Friday 21 February 2014

உடல் எடை அதிகரிக்குதுன்னு கவலையா..? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க..!

சிறப்பான தோற்றம் பெற விரும்புபவர் அனைவருக்கும் தடையாக விளங்குவது உடல் எடை ஆகும். எடையை நாம் கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி என்று காண்போம்

எடையை குறைக்க விரும்புபவரோ அல்லது எடையை அதிகரிக்க விரும்புபவரோ அல்லது தற்போதுள்ள எடையிலேயே தொடர விரும்புபவரோ, எதுவாயினும் இது ஒரு சிக்கல் நிறைந்த விவகாரம் கொண்ட விளைவாகவே கருதப்படுகிறது.

சில நேரங்களில் நாம் அனைவருமே, கட்டுப்படுத்த முடியாத, விவரிக்க இயலாத வகையில் ஏற்படுகிற பசிக்கு பலியாக நேரிடுகிறது. இந்த எதிர்பாராத பசியினால், அதிக கலோரிகள் கொண்ட கார்போஹைட்ரேட் நிறைந்த சிற்றுண்டி வகை உணவினை உண்ண நேரிடுகிறது. இது உடல் எடை அதிகரிப்பிற்க்கு வழி வகுக்கிறது.

நமது ஆரோக்கியத்திற்கான சில உணவு தேர்வு முறைகள் இங்கே குறிப்பிடபபட்டுள்ளன. இவை நமது வயிற்றினை நிரப்பி, நமது உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கின்றன. இந்த உணவு வகைகள், நமது உடல் எடையை குறைக்க மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்திற்கும் உதவிகரமானவை.

ஆப்பிள்

 தினம் ஒரு ஆப்பிள் எடுத்து கொள்வது நம்மிடமிருந்து மருத்துவரை விலக்கியே வைத்திருக்கிறது. பசியை வெகு தூரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறது. கரையக்கூடிய நார்சத்தும், பெக்டினும் நிறைந்த சிறந்த மூல ஆதாரம் ஆப்பிள் ஆகும். இதில் நிறைந்துள்ள அதிகமான நார்ச்சத்தை மெல்லுவதற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளப்படுவதால், நமது வயிறு மூளைக்கு, திருப்தி அடைந்து விட்டதற்கான செய்திகளை அனுப்புகிறது. மேலும் அதிகம் உண்ணுவதையும் தவிர்க்கிறது.

இஞ்சி

 நமது பசியை கட்டுப்படுத்துகிறது. நமது தீராத பசியை குறைத்து திருப்தி அடைய செய்கிறது. GI மூலமாக மெதுவாக நகரும் ஊக்கியாக செயல்படுகிறது, இரத்த ஓட்டத்தின் மூலம் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.

ஓட் பிரான் (Oat bran)

 நீரில் ஊர வைத்து அளவில் அதிகரித்து காணப்படுகிற ஓட் பிரான், செரிமானத்தின் போது, குறைந்த கலோரிகளையும் பூரணத்துவம் பெற்ற நார்ச்சத்தையும் தருகிறது. இதனால் நமக்கு திருப்தி அடைந்த உணர்வு ஏற்படுகிறது.

தயிர் 

சிறிதளவு தயிர் வழங்குகின்ற தையாமின், நமது பசியை கட்டுப்படுத்தவும் வளர்ச்சி பெறவும் உதவுகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோயை எதிர்த்து போரிடும் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் எடை குறைப்பிற்கும் உதவுகிறது.

முட்டை

 பசியை தூண்டும் ஹார்மோனான, கிரிலீனை கட்டுப்படுத்தி நமக்கு நீண்ட நேரத்திற்கு முழுமை அடைந்த உணர்வினை முட்டைகள் வழங்குகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. முட்டையில் தரத்தில் சிறந்த புரதங்கள் காணப்படுகின்றன. அவை நமது அடங்காத பசியை நம்மிடமிருந்து விலக்கியே வைத்துருகின்றன.

வாசனை பொருட்கள்

 காரம் நிறைந்த மிளகு நமது உணவிற்கு சுவை மிகுந்த மணத்தினை தருவன மட்டுமல்ல. மேலும் ஆரோக்கிய குணநலன்கள் நிறைந்து காணப்பட்டு, நமது பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

பருப்பு வகைகள்

 பருப்பு வகைகளில் பல பிரிவுகளுடன் கூடிய கார்போஹைட்ரேட் செறிந்து காணப்படுகிறது. இது ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் மற்றும் ஆலிகொசாக்கரைடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இது நமது வயிறு காலியாக உணர்வதை தள்ளி வைக்கிறது. நமக்கு நீண்ட நேரத்திற்கு முழுமை அடைந்த உணர்வினை தருகிற கூட்டு விளைவினை ஏற்படுத்துகிறது. புரதச்சத்தும், நார்சத்தும் நிறைந்துள்ளது.

அவகேடோ

 அவகேடோவில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டேட் கொழுப்பு அமிலங்களும் நார்சத்தும் நிறைந்துள்ளன. இந்த மோனோசாச்சுரேட்டேட் கொழுப்பு அமிலம் உணவு செரிப்பதற்கு அதிக நேரம் எடுக்க வழி வகுத்து, நமக்கு நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைந்துள்ள உணர்வினை வழங்குகிறது.

டார்க் சாக்லெட் 

70% டார்க் சாக்லெட்டின் சில சதுர துண்டுகள், செரிமான செயல்முறையை தாமதப்படுத்தி, நம்மை நன்றாக உணர வைக்க கூடிய ஹார்மோன்களை தூண்டுகிறது. ஒரு துண்டு டார்க் சாக்லெட் நமக்கு முழுமை அடைந்த உணர்வினை வழங்குகிறது.

சால்மன் 

சால்மன் வலிமையான புரத மூல ஆதாரமாகும். மேலும் இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த பாலி அன்சாச்சுரேட்டேட் கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன் மாற்றங்களை தூண்டி, பசியை குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

சூயிங் கம் 

சூயிங் கம் நமது சுவாசத்தை புத்துணர்வாக்க மட்டுமல்லாது, பசியை கட்டுப்படுத்தி, அடங்காத பசியை குறைத்து எடை குறைப்பிற்கும் உதவுகிறது.

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் நார்சத்தும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும், புரதங்களும் நிறைந்துள்ளன. இந்த சின்னஞ்சிறிய விதைகள் நமது வயிற்றில் அதிகமான இடத்தை ஆக்கிரமிப்பதில்லை. ஆனால் பசியை கட்டுப்படுத்த உதவுகின்றன.

கிரீன் டீ

 கிரீன் டீ பசியை கட்டுப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதில் செயல்பாட்டு தொகுதியுடன் தொடர்புடைய கேட்ட காலமின் காணப்படுகிறது. இதில் காணப்படும் பாலிஃபீனோல் காரணமாக கிரீன் டீ ஜெனீசீஸை அதிகப்படுத்துகிறது. கொழுப்புகளை எரிக்கிறது.

டோஃபு 

கர்டில்ட் சோயா பாலிலிருந்து டோஃபு தயாரிக்கப்படுகிறது. டோஃபு-வில் புரதம்,வைட்டமின் சி, ஐசோஃப்ளேவன்கள், கால்சியம் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. கொழுப்புச்சத்து முற்றிலும் இல்லை. டோஃபு-வில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் காணப்படுகிறது. இது சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த உணவாகும்.

பாதாம்

 இரண்டு பாதாம் உண்ணும்போது, நம்மால் ஆரோக்கியமற்ற சிற்றுண்டி உணவு வகைகளை ஒதுக்கி வைக்க முடிகிறது. மேலும் பாதாம் பருப்பு நமது பசியை திருப்திப்படுத்துகிறது.

புதினா

 புதினா இலைகளில் பசியை கட்டுப்படுத்தும் சிறந்த பண்புகள் காணப்டுகின்றன. புதினா இலைகளை வாயில் மெல்லுவதன் மூலமோ அல்லது தேநீர் வடிவிலோ அல்லது வேறு ஏதேனும் உணவு வடிவிலோ புதினாவை எடுத்து கொள்வது சிறந்தது.

பச்சை காய்கறிகள்

 பச்சை காய்கறிகளில் நார் சத்தும் நீர் சத்தும் நிறைந்து காணப்படுகிறது. இது நமது வயிற்றிற்கு நீண்ட நேரம் நிரம்பியுள்ள உணர்வை அளிக்கிறது.

தண்ணீர்

 ஒரு குவளை தண்ணீர் அருந்துவதன் மூலம் வயிறு நிரம்பிய உணர்வினை பெற முடியும். எனவே சீரான இடைவெளிகளில் நீர் அருந்துவது சிறந்தது. இது நமது உறுப்புகளை சுத்திகரித்து, நீரேற்றம் பெற உதவுகிறது.

பீன்ஸ்

 பீன்சில் குறைந்த கலோரிகள் கொண்ட புரதமும் நார்சத்தும் காணப்படுகின்றன. இந்த காய்கறியை உண்பதன் மூலம் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வினை பெற முடியும். பசியை கட்டுப்படுத்தினாலே நமது எடையை நாம் விரும்பிய வண்ணம் நம்மால் பெற முடியும். பசியை கட்டுப்படுத்த மேற்சொன்ன வழிகளை கடைபிடித்து பலன் பெறுவோம்.

வாட்ஸ்ஆப்பில் அப்படி என்ன இருக்கு என்று ஃபேஸ்புக் ரூ.99,584 கோடி கொடுத்து வாங்குகிறது..?



நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.99, 584 கோடி கொடுத்து வாங்கும் வாட்ஸ்ஆப் என்றால் என்னவென்று எத்தனை பேருக்கு தெரியும்?

ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.99, 584 கோடி கொடுத்து வாட்ஸ்ஆப்பை வாங்குகிறது என்ற செய்தி தான் பலரது கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து வாங்கும் அளவுக்கு வாட்ஸ்ஆப்பில் என்ன உள்ளது என்று பலரும் வியக்கின்றனர். ஃபேஸ்புக்கை கவர்ந்த வாட்ஸ்ஆப் என்றால் என்ன என்று பார்ப்போம்.

வாட்ஸ்ஆப் என்பது ஆன்லைன் மெசேஜிங் சர்வீஸ் ஆகும். செல்போனில் இருந்து மெசேஜ், வீடியோ, புகைப்படங்களை நண்பர்களுக்கு, நண்பர்கள் குழுவுக்கு அனுப்ப உதவும் அப்ளிகேஷன் தான் வாட்ஸ்ஆப். இது இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது.

வாட்ஸ்ஆப்பை மாதத்திற்கு 450 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். அதாவது ட்விட்டரை விட 200 மில்லியன் பேர் கூடுதலாக வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறார்கள். மேலும் தினமும் 10 லட்சம் பேர் புதிதாக வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. இது தான் ஃபேஸ்புக்கின் கவனத்தை வாட்ஸ்ஆப் பக்கம் ஈர்த்தது.

வாட்ஸ்ஆப் மூலம் மாநிலம் விட்டு மாநிலம், ஏன் நாடு விட்டு நாடு மெசேஜ் அனுப்பலாம். அதுவும் கட்டணம் இல்லாமல். இது தான் இளம் தலை முறையினரை வாட்ஸ்ஆப் பக்கம் இழுத்துள்ளது.

செல்போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ்ஆப்பை டவுன்லோட் செய்து அதில் உங்களின் செல்போன் எண்ணை டைப் செய்து, மெசேஜ் மூலம் வரும் கோடை பயன்படுத்தி சரிபார்த்தால் அதை பயன்படுத்தலாம்.

சமையலறை 'சிங்க்'கில் 'பிஸ்' அடித்த 'பீட்ஸா' கடை ஊழியர்..!

சமையலறை 'சிங்க்'கில் 'பிஸ்' அடித்த 'பீட்ஸா' கடை ஊழியர்.. டிஸ்மிஸ்.. கடையும் மூடல்..!  


சார்ல்ஸ்டன்: அமெரிக்காவின் சார்ஸ்ன் நகரில் ஒரு பீட்சா கடையில், சிங்க்கில் சிறுநீர் கழித்து விட்டார் கடை ஊழியர். இதனால் அந்தக் கடையையே மூடி விட்டனர். அந்த ஊழியரையும் டிஸ்மிஸ் செய்து விட்டனர்.

 அவர் உச்சா போவது ரகசியக் காமராவில் பதிவாகி விட்டதால் கையும் களவுமாக சிக்கிக் கொண்டார். மேற்கு விரீஜனியாவில்தான் இந்த அக்கப்போர் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர், அந்தக் கடையின் மேனேஜர் என்பதுதான் காமெடி.

இதுகுறித்து பீட்சா நிறுவன செய்தித் தொடர்பாளர் டோக் டெர்பர் கூறுகையில், இந்த வீடியோ காட்சியைப் பார்த்ததும் அந்த ஊழியர் நீக்கப்பட்டு விட்டார்.


கடையும் காலவரையின்றி மூடப்பட்டு விட்டது என்றார். கடையின் சமையலறையின் சிங்கில் வைத்து இந்த அசிங்கத்தை செய்துள்ளார் அந்த ஊழியர். கடை வர்த்தக நேரம் முடிந்த பின்னர்தான் இதைச் செய்துள்ளார் அவர்.

தம்பதிகள் நேசிக்கப்படவேண்டுமா? மதிக்கப்படவேண்டுமா?



குறிப்பிட்ட வார்த்தைகளை திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன்.” நம்மை மதிக்கவேண்டுமே?’’ என்ற சொற்களை யாராவது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

தம்பதிகளில் யாராவது ஒருவர்தான் கவலையுடன் சொன்னார்கள்.தெரிந்த நண்பர் ஒருவரை வழியில் சந்தித்தேன்.தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.”

என்னுடைய மனைவிக்கு அரசு வேலை கிடைத்துவிடும்,எனக்குத்தான் பிரச்சினை! என்னை மதிக்கவேண்டுமே?”

 என்றார்.இன்னொருவர் பெண்.திட்டப்பணி ஒன்றில் அவருக்கு பணி.வேலை நீடித்திருக்குமா என்ற கவலையில் இருந்தார்.” என் கணவர் என்னை மதிக்கவேண்டுமே?” என்றார்.

 கணவனும் மனைவியும் இத்தகைய எண்ணம் கொண்டிருப்பதுதான் நம்முடைய குடும்பங்களின் பிரச்சினையா? “பிறந்த வீட்டின் பெருமையை கூடப்பிறந்தவனிடம் சொன்ன கதையாக” எனக்குத்தோன்றுகிறது.வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது திருத்தமாக உடை அணிகிறோம்.அழகு படுத்திக்கொள்கிறோம்.

வீட்டுக்கு வந்து விட்டால் நமக்கு லுங்கி பனியன் போதும்.வெளியில் நாலுபேர் நம்மை மதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.வீட்டிலும் அதே எண்ணம் இருப்பது சிக்கலை கொண்டுவருகிறது.வீட்டிலுள்ளவர்களுக்கு நம்முடைய பலம்,பலவீனம் தெரியுமே? ஆனாலும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது.

 மரியாதை வேண்டும் என்றவுடன் மனம் அதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கும்.பொய் சொல்வதில் துவங்கி தன்னை உயர்த்திக்கொள்ள ஆயிரம் வழிகளைத் தேடுகிறது.யார் பெரியவர் என்பதற்கான சண்டைகள் ஆரம்பித்து விடுகிறது.

யாராவது ஒருவர் சறுக்கும்போது,வேலை இழப்பு அல்லது வேலை கிடைத்தல் போன்ற நிகழ்வுகள் இன்னொருவர் மனதில் பாதிப்பை உருவாக்குகிறது.” நமக்கு மரியாதை போய்விடுமே என்ற கலக்கம் தோன்றி இயல்பு நிலை கெடுகிறது.முடிவு என்னவாக இருக்கும் என்பது நமக்கு தெரிந்த

மனதளவில் கணவனும் மனைவியும் நெருக்கமாக இல்லை என்பது தெளிவு.சங்கடமான நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவு என்பது முக்கியமான விஷயம்.ஆனால் பல குடும்பங்களில் சாத்தியமில்லாமல் இருக்கிறது.

நம்மை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தை சிதறடிக்கிறது.கணவனோ,மனைவியோ கொண்டுவரும் பணம் மட்டும் முக்கியமாகி கிடைக்காது என்றால் மரியாதை போய்விடுகிறது.மனைவி உளரீதியான ஆதரவுக்காக பிறந்த வீட்டை நம்பி இருக்கவேண்டிய நிலை.ஆணுக்கு இருக்கவே இருக்கிறது டாஸ்மாக்.

எப்போதும் இருவரும் கலக்கமாகவே இருக்கிறார்கள்.தன்னுடைய மதிப்பு சரிந்துவிடகூடாது என்பதில் அதிக கவனம் இருக்கிறது.மனைவி அதிகம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டால் மனசு கெட்டுப்போகிறது.

சிலர் வெளியே காட்டிக்கொள்ளாமல் உரிய மரியாதை கொடுத்து கடந்து விடுகிறார்கள்.ஆனால் உள்ளே புழுங்கிக் கொண்டிருக்கும்.கிராமத்தில் ஒரு பெரியவர் சொன்னது இது, ”திருமணம் செய்யும்போது கணவன் மனைவி இருவரில் ஒருவர் தகுதி நிலையில் தாழ்ந்து இருக்க வேண்டும்.”

கூட்டுக்குடும்பங்கள் சிதைந்துவிட்ட இன்றைய சூழலில் அன்புக்கும் ஆதரவுக்கும் இடமே இல்லை.குடும்பம் பட்ட மரத்தின் கீழ் இருக்கிறது.மரியாதையை எதிர்பார்க்கும் இடம் பாதுகாப்பான இடமல்ல! கிடைக்காமல் போனால் வலி அதிகமாக இருக்கும்.மரியாதை கிடைப்பதற்காக தந்திரங்களை கைக்கொள்ள வேண்டி வரும்.

புறச்சூழலில் ஏற்படும் மன காயங்களுக்கு மருந்திடும் இடமாக வீடு இருக்க வேண்டும்.ஆனால் பலர் மரியாதையை எதிர்பார்த்து தன்னை தயார்படுத்திக் கொள்வதிலேயே காலத்தை கட்த்தி விடுகிறார்கள்.இங்கே நேசிப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்...!



  சிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது? அதுவும் இந்தியா போன்ற நாட்டில்! அழகும் அங்கீகாரமும் சிவப்புக்குத்தான் இருக்கிறது.மற்ற திறமையால் சிலர் பெயர் பெற்றிருக்கலாம்.கலர் அப்படியில்லாமல் இருப்பவர்கள் தாழ்வு மனப்பானமையால் பொசுங்கிப் போய்விடுகிறார்கள்.

  நானும் கொஞ்சம்(?!) கலர் குறைவுதான்.எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? ஆஹா! அது மட்டும் நடந்து விட்டால்,குறைந்தபட்சம் முகம் மட்டுமாவது சிவப்பாகிவிட்டால்? நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.மீசை அரும்பிக்கொண்டிருக்கிறது.அப்போதுதான் அந்த விளம்பரத்தைப்பார்த்தேன்.

  ஆறே வாரங்களில் சிவப்பழகு.மனசுக்குள் மத்தாப்பு.எப்படியாவது வாங்கி விட வேண்டும்.விலையும் அதிகமில்லை.கிராமத்தில் கூட எல்லா கடையிலும் கிடைக்கிறது.அது ஒரு பெரிய விஷயமில்லை.வாங்கிவிட்டேன்.உடனே பயன்படுத்தவில்லை.நாளை காலை முதல்தான் அந்த அதிசயம் நடக்கப்போகிறது

 குளித்துவிட்டு முகத்தை சுத்தமாக துடைத்தேன்.அந்த பொக்கிஷத்தை எடுத்து முதன்முதலாக நெற்றியில் கொஞ்சமாக தடவினேன்.அப்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்ட்து.அப்புறம் முகம் முழுக்க தேய்த்து கண்ணாடியில் பார்த்தபோது சந்தோஷமாக இருந்த்து.இவ்வளவு அழகாகவா இருக்கிறோம் நாம்?

தெருவில் நடந்து போகும்போது என்னையே உற்று பார்ப்பதுபோல ஒரு உணர்வு.சந்தோஷம்,தன்னம்பிக்கை எல்லாம் வந்து விட்ட்து.மாலை வந்து கண்ணாடி பார்த்தால் பழைய முகமாக இருந்த்து.ஒரே நாளில் மாறிப்போகுமா என்ன? நான் எப்போதும் வாழ்க்கையில் நம்பிக்கையை மட்டும் இழந்த்தில்லை.தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன்.

 இரண்டு வாரமாகியிருந்த்து.சில நாட்களாகவே முகத்தில் ஏதோ மாற்றம் வந்து கொண்டிருப்பதுபோல உணர்ந்தேன்.அன்று ஞாயிற்றுக்கிழமை.முடி வெட்டுமளவுக்கு வளர்ந்துவிட்ட்து.கடைக்கு போய் முடிவெட்டி ஷேவிங்கும் செய்தாயிற்று! வழக்கத்துக்கு மாறாக எரிச்சல்.சிவப்பாகும்போது அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

முகத்தை கண்ணாடியில் உற்று பார்த்தபோது என் முகத்தில் அவ்வளவு சிவப்பு! இவ்வளவு விரைவாக அதுவும் ரத்தச்சிவப்பு! ஆஹா! என் முகம் சிவப்பாகிவிட்ட்து.கை வைத்து பார்த்தபோது பிசுபிசுவென்று ஒட்டியது.உண்மையில் ரத்தம்தான்.கடிக்காரனை முறைத்தேன்.”முகத்தில் சிறுசிறு கொப்புளம் இருந்திருக்கிறது,நான் என்ன செய்ய முடியும்? பார்த்தால் தெரியவில்ல

 கடையில் இருந்தவர் விளக்கம் கேட்டார்.” ஏதாவது ஒத்துக்கொள்ளாத உணவு சாப்பிட்டீங்களா?” நான் அழகு க்ரீம் பற்றி கூறினேன்.” அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது.உங்களுக்கு அப்படித்தான் என்று நினைக்கிறேன்.இனிமேல் பூசாதீர்கள்’’ என்றார்.எனக்கு சப்பென்று ஆகிவிட்ட்து.இனி நான் சிவப்பாக மாற வழியே இல்லையா

   பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன சிவப்பழகு க்ரீம்கள். பெட்டிக்கடைகள் தோறும் கிடைக்கிறது.ஆனால்,அதை பயன்படுத்தி யாராவது கலர் மாறியிருக்கிறார்களா? அப்போதைக்கு கொஞ்சம் மெழுகு பூசினாற்போல தெரியும் வித்தைக்கு இருக்கும் வரவேற்பை என்ன சொல்வ

   எனக்கு ஏற்பட்ட்து போல ஒவ்வாமை மட்டுமன்றி ,தோல் புற்றுநோய்க்கும் கூட வழி வகுக்கும் என்கிறார்கள்.ப்ளீச்சிங்,வேதிப்பொருட்களை உள்ளடக்கியவைதான் பெரும்பான்மையான க்ரீம்களும்.தோலுக்கும் உடலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதே நிஜம்.எந்த தோல்நோய் நிபுணரும் இவற்றை பரிந்துரைப்பதில்லை மஞ்சள்,சந்தனம்,தேன்,ப்ப்பாளி,தயிர் போன்ற இயற்கைப்பொருட்கள் முகத்துக்கு பொலிவு தருபவை.இயற்கைக்கு நிகர் வேறில்லை.

நான் தூக்கத்தை தொலைக்க காரணமான மூன்று பெண்கள்...!


ஒரு சம்பவத்தை நேரிலோ அல்லதுபுகைப்பட்த்திலோ பார்ப்பதற்கும்,வீடியோவில் காண்பதற்கும்,வித்தியாசம் இருக்கிறது.ஒவ்வொன்றும் நம்மிடம் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் ஆளுமைக்குத் தக்கவாறு மாறுபடும்.சிலரது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நேரில் அவர்களது வார்த்தைகளில் அறியும்போது நாம் பாதிக்கப்படுகிறோம்.

சினிமாவில் மற்றவர்களது துயரங்களைப் பார்த்து அழுபவர்கள் இருக்கிறார்கள்.நெருங்கிய உறவினர் இறப்புக்கும் கதறாத ஆளுமை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.விபத்து,கற்பழிப்பு,கொடுந்துயரம் என்று எத்தனையோ நெஞ்சை உருக்கும் நிகழ்வுகளை படிக்கிறோம்,தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.சில நிமிட உணர்வுகளை தூண்டிவிட்டு அவை மறைந்துவிடுகின்றன.அடுத்த விஷயத்துக்கு தாவி விடுகிறோம்.

துயரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு பஞ்சமில்லை.அதிகம் வாசிக்கப்படாத எனது இடுகை ஒன்றில் இருந்தாலும் அதன் உளவியல் பகுதிகளை அறிவதற்காக மீண்டும் அவற்றைத் தருகிறேன்.

  பட்டம் பெற்ற ஒரு பெண்ணை விலை உயர்ந்த டி.வி,வாசிங் மெஷின்,சகல வசதிகளோடும் உள்ள ஒரு வீட்டிற்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். திருமணமாகி ஆறுமாதம் கழித்து மருத்துவரிடம் அழைத்து வந்தார்கள் .அந்த பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்தது. சிறு நீர் வெளியேறுவதுதெரியவில்லை.நனைந்தபின்னர்வெகு நேரம் கழித்து தெரியவரும்.

பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சிறுநீர் மண்டலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை கண்டறிந்தார். விசாரித்தபோது தாய்வீட்டில் உள்ளபோது அத்தகைய தொந்தரவுகள் எதுவும் இல்லை. கணவன் வீட்டில் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாவதுதான் காரணம் என்று முடிவு செய்து மன நல மருத்துவரிடம் பரிந்துரை செய்தார் மருத்துவர்.

 .மனதில் ஏற்படும் அழுத்தங்கள் அளவு மீறும்போது உடல் மீது வீசிவிடுகிறது என்கிறது உளவியல் உடலில் ஏற்படும் பல நோய்கள் மனம் தொடர்புடையதாக இருக்கலாம். கணவன் , மாமியார் நாத்தனார் ஆகியோர் செய்யும் கொடுமைகளை கொட்டிய பின்னர் அவரது தாய்கூறினார், எங்கள் வீட்டுக்கே வந்து விடுமாறு கூறுகிறேன் ,ஆனால் வரமாட்டேன் என்கிறாள் அந்தப்பெண்ணின் பதில்,"என் தங்கை வேறு இருக்கிறாள்,அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும் வாழாவெட்டி வீட்டில் இருக்கும்போது யார் வருவார்கள்? .

 இரண்டாவது தென் மாநிலம் ஒன்றிலிருந்து இளங்கலை அறிவியலில் பட்டம் பெற்ற பெண் பணிக்காக மும்பை சென்றார். உயர்சாதியை சார்ந்தவர்.தமிழ் நாட்டை ச்சார்ந்த ராணுவ வீரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது.வேலையையும் ,பெற்றோரையும் விட்டு விட்டு காதலனுடன் வந்துவிட்டார்.கணவன் வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பது

 கர்ப்பமானது தெரிந்தவுடன் கர்ப்பத்தை கலைக்க வற்புறுத்தி கலைக்கப்பட்டு விட்டது.-ஏற்கனவே குழந்தைகள் இருக்கிறார்கள் ,மேலும் தேவையில்லை-. ரேஷன் கார்டில் அவரது பெயர் இல்லை.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. தற்போது தீராத நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறார். வசதியான குடும்பத்தில் பிறந்து,கல்வி கற்றும் அடையாளமற்று !

மூன்றாவது,கற்பழிப்பிற்கு சட்டத்தில் ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.தனது மகள் கற்பழிக்கப்பட்டதற்கு தாயால் தண்டனை தரப்பட்டால்? நாளிதழ்களிலோ ஊடகங்களிலோ இவையெல்லாம் வருவதில்லை.அந்தப்பெண்ணுக்கு பதினைந்து வயது.தூங்கிக் கொண்டிருக்கும்போது அவளது அக்காவின் கணவன் கற்பழித்தான்.

ரொம்பவும் மிரண்டு போய்அம்மாவிடம் அழுதுகொண்டே கூறியபோது அம்மாவுக்கும் ஆத்திரமாக வந்தது. பின்னர் அம்மா மகளின் கண்ணைத்துடைத்தவாறு கூறியது "யாரிடமும் சொல்லாதே".

நேரம் கழித்து தனது மருமகன் வீட்டிற்கு வந்தபோது சமையல் செய்து கொண்டிருந்த தாய் கையிலிருந்த கரண்டியை சுவற்றில் சத்தம் வருமளவுக்கு வீசினாள்.கோபத்தில்,"வருகிறவர்கள் ஒழுங்காக இருந்து விட்டு போகவேண்டும் ".கற்பழிப்பு குற்றவாளிக்கும் சேர்த்துதான் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒருதாய் அவ்வளவுதான் தண்டனை தர முடியும்.அவளுக்கு இரண்டு பெண்கள்

 மனிதனின் சமூகமயமாக்கல் குடும்பத்திலிருந்தே துவங்குகிறது.ஏழு வயதிற்குள்ளாகவேமனப்பாங்கில் பெரும்பாலானவை உருவாகிவிடுகிறது.ஆளுமை உருவாக்கத்தில் மிக அதிகமாக தன்தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறான்.முதல் ஆசிரியராக மதிப்பீடுகளை உருவாக்குவது அன்னையன்றி வேறு யாருமில்லை.எனவே தொடர்ந்து பெண்களையும்,சமூக பிரச்னைகளையும் இணைத்தே கவனிக்க வேண்டும்.

நாம் சிந்திப்போம் தோழர்களே .....

சமூகத்தில் எப்போதும் இரண்டாந்தர இனமாக வாய்ப்புகளற்று,தேவையான கல்வியற்று,அங்கீகாரமும் இல்லாத பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் சமூகத்திற்கு மனிதனைஉருவாக்கி வழங்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.வீட்டில் சிறுநீர் கழிப்பது தெரியாமல் மன அழுத்தத்தில் முடங்கிக்கிடக்கும் பெண் தனது குழந்தைகளுக்கு எதை சொல்லித்தருவாள் ?

அனைத்து சமூகப்பிரச்னைகளுக்கும் பலியாடுகளாக இருப்பது பெண்கள்தான்.வறுமையில்,மதுவின் போதையில்,பாலியல் தொழிலில்,மனக்கோளாறுநிலைகள்தரும் வலியில், வரதட்சிணை பேரத்தில்,என்று அனைத்து சிக்கல்களிலும் , நோய்க்கூறுகளிலும் சிதைக்கப்படுவது பெண்கள்தான்.அவள் எப்படிநல்ல மனிதர்களை சமூகத்திற்கு வழங்கமுடியும்?

பணியிடங்களில் ,வீட்டிற்கு வெளியே, நேரும் ஆத்திரங்களையும்,சேரும் உமிழ் நீரையும் மனைவியிடத்தில் கொட்டுகிறான்.உடல் இச்சை தீர்ந்தபின் மாதவிலக்கு துணியாய் இருட்டில் வீசி எறிகிறான்.குரலின்றி ஊமையாய் தன்னிலை இழந்த பெண் கற்பிக்கும் பணியை செய்கிறாள்.அவள் சமூகத்துக்கு வழங்கப்போவது மன வலிமையுள்ள மனிதனையா?

கருவில் நசுக்கிக்கொன்றோம், பாலியல் தொழிலாளிகளாக தெருவில் அலையவிட்டோம்,வரதட்சிணை கேட்டு கொளுத்தினோம்,உடலை காட்ட வைத்து பணம் சம்பாதித்தோம்,அறிவு பெறாமல் முடக்கினோம்,கேலிப்பொருளாக்கி,போகப்பொருளாக்கி விலை பேசி தூக்கி எறிந்தோமே அவள்........அன்னையன்றி வேறு யார்?

செவ்வாய் கிரகத்துக்கு முஸ்லிம்கள் செல்ல தடை...!



செவ்வாய் கிரகத்துக்கு முஸ்லிம்கள் செல்ல ஐக்கிய அரபு நாடுகள் தடை விதித்துள்ளது.

வருகிற 2024–ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கேயே நிரந்தரமாக குடியமர்த்துவதாக டென் மார்க்கை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அதற்கான நேர்காணலும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அதில் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் மத நம்பிக்கை மற்றும் கோட்பாடுகளுடைய முஸ்லிம்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அந்நாட்டு அரசு நன்றி தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் ‘தி மார்ஸ் ஒன்’ இணைய தளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில், செவ்வாய் கிரகத்தில் குடியேற தாங்கள் பெற்ற 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் சவுதி அரேபியா மற்றும் பிற அரபு நாடுகளை சேர்ந்த 500 பேர் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்டம் நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பயணம் உயிருக்கு ஆபத்தை விளை விக்க கூடியது. அதை இஸ்லாம் ஒரு போதும் நியாயப் படுத்தாது. செவ்வாய் கிரகத்துக்கு செல்பவர்கள் அங்கு நிரந்தரமாக தங்க முடியாது. அதன் மூலம் மரணங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் வீரர்கள் வெற்றி கரமாக விண்வெளிக்கு சென்று சாதனை நிகழ்த்தி வருகின்றனர். சவுதி அரேபியா அரச குடும்பத்தை சேர்ந்த வரும் சவுதி அரேபிய விமானியுமான கல்தான் சல்மான் அல் சவுத் கடந்த 1985–ம் ஆண்டு டிஸ்கவரி ஓடம் மூலம் விண்வெளிக்கு சென்று திரும்பினார்.

இவரே விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் வீரர் என்ற பெருமையை பெற்றவர்.

காந்தி செத்துட்டாரா..? அதுவும்அக்டோபர்,30-ல் சுடப்பட்டாரா..? பாட புத்தகத்தி்ல்அவலம்..!



 மகாத்மா 1948-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 -ம் தேதி சுடப்பட்டார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மீது ஜப்பான் அணு குண்டு வீசியது. இது போன்ற தகவல்கள் குஜராத் மாநில பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது பெற்றோரை அதிர்ச்சி்க்குள்ளாக்கி உள்ளது.

தேசதந்தை மகாத்மா சுடப்பட்டது 1948-ம்ஆண்டு ஜனவரிமாதம் 30-ம்நாள் இந்தநாள் தியாகிகள் தினமாக நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அதே போல் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாட்டின் ஹீரோஷீமா , நாகஸாகி ஆகிய இரண்டு நகரங்களின் மீது அமெரிக்கா தான் அணு குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

இவை இரண்டும் மறுக்க முடியாத வரலாற்று சம்பவங்கள். ஆனால் குஜராத் மாநிலத்தின் ஆறாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் மேற்கண்ட தவறான தகவல்களுடன் அச்சிடப்பட்ட புத்தகங்ளையே மாணவர்கள் படித்து வருகின்றனர். இது ஒருசிலஉதாரணம் மட்டுமே மேலும் அறிவியல் உட்பட பல்வேறு பாட புத்தகங்களிம் தவறான தகவல்களே இடம் பெற்றுள்ளது. இது படித்த பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து புகார்கள் மாநில அரசின் கவனத்திற்கு தொடர்ந்து கொண்டு சென்ற வகையில் இரண்டு நபர்கள்கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் பூபேந்தர்சிங்சூடாசாமா கூறிய போதிலும் பள்ளி மாணவர்களிடம் இருந்து தறுவதலாக அச்சிடப்பட்ட புத்த்கங்களை திரும்ப பெறப்படவில்லை.

பள்ளி குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படக்கூடாது. என்பதனை கருத்தில் கொண்டு விரைவாக அச்சிடப்பட்டுள்ளது என கல்வி அதிகாரிகள் கூறினர்.

ஆனால்இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளி இயக்குனரகத்தை சேர்ந்த வசந்த்பட் கூறுகையில் புத்தகங்களை விற்பனைக்காக வெளியி்ல் அனுப்பும் போது அடிப்படை சரிபார்ப்பு பணியை மேற்கொள்வது இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. என தெரிவி்த்தார். மேலும் அரசாங்கமும் இதை கண்டுபிடிக்க எதுவும் செய்யவில்லை என அவர் கூறினார்.

ஆட்-ஆன்ஸ் ( Add-ons ) என்றால் என்ன?



வீடு கட்டுகிறோம்; பார்த்துப் பார்த்து அடிப்படைத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு கட்டி முடிக்கிறோம். பின்னர், சிறிது காலம் கழித்து ஒரு நாய் வாங்கினால் அதற்கென்று சிறு வீடு போன்ற மரத்தினாலான அமைப்பை ஏற்படுத்த எண்ணுகிறோம். அல்லது, வாட்ச்மேனின் தேவை ஏற்பட்டு அவருக்கென்று ஒரு ஷெல்டர் கட்ட வேண்டியதாகிறது. அல்லது, நமக்கு வரும் தபால்களை வாங்கும் பொருட்டு கேட்டில் ஒரு சிறு தபால் பொட்டியைப் பொருத்தி விடும் அவசியம் ஏற்படுகிறது. இது போன்ற, பின் தேவைகளுக்காக, அவை சம்பந்தமான வேலைகளைத் துரிதப்படுத்துவதற்காக சில ஏற்பாடுகளைச் செய்கிறோம் அல்லவா.. அதே போன்ற விஷயம்தான் Add-ons. இவை குறிப்பிட்ட பணியைச் செய்ய விழையும் சிறு / குறு கணினி புரோகிராம்கள். Browser வழங்காத கூடுதல் வசதிகளை இவை தருகின்றன.

பின்வருவன அவற்றில் சில வகைகள்:

Extensions
Themes
Dictionaries
Search bar
Plugins

இவற்றை உருவாக்குபவர் யார்?

Add-ons developers என்று கூறப்படும் தனி மனிதரிலிருந்து பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை இந்த சேவையைச் செய்கின்றனர். பெரும்பாலும், இந்த add-ons இலவசமாகவே கிடைக்கின்றன. நிலாச்சாரலுக்காக தன்னார்வலர்களாக வந்து வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் அன்புள்ளங்களைப் போன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினி ஆர்வலர்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் இந்தப் பணிகளைச் செய்கின்றனர்.

எல்லா browserகளும் இந்த add-onஸை சப்போர்ட் செய்கின்றனவா?

ஆம்! ஏறக்குறைய அனைத்து browserகளும் சப்போர்ட் செய்கின்றன.

உபயோகங்கள்

இவை தரும் வசதிகள் கணக்கிலடங்கா. Firefox, Thunderbird, Sunbird போன்ற உலாவிகளை ஏற்படுத்தித் தந்திருக்கும் Mozilla நிறுவனம் ஏறத்தாழ 7000 ஆட்-ஆன்ஸ்களை தனது தளத்தில் போட்டு வைத்திருக்கிறதாம்! உலகம் முழுவதிலுமிருந்து இதுவரை கிட்டத்தட்ட 1000 மில்லியன் தடவைகள் இந்த ஆட்-ஆன்ஸ் டவுன்லோட் செய்யப்பட்டிருக்கின்றனவாம்!

சில உபயோகமான ஆட்-ஆன்ஸ் :

நெருப்பு நரி (firefox) எனக்குப் பிடித்த உலாவி என்பதால் அது தொடர்பான ஆட்-ஆன்ஸ் பற்றிய சில விவரங்கள் இங்கே.

ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து எளிதாக ஆடியோ/வீடியோக்களை இறக்க..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/7447

FTP மூலம் ஃபைல் டிரான்ஸ்பர் செய்ய..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/684

ஜிமெயிலில் மேம்பட்ட வசதிகளைப் பெற..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8257

செய்ய வேண்டிய வேலைகளை ஞாபகப்படுத்த..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1191

ஜிமெயிலில் மெயில் வந்தால் உடனடியாக தெரியப்படுத்த..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/173

அடிக்கடி செல்லும் தளங்களை புக்மார்க் செய்து கொள்ள..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2410

உலகக் கடிகாரங்களில் நேரம் பார்க்க..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1117

எதை வேண்டுமானாலும் டவுன்லோட் செய்ய..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/201

ஏன் ஆட்-ஆன்ஸுக்கு இவ்வளவு முக்கியத்துவம்..?

உலாவியிலேயே பல வேலைகளை முடித்து விடுவதென்பதுதான் இதன் தனித்துவம். வேறெந்த தனிப்பட்ட சாஃப்ட்வேர்களும் தேவையில்லை. தனிப்பட்ட சாஃப்ட்வேர்களில் கூடுதல் வசதிகள் இருந்த போதிலும், ஆட்-ஆன்ஸ் தருவது அடிப்படையில் போதுமான, எளிமையான பயன்பாடுகள் (sleek and simple). நினைவகத்தையும் அதிகம் சாப்பிடாது என்பது குறிப்பிடத்தக்கது.

உபயோகப்படுத்திப் பாருங்கள்; பயன் பெறுங்கள்

ஆன்ட்ராயிட் ஃபோன்களுக்கு வந்தது சோதனை..!



உலகத்தின் நெ.1 கைப்பேசி / ஸ்மார்ட்ஃபோன் மற்றூம் டேப்ளட்களுக்கான மென்பொருள் ஆன்ட்ராயிட் எனப்படும் கூகுள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு. இது ஜிஎமெஸ் (GMS) என்னும் முறையில் இந்த மென்பொருளை சாம்சங்க் முதல் அனைத்து நான் ஆப்பிள் ஃபோன் நிறுவங்களுக்கு கொடுக்கிறது.

இதன் மூலம் பல வெர்ஷன்கள் வந்தாலும் எல்லா போன்களும் ஒரே ஆன்ட்ராயிட் மென்பொருளை கொடுப்பதில்லை காரணம் லேட்டஸ்ட் மென்பொருளான ஜெல்லி பீன் ஸ்மார்ட் ஃபோன் என்ற போன்களுக்கு மட்டும் தான் உபயோகபடுத்த முடியும். பட்ஜெட் ரக சின்ன ஃபோன்களுக்கு இதை இன்ஸ்டால் செய்ய மினிமம் 512 எம்பி மெம்ரி தேவை . அதனால் ஜின்சர் பிரட் / கிட்காட் / ஃப்ரோயோ எனப்படும் ஆன்ட்ராயிட் 2.2 இன்னும் பல ஃபோன் கம்பெனிகள் உபயோகபடுத்துகின்றனர்.

இதன் மூலம் வெப் தளங்கள் / செர்ச் இஞ்சின்ஸ் / யூனிகோடிங் / ஆப்ஸ் த்யாரிப்பாளர்களுக்கு பெரும் கஷ்டம் உண்டாகிறது. அதனால் உலகத்தின் பெரிய நிறுவனங்கள் இந்த அப்டேட் இல்லாத ஃபோன்கள் அந்த சைட்டை அல்லது ஆப்ஸை உபயோகபடுத்த முடியாது காரணம் பழைய வெர்ஷனை பிளாக் செய்து விடுகின்றனர். இதனால் கூகுள் ஜி எம் எஸ் முறைப்படி தயாரிக்கும் அத்தனை ஃபோன்களும் – லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் இன்ஸ்டால் செய்யணும் புது ஃபோன்கள் 9 மாத டைமுக்குள் இந்த மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என பிரஸ் ரிலீஸ் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தான் தன்னுடைய சஃப்ட்வேர் அப்டேட்டை உடனுக்குடன் எல்லா வெர்ஷனுக்கும் கிடைக்குமாறு செய்கிறது. அதனால் சின்ன சின்ன கொரியன் செட் / சைனீஸ் செட் இந்த வகை ஃபோன்களுக்கு சோதனை தான். ஏற்கனவே ஆன்ட்ராயிட் ஃப்ராக்மென்டேஷன் (Fragmentation) ஒரு பெரிய சோதனை இதுல இது வேற…….

மைதா உணவுகளால் ஏற்படும் விளைவுகள் - எச்சரிக்கை..!



உணவுதான் நம்மை உருவாக்கிருக்கிறது.நீங்கள் யார் என்று கேட்டால் அது உணவுதான்.உண்மையில் நலவாழ்வு உணவைச்சார்ந்து இருக்கிறது.அது நோய்களைத்தீர்மானிக்கிறது.கிருமிகளை எதிர்க்க ஊட்டச்சத்து மிகுந்த உணவு தேவை.உடலின் சீரான வளர்சிதை மாற்றத்தை நம்முடைய சாப்பாடுதான் முடிவு செய்கிறது.இன்று மருந்துக்கடைகளில் குவியும் மக்களை அங்கே அனுப்பி வைக்கக் காரணம் உணவுமுறைதான்.


ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடும்ப மருத்துவர் இருக்கிறார்கள்.ஆனால் முக்கியமாக உணவியல் நிபுணர்கள்தான் தேவை. நீரிழிவு நோயாளிக்கான உணவு, இதய நோயாளிக்கான உணவு என்று ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.அதிக உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு கூடுதலான கலோரி தேவை.ஒல்லியாக இருப்பவர்களுக்கும்,உடல் பருமன் உள்ளவர்களுக்கும் தனித்தனி உணவுப்பட்டியல் வேண்டும்.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை இன்று நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நிலத்தடி நீர் இருந்தவரை பப்பாளி,கொய்யா,வாழை,அகத்தி,நெல்லி போன்றவை வாய்க்கால் ஓரமாகவே கிடைத்துவிடும்.இன்றைய நிலை அப்படி இல்லை.நம்முடைய உணவில் தேவையான உயிர்ச்சத்துக்கள் இருக்கிறதா? என்பது நமக்குத்தெரியாது.

அன்றாட உணவில் ஏ வைட்டமின் எவ்வளவு இருக்கவேண்டும் என்று எத்தனை பேருக்குத்தெரியும்? இன்றைய நம் உணவில் எந்தெந்த உணவு மூலம் அந்த அளவைப்பெற்றிருக்கிறோம்? போதுமான அளவு நார்ச்சத்தை சாப்பிட்டோமா? ஒரு நாள் சரியாக காலைக்கடன் கழிக்காவிட்டால் மனநலனில் கூட மாற்றம் ஏற்படுகிறது.மலச்சிக்கல் வந்தவனைப்போல இருக்கிறான் என்று சொல்கிறோம்.

வெளியில் சாப்பிடுவதே அவ்வளவு ஆரோக்கியமில்லை என்று சொல்கிறோம்.ஆனால் இரண்டு பேரும் வேலைக்குச்செல்லும் சூழலில் வீட்டுக்கு பார்சல் வாங்குவது அதிகரித்திருக்கிறது.உணவகங்கள் அதிகரிக்கின்றன.குழந்தைகளுக்கான தின்பண்டங்களும் பொட்டலங்களை நம்பி இருக்கின்றன.சென்ற ஆண்டு ஒரு பேக்கரி இருந்த வீதியில் இன்று ஐந்து இருக்கின்றன.அத்தனையும் வியாபாரம் கொழித்துக்கொண்டிருக்கின்றன.


வெளியில் வாங்குபவை பெரும்பாலானவை மைதாவால் செய்யப்படும் உணவுகள்தான்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருபதிவில் மைதா நீரிழிவைத்தூண்டுகிறது என்று கேரளாவில் நடைபெறும் போராட்டம் பற்றி சொல்லியிருந்தேன். வலைப்பதிவுகளில் விரிவாக சில பதிவுகள் வந்திருக்கின்றன.இன்று வெகுஜன ஊடகங்களிலும் விவாதமாகிவிட்டது.தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டார்கள்.

புதிதாக வேலைக்காக வெளியூர் வந்த ஒருவர் தினமும் இரவில் பரோட்டா சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.மருத்துவர் ஒருவரது அறிவுரைக்குப்பிறகு அந்தப்பழக்கத்தை விட்டுவிட்டார்.இப்போது  மருத்துவமனைகளில் கூட மைதா உணவுகளைத்தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்படுகிறது.தொற்றுநோயல்லாத நோய்களுக்கான(Non-communicable diseases) திட்டத்தில் முக்கிய தகவல்களாக சொல்லப்படுகின்றன. நார்ச்சத்து,எண்ணெய் போன்றவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


நீரிழிவு அச்சுறுத்தும் விதத்தில் அதிகரித்துவருகிறது.இன்று சமூகப்பிரச்சினையாக கவனம் கொள்ளக்கூடிய நலக்குறைவு அது.உழைப்பு நாட்களை வீணடிப்பது ஒருபுறம்,மருத்துவச்செலவினங்கள் அதிகரிப்பது இன்னொருபக்கம் என்று நெருக்குகிறது.எப்போதாவதுதானே சாப்பிடுகிறோம் என்பது சூழல் காரணமாக அடிக்கடி என்று மாறிவருகிறது.குழந்தைகளுக்கும் இவற்றையே பழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

நம்மைப்போன்ற வளரும் நாடுகளில் உணவுகளைப்பரிந்துரைக்கும்போது கவனம் தேவை.அவை ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை போக்குவதாக இருக்கவேண்டும்.அன்றாடத்தேவையான உயிர்ச்சத்துக்களையும், தாதுக்களையும் வழங்கவேண்டும். உணவுப்பொருள் ஒன்றை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் கவனத்தில் கொள்ளவேண்டியவை இவைதான்.சுவைக்காக மட்டும் ஒரு உணவைப் பரிந்துரைப்பது தனிமனிதனுக்கும்,தேசத்துக்கும் இழப்பை ஏற்படுத்தும்.


வீட்டில் கழிவுநீர் அடைத்துக் கொள்வதை தவிர்க்கும் சில அற்புத வழிகள்..!



நம் ஒவ்வொருவரின் வீட்டிலிம் எதிர்கொள்ளும் வாடிக்கையான பிரச்னைகளில் ஒன்று கழிவு நீர் செல்லும் வழி அடைத்துக் கொள்வது. இதனால் மிகவும் மோசமாக நாற்றம் வீசத் தொடங்கினாலும், இவ்வாறு நடக்கும் போது நாம் செய்து வரும் தினசரி வேலைகளும் பாதிக்கப்படுகின்றன.

இவ்வாறு அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையை சரி செய்ய நமக்கு உடனடியாக தேவைப்படுபவர் ஒரு பிளம்பர். தேடிக் கண்டுபிடித்துக் கூட்டி வந்தாலும், அதிகமான விலையை நாம் இதற்கு கொடுக்க வேண்டியிருக்கும். இது போன்ற சூழல்களில் நாம் என்ன செய்யலாம்?

எங்களைக் கேளுங்கள். இந்த சூழலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் யோசனைகளை நாங்கள் கொடுக்கிறோம். இவை உடனடி தீர்வு தருவதுடன், செலவும் இல்லாதவையாக இருக்கின்றன.


ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு, அதில் 1:3 அளவு வினிகர் மற்றும் 1:3 அளவு சமையல் சோடாவை கலக்கவும். இந்த கலவை உடனடியாக நுரைக்கும். எனவே, நேரத்தை வீணாக்காமல் இந்த கலவையை கழிவு நீர் அடைத்துள்ள இடத்தில் போடவும். இவ்வாறு உருவாகும் நுரை, சாக்கடையில் அடைத்துள்ள அழுக்குகள் மற்றும் முடிகளை நீக்கும். சில மணி நேரங்களோ அல்லது இரவு முழுவதுமோ இந்த கலவையை, அடைத்துக் கொண்டுள்ள இடத்தில் இருக்கச் செய்யுங்கள். இப்பொழுது சூடான தண்ணீரை விடவும். மாற்றாக, நீங்கள் சமையல் சோடாவை முதலில் போட்டு விட்டு, பின்னர் வினிகரை போடலாம்.


உங்கள் வீட்டில் துணிகளை தொங்க விடும் ஹேங்கரை எடுத்து, உங்களுடைய வலிமையைக் காட்டி அதனை நேராக நிமிர்த்தவும். இப்பொழுது அதன் ஒரு முனையை மட்டும் வளைத்து, சிறிய ஊக்கு போன்று உருவாக்கவும். இப்போது ஹேங்கரை சாக்கடை அடைத்துக் கொண்டுள்ள இடத்தில் வைத்து, அடைப்பை நீக்க முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், அங்கே அடைத்துக் கொண்டிருக்கும் அனைத்து விதமான விஷயங்களையும் நீக்க முடியும். ஆனால், இதை செய்யும் போது அடைத்துக் கொண்டிருக்கும் குப்பைகள், அழுக்குகளை வெளியே இழுக்க வேண்டுமே, தவிர, மேலும் உள்ளே தள்ளி விடக் கூடாது. உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அழுக்குகளை வெளியே எடுக்க முயற்சி செய்யுங்கள். இது உங்களுடைய சாக்கடைகளை திறமையுடன் சுத்தம் செய்யும் வழிமுறையாகும்.


இந்த முறையை மிகவும் எச்சரிக்கையுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். சோடியம் ஹைட்ராக்ஸைடு அல்லது காஸ்டிக் சோடா மோசமான எரிச்சலை உருவாக்கும் குணம் கொண்டுள்ளதால், இந்த வழிமுறை மிகவும் திறனுள்ளதாக இருந்தாலும், கவனம் தேவைப்படுவதாகவும் உள்ளது. முதலில், உங்களுடைய கைகள் மற்றும் கண்களை பாதுகாக்கும் வகையில் இரப்பர் உறைகளை மாட்டிக் கொள்ளவும். ஒரு வாளியை எடுத்து, அதில் 3/4 அளவிற்கு குளிர்ந்த நீரை ஊற்றவும். இந்த தண்ணீரில் 3 கப் காஸ்டிக் சோடாவை போட்டு, நன்றாக கலக்கவும். இந்த கலவையை மெதுவாக நுரைக்கத் தொடங்கும் மற்றும் வெப்பத்தையும் உருவாக்கும். இந்த தண்ணீரை எடுத்து அடைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் ஊற்றி, சுமார் 30 நிமிடங்கள் பொறுத்திருக்கவும். பின்னர் சூடான தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்யவும். தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை இதை செய்யவும்.


1/2 கப் சமையல் சோடாவுடன், 1/2 கப் உப்பை சேர்த்து கலக்கவும். அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையில் இந்த கலவையை ஊற்றி 10-20 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர், சூடான தண்ணீரை ஊற்றவும். சமையல் சோடா, உப்பு மற்றும் சூடான தண்ணீர் ஆகியவை இணைந்து புரியும் வேதி வினையால் சாக்கடைகளை அடைத்துக் கொண்டிருக்கும் அழுக்குகள் கரைந்து வெளியேறி விடுகின்றன.


அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடையை அல்லது கழிவு நீரை சுத்தம் செய்ய உதவும் மிக எளிமையான வழியாக இது உள்ளது. எளிமையான வழி என்றாலும் திறன் மிக்க வழியாக இது உள்ளது. சிறிதளவு தண்ணீரை எடுத்து (கெட்டில், ஸ்டவ் அல்லது மைக்ரோ வேவ்)-ல் கொதிக்க வைக்கவும். இந்த சூடான தண்ணீரை மெதுவாக அடைத்துக் கொண்டிருக்கும் குழாய்க்குள் விடவும். 2 அல்லது 3 நிலைகளுக்குள், சூடான தண்ணீர் வேலை செய்யத் தொடங்கி விடும். இது மிகவும் வேகமான மற்றும் எளிமையான முறையில் சாக்கடையை சுத்தம் செய்யும் வழிமுறையாகும்.

ராஜபக்சே மகனுடன் தமிழ் நடிகை இருக்கும் ஆபாச சிடி..? பரபரக்கும் திரையுலகம்..!



ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே மற்றும் ஒரு தொழிலதிபருடன் தமிழ் நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் பலான சிடி சென்னையில் சில முக்கிய பிரமுகர்களிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

 தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார். ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கைக்குச் சென்றார்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை போன அந்த நடிகைன், கிட்டத்தட்ட ராஜபக்சே அன்ட் கோவின் பிஆர்ஓவாகவே மாறி, அங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் பிரச்சாரம் செய்தார்.

ஆனால் போன இடத்தில் அவர் வேறு வேலைகளில் பிஸியாக இருந்ததாகவும், அதற்கான ஆதாரம் சிடியாக சிக்கியுள்ளதாகவும் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சிடிதான் இப்போது சென்னையின் விவிஐபிகள் சிலரின் கஸ்டடியில் உள்ளதாம். அந்த சிடியில், ஓட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம்.

இதேபோல பல ஆயிரம் கோடி ரூபாவுடன் உலகம் சுற்றும் வாலிபனாகத் திரியும் ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேயுடன் அந்த நடிகை உள்ள படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம்.

இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டால், வழக்கம் போல அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக பதில் வருகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர்.

குளியலறையை காதல் வயப்படுத்தும் படி அமைக்க சில டிப்ஸ்...!




உங்கள் துணைவருடன் ஒரு காதல் வயப்படுத்தும் குளியலறையில் இருப்பது தான் மிகுந்த நெருக்கமான மற்றும் உணர்ச்சிகரமான நேரமாக அமைகிறது. குளிர்காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் இத்தகைய அழகான குளியலை நாம் அனுபவிக்க சரியான இடம் தேவைப்படுகிறது. உங்கள் காதலர் அல்லது துணைவருடன் உல்லாசமாக இருப்பதற்கு இத்தகைய ஏற்பாடுகளை நமது வீட்டிலோ அல்லது ஹோட்டலிலோ செய்ய முடியும். எந்த அளவிற்கு நமது துணைவருக்கு வசதியாக உள்ளதோ அந்த வகையையே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் ஏற்பாடுகள் மிகுந்த உணர்வுபூர்வமாகவும் மற்றும் நெருக்கத்தை கொண்டு வரும் வகையிலும் இருக்க வேண்டும்.

பொதுவாக குளியலறையை அலங்கரிக்க நமக்கு தேவையான பொருட்களாக இருப்பவை சிவப்பு ரோஜாக்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஆகியனவாகும். அலங்கரிக்கும் பொருட்களை பயன்படுத்தி குளியலறையை காதல் மயமாக மாற்ற முடியும். இந்த முழு அமைப்பும் நமக்கு அழகூட்டுபவதாகவும், வசதியாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். நாம் அங்கு செலவு செய்யும் நேரம் அழகாகவும், சிறந்தாகவும் நமது கனவு குளியலறையாகவும் மாற்றி அமைக்க வேண்டியதும் நல்லதாகும். இங்கு குளிப்பது ஓய்வளிப்பதாகவம் மற்றும் அழகானதாகவும் இருக்க வேண்டும்.

மிகுந்த கவர்ச்சியூட்டும் யோசனைகளை கொண்டு உங்கள் அன்புக்குரியவரின் மடியில் சூடான நீர் கொண்ட தொட்டியில் நேரம் கழிக்கும் வண்ணம் குளியலறையை மாற்றும் யோசனைகள் இதோ!

சிவப்பு காதல் ரோஜா

 சிவப்பு நிறமும், ரோஜா மலரும் காதலை வெளிப்படுத்துவதில் ஒன்றுக்கு ஒன்று இணையான விஷயங்களாக உள்ளன. காதலை தூண்டும் வகையில் சிவப்பு நிற மெழுகுவர்த்திக்கள் நாம் அங்கே ஏற்றி வைக்கலாம். குளியலறையின் வாசலில் ரோஜா இதழ்களை கொண்டு இதயம் போன்ற வடிவத்தை அமைக்கலாம். அறையின் நடுப்பகுதியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கலாம். குளியல் தொட்டி இருந்தால் இதில் ரோஜாவின் சாற்றை கலந்து சிவப்பு மற்றும் வெள்ளை நிற இதழ்களை பரப்பி விட்டு சிறந்த குளியலுக்கு ஏற்பாடு செய்யலாம். இந்த வகையில் நாம் காதல் வயப்படுத்தும் படி நமது குளியலறையை தயார் செய்ய முடியும்.

லாவெண்டரின் சிறப்பு 

பாலுணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ள லாவெண்டர் நமது உணர்ச்சியை தூண்டி காதல் வயப்பட வைக்கிறது. காதலை வெளிப்படுத்த மற்றும் அமைதியான சூழலை கொண்டு வர லாவெண்டர் சாற்றைத் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். வாசனை தரும் மெழுகுவர்த்திகள் மற்றும் பல வடிவங்கள் கொண்ட மெழுகுவர்த்திகளையோ அல்லது மஞ்சள் நிறத்தில் மெல்லியதாக ஒளிரும் விளக்குகள் ஆகியவற்றை பயன்படுத்தி அலங்கரிக்கலாம். பூச்செண்டுகளைக் கொண்டு கண்ணாடி மற்றும் ஜன்னல் அருகிலும் வைத்து அலங்கரித்தால் அது சிறப்பூட்டும் வகையில் அமையும். லாவண்டர் சாற்றை நாம் குறைந்த அளவு பயன்படுத்தினால் போதும் அதிகமாக பயன்படுத்தும் போது, நாம் எதிர்ப்பார்த்த சூழலை பெற முடியாமல் போகலாம்.

வீட்டின் பின்புறம்

 திறந்த வெளியில் ஒரு வேளை யாரும் இல்லாத இடமாக இருந்தால் நிச்சயம் அந்த இடத்தை இதற்காக பயன்படுத்தலாம். ஒரு குளியல் தொட்டியை தயார் செய்து திறந்த வெளியில் வைத்து அலங்கரிக்கலாம். மாலை அலலது இரவு வேளைகள் தான் இதற்கு சரியான நேரம். பூக்களாலும், விளக்குகளாலும் அந்த இடத்தை அலங்கரிக்கலாம். அந்த இடத்தை சுற்றி மெல்லிய துணியாலான வலையை கொண்டு ஒரு கூடாரம் போல் அமைத்து அதற்குள் குளியல் தொட்டியை வைக்கலாம். தொட்டிக்கு அருகே ஒரு மேசை அமைத்து நாம் குடிப்பதற்கு தேவையான மதுபானம் மற்றும் இரண்டு கண்ணாடி டம்ளர், பூச்செண்டு ஆகியவற்றை வைக்கும் போது அலங்காரம் முழுமையடைகிறது.

 நீச்சல் குளம்

 வீட்டிற்குள் ஒரு நீச்சல் குளம் இருந்தால் நீங்கள் நிச்சயம் பாக்கியசாலி தான். உங்கள் காதலை வெளிப்படுத்த இது சிறந்த இடமாக மாற்ற முடியும். நீச்சல் குளத்தைச் சுற்றிலும் வண்ணம் நிறைந்த வளவளப்பான துணியை கொண்டு அலங்கரிப்பதும் மற்றும் இதய வடிவம் கொண்ட பலூன்கள், மதுபானங்கள், மங்கலான விளக்குகள் ஆகியவை கொண்டும் அலங்கரிக்கலாம். இதனுடன் சேர்த்து மெல்லிய இசையையும் நாம் அமைத்தால் அது செவிக்கும் அழகூட்டும் வண்ணம் அமைகின்றது. பல ஜோடிகளும் எதிர்பார்க்கக் கூடிய காதல் மிகுந்த குளியலாக இது இருக்கும்.

மெல்லிய இசை

 மிகவும் எளிமையான வகையில் வெறும் மங்கலான ஒரு விளக்கையும், கொஞ்சம் மெல்லிய இசையையும் குளியலறையில் ஏற்படுத்தினால் போதும். அதுவே சிறந்த மற்றும் எளிமையான பாலுணர்வை தூண்டுவதாகவும், காதல் வயப்படுத்துவதாகவும் அமைகின்றது. இந்த அலங்காரத்திற்கு மிகப்பெரிய அலங்காரம் ஒன்றும் தேவை இல்லை. எளிமையான வகையில் அலங்கரித்து குளியல் அறையை காதல் வயப்படுத்தி மகிழ்ந்து என்றும் மறக்கமுடியாத நினைவுகளை செதுக்குங்கள்.

ரூ.1 இலட்சம் கோடிக்கு வாட்ஸ் அப்பை வாங்கியது பேஸ்புக்...!



இன்றைக்கு உலகின் பணக்கார நிறுவனமான பேஸ்புக் வாட்ஸ் அப்பை(Whats App) 19 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.

இந்திய தொகையில் இதை கணக்கிட்டால் ரூ.1 இலட்சம் கோடியை தாண்டும்.

இதுவரை டெக் உலகில் எதற்கும் கொடுக்கப்படாத இவ்வளவு தொகையை கொடுத்து பேஸ்புக் வாட்ஸ் அப்பை வாங்கியுள்ளது.

இந்த அறிவிப்பை பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இன்றைக்கு வாட்ஸ் அப்பின் வளர்ச்சியானது பேஸ்புக் உடன் ஒப்பிட்டால் வாட்ஸ் அப் பேஸ்புக்கை விட 5 மடங்கு வேகமாக சந்தையில் வளர்ந்து வருகிறது.

அதற்காகதான் மார்க் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு SnapChat யை மார்க் 3 பில்லியன் டாலர்களுக்கு கேட்டார்.

 ஆனால் அவர்கள் தர மறுத்துவிட்டனர் தற்போது அதைவிட மிகப்பெரும் அப்ளிகேஷனான வாட்ஸ் அப்பை மார்க் பிடித்திருப்பது தான் இன்றைக்கு உலகின் மிகவும் ஹாட் செய்திங்க.

பேனா, நோட்டு வைத்து வழிபட்டால் அதிக மதிப்பெண் பெறலாம்..!



தமிழ்நாடு:- கடலூருக்கு பக்கத்தில் உள்ள திருவஹீந்திரப்புரத்தில், ஒளஷதகிரி எனும் அழகிய சிறிய மலையின் மீது எழுந்தருளியிருக்கிறார் ஸ்ரீஹயக்ரீவர். கருட பகவான், உபதேசம் செய்த ஹயக்ரீவ மந்திரத்தை, ஸ்வாமி தேசிகன் ஜபித்து கொண்டிருக்க, ஸ்ரீஹயக்ரீவர் அவர் முன்னே காட்சி அளித்தார். அந்த நொடியில் உருவானதுதான்

`ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்.'

`ஜ்ஞாநாநந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ
வித்யாநாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே'

என்று தொடங்கும் ஹயக்ரீவ ஸ்துதி.

இதை பாராயணம் செய்துவிட்டு செல்பவர்களுக்கு நிச்சயம் பரீட்சை பயம் என்பதே இருக்காது.

இந்த ஸ்லோகத்தின் பொருள் இதுதான்: `ஸ்வரூபத்தில் ஞானமும், ஆனந்தமும் ஆனவரும் ரூபத்தில், சுத்த ஸ்படிகம் போன்ற வெண்மையை உடையவரும், ஞானத்தின் அதிஷ்டான தேவதையுமான ஹயக்ரீவனை உபாசிக்கிறோம்.

' கருடனால், கொடுத்தருளப்பட்ட யோகசனத்தில் அமர்ந்திருக்கும் ஹயக்ரீவமூர்த்தியை இன்றும் திருவஹீந்திரபுரத்தில் தரிசிக்கலாம். சரியாக வாய் பேச இயலாத பலரும், படிப்பே ஏறாது என முத்திரை குத்தப்பட்டவர்களும் இங்கே வந்து ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரை தரிசித்து நல்ல வாக்கு வன்மையும், புத்தி கூர்மையும் உடையவர்களாக திகழ்ந்து வருவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

இங்கே ஹயக்ரீவருக்கு தேனை சமர்ப்பித்து அந்த தேனை குழந்தைகளின் நாக்கில் தடவி வந்தால், அக்குழந்தை கல்வியிலும் பல கலைகளிலும் சிறந்து விளங்கி வருவதையும் காணலாம். குதிரை முகம் கொண்டருளும் ஹயக்ரீவர், வேகமாக பேசுவதற்கும், வேகமாகவும், விவேகமாகவும் சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் அருளிக் கொண்டிருக்கிறார்.

எல்லா கடவுள்களுக்கும், பூக்களும், பழங்களும் சமர்பிப்பது வழக்கம் ஆனால், ஹயக்ரீவர் சன்னதியில் அவர் திருப்பாதங்களை எப்போதுமே அலங்கரிப்பது என்ன தெரியுமா? பேனாக்கள், பென்சில்கள், நோட்டுப் புத்தகங்கள், பரீட்சை நேரங்களில் ஹால் டிக்கட்டுகள்.

ஆம், கல்வி கடவுளின் காலடியில் கல்வி சம்பந்தப்பட்ட பொருட்களை சமர்பித்து, அதை தங்கள் இல்லங்களுக்கு திருப்பி எடுத்துச் சென்று, கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கான மாணவமாணவிகள். வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவரின் கழுத்தை அலங்கரிப்பது பெரும்பாலும் ஏலக்காய் மாலையாகத்தான் இருக்கும்.

நம் மனம் மணக்க செய்பவனுக்கு ஏலக்காய் மாலையை சமர்பிப்பது நல்லதுதானே. ஹயக்ரீவரை சென்று தரிசிப்பவர்களுக்கும் சரி, அவரின் ஸ்லோகத்தை பாராயணம் செய்து வருபவர்களுக்கும் சரி, நல்ல மேன்மையான எண்ணங்கள் தோன்றுவது உறுதி.

தீய எண்ணங்கள் எனும் இருள் நீக்கி, மனத்தில் தூய எண்ணங்கள் என்னும் ஓளியை ஏற்றக் கூடியவர், அந்த ஹயக்ரீவ மூர்த்தி! ஸ்ரீஹயக்ரீவனுடைய திருவடி துகள்கள் பிரம்மன் எழுதிய தலை எழுத்தையும்கூட மாற்றக்கூடிய சக்தி படைத்தது என்பதாலேயே, இவரின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட பூ மற்றும் துளசியை தங்கள் தலையில் பலரும் சூடி கொள்கிறார்கள்.

கடலூரிலிருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தலம் உள்ளது. தேவநாதப் பெருமாள், ஹேமாம்புஜவல்லித் தாயார்; கோயில் 108 திவ்ய க்ஷேத்திரங்களில்ஒன்று; கருடநதி, சேஷ தீர்த்தம் என்ற நீர்நிலைகளால் புகழ்பெற்றவை என்றாலும் அதைவிட இங்கிருக்கும் ஆஷாட மலை (ஆஞ்சநேயர் யுத்த நேரத்தில் சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கிச் செல்கையில் கீழே விழுந்த ஒரு துண்டு மலையாதலால், இந்த மலைக்கு மருத்துவ குணம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.) ஹயக்ரீவரும், நிகமாந்த மஹா தேசிகர் சன்னதியும் மேலும் சிறப்புப் பெற்றவை.

இங்கே தனது இளம்வயதில் கருட மந்திரத்தை ஜபித்து, கருடரை தரிசித்த தேசிகர், அவராலேயே ஹயக்ரீவ மந்திரம் உபதேசிக்கப்பட்டு, விஷ்ணுவை இங்கே ஹயக்ரீவராக கண்டு அருளப்பெற்றவர். தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பாண்டித்யம் பெற்ற தேசிகர் தன் வாழ்வில் முக்கியமான நாள்களை இங்கே தங்கியும், முக்கிய பாசுரங்களை இங்கே இயற்றவும் செய்தவர்.

அவர் வாழ்ந்த வீடு இன்றும் தேசிகன் திருமாளிகையாகவும், கட்டிய கிணறும் இன்னும் இங்கே இருக்கிறது. தேசிகர் புரட்டாசி திருவோணத்தன்று ரத்னாங்கியில் ஒவ்வொரு படியாக மலையேறி ஹயக்ரீவரை தரிசிக்கச் செல்கிறார்.

ஹயக்ரீவருக்கு ஸ்ரவண பௌர்ணமியும்(அவதார தினம்), நவராத்திரி ஒன்பதாம் நாள் மஹாநவமியும் விசேஷம். விஜயதசமி அன்று அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குழந்தைகளின் வித்யாரம்பத்தை இங்கே மலையேறி ஹயக்ரீவரை வழிபட்டே துவங்குகின்றனர்.

1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான உணவு பற்றி....!



1 முதல் 3 வயது வரை குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியம். குழந்தைகளின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 100 கலோரி, 1.2 கிராம் புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

சாப்பிடாமல் அடம்பிடிக்கும் குழந்தைகளின் எதிர்ப்புச் சக்தி குறையும். இதைத் தவிர்க்க மஞ்சள் நிற பழங்களைக் கொடுக்க வேண்டும். தக்காளி, ஆரஞ்சு தரலாம். கேரட், உருளைக்கிழங்கு, மீன், கீரை ஆகியவற்றையும் சேர்க்க வேண்டும். இவற்றிலிருந்து வைட்டமின் ஏ கிடைக்கிறது.

கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பால் தர வேண்டும். இது, நரம்பு வளர்ச்சிக்கு நல்லது. காலையில் ஒன்றேகால் கப் சாதம் மற்றும் மசித்த உருளைக் கிழங்கு தரலாம். காய்கறி சேர்த்து சமைத்த உப்புமா, சேமியாவும் தரலாம்.

இடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த சுண்டல், கால் கப் பழச்சாறு மற்றும் கால் கப் பழக்கலவை தரலாம். மதிய உணவில் ஒரு முட்டை/மீன்/மட்டன் தரலாம். கீரையை நன்கு வேக வைத்து சாதத்துடன் பிசைந்து தரவும். வெண்ணெய், எண்ணெய் வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.
 
நண்பேன்டா