Tuesday 11 February 2014

ஹைடெக் ஆட்டோமேட்டிக் டெலிவிரி ட்ரோன்ஸ் துபாயில் அறிமுகம்..!



அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் ட்ரோன்களை வைத்து டெலிவிரி செய்ய ப்ரோட்டோடைப் செய்து FAA அப்ரூவலுக்காக காத்துக்கொன்டு இருக்கும் சமயம் துபாய் அரசு புது வகை ட்ரோன்களை உருவாக்கியுள்ளது.

இது கொஞ்சம் அட்வான்ஸ் டைப். இது கைரேகை மற்றூம் கருவிழி மேட்ச் செய்து டெலிவிரி செய்யும் ஹைடெக். இதன் மூலம் டெலிவிரி கண்டிப்பாய் போய் சேர வேண்டியவங்களுக்கு மட்டுமே போய் சேரும்.

இது துபாய் அரசு – அரசாங்க டாக்குமென்ட்களான – டிரைவிங் லைசென்ஸ் / மருந்து / பர்மிட்களை அனுப்ப டெஸ்ட் செய்ய இருக்கிறது. இது சக்ஸஸ் ஆனால் இனிமேல் இது தான் டெலிவிரி மோட் ஆகும். இது மணிக்கு நாப்பது கிலோமீட்டர் வேகத்தில் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு செல்லும் – இது படிபடியாக அதிகரிக்கபடும்.

இதன் விலை 67ஆயிரம் ரூபாய்கள் தான். நம்ம ஊருக்கு ரேஷன் பொருட்கள் / அவசரத்துக்கு டாஸ்மாக்ல இருந்து சரக்கு எல்லாம் டெலிவரி ஆகும் தூரம் அதிகம் இல்லைங்கோ…….

No comments:

Post a Comment

 
நண்பேன்டா