Tuesday 11 March 2014

780 ரூபாயில் வாழ் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாத விளக்கு..!



மைக்கல் சட்னர் என்னும் சவூத் ஆஃப்ரிக்காவை சார்ந்தவர் – ஒரு புது வகை விளக்கை கண்டுபிடித்துள்ளார் இதன் பெயர் லைட்டீ – இது சூரிய சக்தியில் தான் இயங்கும் ஆனால் இதை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி இந்த லைட்டீயை படத்தில் உள்ளது போல சொருகினால் லைட் தானாய் எரியும்.

பகல் நேரத்தில் அதுவே 5 மணி நேரம் சார்ஜ் ஆனால் 8 மணி நேரம் லைட் எரியும்.

இதற்க்கு சுவிட்ச் ஏதும் இல்லை. சூரிய ஒளி பட்டால் ஆடோமேட்டிக்காக சார்ஜும் இருட்டினால் ஆட்டோமேட்டிக்காக வெளிச்சமும் தரும் எல் ஈ டி வகை விளக்குகள்.

இதன் விலை வெறும் 780 ரூபாய்கள் மட்டும் இதை இன்னும் எளிமைபடுத்தினால் 500 ரூவாய்க்கு கீழேயும் கிடைக்குமாம்.

 இதில் CIGS (Copper Indium Gallium Selenide) ஃபோட்டோ வோல்டிக்க்கும் உண்டு உள்ளே பேட்டரியும் இருக்கும் சிறு டெஸ்ட்டியுப் போன்ற வடிவமைப்பு.

 எதற்க்கு தண்ணீர் நிரம்பிய கூல் டிரிங் பாட்டில் என்றால் அதிக வெளிச்சம் தரும் அதனால். இந்த பல்பின் லுமன்ஸ் 120 – 300 வரை.

இதன் வீடியோ – http://www.youtube.com/watch?v=vfDtZ9TWGNc

முழங்கை கறுப்பு நிறத்தை மறைய செய்ய இதைப்படிங்க...!



பெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் அவர்கள் முகம், கை, கால் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முழங்கைகளுக்கு கொடுப்பதில்லை.

சிலருக்கு முகம், கை, கால்கள் கலராக இருக்கும். ஆனால் முழங்கை கறுப்பாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் அந்த இடத்திற்கு முறையான பராமரிப்பு தருவதில்லை. இத்தகைய கறுப்பை நீக்க சில வழிகள் இருக்கிறது. அவை......

• ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் மூன்று கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து தண்ணீர் விட்டு பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பின் வெதுவெதுப்பான நீரால் அதனை துடைத்து எடுத்து விட வேண்டும். இதனை தினமும் குளிப்பதற்கு முன் செய்தால், அங்கு இருக்கும் கறுப்பு நீங்கிவிடும்.

• 100 கிராம் காய்ந்த துளசி இலையை பொடி செய்து, அத்துடன் 1 ஸ்பூன் வேப்ப எண்ணெய், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் அரைத்த புதினா இலை சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

• தினமும் கடுகு எண்ணெய் வைத்து 15 நிமிடம் முழங்கையில் மசாஜ் செய்த பிறகு கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அந்த இடத்தில் உள்ள அழுக்கானது படிப்படியாக போய்விடும்.

• தேங்காய் எண்ணெயுடன் சிறிது தேனை விட்டு, எலுமிச்சை தோல் வைத்து முழங்கையில் 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் காட்டனால் துடைத்து எடுக்கவும். இதனால் அந்த இடத்தில் இருக்கும் அழுக்கானது நீங்கிவிடும்.

- மேலும் மேற்கூறிய அனைத்தையும் முழுங்கைக்கு மட்டும் பயன்படுத்தாமல், கழுத்து, கணுக்கால் போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம்.

செம்பருத்தி ஹேர் டானிக் - ட்ரைப்பண்ணலமா..?



செம்பருத்தி பூ- 10 கிராம், சுருள்பட்டை - 10 கிராம், வெந்தயம் - 5 கிராம், உலர்ந்த செண்பகப்பூ - 5 கிராம், இவற்றை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் போட்டு தினமும் வெயிலில் வைத்து எடுங்கள்.

ஒரு வாரத்தில், சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் எசென்ஸ் எண்ணெயில் இறங்கிவிடும்.

இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வந்தால், தலை சூப்பர் சுத்தமாவதுடன் முடி நன்றாக வளரத் தொடங்கும்; கூந்தல் வாசனையும் ஊரைக் கூட்டும். தலைக்கு கலரிங் செய்து கொள்ள ஆசைதான்.

ஆனால், அதிலுள்ள ரசாயனப் பொருள் கூந்தலை ப்ளீச் செய்து, பிறகு நிறத்தைத் தருவதால் கூந்தல் உதிருமே என்று பயப்படுகிறீர்களா?

பீட்ரூட்டில், பயன்படுகிறீர்களா? பீட்ரூட்டில், உங்கள் கூந்தலை இயற்கையாகவே நிறமாக்குகிற விசேஷத் தன்மை இருக்கிறது.

கிராம் டீத்தூளை தண்ணீரில் கொதிக்கவைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள், இதனுடன் மருதாணி பவுடர் - 50 கிராம், துளசி பவுடர் - 5 கிராம், கடுக்காய் பவுடர் - 5 கிராம் கலந்து ஒரு பாத்திரத்தில் வையுங்கள்.

அரை மணி நேரம் கழித்து மற்றொரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.

அடுப்பை சிம்மில் வைத்து, இந்தக் கலவையை பாத்திரத்தினுள் வைத்து, நன்றாக கொதி வந்ததும் இறக்குங்கள்.

ஆறியதும் அரை கப் பீட்ரூட் ஜுஸ், ஒரு எலுமிச்சை ஜுஸ் இரண்டையும் கலந்து விடுங்கள்.

மறுநாள் இதே போல் பாத்திரத்தினுள் வைத்து சூடுபடுத்தி இறக்கி அதில் அரை டீஸ்பூன் செம்பருத்தி பவுடரை கலந்து கொள்ளுங்கள்.

இந்த பேஸ்டடை தலை முழுவதும் பேக் ஆகப் போட்டு, அதிக பட்சம் 3 மணி நேரம் குறைந்த பட்சம் அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். பிரமாதமான நிறத்தில் மின்னும் உங்கள் கூந்தல்!

அன்னாச்சி பழம் சாப்பிடுங்க..! உடல் எடையை குறைங்க...!



இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன.

அன்னாச்சி பழத்தில் சத்துக்கள் மட்டுமல்லாது உடல் எடையை குறைப்பதற்கும், அழகை கூட்டுவதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றது.

வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும்.

நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.

அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.

தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது.

இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.

பட்டதாரிகளுக்கு எல்.ஐ.சி., வீட்டு வசதி நிறுவன பணிகள்..!



ஆயுள் காப்பீட்டுத் துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., ஆப் இந்தியாவின் கிளை நிறுவனமான எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்.ஐ.சி.,எச்.எப்.எல்., என்ற பெயரால் பலராலும் அறியப்படுகிறது.

வீட்டு வசதிக் கடன் தருவதில் இத்துறை சார்ந்த நிறுவனங்களில் இதுவும் மிக முக்கியமான நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் பல்வேறு மண்டலங்களில் உள்ள உதவியாளர் பிரிவைச் சார்ந்த 100ஐ நிரப்புவதற்காக விண்ணப்பங்கள வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரங்கள்: எல்.ஐ.சி., எச்.எப்.எல்., நிறுவனத்தின் தென் மண்டலத்தில் 15 காலியிடங்களும், தென் மத்திய மண்டலத்தில் 20 காலியிடங்களும், தென் கிழக்கு மண்டலத்தில் 15 காலியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி: குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்பான செயல்முறை அனுபவம் உடையவர்களுக்கு முன்னுரிமை உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: மாதம் ரூ.7 ஆயிரத்து 400ல் துவங்கி ரூ.16 ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தி ஐந்து வரை கிடைக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பதவிக்கு ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இரண்டு முறைகளிலும் விண்ணப்பிக்க முடியும். ரூ.500/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 12.03.2014

ஆன்-லைன் தேர்வு நடைபெறும் நாள்: 06.04.2014

இணையதள முகவரி:-

http://www.lichfl.com//lichousing/contentimage/tempimg/ELIGIBILITY_CRITERIA_ASSISTANT_2014.pdf

 
நண்பேன்டா