Saturday 15 March 2014
காதலர்களுக்கு ஏன் பசிக்க மாட்டேங்குது தெரியுமா...?
முத்தத்தால் பசியின்மையை சரி செய்ய இயலும் என பிரிட்டிஷ் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
முத்தம் தொடர்பாக தொடர்ந்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி, முத்தம் என்பது அன்பை பரிமாற்றம் செய்ய மட்டுமல்ல, அதனால் வேறு பல நன்மைகளும் உடலுக்குக் கிடைக்கின்றன என விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக பிரிட்டிஷ் மற்றும் கொரிய விஞ்ஞானிகள் 31 பசியின்மை நோயாளிகளிடம் சோதனை நடத்தினர்.
அந்தச் சோதனையின் முடிவாக முத்தம் உடலுக்குள் புதிய ரத்தத்தைப் பாய்ச்சி பசியின்மை நோயை போக்குவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர். தங்கள் ஆய்வின் முடிவுகளாக விஞ்ஞானிகள் கூறியதாவது:-
முத்தம் முதலில் கொடுக்கும் போது மிகவும் சுவாரஷ்யமாக இருக்கும்.
ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் போது ஹார்மோன்கள் சுரக்கபட்டு அவர்களின் பசியை போக்கிவிடும்.
பசியால் பாதிக்கபட்டவர்களிடம் இது போன்ற ஆராய்ச்சியை நடத்திய போது அவர்களது பாதிப்படைந்த உறுப்புகளில் ரத்தம் பாய்ந்து பசியின்மையை போக்கி உள்ளது.
இது போன்ற ரசாயனங்களை வைத்து உணவை சரியாத உட்கொள்ளாதா நோயாளிகளை இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அவர்களை குணபடுத்தி விடலாம்.
அன்பு முத்தம் கொடுப்பதால் மனித மூளைக்கு நன்மை கிடைக்கிறது. அன்பு முத்ததால் கோபம் மறைகிறது மகிச்சியை அதிகரிக்கிறது. வெறுப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
பிரிட்டிஷ் மற்றும் தென் கொரிய விஞ்ஞானிகள் உடல் உறவின் போதும், மற்றும் பிரவசத்தின் போதும் இந்த ஆக்சிடோசின் சோதனை மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது.
பசியற்ற நோயாளிகளுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment