Friday 7 February 2014

மெட்ரிக்குலேசன் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி..!



மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் இந்திய அஞ்சல் துறையின் தமிழக அஞ்சலக பிரிவில் காலியாக உள்ள MTS பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 227

பணி: Multi-Tasking Staff(MTS)

வயதுவரம்பு: 05.03.2014 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: மெட்ரிக்குலேசன் மற்றும் அதற்கு இணையான தகுதி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + கிரேடு சம்பளம் ரூ.1800 மற்றும் இதர சலுகைகள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25

தேர்வுக் கட்டணம்: ரூ.175

விண்ணப்பிக்கும் முறை: www.tamilnadupost.nic.in, www.indiapost.gov.in போன்ற இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 05.03.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

http://tamilnadupost.nic.in/rec/MTS_Notification.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா