Tuesday 11 February 2014

பலாத்காரம் செய்து நர்ஸ் கொலை கைதான மாணவர் பகீர் வாக்குமூலம்...!



திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள மருதுப்பட்டியை சேர்ந்த சின்னையா மகள் நந்தினி (21). சின்னையா இறந்து விட்டதால் நந்தினி தனது தாயுடன் வசித்து வந்தார். நர்சிங் பயிற்சி முடித்த நந்தினி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

 வேலைக்கு சென்ற நந்தினி நேற்று முன்தினம் இரவு வெகுநேரமாகியும் நந்தினி வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை மருதுப்பட்டியில் உள்ள ஒரு கரும்பு காட்டில் நந்தினி சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால் கைகள் கட்டப்பட்டு, துப்பட்டாவின் இன்னொரு பகுதியால் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது.

நந்தினி கடைசியாக மருதுபட்டியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மகேந்திரனுடன் (20) சென்றது தெரிய வந்தது. போலீசார் மகேந்திரனை மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசாரிடம் மகேந்திரன் கூறியதாவது:

நந்தினி எனக்கு அக்கா முறை வேண்டும். அவர் மீது எனக்கு ஆசை இருந்தது. தம்பி என்ற முறையால் அவர் என்னிடம் பேசுவார். அவரை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை பைக்கில் இலுப்பூர் பஸ் நிறுத்தம் சென்றேன். அப்போது நந்தினி பஸ்சில் இருந்தார். நான் ஊருக்கு தான் போகிறேன். என்னுடன் வா என பைக்கில் அழைத்து சென்றேன்.

ஊருக்கு அருகில் வந்ததும் பைக்கை நானாக நிறுத்தினேன். பைக் ரிப்பேராகி விட்டது. நாம் நடந்தே செல்லலாம் என்று கூறினேன். இதை நம்பிய நந்தினியும் என்னுடன் நடந்து வந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு கரும்பு தோட்டம் அருகில் வந்த போது அவரை தோட்டத்துக்குள் தூக்கி சென்றேன்.

 அவர் கூச்சல் போட்டார். வாயை பொத்தி கீழே தள்ளினேன். இதில் அவர் மயக்கமடைந்தார். பின்னர் அவரது கைகளை சுடிதார் துப்பட்டாவால் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்தேன்.இந்த விஷயத்தை ஊரில் வந்து சொல்லிவிடுவார் என பயந்து அதே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொன்றேன்.

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..?



காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ,அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். அப்புறம் வாங்குங்கள்.

ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள்.

அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது?

படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.

முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.

இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.

A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இதுதான்.

A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)

B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)

C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)

D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)

உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் D-06 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!"

மருத்துவ குணம் மிக்க `தவுண்’...!



பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப்பொருளான தவுண், தென்காசி பகுதியில் மும்முரமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டில் ஒருசில மாதங்களில் மட்டுமே உண்ணக் கிடைக்கும் தவுண், மிகுந்த மருத்துவ குணமிக்கது.

கர்ப்பகதருகு


மரங்களில் கர்ப்பகதருகு என அழைக்கப்படும் பனைமரம், தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்துள்ளது. பனை மரத்தின் வேர் முதல் மரத்தின் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் தரும். வறட்சியான பகுதியில் தானாக வளரக்கூடிய பனையின் ஆயுள் 100 ஆண்டுகள். 90 அடி உயரம் வளரக்கூடியது.

பனங்கருக்கு என்று சொல்லப்படும், சிறு மரங்களை உடைக்கும் போது, அதில் கிடைக்கும் பச்சைக் குருத்து உண்ண சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். வீடுகள் வேயவும், படுக்கவும், உட்காரவும், பண்டங்கள் கட்டுவதற்கும் தேவையான பாய்கள் செய்ய பனை ஓலை பயன்படுகிறது.

கடுமையான வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக பனை ஒலைகள் கொடுக்கப்பட்டு வந்தது. பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறிகள் குளுமையான காற்று தருபவை.

இயற்கை கள்

பனைமர பாளையிலிருந்து பதநீர் கிடைக்கிறது. அதில் சுண்ணாம்பு கலக்காமல் விட்டால், அது சுவையானதாகவும், இயற்கையான, ‘கள்’ என்ற பானம் கிடைக்கும். பனங்காய்களில் இருந்து குறிப்பிட்ட பருவத்தில் நொங்கு கிடைக்கும். காய்கள் கொஞ்சம் முதிர்ந்த பின்னர் சேவாய் என்று சொல்லப்படும், முற்றிய பனங்காயிலிருந்து சதைப் பகுதியை வேகவைத்து உண்ணலாம்.

பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும். பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும். கொட்டைக்குள் உருவாகும் சீப்பை (தவுண்) குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும். கொஞ்சநாள் விட்டால், பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

அளவில்லா மருத்துவ குணங்கள்

பனைமரத்தின் பயன்பாட்டை சித்த மருத்துவர்கள் பட்டியலிடுகிறார்கள்.

மனிதரின் உணவுத் தேவைக்கு மட்டுமில்லாமல் வீடுகள் கட்டுவதற்கும் இம்மரங்கள் துணையாக இருந்தன. பனை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்படும் பனம்பட்டையை வெயிலில் உலர்த்தி, உரித்து எடுக்கப்படும் நார் கயிறாக பயன்பட்டது.

வீடுகளில் விறகு அடுப்பில் சமையல் செய்த காலங்களில், அடுப்பில் நெருப்பு பற்ற வைக்க, பெண்களுக்கு பனை மரத்தின் பன்னாடையும், காய்ந்த ஓலைகளும் தேவைப்பட்டன. காய்ந்து போன பனம்பட்டைகள், காய்ந்து போன நொங்கு காய்களும் அடுப்பு எரிக்க சிறந்த விறகாகப் பயன்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது.

பனைமரங்கள் வெட்டி அழிக்கப்படு வதுடன் பனைத்தொழிலாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருகாலத்தில் பிரதான தொழிலாக இருந்த பனைத்தொழில் இப்போது மெல்லமெல்ல தேய்ந் து கொண்டிருக்கிறது. பனைமரத்தி லிருந்து வெட்டி எடுக்கப்படும் நுங்கு, பதநீர் ஆகியவை சாலையோரங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

60 நாள் மட்டும்

ஆனால், பனங்கொட்டையிலிருந்து கிடைக்கும் தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. குறிப்பிட்ட பருவத்துக்கு (60 நாள்கள்) கொட்டைகளை மண்ணில் புதைத்து, பின்னர் அவற்றை வெட்டி எடுத்து பெறப்படும் தவுணை, 25 ஆண்டுகளுக்குமுன்புவரை பலரும் ருசித்து சாப்பிட்டிருப்பார்கள். இப்போதைய தலைமுறையினருக்கு தவுணை குறித்து பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மருத்துவ குணமிக்க இந்த தவுண் திருநெல்வேலி- தென்காசி பிரதான சாலையில் ராமச்சந்திரப்பட்டினம் பகுதியில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. பனைஓலையால் உருவாக்கப்பட்ட பட்டையில், 20 துண்டுகள் வரையிலான தவுண் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மத்தளம்பாறை கிராமத்தில் பெரும்பாலானவர்கள் பனைத் தொழிலாளிகள். ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்பகுதியில் தவுண் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், ஜூன், ஜூலை மாதங்களில் குற்றால சீசன் நேரங்களிலும் பழைய குற்றாலம் பகுதியில் ஒரு பட்டை தவுணை ரூ.60-க்கு விற்க்பப்படுகிறது.

டாக்டர்கள் பலரும் இதை விரும்பி வாங்கி உண்கிறார்கள். மலச்சிக்கல் பிரச்னைக்கு இது அருமருந்தாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். உடல் சூட்டை தணிக்கவும், வயிற்று கோளாறுகளுக்கும் தீர்வாக இது இருக்கிறது. நுங்கு விற்பனை செய்யும்போது தவுணையும் கூடவே விற்பனை செய்கிறார்கள்.

நாளை முதல் 2 நாட்கள் மத்திய அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம்..!


புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் நாளை முதல் இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் தொடங்க உள்ளன.

 அதனால் கடிதங்கள் பட்டுவாடா உட்பட மத்திய அரசு துறைகளின் பணிகள் பாதிக்கப்படும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக்குழுவில் தொழிற்சங்க நிர்வாகி ஒருவரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அணுசக்தித்துறை, கணக்கு தணிக்கைத்துறை, வருமானவரித்துறை,  சுங்க இலாகா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட  மத்திய அரசு நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றன.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் மட்டும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.  நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள 1.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்  உட்பட நாடு முழுவதிலும் இருந்து சுமார் 12 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர்.

அஞ்சல் துறையில் முக்கிய சங்கங்களான என்எப்பிஈ, எப்என்பிஓ, அகில இந்திய ஊரக அஞ்சல் ஊழியர் சங்கம், அஞ்சல் ஊழியர் முன்னேற்ற சங்கம் உட்பட அனைத்துச் சங்கங்களும் பங்கேற்கின்றன. அதனால் கடிதங்கள் சேகரிப்பு, பட்டுவாடா, விரைவு அஞ்சல், பார்சல், சேமிப்பு உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கும் அபாயம் உள்ளது. மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் வேலை நிறுத்தம் நாளை தொடங்க உள்ள நிலையில் வங்கி ஊழியர்கள் அகில இந்திய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் இன்று முடிகிறது.


குங்குமப் பூவின் சிறப்பு..!



விலை சற்று அதிகமாக இருந்தாலும் மேனி அழகைக் கூட்டுவதில் குங்குமப் பூவுக்கு இணை குங்குமப் பூதான். இதோ சில குங்குமப் பூ அழகு குறிப்புகள்…

குங்குமப் பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து குழைத்துக் கொள்ளவும்.இந்தக் கலவையை முகத்தில் பூசி வர, முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண்கூடாகக் காணலாம்.

இந்த முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.குங்குமப் பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் இறங்கியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தொடர்ந்து சில நாட்களுக்கு பூசி வந்தால், உதடுகள் செவ்வாழை நிறம் பெறும்.

இதழ்களின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் மறைந்து விடும்.மேலும், நகச்சுத்தி வந்து பாதிக்கப்பட்ட நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப் பூ-வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத் தருகிறது.

ஒருவரது முகத்திற்கு வசீகரத்தைத் தருவது கவர்ச்சி மிகுந்த கண்கள்தான். அப்படிப்பட்ட கவர்ச்சியான கண்களுக்கு `பளிச்’ அழகைத் தருவது அடர்த்தியான இமைகள். உங்களின் இமைகள் எழில் பெற இந்தக் குங்குமப் பூ கலவையை அடிக்கடி பூசி வரலாம்.

‘யூ டியூப்பிற்கு’ போட்டியாக ‘மெஹ்ர்’..!



உலகம் முழுவதும் சிறியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்தும் வீடியோ வலைதளம் யூ டியூப். இது கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த வலைதளத்திற்கு போட்டியாக ஈரான் அரசு ‘மெஹ்ர்’ எனும் புதிய வீடியோ வலைதளத்தை உருவாக்கியுள்ளது.

மெஹ்ர் என்றால் தமிழில் அன்பு என்று அர்த்தம்.அமெரிக்காவைக் சேர்ந்த நகோலா பாசிலி நகோலா எனும் இயக்குனர் முகமது நபிகளையும் முஸ்லிம் மக்களையும் இழிவுபடுத்தி திரைப்படம் ஒன்றை எடுத்தார். இதனை விளம்பரப்படுத்தும் நோக்கில் பாதிரியார் ஒருவர் யூ டியூப் வலைதளத்தில் வெளியிட்டார்.

 இதனைப் பார்த்த உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த படத்தை யூ டியூப் வலைதளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு கூகுள் நிறுவனம் மறுத்தது.இதனையடுத்து அரபு நாடுகளில் யூ டியூப் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அரபு மக்களையும், பாரசீக மொழி பேசும் மக்களையும், ஈரான் நாட்டின் கலாச்சாரத்தையும் ஈர்க்கும் வகையில் ஈரானின் ஒளிபரப்புத்துறை இந்தப் புதிய வீடியோ வலைதளத்தை உருவாக்கியுள்ளது.

இதில் ஈரான் மக்கள் தங்களது வீடியோக்களையும் பதிவேற்றம் செய்வதோடு, ஈரான் ஒலிபரப்புத்துறை வெளியிடும் வீடியோக்களையும் கண்டுகளிக்கலாம் என ஈரான் ஒளிபரப்புத்துறை துணித் தலைவர் லொத்பொல்லாஹ் சியாஹ்காலி தெரிவித்துள்ளார். இதனைப் உலகம் முழுவதும் பிரபல்படுத்தும் வகையில் பேஸ்புக்கில் கணக்குத் தொடங்கி மக்களின் ஆதரவும் பெறப்பட்டு வருகிறது.

ரூ.12 கோடியில் பிரமிக்க வைக்கும் ஆடம்பர மோட்டார் இல்லம்..!

கார், வேன், பஸ் போன்றவற்றை கூடுதல் வசதிகளுடன் மோட்டார் இல்லங்களாக மாற்றியது குறித்து பல செய்திகளை வழங்கியுள்ளோம். இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகர் அஷ்டன் கட்சர் டிரெய்லரில் அமைக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான மோட்டார் இல்லத்தை வாங்கியுள்ளார். இரண்டடுக்கு மாளிகை போல் ஜொலிக்கும் இந்த மோட்டார் இல்லத்தை அவரது மனைவியும், பிரபல நடிகையுமான டெமி மூர் பயன்படுத்துகிறார். இந்த பிரம்மாண்ட நடமாடும் மாளிகையின் படங்கள், கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.





பிரம்மாண்டம்

‘தி ஹீட்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் 53 அடி நீளம் கொண்ட இந்த ஆடம்பர மோட்டார் இல்லம் 30 டன் எடை கொண்டது.





இரண்டாவது தளம்

ஹைட்ராலிக் முறையில் இதன் இரண்டாவது தளம் மேலேழும்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு சுவர் மற்றும் பர்னிச்சர்கள் மடங்கி விரியும் வசதி கொண்டதாக இருக்கிறது. இரண்டாவது தளம் விரிவடையும்போது 1,100 சதர அடி பரப்புக்கு இடவசதி கிடைக்கும்.




சாலையில் இயக்க கட்டுப்பாடு

முழுவதுமாக மேலே விரிவடையும்போது 15 அடி 10 இஞ்ச் உயரம் கொண்டதாக இருக்கும். ஆனால், அமெரிக்க போக்குவரத்து துறை சாலையில் செல்லும்போது 13 அடி 6 இஞ்ச் மிகாமல் இருக்கும் வகையில் செல்ல வேண்டும் என்று அனுமதி வழங்கியுள்ளது.



பெட்ரூமுக்கு பூட்டு 

இந்த மோட்டார் இல்லத்தின் பெட்ரூம் கைரேகை அடையாளத்தின் மூலமே பயன்படுத்துபவர் தவிர கூடுதலாக ஒருவர் மட்டுமே திறக்க அனுமதிக்கும்.




வசதிகள் 

இந்த ஆடம்பர மோட்டார் இல்லத்தில் ஏழு இடங்களில் 60 இஞ்ச் 3டி தொலைக்காட்சிப் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. 2 குளியலறைகள், கிரானைட் பினிஷிங் கொண்ட சமையலறை, கூட்ட அரங்கம் என பலவிதமான வசதிகளை கொண்டிருக்கிறது.




கிளைமேட் கன்ட்ரோல்

வெளியில் நிலவும் சீதோஷ்ணத்திற்கு தகுந்தாற்போல் மோட்டார் இல்லத்தின் வெளியில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் உதவியுடன் இந்த மோட்டார் இல்லம் தானியங்கி முறையில் தேவைப்படும்போது குளிர்ச்சி அல்லது வெப்பப்படுத்தும் வசதிகளை கொண்டிருக்கிறது.



எண்ணம்போல் வசதிகள்

இந்த மோட்டார் இல்லத்தை அஷ்டன் மற்றும் டெமி மூர் ஆகியோரின் விரும்பிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.




கண்காணிப்பு கேமரா

இந்த ஆடம்பர மோட்டார் இல்லத்தை சுற்றி 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்கும் வசதி கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அழைப்பு மணியை விருந்தினர் அல்லது வெளியாட்கள் அடிக்கும்போது, வெளியில் நிற்கும் நபரின் உருவம் மோட்டார் இல்லத்தில் பொருத்தப்பட்டிருக்கும் டிவி திரைகளில் தெரியும்.




விலை 

இந்த மோட்டார் இல்லத்தின் விலை ரூ.12 கோடியை நெருங்குகிறது. அதாவது, ஒரு சீரியலில் 26 எபிசோட்கள் நடித்தால் அஷ்டன் கட்சருக்கு கிடைக்கும் சம்பளத்தின் மதிப்புதானாம் இது.




டிசைனர்

ஆன்டர்சன் மொபைல் எஸ்டேட் நிறுவனத்தின் ரான் ஆன்டர்சன்தான் இந்த மோட்டார் இல்லத்தை கட்டிக் கொடுத்துள்ளார். வின் டீசல், ஷரோன் ஸ்டோன், மரியா கரே உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்களுக்கும் இவர்தான் ஆடம்பர மோட்டார் இல்லங்களை கட்டிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்..!’



அது 2005-ம் ஆண்டு. வீல் சேரில் அமர்ந்தபடி தொலைக்காட்சி நிலையத்துக்கு செவிலியர்கள் துணையுடன் வந்தார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங். கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப்பாகமுமே செயல்படாத நிலை. அவரது வீல் சேரில், வலது கண் அசைவின் மூலமாக இயங்கும் கம்ப்யூட்டரும், வாய்ஸ் ஸின்தைசரும் இருந்தது. பிரிட்டிஷ் டே டைம் டாக் ஷோ நிகழ்ச்சி நடத்-திய ரிச்சர்ட் மற்றும் ஜூடி கேட்ட கேள்விகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் எளிதாகப் பதில் சொன்னார் ஸ்டீபன்.

‘‘பெருவெடிப்பு எனப்படும் ‘பிக் பாங்’ ஏற்படும் முன்னர், அண்ட வெளியில் என்ன இருந்தது?’’ என்று கேட்டார் ரிச்சர்ட். ‘‘வட துருவத்தின் வடக்கில் என்ன இருக்குமோ அது!’’ என்று சாதுர்யமாகப் பதில் சொல்லி அனைவரையும் அசத்தினார் ஸ்டீபன். கை தட்டிப் பாராட்டியவர்கள், ‘‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்டார்கள். ‘‘முன்னைவிட சுவாரஸ் யமாகவும், சவால் நிறைந்ததாகவும், சந்தோஷ-மாகவும் இருக்கிறது’’ என்றார். ‘‘இந்த உடல்நிலையுடன் உண்மையில் சந்தோஷமாக இருக்க முடியுமா?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ‘‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’’ என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.

பிரிட்டனில் 1942-ம் வருடம் பிறந்த ஸ்டீபன், படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் மூன்றாவது வருடம் படித்துக்கொண்டு இ-ருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21-வது வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும், மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடிய-வில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள்.

துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர் வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாட்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், ஸ்டீபனுக்கு பயம் தருவதற்குப் பதிலாகத் தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழு உற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். வீல் சேரில் இருந்தபடியே பல்கலைக் கழக ஆய்-வினை முடித்துப் பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகளும் பிறந்தன.

ஏ.எல்.எஸ். எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985ம் வருடம் அவரது உடல் முழுமையாகச் செயலிழந்தது. ஆனாலும், நம்பிக்கை இழக்காமல் வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் கண்டு-பிடித்து, வீல் சேரில் பொருத்தித் தர, சிரமம் குறைந்து அதிகமாகச் சிந்தித்து நிறைய எழுதிக் குவித்தார் ஸ்டீபன்.

‘காலம் எப்போது தொடங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாகப் பதில் சொல்லி மலைக்கவைத்த ஸ்டீபன் ஹாக்கின் ஸின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான். உடல் நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனம் தளராமல், தன்னை அன்புடன் கவனித்துக்கொண்ட செவிலியை இரண்டாவதாகத் திரு மணம் முடித்தார்.

‘‘இந்த நோயால் பாதிக்கப்பட்டதால்தான் வெளி உலக கவனச் சிதறல்கள் இல்லாமல், முழுக் கவனமும் செலுத்தி என்னால் புத்தகங்கள் எழுத முடிகிறது. உண்மையில் நான் அதிர்ஷ்டம் செய்தவன்’’ என்று ஸ்டீபன் நம்பிக்கையுடன் பேசக் காரணம், ‘எதை இழந்தீர்கள் என்பதல்ல; எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!’ என்கிற மந்திரச் சொல்லின் மகத்துவம்தான்!

மேனேஜர் பார்க்கும் போது தீயா மட்டுமல்ல.. நாயா வேலை செய்யனும்..!

வேலை விதிகள்..!


1.யாருமே செய்யாத ஒரு வேலையை நீங்கலாக எடுத்து செய்தால், இனி வரும் வேலை முழுவதும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும்..

2.மேனேஜர் உடைச்சா, பொன் சட்டியும் மண் சட்டியே.

3. உங்கள் திறமைகளை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். அதற்கு உங்கள் மேனேஜர் இருக்கிறார்.

4. பிடித்த பெண்ணிடம் லவ்வை சொல்வதை விட கஷ்டமாயிருக்கிறது, மேனேஜரிடம் லீவு சொல்வது

5. மேனேஜருக்கு ஜால்ரா அடித்து வாழ்பவனே வாழ்வர்! ஏனையோர் மாங்கு மாங்கு என வேலை செய்தே சாவர்!

6. மேனேஜர் நம் மீது காட்டும் அன்பும், கசாப்புக் கடைக்காரன் ஆட்டின் மேல் காட்டும் அன்பும் ஒன்றே என்பதறிக!

7. பிராஜெக்ட் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மேனேஜர் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை.

8. மேனேஜர்களின் அகராதியில் மிக பிடித்த வார்த்தை 'ok sir' என்பதாகவும், அறவே பிடிக்காத வார்த்தை 'why sir' என்பதாகவுமே இருக்கும்..

9. அலுவலகத்தில் மேனேஜர் மிஸ்டர் என்று உங்கள் முழுப்பெயரையும் கூப்பிட்டால் நீங்கள் பிரச்னையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..

10. மேனேஜர் பார்க்கும் போது தீயா மட்டுமல்ல.. நாயா வேலை செய்யனும்..

சூரியனைப்பற்றி அறிவியல் தகவல்கள்...!

சூரியனைப்பற்றி அறிவியல் தகவல்கள்


சூரியனில் அடங்கியுள்ள வாயுக்களின் வீதம்:

Hydrogen - 73.46%
Helium - 24.85%
Oxygen - 0.77%
Carbon - 0.29%
Iron - 0.16%
Neon - 0.12%
Nitrogen - 0.09%
Silicon - 0.07%
Magnesium- 0.05%
Sulfur - 0.04%

சூரியனைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மூன்று படலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை வருமாறு:

1.போட்டோ ஸ்பியர் (photosphere)
2.குரோமோ ஸ்பியர் (chromosphere)
3..கொரோனா(corona)

சூரியனின் கண்ணுக்குத் தெரியும் மேற்பரப்பு photosphere எனப்படுகின்றது. சூரியனை ஒரு டென்னிஸ் பந்தாக கருதினால் அதைச் சுற்றிக் காணப்படும் திசுப் பேப்பரை விட அடர்த்தி குறைந்தது இப்படை என கணிக்கப் பட்டுள்ளது. இதன் தடிப்பம் 500 Km இலும் குறைந்தது ஆகும். மேலும் இதன் வெப்பநிலை 5800 K(கெல்வின்) ஆகும். போட்டோ ஸ்பியருக்கு கீழே காணப்படும் பகுதியில் இருந்து அதிகளவு போட்டோன்கள் (ஒளிக்கதிர்கள்) வெளியான போதும் இதன் வாயுப்படை அதில் பெரும்பகுதியை தடுத்து விடுகின்றது.

மேலும் பூமியின் வளி மண்டலத்தின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் போட்டோ ஸ்பியரின் அடர்த்தி 3400 மடங்கு குறைந்தது எனவும் கூறப்படுகின்றது. வருங்காலத்தில் மிக உறுதியான உலோகத்தினால் ஆக்கப்படும் விண்கலமொன்று சூரியனின் இப்படையில் (7 * 10 இன் 4 0ஆம் வலு) Km வரை அதாவது மையத்தை நோக்கி 10 வீதம் வரை உள்ளே செல்ல முடியும் என விஞ்ஞானிகளால் கருதப்படுகின்றது.

அடுத்த படலம் இதற்கு மேலே அமைந்துள்ள குரோமோ ஸ்பியர் ஆகும். இது போட்டோ ஸ்பியரை விட அடர்த்தி குறைந்தது. வெறும் கண்களால் பார்க்க முடியாத ஒளிப் படலமான இது சூரிய கிரகணத்தின் போது மறைக்கப்பட்ட சூரியனின் எல்லை வட்டத்தில் மிகுந்த பிரகாசமாக நாவல் நிற கோட்டை அடுத்து தென்படும். நாவல் என்பது சூரிய ஒளியிலுள்ள சிவப்பு,நீலம்,வயலெட் ஆகியவற்றின் கலவை ஆகும். குரோமோ ஸ்பியர் ஆனது அதன் நிற மாலை காரணமாக வானியலாளர்களால் விரும்பி ஆராயப் படுகின்றமை குறிப்பிடத் தக்கது. நாம் சுவாசிக்கும் வாயுவை விட குரோமோ ஸ்பியர் (10 இன் வலு மடங்கு அடர்த்தி குறைவானது.

இறுதியாக கொரோனா(corona) பற்றி நோக்குவோம். சூரியனின் மையத்தில் இருந்து மிகப்பெரிய பரப்பளவுடைய குரோமோ ஸ்பியருக்கு மேலாகவும் உள்ளேயிருந்து படர்ந்துள்ள பகுதி கொரோனா படலம் எனப்படுகின்றது.கிரேக்க நாகரிக மக்களால் கிரவுன் என அழைக்கப்பட்ட ஓளி அலைகளை உள்ளடக்கியுள்ள இப்பகுதி சூரியனில் இருந்து பூமிக்கான தூரத்தின் 10 வீதத்தை உடையது என்பதுடன் 20 சூரிய விட்ட ஆரையைக் கொண்டது.

மையத்தில் இருந்து புறப்படும் கொரோனோ இன் ஒளிக்கதிர்களின் சராசரி வெப்ப நிலை 1 மில்லியன் கெல்வின் அதாவது போட்டோ ஸ்பியரை விட பல நூறு மடங்கு அதிகமானது. அதிகளவான இந்த வித்தியாசம் பல விஞ்ஞானிகளை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இது பற்றி மேலும் ஆராய்வதற்காக நாசா விண்வெளி ஆய்வு மையம் SOHO எனப்படும் செய்மதியை ஏவியுள்ளமை குறிப்பிடத் தக்கது. மேலும் இச்செய்மதி சூரியனின் வெளிப்படலமான போட்டோ ஸ்பியர் பற்றி தீவிரமாக ஆராய்ந்து பல தகவல்களை வழங்கி வருகின்றது.

சூரியனில் எவ்வகையான செயற்பாடு நிகழ்கின்றது என்பது குறித்து இப்போது நோக்குவோம். சூரியனில் நிகழும் முக்கிய கருத்தாக்கமானது ஐதரசனின் உட்கரு பிளவுற்று ஹீலியம் அணுக்களாக மாறுவதே ஆகும். எனினும் மேலும் சில தாக்கங்களும் நிகழ்கின்றன என விஞ்ஞானிகள் கருதக் காரணம் சூரியனின் மையப் பகுதியிலிருந்து வெளியாகும் சிறியளவான நியூட்ரினோக்களே ஆகும். சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் சேர்ன் நகரில் மேற் கொள்ளப்பட்ட கடவுள் துணிக்கை குறித்த ஆராய்ச்சியின் போது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கண்டு பிடிப்பாக ஓளியை விட நியூட்ரினோக்கள் வேகம் கூடியவை என அறிவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.

சூரியனைப் போலவே ஏனைய நட்சத்திரங்களிலும் மேலே அவதானித்த மூன்று படைகளும் காணப்படும் என்ற போதும் கருத்தாக்கங்கள் வித்தியாசப் படலாம் என்பது வானியலாளர்களின் கருத்து. இதுவரை சூரியனைப் பற்றிய மேலோட்டமான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டோம். எதிர்வரும் தொடரில் கிரகங்களைப் பற்றிப் பார்ப்போம்.

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்..!

உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள்..!

  • குளோரினை கண்டுபிடித்தவர் யார்? - K.ஷீல்லி, 1774.
  • அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.
  • கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.
  • ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.
  • பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.
  • ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898
  • பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.
  • நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.
  • யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.
  • அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.
  • நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.
  • ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.
  • விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
  • திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.
  • டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
  • கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
  • மிதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
  • சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)
  • லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.
  • செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.
  • மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
  • கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.
  • ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.
  • மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
  • அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.
  • அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.
  • புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)


ஹைடெக் ஆட்டோமேட்டிக் டெலிவிரி ட்ரோன்ஸ் துபாயில் அறிமுகம்..!



அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ட்ரோன்களை வைத்து டெலிவிரி செய்ய ப்ரோட்டோடைப் செய்து FAA அப்ரூவலுக்காக காத்துக்கொன்டு இருக்கும் சமயம் துபாய் அரசு புது வகை ட்ரோன்களை உருவாக்கியுள்ளது.

இது கொஞ்சம் அட்வான்ஸ் டைப். இது கைரேகை மற்றூம் கருவிழி மேட்ச் செய்து டெலிவிரி செய்யும் ஹைடெக். இதன் மூலம் டெலிவிரி கண்டிப்பாய் போய் சேர வேண்டியவங்களுக்கு மட்டுமே போய் சேரும்.

இது துபாய் அரசு – அரசாங்க டாக்குமென்ட்களான – டிரைவிங் லைசென்ஸ் / மருந்து / பர்மிட்களை அனுப்ப டெஸ்ட் செய்ய இருக்கிறது. இது சக்ஸஸ் ஆனால் இனிமேல் இது தான் டெலிவிரி மோட் ஆகும். இது மணிக்கு நாப்பது கிலோமீட்டர் வேகத்தில் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு செல்லும் – இது படிபடியாக அதிகரிக்கபடும்.

இதன் விலை 67ஆயிரம் ரூபாய்கள் தான். நம்ம ஊருக்கு ரேஷன் பொருட்கள் / அவசரத்துக்கு டாஸ்மாக்ல இருந்து சரக்கு எல்லாம் டெலிவரி ஆகும் தூரம் அதிகம் இல்லைங்கோ…….

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி பெற்றோர்கள் மறக்கடிப்பது..?





குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.


மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது


பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள்.இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும். நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும்.


டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மைதான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடுவதால். தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையாளுகின்றனர். இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல் பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.


விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது..?


விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ, உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது.


4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம்.


எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும் பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள். அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.

இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்..!


இந்த பொருட்களை பிரிட்ஜில் வைக்க கூடாதாம்!



பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.

ஆனால் சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.

அது போன்ற பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்.


வெங்காயம்


 வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும், அப்போது தான் கெட்டுப் போகாமல் இருக்கும்.

பூண்டு

 பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது கெட்டுப் போக ஆரம்பித்துவிடும்.பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.


உருளைக்கிழங்கு


 உருளைக்கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக்கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும், பாலிதீன் பையில் வைக்கக் கூடாது. இதே போன்று கருணைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கையும் பிரிட்ஜில் வைக்க கூடாது.


தேன்


 உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான்.

ஆனால் தற்போது கடைகளில் வாங்கப்படும் தேனில் சுவை மற்றும் பலவற்றுக்காக பலவித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும் தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.


வாழைப்பழம்


 வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும்.

இதேபோன்று பூசணிக்காய், பிரட், தக்காளி, அன்னாசி போன்றவற்றையும் பிரிட்ஜில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.

இதச் சாப்பிடாதீங்க... மீறிச் சாப்பிட்டா ‘சங்கு’ கன்பார்ம்...!



சில நேரங்களில் உணவு ஒவ்வாமை மரணத்தில் கூட கொண்டு போய் விட்டு விடுகிறது. அப்படிப்பட்ட சில விபரீதமான உணவுப் பொருட்களைத் தான் இப்போது பார்க்கப் போகிறீர்கள்...





காஜூ மர்சு...




ரோட்டிங் சீஸ் எனவும் அழைக்கப்படும் காஜூ மர்சுவில் உயிருள்ள புழுக்கள் தான் அதிகமான அளவில் அடைத்து வைக்கப்படுகின்றன. இவை நொதித்தலுக்காக சேர்க்கப்படும் காரணிகள் என்றாலும், சமயங்களில் உண்ணப்படும் போதும் இந்த புழுக்கள் உயிருடன் வயிற்றுக்குள் சென்று விடுவதால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் உண்டாகலாம்.



ஹாட் டாக்ஸ்...



அமெரிக்க குழந்தைகள் நலச் சபை ஹாட் டாக்ஸ்ன் அமைப்பை மாற்றச் சொல்லி பரிந்துரைத்துள்ளது. காரணம், உருளை வடிவில் காணப்படும் இந்த உணவும் பொருளை சாப்பிடும் போது, குழந்தைகள் எதிர்பாரா விதமாக விழுங்கி விடும் அபாயம் உண்டு. சமயத்தில் இது மரணத்தில் கூட முடிந்து விடுகிறது என அச்சபை எச்சரித்துள்ளது.




நம்மூரு கப்பக்கிழங்கு....







அதிகமான கார்போஹைட்ரேட்டைக் கொண்டிருக்கும் கப்பக்கிழங்கை சரியாக வேக வைக்காமல் சாப்பிட்டால், அவை ஒரு விதமான அபாயகரமான நொதியை உடலில் உண்டாக்குவதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.



ருபார்ப் இலைகள்...






ருபார்ப் எனப்படும் ஒருவகை கீரை போன்ற இலைகள் அதிகமாக வெளிநாடுகளில் உணவாகக் கொள்ளப் படுகின்றன. அதிக சத்துக்களைக் கொண்ட இந்த இலைகளை அதிகளவில் உட்கொண்டால் வலிப்பு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகமாம்.



சன்னாக்‌ஷி...







அதாங்க உயிருள்ள ஆக்டோபஸ் சாப்பாடு. கொரியாவில் அதிகளவில் சாப்பிடப்படும் இந்த உணவால் உயிருக்கே உலை வைக்கும் விஷயங்கள் அதிகம். உயிருள்ள ஆக்டோபஸ்ஸை அப்படியே அந்றுக்கி தட்டில் போட்டு தருவார்கள். சமயத்தில் சரியாக விழுங்காவிட்டால், ஆக்டோபஸ் தவறி மூச்சுக்குழாய்க்குள் குதித்து விடும் அபாயம் உண்டு.




குரங்கு மூளை...







நம்மூரில் ஆடு, மாடு, கோழி, மீன் என வளைத்துக் கட்டுவது போல, சில நாடுகளில் குரங்குகளை வேட்டையாடி உண்ணும் மக்கள் இருக்கிறார்களாம். அப்படி சாப்பிடப்படும் குரங்கின் மூளையால், சாப்பிடப்படுபவரின் மூளை குழம்பும் நிலை உண்டாகலாம் என எச்சரிக்கிறார்கள் உணவியல் வல்லுனர்கள்.





புகு மீன்...





புகு எனப்படும் ஊதி மீன் சாப்பிட்டால் சதைகள் உறைந்து மரணம் விளையலாம் என மூன்றாண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டுள்ளது.




அக்கி பழம்...






ஜமைக்காவின் தேசிய பழமான அக்கியில் மஞ்சள் சதைப் பகுதி மட்டுமே உண்பதற்கு தகுதியுள்ளது. அதில் காணப்படும் கருப்பு நிற விதையையோ அல்லது சிவப்பு வெளிப்புறத் தோலையோ சாப்பிடுவது விஷம்.


விஷக் காளான்...








ஏழுக்கும் அதிகமான விஷங்களைக் கொண்டுள்ள விஷக் காளான்களை சாப்பிட்டால் அதோ கதி தான். காளான்களை வாங்கும் போது அதிக கவனம் தேவை.

மெலிந்த உடல் குண்டாக...! குண்டான உடம்பு மெலிய...!





அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில் உட லில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முத லில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண் டும்.


மனசு நன்றாக இருந்தால் புன்ன கை முகமாக… எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக… அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டு மே… மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உட லும் குளிர் ச்சியாகும் விதத்தில் நன்றாக குளிப்பது நல்லது.

 உடம்பில் எண்ணை தேய்த்து குளித்தாலும் உடலும், மன தும் குளிர்ச்சியடையும். தினமும் எண்ணை தேய்த்து குளிப் பது இளநரையை தடுக்கும். மேலும் வாத நோய்களை போக்கும்.

உடம்புக்கும் புத்துணர்வு கிடை க்கும். சருமத்துக்கும் மெருகு கூடும். உடலுக்கு ஆரோக்கிய மும் ஏற்படும்.


 அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத்தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின் உடல் வாகுக்கு தகுந்தாற் போல் எந்த எண்ணையை தேய்த்து குளிக்க லாம் என்பதை ஆயுர்வேதம் கூறுகிறது. அதை அறிந்து உங் களுக்கேற்ற எண்ணையை தேய்த்துக் குளிக்கலாம்.


 இன்றைக்கு சோப்பு போட்டு குளிக்காத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். சோ ப்பு இல்லை என்றாலும் அந் த தன்மை உடைய ஷாம்பு வோ அல்லது பவுடரோ தேய்த்தும் குளிக்கின்ற னர். அதற்கு பதிலாக தேன், பால், கற்றாழைச் சாறு கல ந்த கலவையை உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.

 இது அழகு தருவதோடு… உடம்பில் உள்ள அழுக்கையும் நீக்கிவிடும். இந்த கல வையை பயன்படுத்த முடியாதவர்கள், சிறுபயறு, கடலை மாவு, தேன் பயன்படுத்தியும் குளி த்தால் சருமம் மெருகே றும். அழ கு என்றால் அதில் தலைமுடி தான் மிக முக்கிய மாக கருதப்படு கிறது. அதற்காக இப்போதெல்லா ம் டை அடிக்கின்றனர் பலர்.


 டை அடிப்பதற்கு பதிலாக 100 கி ராம் மருதாணி தூள், 20 கிராம் நெல்லிக்காய் தூள் ஆகியவற் றுடன் சிறிதளவு தண்­ணீர் சேர் த்து ஊற வைக்கவும். காலையில் முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவினால் அல் லது குளித்தால் நரையை போக்க இது உதவும்.


 கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள பொருள்தான் பொடுகு க்கு காரணம். சீப்பு, டவல் ஆகிய வற்றை அடிக்கடி சுடுநீரில் கழுவி பயன்படுத்தவும். அடிக்கடி எண் ணை தேய்த்து தலை முடியை அலசவும். ஆரோக்கிய  மான உணவுகளை சாப் பிடவும்.


 இன்றைக்கு நடுத்தர வயதுள்ள வர்களில் பெரும்பாலும் டை அடி க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சீக்கிரத்தில் அவர்களுடைய தலைமுடி நரைத்து பஞ்சு மாதிரி ஆகிவிடும்.

 இதற்கு காரணம் அமோனியா சேர்த்த டை தான் காரணம். கறுப்பு நிறம் கொடுக்கும் டைகளில் தீமைகள் அதிகம். புதிய முடி கள் ஆரோக்கியமாக வளர்வதை இது தடுக்கும். டைக்கு பதில் கண்மை யை பயன்படுத்தி முடியை கறுப் பாக்கலாம்.


 நிறைய காய்கறிகள் சாப்பிடுவோ ருக்கு சருமம் பளபளப்பாக இருக் கும். இதனால் அவர்கள் எப்போ தும் அழகாக இருப்பார்கள். கேரட், கரு ணைக்கிழங்கு, வெங்காயம், கீரை, புடலங்காய் இதெல்லாம் சாப்பிட்டால் உடல் வனப்பு கூடும்.


 உடல் மெலிந்தவர்கள் குண்டாக மாறுவதற்கு பல முயற்சிகளை எடுப்பதற்கு பதில்… 101 நாளில் எளி தாக குண்டா கலாம்.


 50 கிராம் வெந்தயத்தை வேக வைத்து… அதனுடன் ஒரு மே சைக்கரண்டி நெய், வெல்லம் சேர்த்து…. 101 நாட்கள் தொட ர் ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகரித்து உடம்பு குண்டாகி விடும். ஈஸ்ட்ரோஜென்னை அதிகரிக்கும் சக்தி வெந்த யத்துக்கு உண்டு.


 குண்டான உடம்புடன் கஷ்டப் படுபவர்கள், உடல் மெலிய… 50 கிராம் கொள்ளை வறு த்து… பொடியாக்கி தினமும் சாப் பிடவும். இது உடலில் உள்ள தண்ணீ­ரை நீக்கி உடல் எடை யை குறைத்துவிடும்.

உங்களுடைய உடல் சரியான நிலை க்கு வந்தவுடன் கொள்ளு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். அல்லது தொடர்ந்து சாப்பிட்டாலும் உட லுக்கு நல்லதே.

குழந்தைகளுக்கு காது குத்தும் போது கவனிக்க வேண்டியவை....?



நமது ஊர்களில் குழந்தைகளுக்கு காது குத்துவது ஒரு வழக்கம். ஆனால் குழந்தைகளுக்கு காது குத்தும்போது ஒரு சில விசயங்களை நாம் பேண வேண்டும்

* காது குத்தும் இடம் சுத்தமானதாக இருக்கிறதா என்று நாம் உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படும்.

* குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல் தோடுகளை இழுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அது அவர்களுக்கு மிகுந்த வலியினை கொடுக்கும்.

* காது குத்திய முதல் நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு குழந்தைகள் அவர்கள் அணிந்திருக்கும் கம்மல், தோடுகளை தொடர்ச்சியாக அணிய வேண்டும்.

* காது குத்தும் கருவி சுத்தமானதாக இல்லை என்றால் காது குத்தப்பட்ட இடத்தில் கிருமிகள் தாக்க அதிக வாய்ப்புள்ளது.

* அவர்கள் அணியக்கூடிய காதணிகள் தரமானதாக இல்லை என்றாலும் இது போன்று கிருமிகள் தாக்க வாய்ப்புள்ளது.

* காது குத்தும் இடத்தை தரமான ஆண்டிசெப்டிக்கை பயன் படுத்தி கழுவவும்.

* சில நேரங்களில், காது குத்திய இடத்தில் சிறிய தழும்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. இது சில நாட்களில் தானாகவே நீங்கிவிடும். ஆனால் இது கூட பலபெரும் பிரச்சனைக்கு காரணமாக அமையலாம். பெரும்பாலும் காது குத்தும் இடங்களில் கட்டி இருந்தால் இந்த பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதனால் காது குத்தும் போது கட்டி இருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது.

* உங்கள் குழந்தைக்கு இரும்பு போன்றவற்றினால் அலர்ஜி ஏற்படுமானால் அந்த அலர்ஜி, இது போன்ற காதணிகள் அணிவதால் உங்கள் குழந்தையை பாதிக்கலாம்.

* குழந்தைகளின் காதணிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

* குழந்தை மருத்துவமனைகளில் இதனை செய்வது நல்லது.

* காது குத்துவது சரியாக செய்யப்படவில்லை என்றால் அது குழந்தைகளுக்கு அதிகமான வலியை ஏற்படுத்தும்.

நல்ல தூக்கம் இயற்கையின் வரம்...?





ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில்தான் கழிக்கின்றான். இப்படி மனித வாழ்க்கையை விழுங்கும் தூக்கமே வேண்டாம் என்று நாம் நினைத்தால் அது முற்றிலும் தவறு.

இந்தத் தூக்கம்தான் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கிறது. ஒரு மனிதன் தினமும் தன்னைத்தானே புதுமைப்படுத்தி புத்துணர்வு பெறச் செய்வதற்கு தூக்கம் மிகவும் அவசியம்.


ஆனால் அந்த தூக்கத்தின் அளவு அதிகரித்தாலோ அல்லது துக்கமின்றி இருந்தாலோ உடலில் பாதிப்புகள் உண்டாகும்.


சரியான தூக்கமின்றி தவிப்பவர்களுக்கு நோய்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை அறியலாம். இந்த தூக்கமின்மை எதனால் ஏற்படுகிறது. இதனால் உண்டாகும் பாதிப்புகள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

சராசரியாக ஒரு மனிதன் தினமும் 6 முதல் 7 மணி நேரம் வரை தூங்குவது அவசியம். குறைந்தது 5 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் இன்றைய பொருளாதார போராட்டத்தில் 2 மணி நேரம் தூக்கம் கிடைப்பதே அரிதாகிவிட்டது.


சிலர் சரியானதூக்கம் இல்லாமல் புலம்புவார்கள். தினமும் படுக்கைக்குச் செல்கிறேன், தூங்கும் முன்பு பால் அருந்துகிறேன். தூங்கவேண்டும் என்று நினைத்து கண்களை மூடினாலும் தூக்கம் மட்டும் வருவதே இல்லை என்பார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பவர்கள் அதிகாலையில் கண்ணயர்வார்கள். ஆனால் சிறிது நேரத்திலே விழிப்பு வந்துவிடும்.


இப்படிப்பட்டவர்கள் எப்போதும் டென்ஷனாகவே காணப்படுவார்கள். இந்த தொல்லை தொடர்ந்துகொண்டே இருப்பதால் சிலர் தூக்க மாத்திரைகளை உபயோகிப்பார்கள். நாளடைவில் தூக்க மருந்து சாப்பிட்டால் தான் தூக்கம் என்ற நிலைக்கு வந்து அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.


இன்னும் சிலரோ மது, போதை பொருட்களை உபயோகப்படுத்துகின்றனர். இவை ஆரம்பத்தில் தூக்கத்தைத் தருவதுபோல் தோன்றும். பின்பு இதன் அளவு அதிகரிக்குமே ஒழிய முழுமையான நித்திரையை தராது.


எனக்கு இருக்கும்பிரச்சனைக்கு மது அருந்தினால்தான் தூக்கம் வரும் என்று சிலரும், மேலும் சிலர் தூக்க மாத்திரை அருந்தினால்தான் தூக்கம் வரும் என்பர். சிலர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டும், பாடல் கேட்டுக்கொண்டும் படித்துக்கொண்டும் தூங்க முயற்சிப்பார்கள். இவர்கள் சரியான தூக்கத்தைப் பெறமுடியாமல் தவிப்பார்கள்.


தூக்கமின்மை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. மன உளைச்சல், பயம், குரோதம், தெளிவான சிந்தனையின்மை, இயலாமை, டென்ஷன் உள்ளவர்களே அதிக தூக்கமின்மையால் அவதிப் படுகின்றனர்.


சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமை, நேரத்திற்கு தூங்க செல்லாமல் இருத்தல், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து கண்களுக்கு ஓய்வு கொடுக்காமல் இருப்பது, போதிய உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் தூக்கமின்மை உருவாகிறது.


தினமும் 4 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும் 16 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்குபவர்களும் ஆயுளைக் குறைத்துக்கொள்பவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அதிக நேரம் தூங்குபவர்களுக்குத்தான் தற்கொலை எண்ணம் தோன்றும் என்றும் கூறியுள்ளனர்.


சிலர் தூக்த்தில் எழுந்து நடப்பார்கள். துணி துவைப்பார்கள் அல்லது சில வீட்டு வேலைகளை செய்வார்கள். பின் வந்து படுத்துக்கொள்வார்கள். காலையில் எழுந்தவுடன் கேட்டால் தாம் தூங்கும்போது என்ன செய்தோம் என்பது தெரியாமல் இருப்பார்கள். இதுவும் தூக்கமின்மையால் ஏற்படும் ஒரு விதமான நோயாகும்.சிலர் பய உணர்வு கொண்டு தூங்கும்போது அலறுவார்கள்.


சிலர் அதிக நேரம் தூங்கிக்கொண்டேயிருப்பார்கள். இது நடுத்தர வயதினரை மட்டுமே பாதிப்படையச் செய்யும் இவர்களுக்கு நீரழிவு, உடல்பருமன், அசீரணக் கோளாறு, உடல்வலி உண்டாகும்.

இவ்வாறு தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் கீழ்காணும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.


* இரவு உணவு சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லக் கூடாது. சிறிது தூரம் குறுநடை போடுவது நல்லது. குறைந்தது 1 மணி நேரம் கழித்துதான் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.


 * இரவு உணவில் எளிதில் சீரணமாகாத உணவுகளான அசைவ உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், வாயுக்களை உண்டாக்கும் உணவுகள், கீரைகள், அதிக குளிர்ந்த பானங்கள், டீ, காபி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.


 * இனிப்புப் பொருட்கள், உப்பு சேர்ந்த பொருட்களை சாப்பிடக் கூடாது.


* கொசுக்களின் தொல்லையால் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் அறையின் கதவுகளை படுக்கைக்கு செல்லும் 2 மணி நேரத்திற்கு முன் மூடி கொசுவத்தி அல்லது கொசுவை அழிக்கும் மருந்து சாதனத்தை உபயோகப்படுத்துங்கள். பின் அரை மணி நேரம் கழித்து கதவை திறந்துவிட்டு மூடவும். இப்படி செய்தால் கொசு அழிக்கும் மருந்தின் வாசனை நம் தூக்கத்தைக் கெடுக்காது.


* அழுக்கு உடையுடன் தூக்கம் கூடாது. இரவு படுக்கைக்கு செல்லும்முன் இளம்சூடான நீரில் கை, கால், முகம் கழுவிவிட்டு தூங்கச் செல்லலாம். மன இறுக்கம், கவலைகளை மனதில் சுழலவிடக்கூடாது. தூங்கும் போது உடலை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது.


 * படுக்கைக்குச் செல்லும் முன் சிறுநீர், மலம் கழித்துவிட்டு தூங்கச் செல்லலாம். சில சமயங்களில் அதுவே தூக்கத்தைக் கெடுக்கும்.

 * எக்காரணம் கொண்டும் மது, போதை மருந்து, தூக்க மாத்திரைகளை உபயோகிக்கக் கூடாது. நாளடைவில் அதற்கு நாம் அடிமையாக நேரிடும்.

அப்படியும் தூக்கம் வரவில்லை என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.


மூளைக்கு மட்டும் வேலை கொடுக்காமல் உடலுக்கும் வேலை கொடுக்க வேண்டும்.


உடலுக்கு உழைப்பு கொடுக்க முடியாதவர்கள் உடற்பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும்.


நல்ல தூக்கம் இயற்கையின் மாமருந்து...!

பேஸ்புக் "விருப்பங்கள்" உங்களை அடையாளம் காட்டிவிடும்..!



பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு.

இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம் என்ன என்பதில் துவங்கி, அவரது அரசியல் சார்பு நிலை, அவரது புத்திசாலித்தனம் வரை ஒருவரின் குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் தெரிவித்துவிட முடியும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

பேஸ் புக்கில் இருக்கும் ஒருவர் தனக்கு பிடித்தமான செய்தி, கருத்து, கட்டுரை, புகைப்படம் அல்லது காணொளியை விரும்புகிறார் என்றால் அதை தெரிவிப்பதற்கு லைக் என்கிற பொத்தானை அழுத்தினால் அவர் அதை விரும்புகிறார் என்று பொருள். இப்படி ஒருவர் தனது முகநூலில் எதையெல்லாம் விரும்புகிறார் என்று தொகுத்துப்பார்த்தால் அவர் ஆணா பெண்ணா, ஒருபாலுறவுக்காரரா என்பது முதல், அவர் எந்த அரசியல் கட்சி ஆதரவாளர், என்னவிதமான பொருளாதார கருத்தாளர், எந்த மதத்தவர், அவரது புத்திக்கூர்மையின் அளவு என்ன என்பது வரை ஒருவரின் பெரும்பான்மை குணாம்சங்கள் மற்றும் ஆளுமைகளை சரியாக கணித்துச் சொல்லமுடியும் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆளுமையை காட்டும் அல்கோரிதம்

இந்த ஆய்வுக்காக சுமார் ஐம்பத்திஎட்டாயிரம் முகநூலர்களின் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் தங்களின் முகநூலில் என்னவிதமான விஷயங்களை விரும்பினார்கள் என்கிற விவரங்களும், இவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்கிற விவரங்களையும் சேகரித்த ஆய்வாளர்கள், இவற்றை முதலில் சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எனப்படும்

உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.
அடுத்ததாக, இந்த முகநூலர்கள் விரும்பி லைக் போட்ட விவரங்களை அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கணக்கிடும் மென்பொருளில் உள்ளீடு செய்தார்கள்.

உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனை முடிவுகளையும், அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கிடைத்த முடிவுகளையும் ஒன்றுக்கொன்று பொருத்திப்பார்த்தார்கள்.

இதில் கிடைத்த முடிவுகள் தங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்ததாக தெரிவிக்கிறார் இந்த ஆய்வின் முடிவுகளை தொகுத்தவரான டேவிட் ஸ்டில்வெல். அல்கோரிதம் கணிதக்கணக்கின்படி இந்த பரிசோதனையில் பங்கேற்ற முகநூலர்களில் யாரெல்லாம் ஆண்கள் என்பதை கண்டறிவதில் 88 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. அதேபோல முகநூலர்களின் எத்தனைபேர் ஆப்ரிக்க வம்சாவளியினர் என்பதை 95 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. வெள்ளையினத்தவர் யார் என்பதை 85 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.

இவர்களின் மத அடையாளங்களை கண்டுபிடிப்பதில் கிறித்தவர்கள் யார், முஸ்லீம்கள் யார் என்பதை 82 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. ஒருவருக்கு திருமணமானதா இல்லையா என்பதையும், ஒருவர் போதைவஸ்துக்களை பயன்படுத்தியிருக்கிறாரா இல்லையா என்பதையும் 65 சதவீதம் முதல் 73 சதவீதம் சரியாக கணிக்கமுடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தனிமனித அந்தரங்கத்துக்கு ஆபத்து

இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் விரும்பிய விஷயங்களில் வெளிப்படையாக பாலியல் விவரங்களை அடையாளப்படுத்தும் விவரங்கள் எவையும் இல்லை. மாறாக இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற பொதுவான விஷயங்களை இவர்கள் விரும்பியிருந்த விதத்தை வைத்தே இந்த அல்கோரித கணக்கீட்டின் படி இவர்களின் அடையாளங்கள் சரியாக கணிக்க முடிந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டும் ஆய்வாளர்கள், இது விளம்பர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சாதகங்களை அளித்தாலும், தனிமனித அந்தரங்கத்தை பாதுகாப்பதில் இது மிகப்பெரிய சவால்களை தோற்றுவிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.

உதாரணமாக, இந்த கணக்கீட்டை பயன்படுத்தி, விளம்பர நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட முகநூலரை குறிவைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த முடியும்.

இது வர்த்தக ரீதியில் அவர்களுக்கு சாதகமான விஷயம். அதேசமயம், தனிமனிதரின் முகநூல் செயற்பாடுகளை அவருடைய வெளிப்படையான விருப்பம் இல்லாமலே மற்றவர்களால் பார்க்க முடியும், பயன்படுத்த முடியும், குறிப்பிட்ட நபரின் அந்தரங்க அடையாளங்களை தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலைமை, தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் என்கிற கவலைகளும் எழுந்துள்ளன.

இதை தடுப்பதற்கு சில எளிய வழிகளும் இருக்கின்றன என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, முகநூலில் ஒருவர் எதையெல்லாம் விரும்பியிருக்கிறார் என்பதை காட்டும் லைக்குகள் பொதுவாக மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் முகநூலில் இருக்கும் பிரைவசி செட்டிங்குகள் எனப்படும் அந்தரங்கத்தை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்புக்கு சென்று, இந்த லைக்குகளை மற்றவர்கள் பார்க்கதபடி செய்ய முடியும் என்று கூறும் அந்தரங்க பாதுகாவலுக்கான அமைப்புக்கள், தேவைப்படுபவர்கள் அதை செய்துகொள்வது நல்லது என்றும் பரிந்துரை செய்கிறார்கள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த ஆய்வு முடிவுகள், முகநூலில் அதிகரித்துவரும் தனிமனித அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மேலும் அதிகப்படுத்தக்கூடும்.

சைக்கோமெட்ரிக் தேர்வில் இப்படிப்பட்ட கேள்விகளும் கேட்கப்படலாம்..!



‘‘என் பணியைச் செய்ய என் குழுவிலுள்ள பிறரது உதவியும் தேவைப்படுகிறது என்றால், நான் அந்தச் சூழலை விரும்பவே மாட்டேன்’’. இந்த வாக்கியம் உங்களுக்குப் பொருந்துகிறதா?

சைக்கோமெட்ரிக் தேர்வில் இப்படிப்பட்ட கேள்விகளும் கேட்கப்படலாம்.

மேற்படி கேள்விக்கு ‘‘ஆமாம்’’ என்று விடையளித்துவிட்டு, அப்படி ஒரு விடையை அளித்ததற்காகச் சிலர் மிகவும் ஆனந்தப்பட்டுக்கொண்டும் இருப்பார்கள்.

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பணியைச் செய்ய உங்கள் குழுவில் உள்ள பிறரது உதவி தேவைப்படுகிறது எனும் நிலை மிகவும் இயல்பானதுதான். குழு என்பது பலர் இணைந்தது. தனித்துவம் கொண்டது. இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதற்காகத்தான் குழுக்கள் அமைக்கப் படுகின்றன. எனவே, ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்பது குழுவாகப் பணி செய்வதில் இன்றியமையாத ஒன்று.

நீங்கள் ``ஆமாம்’’ என்று பதில் அளித்திருந்தால், அதில் உங்களையும் அறியாமல் உங்களைப் பற்றிய பல தன்மைகளை வெளிப்படுத்திவிடுகிறீர்கள். (இப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதுதானே சைக்கோமெட்ரிக் தேர்வுகளின் நோக்கம்?)

ஒருவருக்கொருவர் இருக்க வேண்டிய நல்லுறவை நிர்வாகத் துறையில் ‘இன்டர் பர்சனல் ரிலேஷன்ஸ்’ என்பார்கள். அந்த நல்லுறவு உங்களிடம் கொஞ்சம் மிஸ்ஸாகிறது. அதனால்தான் ஒருவரிடம் உதவி கேட்பது என்றாலே, உங்களுக்கு அது ஏற்புடையதாக இல்லை.

மாறாகப் பிறரிடம் உதவி கேட்பதில் உங்களுக்குத் தாங்க முடியாத தயக்கம் அல்லது பயம் இருக்கிறது என்றால், அது உங்கள் தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிறது.

உங்களைப் பற்றியே நீங்கள் அதிகமாக நினைத்துக்கொண்டிருந்தாலும், பிறரிடம் உதவி கேட்க மாட்டீர்கள். உங்கள் ஈகோ அதை ஏற்றுக்​கொள்ளாது. இத்தகைய மனநிலை வரவேற்கத்தக்கது அல்ல.

ஆக ‘ஆமாம். நான் அப்படிப்பட்டவன் தான்’ என்று விடை அளிப்பதன் ​மூலம் உங்களுக்கு உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை உண்டு என்பதை மறைமுகமாக ஒத்துக் கொள்கிறீர்கள்.

கேள்விக்கான காரணம் என்ன?

சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பதற்கு முன்னால், அதை எதற்காகக் கேட்கிறார்கள் என்பதில் தெளிவு வேண்டும்.

அந்தத் தெளிவைப் பெறுவதற்கு இதோ இன்னொரு கேள்வி.

‘இந்த மூன்றில் குழு மனப்பான்மைக்கு உதாரணமாக எதைக் குறிப்பிடலாம்?’

என்று ஒரு கேள்வி சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் கேட்கப்படலாம். இந்தக் கேள்விக்கு ​மூன்று ப​தில்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம்.

(அ). காக்கை (ஆ). ராஜநாகம் (இ). எறும்பு

இவற்றில் ராஜநாகத்தை நாம் விட்டு விடலாம். ராஜநாகம் என்பது மிகவும் அரிதானது. அது குழுவாகச் செயல்படுவது கிடையாது என்பதால் அதைக் குழு மனப்பான்மைக்கு ஓர் உதாரணமாகக் கருத முடியாது. போதாக்குறைக்கு ராஜநாகத்தின் முக்கிய உணவு சிறு பாம்புகள்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மீதமுள்ள இரண்டு விடைகள் காக்கை மற்றும் எறும்பு. காக்கையை நினைக்கிறீர்கள். இரண்டு காட்சிகள் உங்கள் நினைவுக்கு வருகின்றன. உணவுப் பொருளை அளித்தால், அதைக் சத்தமின்றித் தின்றுவிடாமல், காக்கை சக காக்கைகளைக் கூவி அழைக்கும். பிறகு எல்லாக் காக்கைகளுமாக அந்த உணவைச் சாப்பிடும்.

திடீரென்று பல காக்கைகள் உரத்துக் குரல் கொடுப்பதை, நீங்கள் கவனித்திருந்தால் அங்கு ஏதாவது ஒரு காக்கை இறந்திருப்பதைக் காணலாம். அதற்குத் தங்கள் வருத்தத்தை (அஞ்சலியை?) வெளிப்படுத்தும் வகையில்தான் காக்கைகள் தங்கள் உறவினர்களோடு கூடி அழுகின்றன.

ஆஹா, காக்கையைவிடக் குழு மனப்பான்மைக்குச் சிறந்த உயிரினம் இந்த உலகில் இருக்க முடியுமா என்று நெக்குருகிப் போய்க் காக்கை என்ற விடையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் கேள்வியை இப்படி யோசித்துப் பாருங்கள்.

‘காக்கைகளி​டம் உள்ள எந்தச் சிறப்பு எறும்புகளிடம் இல்லை? எறும்புகளிடம் உள்ள எந்தச் சிறப்பு காக்கைகளிடம் இல்லை?’.

எறும்புகளின் வரிசை நினைவுக்கு வருகிறதா? ஏதோ ஸ்கேலில் வரைந்தது போல நேர்கோட்டில் அவை வரிசையாகச் செல்லும். ஆக, டிசிப்ளின் எனப்படும் கட்டுப்பாடு அவற்றிடையே சிறப்பாக உள்ளது. ஒரு குழுவில் இருப்பவர்கள் ஒட்டுதலோடு இருந்தால் போதாது. பணியைச் செய்து முடிக்கையில் ஒருவித சுயக் கட்டுப்பாடும் அவசியம். எனவே, எறும்பு என்பதுதான் மேலும் துல்லியமான விடையாக இருக்கும்.

இது போன்ற சில கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கொஞ்சம் பொது அறிவு தேவை. அதை நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்குச் சில கதைகளை அறிந்து கொண்டால்தான் சைக்கோமெட்ரிக் கேள்விகளுக்கான சரியான விடையை அளிக்க முடியும்.

கதைகள் தெரியுமா உங்களுக்கு?

கீழே உள்ள குழுக்களில் மிகவும் மோசமான குழு என்று எதைக் கூறலாம்?

அ) பார்வை இழந்தவர்கள் யானையைப் பார்த்த கதை

ஆ) ஆற்றைக் கடந்ததும் அழுத பரமார்த்த குருவும் அவரது சிஷ்யர்களும்

இ) வேடன் நெருங்கியதும் வலையோடு பறந்த புறாக்கள்

மேற்படி கேள்விக்குப் பதிலளிக்க வேண்டுமென்றால் அதற்கான முதல் தகுதி மூன்று கதைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான். தெரியாதவர்களுக்காக இதோ ரத்தினச் சுருக்கமாக அந்தக் கதைகள்.

யானையின் அருகே பார்வை இழந்தவர்கள் சிலர் சென்றனர். யானையின் காதை தொட்டுப் பார்த்தவர் யானை முறத்தைப் போல உள்ளது என்றார். காலைத் தொட்டுப் பார்த்தவர் யானை ​தூணைப் போல உள்ளது என்றார். யானையின் உடலைத் தொட்டுப் பார்த்தவர் யானை சுவர் போல இருக்கிறது என்றார். தான் சொன்னதே சரி என்று அவர்கள் கடுமையாகச் சண்டை போட்டுக் கொண்டனர்.

நதியைக் கடந்த பரமார்த்த குருவுக்கும் அவரது முட்டாள் சிஷ்யர்களுக்கும் ஒரு சந்தேகம். ‘தங்களில் யாரும் நதியில் ​மூழ்கிவிட வில்லையே?’. ஒவ்வொருவரும் அனைவரையும் எண்ணிப் பார்த்துவிட்டு ‘`ஐயோ எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது. நதியில் நம்மில் யாரோ ஒருவர் மூழ்கி இறந்துவிட்டார்’’ என்று கதறினர். உண்மை என்னவென்றால் ஒவ்வொருவரும் எண்ணும்போது, தங்களை அந்த எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளவில்லை.

வேடன் ஒருவன் புறாக்களைப் பிடிப்பதற்காகத் தானியங்களைப் போட்டிருந்தான். அவன் திட்டப்படி தானியங்களைத் தின்ன வந்த புறாக்கள் வலையில் சிக்கிக்கொண்டன. அவற்றை வேடன் நெருங்கிய கடைசி நிமிடத்தில் அத்தனை புறாக்களும் ஒற்றுமையாக, முழு சக்தியைப் பயன்படுத்தி, ஒரே சமயத்தில் வலையோடு சேர்ந்து மேலே பறந்து தப்பித்தன.

மூன்றாவது கதை மோசமான குழுவுக்கு உதாரணம் அல்ல. தொடக்கத்தில் வேடன் விரித்த வலையில் புறாக்கள் மாட்டிக் கொண்டாலும், பின்னர் ஒற்றுமையான நடவடிக்கையின் காரணமாக, அவை தப்பித்து விட்டன.

அப்படியானால் எது மிக மோசமான குழு? பரமார்த்தக் குரு மற்றும் சீடர்களா?, யானையைப் பரிசோதித்த பார்வை இழந்தவர்களா? என்றால் பரமார்த்தக் குரு ​மற்றும் சீடர்கள்தான். உடல் குறைபாடு இல்லையென்றாலும் மனக் குறைபாடு கொண்டவர்கள். அவர்களில் ஒருவருக்குக்கூடப் புத்திசாலித்தனம் இல்லை. மாறாகப் பார்வை இழந்தவர்கள் கூறியது முழுத் தவறு அல்ல. ஒவ்வொரு வரும் கூறியது ஓரளவு உண்மை.

இப்படிப் பல விதங்களிலும் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்தத் தர்க்க ரீதியான சிந்தனைகள் மின்னல் வேகத்திலும் நடைபெற வேண்டும். அதுதான் சைக்கோமெட்ரிக் தேர்வுகளின் தனித்தன்மை.

கூந்தல் உதிர்வதை தடுக்க ஆயுர்வேத குறிப்புகள்..!



• வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து முதல் நாள் இரவு நீரில் வேகவைத்து அடுத்த நாள் வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும். இவ்வாறு வாரம் இரு செய்து வர வேண்டும். ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

• கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை சம அளவு கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

• வெந்தயம், குன்றிமணியை சம அளவு எடுத்து பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஊறவைக்க வேண்டும். இந்த பொடி ஒரு வாரத்திற்கு நன்றாக ஊற வேண்டும். பின்னர் இந்த எண்ணெயை தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

• மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால் செம்பட்டை முடி நிறம் மாறும். இவ்வாறு வாரம் இரு முறை செய்து வரலாம்.

• ஒரு கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சிவும். இந்த எண்ணெயை தலையில் தினமும் தொடர்ந்து தேய்த்து வந்தால் கூந்தல் நீளமாக வளரும்.
 
நண்பேன்டா