Monday 3 February 2014

பெண்களுக்கு உதவும் ‘i-Safe’ அப்ளிக்கேஷன் – சென்னை மாணவனின் கண்டுபிடிப்பு..!



ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் ‘i-Safe’ என்று அழைக்கப்படும் ஒரு மொபைல் அப்ளிக்கேஷனை உருவாக்கி அசத்தியுள்ளார் சென்னையைச் சேர்ந்த 14 வயதான சிறுவன்.இந்த அப்ளிக்கேஷனில் எஸ்ஒஎஸ் மோட் செயல்படுத்தும் போது பலமுறை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொபைலில் ஏற்கனவே பதிவு செய்திருக்கும் அனைத்து எண்களுக்கும் இடத்தின் விவரங்களை கொடுத்து எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்களை அனுப்புகிறது.

மேலும் உள்ளூர் சமூகத்தில் ஆபத்தில் இருக்கும் நபர் போலீசுக்காக காத்திருக்காமல் அருகில் இருக்கும் மக்களுக்கு தானாகவே எச்சரிக்கை செய்யும், ஒரு புதிய செயல்பாட்டை சேர்க்கும் பணிகளை அவர் இப்போது செய்து வருகின்றார்.

இளம் வயதான எஸ் அர்ஜுன், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆவர். கடந்த ஆண்டு மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அப்ளிக்கேஷன் போட்டியில் இவர் உருவாக்கிய Ez ஸ்கூல் பஸ் லொக்கேட்டர் என்ற அப்ளிக்கேஷன் முதல் இடத்தில் வெற்றி பெற்றது. ஆண்ட்ராய்டு போன்களில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளி பேருந்தின் இடத்தை கண்காணிக்கவும் மற்றும் வாகனம் இலக்கை அடைவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பற்றி கணக்கிட உதவுகிறது.

அதேபோல், அடிப்படை போன்களிலும் இந்த அப்ளிக்கேஷனை எஸ்எம்எஸ் மூலமாகவும் பயன்படுத்த முடியும். முன்னதாக, எம்ஐடியில் ஏற்பாடு செய்திருந்த அப்ளிக்கேஷன் இன்வென்டர் பக் ஃப்பைன்டிங் போட்டியில் அர்ஜுன் வெற்றி பெற்றுள்ளார்.

அவருடைய பெரிய கனவு ‘Lateralogics என்று அழைக்கப்படும் சொந்த நிறுவனத்தை உருவாக்க வேண்டும், இதில் கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற ஏதாவது செய்ய வேண்டும்’ என்று, அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

புரோகிராமிங் லேங்குவேஜ்-ஐ கற்றுக்கொள்ள ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் மூன்று முதல் நான்கு மணி நேரம் செலவிடுகிறார் என்று அர்ஜுன் தந்தை, சந்தோஷ் குமார் கூறியுள்ளனர். மேலும், அவருடைய பள்ளியில் மிகவும் பிரபலமாக உள்ளார் என்றும், அவரது ஆர்வம் மற்றும் பொழுதுபோக்குகள் ரோபாட்டிக்ஸ், செஸ் மற்றும் பேட்மின்டன் உள்ளிட்டவை என்றும் அர்ஜுன் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா