ப்யூட்டர் தொடங்க மறுக்கிறது

உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆகவில்லை என்றால், இது ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் பிரச்னையாக இருக்கலாம். விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பாதியிலேயே தன்னை முடக்கிக் கொள்கிறதா?

அல்லது கம்ப்யூட்டர் தன் ஹார்ட் ட்ரைவினை உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறதா? அல்லது உள்ளிருக்கும் சாதனங்களுக்கு மின் சக்தி செல்லாமல் இருக்கிறதா? இதற்கெல்லாம் காரணம் நிச்சயம் ஹார்ட்வேர் பிரச்னைகளாகத்தான் இருக்கும்.


ஹார்ட் ட்ரைவ்

உங்களுடைய ஹார்ட் ட்ரைவ் செயல்படத் தவறினால், அதில் உள்ள பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். பைல் ஒன்றைப் பெற முயற்சிக்கையில் அல்லது ஹார்ட் ட்ரைவில் எழுத முயற்சிக்கையில், ஹார்ட் ட்ரைவ் அதிக நேரம் எடுக்கலாம். இதனால், விண்டோஸ் பூட் ஆகாமல் நின்றுவிடலாம்


ரேம்

சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், தங்களுக்கான டேட்டாவினை ராம் நினைவகத்தில் தற்காலிகப் பயன்பாட்டிற்கு எழுதி வைக்கின்றன. ரேம் நினைவகத்தில் பிரச்னை ஏற்பட்டால், இந்த டேட்டாவில் சிறிதளவு மட்டுமே நினைவகத்தில் எழுதப்பட்டு, நமக்கு தவறான முடிவுகள் காட்டப்படும். இது இறுதியில், அப்ளிகேஷன் புரோகிராம் இயக்க முடக்கம், புளு ஸ்கிரீன் மற்றும் பைல் கெட்டுப்போதல் ஆகியவற்றில் முடியும்.


மதர்போர்ட்

மதர்போர்டில் ஏற்படும் பிரச்னைகளின் தன்மையினை அறிவது மிகவும் கடினமான செயலாகும். எப்போதாவதுதான் மதர் போர்டு மூலம் பிரச்னை ஏற்படும். ஏற்படுகையில், வேறு அறிகுறிகள் காட்டப்படாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.


மின்சக்தி

மின் சக்தி பெறுவதிலும், அதனைப் பல்வேறு சாதனப் பிரிவுகளிடையே பங்கிட்டுக் கொள்வதிலும் பிரச்னை ஏற்பட்டால், இதனை அறிதலும் எளிதான செயல் அல்ல. சில வேளைகளில், குறிப்பிட்ட பகுதிக்குத் தேவைக்கு மேல், மின் சக்தி வழங்கப்படலாம். இதனால், அந்தச் சாதனப் பகுதி பழுதடையலாம். செயல்பாட்டில் தவறுகள் ஏற்படலாம். மின் சக்தி முழுமையாக சென்றடையாவிட்டால், கம்ப்யூட்டர் இயங்காது. அதன் பவர் பட்டனை அழுத்தினால் ஒரு மாற்றமும் ஏற்படாது.

சி.பி.யு

சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் இயங்காமல் போனாலும், கம்ப்யூட்டர் இயக்கம் பூட் ஆகாது. சி.பி.யு. அளவிற்கு மேலாக வெப்பமாக ஆனாலும், புளு ஸ்கிரீன் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, கேம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அல்லது வீடியோ ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தால், அதற்கு சி.பி.யு.வின் திறன் அதிகத் தேவை ஏற்பட்டு, சி.பி.யு. சூடாகி, தொடர்ந்து இயங்க முடியாமல், புளு ஸ்கிரீன் காட்டப்படும்.



“savukku.net முடக்கப்பட்டால், நூறு தளங்கள் உருவாகும்..! - சவுக்கின் அதிரடி..!



’சவுக்கு’ இணைய தளத்தை அடுத்த பத்து நாட்களுக்குள் முடக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி சி.டி. செல்வம், சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.இப்படி ஹைகோர்ட் பிறப்பித்திருக்கும் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடப்போவதாக, சவுக்கு இணையதள வடிவமைப்பாளர் முருகையன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

அதே வேளை நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் இத்தளத்தை, முடக்க, நூறு சி.டி.செல்வங்கள் வந்தாலும் அது முடியாது. savukku.net முடக்கப்பட்டால், இது போன்ற பெயரில் நூறு தளங்கள் தொடங்கப்படும் என்றும் .www.tasmactamil.com என்ற புதிய முகவரியிலும் சவுக்கு தளம் கிடைக்கப் பெறும் என்று சவுக்கு சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

”சவுக்கு தளத்தை நடத்துவது யார்?” என்பது குறித்து ஏற்கனவே நீதிபதி விசாரிக்கச் சொல்லி, சென்னை மாநகர காவல்துறை அதன் வடிவமைப்பாளரை கைது செய்தது குறித்த செய்தியும், அதன் பிறகான விசாரணைகளும் வாசகர்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கைதாகியுள்ள இணைய தளவடிவமைப்பாளர் முருகையன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “நீதிபதி சி.டி.செல்வம் குறித்தே, சவுக்கு தளத்தில் பல்வேறு கட்டுரைகள் வந்திருப்பதால், சி.டி.செல்வம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனு நிலுவையில் இருக்கையில் சி,டி.செல்வம் இந்த வழக்கை விசாரிப்பது முறையல்ல” என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த தளத்தை முடக்க வேண்டுமென்று நடந்த வழக்கில் சவுக்கு தளத்தினால் சுட்டிக்காட்ட பட்ட நீதிபதியான சிடி.செல்வமே இதற்கு தீர்ப்பு வழங்குவது வேடிக்கை என்றும் இம்மனுவை நீதிபதி சிடி செல்வம் விசாரிக்கவே கூடாது என்றும் எக்காரணம் கொண்டும் சவுக்கு தளத்தை முடக்க கூடாது எனவும் பேஸ்புக் ஃபேமஸ் கிஷோர் கே சாமி தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்தார்,

ஆனால் இந்த கோரிக்கைகளையெல்லாம் தான் விசாரணைக்கு ஏற்கப்போவதில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி சி.டி. செல்வம், ”சவுக்கு இணைய தளத்தை சென்னை மாநகர காவல்துறை பத்து நாட்களுக்குள் முடக்கியே தீர வேண்டும். அத்துடன் சவுக்கு தளத்தால் பாதிக்கப்பட்டோர் யாராக இருந்தாலும், இது தொடர்பாக புகார் அளிக்கலாம். ஏற்கனவே ஐந்து வழக்கறிஞர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். அதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து இனிமேல், www.savukku.net என்ற இணைய தளத்தைத் தவிர www.tasmactamil.com ,www.ctselvam.com, www.ctselvam.net போன்ற புதிய முகவரியிலும் சவுக்கு தளம் கிடைக்கப்பெறும் என்று கூறப்படுகிறது.

“நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படும் இத்தளத்தை, முடக்க, நூறு சி.டி.செல்வங்கள் வந்தாலும் அது முடியாது. savukku.net முடக்கப்பட்டால், இது போன்ற பெயரில் நூறு தளங்கள் தொடங்கப்படும். முன்னை விட பெரிய வீச்சோடு இத்தளம் செயல்படும். இது உறுதி. இத்தகைய நெருக்கடியான சூழலில், இத்தளம் தொடர்ந்து செயல்பட ஒரே காரணம், அன்பான உறவுகளான வாசகர்களின் தொடர்ந்த ஆதரவும் அன்பும் மட்டுமே.

இந்த அன்புக்கு, சவுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது. இதற்கு பிரதிபலனாகத்தான், இத்தளம் தொடர்ந்து நடத்தப்படும். இது நீதிக்கான போர். இதில் நாம் நிச்சயம் வெல்வோம். இறுதி வெற்றி நமதே” – என்று சவுக்கு இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாகவும் சவுக்கு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஸ்டெதாஸ்கோப்புகளும் பாக்டீரியாக்களை பரப்பும்! – அதிர்ச்சி தகவல்..!



மருத்துவமனைகளில் நாம் அமரும் சோபா, நாற்காலி, அங்குள்ள பழைய பேப்பர், புத்தகங்கள் மற்றும் அங்கு பணிபுரியும் சுகாதார ஊழியர்களின் கைகளின் மூலம் பாக்டீரியாக்கள் பரவுகின்றன என்ற முன்னரே கண்டறிந்தறிந்துள்ளனர்.

இதனிடையே மருத்துவர்கள் உபயோகிக்கும் ஸ்டெதாஸ்கோப்புகளும் பாக்டீரியாக்களை பரப்புகிறது என்றும் தொற்றுநோய் எதிர்ப்பு, நோயாளி பாதுகாப்பு போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்புகளும் ஒவ்வொரு பரிசோதனைக்குப் பின்னரும் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை எனவும் தற்போதைய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்டெதாஸ்கோப்பை ‘லேனக்”என்ற பிரெஞ்சு டாக்டர் 1816 – ம்ஆண்டில் கண்டறிந்தார். சிறுவர்கள் ஒரு குழாயின் மேல் பகுதியில் ஒலி எழுப்பி,அதை குழாயின் கீழ்ப்பகுதி மூலம் கேட்டு மகிழ்ந்ததை லேனக் பார்த்தபோது ,”அடடே. நமது இதயம் மற்றும் நுரையீரல் ஒலிகளை இப்படிக் கேட்க முடியுமா?” என்ற யோசனை தோன்றியதாம்.இந்த எண்ணத்துக்குக் கிடைத்த பரிசுதான் ஸ்டெதாஸ்கோப் எனும் கருவியாகும்.

இந்த ஸ்டெதாஸ்கோப் பெரும்பாலும் டாக்டர்கள் தங்கள் கல்லூரி வாழ்க்கையின் போது வாங்கியதைதான் பயன் படுத்தி வருகிறார்கள். அதை யாரும் சுத்தப்படுத்தியதாக தெரியவில்லை. இந்நிலையில்தான் ஜெனிவா மருத்துவமனைகளின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு உடல் பரிசோதனை மூலம் மருத்துவரின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்பும் பரப்பும் பாக்டீரியாக்களின் அளவைக் கண்டறிந்துள்ளனர்.

71 நோயாளிகளை மூன்று மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்கும்போது அவர்களில் ஒருவர் ஒவ்வொருமுறையும் சுத்தம் செய்யப்பட்ட ஸ்டெதாஸ்கோப்பையும், கையுறைகளையும் பயன்படுத்தியதன்மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு நோயாளியின் பரிசோதனை நிறைவு செய்யப்பட்டபின் ஸ்டெதாஸ்கோப்பின் குழாய் மற்றும் அடிப்பகுதி, மருத்துவரின் கைகளின் நான்கு பகுதிகள் போன்றவற்றில் சேரும் பாக்டீரியாக்களின் அளவு தனித்தனியே கணக்கிடப்பட்டது.

மருத்துவர் களின் விரல்நுனியும், ஸ்டெதாஸ்கோப்பின் அடிப்பகுதியும் பாக்டீரியாக்கள் அதிகம் சேரும் இடங்களாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும் இத்தகைய ஒப்பிடுதலை நேரடியாக நடத்திய முதல் ஆய்வு இதுவென்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஒரு நாளில் தொடர்ந்து உபயோகிக்கப்படும் ஸ்டெதாஸ்கோப் பல நோயாளிகளின் தோல்பரப்பின் மீது நேரடியாக வைக்கப்படுகின்றது.

இதனால் எம்ஆர்எஸ்ஏ போன்ற கடுமையான தொற்றுவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் இந்தக் கருவியில் சேர வாய்ப்புண்டு. அதுமட்டுமின்றி மருந்து எதிர்ப்பு தன்மை உடைய பாக்டீரியாக்களும் நோயாளி பரிசோதனையின்போது இந்தக் கருவியில் படிய வாய்ப்புள்ளது என்பதால் பாக்டீரியாக்களைப் பரப்புவதில் ஸ்டெதாஸ்கோப்புகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தலைமை ஆராய்ச்சியாளரான டிடியர் பிட்டெட் தெரிவித்தார்.

தொற்றுநோய் எதிர்ப்பு, நோயாளி பாதுகாப்பு போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு மருத்துவர்களின் கைகளும், ஸ்டெதாஸ்கோப்புகளும் ஒவ்வொரு பரிசோதனைக்குப் பின்னரும் முறையாக சுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனக்கு 2வது கோவில் கட்டும் ரசிகருக்கு நன்றி தெரிவித்தார்...! குஷ்பு...



 நடிகை குஷ்புவுக்கு மறுபடியும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திவிடுவார்களோ? குஷ்பு கோலிவுட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

 அவர்கள் குஷ்பு மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்த நினைத்த விதம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. அவர்கள் அப்படி என்ன செய்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

திருச்சி அருகே குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டிய செய்தி நாடு முழுவதும் தீயாக பரவியது.

குஷ்பு நம்ம வீட்டு மகாலஷ்மி நிகழ்ச்சிக்காக தயாரானபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதில் அவர் ஊதா கலரு சேலையில் அசத்தலாக இருந்தார்.

குஷ்புவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, வாவ்... என்னமா இருக்கீங்க... சீக்கிரமா உங்களுக்கு இரண்டாவது கோவில் ரெடி ஆகப் போகுதுன்னு நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

குஷ்புவுக்கு இன்னொரு கோவில் கட்ட இடம் பார்க்க வேண்டும் என்று இன்னொரு ரசிகர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த 2 ரசிகர்களின் கருத்திற்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

குஷ்புவுக்கு கோவில் மட்டுமா கட்டப்பட்டது. அவர் பெயரில் தமிழகத்தில் இட்லி விற்பனையும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் உள்ளிட்ட தளத்திலுள்ள 125 கோடி பேரின் அக்கவுன்ட் அபேஸ்..!



கூகுள் மெயில் எனப்படும் ஜிமெயில் தளத்தினையும் அதன் வசதிகளையும் பயன்படுத்தாதவர்கள் இல்லை எனலாம். கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துவோர் அனைவரும், இத்தளத்தினை தங்களின் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி, பைல்களை மற்றும் முக்கிய புரோகிராம்களை சேவ் செய்து வைக்கவும் பயன்படுத்துகின்றன.கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் தான் கூகுள் மெயில் செயல்படுகிறது.

எனவே, நாம் இதில் பதிந்து வைக்கப்படும் பைல்கள் கிளவ்ட் கம்ப்யூட்டிங் வகையில் சேவ் செய்யப்பட்டு, நம் தேவையின் போது தரப்படுகின்றன. சரி, இவை என்றென்றும் பாதுகாப்பாக இருக்குமா?என்று அவ்வப்போது கேள்விகள் எழுந்த நிலையிலும் இன்றைக்கு நம்முடைய பல முக்கிய தகவல்கள், பேங்க் விவரங்கள், மற்றும் பல தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் இந்த மெயிலில் தான் வைத்திருக்கிறார்கள்.அப்படி வைத்திருப்பவர்களுக்கு தற்போது ஒரு திடுக் செய்தி வந்துள்ளது.அதாவது நேற்று இரவு நடந்த சைபர் அட்டாக்கில் உலகம் முழுவதிலும் இருந்து 125 கோடி நபர்களின் தனி நபர் விவரங்கள் திருடப்பட்டிருக்கிறதாம்.

தற்போது பல்வேறு நாடுகளில் இருந்து வரும் 10 தவறான இ-மெயிலில் (ஸ்பேம்) ஒன்று இந்தியாவில் இருந்து வருகிறது. சைபர் குற்றங்கள் தடுப்பதில் ஒரு நாட்டினரால் மட்டும் முடியாது. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து தான் குற்றங்களை தடுக்க முடியும். உலகம் முழுதும் உள்ள 50,000 கம்பெனிகளில் தினமும் சைபர் அட்டாக் நடந்து வருகிறது.அதே சமயம் கூகுள், மைக்ரோசாப்ட், யாஹூ இப்படி பல பெரிய நிறுவனங்களையே குறி வைத்து ஹேக்கர்கள் இது மாதிரி அட்டாக்கை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில்தான் நேற்று இரவு நடந்த சைபர் அட்டாக்கில் உலகம் முழுவதிலும் இருந்து 125 கோடி நபர்களின் தனி நபர் விவரங்கள் திருடப்பட்டிருக்கிறது என்றும் அதிலும் இந்த மேட்டரே இன்று தான் கூகுளுக்கு தெரியும் என்பதால் இது குறித்து இப்போது தான் எத்தனை பேர் திருடப் பட்டுள்ளது என்று கணக்கு எடுத்து கொண்டிருக்கிறதாம்.

போலிகளைத் தவிர்க்க திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு..!



இந்தியாவில் புவிசார் குறியீட்டு சட்டம் 1999-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன் விதிகள் 2002-ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டு, 2003-ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டன.புவிசார் குறியீடு என்பது ஒரு புவியியல் சார்ந்து உற்பத்தி செய்யும் பொருளை மற்றவர்கள் உரிமை கொள்ளக் கூடாது.அதே பெயரை பயன்படுத்தக் கூடாது. அந்தப் பெயரைக் கொண்டு போலியாக பொருள்களை உற்பத்தி செய்யக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும். உதாரணத்துக்கு காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்கடி சேலை உள்பட பல பொருள்களைக் குறிப்பிடலாம். இதில் பதிவு செய்த பொருள்கள் பெயரில் வேறு யாரும் உற்பத்தி செய்தால் சட்டப்படி அது தவறாகும்.

இந்த புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு உறுதி வரை 193 பொருள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 128 பொருள்கள் கைத்தறி பொருள்கள் சார்ந்தவை. இந்தப் பொருள்கள் புவிசார் குறியீடின் கீழ் பதிவு மட்டுமே செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பொருள்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.ஆனால், வெளிநாட்டு மதுபானவகைகளுக்கு இந்தியாவில் புவிசார் குறியீடின் கீழ் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்பை கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. மதுபான வகைகளுக்கு புவிசார் குறியீடின் கூடுதல் பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசு, இந்தியப் பொருள்களுக்கு உரிய கூடுதல் பாதுகாப்பு இதுவரை வழங்கவில்லை.இதையொட்டி சென்னை ஹைகோர்ட்டில் ஒரு வழக்குக் கூட நிலுவையிலுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை கோவிலி்ல தயாரித்து பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவிற்க ஜி.ஐ எனப்படும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலில் மட்டுமே கிடைக்கும் லட்டு பிரசாதம் பிற இடங்களில் திருப்பதி லட்டு என்ற பெயரில் தயார் செய்யப் பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து திருமலா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் தேவஸ்தானத்திற்கு ஆதரவாக அளித்த தீர்ப்பில் புவிசார் குறியீடு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில் பழங்காலம் முதலே தென் மாவட்ட தாய்க்குலங்களின் கைப்பக்குவத்தில் உருவான, அதிரசம், தட்டை, முந்திரிக் கொத்து, சீடை, சுசியம், அப்பம்… போன்ற உணவுப் பண்டங்கள் வரிசையில், திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன் ஆகியவை உலகப் புகழ் பெற்றுள்ளன.அவற்றுக்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சியும் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்க்து.

பணக்காரர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் என்ன வித்தியாசம்..?



இந்த உலகத்தில் பணக்காரராக மாற வேண்டும் என்று ஆசை படாதவர் யாரேனும் இருக்க முடியுமா? வெகு சிலரை தவிர, அனைவருக்கும் இந்த ஆசை இருக்கத் தான் செய்கிறது. பணக்காரராக மாறுவதற்கும் அந்த அந்தஸ்தை நிலை நிறுத்துவதற்கும் சில தகுதிகள் இருக்கிறது. அது தெரியாததால் தான் பலராலும் பணக்காரராக முடிவதில்லை. பணக்காரராக கடும் உழைப்பும், தெளிவான அறிவு மட்டும் போதாது. வேறு என்ன வேண்டும் என்று தானே கதைக்கிறீங்க..

ஒரு கோடீஸ்வரன் மற்றவர்களிடமிருந்து எவ்வாறு மாறுபடுகிறான்? அது அவர்களின் நிகர சொத்து மதிப்பில் உள்ள பூஜியங்கள் மட்டுமா அல்லது அவர்களின் சிந்தனை, மனப்பான்மை மற்றும் முற்றுணிபு போன்றவைகளாலும் தீர்மானிக்கப்படுகிறதா? மற்றவர்கள் மத்தியில் ஒரு பெரும் பணக்காரரின் குணாதிசயங்கள் தனித்துவமானதாக இருக்கும். அப்படி என்ன குணாதிசயங்கள்?? இதை பின்பற்றினால் நாமும் பணக்காரராக மாறலாம்.

நீங்கள் உங்களை தன்னம்பிக்கை நிறைந்தவராக கூறிக் கொள்ளலாம், ஆனால் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு கூட சில காலங்களில் தன் ஆற்றல்கள் மீது ஐயங்கள் எழும். அதனை தடுக்க இயலாவிட்டாலும் கூட, சுய ஐயங்களை கடந்து செல்ல சில வினைமுறைத் திறன்களை வகுக்கலாம். வசதி மற்றும் வெற்றியின் மீதான ஐயங்களை கோடீஸ்வரர்கள் மூட்டை கட்டி விட்டு, அவர்களின் இலக்கை நோக்கியே பயணிப்பார்கள். Show Thumbnail

பணக்காரர்கள் உறுதியான தெளிவான இலக்குகளை நிர்ணயித்து கொள்வார்கள். பின் அந்த இலக்கை போதிய காலத்திற்குள் அடைய, ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் தொடர்ச்சியாக பாடு படுவார்கள். ஆனால் நாம் இலக்கை மட்டுமே நிர்ணயித்து கொண்டு, அதை மறந்தே போகிறவர்கள், பெரிதாக சாதிக்க போகும் வாய்ப்பை இழக்கிறார்கள்.

பணக்காரர்கள், அடுத்த கட்ட காரியங்களை எடுப்பதற்கு முன்பும், பிறருக்கு உதவுவதற்கு முன்பும், தங்களின் வேலைகளை முதலில் முடிப்பார்கள். தங்கள் அட்டவணையை சரியாக பின்பற்றி, பிறர் கூறுவதை பற்றி கவலை கொள்ளாமல், இலக்கை அடைய சோர்வடையாமல், கடினமாக வேலை செய்வார்கள். சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பை மீறி, தங்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, கல்லூரி படிப்பை துறந்த மார்க் ஜுக்கர்பெர்க், பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களை எப்படி நாம் மறக்க முடியும்.

இவ்வுலகில் மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் - நினைத்தை நடக்க வைப்பவர்கள்; நினைத்தது நடக்க காத்திருப்பவர்கள்; 'என்ன நடந்தது' என்று எப்போதுமே கேட்பவர்கள். பணக்காரர்கள் இதில், முதல் ரகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் எப்போதுமே தொடக்க முயற்சிகளை எடுத்து அதனை சாதிப்பதில் நம்பிக்கை கொண்டவர்கள். அவர்கள் யாருக்காகவும் காத்திருக்காமல், தனியொரு ஆளாக, நடக்கும் அனைத்தையும் சமாளித்து, மனதுக்கு சரியென பட்டதை செய்வார்கள்.

பணக்காரர்கள் எதையுமே அரை குறையாக விடுவதில்லை - அது சொந்த உறவுகளாகட்டும் அல்லது தொழில் ரீதியான விஷயமாகட்டும். எந்த ஒரு செய்திட்டத்தையும் முடிக்காமல் விட மாட்டார்கள். அதே போல் அவர்களின் பில் தொகைகளையும் கட்டாமல் இருக்க மாட்டார்கள். வேலைகளை தள்ளி கொண்டே சென்றால் உங்கள் ஆற்றலுக்கு அது முட்டுக்கட்டை போட்டு, உங்கள் சிந்தனைகளை சிதற விடும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரிவதால், சாமர்த்தியமாக நடந்து கொள்வார்கள்.

அவர்களுக்கென சில இலக்குகள் இருப்பதால், அதற்கு இடையூறாக இருக்கும் விஷயங்களுக்கு எப்போது, எப்படி 'வேண்டாம்' என்று சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். நீங்கள் எந்தளவுக்கு வசதியாக இருக்கிறீர்களோ, அந்தளவுக்கு உங்களை அனைத்திலும் உட்படுத்த பலரும் முயல்வார்கள் என்பது தெளிவான ஒன்றே. ஆனால் மறுக்கும் கலையை ஒருவன் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அவன் சீக்கிரத்திலேயே பிரச்சனையில் சிக்கிக் கொள்வான்.

பணக்காரர்கள் அவர்கள் விரும்பியதையே செய்வார்கள். அதற்கு காரணம் அதில் கிடைக்கும் சுதந்திரம் மட்டுமல்லாது விரும்பி செய்யும் எந்த வேலையானாலும் நன்மையையே ஈட்டி தரும் என்பது அவர்களுக்கு தெரியும். சாதாரண மக்களுக்கு வேலை பிடிக்கவில்லை என்றாலும் கூட, பணம் சம்பாதிக்கும் குறிக்கோளில் அதனை செய்வார்கள். ஆனால் பணக்கார்கள் அப்படி யோசிப்பதில்லை.

எல்லோரும் சொல்வதை போல், சொத்தை இழந்தால் ஏதோ ஒன்றை தான் இழப்போம்; ஆனால் உடல்நலத்தை இழந்தால், அனைத்தையும் இழந்ததை போலாகும். பணக்காரர்கள் பல நேரங்களில் சிக்கனமாக இருந்தாலும் கூட, ஆரோக்கியத்தை பெறுவதற்கும், நல்ல கல்வியையை பெறுவதற்கும் முதலீடு செய்ய தயங்குவதில்லை. இந்த முதலீடு அவர்களை பணக்காரர்களாக மாற்றும். எப்படி என்று தெரிய வேண்டுமா?

மிகவும் சுலபம்; ஆரோக்கியத்தையும் நல்ல கல்வியையும் பெற்றிருந்தால், அவர்களால் புது தொழிலை ஆரம்பித்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட முடியும். வியாபாரம் வெற்றியடைய வேண்டுமானால், தொழிலில் ஈட்டிய லாபத்தை மீண்டும் அதில் முதலீடு செய்ய வேண்டும். இவ்வகை முதலீடு உங்களை ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடனும் வைத்திருக்கும்.

பணக்காரர்கள் வேலைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குடும்பத்திற்கும் கொடுக்கிறார்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவதையும் சமுதாயத்தோடு ஈடுபடுவதையும் அவர்கள் தவிர்ப்பதில்லை. பணக்காரர்களில் 97% மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களையும் வாழ்க்கையை அணுகும் முறையையும் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று பாஸ்டன் கல்லூரியை சேர்ந்த பால் ஜி. செர்விஷ் மற்றும் ஜான் ஜே. ஹாவென்ஸ் நடத்திய ஆய்வு கூறுகிறது.

மனிதனின் மனப்பான்மை இரண்டு வகைப்படும் - நல்ல மனப்பான்மை மற்றும் கெட்ட மனப்பான்மை. நல்ல மனப்பான்மை எப்போதும் உங்களை வருங்கால வெற்றியை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும். நல்ல மனப்பான்மை இருக்கும் போது, உங்கள் பிரச்னையை தீர்க்க அதிசயம் நடக்கும் என்று காத்திருக்காமல், நல்ல தீர்வை நீங்களே காண்பீர்கள். ஒரு பணக்காரன் இதையே செய்வான். அவர்களின் பேச்சும் செயலும், மோசமான சூழ்நிலைகளிலும் கூட, வெற்றியை ஈட்டும் மனப்பான்மையையே பிரதிபலிக்கும்.

மக்கள் மத்தியில் வணிகம் செய்யப்படும் முதலீடுகள் வேகமாக பரவுவதால், அதனை பற்றிய தகவல்களை சுலபமாக அடையலாம். இந்த தகவல்களை பல முதலீட்டாளர்களும் நிதி துறை சார்ந்தவர்களும் படித்து, இதன் அடிப்படையில் பங்கு விலையை நிலைநாட்டுகிறார்கள். பணக்காரர்கள் இந்த ஊகத்துக்கு முரண்பாடாக நடக்க மாட்டார்கள். அதனால் முதலீடு செய்யும் போது, வருங்காலத்தை கணிக்க மாட்டார்கள். பணக்காரர்கள் எப்போதுமே இடர்பாட்டை குறைக்க விரும்புவார்கள். அப்படி செய்து, பல பிரிவுகளுக்கு கீழ் சந்தை ஈட்டு தொகையை அதிகரிக்க விரும்புவார்கள். ஆனால் சாதாரண மக்களோ, வருங்காலத்தை கணித்து, குறிப்பிட்ட பங்கில் முதலீடு செய்து, தவரிழைப்பார்கள்.

உலகில் உள்ள விசித்திரமான ஆல்கஹால்கள்..!

ஆல்கஹால் என்றதும் அனைவரும் நினைவுக்கு வருவது ஒயின், பீர், விஸ்கி, வோட்கா, ரம் போன்றவை தான். இதில் ஒயின் திராட்சையால் செய்யப்படும் ஒரு பானம்.

இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று தெரியும். ஆனால் இந்த ஒயினில் பல வெரைட்டிகள் உள்ளன. அவைகளின் பெயர்களை கேட்டாலே அசந்துவிடுவீர்கள். ஏன் சிலருக்கு அருவெறுப்பு கூட ஏற்படும்.

அதுமட்டுமின்றி, விஸ்கி, வோட்கா, பீர் போன்றவற்றை கூட விசித்திரமாக தயாரித்து சாப்பிடுகிறார்கள். இப்போது அப்படி உலகில் உள்ள விசித்திரமான சில ஆல்கஹால்கள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. முடிந்தால் அவற்றை ட்ரை செய்து பாருங்கள்...

பாம்பு ஒயின் (Snake Wine)


 உலகிலேயே இந்த ஒயின் மிகவும் சிறந்த பானமாக கருதப்படுகிறது. இது நச்சுத்தன்மையுடைய நாகப்பாம்பை மூன்று மாதமாக நீரில் போட்டு பதப்படுத்தி வைத்து, பின் அதனை குடிப்பார்கள். இதனைக் குடித்தால், வாதநோய் குணமாவதோடு, செக்ஸில் ஆர்வம் அதிகரிக்கும். குறிப்பாக இந்த ஒயின் சீனாவில் அதிகம் கிடைக்கும்.

தேள் விஸ்கி (Scorpion whiskey) 


இந்த விசித்திரமான பானமானது கருந்தேளை, ஜின்செங் வேர் மற்றும் சில மூலிகைகளின் விதைகள் ஆகியவற்றை விஸ்கியில் ஊற வைத்து செய்யப்படுவதாகும். இந்த தேள் விஸ்கியானது இதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் தசை வலிகளுக்கும் சிறந்தது.

எலி ஒயின் (Mouse Wine)


 சீனாவில் கிடைக்கும் இந்த எலி ஒயின், பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் தரக்கூடியது. இது சில சீன மூலிகைகள், வேர்கள் மற்றும் எலிக் குட்டி ஆகியவற்றை நீரில் போட்டு மூன்று வருடங்கள் ஊற வைத்து செய்யப்படுவதாகும். முக்கியமாக இந்த எலி ஒயின் ஆஸ்துமா மற்றும் கல்லீரல் பிரச்சனைக்கு சிறந்தது.

அணில் பீர் (Squirrel beer)


 அணில் பீர் தான் உலகிலேயே மிகவும் ஸ்ட்ராங்கான பீர். இதனை ஒரு சிப் குடித்தாலே, போதை தலைக்கு ஏறிவிடும். அதற்கேற்றாற் போல் இதன் விலை மிகவும் அதிகமானது.

பேகன் வோட்கா (Bacon Vodka)


எந்த இறைச்சியானாலும் விரும்பி சாப்பிடுபவர்கள் மட்டும் தான் இந்த பேகன் வோட்காவை குடிக்க முடியும். ஏனெனில் சமைத்த பன்றி இறைச்சியை வோட்காவில் சேர்த்து செய்யப்படுவதாகும். மேலும் இதில் உள்ள ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இந்த பானம் மிளகு மற்றும் வேக வைத்த பன்றியின் வாசனையோடு இருக்கும்.

பல்லி ஆல்கஹால் (Three Lizard Liquor) 


உலகிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் ஆல்கஹாலை சுவைக்க நினைத்தால், அதற்கு பல்லி ஆல்கஹால் தான். இந்த ஆல்கஹாலில் மூன்று பல்லியை ஊற வைத்து செய்வார்கள். இது மிகவும் விலை அதிகமானது. இதனை ஒரு சிப் குடித்தாலே, உடலில் எனர்ஜி அளவுக்கு அதிகமாகவிடும்.

கடற்பறவை ஒயின் (Seagull Wine)

 இந்த ஒயினானது இறந்த கடற்பறவையை தண்ணீரில் போட்டு பதப்படுத்தி செய்யப்படுவதாகும். இதுவும் உலகில் உள்ள மக்களால் விரும்பி பருகப்படும் ஒயின்களுள் ஒன்றாகும்.

 
நண்பேன்டா