Monday 10 March 2014

ரஜினியின் அட்வைஸால் ஷாக்கான சௌந்தர்யா...!



மகளுக்கு ரஜினியின் அறிவுரை! சௌந்தர்யா ரியாக்‌ஷன்?

கோச்சடையான் திரைப்படத்தின் இசைவெளியீடு ரஜினிகாந்த், ஷாருக்கான், ஷங்கர், மணிரத்னம், கே.எஸ்.ரவிகுமார், தீபிகா படுகோனே, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரம்மாண்டங்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.


கோச்சடையான் திரைப்படத்தின் இசைவெளியீடு பலருக்கும் இனிமையாய் அமைந்தாலும், கோச்சடையான் திரைப்படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வினுக்கு அவ்வளவாய் இனிக்கவில்லை.


இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி “என் மகள்கள் சிறந்த இயக்குனர்கள் என்று பேர் வாங்குவதைவிட சிறந்த குடும்பத் தலைவிகளாக இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. குழந்தைகளை  பெற்று வளர்த்து அவர்களை நல்ல மனிதர்களாக உருவாக்க பெண்களால் மட்டுமே முடியும்.


அதனால் குழந்தைகள் ஆளான பிறகு சினிமாவுக்கு வரலாம். இன்று  சினிமாவில் வாய்ப்பு கிடைக்கிறது என்று நினைத்தால், குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாமல் போய்விடும்" என்று கூறினார்.

இசைவெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய சௌந்தர்யா அஷ்வின் “இந்த மாதிரி ஒரு மேடையில் அப்பா இந்த அறிவுரையை சொல்லிவிட்டார்.


கோச்சடையான் எனது நீண்டகால விருப்பம். எனது முதல் காதல் அனிமேஷனின் மீது தான். திருமணமானதற்கு பிறகு என் கணவர் என் விருப்பத்தை நிறவேற்றுவதற்கான ஆதரவைக் கொடுத்தார். எனது முதல் குழந்தை கோச்சடையான் தான். எனவே இனி அப்பா கூறிய அறிவுரையின்படி குடும்பத்தை கவனிக்க வேண்டும்” என்று கூறினார்.

No comments:

Post a Comment

 
நண்பேன்டா