Saturday 8 February 2014

விரைவில் காகிதம் போல் சுருளும் செல்போன்கள், T.V -க்கள்..?



அதிக வளைவு தன்மை உடைய மின் கடத்திகளை, அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக இயற்பியல் துறை ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

இதன் மூலம், ´காகிதம் போல் சுருளும், மடங்கும் தன்மை உடைய கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகளை வடிவமைக்க முடியும்´ என, ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழக இயற்பியல் துறை ஆய்வாளர்கள், மின் கடத்திகள் மற்றும் அதற்கு தேவையான எலக்ட்ரோடுகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆய்வின் ஒரு பகுதியாக, தங்க நூலிழைகளைக் கொண்டு, அதிநவீன, அதிக வளைவு திறன் கொண்ட மின்கடத்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தங்க தனிமங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிக செயல்திறன் கொண்ட எலக்ட்ரோடுகளை உடைய இந்த மின் கடத்திகள், அதிக வளைவு தன்மை கொண்டதாகவும், உயர் மின்கடத்திகளாகவும் செயல்படக்கூடியது.

இதன் மூலம், எதிர்காலத்தில், அதிக வளைவு தன்மை கொண்ட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரிக்க முடியும். இதை பயன்படுத்தி, காகிதம் போல் சுருளும் தன்மையும், எப்படியும் மடங்கக்கூடிய வகையிலுமான உடைய கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகளைத் தயாரிக்க ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதனால், உடைய கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிகளை, சுருட்டி, பாக்கெட்டுகளில் கொண்டு செல்லும் நிலை விரைவில் ஏற்படும் என, பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கடவுளும் குழந்தையும்..!


இன்னும் சிறிது நேரத்தில் பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.

குழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்

குழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

கடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா.

குழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

கடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

குழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

கடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.

குழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.

கடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

குழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

கடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.

உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

குழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்

கடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.

கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது…

கையெழுத்துப் போடும்ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா..?


1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்…

தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்…

ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..

3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்…

கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..

4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ?

உங்கள் வாழ்க்கை உங்கள்கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்…

கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,கபில்தேவ்..

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாதகையெழுத்துப் போட்டால்…

புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .
இதில்இந்திரா காந்தி,டாக்டர் ஜாகிர் ஹுசேன் ..

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்…

நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாகஇருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..

8.)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்…

அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..

9) கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா ?

ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்…?

சுவையான ‘மொறு மொறு’ “KFC சிக்கன் வீட்டிலேயே செய்யும் முறை..!



“KFC சிக்கன் செய்யும் முறை

தேவையான பொருட்கள்

ஊற வைக்க:


  • எலும்புடன் ஒரு முழு கோழி (துண்டுகள் போட்டது) (அ) லெக் பீஸ் – ஒரு கிலோ
  • வெங்காயம் – ஒன்று (பெரியது)
  • தக்காளி- ஒன்று (பெரியது)
  • இஞ்சி – மூன்று அங்குல துண்டு
  • பூண்டு – ஆறு பல்
  • பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு


டிப் செய்து பொரிக்க:


  • மைதா – ஒரு கப்
  • கார்ன் ப்ளார் – கால் கப்
  • மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  • உப்பு – அரை தேக்கரண்டி
  • எண்ணெய் + பட்டர் – பொரிக்க தேவையான அளவு


செய்முறை:

வெங்காயம் மற்றும் தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் அரைத்த விழுது மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சிக்கன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் எடுத்து நன்கு தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளவும்.

டிப் செய்ய கொடுத்துள்ள பொருட்களை கலந்து அதில் தண்ணீர் வடித்து வைத்திருக்கும் சிக்கனை எல்லா இடத்திலும் படும்படி டிப் செய்யவும்.

வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது தீயை மிதமாக வைத்து மூடி போட்டு நன்கு பொரிய விட்டு பிறகு தீயை அதிகமாக வைத்து பொரித்து எடுக்கவும்.

மொறுமொறு சுவையான KFC சிக்கன் ரெடி.

குழந்தைகளுக்கான ஆண்ட்ராய்டு ‘எடி’ டேப்லெட் – விலை ரூ.9,999..!



மெடிஸ் லெர்னிங் நிறுவனம் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்டு அடிப்படை லெர்னிங் டேப்லெட்டான ‘எடி’ டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.9,999 என்று விலையிடப்பட்ட டேப்லெட் 2 முதல் 10 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு இலக்காக உள்ளது. நிறுவனத்தின் படி, ‘எடி’ எடுகேட்டர் செலக்டர் லெர்னிங் கன்டன்ட் (educator selected learning content), கிட் சேஃப் என்வைரான்மென்ட் (kid safe environment) மற்றும் ஹய் குவாலிட்டி ஹார்ட்வேர் (high quality hardware) உடன் வருகின்றது.

மேலும், இது நம்பகமான வலைத்தளங்களின் அணுகலை மட்டும் அனுமதிக்கின்ற கிட் சேஃப் ப்ரவுசர் கொண்டுள்ளது. பெற்றோர்கள் டேப்லெட்டில் தங்கள் குழந்தைகள் உண்மையில் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றிய விவரமான அறிக்கைகளும் கிடைக்கும். பெற்றோர்களின் தேவை படி ஒவ்வொரு குழந்தைகளின் தொடர்புடைய கன்டன்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மூன்று குழந்தைகள் வரை அவர்களின் விவரக்குறிப்புகளை எடி டேப்லெட்டில் உருவாக்க முடியும். எடி டேப்லெட்டில் 150 க்கும் மேற்பட்ட கல்வி விளையாட்டுகள் உடன் வருகிறது மற்றும் பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இது மொழி, கணிதம், மற்றும் படைப்புத்திறன் உட்பட முக்கிய லெர்னிங் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. எடி விளையாட்டுகள் மூலம் குழந்தைகள், புத்தகங்களை படிக்க, பியானோவை வாசிக்க கற்றுக்கொள்ளவது, கணிதம் பயிற்சி போன்றவவை உள்ளது. டேப்லெட்டில் விளையாட்டுகள் மிகவும் ஈடுபடுதல் மற்றும் வன்முறை இல்லாததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பெற்றோர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 50,000 க்கும் மேற்பட்ட கல்வி அப்ளிக்கேஷன்களை அணுக முடியும்.

எடி டேப்லெட் அம்சங்கள், 7 இன்ச் (1024×600) ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 0.3 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. அதன் 3200 mAh பேட்டரி திறன் 4 மணி நேரத்திற்க்கும் அதிகமாக நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 1.6GHz டூயல் கோர் பிராசசர், ரேம் 1GB, மற்றும் மைக்ரோ SD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள் நினைவகம் உள்ளது. மேலும், டேப்லெட்டில் HDMI போர்ட் உள்ளது. எடி டேப்லெட் eddytablet.com மற்றும் amazon.in வளைதளத்தில் கிடைக்கின்றது.

எடி டேப்லெட் விவரக் குறிப்புகள்:


  • 7 இன்ச் (1024×600) ஐபிஎஸ் டிஸ்ப்ளே,


  • 1.6GHz டூயல் கோர் பிராசசர்,

  • 0.3 மெகாபிக்சல் முன் கேமரா,

  • 2 மெகாபிக்சல் பின்புற கேமரா,


  • மைக்ரோ SD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8GB உள் நினைவகம்,


  • ரேம் 1GB,


  • HDMI போர்ட்,


  • ஆண்ட்ராய்டு 4.2,


  • 3200 mAh பேட்டரி.


நாச்சியார்கோவில் குத்துவிளக்கு..! - ஸ்பெஷல்



சிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொள்வேன். அதை கையில் வைத்து ஆட்டியபடி எனது அம்மாவுடன் செல்லுவேன். பின்னர் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் ஒரு முறை புது பிளான்ட் ஓபன் செய்ய பூஜை போட்டபோது வெளிநாட்டில் இருந்து வந்தவரிடத்தில் குத்து விளக்கு ஏற்ற சொன்னபோது அவரது உயரம் இருந்ததை பார்த்து வியந்து விளக்கேற்றினார். இப்படி அவ்வப்போது குத்துவிளக்கு என்பது நமது கலாசாரத்துடனும், என்னுடைய வாழ்க்கையிலும் இருந்து வந்தது. ஆனால், இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தில் குத்துவிளக்கை தேடி ஒரு பயணம் போக போகிறேன்!


விளக்கு வகைகள் : அகல் விளக்கு, குத்து விளக்கு, சட்ட விளக்கு, நாகாசு குத்துவிளக்கு, நந்தி அடுக்கு விளக்கு, பாவை விளக்கு (சிற்பம்), அஷ்டோத்திர விளக்கு, கிளை விளக்கு, கேரள விளக்கு, தொங்கு விளக்கு, தூண்டாமணி விளக்கு

நாச்சியார்கோவிலில் உற்பத்தி செய்யப்படும் குத்துவிளக்குகள் அனைத்தும் ஐந்து முக அமைப்பு கொண்டது. கேரளாவில் உற்பத்தியாகும் விளக்குகள் நான்கு முக அமைப்பை கொண்டது. ஐந்து முக அமைப்பும், நாகாசு வேலைப்பாடும் கொண்டதால் நாச்சியார்கோவில் குத்துவிளக்குக்கு வீடுகள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் தனி மகத்துவம் உண்டு.

நாச்சியார்கோவில் குத்துவிளக்கு அரை அடி முதல் 7 அடி உயரம் வரை வடிவமைக்கப்படுகிறது. பித்தளையே குத்து விளக்குத் தயாரிப்பில் பயன்படும் மரபுவழியான உலோகமாகும். பித்தளை என்பது செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம். வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. பித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது.


இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இவ்வுலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இளக்கத்தன்மை மற்றும் அதன் ஒலியியல் இயல்புகள் காரணமாகப் பித்தளை பல்வேறு இசைக்கருவிகள் செய்வதற்கும் பயன் படுகின்றது. இந்தியாவிலும் பாத்திரங்கள், விளக்குகள், மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பித்தளையில் செய்யப்படுகின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பித்தளையை மனிதன் அறிந்திருந்தான்.

உண்மையில் துத்தநாகம் பற்றி அறிவதற்கு முன்னமே பித்தளை பற்றிய அறிவு மனிதனுக்கு இருந்தது. செப்பையும், கலமைன் எனப்படும் துத்தநாகத்தின் தாதுப்பொருளையும் சேர்த்து உருக்கிப் பித்தளை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மாமண்டூர் (ஆரணி பக்கம்) மட்டுமே இந்த பித்தளையின் மூல பொருட்கள் கிடைக்கின்றன, தூத்துக்குடியில் சில இடங்களிலும் கிடைப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது. இந்த பித்தளையை தயாரித்து அதை டியுப் போன்று இங்கு வருகிறது, அதை இந்த நாச்சியார் கோவிலில் உருக்கி குத்துவிளக்கை செய்கிறார்கள்.

குத்து விளக்கு செய்யும்போது மிகவும் முக்கியம் என்பது அதன் டிசைன். அது முடிவு ஆனவுடன் அச்சு செய்கிறார்கள். அடி பாகம், நடு பாகம், மேல் பாகம் மற்றும் அன்ன பட்சி டிசைன் என்று நான்கு அச்சு செய்து கொள்கின்றனர். முதலில் மண்ணை (ஸ்பெஷல் மண்) ஒரு சமதளமாக ஆக்கி அதில் இந்த அச்சை வைத்து எடுக்கின்றனர்.

அச்சு நன்கு பதிந்தவுடன் வெளியே எடுத்து அதை போலவே அடுத்த பாகம் செய்கின்றனர். பின்னர் இரண்டு பாகங்களையும் சேர்த்து விடுகின்றனர். இப்போது பித்தளையை உருக்க வேண்டும் ! பித்தளை என்பது இவர்களுக்கு பல வழிகளில் கிடைக்கிறது..... ஒன்று உடைந்த பித்தளைகள் (ஸ்க்ராப்), பித்தளை ராட் அல்லது பார் என்று. இதைதான் உருக்கி அந்த அச்சின் உள்ளே ஊற்றுகின்றனர்.

அது முடிந்தவுடன் பாலீஷ் செய்யாமல் விட்டால் கையை கிழிக்குமாம். இதனால் அவர்கள் அதை கொண்டு சென்று பாலீஷ் செய்து எனக்கு தந்தபோது சிறிது நேரத்திற்கு முன்பு நான் பார்த்த பழைய சாமான் போல இருந்ததா இப்போது எனது கையில் பளபளக்கிறது என்று ஆச்சர்யம் மேலோங்கியது. அதை அவர்கள் வாங்கி கீழே கலர் செய்தனர். இந்த கலர் அவர்களுக்கு ஒரு அடையாளம் என்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறியீடு இருக்கிறது என்பதும் புரிந்தது.

இப்படி நூற்றுக்கணக்கில் என் முன்பு குத்துவிளக்கு தயாராகி கொண்டு இருந்தது. பின்னர் என்னை அவர்கள் குத்துவிளக்கு கோடௌன் கூட்டி சென்றனர். அதுவரை எப்படி குத்துவிளக்குகளை அடுக்கி வைப்பார்கள் என்பது தெரியாது இருந்தது..... உள்ளே சென்று பார்த்தபோது அழகாக சைஸ் வாரியாக நன்கு அடுக்கி வைத்து இருந்தது கண்டு மகிழ்ந்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறியீடு, அது தொழில் சார்ந்து இருந்தது ! இரண்டு அடிக்கு மேல் உள்ள விளக்குகள் பெரும்பாலும் எடை அளவில் விற்பனையாகிறது. குத்துவிளக்கு ஒரு கிலோ ரூ.600 லிருந்து ரூ.650 வரை விற்பனையாகும்.

பேச்சுலர்களுக்கான சில சுவையான மற்றும் ஈஸியான சைடு டிஷ் ரெசிபி..!



தற்போது பேச்சுலர்கள் அதிகம் உள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் விடுதிகளில் தங்குவதை தவிர்த்து, வீடு எடுத்து தங்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கு காரணம் விடுதிகளில் உணவுகள் சரியில்லாததும், பணப்பற்றாகுறையும் தான். ஏனெனில் வீடு எடுத்து தங்கினால் நாமே வீட்டில் நன்கு ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடலாம் என்பது தான்.

ஆனால் அனைத்து பேச்சுலர்களுக்குமே நன்கு சமைக்க தெரியாது. அவர்கள் அனைவரும் புத்தகம் வைத்தும், நெட்டில் கொடுத்துள்ள ரெசிபிக்களை படித்தும் சமைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சில நேரங்களில் அவர்களுக்கு வித்தியாசமான சில ரெசிபிக்களை சமைத்து சாப்பிட ஆசையிருக்கும். அப்படி இருக்கையில் எந்த ரெசிபியை செய்யலாம் என்ற குழப்பமும் இருக்கும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, பேச்சுலர்களுக்காக மிகவும் சுவையான மற்றும் ஈஸியான சில சைடு டிஷ் ரெசிபிக்களை கொடுத்துள்ளது. அவை அனைத்தும் சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்கு மிகவும் சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த சைடு டிஷ் ரெசிபிக்களைப் பார்ப்போமா!!!

 பன்னீர் டிக்கா மசாலா

 பன்னீர் டிக்கா மசாலா செய்வது கடினம் என்று நினைக்க வேண்டாம். இது மிகவும் ஈஸியானது மற்றும் பேச்சுலர்கள் எளிதாக சமைக்கக்கூடியவாறு இருக்கும்.

காரமான... பன்னீர் டிக்கா மசாலா

பன்னீர் ரொம்ப பிடிக்குமா? பன்னீரை கொண்டு வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக கொடுத்துள்ள பன்னீர் டிக்கா மசாலாவை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி. மேலும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.

பேச்சுலர்கள் கூட ட்ரை செய்து பார்க்கலாம். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:


  •  பன்னீர் - 250 
  • கிராம் தயிர் - 1 
  • கப் வெங்காயம் - 2 (நறுக்கியது)
  • தக்காளி - 2 (நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 
  • டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் - 2
  • (நறுக்கியது) முந்திரி பேஸ்ட் - 2
  • டேபிள் ஸ்பூன் டிக்கா மசாலா - 1
  • டேபிள் ஸ்பூன் சாட் மசாலா - 1 
  • டீஸ்பூன் சன்னா மசாலா - 1 
  • டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு


செய்முறை: 

முதலில் பன்னீரை சதுரங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மசியுமாறு வதக்க வேண்டும்.

 பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு அதில் டிக்கா மசாலா சேர்த்து 3 நிமிடம் கிளறி, அதனைத் தொடர்ந்து சாட் மசாலா மற்றும் சன்னா மசாலா சேர்த்து குறைவான தீயில் கிளறி விட வேண்டும். பின் தயிரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

 அடுத்து நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, 10 நிமிடம் நன்கு வேக வைத்து, இறுதியில் முந்திரி பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் சிறிது நேரம் (பச்சை வாசனை போகும் வரை) வேக வைத்து இறக்கினால், நல்ல காரமான பன்னீர் டிக்கா மசாலா ரெடி..!

அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா..? இதோ 10 வழிகள்..!



இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள் பயன் பெறுங்கள்.

வயிற்றுக் கொழுப்பை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. இவ்வாறு வயிற்று கொழுப்பை குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது சரியான வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் நாம் தோல்வியடைகிறோம். வயிற்றுக் கொழுப்பை குறைக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினால் அதற்காக ஒன்றல்ல, இரண்டல்ல 10 வழிகள் இதோ.

சரியாக சாப்பிடுதல்

சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு நுண் மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியும். இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.

தண்ணீர் 

தாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவை பசியில் விரைந்து உண்கின்றனர். இது தவறு. எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தது 6 முதல் 8 டம்ப்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். ஆனால் இது உங்கள் எடை மற்றும் வாழ்க்கை முறையை சார்ந்த விஷயமாக அமைகின்றது. இதை கண்டறிந்து உங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை கண்டறிந்து அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி

 பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகு தூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். உதாரணமாக நீங்கள் திரெட் மில்லில் பயிற்சி மேற்கொள்ளும் போது அவ்வப்போது உங்கள் வேகத்தை கூட்டி சில வினாடிகள் அதை தொடர்ந்து பயிற்சி செய்த பின் மீண்டும் நமது பழைய வேகத்திற்கு திரும்பி வரும் போது சிறந்த அளவில் தொப்பை குறையும்.

சர்க்கரை வேண்டாம் 

பொதுவாக நமக்கு கடைகளில் கிடைக்கும் சர்க்கரையை தவிர்ப்பதும் அல்லது குறைப்பதும் நல்லது. இதை தினமும் நமது உணவில் தவிர்த்தால் சிறந்தது. நாம் தினமும் உண்ணும் உணவில் சர்க்கரை நிறைய அளவு ஒளிந்திருக்கும். இதை உணர்ந்து, நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

சோடியம் உட்கொள்ளுதலை குறைத்தல்

 உப்பை கண்டிப்பாக உணவில் சேர்த்து பயன்படுத்தும் இந்த காலத்தில் சோடியம் உப்பை தவிர, பொட்டாசியம் உப்பு, எலுமிச்சை உப்பு மற்றும் கடல் உப்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். மிளகு மற்றும் இதர மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் உப்பு உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும்.

வைட்டமின் சி உணவுகள்

 உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தால் சுரக்கப்படும் கார்டிசாலையும் வைட்டமின் சி கட்டுப்படுத்துகிறது. இந்த கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.

கொழுப்பை குறைக்கும் இந்திய உணவுகள்

 கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.

தேவையான ஆரோக்கியமூட்டும் கொழுப்புச் சத்தை சேர்த்துக் கொள்ளுதல்

 கெட்ட அல்லது தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் நாம் நல்ல கொழுப்பு வகைகளை சேர்க்க முயல வேண்டும். வெண்ணைய் பழம், ஆலிவ், தேங்காய் ஆகிய பருப்பு வகைகள் நல்ல கொழுப்புகளை கொண்டவையாகும்.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவும் 

காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது. ஆகவே அவ்வப்போது நாம் சிறிது சிறிதாக உண்ணும் போது நமது உடல் செரிமானத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை மேம்படுத்த முடிகிறது. ஆகையால் உணவின் அளவை குறைத்து உண்ணும் நேரங்களை அதிகப்படுத்தி ஆரோக்கியமாக உடலை உருவாக்கிக் கொள்ளுங்கள். உலர்ந்த பழங்கள், பழ வகைகள் மற்றும் பச்சை அல்லது வேக வைக்காத காய்கறிகள் ஆகியவற்றை உண்ணலாம்.

தூக்கம் 

உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேர உறக்கம் தேவைப்படுகிறது. உறங்காமல் இருப்பதும் உடல் எடையை கூட்டுவதாக உள்ளது. இத்தகைய எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதை முயற்சி செய்து வித்தியாசத்தை உணருங்கள்.

சுவாமி விவேகானந்தர் - வாழ்க்கை வரலாறு



சுவாமி விவேகானந்தர்  ஜனவரி 12இ 1863 - ஜூலை 4 1902 பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.


பிறப்பும் இளமையும்

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும்இ இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Pசநளனைநnஉல ஊழடடநபந) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (ளுஉழவவiளா ஊhரசஉh ஊழடடநபந) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள்இ மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார்.

இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும்இ உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும்இ அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.


இராமகிருஷ்ணருடன்

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காகஇ இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள்இ உருவ வழிபாடுஇ அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல்இ இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால்இ விவேகானந்தரால்இ பக்தி மார்க்கம்இ மற்றும் ஞான மார்க்கம்இ இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.


துறவறம்

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம்இ பண்பாடுஇ வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர்.

அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும்இ அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம்இ நிகழ்காலம்இ மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.


மேலைநாடுகளில்

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம்இ அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க்இ மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.


இந்தியா திரும்புதல்

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள்இ அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும்இ இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.


மறைவு

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள்இ தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.


விவேகானந்தரின் கருத்துக்கள்

மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும்இ இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும்இ எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும்இ மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும்இ சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம்இ சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார்.

 வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர்இ சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.


விவேகானந்தரின் பொன்மொழிகள்

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும்இ ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும்இ அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படுஇ எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால்இ நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதேஇ குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள்இ குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

செயல் நன்றுஇ சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும்இ சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

வாழ்வும் சாவும்இ நன்மையும் தீமையும்இ அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயாஇ அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம்இ ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

'நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!'

நூல்கள்

விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள்இ அவர் எழுத்துக்கள்இ கடிதங்கள்இ பேச்சுக்கள்இ பேட்டிகள் முதலியன வுhந உழஅpடநவந றழசமள ழக ளுறயஅi ஏiஎநமயயெனெய என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

பிளேட் இட்லி - குழந்தைகள் மிகவும் விரும்பக்கூடிய இட்லி..!



பார்க்க கேக் போல இருப்பதால் குழந்தைகள் மிகவும் விரும்பக்கூடிய இட்லி இந்த பிளேட் இட்லி.

தேவையான பொருள்கள்:

உடைத்த கோதுமை - 200 கிராம்
உளுந்து - 100 கிராம்
கார அரிசி - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 10
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சோடா - 1 சிட்டிகை
தயிர் - 1 கப்


செய்முறை:

* உடைத்த கோதுமை, உளுந்து, கார அரிசி மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

* அத்துடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

* அரைத்த மாவில் உப்பு, சோடா அல்லது தயிர் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.

* குக்கரில் பருப்பு வேகவைக்கப் பயன்படுத்தும் தட்டில் மாவை அளவாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

* வெந்ததும் அரை வெளியில் எடுத்து கேக் போல சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிப் பரிமாறுங்கள்.

மெமரி கார்டின் தொழில்நுட்பத்தகவல்கள்..!



மெமரி கார்டின் ஸ்பீடை கண்டுபிடிப்பது / லாக் செய்யவும் மற்றும் அழித்த டேட்டாவை மீட்டு எடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வோமா?.

1. மெமரி கார்ட் வைத்திருக்காதவர்களே இப்போது இல்லை என்ற காலத்தில் நிறைய குழப்பங்கள் வருகின்றது. நாலு ஜிபி 150 ரூவாய்க்கு வாங்கினேன் மச்சி ஆனா நீங்க மட்டும் ஏன் 250 அதே 4 ஜிபியை வாங்கினீங்கன்னு கேட்டா பல பேரிடம் அது வந்து…வந்துனு தான் பதில் இருக்கும். இது ஏன் தெரியுமா. ஒவ்வொரு கார்டிலும் நாம் பார்ப்பது இரண்டே தான்.

முதல் விலை இரண்டாவது என்ன பிராண்டு என்று. இதை தவிர நீங்கள் முக்கியமாய் பார்க்க வேண்டிய்து கிளாஸ் எனப்படும் மூன்றாவது முக்கிய விஷயம் 1 – முதல் 10 வரை இருக்கும் இன்னொரு விஷயம். இது என்ன? 4 ஜிபி வாங்கினாலும் அதில் 2 கிளாஸ் என்று குறிப்பிட்டிருந்தால் அது 2 மெகாபிட்ஸ் ஸ்பீட்ல தான் டேட்டாவை டிரான்ஸ்ஃபர் செய்யும். அதே சமயம் 4 ஜிபியில் 10 கிளாஸாக இருந்தால் முன்பு சொன்ன 4 ஜிபியை விட 2 1/2 மடங்கு வேகம் அதிகம். அதனால் நல்ல அதிக கிளாஸை பார்த்து வாங்கவும்.

2. டேட்டாவை மெமரி கார்ட்டில் அழித்துவிட்டால் அதை திரும்ப பெறுவது எப்படி. அதை கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுத்தால் அவன் கொஞ்சம் உங்க டேட்டாவை எடுத்து கொள்வான் அல்லது பரப்பிவிடுவான். அதனால் பாதி பேருக்கு அழித்த விஷயங்களை எடுக்க இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தினால் அழித்த டேட்டாவை எடுக்கலாம். லின்க் – http://www.pandorarecovery.com/ இது ஹார்டு டிஸ்க்குக்கூட பொருந்தும்.

3. எல்லா மெமரி கார்டிலும் லாக் ஸ்விட்ச் இருப்பதால் சேஃப்டிக்கு அதை யூஸ் பண்ணுங்க இதனால் முதல்லேயே டேட்டா அழிவதை தடுக்க இயலும் – இது தெரியாத மக்களுக்கு ( சைடில் இருக்கும்).

”மாருதி-800 -க்கு குட் பை சொல்லுங்க’..!



இந்தியாவில் தனியார் வாகன சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி தொடர்ந்து அதிகம் விற்கும் கார் என்ற பெயரை தக்க வைத்திருக்கும் மாருதி 800 கார் உற்பத்தியை நிறுத்திக்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.தற்போது கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டாடா நானோ, போர்டு பிகோ, வோல்க்ஸ் வேகானின் போலோ, ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ, ஐ10,ஐ20, உட்பட பல்வேறு நிறுவனங்களின் சிறிய வகை கார்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தது மாருதி 800 மட்டுமே.மேலும் நடுத்தர மக்களிடம் கார்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதும் இவையே.குறைந்த அளவே காசு இருந்தால் போதும்.கார் வாங்க வேண்டிய எண்ணத்தை நிறைவேற்ற முடியும் என்ற நிலையை ஈடுகட்டியது மாருதி 800 என்றால் மிகையில்லை என்பது குறிப்பிடத்தக்க்து.

.கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் முன்னிலை வகித்த மாருதி 800 கார் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 13 நகரங்களிலிருந்து அண்மையில் விடைபெற்றது. மாருதி சுசூகி நிறுவனம் கடந்த 1983ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாருதி 800 மாடல் காரை அறிமுகம் செய்தது. இந்த கார் வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. அப்போது பிரபலமாக இருந்த பிரிமியர் பத்மினி மற்றும் அம்பாசிடர் கார்களை பின்னுக்குத் தள்ளி விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது.

கார்களிலேயே குறைந்தபட்ச விலைக்கு விற்கப்பட்டதால், நடுத்தர மக்களின் கார் கனவை நனவாக்கியது.சிறிய வகை கார்களை உற்பத்தி செய்யும் விதமாக ஜப்பான் நாட்டை சோ்ந்த சுசூகி நிறுவனத்துடன் இணைந்து இத்தகைய மாருதி 800 கார்கள் தயாரிக்கப்பட்டன. கடந்த 1980-ம் ஆண்டுகளில் அதன் விலை50 ஆயிரமாக நிர்ணயி்க்கப்பட்டது. தற்போது இதன்விலை ரூ.2.35 லட்சமாகும் எத்தனை சிறியவகை கார்கள் தற்போது உற்பத்தி செய்யப்பட்ட போதிலும் இந்த மாருதி800 வகை கார்களை விரும்பியவர்கள் அதிகம் பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், பாரத் 4 என்ற வாகன புகை கட்டுப்பாட்டு விதிகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, புனே, அகமதாபாத், சூரத், கான்பூர், ஆக்ரா, ஐதராபாத் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் 13 நகரங்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, மாருதி 800 கார் இன்ஜினை மேம்படுத்தினால் மட்டுமே மேற்கொண்டு விற்க முடியும்.ஆனால், இன்ஜினை மேம்படுத்தப் போவதில்லை என மாருதி அறிவித்துள்ளது. இதனால் புகை விதி நடைமுறைக்கு வந்துள்ள 13 நகரங்களில் மட்டும் மாருதி 800 கார் விற்பனையை உடனடியாக நிறுத்தியுள்ளது. எனினும், பிற நகரங்களில் தற்போது விற்பனை செய்யப்படும். படிப்படியாக இந்த மாடலின் உற்பத்தியை நிறுத்தவும் மாருதி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாருதி சுசூகி நிர்வாக இயக்குனர் சி.வி.ராமன்,” நாட்டின் ஐதராபாத் பெங்களூரு, கான்பூர்,புனே உள்ளிட்ட 13 நகரங்களில் மாருதி 800 கார் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அவை தற்போது முற்றிலும் நிறுத்தப்படும். தற்போதைய சூழ்நிலையில் ஆல்டோ, வேகன், ஸ்விப்ட் போன்ற பிராண்டுகளின்மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் உற்பத்தியை அதிகரி்க்கச்செய்யவும் விற்பனையை அதி்கரிக்கச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள மாருதிசுசூகி டீலர்களிடம் எத்தனை 800 வகை கார்கள் உள்ளன என்றும் தெளிவாக கூறமுடியாது. இந்நிறுவனம் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டு 3 முதல்4சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் வெற்றி பெற 10 அம்ச உறுதிமொழி ஏற்க வேண்டும்..! - அப்துல்கலாம்



பள்ளி மாணவர்கள் வெற்றி பெற 10 அம்ச உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று அப்துல்கலாம் கூறினார்.

முப்பெரும் விழா

சென்னை மகாஜன சபை 1884–ம் ஆண்டு மே மாதம் 16–ந் தேதி அன்று தொடங்கியது. சபையின் 130–ம் ஆண்டு விழா, காமராஜர் மற்றும் மகாகவி பாரதியார் நினைவு விழா ஆகிய முப்பெரும் விழா புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தங்க மாளிகையில் நடைபெற்றது.

சென்னை மகாஜன சபை தலைவர் டாக்டர் ஜி.செல்வகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விருதுகளையும், பரிசுகளையும் வழங்கினார். காமராஜர் விருது டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஜுடீசியல் உறுப்பினர் பி.ஜோதிமணிக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது தொழில் அதிபர் நல்லிகுப்புசாமி செட்டிக்கும், சிறந்த கல்வியாளர் விருது ஸ்ரீகிருஷ்ணா குழும கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஆர்.விவேகானந்தனுக்கும், சிறந்த அக்குபஞ்சர் சிகிச்சை நிபுணர் விருது டாக்டர் ஏ.சையத் அலிக்கும் வழங்கப்பட்டது.

பரிசு

சபை சார்பில் ஏற்கனவே நடத்தப்பட்ட சிறப்பு பேச்சு, கட்டுரை மற்றும் பாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும் பரிசு வழங்கி அப்துல்கலாம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

உழைப்பது நம் கடமை, தொழில் செய்வது நம் உரிமை. எனவே நல்ல முறையில் தொழில் செய்து நாட்டை வளப்படுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் ‘நான் விளக்காக இருப்பேன், படகாக இருப்பேன், ஏணியாக இருப்பேன், அடுத்தவர் துன்பத்தை துடைப்பேன், மனநிறைவுடன் வாழ்வேன்’ ஆகிய கொள்கைகளை மனதில் கொள்ள வேண்டும்.

10 அம்ச உறுதிமொழி

மாணவர்கள் உண்மைக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டாய் இருப்பது எப்படி? கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் வாழ்வது, மற்றவர்களை மதிப்பது, பாராட்டுவது எப்படி? பொறுமையாக செயல்பட்டு தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவது, பேச்சு திறனை வளர்த்து கொள்வது எப்படி? கூடி உழைத்து இலக்கை அடையும் விதம், திறனுடைய கடமையை பின்பற்றுவது, கோபத்தையும், சோம்பலையும் தவிர்ப்பது, சுயநலம் ஒழித்தல் ஆகிய 10 அம்ச உறுதிமொழியை ஏற்று வெற்றி காண வேண்டும்.

இவ்வாறு பேசிய அப்துல்கலாம் உறுதி மொழிகளை ஒவ்வொன்றாக கூற அதனை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

சபையின் கவுரவ பொதுசெயலாளர் சி.கே.மனோகரமூர்த்தி, கவுரவ பொருளாளர் கவுரிசங்கர், மனிதநேயர் வரதராஜன், கவுரவ இணை செயலாளர் மோகன் மற்றும் பள்ளி மாணவ–மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். விழா தொடக்கத்தில் மாணவ–மாணவிகளின் பரத நாட்டியம், நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கேழ்வரகு கோதுமை ரவை இட்லி...




கேழ்வரகு சாப்பிட்டால், உடல் நன்கு வலிமையோடும், வாய் துர்நாற்றம் எடுக்காமலும் இருக்கும். ஆகவே தான் அக்காலத்தில் எல்லாம் மக்கள் காலை வேளையில் கேழ்வரகை கஞ்சி போன்று கரைத்து சாப்பிடுவார்கள்.

ஆனால் தற்போது கேழ்வரகு சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு காரணம், கேழ்வரகின் நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாதது தான் மேலும் கேழ்வரகை கஞ்சி செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், இதனை இட்லிகளாக ஊற்றி சாப்பிடலாம்.

இங்கு கேழ்வரகை கோதுமை ரவையுடன் சேர்த்து எப்படி இட்லி செய்வதென்று கொடுத்துள்ளோம்.

  தேவையான பொருட்கள்:

 கேழ்வரகு மாவு - 1 கப்

கோதுமை ரவை - 1 கப்

 கெட்டியான தயிர் - 3 கப்

 கேரட் - 1 கப் (துருவியது)

கடுகு - 1/2 டீஸ்பூன்

 உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்

 முந்திரி - சிறிது

வேர்க்கடலை - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை ரவை, துருவிய கேரட் மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் தயிர் ஊற்றி, வேண்டுமானால் தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து தாளித்து, கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கிளறி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள இட்லி மாவை, இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான கேழ்வரகு கோதுமை ரவை இட்லி ரெடி!!!

குறிப்பு: வேண்டுமானால், இத்துடன் ஓட்ஸை பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.

Mobileக்கு தேவையான அனைத்தையும் இலவசமாக Download செய்யும் தளங்கள்..!

நமது Mobileக்கு தேவையான அனைத்தையும் இலவசமாக Download செய்யும் தளங்கள்


நமது Mobileக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், மென்பொருட்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று அனைத்தையும் நாம் பைசா செலவில்லாமல் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணையஉலகில் பல தளங்கள் உள்ளன. அதிகபட்சம் நாம் சம்பந்தப்பட்ட தளங்களில் மெம்பராகி விட்டால் (அதுவும் இலவசம் தான் ) போதும். நாம் எப்போது வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழே மொபைலுக்கான சில இலவச தரவிறக்க தளங்களை பட்டியலிட்டுள்ளேன்,அங்கே சென்று உங்களுக்கு தேவையானதை
இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

*www.zedge.com

வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ் என்று உங்கள் போனுக்கு தேவையான எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.அதற்கு நீங்கள் இதில் மெம்பராகி நமது கைப்பேசி மாடலையும் தேர்வு செய்து விட்டு வேலையை ஆரம்பிக்கலாம்.அதிகபட்ச நிறுவனங்களின் பலதரப்பட்ட மாடல் கைப்பேசிகளுக்கு இங்கே எல்லாமும் கிடைக்கிறது.அது மட்டுமல்லாமல் நேரடியாக நமது கைப்பேசியிலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கு உங்கள் கைப்பேசியின் பிரவுசரில்http://m.zedge.net/ என்று டைப் செய்து இணையலாம்.

www.mobile9.com

நமது கைப்பேசிக்கு தேவையான வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள், ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் மெம்பராகவில்லை என்றால் ஒவ்வொரு தரவிறக்கத்துக்கும் குறைந்தது 10 நொடிகள் காத்திருக்க வேண்டியிருக்கும், அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.பின்பு தரவிறக்கம் செய்ய ஆரம்பியுங்கள்.
மேலும் இந்த தளத்தில் உங்களிடம் இருப்பவற்றையும் தரவேற்றம் செய்து மற்றவர்களின் பார்வைக்கு வைக்கலாம்.

www.getjar.com

முழுக்க முழுக்க ஜாவா,மற்றும் சிம்பியன் வகையை சார்ந்த போன்களுக்கான கேம்ஸ்,மென்பொருட்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள உதவும் தளம் இது.
பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் மென்பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மெம்பராகாமல் நேரடியாக தரவிறக்கத்தை ஆரம்பிக்கலாம்.கைப்பேசியில் நேரடியாக தரவிறக்கம் செய்ய உங்கள் கைப்பேசியின் பிரவுசரில் http://m.getjar.net/ என்று டைப் செய்து இ ணையலாம்.

*http://www.apniapps.com/

ஐ-போன்,சிம்பியன்,ஜாவா வகையை சேர்ந்த போன்களுக்கான மென்பொருட்களை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.தரவிறக்கம் செய்து கொள்வதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மேன்போருளைப்பற்றிய சிறு குறிப்பும் உள்ளது,அதை படித்து பார்த்து உங்கள் போனுக்கு தேவையானால் மென்பொருளை தேர்ந்தேடுக்கலாம்.

* http://www.mobilemastee.com/

வால்பேப்பர்கள்,கேம்ஸ்,வீடியோக்கள்,ரிங்டோன்கள்,தீம்ஸ்,மென்பொருட்கள்,ஸ்க்ரீன் சேவர்ஸ் என எல்லாவற்றையும் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மெம்பராக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

http://dailymobile.se/

ஐ-போன்,சிம்பியன்,ஜாவா,ஆன்ராய்டு வகையை சேர்ந்த போன்களுக்கு வால்பேப்பர்கள்,கேம்ஸ்,தீம்ஸ்,மென்பொருட்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முக்கியமாக இதில் முதலில் மெம்பரான பிறகு தான் தரவிறக்கம் செய்ய முடியும்.அதனால் முதலில் மெம்பராகி விடுங்கள்.கூடுதலாக மொபைல் உலகில் வந்திருக்கும் புதிய சம்மாச்சரங்கள் அனைத்தையும் இந்த தளம் உடனுக்குடன் நமக்கு தருகிறது.

http://www.ipmart-forum.com/

இந்த தளத்தில் Fun, Games and Entertaining என்ற பிரிவில் சென்று நமது எந்த வகை கைப்பேசிக்கும் தேவையான தரவிறக்கங்களை பெற்றுக்கொள்ள முடியும்.தரவிறக்கத்தை ஆரம்பிக்க முதலில் இதில் மெம்பராக வேண்டும்.புதிய மென்பொருட்களையும்,பழைய மென்பொருட்களின் புதிய அப்டேட் செய்யப்பட்ட மென்பொருட்களும் உடனுக்குடன் தருகிறார்கள்.

http://www.youpark.com/

ஜாவா, சிம்பியன்,விண்டோஸ்,பாம்,பிளாக்பெர்ரி,ஆன்ராய்டு வகை போன்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.

இலவச,மற்றும் காசு கொடுத்து வாங்கக்கூடிய மென்பொருட்களை பட்டியலிட்டுள்ளார்கள். காசு கொடுத்து வாங்கினால் பத்து சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள்.மெம்பராக வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏதாவது இலவச மென்பொருளை தரவிக்கம் செய்ய நினைத்தால் உங்கள் இ-மெயில் முகவரியை கொடுத்து விட்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கைப்பேசி வழியாக http://wab.youpark.com/ என்ற முகவரியில் நேரடியாக இணையலாம்.

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet )



உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்

1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....

2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்

3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை

4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது

5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....

6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....

7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது

(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது

(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது

8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....

9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....

10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க

நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது

எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :

1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது

2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்

3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்

4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......

5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்

6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே........

மஞ்சளின் மகிமை..!



1. மஞ்சளை உணவில் சேர்ப்பதால் பசியை உண்டாக்கும்.

2. மஞ்சளை உணவில் சேர்ப்பது வெறும் நிறத்திற்காக மட்டுமல்ல. மணத்திற்காகவும் உணவிலுள்ள தேவையற்ற கிருமிகளையும் நீக்கும் என்பதால் தான்.

3. மஞ்சளை சுட்டு முகர மூக்கில் நீர் வடியும் ஜலதோஷம் நிற்கும்.

4. அடிப்பட்டதினால் ஏற்பட்ட இரத்தக் கட்டு உள்காயங்களை நீக்க மஞ்சளை பற்று போடுவார்கள்.

5. வெறும் மஞ்சள் பொடியை புண்கள் மீது தூவ புண்கள் ஆறும்.

6. மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூச அம்மையினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ஆறும்.

7. மஞ்சள், வேப்பிலை உடன் சிறிது வசம்பும் சேர்த்து அரைத்து பூச, மேகப்படை, விஷக்கடிகள் வட்டமான படைகள் போகும்.

8. மஞ்சளை இலுப்பை எண்ணெயில் குழைத்து, தடவ கால் வெடிப்பு குணமாகும்.

9. கஸ்தூரி மஞ்சளுடன், வெண்கடுகு சாம்பிராணி சேர்த்தரைத்து சுளுக்குகளுக்கு பற்று போட்டால் குணமாகும்.

10. மஞ்சள் சுட்ட சாம்பலுடன், ஊமத்தன் இலைச்சாறு குழைத்து பூச கட்டிகள் பழுத்து உடையும்.

11. மஞ்சளும், கடுக்காயும் பூச சேற்றுபுண் போகும்.

12. மஞ்சள் சுட்ட சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பூச, ஆறாத புண்கள் ஆறும்.

13. மஞ்சளுடன், சாம்பிராணி, ஏலம் சுக்கு சேர்த்தரைத்து தலையில் பற்றிட தலைவலி போகும்.

14. மஞ்சளுடன் சுண்ணாம்பு மூலிகையும் சேர்த்து மிகவும் பிரபலமான புத்தூர் (ஆந்திரா) எலும்பு முறிவுக்கு கட்டப்படுகிறது.

15. மஞ்சள் தூளுடன், சிறிது கற்பூரத்தூளை சேர்த்து, கை கால்கள் சில்லிட்தற்கு பூச சூடேறும்.

16. கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சங்கு சம அளவு அரைத்து பூச முகப்பருக்கள் மறையும்.

17. பெண்கள் முக்கியமாக முகத்தில் மஞ்சளை பூசுவதற்குக் காரணம் முகத்தில் முடி வளருவதை தடுக்கிறது.

18. பெண்கள் மஞ்சளை பூசிக் குளிப்பதினால் அவர்கள் மேனி பொன்நிறம் பெறும்.
 
நண்பேன்டா