Wednesday 19 February 2014

'பப்'புக்கு வந்த 'பேய்' சிசிடிவியில் சிக்கியது..!



சமீபத்தில் அனைவரும் அதிர்ச்சி அடையக்கூடிய வகையில் பிரிட்டனில் உள்ள பப் ஒன்றின் சிசிடிவியில் சில அமானுட செயல்பாடுகள் பதிவாகியிருந்தது வெளியிடப்பட்டது. யாரெல்லாம் பேய் என்ற ஒன்று இல்லை என்று சொல்கிறார்களோ, அத்தகையவர்கள் இந்த 'பப்'பின் சிசிடிவியில் பதிவாகியிருந்ததைப் பார்த்தால் நிச்சயம் பேய் என்ற ஒன்று இருப்பதை நம்புவீர்கள்.

இங்கு பிரிட்டனில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 'Ye Olde Man And Scythe' என்ற பப் ஒன்றின் சிசிடிவியில் பதிவாயிருந்த வீடியோவானது கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த சிசிடிவில் இடம் பெற்ற அந்த பதிவானது கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இரவில் பதிவாகியது.

இதனை அந்த பப் நிறுவனத்தினர் அடுத்த நாள் தான் கண்டுபிடித்தனர். ஏனெனில் அந்த சிசிடிவியானது திடீரென்று செயல்படாமல் நின்றுவிட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த பப்பில் ஏற்கனவே 25 பேய்களின் நடமாட்டம் இருப்பதாக, அந்த பப்பின் மேனேஜர் கூறினார். மேலும் சில மக்கள் இந்த பப்பில் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறுகின்றனர்.

 இங்கு அந்த பப்பில் பதியவாகிய வீடியோவானது கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப் பார்த்து உங்களுக்கு எண்ண தோன்றுகிறது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


No comments:

Post a Comment

 
நண்பேன்டா