Wednesday 5 March 2014

உணவில் காரமும்,அமிலமும் - இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்..!



நாம் உண்ணும் உணவை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று, அமிலத்தை உண்டாக்கும் உணவுகள். இரண்டாவது, காரத்தன்மையை உண்டாக்கும் உணவுகள். நல்ல ஆரோக்கியத்துக்கு உடல் ரத்தத்தில் அமில, கார விகிதம் 20 : 80 இருக்க வேண்டும்.

ஆனால் இந்த விகிதத்துக்குத் தலை கீழாக நாம் உண்ணும் உணவில் அமிலத்தன்மை அதிகம். அதிக அமிலத்தைச் சரிசெய்ய காரத்தன்மை உள்ள உணவுகள் தேவை.  பொதுவாக தானியங்கள், பருப்புகள், கொழுப்புகள் (இறைச்சி, மீன், நெய், எண்ணை) மற்றும் டீ, காபி போன்றவை அமிலத்தை அதிகமாக்குபவை.

காய்கறிகளும் பழங்களும் குடலில் காரத்தன்மையை உண்டாக்கி, அமிலத்தைக் குறைக்கின்றன. அதிக அமிலம் முதுமையை சீக்கிரம் வரவழைக்கிறது. களைப்பு, வலி, வாயு மற்றும் சரும நோய்கள் ஏற்படலாம். தூக்கமின்மை, தலைவலி, வாந்தி, நரம்புத்தளர்ச்சி இவையும் ரத்தத்தில் 'அசிடிடி' அதிகமானால் ஏற்படும்.

வளர்சிதை மாற்றத்தின் விளைவாக உண்டாகும் யூரிக் மற்றும் லாக்டிக் அமிலங்களை, ரத்தத்தில் உள்ள காரத்தன்மையுள்ள நிணநீர், பித்தநீர் முதலியவை சமன் செய்து விடும். ஆனால் அதிக அளவு அமில உணவுகளை உட்கொண்டால் உடலால் சமன்படுத்தி சமாளிக்க முடியாது.

எனவே நாம் நம் உணவில் அதிகமாக காரத்தன்மை உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட், புரத, கொழுப்பு உணவுகள் (தானியங்கள், பருப்புகள், மீன், நெய், எண்ணை, தேநீர், காபி, மென்பானங்கள், சர்க்கரை, சுவை ஊட்டிகள், செயற்கைச் சர்க்கரை, புகையிலை,

வறுத்த, பொரித்த உணவுகள், மதுபானம், மசாலாக்கள், ஊறுகாய், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், வீரியமான மல மிளக்கிகள் முதலியவை) அமிலத் தன்மை மிகுந்த உணவுகள். அநேகமாக எல்லா காய்கறிகளும் (குறிப்பாக கீரைகள், முட்டைக் கோஸ்), பழங்களும் காரத்தன்மை உடையவை. கூடிய மட்டும் அதிக காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

வறுத்த, பொரித்த உணவுகளை விட, நீராவியில் வேகவைத்த உணவுகளை உண்பது நல்லது. உடலின் அமில, காரத்தன்மை களை சரியான அளவில் வைக்க, அதிகமாக காய்கறிகளை (குறிப்பாக கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பட்டாணி, வெள்ளரிக்காய், பரங்கிக்காய், வெண்டைக்காய், முட்டைக்கோஸ்,

வெங்காயம், பீன்ஸ், காலிபிளவர் போன்றவை, உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கோதுமை, அரிசி, ஓட்ஸ், பார்லி, ரொட்டி, பருப்புகள் இவற்றை அளவோடு உண்ணலாம். காரத்தன்மை அதிகரிக்க சுலபான வழி, பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுவதாகும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா