Wednesday 12 February 2014

வங்கித்துறையில் பத்து ஆண்டுகளில் 20,00,000 பேருக்கு வேலைவாய்ப்பு...



இந்திய வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய விரிவாக்கப் பணிகளுக்கு காரணமாக அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் 20,00,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியார் மட்டுமில்லாமல் பொதுத்துறை வங்கிகளில் பணிபுரிவோரில் பெரும்பாலான ஊழியர்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இருந்து ஓய்வு பெற உள்ளனர். அத்துடன் முன்னணி வங்கிகள் பலவும் கிராமபுரங்களுக்கும் தங்களது சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையில்ஈடுபட்டுள்ளனர்.

இதனால் புதிய ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் வங்கி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டில் மட்டும் வங்கிப்பணிகளுக்காக 4,00,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 70,000 பேர் பொதுத்துறை வங்கிகளால் தேர்வு செய்யப்பட்டனர் என்றும் 40,000 பேர் தனியார் வங்கியில் தேர்வு செய்யப்பட்டனர் என்றும் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பி.எப் [ PF ] சந்தாதாரர்களுக்கு “நிரந்தர கணக்கு எண்” வழங்கிட உத்தரவு....!



பிஎப் சந்தாதாரர்களுக்கு “நிரந்தர கணக்கு எண்”வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசு பிஎப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்  சந்தாதாரர்களுக்கு பிஎப் கணக்கு எண் வழங்கியுள்ளது.

 ஒரு தொழிலாளி தான் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போது அவரது பிஎப் கணக்கு எண்ணும் மாற்றப்படும். இதனால் அந்த தொழிலாளிக்கும் நடைமுறை சிக்கல் உருவாகும். அதேபோல பிஎப் அலுவலகத்திலும் பணி சுமை அதிகரிக்கும்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுபிஎப் சந்தாதாரர்கள் அனைவருக்கும் நிரந்தர கணக்கு எண் வழங்கட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்துபிஎப் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மத்திய அறக்கட்டளை வாரிய (சிபிடி) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய தொழிலாளர் அமைச்சக செயலாளர் கவுர்குமார் உத்தரவிட்டதாக பிஎப் வட்டாரங்கள் தெரிவித்தன.

நிரந்தர கணக்கு எண் வழங்கும் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுக்குள் முடிக்க வேண்டும் என்று பிஎப் ஆணையர் கே.கே.ஜலாலை தொழிலாளர் துறை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த திட்டத்தை 2014-2015ம் ஆண்டில் செயல்படுத்துவதில் எந்த சங்கடமும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோசாப்ட் அளித்த புகார் மீது நடவடிக்கை..!



கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஜாம்பவான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காப்புரிமை அனுமதியின்றி, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வாடிக்கையாளர்களின் லேப்டாப்களில் சட்டவிரோதமாக மென்பொருட்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்களை விற்கும் விற்பனையாளர்கள் சிலர் தனது வாடிக்கையாளர்களுக்கு போலியான மென்பொருட்களை பதிவேற்றம் செய்து அதனை மைக்ரோசாப்டின் அசல் மென்பொருள் என்று கூறி விற்பனை செய்துள்ளனர்.

கடந்த 2013 டிசம்பரில், மைக்ரோசாப்டின் பிரதிநிதி ஒருவருக்கு தனது வாடிக்கையாளர் அளித்த புகாரையடுத்து இந்த விவகாரம் தெரியவந்தது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புகழ் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதோடு, பணரீதியான இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் விற்பனையாளர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் எந்தவித அங்கீகாரத்தையும் அளிக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், மோசடி செய்த போலி விற்பனையாளர்கள் மீது இந்திய காப்புரிமைச் சட்டப் பிரிவு 65 மற்றும் 63 ன்படி வழக்கு பதிவு செய்யக் கோரி டெல்லி நீதிமன்றத்தை அணுகியது.

இதனை விசாரித்த தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு வீணா ராணி, இந்தியாவில் இயங்கி வரும் அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் அளித்துள்ள புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து போலி விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

சிவாஜி கணேசன் - வாழ்க்கை வரலாறு...!



சிவாஜி கணேசன் அவர்கள், தென்னிந்தியாவின் ஒரு பெரிய நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது குழந்தைப் பருவத்திலிருந்தே நடிப்பதில் பேரார்வம் கொண்ட அவர், அதில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர், அவர் தெலுங்கில் ஒன்பது திரைப்படங்கள், கன்னடத்தில் ஒன்று, மலையாளத்தில் இரண்டு, ஹிந்தியில் இரண்டு திரைப்படங்கள் என முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி மேலும் தகவல் பெற, அவரது இந்த வாழ்க்கை வரலாற்றைத் தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: 1 அக்டோபர் 1927

பிறந்த இடம்: விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: 21 ஜூலை 2001

தொழில்: நடிகர், அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும், ராஜாமணி அம்மாளுக்கும் மகனாக விழுப்புரத்தில் 1 அக்டோபர் 1927 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்.

ஆரம்பகால வாழ்க்கை

சிவாஜி கணேசன் அவர்கள், தனது இளம்வயதிலேயே நாடகங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாலும், அதில் பங்கேற்பதில் ஆர்வம் இருந்ததாலும், தனது கனவினை நிறைவேற்ற ஒன்பது வயதிலேயே வீட்டை விட்டு ஓடிவந்தார். பின்னர், அவரது சொந்த அம்மாவே நாடகக் குழுவில் இடம் பெற உதவி செய்தார். சிவாஜி கணேசன் அவர்கள், கமலா என்பவரை மணமுடித்தார். அவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற மகள்களும் உள்ளனர்.

திரையுலக வாழ்க்கை:

திரையுலகுக்கு வரும் முன், நாடகங்களில் நடித்த சிவாஜி கணேசன் அவர்கள், ‘இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் மூலமாக மிகவும் பிரபலமானார். இதில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இந்நிகழ்ச்சியே, அவருக்கு ‘சிவாஜி கணேசன்’ என்ற பெயரை நிலைக்கச் செய்தது.

தமிழ்த் திரையுலகில், ‘பராசக்தி’ என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் அவர்கள், முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர், இரண்டு ஹிந்தி திரைப்படங்கள், ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். அவருக்குத் தெளிவான, உணர்ச்சிப் பூர்வமான தமிழ் உச்சரிப்பும், நல்ல குரல்வளமும், சிறந்த நடிப்புத் திறனும் இருந்ததால், ‘நடிகர் திலகம்’ என்றும், ‘நடிப்புச் சக்கரவர்த்தி’ என்றும் மக்களாலும், திரையுலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.

அக்காலத்தில், தேசத் தலைவர்களின் பத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடித்த முக்கிய நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன் அவர்கள். ‘இராஜராஜ சோழன்’ மற்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ ஆகிய திரைப்படங்களே இதற்கு சான்றாகும். ‘மனோகரா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற திரைப்படங்கள், இவரின் வீர வசனத்திற்காகப் பெயர்ப் பெற்றவை. ‘பாசமலர்’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பைக் காணலாம். ‘கந்தன் கருணை’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ போன்ற பக்தித் திரைப்படங்களும் பெரிதும் பேசப்பட்டவை.

அரசியல் வாழ்க்கை

அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜி கணேசன் அவர்கள், 1955 வரை திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1961ல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினரானார். பின்னர், கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1987ல் கட்சியை விட்டு விலகி, ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். பெரும்நடிகராக இருந்தாலும், அவருக்கு அரசியலில் எம்.ஜி.ராமச்சந்திரன் போல செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆகவே, தனது இறுதிக்காலத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

விருதுகள்:

1960 – ஆப்பிரிக்க-ஆசியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

1966 – பத்ம ஸ்ரீ விருது

1984 – பத்ம பூஷன் விருது

1995 – செவாலியே விருது (Chevalier)

1997 – தாதா சாகேப் பால்கே விருது

1962 – சிறப்பு விருந்தினராக அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத் தந்தை’ என கௌரவிக்கப்பட்டார்.

இறப்பு

தென்னிந்திய திரைப்படத் துறையில், சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் அவர்கள், சுவாசப் பிரச்சினைக் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 21, 2001 ஆம் ஆண்டு தனது 74வது வயதில் மரணமடைந்தார்.

மனித உடலின் உள் செலுத்தப்படும் மைக்ரோசிப்..!



இப்போது நடைமுறையில் உள்ள இம்ப்ளான்ட் ஆர் எஃப் ஐடி அல்லது மைக்ரோசிப் உயர் ஜாதி நாய்கள் / பூனைகள் / விலை உயர்ந்த மீன்களுக்கு மட்டுமே உபயோகிக்க படுகிறது. இதன் மூலம் எந்த வகை என்று பிறந்தது என்று எல்லா டீட்டெயில்ஸும் கிடைக்கும். சில வகை அரோவன மீன்களை கூட வாங்க விற்க இந்த சிப்கள் தான் உதவுகின்றன. சில திருடர்கள் வீட்டில் தங்கம் வைரம் திருடுவதை விட விலை உயர்ந்த மீன்கள் தான் அவர்கள் டார்கெட். அப்படி திருடினால் கூட அவர்களால் விற்க முடியாது ஏன் என்றால் உள்ளே இருக்கும் மைக்ரோசிப் அந்த மீனின் மொத்த ஜாதகத்தையும் காட்டி கொடுத்துவிடும்.

இந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாய் ஆய்வில் இருந்த ஆர் எஃப் ஐடி எனப்படும் மனித உடலில் இம்ப்ளான்ட் செய்யப்படும் ஹியூமன் சிப் போன வாரம் 50 டாலருக்கு இஞ்செக்ட் செய்திருக்கிறார்கள் நிறைய பேருக்கு. இதன் மூலம் நம் உடம்பின் அத்தனை மருத்துவ ஹிஸ்ட்டரியும் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ஒரு விபத்தில் மாட்டி கொண்டு நீங்கள் சுய நினைவு இல்லை என்றாலும் அந்த கோல்டன் ஹவர்ஸை வேஸ்ட் செய்யாமல் இந்த சிப்பின் மூலம் உங்கள் ரத்த வகை / எந்த எந்த அலர்ஜி / கடைசியில் எங்கு வைத்தியம் செய்து கொண்டீர்கள் / உங்கள் நெருங்கிய உறவினர் பெயர் / கான்டெக்ட் நம்பர் எல்லாம் இருக்கும் இதன் மூலம் கொஞ்சமும் தாமதிக்காமல் மருத்துவர்கள் உங்களுக்கு வைத்தியம் செய்ய முடியும்.

அது மட்டுமல்ல வண்டியை ஸ்டார்ட் செய்ய சாவி வேண்டாம் / வீட்டை திறக்க கூட இந்த டெக்னாலஜி பயன்படுத்தலாம் மற்றூம் இது இருந்தால் உங்கள் பர்ஸ் கூட தேவை இல்லையென்றால் பார்த்து கொள்ளுங்கள் அத்தனை அட்வான்ஸ். படங்களில் பார்த்திருப்பீர்கள் ஜேம்ஸ்பான்டு முதல் நம்மூர் ஹீரோக்கள் வரை உடம்பில் செலுத்திய இந்த கற்பனை விஷயம் இப்போது உண்மையாக...எவ்வள்வு பேர் ரெடி இதை உடம்பில் ஏற்றி கொள்ள ?

அடுத்த ட்ரான்ஸ்ஹியுமன் சன்பிரான்ஸிஸ்கோ கூட்டத்தில் இதை ஏற்ற வெறும் 50 டாலர் தான். இதை இரண்டு கையிலும் ஏற்றீய அமல் கிராஃப்ஸ்ட்ராவின் புகைப்படமும் – எக்ஸ்ரே படமும் பாரீர்.!

பெண்கள் பிரா பற்றி அறிய வேண்டிய தகவல்கள்...!



பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.

திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.

அதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ளன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

- இதுபோன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்.

முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்...

டி-சர்ட் பிரா

இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? - இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.

டீன்-ஏஜ் பிரா

டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.

புல் போர்ட் பிரா

வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.

நாவல்டி பிரா

திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் பிரா

விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.

மெட்டர்னிட்டி பிரா

கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.

நர்சிங் பிரா

கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.

கன்வர்டபுள் பிரா

பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம்.


இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு. 

அடுத்ததாக, சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாகக் காட்ட, தளர்ந்த மார்பகத்தை நார்மலாக்க உதவும் பிராக்கள்...

மினி மைஸர்

இவ்ளோ பெரியதாக இருக்கே... என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும் பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத்தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவுதான்.

பேடட் பிரா

அடுத்த பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்... என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை கிரங்க வைக்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.

புஷ் அப் பிரா

சில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும் பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார்பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்மலாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.

அண்டர் ஒயர் பிரா

இதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.

கியூட் வெட்டிங் பிரா

மேல்நாட்டு கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத்திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியுமாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ்வாறு ஆடை அணியும்போது இந்த வகை பிரா அணிவதுதான் பாதுகாப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்களுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்றமும் கவர்ச்சியாகத் தெரியும்.

மெசக்டமி பிரா

கேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால், மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.

இனி, பிரா தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான பதில்களும்...


கேள்வி: அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பதில்: உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ராப் பதிந்த இடங்கள் சிவந்து போய் காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்து கொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ராப் ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பது போல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.

கேள்வி: மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?

பதில்: தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.

கேள்வி: கொழுக்மொழுக் என்று உள்ள பெண்கள் (36 சைஸ் உள்ளவர்கள்) எலாஸ்டி’ ஸ்ட்ராப் வைத்த பிரா அணியலாமா?

பதில்: நிச்சயம் அணியக் கூடாது. உங்களது மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழி வகுக்கும்.

கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா..?

பதில்: கண்டிப்பாக. தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிரா சைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.

கேள்வி: கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா..?

பதில்: இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணிந்து என்ஜாய் பண்ணலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை பலர் பிராக்களை அணிந்து அழக பார்க்கலாம்.

கேள்வி: இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா..?

பதில்: பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்ததுதான். 34 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதை விட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்து போய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை.

பெண்களின் ஹார்மோன்களின் முக்கிய பங்கு...!



உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் தான் உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுபடுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்கு ஏற்படுவதற்கு முன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன்களால் தான் பெண் பருவம் அடைகிறாள்.

பருவம் அடைந்த பிறகு மாதவிலக்கு நிற்கும் வரை பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தறிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன. இந்த ஹார்மோன்களின் உத்தரவுப் படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன.

 ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. கருத்தறித்த பிறகும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது மாதவிலக்கு ஏற்படுதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள் தான்.

ஒரு பெண் இனப்பெருக்கத்துக்கான கட்டத்தை கடக்கும் போது இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக் குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. பெண்ணின் உடலில் கருத்தறிப்பதற்கான வாய்ப்பும் முடிந்து போகும். மாதவிலக்கு முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர்தான் அல்லது மாதவிலக்கு நின்று போதல் அல்லது மோனோபாஸ்.

இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் காமநிலை , காமஉணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் பெண்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது எதாவது பிரச்சினை என்றால் அதில் இருந்து மீண்டு வர முடியும்.

சிம்கார்ட்- ல் அழிந்துபோன தகவல்களை திரும்ப பெற...!



சிம்கார்டிலிருந்து தவறுதலாக அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க பல்வேறு வகையான மென்பொருள் பயன்படுகின்றன.

GSM மொபைல் போன்களில் போன் மெமரி மட்டுமல்லாமலும் சிம்கார்டிலும் தகவல்களை சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். சிம்கார்டில் சேமிக்கக்கூடிய தகவல்கள்:

1. Call History
2. Phone Book Numbers
3. SMS

இதுபோன்ற தகவல்களை தேவையில்லை என அழித்திருப்பீர்கள். அல்லது தவறுதலாக அழிக்கப்பட்டிருக்கும்.

அழிக்கப்பட்ட தகவல்களிலிருந்து ஒன்றிரண்டு போன் நம்பர்களோ அல்லது கால் ஹிஸ்டரியிலிருந்து உங்களுக்கு ஏதேனும் ஒருசில தகவல்கள் தேவைப்படும். ஆனால் அந்த சமயத்தில் அத்தகவல்களைத் திரும்ப பெற வழியின்றி தவித்திருப்பீர்கள்.

அதுபோன்ற சூழலில் உங்களுக்குப் பயன்படக்கூடியவைதான் SIM Card Data Recovery மென்பொருள்கள்.

இதுபோன்ற சிம்கார்ட் டேட்டா ரெகவரி மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்குகிறது.

ஃப்ரீ டவுன்லோட்ஸ் சென்டர் என்ற தளத்தில் இதுபோன்ற பல மென்பொருள்கள் மிகுந்து கிடக்கின்றன.

அவற்றில் சிம்கார்ட் டேட்டா ரெகவரி, சிம்கார்ட் ரெகவரி டூல், சிம் ரீஸ்டோர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெகவரி சாப்ட்வேர், சிம்கார்ட் கான்டாக்ட் ரெட்ரைவல் டூல், ரெகவர் யுவர் சிம்கார்ட், சிம் ரெகவரி, எஸ்.எம்.எஸ். ரெகவரி யுட்டிலிட்டி, ரெகவர் டெலீட்டட் எஸ்.எம்.எஸ், ரிகவர் சிம்கார்ட் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உள்ளன.

ஒவ்வொரு சிம்கார்ட் ரிகவரி மென்பொருளைப் பற்றியும், அந்த மென்பொருளுக்குரிய நிறுவனம் அல்லது மென்பொருள் கிடைக்கக்கூடிய தளத்தைப் பற்றிய விளக்கங்களும் அத்தளத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

உங்களுக்கு விருப்பமான மென்பொருளை அதிலிருந்து தரவிறக்கம் செய்து, அத்தளத்தில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் உங்கள் சிம்கார்டில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கலாம்.

மென்பொருள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: http://www.freedownloadscenter.com/Se/SIM-Card-Contacts-Recovery-Software/



ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால்.. என்ன செய்யலாம்...?



அதிக விலைக்கொடுத்து வாங்கிய உங்களுடைய ஆண்ட்ராய்ட், ஐபோன் தவறுதலாக தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வை இப்பதிவில் பார்ப்போம். ஆம் நண்பர்களே.! உங்களுடைய விலைமதிப்புடைய iPhone அல்லது ஆண்ட்ராய் வகை போன்கள் (Costly smartphones) தண்ணீரில் விழுந்துவிட்டால் செய்ய வேண்டியவை:

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் உங்களுடைய ஐபோனை தண்ணீரிலிருந்து உடனடியாக எடுத்து விடுங்கள். உடனடியாக உங்களுடைய போனை ஸ்விட்ஸ் ஆப் (Switch Off) செய்யவும்.

அதற்கு உறைகள் (Phone cover) ஏதேனும் இருப்பின் அவற்றை முதலில் நீக்கிவிடுங்கள்.

பிறகு நல்ல சுத்தமான காட்டன் துணியைக் (cotton cloth) கொண்டு உங்கள் Smartphone -ஐநன்றாக துடைக்கவும்.

தண்ணீரை போக்க உங்களுடைய ஸமார்ட் போனை உதற வேண்டாம். அவ்வாறு போனை உதறுவதாலோ, அல்லது குலுக்குவதாலோ போனில் உள்ளிருக்கும் பகுதிகளுக்கு தண்ணீரானது பரவக்கூடிய அபாயம் இருக்கிறது.

காது துடைப்பான் கொண்டு ஆடியோ ஜாக்கில் (Audio Jack port) உள்ள நீரை அகற்றுங்கள். அல்லது ஒரு துணியை நன்றாக கூர்மையாக முறுக்கி அந்த துளைகளில் விட்டு ஈரத்தை வெளியேற்றுங்கள். மேலும் ஐபோனின் ஹோம் பட்டன், வால்யூம் பட்டன், மியூட் பட்டன், ஸ்பீக்கர், மைக்ரோ போன் உள்ளிட்ட பகுதிகளை நன்றாக துடைத்து ஈரத்தை முடிந்தவரை துடைத்து எடுத்துவிடுங்கள்.

இவையெல்லாம் உங்கள் ஐபோனிற்கு நீங்கள் செய்யும் முதலுதவி மட்டுமே.

பிறகு அருகே இருக்கும் உங்கள் ஐபோன் மாடல் சர்வீஸ் சென்டரில் கொடுத்து அதை சரிசெய்ய முற்படுவதே மிகச் சிறந்த வழிமுறை. ஐபோன் தண்ணீரில் விழுவதால் ஏற்படும் பாதிப்புகள்:

iPhone Sensor பாதிக்கப்படும். சென்சார் பாதிக்கப்பட்டதை ஐபோனில் சிவப்பு நிறத்தில் லைட் எரிவதை வைத்து உறுதிப்படுத்தலாம்.

home button வேலை செய்யாமல் போகலாம். அதற்கு Onscreen Home Button என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.

ஆடியோ அவுட்புட் (Audio Out Put) வேலை செய்யாது. அதாவது ஐபோனிலிருந்து சத்தம் எதுவும் வராமல் போகலாம்.

ஐபோனில் இருக்கும் மற்ற முக்கிய பட்டன்கள் அதாவது ஹோம் பட்டன், மியூட் பட்டன், பவர் பட்டif ஆகியவை இயங்காமல் இருக்கும்.

இவற்றில் பவர் பட்டனுக்கு மட்டுமே மாற்றீடாக (Alternative Application) எந்த ஒரு அப்ளிகேஷனும் இல்லை. மற்ற பட்டன்கள் வேலை செய்ய ஆல்டர் நேட் அப்ளிகேஷன் உண்டு.

தொடுதிரை (Touch Screen)இயக்கமற்று செயலிழந்து போக வாய்ப்பு உண்டு. அதற்கு புதியதாக Touch Screen மாற்றி அமைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.

வாட்டர் புரூப் உறைகளைப் (Water Proof Smartphone cases) பயன்படுத்தலாம். அது கூடிய வரையில் உங்களுடைய விலையுயர்ந்த சாதனங்களில் தண்ணீர் உள்ளே புகாமல் பாதுகாக்கும்.

இறுதியாக இந்த வழிமுறையைப் பின்பற்றினால் மேற்கண்ட அனைத்துப் பிரச்னைகளையும் நிச்சயமாக எளிதாக கையாள முடியும். என்ன வழிமுறை என்கிறீர்களா?. கவனமாக இருப்பது ஒன்று உங்கள் ஆண்ட்ராய்ட் போன் முதல் ஐபோன் வரை அனைத்து விலையுயர்ந்த சாதனைகளையும் பாதுகாப்பாக வைத்திட உதவும் (Only careful is the best way to protect Android, iPhone).

அதாவது குறிப்பிட்ட அச்சாதனங்களை எந்தெந்த இடங்களில் வைக்க வேண்டுமோ, எந்தெந்த நேரங்களில் பயன்படுத்த வேண்டும் அந்தந்த இடங்களில், அந்தந்த நேரங்களில் பயன்படுத்தினால் போதும்.மற்ற அசௌகரியமான இடங்களில் (unnecessary place) பயன்படுத்துவதை தவிர்த்தாலே இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல், விலையுயர்ந்த உங்கள் தொலைத்தொடர்பு சாதaனங்களை பாதுக்காத்திட முடியும்.

இந்தியாவின் அடுத்த இலக்கு குழந்தைகளுக்கான முழு நோய் தடுப்பு முறைகள்..!



நாட்டில் போலியோ நோயே இல்லாமல் விரட்டியதற்கு பின், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் முழு நோய் எதிர்ப்பு சக்தி வழங்குவதே அடுத்த இலக்காக இருக்கும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

போலியோவை வெற்றிகரமாக விரட்டியடித்ததையொட்டி நடைபெற்ற விழா ஒன்றில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பி.ஜே.பி தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய அமைச்சர்கள், உலக சுகாதார மையம் மற்றும் யுனிசெப் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்களுக்கு மத்தியில் பிரதமர் மன்மோகன் பேசியதாவது:-

வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள். இதோடு நின்றுவிடாமல் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் காக்கும் மருந்தை வழங்க முயற்சிக்க வேண்டும். நாட்டின் கடைக்கோடியில் உள்ள அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு முழு நோய் தடுப்பு முறையை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சோனியா பேசும்போது, ஒரு விதத்தில் நாம் இது குறித்து பெருமைப்பட வேண்டும். 20 வருடங்களுக்கு முன் 50000 பேர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது அந்நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சாதனையாகும் என்று கூறினார்.

சங்கம் வளர்த்த மாமதுரையின் இன்றைய நிலை..!



மதுரை மாநாகரின் நீராதாரங்களை காப்பாற்ற களமிறங்கியுள்ளது மாணவர் குழு ஒன்று. மதுரை செல்லூர் கண்மாயைத் தூர்வாரும் முயற்சியில் இறங்கிய அவர்கள், மதுரை மாவட்டத்தின் நீர் நிலைகளைப் பற்றிய ஆய்வில் இறங்கி உள்ளனர்..

இதன் படி பிற சமூக ஆர்வலர்களின் உதவியுடனும், அரசாங்க தகவல்களின் கீழும் கண்டறிந்த தகவல்கள் கீழே!

நமது மதுரையில் நீர் நிலைகள் எப்படி அழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள கீழே படியுங்கள்.

வலைவீசித் தெப்பம் - பெரியார் பேருந்து நிலையமாக மாறியிருக்கிறது.

கிருஷ்ணராயர் தெப்பக்குளம் - ஞாயிற்று கிழமை சந்தையாக மாறியிருக்கிறது. (தெப்பகுளம் இருந்ததற்கு அறிகுறியாக தற்போது அந்த தெருவுக்கு பெயர் கிருஷ்ணராயர் தெப்பகுளம் தெரு என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது)

அனுப்பானடி சின்ன கண்மாய், சிந்தாமணி கண்மாய், தூளிபத்திக் கண்மாய், ஐவத்தான் கண்மாய், அயன் பாப்ப்குடி கண்மாய் - இவை அனைத்தும் கழிவு நீர் தேக்கமாக உள்ளன.

அவனியாபுரம் கண்மாய் - திடக் கழிவு கிடங்காக உள்ளது.
சிலையனேறிக் கண்மாய், ஆனையூர்க் கண்மாய், தத்தனேரி கண்மாய் - வீடுகள் கட்டப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ளது.

வில்லாபுரம் கண்மாய் & ஆ.கோசாக்குளம் கண்மாய் - குடியிருப்புகள் பகுதிகளாக மாறிவிட்டன .

வண்டியூர் கண்மாய் - மாட்டுத்தாவணி, பூ மார்க்கெட் மற்றும் எஞ்சிய பகுதி நீர் சேமிப்பு ஆதாரமாக உள்ளது.

செல்லூர் கண்மாய் - தென்னக இரயில்வே, ஒரு பகுதி குடிசைகளும் உள்ளன. எஞ்சியுள்ள பகுதி நீர் சேமிப்பு ஆதாரமாக உள்ளது.

பீ.பி குளம் கண்மாய் - வருமான வரி, சுங்கத்துறை மற்றும் அஞ்சல் அலுவலகமாக உள்ளன. எஞ்சியுள்ள இடத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளது.

சொரிக்குளம் கண்மாய் - வானொலி நிலையம் மற்றும் அலுவலர் குடியிருப்பு, அரசு அலுவலர் குடியிருப்பு, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஆகியவை உள்ளன.

தல்லாக்குளம் கண்மாய் - மதுரை மாநகராட்சி அலுவலகம், சட்டக்கல்லூரி, வணிகவரி அலுவலகம். எஞ்சியுள்ள இடம் தமிழ் சங்கம் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

மானகிரிக் கண்மாய் - வக்பு வாரிய கல்லூரி மற்றும் அதன் விடுதி கட்டிடம்.

செங்குளம் கண்மாய் - மாவட்ட நீதிமன்றம்.

உலகனேறிக் கண்மாய் - உயர் நீதிமன்றம்.

புதுக்குளம் கண்மாய் - செய்தியாளர் நகர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் மற்றும் அரசு போக்குவரத்து அலுவலகம் ஆகியவைகள் உள்ளன.

கோச்சடை கண்மாய் - வீடுகட்டவும், செங்கல்லுக்காவும் மண் தோண்டப்பட்டு ஆழமாக உள்ளது. குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது.

புதூர் கண்மாய் - மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

நாராயணபுரம் கண்மாய் & முடக்கத்தான் கண்மாய் - குடியிருப்புகளின் கழிவு நீர் இக்கண்மாயில் கலக்கிறது.

ஆத்திக்குளம் கண்மாய் - கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.

அனுப்பனடி பெரிய கண்மாய், விரகனூர் கண்மாய் மற்றும் ஐராவதநல்லூர் கண்மாய் - ஒருபகுதி குடியிருப்புகளாகும் எஞ்சியுள்ள பகுதி கழிவு நீர் தேக்கமாகவும் உள்ளது.

சம்பக்குளம் கண்மாய் - இக்கண்மாய் இருந்த இடமே தெரியவில்லை.

(ஆதாரம் : நீரின்றி )

சில நாட்களுக்கு முன்பாக பத்திரிக்கை செய்தி ஒன்று கொடிக்குளம் கண்மாயில் அண்ணா பல்கலைகழகம் கட்டிடம் வரப் போவதாக பகிர் தகவலை வெளியிட்டு இருக்கிறது.

இந்நிலை தொடரலாமா..?

இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டாமா? மண்ணின் மைந்தர்களாகிய நாம் இதை தட்டி கேட்க விட்டால் வேறு யார் கேட்பது ?
படித்ததும் நெஞ்சம் கொதிக்கிறதா? உடனடியாக மக்களை விழித்தெழ செய்ய வேண்டும். இப்போது நாம் செய்ய வேண்டிய முதல் வேளை விழிப்புணர்வு. இந்த தகவல்களை மற்ற நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். விழிப்படைய செய்யுங்கள்....

‘மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா’’...!



* ‘‘மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்’’னு நண்பன் சொன்னா, நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம்.

* ‘‘மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்’’னு நண்பன் சொன்னா, அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக் கிளம்பலன்னு அர்த்தம்.

* ‘‘மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்’’னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா, ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம்.

* ‘‘பங்காளி, வாடா சரக்கடிப்போம்’’னு தின்ன வடையில இருக்கிற எண்ணெய தலையில தேய்க்கிற கஞ்சப் பிசினாரி நண்பன் பாசமா கூப்பிட்டா, அவன் காதல் கதைய சொல்லப் போறான்னு அர்த்தம்.

* ‘‘மச்சான், உன் போனக் கொடு... ஒரு கால் பேசிட்டுத் தர்றேன். என் நம்பர்ல இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன எடுக்க மாட்டேங்கறான்’’னு நண்பன் நம்ம போன வாங்குனா, நம்ம பேலன்ஸ கழுவி கவுத்தப்போறான்னு அர்த்தம்.

* ‘‘பங்கு, உன் பைக்க கொடுடா, அம்மாவ ரேஷன் கடையில விட்டுட்டு வந்துடுறேன்’’னு நண்பன் சொன்னா, அவன் ஆளோட எங்கயாவது ஊர் சுத்தப் போறான்னு அர்த்தம்.

* ‘‘மச்சி, இதெல்லாம் ஒரு பாரா? நான் உனக்கு ஒரு நாள் வைக்கறேன் பாரு ட்ரீட்டு’’ன்னு பில்லு வர்றப்ப நண்பன் சொன்னா, இன்னைக்கு செலவு நம்மோடதுன்னு அர்த்தம்.

* ‘‘பரவாயில்ல மச்சான்... நான் வெளியவே நிக்கிறேன். நீ சொல்லிட்டு வா’’ன்னு நம்ம வீட்டுக்கு வெளிய நின்னுக்கிட்டு நண்பன் சொன்னா, நம்ம வீட்டுல அவனுக்கு பூசை நடந்திருக்குன்னு அர்த்தம்.

* ‘‘அவ ரொம்ப திமிர் பிடிச்சவ மச்சி, ரொம்ப ஹெட்வெயிட்டு’’ன்னு ஒரு பொண்ணப் பத்தி நண்பன் சொன்னா, அந்தப் பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ் லெட்டர் கொடுத்து திட்டு வாங்கியிருக்கான்னு அர்த்தம்.

* ‘‘மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா’’ன்னு சந்து சந்தா நண்பன் நம்மளக் கூட்டிட்டுப் போனா, அந்த சந்துல ஏதோ ஒரு பொந்துல அவன் ஆளு இருக்குன்னு அர்த்தம்.

குழந்தையின் விக்கலை நிறுத்த இத ட்ரை பண்ணுங்க...!

குழந்தையின் விக்கலை நிறுத்த இந்த முறையை முயற்சித்து பாருங்கள்..!


பிறந்த குழந்தையை சரியாக கவனிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அவர்களது உடலே ஒருவித ஆட்டத்தை ஏற்படுத்தும். அதைப் பார்த்தால், அனைத்து அம்மாக்களுக்கும் பயமாக இருக்கும். ஆகவே அத்தகைய விக்கலை நிறுத்துவதற்கு என்ன வழியென்று தெரிந்து கொண்டீடு, விரைவில் அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும். அதைவிட்டு அது தானாக போய்விடும் என்று காத்துக் கொண்டிருந்தால், பின் குழந்தை அழத் தொடங்கி, அதன் அழுகையே நிறுத்துவது பெரும் அவஸ்தையாகிவிடும்.

ஆகவே அத்தகைய விக்கலை உடனே நிறுத்துவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அதைப் பின்பற்றி வந்தால், குழந்தையின் விக்கலை எளிதில் நிறுத்திவிடலாம். சரி, இப்போது அந்த விக்கலை எப்படியெல்லாம் செய்தால் நிறுத்திவிடலாம் என்று பார்ப்போம்.

குழந்தையின் விக்கலை நிறுத்த, இத ட்ரை பண்ணுங்க...

பொதுவாக விக்கலை நிறுத்துவதற்கு சிறிது நேரம் மூச்சை பிடித்துக் கொண்டு விட்டால், நின்றுவிடும். ஆனால் இந்த முறை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே அதற்கு பதிலாக வேறு என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குகிறது. இதனால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. எனவே குழந்தைகள் அதிகப்படியான காற்றை விழுங்காமல் இருப்பதற்கு, பால் கொடுக்கும் நேரத்தில் அவ்வப்போது ஒரே பக்கத்தில் கொடுக்காமல், அடிக்கடி நிலையை மாற்றிக் கொண்டே இருந்தால், குழந்தைகள் அதிகமான காற்றை விழுங்காதவாறு பார்த்துக் கொள்ளலாம். மேலும் விக்கலும் ஏறப்டாமல் இருக்கும்.

* தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பத்தை விட வேண்டும். அவ்வாறு ஏப்பம் வந்தால், தாய்ப்பாலின் போது, அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். மேலும் சில சமயங்களில் அத்தகைய ஏப்பமும் குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

* குழந்தைகள் விக்கல் எடுக்கும் போது அவர்களது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால், அவை விக்கலை நிறுத்திவிடும்.

* குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு பசிக்கும் முன் தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும். விக்கல் ஏற்படுவதற்கு ஒரு காரணம் வாயுத் தொல்லை என்றும் சொல்லலாம்,. எனவே குழந்தைகள் வாயுத் தொல்லையினால் தான் விக்கல் எடுக்கிறார்கள் என்றால், அதன் அறிகுறியாக அவர்கள் வாந்தி எடுப்பார்கள். ஆகவே அவர்களுக்கு வாயுத் தொல்லை ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு அவ்வப்போது பால் கொடுக்க வேண்டும்.

* தாய்ப்பால் கொடுத்தும் விக்கல் நிற்கவில்லையெனில், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். அதைவிட்டு, தொடர்ந்து கொடுத்தால், பின் குழந்தை வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடும். பின்னர் இதுவே அவர்களை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கிவிடும்.

உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..!



உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..!

நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code இல் புதிய Window மூலம் Open ஆகும்.

அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.

அந்த Search Bar இல் {"list" இதை Type செய்து Enter பண்ணவும்.
இது மாதிரி {"list""1000011345400-2","10000043254566-3" இருக்கும் list கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது

சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம?

புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தைpaste  பண்ணவும்

இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]

இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்...

குளிர்பானங்கள் எல்லாமே விஷம்தானா...? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!



வெளிநாட்டு குளிர்பானங்களில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் அதிகமாக கலக்கப்படுகிறது என்ற சர்ச்சை சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. அவற்றுக்கு தடை விதிக்க கோரிக்கைகள் எழுந்தன. உடனே அந்த கம்பெனிகள் குற்றச்சாட்டை மறுத்தன.

 ஆனாலும் மக்கள், அந்த குளிர்பானங்கள் மீதான மோகத்தை குறைக்கவில்லை. இது ஒருபுறமிருக்க, கிராமப்புற கடைகளில் குளிர்பானங்களை வாங்கி ஆண்டுக்கணக்கில் வைத்து விற்கின்றனர். அவை காலாவதியாகி விட்டதா, போலியா என்று தரம் பார்த்து வாங்கும் அளவுக்கு கிராம மக்களுக்கு விழிப்புணர்வு கிடையாது.

நெய்வேலி அருகே குளிர்பானம் குடித்த ஒரு சிறுமி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறாள். மேலும் 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்த அஞ்சாபுலி (49) என்பவர்,  என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளி. அவருக்கு லலிதா(10), அபிராமி(9), கவுசல்யா (6) என்ற 3 மகள்களும், பரமசிவம் (3) என்ற மகனும் உள்ளனர்.

 அவர் நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள பெட்டிக் கடையில் பிரபல நிறுவனத்தின் அரைலிட்டர் குளிர்பான பாட்டில் வாங்கிச் சென்றுள்ளார். அதை குழந்தைகள் குடித்துள்ளனர். குடித்த சிறிது நேரத்தில் 4 குழந்தைகளும் வரிசையாக மயங்கி விழுந்தனர். அதிர்ச்சி அடைந்த அஞ்சாபுலி மற்றும் உறவினர்கள் அந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி அபிராமி இறந்து விட்டாள். மற்ற 3 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உயிர்பலிக்கு காரணமான குளிர்பான பாட்டிலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். குளிர்பானம் விற்ற கடைக்கு சீல் வைத்து, கடைக்காரரை பிடித்து விசாரித்து வருகின்றனர். விற்கப்பட்டது காலாவதியான குளிர்பானமா அல்லது போலி குளிர்பானமா என்ற விசாரணை நடக்கிறது.

கிராமப்புறங்களில் விற்கப்படும் குளிர்பானங்கள் மட்டுமின்றி மற்ற உணவு பொருட்களையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதிப்பதில்லை. பெரும்பாலும் அவை போலியானதாகவோ, காலாவதியானதாகவோ, தரமற்றதாகவோ இருக்கின்றன. காரணம், பல பொருட்களில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி தயாரிப்புகள் வருகின்றன. அவை கிராமப்புறங்களில்தான் அதிகமாக விற்கப்படுகின்றன.

இதற்கு வியாபாரிகளை குறை சொல்ல முடியாது. சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த போலி தயாரிப்புகள் எங்கிருந்து வருகின்றன என்பதை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற உயிரிழப்புகள் தொடரவே செய்யும்.
 
நண்பேன்டா