Sunday 9 March 2014

அச்சமில்லை அச்சமில்லை என்று பாரதி பாடிய பாடல் ஆண்களுக்கு மட்டுமா என்ன..?



அச்சமில்லை அச்சமில்லை என்று பாரதி பாடிய பாடல் ஆண்களுக்கு மட்டுமா என்ன? பெண்களுக்கும்தான். ஆனால், நம் நாட்டில் பெண்கள் அச்சமில்லாமல் நடு இரவில் மட்டும் அல்ல பகல் வேளையிலேயே சென்றுவர என்னென்ன தேவை என்பதைப் பார்க்கலாமா?

ஒரு பெண்ணை ஆணானவன் தப்பான எண்ணத்துடன் பின்தொடரும் பொழுது அவனைக் கண்டு அஞ்சாமல் தைரியமாக அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க பெண் தனது மனதைத் தயார்ப்படுத்த வேண்டும். பயம் உள்ளே இருந்தாலும் அதனை வெளியே காட்டக்கூடாது.

நம்மிடமிருந்து பொருளைப் பறித்துக் கொண்டு செல்லத் திட்டமிடும் பொழுதும், நம்மைக் கடத்தவோ அல்லது கற்பழிக்கவோ முயலும் போதும் பயத்தில் உறைந்து போய் அந்தத் தவறை நடப்பதற்கு அனுமதிக்காமல் அந்தச் சூழ்நிலையை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு மிகவும் சவாலான, ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படும் பொழுது அதைச் சமாளிக்க, கராத்தையில் கருப்பு பட்டை வாங்கி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தற்காப்புக் கலைகளின் வகுப்புகளையோ அல்லது அதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையைப் பெண்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது போன்ற வீடியோக்களையோ பார்த்தாலே போதும்.

இக்கட்டான சூழ்நிலைகள் நமது உடலையும் மனதையும் திட்டமிட்டு செயல்படுத்தி நம்முடைய சக்தியைப் பிரயோகப்படுத்தி எதிரியைப் பலமிழக்கச் செய்ய முடியும். நம்முடைய சோர்வையோ, பயத்தையோ வெளிப்படுத்தாமல் இருப்பதே நமக்கு பெரிய பலமாகும். நம்முடைய சிறந்த ஆயுதம் நம்முள்ளே இருக்கும் ஆறாவது அறிவாகும்.

மிருகங்கள்கூட பிறக்கும் பொழுதே வாழ்வதற்குத் தேவையானவற்றை எதிர்த்துப் போராடிவெல்லும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. மனிதர்களாகிய நாம் ஒருவர்மேல் நம்பிக்கை வைப்பதற்கு முன் அவர்களைச் சரியாக மதிப்பிட்டோமா என்று பலமுறை யோசித்து நம் உள்ளுணர்வைப் பின்பற்றி நடப்பது நல்லது.

தொலைபேசியில் பொது இடங்களில் பேசும்பொழுது சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதில் கவனமுடன் இருப்பது அவசியம். யாராவது நம்மைப் பின்தொடர்வது போல் இருந்தால் உடனே ஏதாவது கடைக்குள் நுழைந்து அவர்கள் நம்மைப் பின்தொடர்வதை அங்கிருப்பவர்களிடமோ அல்லது காவல்துறைக்கோ தெரியப்படுத்தலாம்.

நம்முடைய முட்டிக்கை மிகவும் பலமானது. எதிரியின் கண்கள், தொண்டை, இடுப்பு மற்றும் முட்டிக் கால்கள் பலவீனமானது. எதிர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலையில் இவற்றை மனதில் கொண்டு தாக்குதல் நடத்தினால் வெற்றி நிச்சயம். கூட்டமான இடத்தில் நம்மீது தாக்குதல் நடத்த எதிரிக்கு துணிச்சல் இருக்காது.

எனவே ஆள்அறவமற்ற இடத்திற்கு சென்றால்கூட நாம் துரத்தப்படுகிறோம் என்பது தெரிந்தால் ஜிக்ஜாக்காக ஓடி அவனைக் குழப்ப வேண்டும். இதனால் எந்தஒரு ஆயுதம் வைத்திருந்தாலும் அவனால் நம்மைக் குறிபார்த்துத் தாக்க முடியாது.

வீட்டிலிருந்தாலும், வெளி ஊர்களுக்குச் சென்று தனியாகத் தங்க நேரிட்டாலும் பெண்கள் மிகவும் கவனத்துடன் அறைகள் பூட்டப்பட்டிருக்கின்றதா, பாதுகாப்பு எப்படி இருக்கின்றது என்பவற்றை கவனிக்க வேண்டும்.

பெண்களின் கைப்பையில் எப்பொழுதும் சிறிய கத்தி, மிளகாய்ப்பொடி, சிறிய டார்ச் லைட் இவற்றை வைத்திருப்பது தற்காப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆட்டோ அல்லது காரில் தனியாக செல்ல நேரிட்டால் நம்முடைய கைபேசியில் நாம் பிரயாணிக்கும் வாகனம், நாம் எங்கிருக்கிறோம் என்பது போன்ற விவரங்களை நம் குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது நம் தோழிகளுக்கோ தெரியப்படுத்துவது நல்லது.

இதனால் வாகன ஓட்டுநர்களும் தவறான எண்ணத்துடன் நம்மை நெருங்க பயப்படுவார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்தச் சூழ்நிலையை நான் தைரியமாகச் சமாளிப்பேன் என்ற உறுதி பெண்ணுக்குள்ளே இருந்தால் அவளை எந்த ஒரு தீய சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது

நகத்திலேயே தெரியும நம் உடலின் ஆரோக்கியம்..!



உலகம் முழுவதும் பலர் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப்பின் வெளிப்பாடுதான். காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோன்று செய்கின்றனர். இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது. இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று தெரிவிகிறார்கள். இது மட்டுமல்லாமல் நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், உடல்நிலை பாதிக்கப்படுதல் போன்றவை ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் கூட பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை வ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது. உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வொரு பா‌தி‌ப்‌பி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமான ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் கா‌ட்டு‌கிறது. ஏதேனு‌ம் ஒரு உட‌ல் உபாதை‌க்காக நா‌ம் மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்லு‌ம் போது, ‌சில‌ர் ந‌ம் கை ‌விர‌ல்களை ப‌‌ரிசோ‌தி‌ப்பா‌ர்க‌ள். ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் ச‌ந்தே‌கி‌க்கு‌ம் நோ‌ய் நம‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌ப்‌பி‌ன் அத‌ற்கான ஆதார‌ம் நக‌‌ங்க‌ளி‌ல் தெ‌ரி‌கிறதா எ‌‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ள்ள‌த்தா‌ன்.

ம‌ஞ்ச‌ள் காமாலை‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களது நக‌ங்க‌ள் ‌மஞ்ச‌ள் ‌ நிற‌த்‌தி‌ல் இரு‌ப்பதே இத‌ற்கு முத‌ல் உதாரண‌ம். அதுபோல தொட‌ர்‌‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு, அதனா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பை பழு‌ப்பு ‌நிற நக‌ங்க‌ள் வ‌ெ‌ளி‌ப்படு‌த்து‌கி‌ன்றன.உட‌ல்‌நிலை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில த‌ற்கா‌லிக பா‌தி‌ப்புக‌ளினா‌ல், நக‌ங்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி‌யி‌ல் கூட மா‌ற்ற‌‌ங்களை ஏ‌ற்படு‌த்து‌ம்.

நக‌ங்களை சு‌த்தமாகவு‌ம், ச‌ரியான அள‌வி‌ல் வெ‌ட்டி ‌விடுவது‌ம் ஒ‌வ்வொருவரு‌ம் நமது உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்காக செ‌ய்யு‌ம் செயலாகு‌ம். ஒருவரது உட‌லி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து‌க் குறைவாக இரு‌ப்‌பி‌ன், ந‌க‌ங்க‌ள் உடைவது அ‌ல்லது ப‌ட்டையாக ‌வி‌ரி‌ந்து வள‌ர்வத‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம். ‌சிலரு‌க்கு நக‌ங்க‌ளி‌ல் மேடு ப‌ள்ள‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதுவு‌ம் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க் குறைபா‌ட்டையே கா‌ட்டு‌கிறது.

இதற்கிடையில்தான் த‌ன்ன‌ம்‌பி‌க்கை குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் நக‌ம் க‌டி‌க்கு‌ம் பழ‌க்க‌‌ம் உ‌ள்ளவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.
‌அதே சமயம் வீ‌ட்டி‌ல் வேலை செ‌ய்யு‌ம் பெ‌ண்களு‌க்கு ந‌க‌ம் வள‌ர்வதே ‌இ‌ல்லை எ‌ன்று எ‌ண்ணு‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் அது அ‌ப்படி இ‌ல்லை. வேலை செ‌ய்யு‌ம் போது நக‌ம் தே‌ய்‌ந்து அத‌ன் வள‌ர்‌ச்‌சி ந‌ம் க‌ண்களு‌க்கு‌த் தெ‌ரியாமலேயே‌ப் போ‌ய்‌விடு‌கிறது.

மருதா‌ணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது. அதனை முடி‌ந்தா‌ல் செ‌ய்து வரலா‌ம்.‌சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. மாத‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்களாவது நக‌ங்க‌ள் கா‌ற்றோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம்.  அ‌ப்போதுதா‌ன் அத‌ன் உ‌ண்மையான த‌ன்மையை நா‌ம் அ‌றிய முடியு‌ம்.

மேலு‌ம், நக‌ங்க‌ள் கா‌ய்‌ந்து வற‌ண்ட த‌‌ன்மையுட‌ன் இரு‌ந்தா‌ல் அத‌ற்காக ந‌ல்ல மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ‌சிற‌ந்தது.‌சிலரு‌க்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து வ‌ந்தா‌ல், ‌விரை‌‌வி‌ல் நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம். ‌அழகு ‌நிலைய‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.

கை‌விர‌ல் நக‌ங்க‌ள் லேய‌ர் லேயராக உடைவதை‌ப் பா‌ர்‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இத‌ற்கு ‌வீ‌‌ட்டி‌ல் தூ‌ய்மை‌ப்படு‌த்துவத‌ற்காக பய‌ன்படு‌த்து‌ம் சோ‌ப்பு‌த் த‌ன்மை‌யா‌ல் ‌ஏ‌ற்படு‌ம் ஒ‌வ்வாமையாக‌க் கூட இரு‌க்கலா‌ம். லேய‌ர்க‌ள் ‌ பி‌ரிவ‌தி‌ல் கூட ‌சில ‌வி‌த்‌தியாச‌ங்க‌ள் உ‌ண்டு. ‌சிலவை ‌நீள வா‌க்‌கி‌ல் ‌ பி‌ரியு‌ம். ‌சிலரு‌க்கு கு‌று‌க்காக ‌பி‌ரியு‌ம். நக‌த்‌தி‌ல் உ‌ள்ள நக‌த்த‌ட்டுகளு‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌த்த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது‌ம் கூட இத‌ற்கு காரணமாக இரு‌க்கலா‌ம்.

‌நக‌ச்சொ‌த்தை ஏ‌ற்பட, நக‌த்‌தி‌ல் ‌மு‌ன்பு எ‌ப்போதாவது ஏ‌ற்ப‌ட்ட காய‌ம் காரணமாக இரு‌க்கலா‌ம். ‌விர‌லி‌ல் அடிபடுவது, இடு‌க்‌கி‌ல் கை‌விர‌ல் ‌ சி‌க்‌கி‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்றா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பா‌ல் நக‌ப்படு‌க்கை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌க் க‌சிவானது, நக‌த் த‌ட்டு‌க்கு அடி‌யி‌ல் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் நக‌ச் சொ‌‌த்தை ஏ‌ற்படு‌கிறது. ‌இ‌ந்த நக‌ச்சொ‌த்தை தானாக ச‌ரியாகவு‌ம் வா‌ய்‌ப்பு‌ள்ளது. ஆனா‌ல் நக‌‌ச்சொ‌த்தை ‌ தீ‌விரமடை‌ந்து, நக‌ப் பகு‌தி‌யி‌ல் வ‌லி ஏ‌ற்படுமா‌யி‌ன், நக‌த்தை ‌பிடு‌ங்க‌ி‌வி‌ட்டு அ‌ப்பகு‌தியை சு‌த்த‌ம் செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமாகு‌ம்.

தண்ணீர் பாட்டிலில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்..!



மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை அக்காலத்தில் எல்லாம் பல்வேறு பாத்திரங்களில் சேகரித்து வைத்து பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களால் தான் தண்ணீரை சேகரித்து வைத்து பயன்படுத்துகிறோம்.

அப்படி பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரானது சேகரித்து வைப்பதால், பாட்டிலில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசும். துர்நாற்றம் வீசுகிறது என்று அவற்றை தூக்கிப் போட்டு, தினமும் ஒரு பாட்டில் வாங்க முடியுமா என்ன?

மேலும் பிளாஸ்டிக் பாட்டிலை தூக்கிப் போடுவதால், சுற்றுச்சூழல் தான் மாசுபடும். ஆகவே சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள, பாட்டிலை தூக்கிப் போடாமல், அவற்றை துர்நாற்றமில்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள சில வழிமுறைகளைப் பார்ப்போமா.

பிளாஸ்டிக் பாட்டிலில் வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது டிஷ் வாஷ் நீர்மத்தை விட்டு, நன்கு குலுக்கி, 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் பாட்டிலில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். ஒருவேளை அழுக்குகள் இன்னும் இருந்தால், மீண்டும் இந்த செயலை தொடர்ந்து செய்யுங்கள்.


அழுக்குகள் நிறைந்த பிளாஸ்டிக் பாட்டிலில் அரிசி மற்றும் பேக்கிங் சோடாவை போட்டு, அத்துடன் சிறிது உப்பு சேர்த்து 30-45 நிமிடம் ஊற வைத்தால், அரிசியானது பாட்டிலில் உள்ள துர்நாற்றத்தை நீக்கிவிடும். பேக்கிங் சோடா கிருமிகளை அழித்துவிடும். இந்த முறையை அழுக்கு மற்றும் துர்நாற்றம் நீங்கும் வரை செய்யலாம்.

மற்றொரு முறை வினிகரை பாட்டிலில் நிரப்பி, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து சோப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, நன்கு குலுக்க வேண்டும். ஆரம்பத்தில் சிறிது நேரம் வினிகர் வாசனை வரும். ஆனால் சிறிது நேரத்தில் அது போய்விடும். அதே நேரம் அதில் உள்ள அழுக்குகள் நீங்கி, பாட்டில் புதிது போன்று காணப்படும்.

அடுத்து செய்தித்தாளை பாட்டிலில் போட்டு நிரப்பி, இரவு முழுவதும் மூடி வைக்க வேண்டும். இதனால் அதிலிருந்து வெளிவரும் நாற்றம் அனைத்தும் போய்விடும்.

புத்திசாலி பெண்களை விரும்பும் ஆண்கள் - ஓர் அதிர்ச்சி ரிப்போட்...!


இவ்வுலகில் ஒவ்வொருக்குமே தனக்கு துணையாக வருபவர் இப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதில் பெண்களுக்கு தான் எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் இத்தகைய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.

எதிர்பார்ப்புக்கள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. மேலும் தன் துணையின் எதிர்பார்ப்பு புரிந்தும், அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடக்காமல் இருந்தால், உண்மையில் அந்த உறவில் எந்த ஒரு சந்தோஷமும் சுவாரஸ்யமும் இருக்காது.

• சில பெண்கள் தங்களது துணையின் நண்பர்களுடன் சகஜமாக பேசமாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆண்களுக்கு பிடிக்காது. நன்கு சந்தோஷமாக, அவர்களது நண்பர்களுடன் பேசி, துணைக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கும்.

• தற்போதைய ஆண்கள் தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பர். இப்படி இருப்பதால், பெண்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், எந்த கஷ்டத்தையும் தாங்கி எதிர்த்து வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதால் தான். ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள்.

• எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்கள் ஓடிவிடுவார்கள். ஆகவே எந்த ஒரு விஷயத்திற்கும் அவர்களை நச்சரிக்காமல் இருக்கும் பெண்களைத் தான் ஆண்கள் விரும்புவார்கள்.

• எவ்வளவு தான் அகம் அழகாக இருந்தாலும், கொஞ்சம் புற அழகும் வேண்டுமல்லவா? எனவே அழகை சரியாக பராமரித்து வரும் பெண்களையும் ஆண்கள் விரும்புவார்கள். அதிலும் நீங்கள் கொஞ்சம் மற்றவர்கள் சைட் அடிக்கும் வகையில் சூப்பர் பிகர் போன்று காணப்பட்டால், அவர்கள் உங்களை பெற்றதற்கு மகிழ்ச்சியாக இருப்பதுடன், பெருமையாகவும் உணர்வார்கள்.

• காதலன் எப்போதும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று எண்ணாமல், காதலனை அவர்கள் போக்கில் விடும் பெண்களையும் ஆண்களுக்கு பிடிக்கும். ஏனெனில் உறவில் கொஞ்சம் சுதந்திரம் இருந்தால் தான், அந்த உறவு ஆரோக்கியமாக இருக்கும்.

• புத்திசாலித்தனத்துடன் செயல்படும் பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். ஏனெனில் இத்தகைய பெண்களால் எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்து வெளிவருவார்கள். மேலும் சில ஆண்கள் தான் சொல்வது தான் சரி என்று இருப்பார்கள். அத்தகைய ஆண்களை புத்திசாலித்தனமான பெண்கள் எளிதில் மாற்றுவார்கள்.

விவாகரத்து மனுதாக்கல் செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டியவை..!


1. மனநல ஆலோசகரையோ, குடும்ப நல ஆலோசகரையோ சந்தித்தால் தீர்வு கிடைக்குமா என்று யோசித்தல்.

2. முடிவில் விவாகரத்து அவசியமெனில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யலாம்.

3. வழக்குக்கான அடிப்படை தஸ்தாவேஜுகள் - அதாவது, திருமண பத்திரிகை, திருமண பதிவு சான்றிதழ், திருமணத்தின் போது எடுத்த புகைப்படம், கணவனும் மனைவியுமாக வாழ்ந்ததற்கான விலாச ஆதாரம், குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ், எதிர்தரப்பினர் செய்யும் தவறினை சுட்டிக்காட்டுவதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தயாராக உள்ளதா என்று கவனித்தல்.

4. கணவனுக்கோ, மனைவிக்கோ சேரக்கூடிய சொத்துகள், நகை மற்றும் தனிப்பட்ட பொருள்கள், அவருக்குச் சேர வேண்டிய தஸ்தாவேஜுகள், அவருக்குச் சேர வேண்டிய விலையுயர்ந்த ஆபரணங்கள் இருப்பின் அவற்றுக்கான பட்டியல் தயாரிப்பது அவசியம்.

5. விவாகரத்து வழக்கை கையாளும் நல்ல வழக்கறிஞரின் முகவரியை பெற்று அவரிடம் ஆலோசனை பெறுதல்.

- நம் நாட்டில் தன்னிச்சையாக தாக்கல் செய்யப்படும் பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் நிறைவாக மனமொத்த விவாகரத்து மனுவாக முடிவு பெறும் வாய்ப்புகள் அதிகம். ஒரு நல்ல தாம்பத்ய வாழ்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டியது சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து போவது, பரஸ்பர புரிதல், மரியாதை போன்றவை.

எந்த ஒரு தம்பதியும் சிறு சண்டை கூட இல்லாமல் தாம்பத்யம் நடத்துவது கனவிலும் நடைபெறாத ஒன்று. திருமண உறவில் சிறு சிறு பூசல்கள் வரும்போது அவற்றை பெரிய சண்டைகளாக மாற்றி நல்லறமாக இருக்கும் இல்லற வாழ்வை சீர்குலைக்காமல் இருப்பது நலம். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்லும் திருமணங்களை நரகங்களாக்கிக் கொண்டு நீதிமன்ற கதவுகளைத் தட்டுவது போன்ற பேதமை செயல் வேறொன்றும் இல்லை!

மாமியார், மாமனாருடன் நட்புறவு ஏற்பட வழிகள்..!



நாம் அனைவருமே பெரியோர்களை மதிக்க தெரிந்தவர்கள். ஆனால் ஒருசில நடவடிக்கைகளால் மட்டுமே நம் மாமியார், மாமனாரிடம் வெறுப்பு ஏற்படுகிறது. அவர்களுடன் நல்லுறவு ஏற்பட சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.

* எப்பொழுதும் அமைதியாக மரியாதையுடனும் உறவுக்கான உரிமை கொண்டு அவர்களை அழைப்பதும், பேசுவதும் அவசியம்.

* முதன்மையாக உங்கள் மாமியார் மாமனாரை பார்க்க செல்லும் போது சேலை அல்லது சுடிதார் அணிந்து கொண்டும், அவர்கள் மகிழ்ச்சி கொள்ளும் படியாகவும், பெருமைக் கொள்ளும் படியாகவும் இருக்க வேண்டும். மேலும் அதிகமாக அலங்கரித்து கொள்ளாமல், மென்மையான இயற்கை தோற்றத்துடன், சாதரணமான பாணியில் செல்லுதல் அவர்களை ஈர்க்கும். முக்கியமாக அவர்களை பார்க்கும் போது, அவர்களை கவரும் வகையில் உடையும், பாவனையும் நன்றாக இருத்தல் மிகவும் அவசியம்.

* பெரியோர்கள் என்பதால் அவர்கள் சொல்லை ஏற்றுகொள்வது நல்லது. நம் பெற்றோர்களிடம் எப்படி அன்பாக அவர்களின் பேச்சை கேட்டு நடந்து கொண்டோமோ, அதேப்போல் இவர்களும் நம் தந்தை தாய் என்று எண்ணி நடந்தால் பிரச்சினைக்கு இடம் இல்லை.

* அவர்களை நண்பர்கள் போல் கருதி, வீட்டில் அவர்கள் முன்னிலையிலேயே அனைத்தையும் செய்தல் அவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும். ஏதேனும் தவறு செய்துவிட்டால், அவர்களிடம் மறக்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும்.

* அவர்களுடன் சிறுவயதில் நிகழ்ந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளுதல் மூலம், அவர்கள் ஆனந்தம் கொள்வதோடு, நல்ல நட்புறவு வளரும். மிக முக்கியமாக, நீங்கள் எங்கேனும் வெளியே செல்வதாக இருந்தால், அவர்களிடம் சொல்லி செல்ல வேண்டும்.

மேலும் எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை மற்றும் நட்பு உள்ளத்துடன் அவர்களிடத்தில் நடந்து கொள்ளவும்.  நம் துணைவரின் தாய், தந்தையரை ஏன் விரோதியாக எண்ண வேண்டும். நட்புடன் நடந்து கொண்டால் உறவுகள் சுமுகமாக, சண்டையின்றி, சந்தோசமாக இருக்கும். அதனால் புன்னகையுடனும், பணிவுடனும் நடந்து கொண்டு அழகாகக் காட்சி அளியுங்கள்.

 
நண்பேன்டா