Sunday 2 February 2014

மாடுகளை திருட முயன்ற 4 பேர் தீ வைத்து எரிப்பு..!



கால்நடைகளை திருடமுயன்றதாக கருதி 4 பேரை கட்டிவைத்து கிராம மக்கள் உயிருடன் எரித்துக் கொன்ற நிகழ்வு மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் ஜால்பைகுரியில் மாடுகளை திருட முயன்றதாக கூறி நான்கு பேரை கிராம மக்கள் இன்று காலை பிடித்துள்ளனர். பின்னர் கடுமையாக தாக்கி அவர்களை கட்டி வைத்து உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர். இறந்த உடல்கள் அடையாளம் காணமுடியாத கருகிவிட்டன.

பாலராம் என்ற இடத்தில் இன்று காலை 3 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியா- வங்காளதேசம் எல்லையில் உள்ள இந்த கிராமத்தில் ஏற்கனவே கால்நடைகள் திருடப்படுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.


No comments:

Post a Comment

 
நண்பேன்டா