Saturday 22 February 2014

ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்-ஸில் ஆபத்து - 10 மில்லியனை எட்டிவிட்டது..!


இதுநாள் வரை டெஸ்க்டாப்,லேப்டாப்,டேப்லட்,ஸ்மார்ட்போன், என்று குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுமே அடைந்திருந்தன. இனி அவற்றை உடலில் அணிகின்ற பொருட்களிலும் அக்சஸ் செய்ய ஆப்ஸ் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது “Apps In Wearables” என்னும் புது ட்ரெண்டை நோக்கி அனைத்து நிறுவனங்களும் இயங்க ஆரம்பித்துவிட்டன.

இதற்கு பிள்ளையார்சுழி போடும் விதமாக ஸ்மார்ட் வாட்சினை சோனி நிறுவனம் முதன் முதலாக அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கியர் வாட்சையும், கூகிள் நிறுவனம் கூகிள் கிளாஸ் என அணிகின்ற மாதிரியான சாதனங்களையும் உற்பத்தி செய்துள்ளன. இப்போது இண்டெல் நிறுவனமும் அணிகிற மாதிரியான அப்ளிகேஷனை உருவாக்குவது பற்றி யோசித்து வருகிறது. இப்படி எல்லா நிறுவனங்களுமே அணிகிற மாதிரியான ஆப்ஸை தயாரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இப்போது பரவலாக மக்களால் கையாளப்படும் ஆண்ட்ராய்ட் ஆப்களில் பெரும்பாலானவை ஊறு விளைவிப்பவை என்று தெரியவந்துள்ளது.

2014 ஜனவரியில் காஸ்பர்ஸ்கை லேப் எனும் ஆண்டிவைரஸ் மென்பொருள் நிறுவனம் ஆய்வு செய்ததில் சுமார் 2 லட்சம் மொபைல் மால்வார்களை அது கண்டறிந்தது. அதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் நவ.2013 ஐ விட 34% அதிகரித்துள்ளது இந்த எண்ணிக்கை. அப்போது 1,48,000 மால்வேர்கள் இருந்தது தெரியவந்தது.

இப்போதெல்லாம் இணையவழி மோசடிக்காரர்கள் மொபைல் மார்க்கெட்டைக் குறிவைத்து இயங்குவதாக காஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது. இந்த வகையில் சந்தேகத்துக்கு இடமான ஊறு விளைவிக்கக் கூடிய ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் தற்போது 10 மில்லியன் என்ற அளவைத் தொட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து,பொதுவாக எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதற்கு எதிர்மறைப் பலன்கள் உண்டு என்பதை மறுப்பதற்கு இயலாது. பல்வேறு நிலைகளில் அதனுடைய பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. விலையுயர்ந்த கம்ப்யூட்டராக இருப்பினும் அதற்கு ஒரு ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் (Anti virus software)கட்டாயம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் என்ன விலை கொடுத்து வாங்கியிருந்தாலும் அதிலுள்ள கோப்புகளை நச்சு நிரல்கள் துவம்சம் செய்துவிடுகின்றன.

அதேபோன்றதொரு நிலைதான் தற்பொழுது பிரபலமாகிக்கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் நீடிக்கிறது என்பது கசப்பான உண்மை. விலையுயர்ந்த ஆண்ட்ராய்ட் மொபைல்களாக இருப்பினும் சரி.. விலையுயர்ந்த டேப்ளட் பி.சி. க்களாக இருப்பினும் சரி (Tablet pc, android tablet), எதுவாக இருப்பினும் வைரஸ் பாதிப்பு என்பது பொதுவானதே.

ஆயினும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டேப்ளட் பி.சி. மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்துவோர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த வைரஸ் ஆனது ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் பதிப்பிற்கு முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் சாதனங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை உறுதி செய்யும் முகமாகவே computer emergency response teamindia வின் அறிக்கை அமைந்துள்ளது என்றும் இதையடுத்தே இந்தியாவில் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆண்களை விட பெண்களுக்கு சோம்பேறித்தனம் அதிகம்..!



நோய்களிடம் இருந்து காத்துக் கொள்வதற்கு தேவையான உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாத இந்தியர்கள் எண்ணிக்கை 29 சதவீதம் என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

பரவாத நோய்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது உச்சி மாநாடு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நடக்கிறது. அதில் சமர்ப்பிப்பதற்காக இந்திய பொது சுகாதார அமைப்பு சார்பில் நாடு முழுவதும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஆரோக்கியத்தின் மீது இந்தியர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததை காட்டுகின்றன. அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:

இந்தியாவின் வயது வந்தோர் எண்ணிக்கையில் 29 சதவீதத்தினர் உடற்பயிற்சி என்ற ஒன்றை அறிந்திருக்கவில்லை. ஈடுபடவும் இல்லை. சொல்லப் போனால் அவர்களிடம் அசைவே குறைவு.

இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் மேலும் மோசமான நிலையில் உள்ளனர். உடல் உழைப்பு இல்லாத பெண்கள் எண்ணிக்கை 34 சதவீதம். அதாவது, 3ல் ஒரு பெண்.

வாரத்தில் சராசரியாக 149 நிமிடங்கள் உடல் உழைப்பு அவசியம் என்ற அளவுகோலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்தது. குழந்தை முதல் வயதானோர் வரை ஆண்களில் உடல் உழைப்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை 24 சதவீதம்.

அதாவது 4ல் ஒரு ஆணிடம் சாதாரண உடற்பயிற்சி என்பதே இல்லை. உடல் உழைப்பு இல்லாதவர்களில் கிராமவாசிகளைவிட நகரவாசிகள் நிலைமை மோசம். 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் பாதிக்கும் மேற்பட்டோர் தேவையான அளவு உடல் உழைப்பு இல்லாமல் உள்ளனர் என்கிறது ஆய்வு அறிக்கை.

உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாததன் விளைவுகள்: நகரங்களில் 6.6 முதல் 12.7% இதய நோயால் பாதிக்கின்றனர்.

கிராமங்களில் 2.1 முதல் 4.3 சதவீதம் பேருக்கு இதய கோளாறுகள். இருதரப்பையும் சேர்த்து 3.6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5.1 கோடி பேர் டயபடீஸ் நோயாளிகள். 2025ல் இது 8.7 கோடியாகும் அபாயம். இந்திய நோயாளிகளில் 8.5% பேர் மனநோய் பாதித்தவர்கள்.

'டெபிட் கார்டு' வாயிலாக பொருட்கள் வாங்குவது அதிகரிப்பு..!



டெபிட் கார்டு' எனப்படும் ரொக்க அட்டை வாயிலாக பொருட்கள் வாங்குவது, டிக்கெட் முன்பதிவு செய்வது மற்றும் பல்வேறு சேவைகளை பெறும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வங்கிகள் வழங்கும்,'டெபிட் கார்டு'ஐ, வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பதற்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது, 'டெபிட் கார்டு' வாயிலாக ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பது மட்டுமின்றி, சில்லரை விற்பனை நிலையங்களில், பொருட்களை வாங்குவதற்கும் இதை அதிகளவில் பயன்படுத்த துவங்கி உள்ளனர்.

 தற்போது, 'டெபிட் கார்டு'களில் பல்வேறு பாதுகாப்பு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு அக்டோபர் வரையிலான காலத்தில், 'டெபிட் கார்டு' வாயிலாக மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், கடந்தாண்டின் இதே காலத்தை விட, 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேசமயம், கணக்கீட்டு காலத்தில், 'கிரெடிட் கார்டு' எனப்படும் கடன் அட்டை வாயிலான வர்த்தகம், 22 சதவீதம் என்ற அளவில் தான் வளர்ச்சி கண்டிருந்தது.கடந்தாண்டு அக்டோபர் இறுதி நிலவரப்படி, உள்நாட்டில், 37.42 கோடி, 'டெபிட் கார்டு' வாயிலாக, 5.49 கோடி வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் வர்த்தக மதிப்பு, 8,686 கோடி ரூபாயாகும் என, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் நிலவரப்படி, உள்நாட்டில், 30.68 கோடி, 'டெபிட் கார்டு'கள் புழக்கத்தில் இருந்தன. இவற்றின் வாயிலாக, அவ்வாண்டில், 6,779 கோடி ரூபாய் மதிப்பிலான, 3.99 கோடி வர்த்தக பரிவர்த்தனைகள் நடைபெற்றன.கடந்தாண்டு அக்டோபர் வரையிலுமாக, 'டெபிட் கார்டு' வாயிலாக, ஏ.டி.எம்.,களில், 55.16 கோடி பரிவர்த்தனை மூலம், 1.71 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பணம் எடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில், 'டெபிட் கார்டு' வாயிலாக, பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கான விழிப்புணர்வு நல்ல அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவனங்களும், 'டெபிட் கார்டு' மூலம், பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்து வருவதாக, வங்கி துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாப்பாட்டுக்கே வழியில்லாமல்.. வறுமையுடன் போராடிய.. 'வாட்ஸ் ஆப்' நிறுவனரின் திரில் கதை..!



சான் பிரான்சிஸ்கோ: உக்ரைனிலிருந்து ஒன்றுமே இல்லாமல் வெறும் கையுடன் அமெரிக்காவுக்கு வந்து, தனது நண்பர் பிரையன் ஆக்டனுடன் இணைந்து வாட்ஸ் ஆப்பை உருவாக்கி இன்று பேஸ் புக்கிடம் கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் கோடிக்கு விறறு உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம்-மின் கதை மிக உருக்கமானது.. காரணம், ஒரு காலத்தில் அவர் சாப்பாட்டுக்கு வழியி்ல்லாமல், வறுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்தவர் ஆவார்.

உக்ரைனிலிருந்து வாழும் வழி தேடி அமெரிக்காவுக்கு வந்தவர்தான் ஜசன் கோம். மிக மிக வறுமையான வாழ்க்கையை சிறு வயதில் வாழ்ந்தவர்.

தனது தாயாருடன் சாப்பாட்டுக்கான டோக்கனை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தவர் இவர். ஆனால் இன்று இவர் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவருடன், பிரையன் ஆக்டனும் சேர்ந்து இன்று உலகத்தின் முகத்தையே திருப்பிப் போட்டவர்கள் என்பது சாதனைக்குரிய செய்தியாகும்.

தனது வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பிரையனுடன் இணைந்து பேஸ்புக்குக்கு விற்றுள்ள கோம், பேஸ்புக் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக இணைகிறார்.

பேஸ்புக்குடன் தனது நிறுவனத்தை விற்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தானும் தனது தாயும் சிறு வயதில் வறுமையுடன் வாழ்ந்து வந்த இடத்தில் வைத்துக் கையெழுத்துப் போட்டுள்ளார் கோம். அந்த இடத்தில்தான் தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனமும் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோமுக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமைதான் 38 வயதே பிறக்கிறது. இவ்வளவு சிறு வயதில் இவர் உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே தான் இவரது வீடு இருந்தது. கோம், யூத இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். சிறு வயதிலேயே தனது தாயாருடன் கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தார். அப்போது இவருக்கு வயது 16தான். சோவியத் யூனியன் உடைந்த பின்னர் இந்த இடமாற்றம் நடந்தது.

ஆனால் கோமும், அவரது தாயாரும் மட்டுமே அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர். கோமின் தந்தை வரவில்லை.

உக்ரைனிலிருந்து வரும்போது கோமின் தாயார், தனது மகன் பயன்படுத்திய சில பேனாக்கள், நோட்டுப் புத்தகங்களையும் கூடவே கொண்டு வந்திருந்தார். கலிபோர்னியாவில் தனது மகனைப் பள்ளிக்குச் சேர்த்தபோது புதிய பேனா, நோட்டுப் புத்தகங்களை வாங்க முடியாததால் இவற்றையேப் பயன்படுத்திக் கொண்டாராம் கோம்.

படிக்கும்போதே, பலசரக்குக் கடை ஒன்றில் தரையைத் துடைக்கும் வேலையில் ஈடுபட்டு சம்பாதித்தார் கோம்.

பழைய புத்தகக் கடை ஒன்றை அணுகி அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படிப்பாராம் கோம். படித்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவாராம். இப்படித்தான் நெட்வொர்க்கிங் குறித்து படித்துத் தேறியுள்ளார்.

1997ம் ஆண்டு சிலிக்கான் வேலியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்புக்காக சேர்ந்தார். மேலும் படிப்புச் செலவுக்காக ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பகுதி நேர வேலையிலும் சேர்ந்தார். அந்த சமயத்தில்தான் யாஹு நிறுவனத்திற்காக ஒரு வேலைக்குப் போயிருந்தபோது பிரையன் ஆக்டனுடன் நட்பு ஏற்பட்டது.

இருவரும் ஒரே வருடத்தில் மிகச் சிறந்த , நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். யாஹு நிறுவனத்திலேயே என்ஜீனியராக வேலையில் சேர்ந்தார் கோம்.

யாஹு நிறுவன வேலை பிடித்துப் போனதால் படிப்பை விட்டு விட்டார் கோம். இந்த நிலையில் 2000மாவது ஆண்டு கோமின் தாயார் புற்றுநோயால் மரணமடைந்தார். அப்போது கோமுக்கு மிகுந்த உறுதுணையாக இருந்து உதவியர் ஆக்டன்தான்.

இந்த நேரத்தில் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி டாட் காம் பூம் ஆக்டனுக்கு பெரும் பொருள் சேதத்தைக் கொடுத்தது. பலலட்சத்தை அவர் இழந்தார்.

2007ம் ஆண்டு இருவரும் யாஹு நிறுவனத்திலிருந்து விலகினர். ஒரு வருடம் ஜாலியாக ஊர் சுற்றிப் பார்த்தனர். அதன் பின்னர்தான் இருவரும் இணைந்து வாட்ஸ் ஆப் புரட்சிக்கு வித்திட்டனர்.. இன்று உலக இளைய தலைமுறையின் தகவல் தெய்வமாக மாறி நிற்கின்றனர்.

வெளிவந்தது கார்பனின் (karbonn) கோச்சடையான் மொபைல்கள்..!

இதுவரை எத்தனையோ மொபைல் பெயர்களை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள் ஆனால் இப்படி ஒரு பெயரை நீங்கள் கேள்வி பட்டிருக்க மாட்டிர்கள் எனலாம்.

ஆம் கார்பன் நிறுவனம் அந்த மொபைலின் பெயர் கோச்சடையான் ஆமாங்க அதன் பெயர் கார்பன் கோச்சடையான் தான்.

மொத்தம் 9 மாடல்களை கார்பன் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கின்றது இந்த மாடல்களில் இதோ அந்த மாடல்களின் விவரம்..

கார்பன் கோச்சடையான் தி லேஜன்ட் S5i

இதில் 8 MP Primary Camera Dual SIM (3G + 2G) 5-inch Capacitive Touchscreen Exclusive Kochadaiiyaan Content 0.3 MP Secondary Camera Augmented Reality App Android v4.2 (Jelly Bean) OS 4 GB Memory Card with Preloaded Exclusive Content 1 GHz Dual Core Processor

 கோச்சடையான் லேஜன்ட் A6 ப்ளஸ் 

Digital Secondary Camera Augmented Reality App Wi-Fi Enabled Android v4.0 (Ice Cream Sandwich) OS Expandable Storage Capacity of 32 GB Exclusive Kochadaiiyaan Content 5 MP Primary Camera Dual SIM (GSM + GSM) 1 GHz Processor

கோச்சடையான் லேஜன்ட் A36 

Dual SIM (GSM + GSM) Wi-Fi Enabled 5 MP Primary Camera 5-inch Capacitive Touchscreen Augmented Reality App 2 MP Secondary Camera Exclusive Kochadaiiyaan Content 4 GB Memory Card with Preloaded Exclusive Content Android v4.0 (Ice Cream Sandwich) OS 1 GHz Dual Core Processor

கோச்சடையான் தி லேஜன்ட் K77 

Dual Standby SIM (GSM + GSM) Exclusive Kochadaiiyaan Content Expandable Storage Capacity of 8 GB 1.3 MP Primary Camera GPRS Enabled 3.5-inch LCD Capacitive Touchscreen Video Recording Wireless FM Radio with Recording

கோச்சடையான் தி லேஜன்ட் 2.8 

1.3 MP Primary Camera Dual SIM (GSM + GSM) 2.8-inch LCD Screen GPRS Enabled Alphanumeric Keypad Video Recording FM Radio with Recording Expandable Storage Capacity of 8 GB Exclusive Kochadaiiyaan Content

 
நண்பேன்டா