Saturday 15 March 2014

அடிக்கடி ஆர்கஸம் பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது..!



இந்த தலைப்பு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும். இதில் கூட நன்மை உள்ளதா என்று கூட பலருக்கு தோன்றும். ஆனால் இதைப் பற்றி பலர் வெளிப்படையாக பேச வெட்கப்படுவோம். உண்மையில் நடப்பதைப் பற்றி வெளிப்படையாக மற்றவர்களிடம் பேச முடியாமல் போகலாம். ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை.

பலருக்கு ஆர்கஸம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கலாம். ஆர்கஸம் என்பது பெண்கள் உறவில் உச்சக்கட்டத்தை அடைவதைத் தான் அப்படி சொல்வார்கள். சில பெண்கள் இத்தகைய ஆர்கஸத்தை அடைய கஷ்டப்படுவார்கள். அத்தகையவர்கள் இடுப்பு தொடர்பான உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது. ஆனால் சிலரோ ஒருநாளைக்கு பலமுறை ஆர்கஸத்தை அடைவார்கள்.

இப்படி ஆர்கஸத்தை அடிக்கடி அடைவதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமோ என்று பலர் பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் ஆர்கஸத்தை அடைவது பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எப்படியெனில் ஆர்கஸத்தை அடையும் போது மூளையில் இருந்து வெளிவரும் காதல் ஹார்மோனானது, உடல் மற்றும் மனதில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

இங்கு ஆர்கஸத்தை அடைவதால் கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

ஆர்கஸத்தை அடைந்த பின்னர் நல்ல தூக்கம் வரும். எனவே பல நாட்கள் நல்ல தூக்கத்தைப் பெறாதவர்கள் ஆர்கஸத்தை அடையும் போது, எண்டோர்பின்கள் வெளிப்பட்டு, அது உடல் மற்றும் மூளையை அமைதி அடையச் செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆம், ஆர்கஸம் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். எப்படியெனில் ஆர்கஸத்தை அடையும் போது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் கெமிக்கலான DHEA வெளியிடப்படுவதோடு, அந்த கெமிக்கல் எலும்புகளை வலுவோடும் வைத்துக் கொள்ளும்.

கடுமையான தலைவலியால் அவஸ்தைப்படும் போது, ஆர்கஸத்தை அடைந்தால், அப்போது வெளிவரும் காதல் ஹார்மோன் ஆக்ஸிடோசின் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

பெண்கள் கொண்டு சோதிக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் ஆர்கஸத்தை உணர்ந்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வு ஒன்றில், பெண்ணின் உடலில் ஆர்கஸத்தை அடையும் போது வாஸோபிரஸின் மற்றும் ஆக்ஸிடோசின் என்னும் இரண்டு ஹார்மோன்கள் வெளிவரும். அதிலும் வாரத்திற்கு இரண்டு முறை அடைந்தால், இந்த ஹார்மோன்கள் இரண்டும் பெண்களின் வாழ்நாளை நீட்டிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

டென்சனாக இருகும் போது, அதில் இருந்து முற்றிலும் வெளிவர ஆர்கஸம் உதவி புரியும். ஏனெனில் ஆர்கஸத்தின் போது வெளிவரும் ஹார்மோன்கள் உடலை ரிலாக்ஸ் அடையச் செய்வதுடன், நரம்பு மண்டலத்தை அமைதி அடையச் செய்யும். எனவே டென்சனாக இருக்கும் போது உங்கள் துணையுடன் உறவு கொள்ளுங்கள். இதனால் டென்சன் நீங்குவது மட்டுமின்றி, புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

ஆம், சிலருக்கு உணவுகளின் மீது அளவுக்கு அதிகமான ஆசை இருக்கும். இதனால் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இத்தகைய ஆவலை ஆர்கஸம் கட்டுப்படுத்தும். ஏனெனில் இதனால் உடலில் வெளிவரும் கெமிக்கலானது எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் எண்ணத்தைத் தடுத்து, சரியான நேரத்தில் சரியான அளவில் சாப்பிட உதவி புரியும்.

பெண்களுக்கு எப்போதுமே பிட்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆகவே நன்கு பிட்டாகவும் சரியான உடல் எடையுடனும் இருக்க வேண்டுமானால், ஆர்கஸம் உதவி புரியும். மேலும் ஆய்வு ஒன்றில் வாரத்திற்கு இரண்டு முறை ஆர்கஸம் அடைந்தால் 1000 கலோரிகள் எரிக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வதற்கு சமம் என்றும் ஆய்வில் சொல்லப்படுகிறது.

உங்கள் வேலையை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்..!



உங்களின் உத்தியோகம் எவ்வளவு அற்புதமானது என்று நீங்கள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருக்காவிட்டாலும், உங்களை சந்தோஷப்படுத்தக்கூடிய இத்தகைய உத்தியோகத்தைப் பெற உண்மையாகவே மிகுந்த அதிர்ஷ்டம் வேண்டும் என்று நீங்கள் அணுதினமும் நினைக்காவிட்டாலும் கூட, உங்களின் பணியை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டும் சில அறிகுறிகள் உங்களின் பிரியமானவர்களின் கண்களிலிருந்து தப்பாது.

எல்லா வகையிலும் திருப்தி அளிக்கக்கூடிய வேலை என்று எதுவும் கிடையாது. ஆனால் சில வேளைகளில், நீங்கள் மிகவும் நேசித்து செய்யக்கூடிய வேலையின் பலன்கள் உலகின் அனைத்து செல்வங்களையும் விட உயர்வானதாக உங்களுக்கு தோன்றக்கூடும்; அதனால் அந்த வேலையில் இருக்கக்கூடிய சில குறைபாடுகள் உங்களுக்கு பெரிதாகத் தெரியாது. நீங்கள் உங்கள் பணியை நேசிக்கிறீர்கள் என்பதற்கான முக்கியமான 10 அறிகுறிகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

மனதிற்கு பிடித்த வேலையில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்:

 * வேலை இடத்தில் உங்களுக்கு நண்பர்கள் இருப்பர். நாம் விரும்பும், பெரிதாக மதிக்கும் நபர்களுடன் வேலை பார்ப்பதையே நம்மில் பலரும் விரும்புவோம்.

* உங்களுடன் பணியாற்றும் சகாக்களுக்கு உதவுவது உங்களுக்கு நிறைவாக இருக்கும். அவர்களின் வெற்றியை உங்களின் வெற்றியாக நீங்கள் கொண்டாடி மகிழ்வீர்கள்.

* அதற்குள் 4 மணி ஆகிவிட்டதா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். மனதிற்கு நிறைவானதாக நீங்கள் உணரும் உங்கள் வேலையில் மூழ்கிப் போவதினால் நாட்கள் பறந்தோடிச் செல்வதும் உங்களுக்கு தெரியாது.

* உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் உங்கள் பணிகள் முடங்கி உங்களை நம்பி அந்த பணிகளை ஒப்படைத்தவருக்கு சிரமமாகி விடுமே என்று நீங்கள் சங்கடப்படுவீர்கள். நீங்கள் உடல் தேறி வரும் வரையில் உங்களின் பணிகளை எடுத்துச் செய்ய பலபேர் ஆவலாக இருப்பார்கள் என்று தெரிந்தும், உங்களால் யாருக்கும் சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்று நீங்கள் எண்ணுவீர்கள்.

* வார இறுதிகள் திங்கட்கிழமைக்கான சக்தியை பெற உதவக்கூடிய ஒரு ஓய்வுக்காலம் என்றே உங்களுக்கு தோன்றும். உங்கள் வேலையை நீங்கள் உயர்வாக எண்ணுவதால் உங்களுக்கு "திங்கட்கிழமைகளுக்கே உண்டான சோர்வு" என்பதே ஏற்படாது.

* எவ்விதமான பெருமையையும் அடுத்தவருடன் பகிர்ந்து கொண்டு மகிழ்வதற்கான உத்திகளை நீங்கள் நாடுவீர்கள். உங்கள் தகுதியை நிரூபிப்பதற்கு உங்கள் பெருமையை உயர்த்திப் பிடிக்க வேண்டியது அவசியம் என்று உங்களுக்கு ஒருபோதும் தோன்றாது. வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என்றே நீங்கள் விரும்புவீர்கள்.

 * "மிகவும் மெனக்கெட்டு" வேலை செய்வதே உங்களின் பணியாற்றும் பாணி என்றாகிவிடும். அனைவரின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி மிகச் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று நீங்கள் எண்ணுவதும் இயற்கையே.

 * பணியிடத்தில் ஏற்படக்கூடிய சில கோபதாபங்களையும் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். பணி மற்றும் பணியிடச்சூழல்கள் எப்போதும் மிகச்சரியாக இருப்பதில்லை என்ற நிதர்சனத்தை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் பெரிய விஷயங்களில் ஈடுபாடு கொண்டிருப்பதினால், அற்பமான விஷயங்கள் உங்கள் மனதை அழுத்தாது.

* பிரச்சனைகளைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்காமல், அவற்றிற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். வாட்டர் கூலர் அல்லது காபி மெஷின் பற்றி புகார் கூறிக் கொண்டிருக்காமல், நீங்களும் உங்கள் நண்பர்களும் எப்படி உங்கள் பணியிடத்தை மேலும் மெருகேற்றலாம் என்றும், அனைத்து அலுவல்களும் தங்குதடையின்றி சுமுகமாக நடப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றியும் விவாதிப்பீர்கள்

 * நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதன் உண்மையான தாத்பரியத்தை உணர்ந்து, அது என்னவிதமான மாற்றத்தை உண்டாக்கக்கூடும் என்பதில் தெளிவாக இருப்பீர்கள். நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் எவ்வாறு உங்கள் பணியிடத்தை சிறப்பானதாக மாற்றும் என்பதை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவதில் உங்கள் கவனத்தை செலுத்துவீர்கள்.

கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க் வராமல் இருக்க செய்ய வேண்டியவைகள்..!



இதுவரை சருமத்தை அழகாக பராமரித்து வந்த பெண்கள், கர்ப்பமாக இருக்கும் போது வருத்தப்படும் ஒன்று தான் வயிறு பெரிதாகும் போது ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவது.

பெண்களின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் தான் மிகவும் சந்தோஷமான ஒன்று. மேலும் எவ்வளவு தான் குழந்தையின் வளர்ச்சியை நினைக்கும் போது சந்தோஷம் இருந்தாலும், வயிற்றில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் பார்க்கும் போது சிறிது வருத்தமும் ஏற்படும்.

ஆனால் இப்படி கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் இருக்க, ஒருசில செயல்களை பின்பற்றினால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் ஆய்வு ஒன்றிலும், கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் தண்ணீர் அதிகம் குடித்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுப்போன்று நிறைய உள்ளன. இங்கு அவற்றில் சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை கர்ப்ப காலத்தில் பெண்கள் பின்பற்றினால், ஸ்ட்ரெட்ச் மார்க்குள் வராமல் தடுக்கலாம்.

பெண்கள் கர்ப்ப காலத்தில் அதிக அளவு தண்ணீர் குடித்து வந்தால், உடல் வறட்சி நீங்குவதுடன், சருமத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கலாம். ஏனெனில் சருமத்தில் போதிய நீர்ச்சத்து இல்லாமல் இருக்கும் போது, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் அதிகரிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதைத் தடுக்க தேவையான அளவு தண்ணீரை குடித்து வாருங்கள்.

சருமத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படும் போது, அரிப்புகள் ஏற்படும். அப்படி அரிப்புகள் ஏற்படும் போது, மறந்தும் சொறிய வேண்டாம். இதனால் கீறல்கள் ஏற்பட்டு தழும்புகள் ஏற்படுவதுடன், ஸ்ட்ரெட்ச் மார்க்குகளும் ஏற்படும்.

கர்ப்ப காலத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க் வராமல் தடுக்க தினமும் வயிற்றில் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். ஏனெனில் ஆலிவ் ஆயில் மசாஜ் ஸ்ட்ரெட்ச் மார்க்கை தடுக்க ஒரு சிறந்த வழியாகும்.

உடற்பயிற்சியை கர்ப்பிணிகள் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமத்தின் மீள்தன்மை அதிகரிக்கும். எனவே தினமும் லேசான உடற்பயிற்சியை செய்து வாருங்கள்.

ஆலிவ் ஆயில் போன்றே, வைட்டமின் ஈ சத்தும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படுவதைத் தடுக்கும். இத்தகைய வைட்டமின் ஈ ஷியா வெண்ணெயில் அதிகம் உள்ளது. எனவே இவற்றைக் கொண்டு தினமும் மசாஜ் செய்து வந்தாலும், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வருவது தடுக்கப்படும்.

முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலமும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை தடுக்கலாம்.

கற்றாழையின் ஜெல்லின் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளது. ஆகவே இந்த கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு ஸ்ட்ரெட்ச் மார்க் வருவது போன்று உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.

குறிப்பாக கர்ப்பிணிகள் தங்களது உடல் எடையை பராமரிக்க வேண்டும். எடை அதிகமாக இருந்தால், பிரசவம் கஷ்டமாக இருப்பதுடன், அதுவே அசிங்கமான ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை ஏற்படுத்தும்.

காதலர்களுக்கு ஏன் பசிக்க மாட்டேங்குது தெரியுமா...?



 முத்தத்தால் பசியின்மையை சரி செய்ய இயலும் என பிரிட்டிஷ் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

முத்தம் தொடர்பாக தொடர்ந்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி, முத்தம் என்பது அன்பை பரிமாற்றம் செய்ய மட்டுமல்ல, அதனால் வேறு பல நன்மைகளும் உடலுக்குக் கிடைக்கின்றன என விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

 இது தொடர்பாக பிரிட்டிஷ் மற்றும் கொரிய விஞ்ஞானிகள் 31 பசியின்மை நோயாளிகளிடம் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையின் முடிவாக முத்தம் உடலுக்குள் புதிய ரத்தத்தைப் பாய்ச்சி பசியின்மை நோயை போக்குவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். தங்கள் ஆய்வின் முடிவுகளாக விஞ்ஞானிகள் கூறியதாவது:-

முத்தம் முதலில் கொடுக்கும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும்.

ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் போது ஹார்மோன்கள் சுரக்கபட்டு அவர்களின் பசியை போக்கிவிடும்.

பசியால் பாதிக்கபட்டவர்களிடம் இது போன்ற ஆராய்ச்சியை நடத்திய போது அவர்களது பாதிப்படைந்த உறுப்புகளில் ரத்தம் பாய்ந்து பசியின்மையை போக்கி உள்ளது.

இது போன்ற ரசாயனங்களை வைத்து உணவை சரியாத உட்கொள்ளாதா நோயாளிகளை இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அவர்களை குணபடுத்தி விடலாம்.

அன்பு முத்தம் கொடுப்பதால் மனித மூளைக்கு நன்மை கிடைக்கிறது. அன்பு முத்ததால் கோபம் மறைகிறது மகிச்சியை அதிகரிக்கிறது. வெறுப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

பிரிட்டிஷ் மற்றும் தென் கொரிய விஞ்ஞானிகள் உடல் உறவின் போதும், மற்றும் பிரவசத்தின் போதும் இந்த ஆக்சிடோசின் சோதனை மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது.

பசியற்ற நோயாளிகளுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆண்களுக்கான சில பாத பராமரிப்பு டிப்ஸ் உங்களுக்காக...!



நமது உடம்பில் மிகவும் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் பாகங்களாக இருப்பவை நமது பாதங்களாகும். முகத்திற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அவ்வளவு முக்கியத்துவம் பாதங்களுக்கும் தர வேண்டியதும் அவசியமானதாகும். தினந்தோறும் ஓடுவது நடப்பது போன்ற வேலைகளை செய்யும் போது ஏற்படும் பாதிப்புகளை கவனித்து சரி செய்ய வேண்டும்.

நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ப, நமது கால்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இப்படிப்பட்ட முக்கியமான உறுப்பை கவனித்து உறுதியை கொடுத்து, போதுமான அளவு ஓய்வையும் தர வேண்டியது அவசியமானதாகும்.

கால் நகங்களை பொறுத்த வரையில் ஆண்கள் அதை ஒட்ட வெட்டி வைப்பதே சிறந்தது. ஆண்கள் பொதுவாக பல வேலைகளிலும், மற்ற விளையாட்டுகளிலும் பங்கு பெறுவதால், எப்போதும் அதை வெட்டி சுத்தமாக வைப்பது அவர்களின் கடமையாகும். இங்கு ஆண்களுக்கான சில முறையான பாத பராமரிப்பு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மிகவும் முக்கியமான மற்றம் தலையாய குறிப்பு என்ன தெரியுமா? தினசரி குளியலை தவிர அடிக்கடி கால்களை கழுவ வேண்டும். இப்படி கழுவும் போது உங்கள் பாதங்கள், விரல்களின் இடைவெளிகள், நகத்தை சுற்றியுள்ள இடங்கள் ஆகியவற்றை கவனித்து கழுவ வேண்டும். நகங்களுக்கு உள்ளே உள்ள அழுக்குகளை தேய்த்து கழுவி அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெடிக்கியூர் செய்வது என்பது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் செய்து கொள்ள முடியும். நீங்களும் அடிக்கடி பெடிக்கியூர் செய்து கொள்வது அவசியமானதாகும். இறந்த வறண்ட திசுக்களை ஸ்க்ரப் மூலம் நீக்க வேண்டியதும் அவசியமானதாகும். ஊட்டமிக்க எண்ணெய் அல்லது சருமப் பாதுகாப்பு எண்ணெய்களை வாங்கி நகங்களிலும் கால் பாதங்களிலும் எப்போதும் ஈரப்பதமூட்டி வைத்திருப்பதும் நல்லதாகும். நகங்களை ஒட்ட வெட்டி சுத்தமாக வைக்க வேண்டும்.

தினசரி குளித்த பின் கால்களையும் பாதங்களையும் ஈரப்பதமூட்டி வைத்திருக்க வேண்டும். இதனால் ஈரமான தோல் ஊட்டத்தை ஈர்த்துக் கொண்டு கால் பாதங்களை எப்போதும் போதுமான ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். அது தவிர பெட்ரோலியம் ஜெல்லி அல்லது லோஷன் போட்ட பின் சாக்ஸ் அணிந்து படுக்கைக்கு செல்வது நீண்ட நேரத்திற்கு ஈரப்பதத்தை நிலைநிறுத்தும்

எப்போம் கால்களை முழமையாக மூடும் செருப்புகளை பயன்படுத்துவது சிறந்தது. இது ஈரப்பதத்தை எப்போதும் தக்க வைத்து இதமாகவும் மிருதுவாகவும் கால்களை வைத்திருக்கும். ஆனால் நாம் பயன்படுத்தும் சாக்ஸ் மற்றும் செருப்புகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதும் நமது கடமையாகும். வியர்வை மற்றும் அழுக்கு படிந்த செருப்புகளின் உட்புறம் நோய்த்தொற்றையும் கெட்ட வாடையையும் விளைவிக்க கூடியதாக இருக்கும்.

நமது கால்கள் பெரும் சுமையை தினமும் சுமக்க உதவுகின்றன. நம்மை முழுமையாக சுமப்பதே பெரும் சுமைதான். இதனால் கால்களுக்கு இதமூட்டும் மசாஜ் அவ்வப்போது தேவைப்படும். அது மட்டுமில்லாமல் கால்களில் பல நரம்பு மண்டலங்கள் முடிவடைகின்றன. ஆகையால் கால்களை மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள பல பாகங்கள் ஓய்வு நிலைக்கு சென்று இளைப்பாருகின்றன.

அனைத்து வகை காலணிகளும் உங்களுக்கு ஏற்றவை கிடையாது. நல்ல தரத்துடன் தயார் செய்யும் காலணிகளை உருவாக்கும் நிறுவனத்திடமிருந்து இதை வாங்குவது நல்லது. இது கால்களுக்கு ஆறுதல் தருவது மட்டுமில்லாமல், அழகையும் சேர்த்து தருவதாக இருக்கும். உள்ளிருக்கும் பாகம் மிருதுவாக இருக்கின்றதா என்பதை எப்போதும் கவனித்து இத்தகைய பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். ஹீல்ஸ் செருப்புகளை தேர்வு செய்யும் போது அவை சரியாக சமநிலைபடுத்தும் காலணியாகவும், எந்த வித கேடும் விளைவிக்காத வகையிலும் அமைந்திருப்பதை பார்த்து வாங்குவது நல்லது.

ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒடம்புக்கு ஆகாதுன்னு ஒதுக்கிய டைரக்டர்...!



பைக் ஓட்டாமல் ஓபியடித்த நஸ்ரியாவின் குட்டை படக்குழுவினர்  அம்பலபடுத்தியுள்ளனர். ‘நேரம்‘, ‘நய்யாண்டி‘ ‘ராஜா ராணி‘ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம்.


இவருக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்க உள்ளது.


திருமணத்துக்குபிறகு நடிப்பதா? இல்லையா? என்பதுபற்றி நஸ்ரியா இன்னும் முடிவெடுக்காத நிலையில் பஹத்தே முன்வந்து, ‘அவர் தொடர்ந்து நடிப்பதற்கு ஆட்சேபம் இல்லை‘ என்று கிரீன் சிக்னல் தந்திருந்தார்.


இதற்கிடையில் ‘ஓம் சாந்தி ஓஷானா‘ என்ற படத்துக்காக மோட்டார் பைக் ஓட்டும் காட்சியில் நஸ்ரியா நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் தனக்கு பைக் ஓட்ட தெரியாது என்று மறுத்துவிட்டார்.


அதன்பிறகு அந்த பைக்கை 4 சக்கர வாகனமாக்கி அதில் உட்கார வைத்து தள்ளியபடி காட்சியை படமாக்கியது பட குழு. இக்காட்சியை படமாக்க குழுவினர் பட்ட கஷ்டத்தை தற்போது பட குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டனர்.


பைக் ஓட்டாமல் நடித்த நஸ்ரியாவின் குட்டை அம்பலப்படுத்தும் விதமாக அது உள்ளதாம்.

ஸ்கைப் பற்றி சில தகவல்களுடன்...அம்புஜம் மாமி...!



இன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்த்துக் கொண்டே பேசி மகிழ நமக்கு அதிகம் உதவுவது ஸ்கைப் புரோகிராம்.


இதனைப் பயன்படுத்த, இந்த புரோகிராமில் நமக்கென ஒரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்தி, அதற்கான பாஸ்வேர்டையும் அமைக்க வேண்டும். இனி, இது போன்ற தனி அக்கவுண்ட் தேவையில்லை.


பேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம், ஸ்கைப் புரோகிராமில் நுழைந்து செயல்படலாம். அண்மையில், விண்டோஸ் 8 வெளியிடப்படும் சில நாட்களுக்கு முன்னர், ஸ்கைப் இதனை அறிவித்தது. இதே போல மேக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வசதியையும் அளித்துள்ளது.


இதனை ஸ்கைப் பதிப்பு 6 எனப் பெயரிட்டுள்ளது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு ஸ்மார்ட் போன் கேலரிக்கு இத்துடன், ஸ்கைப் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் லைவ் மெசஞ்சர், ஹாட்மெயில் மற்றும் அவுட்லுக் டாட் காம் ஆகிய தளங்களுடன் இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்பவும் இயலும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம்,


சென்ற ஆண்டில் 850 கோடி டாலர் கொடுத்து, ஸ்கைப் நிறுவனத்தினை வாங்கியது. அப்போது, தன் சாப்ட்வேர் தொகுப்புகளுடன், ஸ்கைப் புரோகிராமினை இணைந்து இயக்கும் வகையில் மாற்றி மேம்படுத்தப் போவதாக அறிவித்தது. அதன் அடிப்படையில், தற்போதையே மேம்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


இதே நிகழ்வில், விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கான ஸ்கைப் பதிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள இயக்க முறைகளின் படியே, ஸ்கைப் தொகுப்பும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 8 போல, மேலும் ஆறு மொழிகளில் கூடுதலான இயக்கத்தினையும் ஸ்கைப் தற்போது கொண்டுள்ளது.


மேக் சிஸ்டத்தினைப் பொறுத்த வரை,ஸ்கைப் தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் சேட் செய்திடும் வசதியினைத் தந்துள்ளது. மேலும் ஆப்பிள் தரும் ரெடினா டிஸ்பிளேயினையும் ஸ்கைப் சப்போர்ட் செய்கிறது.

செரிமான சக்தியை தூண்டும் கொத்தமல்லி..........!



அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு.

இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது.

குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு. ஆனால் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது.

நல்ல புதிய கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மாகுலர் டிஜெனெரேசன் (macular degeneration) எனப்படும் கண் நோய், விழி வெண்படல அழற்சி (conjunctivitis) எனப்படும் மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துதலிலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை இதப்படுத்தவும் உதவுகின்றன.

கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகளை நீக்கும் சக்தியும், நச்சுக்களை நீக்கும் ஆற்றலும், தொற்றுக்களை நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மையும் உண்டு. சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.

இரும்புச்சத்தும், வைட்டமின் சி-யும் இதன் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்கின்றன. இதனால் அம்மை நோயினால் ஏற்படும் வலி குறையும்.

கொத்தமல்லியில் மணம் நிறைந்த நறுமண எண்ணெய் இருப்பதால், பசியுண்டாக்கியாகச் செயல்பட்டு, வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் நொதிகளையும், சுரப்புக்களையும் அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது. மேலும் பசியின்மையைப் போக்குவதிலும் பயன்படுகிறது.

வாயு தொல்லையால் அவஸ்தைப்படுறீங்களா...?




வாயு பிரச்சனையை தவிர்க்க கட்டுப்பாடான உணவு பழக்கம், மெதுவாக உணவுகளை மென்று உண்ணுதல், சிறிய அளவில் அடிக்கடி உண்ணுதல், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகுதல் மற்றும் நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற எளிய, முக்கிய பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

விரைவான நிவாரணத்திற்கு, மசாலா பொருட்கள், காபி, திடமான தேநீர், இறைச்சி, கேக், ஆல்கஹால் மற்றும் மருத்துவர் குறிப்பிட்டு கூறும் புளிப்பான உணவு பொருட்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒரு கப் தண்ணீரில், எலுமிச்சை சாற்றை பிழிந்து, அதனுடன் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்துக் கொள்ளவும்.

பேக்கிங் சோடா தண்ணீரில் நன்றாக கரையும் வரை அதை நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். இதனை பருகினால், இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். முடிந்த வரை இதனை காலையில் செய்து, உடனடி நிவாரணியை பெறுங்கள்.

மூலிகை தேநீர், செரிமான அமைப்பை துரிதப்படுத்தி மேம்படுத்தவும் செய்யும். அதிலும் சீமைச்சாமந்தி, ராஸ்பெர்ரி, நாவல் பழம் மற்றும் புதினாவால் செய்யப்பட்ட தேநீர் குடிப்பது மிகவும் நல்லது.

தினமும் காலையில் எழுந்ததும் 1-2 பல் பூண்டை நெருப்பில் சுட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டு, பின் ஒரு டம்ளர் சுடு தண்ணீரைப் பருகினால், வாயுத் தொல்லை நீங்குவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தினமும் அரை ஸ்பூன் பெருங்காயத்தூளை வாயில் போட்டு சுடு தண்ணீர் குடித்தால் வாயு தொல்லை வரவே வராது.

வாயைக் கவனிங்க இல்லைனா...?



உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்தால் நோய்கள் அண்டாது என்பதை, 'வாயைக் கட்டினால் வைத்தியமில்லை' என்பார்கள். மேலும் சில விஷயங்களிலும் வாயைக் கவனித்தால் நல்லது. அவை...

ஈறுகளில் ரத்தம் வடிதல் பாதிப்பு:

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கலாம். ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்றுநோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

என்ன செய்வது:

தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட 'மவுத் வாஷ்' கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் பாதிப்பு:

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமான மனஅழுத்தத்தாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் போலிக் ஆசிட்டின் குறைவு, இரும்புச்சத்து அல்லது வைட்டமின் தி பி 12-ன் குறைவாலும் இப்படி ஏற்படுகிறது.

என்ன செய்வது:

'மல்டி வைட்டமின்' மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் நோய் தொற்று குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது பாதிப்பு:

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக் கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த 'டீஹை டிரேஷன்' ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

என்ன செய்வது:

நிறைய திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ, பழச்சாறோ அருந்துவதும் நல்ல பலன் தரும்.

உண்மைய சொன்னா நம்பல பைத்தியக்காரணு சொல்லவாங்க...!



1.காதலை விலை கொடுத்து வாங்க முடியாது. ஆனா, அதை மெய்ன்ட்டெய்ன் பண்ண நெறயா செலவு செய்ய வேண்டியிருக்கும்...

2.சாப்பிடுகையில் கடைசியாய் ஒன்று என்றதும் இருப்பதில் பெரிய தோசையை தேடுபவள் -அம்மா.

3.இந்தியாவில் வரிசைகள் மிக நீளமாக இருப்பதற்கு தொப்பையும் ஒரு காரணம் ..

4.Facebook-ல நல்லவனா நடிப்பது வேஸ்ட். இங்க யாரும் உங்களுக்கு பொண்ணோ , கடனோ கொடுக்கப் போவதில்லை ...

5.சென்னை மாவட்ட எல்லை ஆரம்பம் என்ற எழுதியுள்ள தட்டிகளுக்கு பதிலாக போக்குவரத்து நெரிசல் ஆரம்பம் என எழுதி வைக்கலாம்...

6.காதல் தோல்வியை கொண்டாடவும் ஒருநாள் இருந்தால் மொத்த உலகமும் அதை கொண்டாடித் தீர்க்கும் நாளாக அது இருக்கும்....

7.தான் அழகாக இல்லை என்று நினைக்கும் ஒரு ஆணின் தாழ்வு மனப்பான்மையை நீக்குவது ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையே

8.என் பட்டினியை தவிர, எந்த தவறையும், மன்னித்துவிடுகிறாள் என் தாய்.

9.கண்ணுக்கு தெரியாத கடவுளை வேண்டிக்கொண்டு, அம்மா விபூதி வைத்துவிடும் போது,
அருகிலேயே
தெரிகிறது கடவுள்...

10.எந்த பெண்ணும் நீ கட்டுன வேட்டி சட்டையோட வா உன்ன நான் காப்பாத்துறேன் என்று சொல்வதில்லை ..

திருமணமான தம்பதியர்கள் ஃபேஸ்புக்கில் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியவைகள்..!



ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, காற்று மற்றும் தண்ணீரின் தேவைகளையே கேள்விக்குறியாக்கும் வகையில் மெய் மறக்கச் செய்கின்றன. உங்களுடைய இதயம் மறக்க இயலாத விஷயங்களை இந்த வலைத் தளங்களில் பதிவு செய்யவும், பகிர்ந்து கொள்ளவும் முடியும். தனியாக இருக்கும் போது இந்த விஷயங்களை செய்வதில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லையென்றாலும், நீங்கள் ஒரு உறவுக்குள் வந்த பின்னர் சில மாற்றங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டாலோ, திருமணம் நடந்து விட்டிருந்தாலோ அல்லது யாருடனாவது தொடர்பில் இருந்தாலோ, உங்களுடைய இணைய வழி செயல்பாடுகளை சற்றே கவனத்துடன் அணுக வேண்டிய தருணம் இதுவாகும். ஃபேஸ்புக்குகளில் எந்தவித அறிமுகமும் இல்லாமல் தொடங்கிய பல்வேறு உறவுகளும், விவாகரத்து அல்லது பிரிந்து வாழ்தல் போன்ற நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீங்கள் ஒரு மகிழ்ச்சியான இணையாக இருந்தாலோ மற்றும் காலம் முழுவதும் இவ்வாறே இணைந்திருக்க விரும்பினாலோ, இங்கே தரப்பட்டுள்ள குறிப்புகளை படித்து, பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

போலி அடையாளங்களை பயன்படுத்த வேண்டாம்

தங்களுடைய நண்பர்களுடைய பட்டியலை வைத்திருக்கும் உண்மையான கணக்கை ப்ரெஷ்சாகவும் மற்றும் சுத்தமாகவும் வைத்திருக்கும் பொருட்டாகவும், சில பேர் போலியான அடையாளங்களை கொண்டு கணக்குகளை தொடங்குவார்கள். இன்னும் சில பேர் தவறான காரணங்களுக்காக போலியான அடையாளம் கொண்ட கணக்குகளை பயன்படுத்துவார்கள். நீங்கள் இவ்வாறு போலி கணக்குகளை பயன்படுத்துபவர்களில் ஒருவராக இருந்தால், உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த வகை கணக்கை அழித்து விட்டு, உங்களுடைய துணைவருக்கு உண்மையானவராக நடந்து கொள்ளுங்கள். இந்த வகையான போலி அடையாளங்களை உங்களுடைய துணைவர் கண்டறிய மாட்டார் என்று நினைப்பது, நெடுநாட்களுக்கு நீடித்து இருப்பதில்லை.

சில நண்பர்கள் தேவையில்லை

உங்களுடைய இனிமையான மண வாழ்க்கை அல்லது உறவை தொந்தரவுக்குள்ளாக்கும் சில நண்பர்களை முகநூல் நட்பிலிருந்து வெளியேற்றுவது நல்லது. இந்த வகை நண்பர்களிடம் தொடர்பில் இருப்பதை விட, பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கூட தொடர்பு கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களுடைய ஆண் நணர்பகளாக இருந்தவர்கள், இப்போதைய மண வாழ்க்கையை சூறையாடும் பகைவர்களாக மாறி விட வாய்ப்புகள் உண்டு. இது ஒரு புத்திசாலித்தனமான அட்வைஸாக இருப்பதற்கு காரணம், பல கணவர்களும், மனைவிகளும் பிரிந்திருக்க காரணமாக இருப்பது வருத்தத்திற்குரிய இந்த வiயான நட்புகளே. ஆரம்பத்தில், நண்பருடனான பிரிவு உங்களை வருத்தினாலும், பின்நாட்களில் திருமண உறபை பாதுகாத்ததற்காக நீங்கள் பெருமைப்படுவீர்கள்.

இரகசியம் தேவையில்லை

ஆரோக்கியமான உறவு என்பது துணைவருடன் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை பகிர்ந்து கொள்வது தான். நீங்கள் வெகு விரையில் திருமணம் புரிந்து கொள்வீர்கள் என்றால், உங்களுக்கான அறிவுரை அதீதமாக இரகசியம் காக்க தேவையில்லை என்பது தான். நீங்கள் அளவுக்கு அதிகமாக இரகசியம் காத்து நின்றால், உங்களுடைய துணைவரிடம் இருந்து எதையோ மறைக்க முயலுகிறீர்கள் என்பதை அவரும் உணர்ந்து கொள்வார். எனவே, உங்களுக்கு 'ஓகே' என்றால் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கூட துணைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதே போல, சில படங்கள் மற்றும் போஸ்ட்-களையும் உங்களுடைய துணைவரிடம் இருந்து மறைப்பதால், தேவையில்லாத சந்தேகங்களை வரவழைத்து, உறவை கெடுத்துக் கொள்வீர்கள். எனவே கவனம் தேவை இக்கனம்!

உறவில் நிலையை மறைக்க வேண்டாம்

 உங்களுடைய உறவில் நிலையை அனைவருக்கும் தெரியும் வகையில் நீங்கள் காட்டினால், அதாவது உங்களுடைய துணைவருடன் நிச்சயிக்கப்பட்டு விட்டீர்கள் அல்லது திருமணம் செய்யப் போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக காட்டுவதால் நம்பிக்கை கூடுமே தவிர, வேறெந்த ஆபத்துகளும் வருவதில்லை. எனவே, நாம் ஏன் இதனை மறைக்க வேண்டும்? நம்முடைய உறவை வெளிப்படுத்தி, பெருமை கொள்வோம்!

உங்களுடைய படங்களை பதிவேற்றம் செய்தல்

 உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை ஃபேஸ்புக் முழுமையும் பதிவேற்றம் செய்யலாம் என்று நான் அட்வைஸ் கொடுக்க விரும்புகிறேன். எனினும், சில படங்களை இவ்வாறு போடுவதால் எந்தவித பிரச்னைகளும் வரப்போவதில்லை. இவ்வாறு பொதுவான தளங்களில் படங்களை போடுவதன் மூலம், அவருடன் நீங்கள் இருப்பதை விரும்புகிறீர்கள் என்றும், அதற்காக வெட்கப்படவில்லை என்றும் உலகுக்கும், துணைவருக்கும் உணர்த்திடவும் முடியும். எனினும், நெருக்கமான அல்லது தனிப்பட்ட படங்களை நீங்கள் பதிவிடும் போது கவனமாக இருக்கவும், பின் நாட்களில் உங்களுடைய துணைவரை தர்மசங்கடமான நிலைக்கு இந்த படங்கள் தள்ளி விடும். இவ்வாறு வித்தியாசமான படங்களை நீங்கள் பதிவிடும் முன்னர், துணைவருடன் ஒருமுறை கலந்து பேசி விடுவது நலம்.

உங்களுடைய க்ளோசெட்டை சுத்தம் செய்யுங்கள்

 ஃபேஸ்புக்கில் உள்ள 'டைம்லைன்' பகுதியை வழங்கிய காரணத்திற்காக மார்க் ஸுக்கர்பெர்க்-ற்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். ஏனெனில், இந்த டைம்லைன் மூலம் உங்களுடைய துணைவர் உங்களுடைய கடந்த கால வாழ்க்கையை அவராகவே அறிந்து கொள்வார். இந்த டைம்லைனில், உங்களுடைய முன்னாள் காதலர்கள், குறும்புத்தனமான கமெண்ட்கள் அல்லது முன்னாள் காதலருடன் எடுத்துக் கொண்ட சில வெளிப்படையான படங்கள் என பல விஷயங்களையும் காண முடியும். நீங்கள் மணம் செய்து கொள்ளப் போகும் நபர், இந்த படங்களையும், கமெண்ட்களையும் பார்க்க முடியும், இவ்வாறு பார்க்கும் பொது உறவுக்கு அழிவு தரும் என்று நினைக்கும் போஸ்ட்கள், கமெண்ட்கள் மற்றும் படங்களை உடனடியாக அழித்து உங்களுடைய க்ளோசெட்டை சுத்தம் செய்வது நல்லது. இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட ஃபுரோபைல் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள் என்று காட்ட வேண்டுமே தவிர, நீங்கள் யாராக இருந்தீர்கள் என்று காட்டத் தேவையில்லை.

கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பது பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!



கர்ப்ப காலத்தின் போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் பல சோதனைகளை நீங்கள் செய்தாக வேண்டியிருக்கும். இவையனைத்தும் தாய் மற்றும் சேயின் நலனிற்காக செய்யப்படும் சோதனைகளாகும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் என்பது கர்ப்ப காலத்தில் முக்கிய அங்கமாக வகிக்கிறது.

பிறவிக்குறை, கர்ப்பகாலத்தின் போது சிசுவின் பிறழ்வான வளர்ச்சி, சிசுவின் இயல்பான உடல் வளர்ச்சி போன்றவைகளை கண்டறிந்து கண்காணிக்கவே இவ்வகை ஸ்கேன்கள் எடுக்கப்படுகிறது. கர்ப்பமாக இருக்கும் இந்த 9 மாதத்தில் உங்கள் வயிற்றை குறைந்தது நான்கு முறையாவது ஸ்கேன் செய்ய வேண்டி வரும்.

இதனால் உங்கள் குழந்தையை, கருப்பு வெள்ளை நிழல் போன்ற உருவத்தில் திரையில் நீங்கள் கண்டு களிக்கவும் செய்யலாம். குழந்தையின் நலனை ஒரு அலாரம் போல் உங்களுக்கு காட்டவும் அல்ட்ரா சவுண்ட் உதவுகிறது.

கர்ப்ப காலத்தின் போது அல்ட்ரா சவுண்ட்டின் முக்கியத்துவம்: 

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு கட்டத்தில் எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், உங்கள் குழந்தையின் உடல்நலம் மற்றும் அதன் வளர்ச்சிகளை உங்களுக்கு எடுத்துரைக்கும். கர்ப்ப காலத்தின் போது கீழ்கூறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் செய்யப்படும்:

 வியபிளிடி ஸ்கேன் (Viability Scan) 

கர்ப்ப காலத்தின் 6 மற்றும் 10 ஆவது வாரத்தில் எடுக்கப்படும் இந்த ஸ்கேன், கர்ப்பத்தின் வளர்வீத முறை, குழந்தையின் இதய துடிப்பு மற்றும் தாயின் வயிற்றில் உள்ள சிசுவின் எண்ணிக்கையை கூறும்.

 நியூக்கல் ட்ரான்ஸ்லூசென்சி ஸ்கேன் (Nuchal Translucency Scan) 

கர்ப்ப காலத்தின் 12 ஆவது வாரத்தில் எடுக்கப்படும் இந்த ஸ்கேன் மூலம் சிசுவின் உடல்நலத்தை கண்டறியலாம். மேலும் ஏதேனும் க்ரோமோசல் பிறழ்வுகள் மற்றும் டவுன் சிண்ட்ரோம்களால் சிசு பாதிக்கப்பட்டிருந்தால் அதனையும் கண்டுபிடித்து விடலாம். சிசுவிற்கு ஏற்படும் பிரச்சனைகளை வெகு விரைவிலேயே கண்டு பிடித்து விடுவதால், அதனை குணப்படுத்தி விடலாம். இதனால் இது ஒரு முக்கியமான ஸ்கேனாக பார்க்கப்படுகிறது.

 அனாமலி ஸ்கேன் (Anomaly Scan)

 18 மற்றும் 20 ஆம் வாரத்தில் எடுக்கப்படும் இந்த ஸ்கேன், சிசுவின் உடல் கூறு மற்றும் நஞ்சுக்கொடியின் அமைப்பு போன்றவைகளை பற்றி விவரமாக தெரிவிக்கும். மூளை, முகம், முதுகெலும்பு, இதயம், வயிறு, கிட்னி, கை கால்கள் மற்றும் உடலின் இதர அங்கங்களின் வளர்ச்சியை பற்றிய விவரத்தையும் அளிக்கும். பனிக்குட நீரின் அளவை தெரிந்து கொள்ளவும் இது உதவும். குழந்தையின் வளர்ச்சி வேகத்தையும் தெரியப்படுத்தும்.

ஃபீடல் எக்கோகார்டியோகிராஃபி (Fetal Echocardiography)

 சிசுவின் இதயம் மற்றும் அதன் கலன்களை பற்றி விவரமான சோதித்தல் 20 மற்றும் 22 ஆம் வாரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் நடக்கும். அனாமலி ஸ்கேனில் குழந்தையின் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை கண்டறியப்பட்டால், இந்த ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்படுவார்கள்.

 பீடல் வெல்பீயிங் (Fetal Wellbeing)

 28 முதல் 39 வாரத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இந்த ஸ்கேன் எடுக்கப்படும். இதன் பெயர் சொல்வதை போல், குழந்தையின் உடல் நலத்தை சோதிப்பதற்காகவே இந்த ஸ்கேன் எடுக்கப்படுகிறது. மேலும் சிசுவின் இருக்கை நிலையை தெரிந்து கொள்ளவும் இந்த ஸ்கேன் உதவி புரியும். கர்ப்ப காலத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் எப்படி எடுக்கப்படுகிறது? கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில், அனைத்து அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்களும் வயிற்றுச் சுவர் வழியாக மட்டுமே எடுக்கப்படும். ஆனால் கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில், யானிவழியாக சோதனை மேற்கொள்ளப்படும்.

 வயிற்றுச் சுவர் வழியாக எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்கள் (Transabdominal Ultrasounds)

 இவ்வகை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்களில், ஜெல் போன்ற ஒன்றை உங்கள் வயிற்றின் மீது மருத்துவர் தடவுவார். பின் கையில் வைத்திருக்கும் ட்ரான்ஸ்ட்யூசர் கருவியை கொண்டு, வயிற்றில் மெதுவாக நகர்த்தி, குழந்தையின் அசைவுகளை கண்காணிக்கலாம். அங்கே வைக்கப்பட்டிருக்கும் திரையில், நடக்கும் அனைத்தையும் நீங்கள் காணலாம். இது உங்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தாததால் இவ்வகை ஸ்கேன்கள் மிகவும் பாதுகாப்பானதாகும்.

யானிவழி ஸ்கேன்கள் (Transvaginal Ultrasounds) 

இவ்வகை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்களில், நீண்ட குறுகிய ட்ரான்ஸ்ட்யூசர் கருவி உங்கள் பெண்ணுறுப்பில் விடப்படும். பொதுவாக கருத்தடைஉறையால் இது மூடப்பட்டிருக்கும். மேலும் சுலபமாக உள்ளேற ஜெல் தடவ பட்டிருக்கும். இது அவ்வளவு சவுகரியத்தை கொடுப்பதில்லை. ஆனால் ஆரம்பகால குழந்தை மற்றும் அதன் வளர்ச்சியை இதுவே தெளிவாக காட்டும்.

ஸ்கேன் எடுப்பதற்கு எப்படி தயாராக வேண்டும்? 

1. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும் போது, உங்கள் வயிற்று பகுதியை சுலபமாக வெளிகாட்டும் விதமாக அமையும் லூசான ஆடைகளை அணியுங்கள்.

 2. போதுமான அளவிற்கு தண்ணீரை பருகுங்கள். அதனால் உங்கள் கருப்பையின் நீரால் நிறையும். நீர்ப்பை முழுவதுமாக நிறையும் போது, குழந்தையின் உருவம் தெளிவாக தெரியும்.

 3. யானிவழி அல்ட்ரா சவுண்ட் எடுப்பதற்கு நேரெதிரான வழிமுறையை பின்பற்ற வேண்டும். சோதனை மேஜையில் படுக்கும் போது அமைதியுருங்கள். ட்ரான்ஸ்ட்யூசர் கருவியை நுழைக்கும் போது வலி ஏற்படும். உடலின் கீழ் பகுதியை ரிலாக்ஸ் செய்து, கருவி உள்ளேறும் வரை திடமாக இருங்கள். உடலின் கீழ்பகுதியை இறுக்கமாக வைத்திருந்தால் உங்களுக்கும் மருத்துவருக்கும் தொந்தரவாக அமையும். ஆழமாக சுவாசிப்பதால் உங்கள் அசவுகரியம் சற்று குறையும்.

இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான் பற்றியத் தகவல்..!



இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தை காளான் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் உள்ளன.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்கான சில சுலபமான வழிகள்..!



உங்க மீன் தொட்டி இருக்கிறதா? அந்த மீன் தொட்டியில் இருந்து கெட்ட துர்நாற்றம் வீசுகிறதா? இது பெரும்பாலும் மீன்களை வளர்ப்போர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று.

இப்படி மீன் தொட்டியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை சரியான பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்வதன் மூலம், துர்நாற்றமில்லாமல் தொட்டியை வைத்துக் கொள்ளலாம்.

இங்கு தமிழ் போல்ட் ஸ்கை மீன் தொட்டியை எப்படி துர்நாற்றமில்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்வது என்று கொடுத்துள்ளது. குறிப்பாக அப்படி மீன் தொட்டியை சுத்தம் செய்யும் முன், மீன்களை நீர் உள்ள மற்றொரு பௌலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

 அதிலும் மீன் தொட்டியை வெறும் சோப்பு பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் மட்டும், அதிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் நீங்காது. சோப்பு பயன்படுத்திய பின்னர் வேறு சில பொருட்களைக் கொண்டு சுத்தப்படுத்தவும் வேண்டும். சரி, இப்போது மீன் தொட்டியை துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான சில சுலபமான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மீன் தொட்டியானது நன்கு பளபளப்புடன் இருக்க வேண்டுமானால், வினிகர் பயன்படுத்தலாம். அதற்கு செய்ய வேண்டியது என்னவென்றால், தண்ணீர் மற்றும் வினிகரை ஒன்றாக கலந்து, அதனை தொட்டியில் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் மீன் தொட்டியில் இருந்து வெளிவரும் துர்நாற்றமானது நீங்கும்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேக்கிங் பவுடர் கொண்டு மீன் தொட்டியை சுத்தம் செய்தால், அதில் உள்ள கறைகள் நீங்கி, மீன் தொட்டியானது பளபளக்கும். ஆனால் அப்படி பேக்கிங் பவுடரைப் பயன்படுத்தும் போது, அளவாக பயன்படுத்த வேண்டும்.

எலுமிச்சை கூட மீன் தொட்டியை சுத்தம் செய்ய உதவும். அதற்கு மீன் தொட்டியில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, நன்க தேய்த்து, பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் மீன் தொட்டியில் இருந்து வெளிவரும் துர்நாற்றம் போய்விடும்.

உப்பை நீரில் கலந்து அந்த நீரைக் கொண்டு, மீன் தொட்டியை கையால் தேய்த்து கழுவினால், தொட்டியில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

சோப்பு கொண்டும் தொட்டியை சுத்தம் செய்யலாம். ஆனால் இதனால் மீன் தொட்டி பளபளப்புடன் இருக்குமே தவிர, துர்நாற்றம் இல்லாமல் இருக்காது. ஆகவே இதனை பயன்படுத்திய பின் சிறிது எலுமிச்சை சாற்றினைக் கொண்டு சுத்தம் செய்து விடுங்கள்.

ப்ளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தியும் மீன் தொட்டியை சுத்தம் செய்யலாம். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரை நீரில் கலந்து, தொட்டியை தேய்த்து கழுவ வேண்டும்.
 
நண்பேன்டா