Tuesday 18 February 2014

உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ..!

" மனவலிமை இருந்தால் ஊனம் வெல்லலாம் "
ரமேஷ் அதற்கு ஒரு உதாரணம் :


"ஊனம் ஊனம் ஊனம் இங்க ஊனம் யாருங்கோ
உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ
உள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறை இல்லே
உள்ளம் ஊனப்பட்டா உடம்பிருந்தும் பயனில்லே
ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்
சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்"

மனவலிமை இருந்தால் எந்த ஊனமாக இருந்தாலும் அதை வென்று விடலாம்

கோவையில் திரு. ரமேஷ், 33 வயது வெங்கடாசலம், பழனியம்மாள் தம்பதியினரின் இரண்டு மகளுக்கு அடுத்து மூன்றாவதாக பிறந்த செல்ல மகன் இந்த ரமேஷ் பிறக்கும்போதே இவரது காலில் குறைபாடு இருந்தது ஆனால் ரமேஷின் பெற்றோர்கள் அதனை பொருட்படுத்தாமல் ரமேஷை மிக செல்லமாக வளர்த்தார்கள் . ரமேஷ் காலில் நான்கு முழங்கால்கள் இருக்கும். இதனால் அவரால் நடக்கவோ மற்றவர்களை போல இயங்கவோ முடியாது. இந்த வேதனை அவருக்கு இருக்க கூடாது என்பதற்காகவே அவரை செல்லமாக வளர்த்தார்கள்.

பள்ளி செல்லும் பருவம் அடைத்தார் , ஆனால் இவரது குறைபாடு காரணமாக பள்ளி நிர்வாகம் இவரை பள்ளியில் சகமாணவர்களுடன் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. அப்படியே செர்க்கவேண்டுமனால் ரமேஷ் ஒரு ஆதரவற்றவர் என்று சொன்னால் சேர்த்துக்கொள்கிறோம் என்றார்களாம் , அதற்கு ரமேஷின் பெற்றோர் என் மகன் அனாதை இல்லை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று ரமேஷின் அக்கா இருவரும் கணிதம் மற்றும் பொது பாடங்கள் கற்று கொடுத்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான குடும்பம் சொந்த வீடும் வசதியோடும் அன்போடும் வளர்ந்தவர் வாழ்க்கையில் முதல் சோதனையை தந்தது. திடீரென அப்பாவும் அம்மாவும் இறக்க .தந்தை விட்டு வைத்த கடனை வீட்டை விற்று அந்த கடனை அடைத்து மீதி இருக்கும் பணத்தில் தன் சகோதரிகளுக்கு திருமணம் நடத்தினார் . அதுபோக தன் எதிர்காலத்திற்கு கையில் சொற்ப பணமும் வைத்திருந்தார் .

அதன் பிறகோ இவரது சகோதரிகள் வீட்டில் சிலநாள் தங்கி இருக்கவே சகோதரிகளின் உறவினர்கள் இவரது ஊனத்தை பார்த்து அருவருப்பு பட்டு ரமேஷை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டனர். ரமேஷ் வைத்திருந்த சொற்ப பணத்தை நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் போட்டிருப்பதை அறிந்து அந்த பணத்தை உறவினர்கள் கேட்டு வற்புறுத்தியும் உள்ளார்கள் . அனால் அதை தர மறுத்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறி கடந்த சில வருடத்திற்கு முன் ஈரநெஞ்சம் கொண்டவர்களின் துணையோடு இவர் ஒரு காப்பகத்தில் சேர்ந்து வாழ்கையை கழித்துவருகிறார். .

ஆனால் அங்கு தான் ஒரு அனாதைபோலவும் ஊனமுற்றவர் போலவும் பாவிப்பது அவருக்கு பிடிக்கவில்லை தனக்கு கால் குறைபாடாக இருக்கும் போதும் தன் வாழ்வை தன் சொந்தக் காலில் நின்று தான் வாழவேண்டும் என்ற வைராக்கியத்தோடு நண்பர்களின் சிறு உதவியோடு ஒரு காலணி விற்பனை கடையை துவக்கி நல்லமுறையில் நடத்திவருகிறார் .
கடந்த ஒருவருடமாக கடைக்கு வாடகை , உணவு, கவுண்டம்பாளையத்தில் இருக்கும் காப்பகத்தில் இருந்து சாய்பாபா காலனி யில் உள்ள அவரது கடைக்கு சென்று வருவதற்கு என மாதம் 8000 வரை அவரது கடையில் இருந்து வரும் லாபத்தில் சரிகட்டி வருகிறார் மீதம் சேமிப்பு என்று எதுவும் இல்லாத நிலை உள்ளது.

ஊனம் ஒரு பெரியதென்று வாழ்க்கையை இழந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் அதை துச்சமென தூக்கியெறிந்து ஓட ஆரம்பித்து இருக்கும் ரமேஷ் வாழ்வில் பல வெற்றிகள் காணவேண்டும் .

தற்போது மிகுந்த உற்சாகத்தில் காணப்படும் ரமேஷ் கண்களில் தனது காலணி கடையில் முதலீடு பற்றாக்குறை இருப்பது தெளிவாக தெரிகிறது.

யார் யாரையோ வங்கிகளும் பல முதலீட்டாளர்களும் ஓடி ஓடி கடன் கொடுத்தது ஊக்கப்படுத்துகிறார்கள்.

அதனால் இவர்களை போன்ற பலரை மட்டும் தாமாகவே முன்னுக்கு வரட்டும் என ஏன் விட்டு விடுகிறார்கள்..?

என்றும் இளமையோடு இருக்க வாரத்திற்கு ரூ.10 போதும்...!



நினைவாற்றலை பெருக்கும் கிழட்டு தன்மையை தடுக்கும் வல்லாரை கீரை

நினைவாற்றலை பெருக்க வேண்டும் என்றால் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது ‘வல்லாரை’ தான். ஆனால் வல்லாரைக்கு இதை தவிர வேறு சில நோய்களை குணப்படுத்தும் சக்தியும் இருக்கிறது.

வல்லாரைக்கு ‘சரஸ்வதி’ என்ற பெயரும் உண்டு. ஒருவரை புத்திமானாக்கும் அற்புத சக்தி இருப்பதால் அந்த பெயர் ஏற்பட்டது. தென்மாவட்டங்களில் வல்லாரையை கீரையாகவோ, துவையலாகவோ சமைத்து சாப்பிடுகிறார்கள்.

இது மிக நல்லது. வல்லாரையை அப்படியே உலர்த்தி பொடி செய்து மாத்திரையாகவும் தருகிறார்கள். இதன் தாவரவியல் பெயர் Centelle asiatia (linn) Urban. மண்டூகபரணி, ஆரை, சிங்கி, சண்டகி, குடகம், விக்கிராத்தா, குளக்குறத்தி, குணச்சாலி குணத்தி என்ற பெயர்களும் உண்டு.

மலை வல்லாரை, கருவல்லாரை என்ற இருவகைகள் உள்ளன. இது கணுக்களில் வேர்விட்டு தரையோடு படரும் சிறு செடி இனம். இதன் இலைகள் கரும்பச்சை நிறமாக இருக்கும்.

வட்ட, அரைவட்ட வெட்டு பற்களுடன் கூடிய கை வடிவ நரம்பு அமைப்புகளுடன் நீண்ட காம்புடைய ஆழமான இதய வடிவ இலைகளை கொண்டது. இதன் பூ ரோஸ் நிறத்திலும், பழங்கள் சிறிய முட்டை வடிவிலும் இருக்கும்.

கசப்புடன் கூடிய துவர்ப்பு சுவை உடையது. இதன் மகத்துவம் மிகப்பெரியது என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட மனநல நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.

இந்த மூலிகையில் asiaticoside, resins போன்ற ரசாயன பொருட்கள் உள்ளன. இது நினைவாற்றல், அறிவு, மனதை ஒருமுகப்படுத்துவது, துடிப்போடு இருக்க செய்வது ஆகிய செயல்களை தூண்டி, மூளையின் திசுக்களை புதுப்பிக்கவும் செய்கிறது.

வல்லாரையில் இருக்கும் antiascorbic acid தோலில் ஏற்படும் பலவித நோய்களையும் குணப்படுத்தும். இது தொழுநோயை கூட குணப்படுத்தும் சக்தி படைத்தது. இதில் இருக்கும் ஹைட்ரோகாட்டிலின் நம் மூளையின் செயல்களை முடுக்கி விடுகின்றன.

வல்லாரையில் இருக்கும் வல்லாரின் என்கிற அல்கலாய்டு நரம்புகளுக்கு மிகப்பெரிய சக்தியை தருகிறது.

நோயை நீக்கவும், உடலை பலப்படுத்தவும், வியர்வையை அதிகப்படுத்தவும், தாதுபலத்தை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது.

மூலாதார நரம்புகள் புதுப்பிக்கப்பட்டு கபால நரம்புகள் செயல்பட்டு நல்ல நினைவாற்றலை தருகிறது.

வல்லாரையுடன் வெங்காயம், பூண்டு, மிளகாய், புளி, சிறு பருப்பு சேர்த்து வேகவைத்து பின்னர் கடைந்து தக்காளி, சிறிது கடுகு சேர்த்து தாளித்து வைத்துக்கொண்டு வெயில் நேரத்தில் உண்டு வந்தால் நரம்புகள் நல்ல வலுப்பெற்று சுருக்கத்தை போக்கி சீராக வைத்துக்கொள்கிறது.

வல்லாரை இலையை உலர்த்தி பொடி செய்து சிறிது நெய் சேர்த்து உணவில் பிசைந்து ஒரு பிடி அளவு சாப்பிட்டால் வாதம், வாயு, அண்டவீக்கம், யானைக் கால், குஷ்டம், நெறிகட்டி, கண்ட மாலை, மேகரணம் குணமாகும்.

வல்லாரை சூரணத்தை ஒரு சிட்டிகை தினமும் காலையில் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் வீக்கம், தோல் வியாதிகள், மூளை நரம்பு சம்பந்தமான நோய்கள், இளநரை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம் குணமாகும். உடல் கிழட்டுதன்மை அடைவதை தடுக்கும். தோலுக்கு நிறத்தையும் மினு மினுப்பையும் தரும்.

வல்லாரை இலையுடன் தூதுவளை இலையை சம அளவு எடுத்து அரைத்து சாறு பிழிந்து 20 துளியை மட்டும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர தொண்டை கரகரப்பு, சுவாச உறுப்புகளில் சளித்தேக்கம் குணமாகும்.

பல மருத்துவ குணங்கள் வல்லாரைக்கு உண்டு. மூலிகைகள் பல இருந்தாலும் அவற்றில் வல்லாரைக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. 108 காயகல்ப மூலிகைகளில் வல்லாரை ஒரு தளபதி நிலையில் உள்ளது.

உயர் ரத்த அழுத்த நோயை குணமாக்குவதில் வல்லாரைக்கு முக்கிய பங்கு உண்டு. இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதிலும் வல்லாரை தனி இடம் வகிக்கிறது.

சிலருக்கு வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லையே என்ற தவிப்பான மனநிலை (anxiety) இருக்கும். இதை செய்யலாமா, அதை செய்தால் சரியாகிவிடுமா என்ற மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள். இதனால் அவர்களது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கும் வல்லாரையில் தீர்வு இருக்கிறது.

சமீபகாலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வந்த Scleroderma (ஸ்கிளீரோடெர்மா) என்ற இணைப்பு திசுக்கள் கடினமாதல் மற்றும் தண்டுவட பிரச்னைக்கு பெரிதும் பயன்பட்டுள்ளது.

வல்லாரை குளம், குட்டை போன்ற சிறிய நீர் நிலைகளில் அமோகமாக வளரும். இது குறிப்பாக மலைபாங்கான இடங்களில் தானாகவே வளர்கிறது.

விஷத்தை நீக்க வேண்டும்

வல்லாரையை பச்சையாக உபயோகிக்க கூடாது. இதில் ஒருவித விஷத்தன்மை உள்ளது. எனவே சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும். புதிய மண் சட்டியில் பசும்பால் முழுவதும் ஊற்றி ஒரு வெள்ளை துணியை கட்டி அதில் வல்லாரை இலைகளை போட்டு மூடி வைத்து சிறு தீயில் எரிக்க வேண்டும்.

 பால் ஆவியாகி வல்லாரையிலுள்ள விஷத்தன்மையை முறித்து கீழே தள்ளிவிடும். பின்னர் இலையை உலர்த்தி இடித்து பொடியாக்கி பயன்படுத்தவேண்டும்.

வல்லாரை கேப்சூல் ஆபத்து

வல்லாரையின் மொத்த செடியும் மருந்துதான். ஆனால் சிலர் வல்லாரையிலுள்ள அல்கலாய்டுகளை சிந்தெடிக் முறையில் பிரித்து கேப்சூல்களாக விற்கிறார்கள். இது தவறு. காரணம் இயற்கை எப்போதும் தன் படைப்புகளில் ஒரு சமநிலையை வைத்திருக்கிறது.

அதை பிரிப்பதால் நிச்சயம் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே கூடுமானவரை கேப்சூல்களை தவிர்த்து நேரடியாக தயாரிக்கப்பட்ட மாத்திரை அல்லது சமைத்து சாப்பிடலாம்.

நல்லாரை காண்பதும் நன்றே! வல்லாரை உண்பதும் நன்றே

அசைவ பிரியர்களே-வெளியே சாப்பிடும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிங்க...!



அடிக்கடி ஹோட்டலுக்குப் போய் சிக்கன், மட்டன் என்று அசைவ உணவுகளை விரும்பிச் சுவைப்பவரா நீங்கள்? இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்!

கடந்த வாரம், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலகத்துக்கு ஒரு போன் செய்தவர், ‘வெளி மாநிலத்தில் இருந்து பெட்டி பெட்டியாக ஆடு, மாடு இறைச்சிகளை, சென்னைக்குக் கொண்டு வர்றாங்க’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து இருக்கிறார்.

இந்த விஷயம் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படவே, உடனடியாக சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 5,000 கிலோ மாட்டு இறைச்சியும் சுமார் 3,500 கிலோ ஆட்டு இறைச்சியும் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர், ”எங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில்தான் நாங்கள் சோதனைக்குக் கிளம்பினோம்.

நாங்கள் சோதனை நடத்த ரயில்வே அதிகாரிகள் முதலில் அனுமதிக்கவே இல்லை. அதன்பிறகு, ரயில்வே துறை உயர்அதிகாரிகளிடம் பேசித்தான் அனுமதி வாங்கினோம். ஆந்திராவில் இருந்து வந்த நிறைய பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அதில் ஒரு பெட்டி யைப் பிரித்ததுமே துர்நாற்றம் குடலைப் பிடுங்கியது. அவ்வளவும் மாட்டுக்கறி. இன்னொரு பெட்டியில் இருந்த கறியைத் திறந்தபோது, ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. இவை எல்லாம் ஜெய்ப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

அங்கே இருந்து சென்னை வந்து சேர கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆகும் என்றால், அந்த மாட்டை எத்தனை நாட்களுக்கு முன் வெட்டி இருப்பார்கள்? அந்த இறைச்சியை சென்னையில் உள்ள ஹோட்டல்களுக்குதான் சப்ளை செய்திருக்கிறார்கள்.

எங்கள் சோதனை யைப் பார்த்ததும், இறைச்சியை டெலிவரி எடுக்க வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். கண்டிப்பாக இதை ஒரு தனிநபர் செய்திருக்க முடியாது. இதற்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருக்க வேண்டும்.

சென்னைக்கு வந்து இறங்கிய அத்தனை இறைச்சி பார்சல்களும் தகுதிச்சான்றிதழ் பெறாதவை. உணவுப் பொருட்களை அனுப்பும் பட்சத்தில், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில்வே சுகாதாரத்துறை அதிகாரிகளின் அனுமதிச் சான்றிதழ் கண்டிப்பாக வேண்டும்.

சான்றிதழ் இல்லாத பட்சத்தில், அங்கு இருக்கும் ரயில்வே அதிகாரிகளே அவற்றைப் பறிமுதல் செய்து இருக்க வேண்டும். ஆனால் ஏனோ அவர்கள் செய்யவில்லை.

அங்கு பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை, கொடுங்கையூர் மாநகராட்சி குப்பை கொட்டும் இடத்தில் குழிதோண்டி, பிளீச்சிங் பவுடர் போட்டு, பினாயில் ஊற்றிப் புதைத்தோம். சென்னைக்கு வந்த இறைச்சிப் பெட்டிகள் மீது, ‘உஸ்மான், சென்னை’ என்று மட்டும்தான் எழுதப்பட்டு இருக் கிறது.

யார் அந்த உஸ்மான் என்றும் தேடி வருகிறோம். ஒரு நாளைக்கு சுமார் 8,000 கிலோ இறைச்சி கொண்டு வருகிறார்கள் என்றால், அது ரோட்டோரக் கடைகளுக்கு மட்டும் போயிருக்க சாத்தியம் இல்லை.

நாங்கள் விசாரித்த வரையில் சென்னையில் உள்ள சில ஸ்டார் ஹோட்டல்களுக்கும் இந்த இறைச்சி சப்ளை செய்யப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரம், இந்த விவகாரத்தில் ஈடுபட்ட அத்தனை பேரையுமே பிடித்து விடுவோம்” என்று உறுதியுடன் சொன்னார்.

சிந்தாதரிப்பேட்டையில் இறைச்சிக் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் பேசினோம். ”எங்க கிட்ட ஆட்டுக் கறி வாங்கினா, ஒரு கிலோ 430 ரூபாய். வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரும் கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை 120 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

 இதைப் பெரும்பாலும் ஹோட் டல்காரங்கத்தான் வாங்கிட்டுப் போவாங்க. அந்த மாதிரி இறைச்சியை எங்காவது ஒரு குடோன்ல வெச்சுப் பிரிச்சு, நேரடியா சம்பந்தப்பட்டவங ்களுக்கு சப்ளை பண்ணிடுவாங்க” என்றார். தமிழ்நாடு ஹோட்டல் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீநிவாசனிடம் பேசினோம்.

”நானும் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ந்தேன். ரோட்டோரத்தில் கடை நடத்துபவர்களும், டாஸ்மாக் கடைகளுக்குப் பக்கத்தில் கடை வைத்து இருப்பவங்களும்தான் இது மாதிரியான கறியைப் பயன்படுத்த முடியும்.

பெரிய ஹோட்டல்களில் எல்லாம் ஃப்ரெஷ்ஷாக வெட்டப்படும் இறைச் சியை மட்டும்தான் பயன்படுத்துகிறோம்” என்றார்.

சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி யிடம் கேட்டபோது, ”சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனியும் இப்படி நடக்காமல் தடுக்கப்படும்” என்றார். வெளியே சாப்பிடும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கத்தான் வேண்டும்..

பெண்கள் பின்னல் போட்டால் முடி கொட்டாது..!



தினமும் தலையில் எண்ணெய் தடவி நன்றாக வாரி, நுனி வரை பின்னல் போட்டு ரிப்பன் கட்டிக் கொள்வதால் முடி ஒரே சீராக வளர ஆரம்பிக்கும். `முடி கொட்டிவிடுமோ’ என்று சரியாக வாராமல் விட்டால், முடி வலுவிழந்து வளர்ச்சி தடைபடும்.

 தலை முடியை எப்போதும் நுனி வரை வார வேண்டும். தலையில் வகிடு எடுக்காமல் இருந்தால் முன்புற வழுக்கை விழவும், முடி கொட்டவும் ஆரம்பிக்கும். வகிடு எடுத்து வாருவதால் முடியின் வளர்ச்சி தடைபடாது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தேவையற்ற டென்ஷன்களை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் எப்போதும் இயல்பாக இருப்பதும் முடி உதிர்வதைத் தடுக்க உதவும். மலைபோன்ற பிரச்சினையையும் மடு அளவாக கருதினாலே போதும். பாடல்களைக் கேட்பது, தியானப் பயிற்சி போன்றவையும் கை கொடுக்கும். தினம் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 குறிப்பாக, வெந்தயக்கீரை நல்லது. துவையலாகவோ அல்லது சாம்பார், ரசம் இவற்றில் சேர்த்தோ சாப்பிடலாம். இதே கீரையை ஒரு கப் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதைத் தலையில் தேய்த்துச் சீயக்காய்ப் போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகி, முடி வளர ஆரம்பிக்கும். அசிடிட்டி காரணமாக முடி கொட்டுவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் பருக்களும் வர ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சினைளை வெந்தயக்கீரையை சாப்பிடுவதன் மூலம் போக்க முடியும். ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முடி நன்றாக வளரத்துவங்கும்.

சிலருக்கு வெந்தயக்கீரை என்றாலே பிடிக்காது. அவர்கள், உருளைக்கிழங்குடன் சேர்த்துச் சாப்பிடலாம். டீன் – ஏஜில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் தலையில் அதிகமாக எண்ணெய் சுரந்து, அடிக்கடி வியர்த்து வழியும். இதனால் தலையில் பிசுக்கு ஏற்பட்டு முடி வளர்வது தடைபடும். வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக வெட்டிவேர் தண்ணீரை தலைக்கு விட்டுக் கொள்ளலாம். (முதல் நாள் இரவே ஒரு லிட்டர் தண்ணீரில் வெட்டிவேரை துண்டாக்கி போட்டு வைத்து, காலையில் பயன்படுத்தலாம்). தலையும் சுத்தமாகி, கூந்தலும் நறுமணம் வீசுவதோடு, வளர்ச்சியும் நன்றாக இருக்கும். `உடம்பைக் குறைக்கிறேன்’ என்று சிலர் சரிவர சாப்பிடாமல் இருப்பார்கள்.

அத்தகையோருக்கும் முடி கொத்துக் கொத்தாக உதிர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டு, அதை ஆம்லெட்டுக்கு தயாரிப்பது போல நன்றாக அடித்து, அதில் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து, சீயக்காயுடன் கலந்து தலையில் தேயுங்கள். 15 நிமிடம் கழித்துக் குளியுங்கள். முடி பளபளப்பாவதோடு, கொட்டிய இடத்தில் முடி நன்றாக வளரும். முடியை சுருள்சுருளாகச் (பெர்மிங்) செய்து கொள்வதில் சிலருக்கு ஈடுபாடு இருக்கும். இப்படிச் செய்யும் போது, முடியின் வேர்ப்பகுதியும் சேர்த்து சுருட்டப்படுவதால், மண்டைப் பகுதி பாதிக்கப்பட்டு அநியாயத்துக்கு முடி கொட்ட வாய்ப்பு இருக்கிறது. எனவே, முடியை சுருள் செய்வதை முடிந்த வரைத் தவிர்க்கலாம். தேவைப்பட்டால், கூந்தலின் பின்பகுதியில் மட்டும் செய்து கொள்ளுங்கள்

நெயில் பாலிஷ் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்னியவை...!



அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில் பெண்களைப் போன்று ஆண்கள் இல்லை. ஏனெனில் அவர்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பயன்படுத்தும் பொருட்களைப் பார்த்தால், ஆச்சரியம் தான் அடைவீர்கள். அத்தகைய அழகுப் பொருட்களில் பெண்கள் அதிகம் விரும்பும் ஒன்று தான் நெயில் பாலிஷ். இந்த நெயில் பாலிஷ் நிறைய வண்ணங்களில், வடிவங்களில் மற்றும் சைஸ்களில் கடைகளில் விற்கப்படுகின்றன. அதைப் பார்க்கும் போது பெண்களின் ஆசை அவர்களை வாங்காமல் விடாது.


அவ்வாறு கடைக்கு செல்லும் போதெல்லாம் ஆசைக்கு, அணியும் உடைக்கு மேட்சாக வாங்கும் நெயில் பாலிஷ் பாட்டில் சீக்கிரம் காய்ந்து போய்விட்டால், எப்படி இருக்கும். ஆகவே அந்த நிலைமையை தடுக்க, நெயில் பாலிஷை எப்படியெல்லாம் வைத்துக் கொண்டால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…

* சில பெண்கள் நெயில் பாலிஷ் பாட்டிலை ஃப்ரிட்ஜில் வைப்பார்கள். ஏனெனில் இதனால் நெயில் பாலிஷ் வீணாகாமல் இருக்கும். ஆனால் அதையே ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருந்தால், அவை பின் கடினமாகிவிடும். ஆகவே அதற்குள் அதனை அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.

* நெயில் பாலிஷை பாதுகாக்க சிறந்த வழியென்றால் அது, அவற்றை சூரியஒளி இல்லாமல், குளிர்ச்சியான இடத்தில் வைப்பது தான்.

* நெயில் பாலிஷ் பாட்டிலை எப்போதும் நன்கு மூடி நேராகவே வைக்க வேண்டும். இதனால் அவை வறட்சியடையாமல், அதில் உள்ள பெயிண்ட்டும் நீண்ட நாட்கள் வரும்.

* எப்போதும் நல்ல தரமான நெயில் பாலிஷையே வாங்க வேண்டும். விலைமலிவான நெயில் பாலிஷ் விரைவில் காய்ந்துவிடும். பின் அவற்றை போட்டாலும், அசிங்கமாக இருக்கும்.

* நெயில் பாலிஷ் போடும் போது, பாட்டிலின் முனையை மூடிக் கொண்டே போட வேண்டும். ஏனெனில் காற்று புகுந்துவிட்டால், அவை விரைவில் காய்ந்துவிடும்.

* நெயில் பாலிஷில் உள்ள பொருட்கள் பிரியாமல் இருக்க, சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை, பாட்டிலின் முனையில் தடவி, பின் நன்கு மூட வேண்டும். இதனால் காற்று புகாமல் இருக்கும். அதுமட்டுமின்றி பாட்டிலை திறக்கவும் எளிதாக இருக்கும்.

* ஒருவேளை நெயில் பாலிஷில் உள்ள எனாமல் வறட்சியடைந்துவிட்டால், அதனை தனியாக எடுத்து, சிறிது நெயில் பாலிஷ் தின்னரை ஊற்றினால் இவை இளகிவிடும். பின் என்ன, மறுமுறை புதிதான நெயில் பாலிஷ் போன்றே பயன்படுத்தலாம். மேலும் அவை நீண்ட நாட்கள் இருக்கும்.

* சில நேரங்களில் நெயில் பாலிஷ் பாட்டிலின் முனைகளில் காய்ந்திருக்கும். இதனால் அதனை திறப்பது கடினமாக இருக்கும். அப்போது ஒரு கப் நெயில் பாலிஷ் ரிமூவரை எடுத்துக் கொண்டு, அதில் இந்த பாட்டிலை சிறிது நேரம் வைத்து, பின் திறந்தால், எளிதில் திறந்துவிடலாம்.

மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு, நெயில் பாலிஷ் பாட்டிலை பயன்படுத்துங்கள். முக்கியமாக நெயில் பாலிஷ் போடும் முன், அதனை கடுமையான முறையில் குலுக்கினால், அவற்றில் முட்டைகள் ஏற்பட்டுவிடும். பின்பு அவற்றை வைக்கும் போது, நகத்தின் அழகிய தோற்றம் பாதிப்படையும். ஆகவே குலுக்கியப் பின் 15-20 நிமிடம் கழித்து, பின் வைக்க வேண்டும்.

'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!



பிறந்த குழந்தையால் தனக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் பற்றி சொல்ல முடியாது.

அதனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை பெற்றோர்களால் எளிதில் கண்டு பிடிக்கவே முடியாது. ஆனால் குழந்தைக்கு இருக்கும் பிரச்சனையை குழந்தை மலம் கழிப்பது வைத்து கண்டறியலாம்.

 இது சற்று நகைச்சுவையாக இருந்தாலும், இது தான் உண்மை.

 ஏனெனில் குழந்தைக்கு உள்ள பிரச்சனையை குழந்தையின் மலத்தைக் கொண்டு கண்டறியலாம்.

அதே சமயம், மலத்தில் ஏற்படும் சிறு மாற்றங்கள் குழந்தை சாதாரணமாகத் தான் உள்ளது என்றும் வெளிப்படுத்தும்.

 என்ன புரியவில்லையா?

பொதுவாக குழந்தை வளர வளர, அவர்களின் குடலியக்கமும் மாறுபடும். அப்போது குடலியக்கத்தின் மாறுபாட்டினால் ஒருசில வித்தியாசமான சில மாற்றங்களும் ஏற்படும்.

அப்படி ஏற்படும் மாற்றத்தில் ஒன்று தான் மலத்தின் நிறம் மற்றும் அமைப்பு.

இங்கு குழந்தை மலம் கழிப்பது பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை புதிதாக பெற்றோர் ஆனவர்கள் படித்தால், அவர்களின் மனதில் உள்ள கேள்விக்கான விடை கிடைக்கும். சரி, இப்போது

 அவற்றைப் பார்ப்போமா!!!

குழந்தை பிறந்தது முதல் 2 வாரத்திற்கு எந்த மாதிரி மலம் வெளியேறினாலும், அது குழந்தையின் ஆரோக்கியத்தை தான் குறிக்கும். ஒருவேளை குழந்தை மலம் வராமல் இருந்தாலோ அல்லது அவர்களது டயபரில் இரத்தம் இருந்தாலோ, பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம்.

குழந்தைக்கு முதலில் வெளிவரும் மலமானது பச்சை நிறத்தில் தான் வெளிவரும். மேலும் அந்த மலமானது ஓரளவு நீர்மத்துடன் அடர் பச்சை நிறத்தில் இருக்கும். அதுவும் இரண்டு வாரத்திற்கு இருக்கும்.

குழந்தை பிறந்து 2-3 வராத்திற்கு, பச்சை நிற மலமானது மஞ்சள் நிறத்தில் மாறும். இந்த மஞ்சள் நிற மலமானது குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்கும் வரையில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல், சாதாரணமாகத் தான் இருக்கும்.

குழந்தை பிறந்த பின்னர், குழந்தையின் பெருங்குடலானது உருவாகும் வரையில், குழந்தைகளுக்கு இடைக்கால வயிற்றுப்போக்கு ஏற்படும். அதிலும் ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுத்தப் பின்னரும், கொடுக்கும் போதும் மலம் கழிப்பார்கள்.

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை, அவர்களின் மலமானது மென்மையாக இருக்கும். அதுவே ஃபார்முலா உணவுகள் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் மலமானது சற்று கடினமாக இருக்கும்.

பொதுவாக சில குழந்தைகள் பிறந்து சில நாட்களுக்கு மலம் கழிக்காமல் இருப்பார்கள். அதிலும் இந்த நிலையானது தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தான். ஒருவேளை குழந்தையின் உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிட்டால், பின் குழந்தைகள் லேசாக மலம் கழிக்க ஆரம்பிப்பார்கள்.

ஒருவேளை குழந்தை நீர்ம நிலையிலோ, பிசுபிசுப்பாகவோ மலத்தை கழித்தால், குழந்தைக்கு வயிற்றில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். அப்போது மருத்துவரை அணுக வேண்டும்

குழந்தை 2 நாட்களுக்கு தொடர்ந்து, அதிலும் பிறந்து 4 மாதம் ஆனப் பின்னர் மலம் கழிக்காமல் இருந்தால், குழந்தைக்கு மலச்சிக்கல் என்று அர்த்தம்.

குழந்தைக்கு பச்சை நிறத்தில் மலம் வெளிவந்தால், குழந்தைக்கு கபம் உள்ளது என்று அர்த்தம். மேலும் குழந்தைகளால் அதனை தும்மி வெளியேற்ற முடியாது, மாறாக மலத்தின் மூலம் வெளியேற்றுவார்கள்.

உங்கள் குழந்தை மலம் கழிக்கும் போது, அதிகம் வாயுவை வெளியேற்றினால், தாய்ப்பால் கொடுக்கும் நிலை சரியில்லை என்று அர்த்தம். ஏனெனில் தவறான நிலையில் தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தைகள் பால் குடிக்கும் போது காற்றினை அதிகம் விழுங்கிவிடுகின்றனர். எனவே அப்போது தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தாய்மார்கள் மாற்ற வேண்டும்.

குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கும் போது, குழந்தையின் மலமானது கருப்பு நிறத்தில் வெளிவரும். மேலும் இந்த கருப்பு நிற மலமானது ஒன்று உணவின் காரணமாகவும் வெளிவரலாம் அல்லது மலச்சிக்கல் என்றாலும் வெளிவரும். எனவே அப்படி குழந்தைகளுக்கு அதிகமாக கருப்பு நிறத்தில் மலம் வெளிவந்தால், உடனே பரிசோனை செய்வது நல்லது.

பொதுவாக குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது, அவர்களது மலத்தின் வாசனையானது சற்று இனிமையாக இருக்கும். அதுவே ஃபார்முலா உணவுகள் கொடுக்க ஆரம்பித்தால், அவர்களின் மலமானது துர்நாற்றம் வீசும்.

தாடி, மீசை வளருவதால் அதோடே வளம் வரும் இளம் பெண்...!



இங்கிலாந்து நாட்டில் வாழும் 23 வயது பெண் ஒருவருக்கு முகம், மார்பு , மற்றும் பல பகுதிகளில் ஆண்கள் போல முடி முளைத்துள்ளதால் அவருடைய உண்மையான அடையாளமே மாறிவிட்டது.

இதனால் ஆணாகவும் மாறமுடியாமல், பெண்ணாகவும் வாழ முடியாமல் தவித்து வருகிறார் அந்தப் பெண். பெர்க்ஷையர் நகரில் வசித்து வருபவர் கர்னாம் கவுர். 23 வயதான இந்தப் பெண்ணுக்கு பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற நோய் அவருடைய 11 வயதில் தாக்கி முகத்தில் முடி முளைக்க தொடங்கிவிட்டது.

அதனால் இவர் பள்ளியில் சக மாணவ மாணவிகளின் கேலிக்கு ஆளானார். இதனால் பள்ளிக்கு செல்வதையே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே படிக்க தொடங்கினார்.

இவருடைய முகம் மட்டுமின்றி கை, கால், மார்பு போன்ற உடலின் அனைத்து பகுதிகளிலும் முடி முளைத்ததால் பெரும் அவதிக்குள்ளானார்.

அட போங்கப்பா... வாரத்திற்கு இருமுறை ஷேவிங் செய்து முடிகளை அகற்றுவதிலேயே இவருக்கு பெரும் வேலையாக இருந்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் இவர் ஷேவிங் செய்வதை நிறுத்திவிட்டார். தாடி, மீசையோடு கடவுள் நமக்கு அளித்த வரம் இது. இதை எதற்காக எதிர்த்து போராட வேண்டும் என முடிவு செய்து சீக்கியர்கள் போல முடியை முழுவதும் வளர்க்க தொடங்கிவிட்டார்.

தற்போது இவருக்கு பெரிய தாடி, மீசை ஆகியவை உள்ளது. இவருடைய பெற்றோர்களும், சகோதரரும் இவருடைய முடிவிற்கு ஆதரவு அளித்தனர்.

 பாய் ப்ரண்ட் இல்லையே... ஆனால் இவருக்கு இதுவரை ஒரு பாய்பிரண்ட் கூட கிடைக்கவில்லை என்பதுதான் இவருடைய ஒரே ஏக்கமாம்.

 நானும் சராசரி பெண்தான்... சக பெண்களை போலவே தனக்கு செக்ஸ் ஆசை இருப்பதாகவும், ஆனால் என்னை பார்க்கும் ஆண்கள் எல்லோரும் என்னைவிட்டு ஒதுங்கியே போகிறார்கள் என்றும் கவலையுடன் கூறுகிறார்.

பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி...!



ஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்?' என்பதுதான்.

கத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..

தத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன். இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.

கடைசியில் ஒருவன் கேட்டான்.
'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா?'.
'இல்லை'என்றனர் தேர்வுக் குழுவினர்.

'நான் விழுந்தது..பகலிலா..அல்லது இரவிலா'
'ஏதற்குக் கேட்கிறாய்?'-தேர்வுக்குழுவினர்.

இவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை.. அஜாக்கிரதையானவனும் அல்ல. அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை. அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'

அவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.
அவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.

ஒரு மனிதனின் வெற்றி அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை.ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.

நம்மை உயர்த்தும் ஏமாற்றங்கள்..!



நுழைவுத் தேர்வில் தோல்வியுற்றவர் ஆர்பர்ட் எயின்ஸ்டின்!

தன் முதல் ஊடகத் துறை வேலையிலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர் வால்ட் டிஸ்னி!!

பள்ளியில் கூடைப்பந்தாட்டக் குழுவிலிருந்து ஒதுக்கப்பட்டவர் மைக்கேல் ஜார்டன்!!!

எதற்காக இந்தப் பட்டியல் என்று யோசிக்கிறீர்களா? ஏமாற்றங்களை அனுமதித்தால் வாழ்வில் ஏற்றம் நிச்சயம் என்று உணர்த்திக் காட்டிய சாதனையாளர்களின் வெற்றிப் பட்டியல் இது. கடற்கரை மணலின் உறுத்தலை உள் வாங்குகிற “சிப்பி”கள்தான் விலைமதிக்க முடியாத முத்துக்களைத் தருகின்றன. அது போலவே கவலைகளின் உறுத்தல்களை அனுமதிக்கிற மனிதர்கள் அதை சாதகமாகக் கொண்டு சரித்திரம் படைக்கிறார்கள்.

மேலை நாட்டின் புகழ் பெற்ற நாளிதழ் எழுத்தாளர் “ஏன் லாண்டர்ஸ்” சொல்கிறார், “உங்கள் வாழ்வின் மிக முக்கியமான பகுதியாக வருத்தங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்பார்த்து காத்திருங்கள். ஏமாற்றங்களை சந்திக்கிற அந்தநொடி உங்கள் துயரங்கள் உயர்வதற்குள் உங்கள் ஆளுமையை வளர்த்துக்கொண்டு, ‘துயரமே..!!! உன்னைக் காட்டிலும் நான் பெரியவன். உன்னால் என்னை வீழ்த்த முடியாது’ என்று உரக்கச் சொல்லுவீர் களேயானால் நீங்கள்தான் வெற்றியாளர்” என்று.

அமெரிக்காவின் மனநல நிபுணர் திரு. ஜேம்ஸ் பென்னி பெக்கர் சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையில், நம் மனதை அழுத்துகிற துயரங்களையும் நம் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படுகிற மனச்சுமையையும் சரியான முறைகளில் அணுகினால் அவையே நம் உத்வேகத்தை அதிகரித்து நம்மை மாபெரும் உயரத்திற்குக் கொண்டு சேர்க்கும் என்கிறார்.

 ஓர் அழகான ஓவியத்தை நம் கண்களின் மிக நெருக்கமாக வைத்துப் பார்த்தால் அதில் மிஞ்சப்போவது வெறும் புள்ளிகளும் கோடுகளும் மட்டும்தான். சற்று தொலைவில் வைத்துப் பார்க்கிறபோது அது நம்மை அதிசயிக்க வைக்கிற வண்ணமயமான ஓவியமாகத் தெரியும். அதுபோலத்தான் வாழ்வின் பிரச்சனைகளை சற்று தொலைவில் வைத்துப் பார்க்கிறபோதுதான் வெற்றிகள் நம்மை நெருங்குகின்றன.

ஒவ்வோர் ஏமாற்றமும் ஏதோவொரு மாற்றத்திற்கான துவக்கமாகவே இருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்துவதில் புகழ் பெற்ற ஓப்ரா, ” வாழ்வில் தோல்விகளை சந்திக்கிற போது, இது சரியான பாதை அல்ல என்று இறைவன் என்னை வழிநடத்துவதாகவே உணர்கிறேன். பல தவறான வழிகளில் பயணப்பட்ட அனுபவத்தில் இன்று சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறேன். இந்த கற்றலே என்னை எண்ணற்ற சாதனைகளைச் செய்ய வைத்தது” என்கிறார். ஓப்ராவுக்கு மட்டுமல்ல.

 நம் ஒவ்வொருவருக்குமே வெற்றியின் ரகசியமே ஒரு சதவீத திறமையும், 99 சதவீத கடின உழைப்பும்தான். உதாரணமாக, உலகிலேயே மிக சீக்கிரமாக வளரக்கூடிய மரங்களில் ஒன்று மூங்கில். ஆனால் அவை மண்ணில் விதைக்கப் பட்ட நாள் முதல் சோம்பலின் அடையாளமாகவே நம் கண்களுக்குத் தெரிகிறது. கிளைகள் இல்லாத மரங்களாகவே இவை வளர்கின்றன. ஆனால் மண்ணில் வேர் ஊன்றிய நாள் முதல், 24 மணி நேரத்திற்குள் 48 அடி நீளம் வளர்ந்து விடுகிறது.

சிறிது தாமதமாக துவங்கினாலும் அடித்தளம் வலுவாக இருப்பதன் உறுதியில், உலகில் வேகமாக வளரும் மரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தன் வெற்றியில் அம்மரத்திற்கு இருக்கிற தெளிவு மனிதர்களில் பலருக்கு இருப்பதில்லை. தான் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறோமோ, அந்தத் துறையின் அடிப்படைகளை தெரிந்துகொண்டு நம் வெற்றி இலக்கை தெளிவுடன் நிச்சயித்து செயல்பட்டால் உலகில் மிக வேகமாக வளர்கிற சாதனையாளர் பட்டியலில் உங்கள் பெயரும் சீக்கிரம் இடம் பெறும்.

ஃபேஸ்புக் சந்தித்த பத்து திருப்புமுனைகள்..!



அண்மையில், பிப்ரவரி 4ல், சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் காண்போம்.

1. ஓர் எளிய தொடக்கம்: 2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், பேஸ்புக் தளத்திற்கான விதை ஊன்றப்பட்டது. பின்னா ளில், உலகின் அனைத்து மூலைகளிலும், ஆலவிருட்சமாக வளர்ந்து, டிஜிட்டல் உலகில் முதல் இடத்தில் இயங்கும் இந்த நிறுவனம், அப்போது ஒரு சிறிய விடுதியின் ஒதுக்குப் புறமான அறையில் தொடங்கப்பட்டது.
பத்தாண்டுகளுக்கு முன்பு அதனை "Thefacebook” என இதனைத் தொடங்கிய மார்க் ஸக்கர் பெர்க் பெயரிட்டார். 2003 ஆம் ஆண்டு அக்டோபரில், ஸக்கர்பெர்க் மற்றும் அவரது வகுப்புத் தோழர்களான ஆண்ட்ரூ மெக்கலம், கிறிஸ் ஹ்யூஸ் மற்றும் டஸ்டின் மொஸ்கோ விட்ஸ் ஆகியோர் Facemash.com என்னும் இணைய தளம் ஒன்றை உருவாக்கி, அதனை யாவரும் அணுகி, இரண்டு மாணவர்களின் படத்தில் எது சிறந்தது என்று ஒப்பிடும் வசதியைத் தந்தனர். இதனை விளம்பரப்படுத்தி பிரபலமாக்குவதற்காக, அப்போது ஹார்வேர்ட் பல்கலைக் கழகம் மாணவர்களுக்கென நடத்தி வந்த இணைய தளங்களை ஸக்கர் பெர்க் முடக்கினார் என்று ஒரு செய்தி அப்போது வெளியானது.
தொடக்கத்தில் Facemash என அழைக்கப்பட்ட பேஸ்புக் தளத்தினை, ஹார்வேர்ட் பல்கலை நிர்வாகம் மூடியது. காப்புரிமை, பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம் ஆகியவற்றில் அந்த தளம் தலையிடுவதாக, பல்கலைக் கழக அதிகாரிகள் ஸக்கர்பெர்க் மீது நடவடிக்கை எடுத்தனர். இதன் பின்னரே, ஸக்கர்பெர்க் "thefacebook.” என்னும் புதிய தளத்தினை அமைத்தார்.

2. பிறந்தது பேஸ்புக்: 2004 பிப்ரவரி 4 ஆம் நாள், ஸக்கர்பெர்க் thefacebook.com என்னும் தன் தளத்தினை இயக்கத் தொடங்கினார். தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில், 1,500 பயனாளர்கள் இதில் இணைந்தனர். ஹார்வேர்ட் பல்கலையில் பட்ட வகுப்பு மாணவர்களில் பாதிப்பேர் இதில் இணைந்தனர். பின்னர், இந்த தளத் தினை மற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப் பட்டனர்.

3. படங்களின் பதிவுகள் தொடங்கின: தொடக்கத்தில் பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்கள் அனுமதிக்கப்படவில்லை. அக்டோபர் 2005ல், ஒவ்வொரு பயனாளரும் எவ்வளவு போட்டோக்கள் மற்றும் படங்களை அப்லோட் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்று அனுமதி தரப்பட்டது. இன்று பேஸ்புக் இணைய தளத்தில் போட்டோக்களே முக்கிய அம்சங்களாக உள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2013 செப்டம்பரில், இத்தளத்தில் பதியப்பட்ட படங்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் கோடியைத் தாண்டி யதாக அறிவிக்கப்பட்டது. நாள் தோறும் 35 கோடி படங்கள் அப்லோட் செய்யப்படுகின்றன.

4. அனைவருக்கும் அனுமதி: கல்லூரிகள், பள்ளிகள் என்ற எல்லை வரையறையைத் தாண்டி, பேஸ்புக் இணைய தளத்தில் பல பிரிவினரும் இணைய, இந்த தளம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. 2006, செப்டம்பர் 26ல், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இணைந்து பதிந்து கொள்ளலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டது. இதனால், 2006 ஆண்டு இறுதியில், பயனாளர் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம் என்ற எண்ணிக்கையை எட்டியது. அதற்கு முந்தைய ஆண்டில், இது 55 லட்சமாக மட்டுமே இருந்தது.

5. என் குறிக்கோள் பணம் அல்ல: 2006 செப்டம்பரில், யாஹூ நிறுவனம் நூறு கோடி டாலர் கொடுத்து, பேஸ்புக் இணைய தளத்தினை வாங்க முன்வந்தது. பேஸ்புக் இணைய தள நிறுவனத்தில் முதன் முதலில் முதலீடு செய்த பீட்டர் என்பவர், இதனை ஏற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினார். ஆனால், இதற்கென கூட்டப்பட்ட கூட்டத்தில், 22 வயது இளைஞரான ஸக்கர்பெர்க், "இந்த கூட்டம் 10 நிமிடத்தில் முடியப்போகிறது. நாங்கள் எங்கள் இணையதளத்தை விற்கப் போவதில்லை” என அறிவித்தார். ஏனென் றால், பணம் சம்பாதிப்பதை தன் இலக்காக என்றைக்குமே ஸக்கர்பெர்க் கொண்டதில்லை. "இந்தப் பணத்தை வைத்து நான் என்ன செய்திட முடியும்? வேண்டுமானால், இன்னொரு சமூக தளத்தைத் தொடங்கலாம். அதற்கு இதனையே வளப்படுத்துவேன்” என்றார்.

6. செய்தித் தொகுப்பு: பேஸ்புக் இணையதளத்தின் முதல் 30 மாதங்கள், பயனாளர்களின் தகவல் பக்கங்களைப் பதிந்து இயக்குவதிலேயே இருந்தன. செப்டம்பர் 2006ல், முதல் முதலாக, பேஸ்புக் தளத்தில் செய்திகள் தரப்பட்டன. உங்கள் சமூக வளைவில் என்ன நடக்கின்றன என்று தகவல்களைத் தருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதனால், தொடர்ந்து ஒரு நிகழ்வு சார்ந்து கிடைக்கும் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதனுடன் பேஸ்புக் MiniFeed என்ற வசதியையும் கொடுத்தது. இதில் பயனாளர் ஒருவரின் சமூக செயல்பாடுகள் தொகுக்கப்பட்டன.

7.புரோகிராமர்களுக்கு அனுமதி: 2007 ஆம் ஆண்டு மே 24 அன்று, பேஸ்புக் தன்னுடைய Facebook Platform என்னும் மேடையை மக்களுக்கு வழங்கியது. இது, பேஸ்புக் தளத்தில் இயங்கக் கூடிய புரோகிராம் களை மற்றவர்கள் தயாரித்து வழங்குவதற்கான மேடையாக அமைந்தது. தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களுக்கு உதவி புரிய Facebook Markup Language என்னும் வசதியையும் இதனோடு அளித்தது. பல முக்கிய அப்ளி கேஷன்கள் பேஸ்புக் தள செயல்பாட்டில் இணைந்தன.

8. லாபம் ஈட்டியது: நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் கழித்து, பேஸ்புக் நிறுவனம் நல்ல லாபத்துடன் இயங்குவதாக அறிவிக்கப்பட்டது. 2009ல், இந்நிறுவனம் பெற்ற வருமானம் 77.7 கோடி டாலர். இது 2008ல் பெற்றதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. (சென்ற வாரம், பேஸ்புக் தன் நான்காவது காலாண்டில் மட்டும் 206 கோடி டாலர் விற்பனை மேற்கொண்டதாக அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 63% கூடுதலாகும்.)

9. பங்கு வெளியீடு: 2012 ஆம் ஆண்டு மே மாதம், தன் பொதுப் பங்கு வெளியீட்டினை பேஸ்புக் மேற்கொண்டது. இதன் மூலம் 1,600 கோடி டாலர் திரட்டியது. அமெரிக்க சரித்திரத்தில், இது மூன்றாவது பெரிய பங்கு வெளியீடாக அமைந்தது.

10. நூறு கோடி பேர்: சென்ற 2012 ஆம் ஆண்டு, அக்டோபர் 4ல், பேஸ்புக் இணையதளத்தில் ஒரு மாதத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, நூறு கோடி யைத் தாண்டியதாக, ஸக்கர்பெர்க் அறிவித்தார். ஏறத்தாழ, இந்தப் புவியில் வாழும் ஏழு பேரில் ஒருவர், பேஸ்புக் பயனாளராக உள்ளனர். நூறு கோடிப் பேரை, ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள வைத்து, நட்பு ரீதியாக இணைப்பது என்பது மிகப் பெரிய பணி என அடக்கத்துடன் ஸக்கர்பெர்க் கூறினார். என் வாழ்வில் இதுதான் நான் அதிகம் பெருமைப்படும் விஷயம் என்றும் அறிவித்தார்.

தனியே யாரும் செல்லாத பாதை..! - எச்சரிக்கை



வித்தியாசமான பாதைகள் பலவற்றை நாம் கண்டுள்ளோம், ஆனால் கொடைக்கானலில்  மிக பிரசித்தி பெற்ற பாதையொன்று உள்ளது.

அந்த பாதையானது ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் ஒவ்வொரு பெரிய வளைவுகளுடன் அமைந்துள்ளது. சுமார் 10 கிலோமீட்டர்களை கொண்ட இந்த பாதையில் பைனஸ் மரங்கள் சூழவுள்ளன. இந்த பாதையில் சிறிய நீர்வீழ்ச்சிகளும் எமக்கு பார்க்க கூடியதாய் இருக்கும். இருப்பினும் இந்த பாதை ஆள்நடமாட்டமில்லாமலேயே இருக்கும்.

எனினும், இந்த பாதையில் காலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை மட்டுமே பயணிக்க முடியும். அதன் பிறகு பயணிப்பவர்களின் உயிரிற்கு உத்தரவாதமில்லை என தான் கூறவேண்டும்.

எனெனில், குறித்த பாதையில் கொலை மற்றும் கொள்ளை ஆகியன இடம்பெறும் ஒரு பகுதி! அதை தவிர மிருகங்களில் இராஜ்ஜியம் அந்த பாதை.

இந்த பாதையை கடந்த சென்றால் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரக்கறி தோட்டங்கள் அமைந்துள்ளன.

இவ்வாறு குறித்த பிரதேசத்தில் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் யாரும் அந்த பாதையில் இரவு வேளையில் செல்ல சற்று தயங்குவார்கள். ஏன் பகலிலும் கூட.

இப்படி, இருக்கும் போது ஒரு நாள் இரவு 10 மணி. ஒருவர் அந்த பாதையில் வேன்னொன்றில் இருவர் மாத்திரம் வந்துள்ளனர்.

எனினும், வாகன சாரதிக்கு இந்த பாதையில் நடக்கும் சம்பவங்கள் பற்றி ஒன்றும் தெரியாது, இருப்பினும், மற்றையவர் அதைபற்றி அறிந்திருந்தார்.

சரியாக 7 கிலோமீற்றர் கடந்த வந்துவிட்டனர். தீடீரென அவர்கள் பயணித்த வேன் யாராவது தள்ளுவது போல் தள்ளுப்பட்டு இயந்திரம் நின்றுவிட்டது.

சாரதிக்கு ஒரே தடுமாற்றம். என்ன இப்படி என. மீண்டும் வாகனத்தை ஸ்டாட் செய்ய வாகனம் ஸ்டாட் ஆகவில்லை.

சரி இறங்கி பார்ப்போம் என அந்த சாரதி கூற, பக்கத்தில் இருந்தவருக்கு இந்த பாதையை பற்றிய அனுபவமுண்டு அல்லவா. வேண்டாம் சற்று இருப்போம் என கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து இருவரும் அந்த வேனிலேயே சுமார் 10 நிமிடங்கள் இருந்து பின்னர் வேனை ஸ்டாட் செய்துள்ளனர்.

அப்போது உடனடியாக ஸ்டாட் ஆகியுள்ளதாம். இவர்கள் வந்து விட்டார்கள்.

சற்று தொலைவில் வந்த சாரதி அருகில் அமர்ந்திருந்தவரிடம் ஏன் அந்த இடத்தில் வேன் நின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அவர், நேற்றைய தினம் அந்த இடத்தில் ஒரு பெண்ணை கொலை செய்து விட்டு அந்த இடத்தில் தான் போட்டு விட்டுச் சென்றிருந்தனர்.
அதுதான் அந்த இடத்தில் வேன் நின்றது என அவர் கூறியுள்ளார்.

இனிமேல் தனியாக இந்த பாதையில் பயணிக்க வேண்டாம் எனவும் சாரதியிடம் அருகிலுள்ளவர் கூறியுள்ளார்.

தர்பூசணி - இது வெயில் காலத்திற்கு ஏற்ற பழம்...!



தர்பூசணி பழம் மனிதனுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமல்லாமல் நல்ல ஊட்டச்சத்துகளையும் அளிக்கிறது.

தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும் இரத்த அழுத்தத்தையும் சரி செய்ய முடியும்.

கட்டி, ஆஸ்துமா பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய், மற்றும் கீல்வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.

தர்பூசணியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் ஃபைபர் ஆகியவை உள்ளது.

இது வெயில் காலத்திற்கு ஏற்ற பழம். இதை பழமாக வாங்கியும் அல்லது பழச்சாறாகவும் சாப்பிடலாம். 100 கிராம் தர்பூசணியில், 90% தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போஹைட்ரேட் 7% உள்ளது.

இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆண்டியாக்ஸிடண்ட் லிகோபீனின் போன்ற நோய்களுடன் போராடி வெற்றி பெறும் தன்மை கொண்டது.

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும்.

தர்பூசணியில் வைட்டமின் ஏ வைட்டமின் சி சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. உடலிற்கு தேவையாக இன்சூலினையும் மேம்படுத்தும்.

மேலும், தர்பூசணி சதை மற்றும் விதையும் பலன் தரகூடியது. தர்பூசணி விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது.

நடிகை '' சில்க் ஸ்மிதா ''...!



‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில், ‘சிலுக்கு’ என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தென்னிந்திய திரையுலகின் ‘கனவு கன்னியாக’ திகழ்ந்தார். ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 17 வருடங்கள் இந்திய சினிமாத் துறையில் முத்திரைப் பதித்த அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா பயணத்தை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 02, 1960

பிறப்பிடம்: ஏலூரு, ஆந்திரபிரதேசம் மாநிலம், இந்தியா

பணி: திரைப்பட நடிகை

இறப்பு: செப்டம்பர் 23, 1996

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘விஜயலட்சுமி’ என்ற இயற்பெயர்கொண்ட அவர், 1960  ஆம் ஆண்டு டிசம்பர் 02  தேதி இந்தியாவின் ஆந்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள “ஏலூரு” என்ற இடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய பள்ளிப்படிப்பை வறுமையின் காரணமாக நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய தொல்லைக்கு ஆளானார். இதனால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். பிறகு குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், அங்கு உறவினர் வீட்டில் தங்கி வேலைத்தேடினார்.

திரைப்பட வாழ்க்கை

திரைப்படத் துறையில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ‘விஜயலட்சுமி’, தமிழ் திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற தமிழ் திரைப்படத்தில் சிலுக்கு என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அவர், தமிழ் திரைப்படத்துறையில் புகழையும் தேடிக்கொண்டார். அன்று வரை ‘விஜயலட்சுமி’ எனப்பட்ட இவர், இத்திரைப்படத்திற்கு பிறகு, ‘சில்க் ஸ்மிதா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பிறகு 1979 ஆம் ஆண்டு “இணையே தேடி” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்பட உலகில் அறிமுகமானார். தன்னுடைய முதல் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக இறுதிவரை அவருக்கு ஒரே மாதிரியான காதாபாத்திரங்கள் மட்டுமே தேடிவந்தது. கவர்ச்சியானத் தோற்றத்தாலும், நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்த அவர், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிப்படங்களில் நடித்து, தென்னிந்தியத் திரைப்பட உலகின் ‘கனவுக்கன்னியாக’ வலம்வந்தார்.

வெற்றிப் பயணம்

‘மூன்று முகம்’, ‘அமரன்’, ‘சகலகலா வல்லவன்’, போன்ற திரைப்படங்களில் இவருடைய வசீகரமான தோற்றத்தினாலும், கவர்ச்சிகரமான நடனத்தினாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் கவர்ச்சிப்புயலாக வலம்வந்தார். இவர் நடிப்பில் பல கதாபத்திரத்தினை ஏற்று நடித்திருந்தாலும், நாளிதழ்களும், திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தின. இருப்பினும், ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தாலாட்டு கேட்குதம்மா’, ‘மூன்றாம் பிறை’, ‘லயனம்’ போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்குக் கவர்ச்சி மட்டுமின்றி, அனைத்து விதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என்பதனை நிரூபித்தார்.

அவரின் சில குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்

‘வண்டிச்சக்கரம்’ (தமிழ் 1979), ‘இணையே தேடி’ (மலையாளம் 1979), ‘அலைகள் ஓய்வதில்லை’ (தமிழ் 1981),  ‘சீதகொக சிலுக’ (தெலுங்கு 1981), ‘எமகின்கருது’ (தெலுங்கு 1982), ‘மூன்றாம் பிறை’ (தமிழ் 1982), ‘சகலகலா வல்லவன்’ (தமிழ் 1982), ‘பட்டணத்து ராஜாக்கள்’ (தமிழ் 1982), ‘தீர்ப்பு’ (தமிழ் 1982), ‘தனிக்காட்டு ராஜா’ (தமிழ் 1982), ‘ரங்கா’ (தமிழ் 1982), ‘சிவந்த கண்கள்’ (தமிழ் 1982), ‘பார்வையின் மறுபக்கம்’ (தமிழ் 1982), ‘மூன்று முகம்’ (தமிழ் 1983), ‘பாயும் புலி’ (தமிழ் 1983), ‘துடிக்கும் கரங்கள்’ (தமிழ் 1983), ‘சத்யா’ (தமிழ் 1983), ‘தாய்வீடு’ (தமிழ் 1983), ‘பிரதிக்னா’ (மலையாளம் 1983), ‘தங்கமகன்’ (தமிழ் 1983), ‘கைதி’ (தெலுங்கு 1983), ‘ஜீத் ஹமாரி’ (இந்தி 1983), ‘ஜானி தோஸ்த்’ (இந்தி 1983), ‘ஆட்டக்கலசம்’ (மலையாளம் 1983), ‘ஈட்டப்புளி’ (மலையாளம் 1983), ‘சில்க் சில்க் சில்க்’ (தமிழ் 1983), ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ (தமிழ் 1983), ‘குடசாரி நம்பர் ஒன்’ (தெலுங்கு 1983), ‘ரோஷகாடு’ (தெலுங்கு 1983), ‘சேலஞ்ச்’ (தெலுங்கு 1984), ‘ருஸ்தும்’ (தெலுங்கு 1984), ‘நீங்கள் கேட்டவை’ (தமிழ் 1984), ‘வாழ்க்கை’ (தமிழ் 1984), ‘பிரசண்ட குள்ள’ (கன்னடம் 1984), ‘ஓட்டயம்’ (மலையாளம் 1985), ‘ரிவேஞ்ச்’ (மலையாளம் 1985), ‘சட்டம்தோ போராட்டம்’ (தெலுங்கு 1985), ‘லயனம்’ (மலையாளம் 1989), ‘அதர்வம்’ (மலையாளம் 1989), ‘பிக் பாக்கெட்’ (தமிழ் 1989), ‘அவசர போலிஸ்’ 100 (தமிழ் 1990), ‘சண்டே 7PM’ (மலையாளம் 1990),  ‘ஆதித்யா 369’ (தெலுங்கு 1991), ‘தாலாட்டு கேட்குதம்மா’ (தமிழ் 1991), ‘இதயம்’ (தமிழ் 1991), ‘நாடோடி’ (மலையாளம் 1992), ‘ஹள்ளி மேஷ்ற்று’ (கன்னடம் 1992), ‘அந்தம்’ (தெலுங்கு 1992), ‘சபாஷ் பாபு’ (தமிழ் 1993), ‘மாஃபியா’ (மலையாளம் 1993), ‘உள்ளே வெளியே’ (தமிழ் 1993), ‘அளிமைய’ (கன்னடம் 1993), ‘முட மேஸ்திரி’ (தெலுங்கு 1993), ‘ஒரு வசந்த கீதம்’ (தமிழ் 1994), ‘விஜய்பாத்’ (இந்தி 1994), ‘மரோ கூட் இந்தியா’ (இந்தி 1994), ‘ஸ்படிகம்’ (மலையாளம் 1995), ‘தும்போலி கடப்புரம்’ (மலையாளம் 1995), ‘லக்கி மேன்’ (தமிழ் 1996), ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ (தமிழ் 1996).

இறப்பு

சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி என மேலும் பல சூழ்நிலைகள் இவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

இவருடைய மறைவிற்குப் பிறகு “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, மிலன் லூத்ரியா இயக்கத்தில் இந்தி மொழியில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், அவரது கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் பல மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்தகையை சிறப்புமிக்க சில்க் ஸ்மிதாவின் அபார நடனத்திறமையும், கண்களின் வசீகரமும் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழித் திரைப்பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டுச்சென்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

இந்து ஆலயங்களில் புதைந்துள்ள அறிவியல் உண்மை



இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்பட வேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்பட வேண்டும்.

முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும். சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும்.

இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும். இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை.

மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக் குறைக்கும்.

மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான நல்ல ஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி) வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளது. அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள். இது பற்சொத்தை மற்றும் சளி, இருமல் மற்றும் வாய் துர் நாற்றத்தினைப் போக்கவல்லது. இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்

மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.

மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைக்க...!



 ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது டெக்னிக் (Mobile Number Hiding Technical) வந்துவிட்டது.

அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.


உங்களுடை மொபைல் நம்பர் 9865072896 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.

இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்  *67 9865072896 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது  இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.

இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது.  மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.

இதே முறையை இப்படியும் செய்யலாம்.

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர் கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது. அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள்.

மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென நினைத்தால் , மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம்.

முக்கிய குறிப்பு: 

இந்த வசதியின் மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றால் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும்.. மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்.. எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில், தவறான வழிமுறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வீர்கள்.

பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
 
நண்பேன்டா