Thursday 6 February 2014

காரை தொலைத்த மனைவியின் சோகக் கதை – சிரிக்க மட்டும்..!



ஒரு பெண் தனக்கு நடந்த சோகக் கதையை இங்கே விவரிக்கிறாள்.. அவளுடன் சேர்ந்து நாமும் பயணிப்போம்..

carநான் எனது அலுவலக மீட்டிங்கை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். வழக்கம் போல எனது பையில் கார் சாவியை தேடினேன். என்னால் ஆன மட்டும் பையின் அனைத்து மூலை முடுக்குகளையும் தேடிவிட்டேன்… இல்லைவே இல்லை என்று சொல்லிவிட்டன கை விரல்கள். அந்த விரல்களுக்கு கண்ணில்லை என்று நினைத்து பையை ஒரு முறை கண்களால் துளாவினேன். இல்லை கண்களும் அதே பதிலைத் தான் சொன்னது.

மூளையில் திடீரென ஒரு  பல்ப் எரிந்தது… ஒரு வேளை காரிலேயே சாவியை விட்டு விட்டு வந்திருப்பேனோ.. (அய்யோ எத்தனையோ முறை காரில் சாவியை வைத்து விட்டு வறாதே என்று கணவர் திரட்டியுள்ளார். காரிலேயே சாவி இருந்தால் சாவி தொலையாது என்பது எனது நினைப்பு. ஆனால் காரே தொலைந்துவிடும் என்பது அவரது தரப்பு).. சரி இறுதியாக ஓடிச் சென்று பார்க்கிங்கில் தேடினேன்.. அய்யோ எனது கணவர் தரப்பு தான் சரி.. காரை காணவில்லை.. ஒரு நிமிடம் மூளையில் எரிந்து கொண்டிருந்த பல்ப் பளிச்சென்று எரிந்து வெடித்தது.

என்ன செய்வது என்று தெரியாமல், காவல்துறைக்கு போன் செய்து, என் பெயர், விலாசம், கார் எண், காரை பார்க் செய்த இடம், காணாமல் போன நேரம் எல்லாவற்றையும் விரிவாகக் கூறினேன். காவலரும் உடனடியாக நான் இருக்கும் இடத்துக்கு வருவதாகக் கூறினார்.

சற்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு எனது கணவருக்கு போன் செய்ய முடிவு செய்தேன். போனை எடுத்து கணவருக்கு ரிங் செய்தேன். எடுத்த வேகத்தில், என்னங்க கார் சாவியை காரிலேயே வைத்து விட்டு சென்றுவிட்டேன். வந்து பார்த்தால் காரைக் காணவில்லை என்று கொட்டினேன்.

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு இடியட் என்று மட்டும் காட்டமாக பதில் வந்தது.

நானே ஆரம்பித்து… மன்னிச்சிடுங்க.. என்ன வந்து அலுவலகத்தில் இருந்து கூட்டின் போறீங்களா என்று கேட்டேன்.
அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில் என்னை சுக்குநூறாக்கியது… “ஹேய்.. இன்று காலை நான் தான் உன்னை காரில் கொண்டு வந்து அலுவலகத்தில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். இங்கு போலிஸ் காரர் உன் காரை திருடிவிட்டதாக என்னை பிடித்து வைத்துள்ளார்.. அவரிடம் உண்மையை விளக்கிவிட்டு உன் அலுவலகத்துக்கு வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன்” என்றாரே பார்க்கலாம்.

என்ன வட போச்சா…

காப்பீட்டு பணத்துக்காக கணவரை கொன்ற பெண்ணுக்கு விஷ ஊசி..!


காப்பீட்டு பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒருவரை திருமணம் செய்து, அவரைக் கொன்று கால்வாயில் வீசிய சுசன்னா பாசோ (59) என்ற பெண்ணுக்கு அமெரிக்காவில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

லூயிஸ் முசோ என்ற நபரை, 1998ஆம் ஆண்டு, அவரது காப்பீட்டுத் தொகைக்காக கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவரது மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சுசன்னா பாசோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 1400பேரில், 14வது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு நம்மில் நிறைய பேருக்கு தெரியாது..!

பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு நம்மில் நிறைய பேருக்கு தெரியாது..!


இப்புவியிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் தன்மேல் தாங்கி நிற்கும் இந்த பூமித்தாய்க்கு ஒரு விசேச சக்தி உண்டு, அது என்னவென்றால் இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தன்னுள் (பூமிக்குள்) ஏற்றுக்கொண்டு, அதனை மக்கி அழித்து மண்ணோடு மண்ணாக்கும் வல்லமை தான் அது. அதேவேளையில் செயற்கையாக மனிதன் உருவாக்கும் பெரும்பாலான பொருட்களை இதைப்போல புவியினால் மக்கச்செய்து அழிக்க முடிவதில்லை. அப்படி மனிதனால் தயாரிக்கப்பட்டு புவியினால் எக்காலத்திலும் சிதைத்து அழிக்க முடியாத பொருட்களில் ஒன்று பிளாஸ்டிக் (Plastic). அது எப்படி உருவானது என்பதைத்தான் இன்றைய பதிவுனூடாக நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம் ..!

மனிதன் பெரும்பாலான பொருட்களை உருவாக்கும் மூல சூத்திரத்தை இயற்கையிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறான் என்றால் மிகையில்லை. அந்த வகையில் பறவையை கண்டு விமானத்தையும், எதிரொலி கேட்டு வானொலியையும் படைத்தான்.அந்த வகையில் மனிதனுக்கு பிளாஸ்டிக்கை படைத்திடும் எண்ணம் தோன்றியதும் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்கை’ கண்டுதான் என்றால் பொய்யில்லை. அட.., அது என்ன ‘இயற்கை பிளாஸ்டிக்’ இதுவரை கேள்விப்பட்டதில்லையே என்கிறீர்களா.? மாடுகள் (Cow) உள்ளிட்ட கால்நடைகளின் (Cattle) கொம்புகள் (Horns) தான் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்’ ஆகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் கால்நடைகளின் (குறிப்பாக மாடுகளின்) கொம்புகளை பற்றி துவங்கிய ஆய்வுகள்தான் பிற்காலத்தில் பிளாஸ்டிக் உருவாக மூலகாரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை. பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் கால்நடைகளின் கொம்புகள், பால்புரதங்களால் (Casein) தான் உருவாக்கப்படுகிறது என்பதை பதினெட்டாம் நூற்றாண்டு வாக்கில் மனிதன் தெரிந்துகொண்டான். கால்நடைகளின் கொம்புகள் பிளாஸ்டிக்கின் தோற்றத்தை ஒத்துக் காணப்பட்டாலும் கூட அவற்றின் கொம்புகள் மக்கும் திறன் கொண்டவை …!

இதைத்தொடர்ந்து இயற்கையாக ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் ரப்பர் பாலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் முயற்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வேதியல் வல்லுனர்கள் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 1839-ஆம் ஆண்டு சார்லஸ் குட்இயர் (Charles Goodyear, 1800 – 1860 AD) என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (American Inventor) ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் பாலுடன் (Rubber Milk) கந்தகம் (Sulfur) கலந்து சூடாக்கி வல்கனைசிங் ரப்பர் (Vulcanizing Rubber) என்ற ஒருவகை ரப்பரை தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புதான் செயற்கை பிளாஸ்டிக் உருவாக்கத்திற்க்கு ஒரு ஊன்றுகோலாக அமைந்தது என்று சொல்லலாம்.

சார்லஸ் குட்இயரின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக்கொண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் (Alexander Parkes, 1813 – 1890 AD) என்ற உலோகவியல் வல்லுனர் (Metallurgist Specialist) உலகமே வியக்கும் வண்ணம் பார்க்ஸின் (Parkesine) என்று அழைக்கப்பட்ட உலகின் முதல் செயற்கை பிளாஸ்டிக்கை 1856-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மரத்தாதுக்களுடன் (Cellulose) நைட்ரிக் அமிலத்தை சேர்த்து சூடாக்கி இதனை அவர் தயாரித்திருந்தார். இந்த பிளாஸ்டிக், வெப்பப்டுத்தும்போது இளகும் தன்மைகொண்டதாகவும் குளிர்விக்கும் போது இறுகி மீண்டும் தனது பழைய கடினதன்மையை எட்டும் தன்மைகொண்டதாகவும் இருந்தது, இதனால் பிளாஸ்டிக்கை வேண்டிய தோற்றத்தில் சுலபமாக வடிவமைத்துக்கொள்ள முடிந்தது.

இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் மாநகரில் 1862-ஆம் ஆண்டு நடந்த உலக சர்வதேச கண்டுபிடிப்பு கண்காட்சியில் (Invention of World Great International Exhibition, London) தனது இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிப்பை பகிரங்கமாக வெளியுலகிற்கு செய்து காட்டினார். அவரது இந்த கண்டுபிடிப்பு அந்த ஆண்டு சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றது. தொடர்ந்து 1856 – ஆம் ஆண்டு ‘Parkesine Company’ என்ற பெயரில் உலகின் முதல் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பனியை துவக்கி பிளாஸ்டிக் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். இவரது செயமுறைப்படி பிளாஸ்டிக் தயாரிக்க அதிக அளவில் மரத்தாதுக்கள் (Cellulose) தேவைப்பட்டதால் இவரது நிறுவனம் மிகக்குறைந்த அளவே பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய முடிந்தது, இதன் காரணமாக வணிகரீதியில் இவரது பார்க்ஸின் பிளாஸ்டிக் (Parkesine Plastic) வெற்றிபெற முடியாமல் போய்விட்டது.

பிளாஸ்டிக் தயாரித்தலின் அடுத்தகட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எட்டப்பட்டது. தற்போது இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி உட்சபச்ச ஜிரத்தில் இருக்கிறதோ அதுபோல பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு உட்சபச்ச ஜிரத்தில் இருந்தது. அப்போது பில்லியர்ட்ஸ் விளையாட தேவைப்பட்ட பந்துகள் யானையின் தந்தங்களிளிருந்து (Elephant Tusk) தான் தயாரிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரிப்பதற்க்காகவே படுகொலை செய்யப்பட்டது. யானைகளின் நிலையை எண்ணி வருத்தப்பட்ட அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ஜான் வெஸ்லி ஹையாட் (John Wesley Hyatt, 1837 – 1920 AD) இதற்க்கு மாற்று வழி கண்டறிய தீவிரமாக முயற்சித்தார். தொடர்ந்து ஜான் வெஸ்லி, அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக் கொண்டு 1868-ஆம் ஆண்டு பருத்தியிலிருந்து (Cotton) பிரித்தெடுக்கப்பட்ட செல்லுலோஸுடன் (Cellulose) நைட்ரிக் அமிலம் (Nitric Acid) மற்றும் கற்பூரம் (Camphor) ஆகியவற்றை சேர்த்து செல்லுலாய்ட் (Celluloid) என்ற புதியவகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.

இவரது இந்த கண்டுபிடிப்பை பற்றி கேள்விப்பட்ட அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் வெஸ்லியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு 1868-ஆம் ஆண்டு இறுதிவாக்கில் செல்லுலாய்ட் பிளாஸ்டிக்கில் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரித்து ‘Parkesine Company’ மூலமாக விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இன்றளவும் டேபிள் டென்னிஸ் பந்துகள் இவர்கள் தயாரித்த அதே தொழில்நுட்ப முறையை பயன்படுத்தித்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புகைப்படக்கருவி (Camera), பேனா (Pen), பொம்மைகள் (doll) உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது. மேலும் மோசன் பிக்சர்ஸ் (Motion Picture) மூலம் 1882-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்பட தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட புகைப்படச்சுருள் (Photo Reel) இவர்கள் தயாரித்த பிளாஸ்டிக்கை பயன்படுத்திதான் தயாரிக்கப்பட்டது. இவரது கண்டுபிப்பின் மகத்துவத்தை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட அமெரிக்க அரசாங்கம் 1914-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேதியல் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் உயரிய விருதான ‘பெர்கின் மெடலை’ (Perkin Medal) வழங்கி கெளரவித்தது.

அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் மற்றும் ஜான் வெஸ்லி ஹையாட் ஆகியோரது கண்டுபிடிப்புகளை முன்மாதிரியாகக்கொண்டு இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சின்தடிக் பிளாஸ்டிக் (Synthetic Plastic) எனப்படும் 100% செயற்கை பிளாஸ்டிக்கை, பெல்ஜியத்தை சேர்ந்த வேதியல் வல்லுனரான ஹென்றிக் பேக்லேண்ட் (Hendrik Baekeland, 1863 – 1944 AD) என்பவர் 1907 ஆம் ஆண்டு கண்டறிந்தார். பேக்லைட் (Bakelite) என்று அழைக்கப்பட்ட இவரது பிளாஸ்டிக்கில் தாவரதாதுக்கள் (Cellulose), பெனோ-பார்மால்டிகைட் (Pheno-Formaldehyde), மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகிய மூலக்கூறுகள் அடங்கியிருந்தது. மிகச்சுலபமான தயாரிப்பு முறைகள் மற்றும் மிகக்குறைந்த விலை ஆகியவற்றின் காரணமாக ‘பேக்லைட்’’ வணிகரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரேடியோ தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் இந்த வகை பிளாஸ்டிக் மூலம் தான் முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. இதன் 100% மின்கடத்தாத்திறன் பெரும்பாலான எலெக்ட்ரிகல் உபகரணங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 1926-ஆம் ஆண்டு பாலிவினைல் குளோரைடு (Polyvinyl Chloride, known as PVC Plastic (PVC Pipes)), வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் முறையை வால்ட்டர் செமொன் (Walter Semon) என்பவர் கண்டறிந்தார். இதன் பிறகுதான் குழாய்கள் (Pipe) தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து 1937-ஆம் ஆண்டு பாலியூரித்தீன் (Polyurethane) வகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓட்டோ பாயர் என்ற ஜெர்மனியை சேர்ந்த வேதியல் வல்லுனர் கண்டறிந்தார், இதன் பிறகு பாலிஸ்ட்ரீன் (Polystyrene) வகை பிளாஸ்டிக் புழக்கத்தில் வர ஆரம்பித்தது.

இன்று பெருமளவில் புழக்கத்தில் உள்ள பாலிஎத்திலின் டெரெப்தலைட் (Polyethylene Terephthalate, known as PET (Soft Drinks Water Bottle)) வகை பிளாஸ்டிக்கை இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் வல்லுனர்களான ஜான் ரெக்ஸ் வின்பில்டு (John Rex Whinfield) மற்றும் ஜேம்ஸ் டெனன்ட் டிக்சன் (James Tennant Dickson) ஆகிய இருவரும் இணைந்து 1941-ஆம் ஆண்டு தயாரித்தனர். அதுவரையில் மனித சமுதாயத்திற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாமல் சென்றுகொண்டிருந்த பிளாஸ்டிக்கின் பயணம் தடம் புரண்டு அழிவுப்பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது PET பிளாஸ்டிக் கண்டறிந்த பின்புதான்..!

பிளாஸ்டிக் என்ற சொல் கிரீஸ் நாட்டின் கிரேக்க மொழியில் இருந்து பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. பிளாஸ்டிக் என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ‘எளிதில் வடிவமைத்துக்கொள்ள இயலும்’ என்று பொருளாம். இன்று உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்பட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பு முதற்கொண்டு அனைத்தும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு உலக சந்தையில் விற்க்கப்படுக் கொண்டிருக்கிறது, ஏனைய உலோகங்களை காட்டிலும் இதன் மலிவான விலை, எளிதில் கையாளும் திறன், நீடித்து உழைக்கும் தன்மை ஆகிய காரணங்களால் பிளாஸ்டிக் மிகக் குறுகிய காலத்திற்குள் இமாலைய வளர்ச்சியை எட்டிப்பிடித்தது. இன்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை காணாமல் திரும்ப இயலாது.

மக்களை கவரும் ‘Bubble Rooms’ ஹோட்டல்.!



இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் மக்கள் நாளுக்கு நாள் புதுமையான ஒன்றையே எதிர்பார்க்கின்றனர்.

அந்த வகையில் பிரான்சில் மக்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது Bubble Rooms ஹோட்டல்.

தென்கிழக்கு பிரான்சின் கடற்கரையில் உள்ள Marseille-லியிருந்து 10 மைல் தொலைவில் Attrap’Rjves என்ற ஹோட்டல் ஒன்று உள்ளது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கு உள்ள அறைகள் எல்லாமே பிளாஸ்டிக்கால் ஆனவை, பார்ப்பதற்கு Bubbles போன்றே உள்ளது.

ஒவ்வொரு அறைக்கும் டெலெஸ்கோப் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் இரவு நேரங்களில் நட்சத்திரங்களின் அழகை கண்டு ரசிக்கலாம்.

தம்பதிகள் மத்தியில் பிரபலமைந்துள்ள இந்த ஹோட்டல், குறிப்பாக தங்கள் காதலை வெளிப்படுத்த சிறந்த இடமாக திகழ்வதாக தெரிவிக்கின்றனர்.

610 கிலோ குண்டு மனிதருக்கு 320 கிலோ அதிரடி கரைப்பு..!


சவுதியில் 610 கிலோ குண்டு மனிதருக்கு அந்நாட்டு மன்னர் உத்தரவின் பேரில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு 4 மாதத்தில் 290 கிலோவாக குறைக்கப்பட்டுள்ளது.சவுதியில் உள்ள ரியாத் நகரை சேர்ந்தவர் கலீத் மொஹிசன் அல் ஷேரி. இவருக்கு வினோதமான உடல் எடை அதிகரிப்பு நோய் காணப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது உடல் எடை 620 கிலோவுக்கு கன்னாபின்னாவென்று எகிறியது. இதனால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். எழுந்து நடமாட கூட முடியவில்லை. தூங்குவதற்கு 3 கட்டில்களை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டியிருந்தது.இதையடுத்து தனது உடல் எடையை குறைக்கும் சிகிச்சைக்கு உதவும்படி சவுதி அரசிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி, கலீத் மொஹிசனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க சவுதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டார்.

ரியாத்தில் உள்ள கிங் மருத்துவ சிட்டி மருத்துவமனை ஊழியர்கள் சிறப்பு வாகனம் மூலம் 4 மாதங்களுக்கு முன்பு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அயத் அல் ஹத்தானி கூறுகையில், கலீத் மொஹிசனின் உடல் எடையை குறைக்க லேப்ராஸ்கோபிக் உள்பட சில அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 நான்கு மாதங்களில் 320 கிலோ கரைக்கப்பட்டு அவரது உடல் எடை 290க்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது இதய துடிப்பு, சுவாசம் ஆகியவை நார்மலாக உள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் 150 கிலோ கரைக்கப்பட உள்ளது. உலகிலேயே முதல் முறையாக அதிநவீன முறையில் 4 மாதத்தில் உடல் எடை குறைப்பு சிகிச்சை இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கலீத் மொஹிசன் தனது அன்றாட பணிகளை இயல்பாக செய்கிறார்  என்றார்.

ரஷ்ய ஒலிம்பிக்கை சீர்குலைக்க டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருள் கடத்த சதி..!

ரஷ்ய ஒலிம்பிக்கை சீர்குலைக்க டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருள் கடத்த சதி அமெரிக்கா எச்சரிக்கை..!  


ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்களை கடத்தி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளனர்.

இதையடுத்து ரஷ்யா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்கள் கடத்தி ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி உள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவுக்கு விமானங்கள் இயக்கும் ஏர்லைன்ஸ் நிறுவ னங்களுக்கு அவசர தகவல் அனுப்பி உள்ளனர். அதில், ரஷ்யா செல்லும் விமானங்களில் டூத் பேஸ்ட் டியூப்களில் சிறுசிறு வெடிபொருள் கருவிகளை கடத்தி, விமானத்திலேயே அவற்றை அசம்பிள் செய்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.

 மேலும் டூத் பேஸ்ட் டியூப்களில் வெடிபொருட்களை கடத்தி, சோச்சி நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் போது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே, ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

யானை மூக்கு மீன் - Elephant Nose Fish ..!

யானை மூக்கு மீன் - Elephant Nose Fish ..!


குதிரையின் குணத்தை அறிந்து தான் அதற்கு இறைவன் கொம்பை படைக்கவில்லை என நம் முன்னோர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியாயின் மீன் இனம் ஒன்றிற்கு தும்பிக்கை இருந்தால் அதை எப்படிக் கூறுவது? இவ்வாறான, அசாத்தியமான விடயங்களும் உலகில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

நைகர் மற்றும் மேற்கு ஆபிரிக்க கடற் பகுதிகளில் உள்ள ஒருவகை மீன் இனங்களுக்கு யானையின் தும்பிக்கை போல் மூக்கு காணப்படுகிறது. இந்த வகையான மீன்களை ஆங்கிலத்தில் யானை மூக்கு மீன் (Elephant Nose Fish) என அழைக்கின்றனர்.

இந்த வகையான மீன்கள் 23 தொடக்கம் 25 சென்ரி மீற்றர் நீளமானவையாக உள்ளன. இவை அநேகமாக இருண்ட பிறவுண் மற்றும் கறுப்பு நிறங்களில் காணப்படுகின்றன. கண் பார்வை சக்தி குறைவாக காணப்படுவதனால் இந்த வகை மீன்கள் அவற்றின் சிறப்பு அங்கமாகிய தும்பிக்கையின் உதவியினால் உணவை கண்டறிகின்றன.

இந்த மீன் இனத்தின் ஆயுட்காலம் 6 தொடக்கம் 10 ஆண்டுகள் என குறிப்பிடப்படுகிறது.

நியூட்ரினோ ஆய்வால் நிலநடுக்கம் வருமா..?



 அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், சீனா எனப் பல நாடுகளில் நியூட்ரினோ என்னும் அதிசயத் துகள்பற்றி ஆராய்ச்சி நடந்துவருகிறது. இத்துறையில் பின்தங்கிவிடக் கூடாது என்ற அளவில் இந்தியாவிலும் நியூட்ரினோ பற்றி விரிவான ஆராய்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த நோக்கில்தான் தேனி மாவட்டத்தில் ரூ. 1,400 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுவருகிறது. இது 2015-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களையும் பூமியையும் தாண்டி…

சூரியனிலிருந்து ஒவ்வொரு நொடியும் கோடானு கோடி நியூட்ரினோ துகள்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவை மிகவும் நுண்ணியவை. எதையும் துளைத்துச் செல்லக்கூடியவை. நீங்கள் சூரியனை நோக்கி உள்ளங்கையை விரித்தால், உங்கள் உள்ளங்கையைப் பல கோடி நியூட்ரினோக்கள் துளைத்துச் செல்லும்.

நியூட்ரினோக்கள் உள்ளங்கை என்ன, பூமியையும் துளைத்துச் செல்பவை. அடுத்தடுத்து 10 பூமியை நிறுத்தினாலும் அத்தனை பூமிகளையும் அவை துளைத்துக்கொண்டு விண்வெளிக்குச் சென்றுவிடும்.

நியூட்ரான் வேறு; நியூட்ரினோ வேறு

பலரும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் நியூட்ரான் பற்றிப் படித்திருப்பார்கள். நியூட்ரான் வேறு; நியூட்ரினோ வேறு. நியூட்ரான்கள் அணுவுக்குள் இருப்பவை. உடலை நியூட்ரான்கள் தாக்கினால் ஆபத்து. நியூட்ரினோக்கள் ஆபத்து விளைவிக்காதவை.

சூரியனில் ஒவ்வொரு நொடியும் பல கோடி டன் ஹைட் ரஜன் அணுக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஹீலியம் அணுக்களாக மாறிவருகின்றன. இது அணுச்சேர்க்கை எனப்படுகிறது. இவ்வித அணுச்சேர்க்கையின்போதுதான் நியூட்ரினோக்கள் தோன்றுகின்றன.

ஆபத்தானவையா?

கோடானு கோடி நியூட்ரினோக்கள் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து பூமிக்கு வந்துசேர்கின்றன. அந்த வகையில் காலம்காலமாக நியூட்ரினோக்கள் பூமியில் வாழும் மக்களையும் அத்துடன் பூமியையும் துளைத்துச் சென்றுகொண்டிருக்கின்றன. ஆகவே, நியூட்ரினோக்களால் மனித குலத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது நிரூபணமான உண்மை.

நியூட்ரினோக்களால் நமக்கு நன்மை உண்டா? அவற்றை நம்மால் ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? நம்மால் இன்னும் நியூட்ரினோக்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. அந்த நோக்கில்தான் உலகில் பல நாடுகளிலும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. நியூட்ரினோபற்றி நாம் நன்கு அறிந்துகொண்ட பின்னர்தான் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதுபற்றிச் சிந்திக்க முடியும்.

நியூட்ரினோக்களைக் கண்ணி வைத்துப் பிடிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாய்ந்து செல்லும் நியூட்ரினோக்கள் அவற்றின் பாதையில் உள்ள எதையும் ஊடுருவிச் செல்பவை. ஆனால், அவை சில சமயங்களில் போகிறபோக்கில் வழியில் உள்ளதை உதைத்துத் தள்ளும்; ஒதுக்கித் தள்ளும்; மோதித் தள்ளும். இப்படியான செயல்களின் விளைவுகளை வைத்துத்தான் நியூட்ரினோக்கள்பற்றி அறிய முடியும் என்ற நிலைதான் உள்ளது.

இரவில் சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கிறது. உள்ளே போய்ப் பார்த்தால், ஜன்னல் திறந்து கிடக்கிறது. பூனை வந்து பாத்திரங்களை உருட்டிச் சென்றிருக்கிறது என்று உணர்கிறோம். நியூட்ரினோக்களின் கதையும் அப்படித்தான்.

நியூட்ரினோக்கள் எதை உதைத்துத் தள்ளிவிட்டுச் சென்றால், அவைபற்றி நன்கு அறிந்துகொள்ள முடியும் என்ற அடிப்படையில் உலகில் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடங்கள் விதவிதமாக அமைந்துள்ளன.

ஆராய்ச்சிகள்

ஜப்பானில் ஒரு மலைச் சிகரத்துக்கு அடியில் 1,000 மீட்டர் ஆழத்தில் எவர்சில்வரினால் ஆன 40 மீட்டர் அகலமுள்ள கோள வடிவிலான தொட்டியில் மிகவும் சுத்தமான நீர் அடங்கியுள்ளது. நியூட்ரினோக்கள் இந்தத் தொட்டியின் வழியே பாய்ந்து செல்லும்போது, தற்செயலாக எலெக்ட்ரான்கள்மீது அல்லது அணுக் கருக்கள்மீது மோதிச்செல்லலாம். அப்படி மோதினால் மினுக் என்று ஒளி தோன்றும். இந்த மினுக் ஒளிகளைப் பதிவுசெய்ய நாலாபுறங்களிலும் பதிவுக் கருவிகள் உண்டு.

கனடாவில் பாதாள நீர்த் தொட்டியில் அழுக்குப் போக்கும் திரவம் வைக்கப்பட்டது. அண்டார்டிகாவில் ஒரு கன கிலோ மீட்டர் அகலம், நீளம், உயரம் கொண்ட பெரும் பனிக்கட்டிதான் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம்.

தமிழகத்தில், தேனியில்…

தமிழகத்தில் தேனியில் அமையும் ஆராய்ச்சிக்கூடத்தில் காந்தத்தன்மை கொண்ட 50 ஆயிரம் டன் இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்படும். அடுக்கடுக்காக உள்ள இந்த இரும்புத் தகடுகளை நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்லும்போது ஏற்படும் விளைவுகளைப் பதிவு செய்வதற்கான கருவிகள் இந்த இரும்புத் தகடுகளுக்கு இடையே பொருத்தப்படும்.

ஒரே பாறையாக அமைந்த குன்றின் உச்சியிலிருந்து 1,300 மீட்டர் ஆழத்தில் ஆராய்ச்சிக்கூடம் அமைந்திருக்கும். ஆராய்ச்சிக்கூடத்துக்குச் செல்ல சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளச் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடங்கள் குன்றின் அடியில் அல்லது பாதாளத்தில் அமைக்கப்படுவதற்குக் காரணம் உள்ளது. நியூட்ரினோக்கள் அல்லாத வேறு துகள்கள் வருவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு.

கணக்கு சரிதான்

நியூட்ரினோக்கள் 1960-களிலிருந்து 2002-ம் ஆண்டு வரை விஞ்ஞானிகளைப் படாதபாடு படுத்தியுள்ளன. சூரியனின் மையத்தில் எவ்வளவு நியூட்ரினோக்கள் உற்பத்தியாக வேண்டும் என்பது குறித்து விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு வைத்திருந்தனர். சூரியனிலிருந்து எவ்வளவு நியூட்ரினோக்கள் பூமிக்கு வந்துசேர்கின்றன என்று ஆராய்ச்சிக் கருவிகள் மூலம் கணக்கிட்டு அறிய விஞ்ஞானிகள் முயன்றபோது கணக்கு உதைத்தது. மூன்றில் ஒரு பங்குதான் வந்துசேர்வதாகக் கருவிகள் காட்டின. மற்ற நியூட்ரினோக்கள் என்னவாகின என்று கேள்வி எழுந்தது. சூரியனில் நடக்கும் அணுச்சேர்க்கை பற்றிய தங்களது கருத்தே தவறானதோ என்றும் விஞ்ஞானிகள் எண்ண முற்பட்டனர்.

மேலும், நவீனக் கருவிகளை வைத்து ஆராய்ந்தபோது, சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களில் மூன்றில் இரு பங்கு பாதி வழியில் வேறு இரு வகை நியூட்ரினோக் களாக மாறிவிடுகின்றன என்பது தெரியவந்தது. 2002-ம் ஆண்டில்தான் இந்த உண்மை தெரியவந்தது. அவற் றையும் சேர்த்துக் கணக்கிட்டபோது சூரியன் பற்றிய கொள்கை சரியானதே என்பது புலனாகியது.

ஐன்ஸ்டைன் சொன்னது சரிதான்

உலகில் பெரிய ஆராய்ச்சிக்கூடங்களில் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்ய முடியும். ஜெனீவாவில் உள்ள ஆராய்ச்சிக்கூடம் 2011-ம் ஆண்டில் இவ்விதம் நியூட்ரினோக்களை உண்டாக்கிப் பாதாளம் வழியே இத்தாலியில் உள்ள ஓர் ஆராய்ச்சிக்கூடத்துக்கு அனுப்பிச் சோதனை நடத்தியது. அப்போது நியூட்ரினோக்கள் ஐன்ஸ்டைனின் கொள்கையைப் பொய்யாக்கும் வகையில் ஒளி வேகத்தை மிஞ்சுவது போலத் தோன்றியது. இது சில மாத காலம் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. கடைசியில், கருவிகளில்தான் கோளாறு, ஐன்ஸ்டைனின் கொள்கை சரியானதுதான் என்று நிரூபணமாகியது.

இந்தியாவில் நியூட்ரினோ பற்றிய ஆராய்ச்சி நடப்பது இது முதல் தடவை அல்ல.1964-ம் ஆண்டில் கோலார் தங்கச் சுரங்கத்தில் மிக ஆழமான இடத்தில் சிறு அளவில் நியூட்ரினோ ஆராய்ச்சி நடந்தது. விண்வெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் காற்று மண்டலத்தில் நுழைந்த பின்னர், நியூட்ரினோக்களைத் தோற்றுவிக்கின்றன என்பது முதல் தடவையாக அங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது.

தேனியில் இப்போது அமையும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் காற்று மண்டல நியூட்ரினோக்களைத்தான் முதலில் ஆராயும். பின்னர், அது சூரியனிலிருந்து வருகின்ற நியூட்ரினோக்களையும் ஆராய ஆரம்பிக்கும். அதற்கு அடுத்த கட்டத்தில் ஜெனிவாவிலிருந்து நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகள் வழியே அனுப்பப்படுகின்ற நியூட்ரினோக்களையும் ஆராயத் தொடங்கும்.

இவ்விதம் பாதாளம் வழியே நியூட்ரினோக்களை அனுப்பினால் நிலநடுக்கம் உண்டாகும் என்று பீதி கிளப்பப்படுகிறது. இது வெறும் கற்பனை. ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் பாதாளம் வழியே நியூட்ரினோக்களை அனுப்புவது எண்ணற்ற தடவை நடந்துள்ளது. அங்கெல்லாம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

மலைப்பாம்பு பிட்ஸா - 2 ஆயிரத்து 700 ரூபாய்..!




இத்தாலி நாட்டின் பிரபல உணவு வகைகளில் ஒன்றான ‘பிட்ஸா’ உலகின் பல நாடுகளில் வாழும் மக்களின் மிகவும் விருப்பமான உணவுகளின் பட்டியலில் சிறப்பிடம் வகித்து வருகிறது.

இரண்டு ரொட்டிகளுக்கு இடையே பச்சை வெங்காயம், தக்காளி, குடை மிளகாய்,வெள்ளரிக்காய், அரை வேக்காட்டு உருளைக்கிழங்குடன் சிறிதளவு பாலாடைக்கட்டி வைத்து விற்கப்படும் சைவ பிட்ஸாவும், உள்புறத்தில் காய்கறிகளுக்கு பதிலாக மாடு,ஆடு, கோழி இறைச்சி வகைகளை அடைத்து விற்கப்படும் அசைவ பிட்ஸாவும் உலகம் முழுவதும் பரவலாக விற்கப்படுகின்றன.

உடை, உணவு, நாகரிக வாழ்க்கை முறை போன்றவற்றில் அனைவருக்கும் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் அமெரிக்க மக்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு அசத்தலான காரியத்தை செய்து வியப்பை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.

அவ்வகையில், ஃப்ளோரிடா மாநிலத்தை சேர்ந்த மக்கள் தற்போது சத்தம் இல்லாமல் புதிய அசத்தலான காரியத்தை செய்து வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வெகு விரைவில் அமெரிக்காவையும் தாண்டி உலகம் முழுவதும் இந்த அசத்தல் பரவலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது.

இதற்கு முன்பு வரை தவளை பிட்ஸா, முதலை பிட்ஸா ஆகியவற்றை தின்று சலித்து விட்ட மக்களுக்கு ஃப்ளோரிடாவில் உள்ள பிரபல பிட்ஸா நிறுவனம் தற்போது சுடச்சுட ‘மலைப்பாம்பு பிட்ஸா’க்களை பரிமாறி பரவசப்படுத்துகிறது.

இதற்காக பர்மா மலைப்பாம்பு என்ற வகை பாம்புகளை வெட்டி, அவற்றை அரை வேக்காடாக அவித்து, பின்னர் மசாலா பொருட்களுடன் கலந்து பொரித்து, ஒவ்வொரு பிட்சாவுக்குள்ளும் ஒரு மலைப்பாம்பு துண்டு இருக்கும் வகையில் ஃப்ளோரிடா மக்களை இந்நிறுவனத்தின் உரிமையாளர் இவான் டானியேல் மகிழ்வித்து வருகிறார்.

இந்த பிட்ஸாவுக்காக அவர் கொள்முதல் செய்யும் மலைப்பாம்புகள் சுமார் 20 அடி நீளம் கொண்டவை என தெரிகிறது. இதற்கான மலைப்பாம்பு இறைச்சியை வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்வதாக பெருமையுடன் கூறும் இவர், தனது புது வகை பிட்ஸாவை 45 அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் 2 ஆயிரத்து 700 ரூபாய்) விற்பனை செய்கிறார்.

இதனால், இவரது கடையில் எப்போதும் வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுகிறது. இந்த புதிய மெனுவை தொடர்ந்து ருசிக்க வரும் வாடிக்கையாளர்களில் ஒருவர், ‘பிட்ஸாவின் உள்ளே இருக்கும் இறைச்சி கோழிக்கறியைப் போல் சுவையாக உள்ளது. ஆனால், மிகவும் கஷ்டப்பட்டு மென்று தின்ன வேண்டியுள்ளது. இன்னும் கொஞ்சம் மிருதுவாக அவித்தால் நல்லது’ என்று கூறுகிறார்.

டீன் ஏஜில் உணவுப் பழக்கம்... எப்படி சரி செய்வது..?



அம்மாக்களுக்கும் பிள்ளைகளுக்குமான தலையாய பிரச்னைகளில் முக்கியமானது உணவுப் பழக்கம்.‘‘வயசுதான் ஆச்சே தவிர, இன்னும் சாப்பாட்டு  விஷயத்துல பிடிவாதம் மாறவே இல்லை...” என்கிற ஆதங்கம் அனேக அம்மாக்களுக்கு நிச்சயம் இருக்கும். அது மட்டுமா?  சீக்கிரம் வளர வேண்டும்  என்கிற எண்ணத்தில் அளவுக்கு மீறியும் ஆரோக்கியமின்றியும் சாப்பிடுகிற பிள்ளைகள், ஒல்லியாகக் காட்சியளிக்கிற எண்ணத்தில் சாப்பாட்டையே  தவிர்க்கிற பிள்ளைகள் என டீன் ஏஜில் பிள்ளைகளிடம் காணப்படுகிற இந்த திடீர் மாற்றத்தை அத்தனை எளிதில் அம்மாக்களால் எதிர்கொள்ள  முடிவதில்லை... என்னதான் செய்யலாம்?

பிள்ளைகளின் உணவுப் பழக்கம் என்பது பெற்றோரின் வாழ்க்கை முறை மற்றும் வளர்ப்பு முறையினால் வடிவமைக்கப்படுகிறது. வீட்டிலுள்ள  பெரியவர்கள், காய்கறிகள் சாப்பிட மறுத்து, சிப்ஸையும் நொறுக்குத் தீனிகளையும் கொறித்துக் கொண்டிருந்தால், பிள்ளைகள் மட்டும் எப்படி  ஆரோக்கிய உணவுப்பழக்கத்துக்கு மாறுவார்கள்?

விடலைப் பருவம் என்பது பிள்ளைகளின் உடலில் ஹார்மோன் மாறுதல்களை உண்டாக்கி, அவர்களது வளர்ச்சியில் திடீரென நம்ப முடியாத  மாற்றங்களைத் தரும் வயது. இந்த வயதில்தான், குழந்தைகள் உயரத்தில் 20 சதவிகிதமும், எடையில் 50 சதவிகிதமும் அதிகரிக்கிறார்கள். திடீரெனத்  தீவிரமாகும் அந்த மாற்றங்களின் விளைவால், டீன் ஏஜில் பிள்ளைகளின் சத்துணவுத் தேவை- குறிப்பாக புரதம், கால்சியம், இரும்பு, துத்தநாகம்  மற்றும் ஃபோலேட் போன்றவை அதிகம் தேவைப்படும்.

படிப்பு, விளையாட்டோடு, அவர்களது மனப்போக்கையும்கூட உணவு பாதிக்கும். டீன் ஏஜில் வளர்ச்சி என்பது பீறிட்டுக் கிளம்பும். அதை ஈடுகட்ட  அவர்களுக்கு அதிக கலோரி தேவைப்படும். அந்த கலோரியானது சத்தான உணவின் மூலம் கிடைப்பதாக இருக்க வேண்டும். குழந்தைப் பருவத்துக்கு  அடுத்தபடியாக மிகமிக ஆரோக்கியமாக சாப்பிட வேண்டிய வயது விடலைப் பருவம். ஆனால், பெரும்பாலானோர் அதைப் பொருட்படுத்துவதே  இல்லை. சிலர் அதிகம் உண்பவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும், சத்தாக சாப்பிடுவதில்லை. அதிக உணவு என்பது ஆரோக்கியமான உணவு என்பதை  கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வயதுப் பிள்ளைகள் பெரும்பாலான நேரம் வெளி உணவுகளையே அதிகம் உண்ண வேண்டிய கட்டாயம். அம்மா என்கிற ஊட்டச்சத்து நிபுணர்  அருகில் இருந்து கண்காணிக்கவும் வாய்ப்பில்லை. டீன் ஏஜ் பிள்ளைகளின் விருப்ப உணவு ஃபாஸ்ட் ஃபுட். அதிலும் ஆரோக்கியத்துக்குக் கொஞ்சமும்  உத்தரவாதமில்லாத கொழுப்பு உணவுகள்...  டீன் ஏஜ் ஆண்பிள்ளைகளுக்கு நிறைய சாப்பிட்டால் உருண்டு திரண்ட தசைகளுடன் உடல்வாகு மாறும்  என்கிற நம்பிக்கை. பெண்களுக்கோ, குறைவாகச் சாப்பிட்டால்தான் ஒல்லியாக இருக்க முடியும் என்கிற எண்ணம்.

மாதவிலக்கின் மூலம் ஏற்படுகிற இரும்புச்சத்து இழப்பை ஈடுகட்டும் வகையில் இரும்புச்சத்துள்ள உணவுகளை அவர்கள் முறையாக எடுத்துக்  கொள்வதில்லை. பருவ வயதில் சுவைகள் மாறிப் போய், கொழுப்புள்ள உணவை நோக்கியே அவர்களது ஆர்வம் அதிகரிக்கிறது. ஆண்பிள்ளைகளுக்கும்  புரதம் நிறைந்த உணவுகளின் மீதான தேடல் அதிகரிக்கிறது. பெண் பிள்ளைகளுக்கு அவர்களது உடலில் இயற்கையாக அந்தப் பருவத்தில் அதிகம்  சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் காரணமாக, இனிப்புகளின் மீது தேடல் அதிகரிக்கும்.

எப்படிச் சாப்பிட வைப்பது..?

1. நல்ல சத்துணவுப் பழக்கத்தை அடையாளம் காட்டுங்கள். இதை சாப்பிட்டா நல்லது என போதிக்காமல், அத்தகைய உணவுகளை நீங்கள்  சாப்பிட்டால் அவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். உணவுப் பொருட்களை வாங்குவதிலும், தினசரி உணவைத் திட்டமிடுவதிலும் அவர்களை  ஈடுபடுத்துங்கள். நல்ல உணவுக்கும் ஆரோக்கியத்துக்குமான தொடர்பை புரிய வையுங்கள்.

2. பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிற உணவுகள், அதிக சர்க்கரை, செயற்கை நிறம் மற்றும் சுவை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள்,  கெமிக்கல் சேர்த்த உணவுகளை உண்பதற்குத் தடை விதியுங்கள். இத்தகைய உணவுகள் டீன் ஏஜ் பிள்ளைகளின் எலும்புகளில் உள்ள கால்சியம்  சத்தை அடியோடு அரித்து விடும் என்பதை உணர்த்துங்கள்.

3.  பிள்ளைகளின் போக்கிலேயே உணவு பற்றிய பேச்சை கொண்டு செல்லுங்கள். உதாரணத்துக்கு அந்த வயதில் எல்லா பிள்ளைகளுக்கும் சீக்கிரம்  வளர வேண்டும் என்கிற ஆவல் இருக்கும். எந்த மாதிரி உணவுகளை சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும் என்று பேசலாம். நிறைய டீன் ஏஜ்  பிள்ளைகளுக்கு தமது நண்பர்கள் தம்மைவிட வேகமாக வளர்வதாகவும், அதற்குக் காரணம் அவர் களது உணவு அல்ல... ஜீன்ஸ் என்றும் ஒரு  எண்ணம் உண்டு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, கால்சியம் நிறைந்த உணவுகளின் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.

 ஏரியேட்டட் குளிர் பானங்களில் உள்ள பாஸ்போரிக் அமிலமானது, எலும்புகளில் உள்ள கால்சியத்தை அழித்து, எலும்புகளின் வளர்ச்சியைப் பாதிக்கும்  என்பதைப் புரிய வைக்கலாம். வளர்ச்சி என்பதை மீறி, அவர்களுக்கு அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் அதிகமிருக்கும். சத்தான  உணவு என்பது அழகான சருமத்துடனும் தொடர்புடையது என எடுத்துச் சொல்லலாம். விளையாட்டில் ஆர்வமிருக்கும் பிள்ளைகளுக்கு சத்தான உணவு  என்பது, விளையாட்டுத் திறமைக்கும், அது தொடர்பான உடற்பயிற்சி மற்றும் உடல் உறுதிக்கும்கூட அவசியமானது எனப் புரிய வைக்கலாம்.

4.  விடலைப் பருவத்தில் ஆண்களுக்கு 20 சதவிகிதமும், பெண்களுக்கு 33 சதவிகிதமும் இரும்புச் சத்து கூடுதலாகத் தேவை. ஆண்களுக்கு தசை  வளர்ச்சிக்கும், பெண்களுக்கு மாதவிலக்கின் போதான இழப்புக்கும் இது முக்கியம் எனப் புரிய வையுங்கள்.

5.  ஆண்களுக்கு 25 சதவிகிதமும் (தினசரி 15 கிராம்), பெண்களுக்கு அதைவிட சற்று குறைவாகவும் புரதம் தேவை என்பதை வலியுறுத்தி,  அதற்கேற்ற உணவுகளைக் கொடுக்கலாம்.

6. ஆண் பிள்ளைகளுக்கு 33 சதவிகிதமும், பெண்களுக்கு 20 சதவிகிதமும் அதிகமான துத்தநாகச் சத்து தேவை.

7. விடலைப் பருவத்தில் ஆண், பெண் இருவருக்குமே அதற்கு முந்தைய வயதை விட 33 சதவிகிதம் அதிகமான கால்சியம் தேவை. (நாளொன்றுக்கு  1,200 மி.கி.)

8. டீன் ஏஜில் இருக்கும் போது, 20 முதல் 30 சதவிகிதம் வைட்டமின்களின் தேவையும் அதிகரிக்கிறது. கன்னாபின்னா உணவுப்பழக்கம் அந்தத் தேவையை பூர்த்தி செய்வதில்லை என்பதால், மருத்துவ ஆலோசனையுடன் வைட்டமின் சப்ளிமென்ட் எடுத்துக் கொள்வது சிறந்தது.

9. விடலைப்பருவத்தில் மூளையானது முழு வளர்ச்சியை அடைந்து விடுகிறது. ஆனாலும், அது சில மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறது.  மூளை வளர்ச்சிக்கும் சத்தான உணவு அவசியம். பெரும்பாலும் இந்த வயதில் ஆண்டிஆக்ஸிடென்ட், கோலீன், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்  மற்றும் பல்கூட்டு மாவுச்சத்து (Complex carbohydrates) கொண்ட உணவுகள்,  மூளையின் ஆரோகியத்துக்கு அவசியம்.  

ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவுப்பொருட்கள்...

கொய்யா, பப்பாளி, கமலா ஆரஞ்சு போன்ற பழங்கள். கேரட், தக்காளி, கீரை வகைகள், குடமிளகாய், அவரைக்காய், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள்.  பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள்.

கோலீன் நிறைந்த உணவுப்பொருட்கள்...

முட்டையின் மஞ்சள் கரு, பீன்ஸ், அவரைக்காய், காலிஃப்ளவர்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுப்பொருட்கள்...

வஞ்சிர மீன், இறால், முட்டையின் மஞ்சள் கரு, வால்நட்.

பல்கூட்டு மாவுச்சத்து நிறைந்த உணவுப்பொருட்கள்...

கைக்குத்தல் அரிசி. கம்பு, கேழ்வரகு, கோதுமை போன்ற முழு தானியங்கள். இந்த உணவுப்பொருட்கள் மூளையைச் சிறந்து இயங்கச் செய்வது  மட்டுமல்லாமல் மனச்சோர்வையும் தடுப்பவை. நண்பர்களைப் பார்த்து, அவர்களைப் போல இருக்க வேண்டும் என்கிற ஆவலின் காரணமாகவும்,  விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும் கொழுப்பைத்  தவிர்க்கிற பிள்ளைகள் அதிகம். அப்படி  அவர்கள் கொழுப்பைத்    தவிர்ப்பதென முடிவெடுத்ததும், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பையும் சேர்த்தே தவிர்க்கிறார்கள். அவர்களுக்கு மேற்கூறிய உணவுகளை அதிகமாகவும், எண்ணெயில் பொரித்த உணவுகளைக் குறைவாகவும் எடுத்துக் கொள்ளப் பழக்க வேண்டும்.

10. பார்பி டால் மாதிரி இருக்க வேண்டும் என நினைக்கிற மகளின் எண்ணத்தை விட்டொழிக்க உதவுங்கள். அந்த மாதிரி கருத்துகளைத் தாங்கி  வருகிற பத்திரிகைகளில் பார்க்கிற அழகான, ஒல்லியான மாடல் பெண்களைப் போன்ற உடல்வாகு தனக்கு சாத்தியமே இல்லையோ என ஏங்க  வைக்கும்.  அப்படி அவர்கள் பார்க்கிற படங்களும், கேள்விப்படுகிற தகவல்களும் கற்பனையானவை, நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியமில்லாதவை  என அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

அவுட்சோர்சிங்கில் பலவிதங்களை பற்றி ஓர் ரிப்போர்ட்..!

அவுட்சோர்சிங்கில் பலவிதங்கள் உள்ளன:


  • Offshoring : வேலையை வெளிநாட்டுக்கு அனுப்பி முடித்துக்கொள்வது.


  • Nearshoring : தூரத்தில் உள்ள வெளிநாடாக இல்லாமல் பக்கத்திலேயே இருக்கும் நாடுகளுக்கு வேலையை அனுப்புவது.


  • Twoshoring: இதுல கொஞ்சம். அதுல கொஞ்சம் இருந்தால் நல்லது என்று நினைக்கிற கம்பெனிகள் சொந்த நாட்டில் ஒரு லொகேஷனையும், வெளிநாட்டில் ஒரு லொகேஷனையும் வைத்துக்கொள்வது.


  • Multishoring: " ஒரே கூடையில் ஏன் இத்தனை முட்டை" சிந்தனை உள்ளவர்கள் வேலைகளை பல நாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்யும் வித்தை.


  • Rightshoring: எந்த வேலை எங்கே மலிவாக செய்ய முடியுமோ, அந்த நாட்டுக்கு அந்த வேலை என்று பிரித்துப் பார்த்து பகிரும் புத்திசாலித்தனம்.


  • In-shoring: கம்பெனிகள், சொந்த நாட்டில் அவர்களின் செயல்பாட்டுகளை அதிகரித்து அதன்மூலம் உள்நாட்டு வேலைவாய்ப்புகளை பெருக்கும் போக்கு.


  • In-sourcing : (அவுட்சோர்சிங்கிற்கு எதிர்ப்பதம்) வெளிநாட்டுக்கு போன வேலைகளை மீண்டும் நம் நாட்டிற்கே கொண்டு வருவது.


  • Homesourcing: அலுவலகத்தில் செய்யும் வேலையை, தொழிலாளியின் வீட்டுக்கே கொடுத்து அனுப்புவது.


  • Unsourcing : கஸ்டமர் சப்போர்ட்னு கம்பெனியை தேடி வருபவர்களை சோஷியல் நெட்வொர்க்குகளுக்கு அனுப்பி, அங்கே 'வாடிக்கையாளர்கள் நீங்களே ஒருத்தருக்கு ஒருத்தர் பதில் சொல்லி தீர்வு கண்டுகொள்ளுங்கள்' என்று கழண்டுகொள்ளும் சாதுர்யம்.

நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள்..!



நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது.

ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.

தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.

இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள்.

மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிங்சைகளை அறிந்து கொள்ளும்.

குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம்.

அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும்.

உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும்.

நமக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள்.

அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.

பி. பி. ஸ்ரீனிவாஸ் - வாழ்க்கை வரலாறு..!



பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசைக் கலைஞர் ஆவார். தன்னுடைய வசீகரப் பாடல் வரிகளில் இனிமையைக் கூட்டி, ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது, ஆங்கிலம் என 12 மொழிகளில் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

அந்தக் காலத்தில் தன்னுடைய இனிமையான குரலால், காலத்தால் அழியாத எண்ணற்றப் பாடல்களைப் பாடி, தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அற்புதக் கலைஞர் ஆவார். தமிழில் அவர் பாடிய ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘மயக்கமா கலக்கமா’, ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’ போன்ற பாடல்கள் மறக்க முடியாதவையாகும். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வந்த பி.பி. ஸ்ரீனிவாஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.


  • பிறப்பு: செப்டம்பர் 22, 1930


  • இடம்: காக்கிநாட, ஆந்திரப்பிரதேசம் மாநிலம், இந்தியா


  • பணி: திரைப்படப் பின்னணி பாடகர்   


  • இறப்பு: ஏப்ரல் 14, 2013


  • நாட்டுரிமை: இந்தியன்


பிறப்பு

பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், 1930  ஆம் ஆண்டு செப்டம்பர் 10  ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள “காக்கிநாடா” என்ற இடத்தில் பனிந்திர சுவாமி என்பவருக்கு, கிரியாம்மாவிற்கும் மகனாக ஒரு பிராமணக் குடும்பதில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய தாய் ஒரு இசை ஆர்வலராக இருந்தமையால், அதன் தாக்கம் அப்படியே இவரையும் இசையில் ஈடுபடவைத்தது. ஆனால் இவருடைய பெற்றோர்கள் இவரை ஒரு அரசு பணியாளராக்க விரும்பி, இவரை பி. காம் படிக்க வைத்தனர். பின்னர் இளங்கலையில் பட்டம் பெற்ற அவரை ஒரு வழக்கறிஞராக்க வேண்டி, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்த்தனர். ஆனால், இசையில் அவருக்கு இருந்த ஆர்வமும் ஈடுபாடும் அவரை இசைத் துறைக்கே கொண்டுவந்து சேர்த்தது.

திரைப்படப் பின்னணிப் பாடகராக அவரின் பயணம்

சட்டக்கல்விப் பயில்வதை விடுத்து, இசைத்துறையினைத் தேர்வுசெய்த அவர், முறையாக சங்கீதம் பயின்று 1951 ஆம் ஆண்டு சினிமா துறையில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். ஜெமினி தயாரித்து 1951 ஆம் ஆண்டு வெளிவந்த “மிஸ்டர் பாரத்” என்ற இந்தித் திரைப்படத்தில் “கனஹிபரது” என்ற பாடலை முதன் முதலில் பாடினார்.

பிறகு, தமிழில் ‘ஜாதகம்’ என்ற திரைப்படத்தில் “சிந்தனை செய் செல்வமே” என்ற பாடலின் மூலம் அறிமுகமான அவர், பாசமலரில் “யார் யார் யார் இவர் யாரோ”, பாவ மன்னிப்பில் “காலங்களில் அவள் வசந்தம்”, எதிர்நீச்சலில் “தாமரைக் கன்னங்கள், தேன்மலர் கிண்ணங்கள்”, மோட்டார் சுந்தரம் பிள்ளையில் “காத்திருந்த கண்களே”, அடுத்த வீட்டுப் பெண்ணில் “கண்ணாலே பேசி பேசி கொள்ளாதே” மேலும் “மயக்கமா?கலக்கமா? மனதிலே குழப்பமா?”, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”, “ரோஜா மலரே ராஜ குமாரி”, போன்ற மனதை உருக்கும் பாடல்களைப் பாடி, அழியா புகழ்பெற்றார். சுசிலா, ஜானகி, பானுமதி, எல். ஆர். ஈஸ்வரி, லதா மங்கேஷ்கர் போன்றவர்களுடன் இணைந்து பாடியுள்ள அவர், தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, நாகேஷ் போன்ற தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களுக்குப் பின்னணிக் குரல் பாடியுள்ளார்.

கர்நாடக இசை மட்டுமல்லாமல், இந்துஸ்தானி இசையிலும் வட இந்தியப் பாடகருக்கு நிகராக தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய அவர், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் பாடி, சிறந்த பின்னணிப் பாடகராக முத்திரைப் பதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், “கஸல்” பாடல்களை அழகாகப் பாடுவதில் பெயர்பெற்று விளங்கினார்.

காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்:

‘காலங்களில் அவள் வசந்தம்’ (பாவமன்னிப்பு), ‘காத்திருந்த கண்களே’ (மோட்டார் சுந்தரம் பிள்ளை), ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ (ராமு), ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’ (வீரபாண்டிய கட்டபொம்மன்), ‘கண்ணாலே பேசி பேசி கொள்ளாதே’ (அடுத்த வீட்டுப் பெண்), ‘என்னருகே நீ இருந்தால்’ (திருடாதே), ‘விஸ்வனாதன் வேலை வேண்டும்’, ‘உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா’, மற்றும் ‘அனுபவம் புதுமை’ (காதலிக்க நேரமில்லை), ‘கண்ணிரண்டு மெல்ல மெல்ல’ (ஆனவன் கட்டளை), ‘மயக்கமா கலக்கமா’ (சுமைதாங்கி), ‘நேற்றுவரை நீ யாரோ’ (வாழ்க்கை படகு), ‘பார்த்தேன் சிரித்தேன்’ (வீர அபிமன்யூ), ‘நெஞ்சம் மறப்பதில்லை’ (நெஞ்சம் மறப்பதில்லை), ‘பால் வண்ணம் பருவம் கண்டேன்’ (பாசம்), ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’ (நெஞ்சில் ஒரு ஆலயம்), ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ (போலீஸ்காரன் மகள்), ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ (வீரத்திருமகன்), ‘பொன் ஒன்று கண்டேன்’ (படித்தால் மட்டும் போதுமா), ‘ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்’ (ஊட்டி வரை உறவு), ‘வளர்ந்த கலை மறந்துவிட்டால்’ (காத்திருந்த கண்கள்), ‘அவள் பறந்து போனாலே’ (பார் மகளே பார்), ‘தாமரைக் கன்னங்கள்’ தேன்மலர் கிண்ணங்கள் (எதிர்நீச்சல்), ‘ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்’ (சாரதா) போன்ற பாடல்கள் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்க இடம்பிடித்துள்ளன.

விருதுககளும் மரியாதைகளும்


  •     சினிமாவில் இவருடைய கலை சேவையைப் பாராட்டி, தமிழக அரசு ‘கலைமாமணி விருது’ வழங்கி கௌரவித்தது.


  •     கர்நாடக அரசின் மதிப்புமிக்க ‘கன்னட ராஜ்யோத்சவா விருது’ வழங்கப்பட்டது.


  •     ‘டாக்டர் ராஜ்குமார் சௌஹர்தா’ விருது.


  •     கேரளா அரசின் விருது


இறப்பு

தன்னுடைய வித்தியாசமான குரலால் இசை ரசிகர்களை தன்வசப்படுத்திய பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் தன்னுடைய 82 வது வயதில் சென்னையில் காலமானார். அவருடைய உயிர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் இசை நெஞ்சங்களின் மனதில் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

வீடியோக்களை எளிதாக தரவிறக்கம் செய்ய உதவும் இணையதளம்..!


இணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பது மிகவும் எளிதானது தான். இதற்காக என்றே பிரபலமான வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் உள்ளிட்ட தளங்கள் இருக்கின்றன. இது தவிர பேஸ்புக் அல்லது இமெயில் மூலம் நண்பர்களிடம் இருந்து வீடியோக்கள் வந்து சேர்கின்றன. சில நேரங்களில் வீடியோக்களை பார்த்து ரசிப்பதோடு நில்லாமல் அவற்றை தரவிறக்கம் செய்யவும் விரும்பலாம். வீடியோக்களை தரவிறக்கம் செய்யவும் எளிதானது தான். இதற்காக தரவிறக்கம் செய்யவும் பட்டனை கிளிக் செய்தாலே போதுமானது.

ஆனால் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் போது சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பிட்ட அந்த வீடியோ கோப்பு தரவிறக்கம் ஆக நேரம் ஆகலாம். வேறு பணிகளில் மூழ்கியிருக்கும் போது இப்படி வீடியோ கோப்புக்காக காத்திருப்பது தமாதத்தை ஏற்படுத்தலாம். இப்படி தாமதமாவதை தவிர்க்க , பார்த்து ரசித்த வீடியோவை பின்னர் ஓய்வாக இருக்கும் போது தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தீர்மானிக்கலாம். ஆனால் சில நேரங்களில் சோதனையாக அந்த வீடியோவை கண்டுபிடிக்க முடியாமல போகலாம். அல்லது இன்னும் மோசமாக அந்த வீடியோ இணையத்தில் இருந்தே காணாமல் போயிருக்கலாம்.

இது போன்ற சங்கடங்களை தவிர்ப்பதற்காக வீடியோக்களை தரவிறக்கம் செய்து தருவதற்காக என்றே பிரத்யேகமாக டியூப் ஆப்லைன் (http://www.tubeoffline.com/ ) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளாது. இணையத்தில் பார்த்து ரசித்த வீடீயோவை தரவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் அதற்கான இணைய முகவரியை மட்டும் இந்த இணையதளத்தில் சமர்பித்தால் போதுமானது, அதை தரவிறக்கம் செய்து கொடுத்து விடும். பின்னர் பார்த்து ரசிக்க நினைக்கும் வீடியோக்களை எந்த சிக்கலும் தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் சிறந்த வழி.

இந்த தளத்தின் மூலம் தரவிறக்கம் செய்வதும் எளிதானது தான். இந்த சேவையை பயன்படுத்த இதில் உறுப்பினராக வேண்டிய தேவையில்லை. எந்த மென்பொருளையும் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டாம். இதில் உள்ள யூடியூப்பில் இருந்து தரவிறக்கம் செய்க கட்டத்தில் வீடியோவுக்கான முகவரியை டைப் செய்தால் போதுமானது.

யூடியூப் தவிர வேறு பல வீடியோ சேவைகள் இருக்கின்றனவே , அவற்றில் பார்க்கும் வீடியோக்களை எப்படி தரவிறக்கம் செய்வது என்று கவலைப்பட வேண்டாம். யூடியூப்பில் இருந்து தரவிறக்கம் செய்யும் வசதி பிரதானமாக கொடுக்கப்பட்டிருந்தாலும் மற்ற வீடியோ தளங்களை மறந்துவிடவில்லை. மற்ற வீடியோ தளங்களை தனி பட்டியலாக கொடுக்கப்பட்டுள்ளது. பரவலாக அறிந்த விமியோ உட்பட பெரும்பாலான வீடியோ பகிர்வு தளங்கள் அகர வரிசையில் இடம்பெற்றுள்ளன.

பல வீடியோ சேவைகள் இதுவரை அறிமுகம் ஆனதாக கூட இல்லாமல் இருக்கலாம். இவை தவிர செல்போன் செயலிகளான இன்ஸ்டாகிராம் மற்றும் வைன் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலை பார்க்கும் போது இத்தனை வீடியோ பகிர்வு சேவைகள் இருக்கின்றவா என்ற வியப்பும் ஏற்படலாம்.

அது மட்டுமா வாரந்தோறும் புதிய வீடியோ சேவைகளை சேர்த்து வருவதாகவும் டியூப் ஆப்லைன் குறிப்பிடுகிறது. ஆக வீடியோ பிரியர்களுக்கு இந்த இணையதளம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் ஆடியோ பிரியர்களை கவரும் வகையில் எம்பி3 கோப்புகளை தரவிறக்கம் செய்யும் வ்சதியையும் இந்த தளம் வழங்குகிறது. வீடியோவுக்கு எப்படி யூடியூப்போ அதே போல ஆடியோ கோப்புகளுக்கான சேவையாக இருக்கும் சவுண்ட்கிளவுட் உள்ளிட்ட தளங்களில் இருந்து ஒலி கோப்புகளை எம்பி3 வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த சேவை சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் ஒரு சில கோப்புகள் தரவிறக்கம் ஆகாமல் போகலாம்.

இந்த இணையசேவை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அதற்கு பதில் அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வீடியோக்களில் விளம்பர இடையூறு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீடியோவை ஒருவர் தனது இணையதளம் அல்லது வலைப்படிவிலும் இடம்பெற வைக்கும் வ்சதியும் இருக்கிறது.

இணையதள முகவரி; http://www.tubeoffline.com/

இரத்த அழுத்தத்திற்க்கான (பி.பி) ஹெல்த் ரெசிப்பிகள்..!

கருப்பரிசி, சிவப்பரிசி தோசை


தேவையானவை:


  • கருப்பரிசி (பச்சரிசி),
  • சிவப்பரிசி (புழுங்கலரிசி) - தலா ஒரு கப்,
  • உளுந்து, காய்ந்த மிளகாய்,
  • துவரம் பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,
  • இஞ்சி - சிறு துண்டு,
  • தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன் (வேண்டுமெனில்),
  • தக்காளி - மூன்று,
  • சீரகம், மிளகுத் தூள் - தலா அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய் - தேவையான அளவு,
  • உப்பு - ஒரு சிட்டிகை.


செய்முறை:

அரிசி, பருப்புகள், வெந்தயம் அனைத்தையும் களைந்து தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர், அதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, இந்துப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் மற்ற பொருட்களைச் சேர்த்து, மெல்லிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு, மிதமான தீயில் இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

ஈஸ்டர் தீவு சிலைகளின் இரகசியம்..!



பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள தீவு ஈஸ்டர் தீவு. இத்தீவு ஜகோப் ரோகுவீன் எனும் டச்சு மாலுமியால் (Dutch explorer ) வெளியுலகுக்கு அறியபடும் பகுதியானது.

இத்தீவின் பெரும் அதிசயமாக கருதப்படுபவை ஒரே வடிவமைப்பில் சிறிதும் பெரிதுமான 887 கற்சிலைகள். இந்த சிலைகளை ”மோய்” (Moai) என குறிப்ப்பிடப்படுகின்றன. ரப்பா நூயி (Rapa Nui) எனும் பழங்குடிகளால் இது வடிவமைக்கப்பட்டது.

10000 ஆண்டுகளுக்கு முன்பு இத்தீவில் எரிமலை சீற்றம் இருந்ததாக மதிப்பிடப்படுகிறது.

ஈஸ்டர் தினத்தில் (1722) டச்சுக்காரர்கள் இத்தீவில் இறங்கியதால் ஈஸ்டர் தீவு என அழைக்கப்படுகிறது. பழைய பெயர் (Rapanui) ரபானூய். சிந்து, ஹரப்பா இப்படி வரிசையில் இது “கடைசி நாகரீகம்” என அழைக்கப்படுகிறது. இவர்களின் கலாச்சாரமும் ஒரு புதிர். ஒரே வடிவமைப்பில் உள்ள இந்த கற்சிலை ஏன் எதற்காக என்ற கேள்விக்கு பல வியாக்கியானங்கள் கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு சிலையும் சராசரியாக 12 அடிகள் உள்ளன.

30 முதல் 40 டன் எடையுள்ள 30 அடி உயரசிலைகளும் உண்டு.
முழு உருவச் சிலைகள் என்றில்லாமல் மார்பளவு மற்றும் இடுப்பு வரைக்குமான சிலைகள் இவை.

உருவங்களின் சாயல் ஒரே மாதிரியாக இருக்கின்றன. சிலைகளின் பின் புறம் குறியீடு அல்லது சித்திர எழுத்துகள் செதுக்கப்பட்டு உள்ளன.

சில எரிமலை கற்களால் வடிவமைக்கப்பட்ட சிலைகள்.
சிலைகளின் அமைப்பை வைத்து இத்தீவில் இரண்டு இன பழங்குடிகள் இருந்திருக்கலாம் என உறுதிப்படுத்துகிறார்கள். சிலைகளில் ஒருவகை குட்டை காதுகளை கொண்டும் இன்னொரு வகை நீண்ட காதுகளை கொண்டும் இருக்கிறது.

நீண்ட காதுகளை கொண்டவர்கள் ஆட்சி அதிகாரத்தை கொண்டிருக்கலாம். குட்டைகாதுகளை கொண்டவர்களை இவர்கள் அழித்திருக்க கூடும்.
இவர்கள் அமெரிக்க இந்தியர்கள் அல்ல பாலினீஸியன்கள்.
மூலக்கூறு (டிஎன் ஏ) ஒப்பீட்டின் படி பாலினீஸியன்களோடு ஒத்துப்போகிறது.
இவர்கள் சுமார் 400 A.D வாக்கில் இங்கு குடியேறி இருக்கலாம்.

சில எரிமலை வாய்ப்பகுதியில் தீவை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளன. பல டன் கொண்ட இவை எப்படி நிறுவப்பட்டது என்பது அடுத்த மர்மம்.

ஈஸ்டர் தீவு தீவின் தொன்மையான பெயர் ரப்பாநூயி, 15மைல் நீளமும் 10மைல் அகலமும் கொண்ட ஒரு முக்கோணத்தீவு, பரப்பளவு 163 சதுர கிலோமீட்டர்கள். சிலியின் கட்டுப்பாட்டில் இத்தீவு உள்ளது.
இத்தீவில் சுமார் பதினோராயிரம் பழங்குடிகள் (பூர்வ குடிகள்) இருந்திருக்கலாம் எனவும்,ஐரோப்பியர்கள் நுழைந்த போது (1877) சில நூறு மட்டுமே இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சில கணிப்புகள் :

இச்சமூகத்தில் நரமாமிசம் உண்ணும் பழக்கம் அல்லது நரபலி இருந்திருக்கிறது.

இந்த சிலைகள் தமது கடவுளுக்கு பிரியமானது என்று நிறுவப் பட்டிருக்கலாம்.

வேற்று கிரக வாசிகளுக்கும் இத்தீவிற்கும் தொடர்பு இருந்து இருக்கவேண்டும்.

சக்கரைவல்லிக் கிழங்கு இங்கு இருந்திருக்கிறது 2300 மைல் தொலைவில் சிலியில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்.

வானியல் பற்றிய அவர்கள் அறிந்திருந்தனர்.

மிக கனமான இந்த கற்சிலைகளை எப்படி உயரமான இடங்களில் கொண்டு சென்று நிறுத்தினர் என்பதே ஆச்சர்யமான ஒன்று. இது குறித்து பல ஆண்டுகளாக பலவிதமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன ( Easter Island Statue Project.) உருளைகள், நீண்டகயிறுகள், சறுக்கு பலகைகள் இப்படி இவற்றை கொண்டு சோதித்து பார்க்கப்பட்டன. சுழற்றி சுழற்றி இவை கொண்டுசெல்லப்பட்டிருக்குமா?

(ஆராய்சியின் விழைவாக சில சிலைகள் உடைந்து போய் இருக்கின்றன)

ஹவாய் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் டெரிகன்ட் என்பவரும், கலிபோர்னிய மாகாண பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் கார்ல் லிப்போ மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சர்ஜிகோ ராபு இவர்கள் 12 ஆண்டுகால தொடர் ஆய்வின் இறுதியில் கற்சிலைகள் இப்படித்தான் நிறுவப்பட்டிருக்கும் என்ற முடிவிற்கு வந்ததோடு 18 பேர்களை கொண்டு செயல்படுத்தியும் காட்டினர். (இதற்கு முன் பல குழுக்கள் இது குறித்த உறுதியான முடிவை எட்ட வில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்)

இந்த சிலையின் அடிப்பாக அரைவட்ட அமைப்பு, ஈர்ப்பு விசைக்கு தகுந்தாற்போல் செதுக்கப்பட்ட அளவீடு இவை சிலைகளை அவர்கள் நகர்த்தி செல்ல முடிந்திருக்கிறது.

ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்..!

ஆடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்:-



audioகண்ணால் காண்பதை பகிர்ந்து கொள்ள , பேஸ்புக், வலைப்பதிவுகள் என ஆயிரம் வழி இருக்கிறது. காதால் கேட்பதை பகிர்ந்து கொள்ளவும் வழிகள் இல்லாமல் இல்லை. முன்னோடி ஒலி பகிர்வு தளமான சவுண்டு கிலவுட் உட்பட பல்வேறு இணையதளங்கள் ஆடியோ கோப்புகளை பகிர உதவுகின்றன. இந்த பிரிவில் இப்போது ஆடியூர் தளமும் சேர்ந்திருக்கிறது.

ஆடியூர் , உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒலி வடிவில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. நீங்கள் பகிர்ந்து கொள்ள உதவும் ஒலியை அதாவது நீங்கள் பதிவு செய்த ஒலியை இந்த தளத்தில் பதிவேற்றினால் போதும் அதற்கென பிரத்யேக இணைய முகவரி உருவாக்கி தரப்படுகிறது. அந்த முகவரியை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். என்ன மாதிரியான ஒலிகளை ,எப்படி பகிர்ந்து கொள்ளலாம் என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

இணையதள முகவரி; http://audiour.com/

மோடி டீ ரூபாய் 10, கெஜ்ரிவால் டீ ரூ. 8, ராகுல் காந்தி டீ ரூ. 6 – போபால் ட்ரெண்ட்..!




பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் வியாபாரிகள் தங்களது டீக்கு அரசியல்வாதிகளின் பெயரை வைத்து வியாபாரத்தை உயர்த்தும் உத்தியை கொண்டு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக அங்குள்ள கடையின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில் “போபாலில் உள்ள அனைத்து டீக்கடைகாரர்களும் கோல்டன் டீ மற்றும் சுலைமணி டீ க்கு பதிலாக மோடி டீ” விற்பனை செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக போபாலின் சாதார் மான்சிலில் வென்னிலா டீ சென்டரில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பெயரில் உள்ள டீ கப் ஒன்று ரூ. 10க்கு விற்பனை ஆகிறது.

 இதனை அடுத்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரில் உள்ள டீ ரூ. 8 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பெயரில் உள்ள டீ கப் ஓன்று ரூ. 6க்கு மட்டுமே விற்பனை செய்யபப்டுகிறது.

பலி வாங்கும் வலி நிவாரணிகள்..! - வேண்டாம் சுயமருத்துவம்...!

பலி வாங்கும் வலி நிவாரணிகள்..! - வேண்டாம் சுயமருத்துவம்...!


''காலையிலிருந்து சமையல்கட்டுல மூணு மணி நேரமா நின்னு வேலை பார்த்ததுல கால் ரெண்டும் ஒரே வலி, இடுப்பு கழண்டு கீழ விழுற மாதிரி வலி கொன்னு எடுக்குது. போன தடவ இடுப்புவலிக்காக டாக்டர்கிட்ட போனப்ப வலி குறைய மாத்திரை கொடுத்தாரே... அதுல ரெண்டு வாங்கிட்டு வாங்களேன்... போட்டுட்டுத் தூங்குறேன்...''

வீட்டில் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் இவை.

இப்படித்தான் நம்மில் பலர் ஒருமுறை ஏதோ ஒரு வலிக்காக மருத்துவர் கொடுத்த வலி நிவாரணி மாத்திரைகளை, எல்லா வகையான வலிகளுக்கும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக... ஆர்த்ரைட்டீஸ், கால் மூட்டுவலி, தசைவலி, மூட்டு எரிச்சல் போன்றவற்றுக்கு முதல் முறை பிரச்னை வந்ததும் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற்று வாங்கிய மாத்திரைகளை... அடுத்தடுத்த முறை அந்த வலி தோன்றும் போதெல்லாம் மருத்துவ ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துகிறோம்.

''இது சரியா?'' என்ற கேள்வியுடன் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் டாக்டர் கருணாநிதியைச் சந்தித்தபோது...

''வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துபவர்கள் பெண்கள்தான்'' என்று எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சியைக் கூட்டினார் டாக்டர்.

''என்னிடம் வரும் நோயாளிகளில் பாதிப் பெண்கள், 'கை, கால் குடைச்சல் தாங்க முடியல டாக்டர். வலி சட்டுனு போற மாதிரி மாத்திரை கொடுங்க’ என்பார்கள். ஏன் இந்த வலி நமக்கு வருகிறது என்று தெரிந்துகொள்வதைவிட, வலி உடனே பறந்து செல்வதற்கு என்ன வழி என்றுதான் பலரும் அவசரப்படுகிறார்கள். இதற்குக் காரணம் வீட்டு வேலை, பிழைப்புக்கான வேலை என்று சக்கரமாய்ச் சுழலும் வாழ்க்கைச் சூழல்தான்.

வலியைக் குறைக்க பயன்படுத்தப்படும் மாத்திரைகளில் 'நான்-நார்காடிக்’, 'நார்காடிக்’ என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. அதில் 'நான்-நார்காடிக்’ வகையில் 'நான் ஸ்டீராய்டல் ஆன்ட்டி இன்ஃபிளமேட்டரி ட்ரக்ஸ்' (NSAID- Non Steroidal Anti-Inflammatory Drugs) மாத்திரைகளைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். புரூஃபன், அசிட்டமினோபென் போன்ற மாத்திரைகள் இந்த வகையில் அடங்கும்.''

''வலி நிவாரணிகளை அடிக்கடி விழுங்கு வதால் என்ன பின்விளைவுகள் ஏற்படும்?''

''ஒருமுறை வலி போவதற்காக நாம் பயன்படுத்திய மாத்திரையை அதன்பிறகு ஒவ்வொரு முறையும் வலி தோன்றும்போது டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் விழுங்கிப் பழகிக் கொண்டால்... அது மாத்திரை போட்டே ஆகவேண்டும் என்கிற 'அடிக்ஷன்’ பிரச்னையை உண்டாக்கும். அடுத்த கட்டமாக முதலில் வயிற்றில் புண் (அல்சர்) உண்டாகும். அதன் எதிரொலியாக குடலின் தோல் கிழிந்து, உள்ளேயே 'கேஸ்ட்ரிக் எரோஸன்’ எனப்படும் ரத்தக்கசிவு உண்டாகும். அதை உணராமலும், தெரியாமலும் 'வயிற்று வலி வயிற்று வலி’ என்று துடித்து, அதற்காக தனி சிகிச்சை எடுப்போம். சிலருக்கு வலி நிவாரணிகளைத் தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டால்கூட, பிரச்னை வரலாம். அடுத்து நேரடியாக பாதிக்கப்படுவது சிறுநீரகம்.

50 வயதைக் கடந்தவர்கள் வலி நிவாரணிகளை அடிக்கடி பயன்படுத்தும்போது, 'ஹைபர் டென்ஷன்’ மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஹைபர் டென்ஷன் உண்டான பின்பும் தொடர்ந்து வலி நிவாரணிகளை உட்கொண்டால், அது மாரடைப்பு வரை செல்லலாம். கூடுதல் பரிசாக, ரத்தம் உறையும் பிரச்னையும் உண்டாக்கும்.

ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்கள், வலி நிவாரணிகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அந்த பிரச்னை அதிகமாகும். சிலருக்கு இந்த மாத்திரைகளை சில நாட்கள் உட்கொண்டாலே மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும்.''

''வலி நிவாரண மாத்திரை களால் ஏற்படும் விளைவு களைத் தடுப்பது எப்படி?''

''அறுவை சிகிச்சை, மூட்டு - தசை வலிக்குள்ளானவர்கள் வலி நிவாரணிகளை உட்கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால், அதை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. முக்கியமாக, முதல் முறை டாக்டரைச் சந்திக்கும்போது 250 மில்லி கிராம் அளவு மாத்திரையைக் கொடுத்திருந்தார் என்றால், சில நாட்கள் கழித்து அந்த வலி உண்டாகும்போது அதைக் குறைக்க 100 மில்லி கிராமே பரிந்துரைப்பார். அதுவே போதுமானதாக இருக்கும். ஆனால், மருத்துவ ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து அதே மருந்தை எடுத்துக் கொள்ளும்போது, 250 மில்லிகிராமையே பயன்படுத்துவோம். இது ஆபத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்.

வலிநிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது, 'ஆன்ட்டி - ஆசிட்’ மாத்திரைகளையும் சேர்த்து உட்கொண்டால், மாத்திரையால் உண்டாகும் அல்சர் வராமல் தடுக்க முடியும்.''

குறிப்பு: வலியைவிட, வலிநிவாரணிகள் ஆபத்தானவை.

பலி வாங்கும் வலி நிவாரணிகள் !

டாக்டர் ப.செல்வராஜன்

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மருத்துவர்
பெயின்டர் தேவை, பிளம்பர் தேவை என்று யாராவது கேட்டு வந்தால், அந்த வேலை தனக்குத் தெரியும் என்று யாரும் ஆஜராக மாட்டார்கள். ஆனால், தலைவலி என்று சொல்லிப் பாருங்கள்... ஆளுக்கொரு வைத்தியம் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அந்தளவுக்கு இந்தியத் திரு நாட்டில் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடி மகனுமே தன்னை எம்.பி.பி.எஸ். படிக்காத குட்டி டாக்டராகவே நினைத்துக் கொள் கிறார்.

என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு அது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு என் டாக்டர் நண்பர் ஒருவருக்கு தலைவலி அதிகமாக, அதற்குரிய ஸ்பெஷ லிஸ்ட் மருத்துவரிடம் செல்லாமல் இரண்டு ஆண்டுகளாக தானே சிகிச்சை எடுத்துக் கொண்டார். முடிவில் அவரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து, 34 வயதி லேயே உயிரிழந்த சோகத்தை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை.

அன்றைய நாளில் இருந்த எல்லா ஆய்வுக் கூட சோதனைகளையும் மேற்கொண்ட அவர், ரத்த அழுத்தத்தை மட்டும் ஏனோ சோதிக்கவே இல்லை. அவருடைய மனைவி யும் ஒரு டாக்டர் என்பது கொடுமையிலும் கொடுமை. ஒரு மருத்துவரே, தன் பிரச்னைக் குரிய ஸ்பெஷலிஸ்ட்டிடம் செல்லாமல், தனக்குத் தானே மருத்துவம் பார்த்து காப்பாற்றிக் கொள்ள முடியாதபோது... சாமான்ய மக்களால் எப்படி சுய மருத்துவத்தால் தற்காத்துக்கொள்ள முடியும்? செல்ஃப் மெடிக்கேஷனின் ரிஸ்க்-ஐ புரியவைக்க, இதைவிட எச்சரிக்கும் விதமான, சோக மான எடுத்துக்காட்டு வேறு வேண்டுமா என்ன?

உடலின் நோய்க்கூறு இயல் - அதாவது பெத் தாலஜி (Pathology) எனப்படும் மருத்துவப் பிரி வில், ஒவ்வொரு நோயும் உடலில் எவ்விதமான மாறுதல்கள் உண்டாக்கும் என்று அறிந்து, நோயின் போக்கு (Course), அதன் தீர்வுக்கான கணிப்பு (Prognosis), நோயினால் வரக்கூடிய சிக்கல்கள் ஆகியன வரையறுக்கப்பட்டுள்ளன. மருத்துவரின் மேற்பார்வையில் இவை பற்றிய விரிவான அலசல் ஏதுமின்றி... 'மார்பு சளிக்கு இந்த மருந்து' என்று பொதுவாக உட்கொள்வது அபத்தம்.

உதாரணமாக, சளி என்பது நோயல்ல. சுவாச மண்டலத்தின் உள்ளே நுழைந்துள்ள ஒரு கிருமியை அகற்ற தற்காப்புக்கென உடலில் சுரக்கும் திரவப் பொருள்தான் சளி. சிலசமயம் கிருமிக்கு பதில் வேறு நச்சுத் துகள்கள் அல்லது புகையாலும் சளி ஏற்படலாம். இதை உடலிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் சுவாச மண்டலத்தின் உட்புறச் சுவர் முழுவதும் உள்ள சீதப்படலம் (Mucous Membrane)...கோழை அல்லது நீரைச் சுரக்கிறது. அதன் விளைவாக உடலில் நச்சு நுழை யாமல் நீர்த்துப் போகும். ஆனால், படையெடுக்கும் கிருமியைப் பற்றி கவலைப்படாமல் தற்காப்புக் காகச் சுரக்கும் சளியை அறவே நீக்கிவிட உடனடியாக சிகிச்சை செய்கிறோம்.

காய்ச்சல் என்பதுகூட உடல் தன்னைக் காத்துக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிதான். கிருமி ஒன்று உள்ளே நுழைகிறது எனில், அதைக் கொல்லும் முயற்சியில் உடல் தன் வெப்பத்தைக் கூட்டுகிறது. அதில் கிருமி அழியாமல் போராடும். அதன் விளைவுதான் நாம் உடல்வலி, தலைவலி எனத் தவிப்பது. ஆனால், கிருமியை வெல்லவிடாமல் செய்யும் உடல் வெப்பத்தை, நாம் மாத்திரைகள் போட்டுத் தடுத்து விடுவதோடு, ஒரு நுண்ணுயிர்க் கொல்லி - அகண்ட திறன் வரிசை நுண்ணுயிர் கொல்லி (பிராட் ஸ்பெக்ட்ரம் ஆன்டிபயாடிக்) உட்கொண்டு, உடலின் தற்காப்புத் திறனை (Immunity) வளர விடாமல் செய்கிறோம்.

சுயமருத்துவம் ஏன் கூடாது என்பது இப்போது புரிந்திருக்கும். சரி, சுயமருத்துவம் எடுத்துக் கொள்வ தனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

பொதுவாக, நாம் உட்கொள்ளும் எந்தப் பொருளும் செரிமானமாகி, உடலில் கல்லீரலும், ரத்த ஓட்ட சுழற்சியிலும் சேர்ந்த பிறகு, அவை அனைத்தும் வெளியேறுவது சிறுநீரகங்கள் வழியாகத்தான். எனவே, நாம் எடுத்துக்கொள்ளும் சுயமருந்துகளின் பாதிப்பு, சிறுநீரகங்களைத்தான் பெரிதும் தாக்கும். இவை பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் அடிக்கோடிடப்படும் காரணங்களைப் பகிர் வது, உங்களையும் முன்னெச்சரிக்கை ஆக்கும்.

அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கெனவே சிறுநீரகம் பழுதடைந்தோ அல்லது நோயுற்றோ உள்ளவர்கள், சர்க்கரைநோய் உள்ளவர், இதயம் செயல் திறனிழப்பு கொண்டவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டியவர்கள் என்கின்றன ஆராய்ச்சிகள். 'நான் வெறும் தலைவலி மாத்திரை தான் சாப்பிடுவேன். இதுக்கு ஆராய்ச்சி அளவுக்கு அறிவுரை சொல்லணுமா?’ என்கிறீர்களா..? கவனிக்க... சிறுநீரகங்கள் மிக அதிகம் சேதமடைவது வலி நிவாரணி மாத்திரைகளைத் தொடர்ந்து எடுப்பதால்தான். இதை அனால்ஜீஸிக் நெஃப்ராபதி (Analgesic Nephropathy) என்றே அழைக்கிறார்கள். இவை தவிர, ரத்த அழுத்தத்துக்கு உட்கொள்ளும் மாத்திரைகூட தீங்கு செய்யலாம்.

அந்தக் காலத்தில் வீட்டி லேயே வைத்தியம் பார்த்துக் கொண்டார்கள் எனில், சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு முதலுதவிதான் செய்வார்களே தவிர, எல்லா நோயையும் குணப்படுத்த கூடிய மட்டும் முயல மாட்டார்கள். இன்று சமையல் பொருட்களில்கூட கலப்படம் வந்துவிட்ட நிலையில், அஞ்சறைப் பெட்டி வைத்தியம்கூட உத்தரவாதம் இல்லாதது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அப்படி இருக்க, மெடிக்கல் ஷாப்களில் நோய்களைச் சொல்லி மாத்திரைகள் வாங்கி விழுங்குவதும், நம் மருத்துவ அறிவை (!) மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பதும் அபாயமானவை. அந்த முறையற்ற மருந்துகள் சிறுநீரகங்களைத்தான் குறி வைத்துத் தாக்கும், முடிவில் நம்மையே தகர்க்கும் என்பது எப்போதும் நினைவிருக்கட்டும்!

நோயாளியாக இருப்பது தவறில்லை... தனக்குத் தானே டாக்டராவதுதான் மிகப் பெரிய தவறு!

கண்ணீர் எப்படி உருவாகிறது..?

கண்ணீர் எப்படி உருவாகிறது?


கண்ணீர்த் துளிகள் உப்பு நீராலானவை. கண்விழி தக்கவாறு சுழல்வதற்கேற்ப ஈரப்பசை தரும் சுரப்பி, இயல்பான நீருக்கு மேல் அதிகமாகச் சுரப்பதால் கண்ணீர் ஏற்படுகிறது. கண் எல்லா நீரையும் வடிக்க இயலாததால் மிகுதியான நீர் கண்ணீர்ப் பெருக்காக வெளியேறுகிறது.

கண்ணீரைத் தோற்றுவிக்கும் சுரப்பி கண்ணீர் சுரப்பி (Lachymal gland) என அழைக்கப்படுகிறது. கண்ணீர் என்பதற்கான லத்தீன் மொழிச் சொல் லக்ரிமா (Lacryma) என்பதாகும். அச்சுரப்பி கிட்டத்தட்ட வாதுமைக் கொட்டை அளவு வடிவில் (Almond nut) கண்ணின் மேலே அமைந்துள்ளது. ஆறு அல்லது ஏழு நுண்ணிய நரம்புக் குழாய்களால் கண்விழியில் மேற்பரப்பில் அது திறந்து விடுகிறது. ஒவ்வொரு முறையும் கண்மூடித் திறக்கும்போது (blink) கண்ணின் மேற்பரப்பு முழுமையும் பரப்பலாகிறது. மேல் கீழ் கண்ணிமைகள் சேருமிடத்தில் தேவைக்கு மேலான நீர் சேகரிக்கப்பட்டு கண்ணின் உள் மூலையில் இரண்டு வாய்க்கால் வழியே வந்து மூக்கின் அருகிலுள்ள கண்ணீர்ப் பைக்கு எடுத்து வரப்படுகிறது (Lachymal Sac).

வெங்காயம் அல்லது வீட்டு அமைப்பில் தோன்றும் நவச்சார ஆவி (Ammonia) போன்ற சேர்மம் ஆகியவற்றின் மூக்கைத் துளைக்கும் மணம் அல்லது துன்பம், மகிழ்ச்சி, பயம் போன்ற உணர்ச்சிகளால் ஏற்படும். அழுத்தம் போன்றவற்றால் கிளறப்படும்போது கண்ணீர் சுரப்பி வழக்கமான நீருக்குமேல் மிகவும் உண்டாகிறது. அதனால் கண்ணீர்ப்பை மிகவும் நிரம்பி நீர் மூக்கில் நுழைக்கிறது. குழாய்கள் ததும்பி வெளிப்படுத்துகின்றன. இத்ததும்பி வழிதல் நீர்ம ஒழுக்காக ஓடுகிறது.

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிசெய்யும் திகில் ஆதாரங்கள்.!

வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை உறுதிசெய்யும் திகில் ஆதாரங்கள்.!


தேடிக்கிடைக்காது என்று தெரிந்தவொன்றை தேடி அலைகிறது விஞ்ஞானம் என ஒவ்வொரு தேடலிற்குமான முடிவு கிடைக்கும் வரையில் விஞ்ஞானத்தையும் அது தொடர்பிலான ஆராய்ச்சியாளர்களையும் கேலிக் கூத்தாக எடுக்கும் ஒரு சமூகம் அன்று தொடக்கம் இன்று வரை இருக்கத்தான் செய்கிறது. அதுவே குறித்த தேடல்களுக்கான முடிவு கிடைத்துவிட்டால்...

அப்படி முடிவு கிடைத்துவிட்ட ஒரு விடயமாக விரைவிலே மாறப்போகிறது வேற்றுக்கிரகவாசிகள் என்ற அம்சமும். இதுவரை காலமாக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக் கண்களுக்கு தென்படாமல் இருந்து வந்த வேற்றுக்கிரகவாசிகளின் வாழ்விடங்களை 'Planet Hunters Project' என்ற திட்டத்தின் கீழ் தன்னார்வ வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல வேற்றுக்கிரகவாசிகள் வாழும் 42 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'Planet Hunters Project' என்பது புதிய கோள்களை கண்டுபிடிப்பதற்காக சூனிவர்ஸ் எனும் இணையத்தள அமைப்பினால் தன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர்களைப் பயன்படுத்தி புதிய கோள்களைக் கண்டுபிடிக்கும் Citizen Science Project என்றழைக்கப்படும் திட்டமாகும்.
வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தத்தளித்துக் கொண்ட வானியல் உலகிற்கு துருப்புச் சீட்டாய் கிடைத்திருக்கும் இக்கோள்கள் தொடர்பில் தொடரவுள்ள ஆராய்ச்சிகள் நிச்சயம் எம்மை விரைவில் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளச்செய்யும் என்பது வானியலாளர்களின் தற்போதைய நம்பிக்கையாகவுள்ளது.

இதே திட்டத்தின் கீழ் ஏற்கனவே 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 சூரியன்களுடனான PH1 எனப் பெயரிடப்பட்ட நெப்டியூனை விட சற்றே பெரிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நாசாவின் தொழில்சார் வானியல் ஆராய்ச்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு குறித்த கோளினை உறுதிசெய்தது.

இதனையடுத்து உத்வேகத்துடன் செயற்பட்ட 'Planet Hunters Project' இன் 40 தன்னார்வ வானியல் ஆராய்ச்சியாளர்களால் இப்போது மீண்டும் 42 புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் அறிவியல் உலகை மகிழ்சிப்படுத்தும் விதமாக மனிதர்கள் வாழ ஏதுவான காரணிகளுடன் கூடிய 15 கோள்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த 42 கோள்களில் PH2 எனப் பெயரிடப்பட்டுள்ள கோளானது சூரியத் தொகுதியிலுள்ள வியாழன் கோளின் அளவினை ஒத்தது. இதேவேளை இக்கோளின் வெப்பநிலை சுமார் 30 தொடக்கம் -80 பாகை செல்சியஸ் வரை மாற்றங்கள் ஏற்படுகிறது. இக்கோளில் மனிதன் வாழத் தேவையான கூறுகள் உள்ளது. அதாவது ஹொலிவூட்டில் வெளியான அவதார் திரைப்படத்தில் வரும் பெண்டோரா கிரகத்தினை ஒத்ததாக இருக்கும் என சூனிவர்ஸ் உறுதியாக நம்புகின்ற அதேவேளை இக்கண்டுபிடிப்பானது யார் வேண்டுமானாலும் புதிய கோள்களைக் கண்டுபிடிக்கலாம் என நம்பியளிக்கும் வகையிலமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கேப்ளர் என்ற விண்கலத்தினைக் கொண்டு நாசா பிரபஞ்சத்தை சல்லடை போட்டு பூமியை ஒத்த கோளினை தேடிக்கொண்டிருக்கிறது (கெப்ளர் தொடர்பான கட்டுரையினை நவ.30 திகதி மெட்ரோவில் பார்க்கலாம்). அந்த கெப்ளரின் துணையுடன் தற்போது 99.99 வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இவ்விடயமானது தொழில்சார் நாசா வானியல் ஆராய்ச்சியாளர்களிடம் அனுப்பி மேலும் உறுதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தத்தளித்துக் கொண்ட வானியல் உலகிற்கு துருப்புச் சீட்டாய் கிடைத்திருக்கும் இக்கோள்கள் தொடர்பில் தொடரவுள்ள ஆராய்ச்சிகள் நிச்சயம் எம்மை விரைவில் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளச்செய்யும் என்பது வானியலாளர்களின் தற்போதைய நம்பிக்கையாகவுள்ளது.

உண்மையில் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா? இல்லை இதுவெல்லாம் வெறும் வதந்திகளா? என்றால் இல்லை என்று ஒற்றைச் சொல்லில் மறுத்துவிடுவது இயலாத காரியம் தான். மதத்தின் பெயரிலும் சில பல நம்பிக்கைகளின் பெயரிலும் வேற்றுக்கிரகவாசிகள் என்பதெல்லாம் விஞ்ஞானத்தின் கட்டுக்கதையே என்பவர்கள் பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையைச் சொன்ன ஆய்வாளர்களைக் கொன்றுகுவித்தவர்களை பிரதியீடு செய்யும் மூடர்களே என்பது போல் அமைகிறது சில சான்றுகளும் விஞ்ஞானிகளின் கருத்துக்களும்.

தற்காலத்தின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஏலியன்ஸ் என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி. பிரபஞ்சத்தில் 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும்
லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.

என்னுடைய கணித அறிவின்படி வேற்றுகிரகவாசிகள் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எந்த உருவத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது தான் சவாலான விடயம். அவர்கள் நுண்ணுயிரிகளாகவும் இருக்கலாம். புழுவாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த உருவங்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு நம் உயிரினத்தின் வளர்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கி.மு. 384இல் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில், விண்ணில் தான் கண்ட விசித்திரப் பொருட்களைச் 'சொர்க்கத்தின் தட்டுக்கள்' என விபரித்திருந்தார். இதுமட்டுமின்றி கி.மு. 329இல் மாவீரன் அலெக்சாண்டருடனான கிரேக்க இராணுவத்தின் இந்தியா நோக்கிய படை நகர்வை, வெள்ளிக்கேடயங்களையொத்த விசித்திரமான பறக்கக்கூடிய பொருட்கள் இடைமறித்ததென தெரிவிக்கப்படுகிறது.

இவற்றையெல்லாம் விட 2002ஆம் ஆண்டளவில் இலங்கையின் புராதன பிரதேசங்களில் ஒன்றான திம்புலாகலைக்குன்றின் உச்சியில் பிரதேசவாசிகள் விசித்திரமான நீலநிற ஒளியை அவதானித்தனர். அதே காலப்பகுதியில் பொலன்னறுவை, அனுராதபுரம் போன்ற பிரதேசங்களிலும் புதுமையான ஒளி மற்றும் விண்கலத்தினையொத்த சில அமைப்புக்கள் அவதானிக்கப்பட்டதனையடுத்து அவை வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புடைடையதாக இருக்கலாமென அப்போது ஊகங்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர மாயன் இனத்தவர்களின் சித்திரம், சிற்பக் கலை (கவனத்தில் கொள்க இது மாயன் பெயரில் வெளிவந்த வதந்திகள் போன்றதல்ல) மற்றும் எகிப்திலுள்ள சித்திரங்கள் போன்றனவும் வேற்றுக்கிரகவாசிகள் உண்டு என்பதற்கான ஆதாரங்களாக காணப்படுகிறது. இதேபோல இன்னும் ஏராளமான ஆதாரங்கள் தற்போது ஆய்வாளர்களின் வசம் உள்ளது.

எனவே நல்ல செய்தி வந்து சேரும் என்ற நம்பிக்கையில் அனுப்பியுள்ள வொயஜர்-1 மற்றும் கெப்ளர்விண்கலங்களின் உதவவியுடன் எம்மையும் வேற்றுக்கிரகவாசிகளுடன் தொடர்புகொள்ளச் செய்யலாம் என்ற ஆய்வாளர்களின் நம்பிக்கை நிறைவேற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதே திண்ணம்.

முன் ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா..? இல்லையா..?


ஆன்மிக நோக்கிலும், அறிவியல் நோக்கிலும் கடந்த ஜென்மம் உண்டா? இல்லையா? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ராமாயணம், மகா பாரதம் போன்ற புராணங்கள் மறுபிறப்பைப் பற்றிக் என்ன கூறுகிறது? விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள் புனர்ஜென்மங்களைப் பற்றிக் கூறும் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மிகவும் சுவையானவை. பெரிய ஆராய்ச்சிக்கு உரியவை. பதினெட்டு புராணங்கள் தரும் மறுபிறப்பு சம்பவங்களில் நிறைய உண்மைகளை உணரலாம்.

சீதையின் முன் ஜென்மம்!

முதலில் ராமாயணத்தில் முக்கியமான சம்பவத்தைப் பார்க்கலாம்! சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, முன் ஜன்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால் செய்யப்பட்டதோ! ஆகவேதான் கொடுமை கொண்டு மிக வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது (கீத்ருஸம் து மயா பாபம் புராஜன்மாந்தரே க்ருதம் / யேநேதம் ப்ராப்யதே துக்கம் மயாகோரம் ஸுதாருணம் / 26ம் அத்தியாயம் 18ம் சுலோகம்) என்று கூறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்! சீதைக்கு ஏது முன் ஜென்மம் என்று ஆச்சரியப்படும்போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம்.

ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில் ஹனுமன், சீதையைக் கொடுமைப்படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்கு யோசித்து விட்டு சீதை கூறுகிறாள்.

அவர்கள் வெறும் ஊழியர்கள்தான் ! அவர்கள் மீது ஏன் கோபப்படுகிறாய்! நான் அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது முன் ஜென்மங்களில் செய்த செயல்களின் விளைவுதான் என்று திட்டவட்டமாக கூறுகிறாள்.

(யுத்தகாண்டம் 113ம் அத்தியாயம், 39ம் சுலோகம்) சீதையின் முன் ஜென்மக் கதை சுருக்கமாக இதுதான். ஒருமுறை ராவணன் பூமியைச் சுற்றி வரும்போது இமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான்.

காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான். அந்த அழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும், தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும், இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும், இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும், அதன் பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள்.

யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும்.

ஆகவே, அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள். பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள்.

அவளை மீண்டும் பிடித்த ராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான். அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள் என்று கூறினார்.

இதனால் ராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான். கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள். அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள்.

உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள். கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதையின் முற்பிறப்பு ரகசியம் பற்றிய கதையின் சுருக்கம் இது தான்!உத்தரகாண்டம் தரும் முன்பிறப்பு இரகசியங்கள்!சாதாரணமாக ராம பட்டாபிஷேகத்துடன் சுபம் என்று நாம் ராமாயணத்தை முடித்து விடுவதால் உத்தர காண்டத்தில் உள்ள அரிய ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது.

வால்மீகி அரிய முன்பிறப்பு ரகசியங்களையும், ராமாயணத்திற்கு ஆதாரமாக விளங்கும் பல ரகசியங்களையும் (பிருகு முனிவர் விஷ்ணுவை பூமியில் மானிடனாக அவதரிக்க சாபம் தந்ததால் அவர் ராமனாக அவதரித்தது உள்ளிட்டவற்றை) உத்தர காண்டத்திலேயே விளக்குகிறார்.

சீதையின் முற்பிறவியைப் போலவே ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களின் முற்பிறவி பற்றிய சம்பவங்கள் சுவையானவை. படித்து அறிந்து கொள்ள வேண்டியவை.

இந்து மதத்தின் அடிநாதமான உண்மை மறுபிறப்பு!

செமிடிக் மதங்கள் என்று கூறப்படும் யூத மதம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் ஆகியவற்றிற்கும் இந்து மதத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று புனர்ஜென்மம். மனிதப் பிறவியில் ஒருவர் ஆற்றும் நல்வினை, தீவினைக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது.

அனைத்து மானுடரும் படிப்படியாக முன்னேறி முக்தி அடையலாம்; அடைவர் என்பது இந்து மதம் கூறும் உண்மை. மாறாக செமிடிக் மதங்கள் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு. அவர் இறந்தவுடன் தீர்ப்பு நாள் வரும் வரை காத்திருந்து தீர்ப்பிற்கேற்ப சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைய வேண்டும் என்று கூறுகின்றன.

தர்க்கரீதியாக சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு என்றால் ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருக்க, பிறந்த குழந்தை ஒன்று ஏன் மரிக்க வேண்டும்? ஒருவர் ஏன் செல்வந்தராகவும், இன்னொருவர் ஏழையாகவும் இருக்க வேண்டும்? என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்து விடை காண முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது.

மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட மாமனிதர்கள்!

பிளேட்டோ, பித்த கோரஸ், லியனார்டோ டா வின்ஸி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், எமர்ஸன், ஷெல்லி, மாஜினி, தோரோ, ஹென்றி ஃ போர்டு, சி.ஜே.ஜங், உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கையான மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள்! அன்னி பெஸண்ட் அம்மையார் இது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து ரீ இன்கார்னேஷன் என ஒரு அரிய புத்தகத்தையே எழுதி இந்தத் தத்துவத்தை விளக்கியுள்ளார்.

விஞ்ஞானியின் ஆராய்ச்சி!

வர்ஜீனியா மாநில பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் 1040 புனர் ஜென்ம கேஸ்களை ஆராய்ந்து இது உண்மைதான் என ஆய்வு முடிவில் கூறியுள்ளார்! மிகவும் பிரபலமான எட்கர் கேஸ் 2000 பேரின் பூர்வஜென்மத்தைக் கூறி அவை சரி பார்க்கப்பட்டு அனைவரையும் பிரமிப்பின் உச்சிக்கே ஏற்றியிருக்கிறது.

பச்சை பட்டாணி மற்றும் தக்காளி சப்ஜி..!



மார்கெட் சென்றால் பட்டாணி விலை மலிவில் கிடைக்கிறதா? அப்படியானால் தவறாமல் அதை வாங்கி வாருங்கள். ஏனெனில் அந்தந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அப்போதே வாங்கி சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களை எளிதில் பெற முடியும். அந்த வகையில் பட்டாணியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.

எனவே பட்டாணியைக் கொண்டு பலவாறான ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். இங்கு பட்டாணி மற்றும் தக்காளி கொண்டு செய்யக்கூடிய ஒரு சப்ஜி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். மேலும் இது பேச்சுலர் ரெசிபியும் கூட.

தேவையான பொருட்கள்: 


  • பச்சை பட்டாணி - 1 
  • கப் தக்காளி - 4 (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 3-4 (நறுக்கியது) 
  • மிளகாய் தூள் - 1 
  • டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1
  • டீஸ்பூன் மல்லி தூள் - 1 
  • டீஸ்பூன் சீரகம் - 1
  • டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1


 டீஸ்பூன் செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, பின் தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் கிளறி விட வேண்டும்.

தக்காளியானது நன்கு வதங்கிவிட்டால், பின் அதில் மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கி விட்டால், பச்சை பட்டாணி மற்றும் தக்காளி சப்ஜி ரெடி!!! இதனை சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

 
நண்பேன்டா